Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, April 27, 2024

Saturday, April 27, 2024

வாட்ஸ் ஆப்பில் உள்ள மெட்டா AI கொண்டு என்னவெல்லாம் செய்யலாம்

வாட்ஸ் ஆப் செயலியை அப்டேட் செய்த அனைவருமே ஒரு விஷயத்தை கவனித்து இருக்க முடியும். சாட் வரிசைகள் இருக்கும் இடத்தில் புதிய சாட் உருவாக்கும் பட்டனுக்கு மேலே புதிதாக நீல நிறத்தில் ஒரு வட்டம் போன்ற ஆப்ஷனை கவனித்திருப்பீர்கள்.அது என்ன எதற்காக சேர்க்கப்பட்டுள்ளது?அதன் பயன்கள் என்ன?

அதை எப்படி பயன்படுத்துவது என்று உங்களுக்கு தெரியுமா? அதை எல்லாமே இப்போது தெரிந்து கொள்ளலாம்.

OpenAI நிறுவனம் ChatGPT என்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப சாட் பாட்டை நவம்பர் 2022 இல் கொண்டு வந்தது. இந்த சேட் பாட்டை பல வகைகளிலும் மக்கள் பயன்படுத்த தொடங்கினர். இதற்கான வரவேற்பும் அதிகரித்தது. இதைத்தொடர்ந்து மற்ற பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களும் தங்களது செயற்கை நுண்ணறிவு எனப்படும் AI தொழில் நுட்பத்தை உருவாக்க தொடங்கினர்.

மெட்டா நிறுவனம் மெட்டா கனெக்ட் 2023 நிகழ்வின்போது மெட்டாAI என்ற செயற்கை தொழில்நுட்ப மெய் நிகர் உதவியாளரை(AI assistant ) உருவாக்கியது. கூகுள் நிறுவனத்தின் ஜெமினி மற்றும் OpenAI நிறுவனத்தின் ChatGPT போன்றவற்றிற்கு போட்டியாக மெட்டா நிறுவனம் இதை அறிமுகம் செய்தது.

Meta AI என்பது ஒரு பொது நோக்கத்திற்கான செயற்கை நுண்ணறிவு கொண்ட அசிஸ்டன்ட் ஆகும். இது கேள்விகளுக்கு பதில் அளிப்பது, கட்டுரைகளை எழுதுவது, மொழிபெயர்ப்பது, படங்களை உருவாக்குவது போன்ற பல்வேறு பணிகளில் பயனர்களுக்கு உதவும் வகையில் அறிமுகப்படுத்துள்ளது.

முன்னதாக மெட்டா நிறுவனம் மைக்ரோசாப்ட் பிங்(Bing) உலாவியுடன் (browser) கூட்டு சேர்ந்து பணியாற்றுவதாக அறிவிக்கப்பட்டன. இதனைக் கொண்டு பயனர்கள் நிகழ் நேர தகவல்கள் தகவல்களை அணுகவும், படங்களை உருவாக்கவும் முடியும் என்று சோதித்து காட்டப்பட்டது.

2023 நவம்பரில் பல அமெரிக்க பயனர்கள் AI சேட் பாட் அணுக்களை பெற்றனர். ந்த சோதனைகள் எல்லாம் முடிந்து இந்த மாதத்தின் தொடக்கத்தில் எக்ஸ் தளம், வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம், மெசஞ்சர் போன்ற செயல்கள் மூலம் இந்திய பயனர்கள் மெட்டாAI சாட் பாட்டை பயன்படுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இப்போதும் இது சோதனை கட்டத்தில் தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது



எப்படி பயன்படுத்துவது?வாட்ஸ் ஆப் செயலியில் புதிய செய்தி என்பதற்கு அருகிலேயே இந்த மெட்டா குறியீடு உள்ளது. அதை கிளிக் செய்தவுடன் ஒரு புதிய சேட் திறக்கும். அதில் நீங்கள் என்ன கேள்வி கேட்டாலும் அதற்கு உகந்த பதில்களை செயற்கை நுண்ணறிவு உங்களுக்கு சொல்லும். சந்தேகம், கேள்விகள் போன்றவற்றை நீங்கள் கேட்டால் அதற்கான பதில்களை அது தரும். உங்களுக்காக உங்கள் ரெஸ்யூமை கூட அதுவே தயார் செய்து கொடுக்கும் என்று சொன்னால் நம்புவீர்களா? ட்ரை பண்ணி பாருங்க

அது மட்டும் இல்லாமல் உங்கள் வாட்ஸ் ஆப் குரூப் சாட் மற்றும் தனிப்பட்ட சார்களில் கூட இந்த மெட்டாAI உதவியை பெறலாம் என்று whatsapp நிறுவனம் தெரிவித்துள்ளது. தனிப்பட்ட அல்லது குழு அரட்டைகளில் இருந்தாலும், தனிநபர்கள் செய்தி புலத்தில் "@" என்பதைத் தொடர்ந்து "Meta AI" என தட்டச்சு செய்வதன் மூலம் Meta AI இன் செயல்பாட்டைத் தொடங்கலாம்.

ஆனால் இது தற்போது குறிப்பிட்ட நாடுகளில் உள்ள பயனர்களுக்கு மட்டும் செயல்பட்டு வருகின்றன. மேலும் இது ஆங்கிலத்தை மட்டுமே உள்ளீடாக எடுத்துக் கொள்ளும். மற்ற மொழிகளை எடுத்துக் கொள்ளும் வசதி இன்னும் ஏற்படுத்தப்படவில்லை

கடந்த வாரம், மெட்டா நிறுவனம் மெட்டா AI இன் அப்டேட்டட் வெர்ஷன் லாமா 3ஐ அறிமுகம் செய்துள்ளது. மேம்படுத்தப்பட்ட மெட்டா AI ஆனது, மெட்டாவின் செயலிகள் மற்றும் ஸ்மார்ட் கண்ணாடிகள் பயன்படுத்தும் பயனர்களுக்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அணுகலை நெறிப்படுத்த, Meta ஆனது அதன் AI அசிஸ்டன்ட் ஆப்ஷனை வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக், மெசஞ்சர் போன்ற முக்கிய பயன்பாடுகளின் தேடல் செயல்பாடுகளுடன் ஒருங்கிணைத்துள்ளது.

இதை பற்றி பேசும்போது "நாங்கள் எங்களின் புதிய அதிநவீன Llama 3 AI மாடலுடன் Meta AI ஐ மேம்படுத்துகிறோம், இதை நாங்கள் ஓப்பன் சோர்சிங் செய்கிறோம். இந்த புதிய மாடலின் மூலம், Meta AI இப்போது நீங்கள் சுதந்திரமாகப் பயன்படுத்தக்கூடிய மிகவும் புத்திசாலித்தனமான AI உதவியாளராக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். " என்று மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் கூறினார்
Saturday, April 27, 2024

சனிக்கிழமைகளில் வாங்கக் கூடாத பொருட்கள் எவை தெரியுமா?

சனி பகவானுக்கு உகந்த சனிக்கிழமைகளில் இரும்பு சம்பந்தப்பட்ட பொருட்களை வாங்கக்கூடாது. இரும்பு என்பது சனி பகவான் ஆதிக்கம் செலுத்தும் பொருளாகும்.

எனவே, இரும்பு சம்பந்தப்பட்ட பொருட்களை அன்றைய நாளில் கட்டாயம் வாங்கவே கூடாது. ஆனால், சனிக்கிழமைகளில் இரும்பு பொருட்களை தாராளமாக தானம் செய்யலாம். கோயில்களுக்கு இரும்புப் பொருட்களை வாங்கிக் கொடுப்பது சனிக்கிழமையில் செய்வது உத்தமம்.

சனிக்கிழமைகளில் எண்ணெய் கடைக்குச் சென்று எண்ணெய் வாங்கக் கூடாது. சனி நீராடினால் தோஷங்கள் விலகும். அதாவது சனிக்கிழமையில் தலைக்கு எண்ணெய் வைத்து குளித்தால் தோஷங்கள் நீங்கும். ஆனால், எண்ணெய் வாங்க சனிக்கிழமை உகந்ததல்ல.

108 பொருட்களில் மகாலட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம் உள்ளது. அதில் உப்பு முதன்மையானது. உப்பை எப்பொழுதும் வெள்ளிக்கிழமைகளில் வாங்குவது சிறந்த பலன்களைக் கொடுக்கும். தவறியும் சனிக்கிழமையில் வாங்குவதை நிறுத்தி விடுங்கள். வெள்ளிக்கிழமைகளில் உப்பை வாங்கி பூஜை அறையில் வைத்து விட்டு பின் ஜாடியில் போட்டு அதில் ஐந்து ரூபாய் நாணயத்தை போட்டால் வீட்டில் செல்வம் கொழிக்கும்.

மகாலட்சுமி தேவி துடைப்பம் போன்ற பொருட்களில் வாசம் செய்கிறாள். வீட்டை சுத்தம் செய்யும் பொருட்களை எப்பொழுதும் சனிக்கிழமைகளில் வாங்கக் கூடாது. சனி பகவானுக்கு உரிய எள் சனிக்கிழமையில் வாங்கக் கூடாத பொருளாகும். எள் எண்ணெய் கொண்டு கோயிலில் சனி பகவானுக்கு தீபம் ஏற்றினால் சகல செல்வங்களும் அதிகரிக்கும்.

சமையலுக்குத் தேவைப்படும் மாவு போன்ற பொருட்களையும் சனிக்கிழமையில் வாங்கக் கூடாது. வெள்ளிக்கிழமையில் மசாலா பொருட்களை வாங்குவதை மற்றும் அரைப்பதை தவிர்க்க வேண்டும்.

கூர்மையான பொருட்கள், ஆயுதங்கள் போன்றவற்றை சனிக்கிழமைகளில் வாங்கக் கூடாது. அப்படி வாங்கினால் தீராத துன்பமும் குடும்பத்தில் பிரச்னைகளும் உண்டாகும்.

சனிக்கிழமை அன்று புதிய ஆடைகளை வாங்கக் கூடாது. கருப்பு வஸ்திரம் வாங்கினால் தவறல்ல. சனிக்கிழமை அன்று அதேபோல் புதிய ஆடைகளையும் அணியக் கூடாது.
Saturday, April 27, 2024

மாணவர் எண்ணிக்கைபடி அரசு பள்ளிகளில் 2,236 உபரி ஆசிரியர்கள்: பணிநிரவல் செய்ய கல்வித் துறை முடிவு

அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் உபரியாக உள்ள 2,236 இடைநிலை ஆசிரியர்கள் பணிநிரவல் செய்யப்பட உள்ளதாக தொடக்கக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தொடக்கக் கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன், அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: தமிழகத்தில் ஆண்டுதோறும் மாணவர் எண்ணிக்கையின் அடிப்படையில் ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்யப்படுகின்றன. அதில் உள்ள உபரி பணியிடங்கள் பணிநிரவல் செய்யப்படும். அதன்படி வரும் 2024-25-ம் கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வு அடுத்த மாதம் நடைபெற உள்ளது.

இதற்கிடையே 2023 ஆகஸ்ட் 1-ம் தேதி நிலவரப்படி அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் 2,236 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் உபரியாக உள்ளன. இந்நிலையில் பணிநிரவல் கலந்தாய்வானது தற்போது நடைபெற்று வரும் மாணவர் சேர்க்கையையும் கருத்தில் கொண்டு நடத்தப்பட உள்ளது. எனவே, குறைந்த மாணவர்கள் உள்ள அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் ஏப்ரல் 30-ம் தேதிக்குள் வியூகங்கள் அமைத்து சேர்க்கையை அதிகரிப்பதற்கான பணிகளை முன்னெடுக்க வேண்டும்.

ஆசிரியர்களுக்கு தகவல்: கூடுதல் மாணவர்களை பள்ளிகளில் சேர்த்து உபரி பணியிடங்களை குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், உபரியாக உள்ளவர்களின் விவரங்கள் அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பி சார்ந்த ஆசிரியர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Saturday, April 27, 2024

1282 பட்டதாரி ஆசிரியர் தற்காலிக பணியிடங்களுக்கு 6 மாதங்களுக்கான ஊதியக் கொடுப்பாணை வெளியீடு!!!


1282 பட்டதாரி ஆசிரியர் தற்காலிக பணியிடங்களுக்கு (G.O.Ms.No.193, Dated: 02.12.2011 - SSA, AZ Head) 30.06.2024 வரை 6 மாதங்களுக்கு ஊதியக் கொடுப்பாணை வெளியீடு!!!

(Already Shared here - Just a reshare.)

1282 BT Assistant Post Continuation Order👇

Saturday, April 27, 2024

6156 தற்காலிகப் பணியிடங்களுக்கு 6 மாதங்களுக்கு தொடர் நீட்டிப்பு ஊதியக் கொடுப்பாணை வெளியீடு!


6156 தற்காலிகப் பணியிடங்களுக்கு 30.09.2024 வரை 6 மாதங்களுக்கு தொடர் நீட்டிப்பு ஊதியக் கொடுப்பாணை வெளியீடு!

Pay Order - Download here

Friday, April 26, 2024

Friday, April 26, 2024

இடைநிலை ஆசிரியர்களின் மாநில அளவிலான முன்னுரிமை பட்டியல் வெளியீடுதல் சார்ந்து தொடக்க கல்வி இணை இயக்குனரின் செயல்முறைகள்! & முன்னுரிமை பட்டியல் இணைப்பு...pdf


01.01.2024- நிலவரப்படி தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் 31.12.1997 க்கு முன்னர் பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களின் மாநில அளவிலான முன்னுரிமை பட்டியல் வெளியீடுதல் சார்ந்து தொடக்க கல்வி இணை இயக்குனரின் செயல்முறைகள்!

Dir Proceedings 26.04.2026 - Download here

SGT state seniority upto 31.12.1997👇

Friday, April 26, 2024

ஓய்வூதியப் பலன்களை 30 நாட்களுக்குள் பெற்று வழங்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!

பள்ளிக் கல்வித்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அரசு / அரசு உதவி பெறும் உயர் / மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்கள் / ஆசிரியர்கள் பணியிலிருந்து ஓய்வு பெற்று , ஓராண்டு கடந்த பின்னரும் ஓய்வூதிய பலன்கள் பெற்று வழங்கப்படாமல் இருந்து வருவதாக தெரிய வருகின்றது.

எனவே . மேற்கண்ட காலதாமதத்தை தவிர்க்கும் பொருட்டும் . உடனடியாக 30 நாட்களுக்குள் அனைத்து ஓய்வூதியப் பலன்களையும் பெற்று வழங்க சார்ந்த அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் / மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு கீழ்க்கண்ட வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றி செயல்பட தெரிவிக்கப்படுகிறது.

வழிகாட்டு நெறிமுறைகள்

DSE - Pension Benefits Proceedings👇

Friday, April 26, 2024

மாணவர்களுக்கு உடல் ரீதியான தண்டனை வழங்கும் நேர்வுகளில் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் - DSE & DEE இணைச் செயல்முறைகள்!


Corporal punishment remains a prevalent issue in various settings , including schools , hostels , and even within families . Shockingly , studies indicate that a significant percentage of children experience physical abuse , often at the hands of those entrusted with their care . The urgent need for concerted efforts to address and eliminate such harmful practices.

Under this circumstanceGuidelines for Elimination of Corporal Punishment in Schools issued :

Corporal Punishment in Schools - DSE & DEE Proceedings👇
Friday, April 26, 2024

பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படுமா? - RTI Letter

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்துவது என்பது அரசின் கொள்கை முடிவுக்கு உட்பட்டது - தகவலறியும் உரிமைச்சட்டம் மூலம் பெற்ற தகவல்..

RTI Letter - Download here
Friday, April 26, 2024

Special SMC Meeting - 03.05.2024 அன்று நடைபெறுதல் சார்ந்து மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்!

பள்ளி மேலாண்மைக் குழு - அனைத்த அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் 03.05.2024 ( வெள்ளிக் கிழமை ) - பள்ளி மேலாண்மைக் குழு சிறப்புக் கூட்டம் நடத்துதல் - வழிகாட்டுதல்கள் வழங்குதல் சார்ந்து மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்!

அனைத்து வகை பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டமானது மாதந்தோறும் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளின்படி நடத்தப்பட்டு வருகிறது . இக்கல்வியாண்டில் ( 2023-2024 ) பொதுத்தேர்வு சார்ந்து 10 , 11 , 12 - ஆம் வகுப்பு மாணவர்களில் தேர்வுக்கு வாராதவர்கள் எவரென கண்டறிவதற்கும் , தேர்வு எழுதி தேர்ச்சி பெறாத மாணவ , மாணவியர்கள் துணைத் தேர்வு எழுத ஊக்கப்படுத்துவதற்கும் , தேர்ச்சி பெற்றவர்கள் உயர்கல்வி குறித்தான வழிகாட்டுதல்களை பெறுவது குறித்தும் , விழிப்புணர்வு வழங்குவது சார்ந்தும் , பள்ளித் தேவைகளுக்கான நன்கொடைகள் முறைப்படுத்துதல் சார்ந்தும் கலந்துரையாட உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழு சிறப்புக் கூட்டமானது 03.05.2024 ( வெள்ளிக்கிழமை ) பிற்பகல் 3.00 மணி முதல் 4.30 மணி வரை அவசியம் நடத்த அறிவுறுத்தப்படுகிறது.

சிறப்புப் பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டப் பொருள் நிரல்கள்

SMC Special Meeting on 03.05.2024 👇

Friday, April 26, 2024

TNPSC - Departmental Exam May 2024 Notification Published




DEPARTMENTAL EXAM MAY 2024

Applications are invited from the candidates through " ONLINE " only for admission to the Departmental Examinations - MAY - 2024

The candidates are required to furnish their particulars in Departmental Examination One Time Registration before applying . Aadhaar Number details shall be linked with the Departmental Examination One Time Registration , mandatorily . If there is any change with regard to details entered in the One Time Registration , such as name , initial , father's name , date of birth , working district , etc. , the same shall be updated in the One Time Registration before applying for Departmental Examinations - MAY - 2024 . After submitting the application , any subsequent claim , with regard to change of test code / centre , corrections in name , father's name , age , date of birth , etc. , will not be entertained . Hence , the candidates are instructed to submit the applications with utmost care.

Candidates should submit their applications in on - line mode only . Other mode of applications will not be accepted and they will be rejected , even though the cost of application is enclosed with them .

TNPSC - Departmental Exam May 2024 Notification pdf👇👇👇

Friday, April 26, 2024

மே 6-ல் உள்ளூர் விடுமுறை!

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் கோயில் தேரோட்டத்தையொட்டி மே 6 ஆம் தேதி திருச்சி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் திருக்கோயிலில் திங்கள்கிழமை (மே. 6) காலை சித்திரைத் தேரோட்டம் நடைபெறவுள்ளது.

இதையொட்டி, திருச்சி மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலங்கள், கல்வி நிறுவனங்களுக்கு மே 6 ஆம் தேதி உள்ளூர் விடுமுறையை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

இந்த உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் மே 29 ஆம் தேதி வேலை நாளாக செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Friday, April 26, 2024

மத்திய அரசின் புதிய பாரத எழுத்தறிவு திட்டம்: கணக்கெடுப்பு பணிகள் மே முதல் வாரத்தில் தொடக்கம்


புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 15 வயதுக்கு மேலாக எழுத, படிக்க தெரியாதவர்களை கணக்கெடுக்கும் பணிகள் மே முதல் வாரத்தில் தொடங்கப்பட உள்ளது.

நாடு முழுவதும் கல்வி கற்காத 15 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தன்னார்வலர்களை கொண்டு அடிப்படை எழுத்தறிவு பயிற்றுவிப்பதற்காக மத்திய அரசால் ‘புதிய பாரத எழுத்தறிவுத்‌ திட்டம்‌’ 2022-ம்ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் 2027-ம் ஆண்டுக்குள் 5 கோடி பேருக்கு கல்வி கற்பிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்குநரகத்தின் மூலம் இந்த திட்டத்தின் கீழ் கடந்த 2 ஆண்டுகளில் 10 லட்சம் பேருக்கு அடிப்படை எழுத்தறிவு கல்வி வழங்கப்பட்டது.

தொடர்ந்து இந்தாண்டு பாரத எழுத்தறிவுத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் தற்போது வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வித் துறையின் இயக்குநர் சு.நாகராஜ முருகன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத்தின் கீழ் நடப்பு கல்வி ஆண்டில் (2024-25) தமிழகத்தில் எழுத, படிக்க தெரியாத 15 வயதுக்கு மேலானவர்களை கண்டறியும் கணக்கெடுப்பு பணிகள் மாவட்ட வாரியாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதையடுத்து தங்கள் மாவட்டத்தில் கிராம பஞ்சாயத்து வார்டு அளவில் எழுத படிக்க தெரியாதவர்களை கண்டறியும் கணக்கெடுப்பை மே முதல் வாரத்தில் தொடங்க வேண்டும். இதற்கு பள்ளி, கல்லூரிகளில் என்சிசி போன்ற அமைப்புகளில் இருக்கும் மாணவர்களை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும், 100 நாள் வேலைத் திட்டப் பணியாளர்கள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், தன்னார்வலர்கள் மற்றும் ஆசிரியர்களை கொண்டும் கணக்கெடுப்பு நடத்தலாம்.

பிற மாநிலத்தவர்கள், புலம் பெயர் தொழிலாளர்கள் மற்றும் மலைவாழ் பகுதிகளில் யாரும் விடுபடுதல்கூடாது. அதன்படி எழுத, படிக்க தெரியாதவர்களை கண்டறிதல், தன்னார்வலர்கள் நியமனம் உட்பட பணிகளை மே 24-ம்தேதிக்குள் முடிக்க வேண்டும். இதற்கான முன்னேற்பாடுகளை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளும் மேற்கொள்ள வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
Friday, April 26, 2024

TN EMiS Students Profile Updated Details

TN EMiS Students Profile Updated Details

ஆசிரியர்களுக்கான தகவல்கள்

Students

👇

Students List

👇

Emis I'd , Name in Tamil, Name in English, Class, Section, Action

👇

✏️ Pencil Icon Click Updates

👇

Name of the Students

👇

View Profile

👇

Aadhaar Number

👇

Date of birth

👇

Family Details

👇

Communication Details

👇

Academic Information

👇

Students Bank Details


Update செய்வதற்கான வழிமுறைகள் ஆசிரியர்கள் பார்த்துக் கொள்ளுங்கள் முழு விவரங்களுடன்

👇👇👇👇👇👇👇👇👇
Friday, April 26, 2024

கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகளை மீண்டும் எப்போது திறக்கலாம்? - அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய ஆலோசனை.

கோடை விடுமுறைக்கு பின் தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு தள்ளிவைப்பது தொடர்பாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அதிகாரிகளுடன் தீவிரமாக ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் தான் அந்த மீட்டிங்கில் ஆலோசனை மேற்கொண்ட முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பொதுத்தேர்வு மற்றும் ஆண்டு இறுதித்தேர்வு முடிவடைந்து கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள தனது இல்லத்தில் அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனையை மேற்கொண்டுள்ளார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் குமரகுருபரன், பள்ளி கல்வித்துறை இயக்குனர் அறிவொளி, தொடக்க கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன், தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மா உள்பட முக்கிய அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

இந்த கூட்டத்தில் தேர்வு முடிவுகளை எப்போது வெளியிடுவது? என்பது ஆலோசிக்கப்பட்டது. 12ம் வகுப்புக்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் அதன் தேர்வு முடிவை திட்டமிட்டப்படி மே 6ம் தேதி வெளியிடுவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. அதேபோல் 10, 11ம் வகுப்பு தேர்வு முடிவுகளுக்கான தற்காலிக தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த தேதியில் முடிவுகளை வெளியிட முடியுமா? என்பது பற்றி விவாதிக்கப்பட்டது.

அதேபோல் மாநிலம் முழுவதம் புதிய மாணவர்கள் சேர்க்கை எப்படி நடைபெறுகிறது? இதுவரை எத்தனை மாணவர்கள் சேர்ந்துள்ளனர்?, பள்ளிகள் திறந்த பிறகு மாணவர்களுக்கு புத்தகம் உள்பட அரசு சார்பில் வழங்கும் பொருட்களை உடனடியாக வினியோகம் செய்ய முடியுமா? அதற்கான பணிகள் எந்த நிலையில் உள்ளது? என்பது பற்றி ஆலோசிக்கப்பட்டது.

மேலும் கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகளை மீண்டும் எப்போது திறக்கலாம்? என்பது பற்றியும் விவாதிக்கப்பட்டுள்ளது. பொதுவாக கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் ஜுன் 1ம் தேதி திறக்கப்படும். ஆனால் இந்த முறை ஜுன் 1ம் தேதி சனிக்கிழமை வருகிறது. ஜுன் 3ம் தேதி திங்கட்கிழமை வந்தாலும் கூட அன்றைய தினமும் சிக்கல் நிலவுகிறது. ஏனென்றால் ஜுன் 4ம் தேதி லோக்சபா தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

அதோடு தமிழ்நாட்டில் பல இடங்களில் கோடை வெயில் அதிகரித்துள்ளது. வெப்ப அலை எந்த ஆண்டும் இல்லாத வகையில் உள்ளது. இதனால் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளி திறப்பை தள்ளி வைக்கலாமா? என்பது பற்றி ஆலோசிக்கப்பட்டுள்ளது. அதாவது ஜுன் 2வது வாரத்தில் பள்ளியை மீண்டும் தொடங்கலாமா? என்பது பற்றி விவாதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பள்ளி திறப்பு தொடர்பாக எந்த இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை. இதுதொடர்பாக இன்னும் ஆலோசனை மேற்கொண்டு கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது பற்றி அறிவிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Friday, April 26, 2024

நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு மூலம் வட்டார கல்வி அலுவலராக பதவி உயர்வு பெற தகுதி வாய்ந்தோர் பட்டியல் தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களால் வெளியிடப்பட்டுள்ளது.

நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு மூலம் வட்டார கல்வி அலுவலராக பதவி உயர்வு பெற தகுதி வாய்ந்தோர் பட்டியல் தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களால் வெளியிடப்பட்டுள்ளது.

Seniority panel list avail

Friday, April 26, 2024

ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் 2023-24 ஆம் கல்வி ஆண்டு மூன்றாம் பருவ தொகுத்தறி மதிப்பீடு மதிப்பெண்களை EMIS வலைதளத்தில் பதிவு செய்வதற்கான நேரடி இணைப்பு

ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் 2023-24 ஆம் கல்வி ஆண்டு மூன்றாம் பருவ தொகுத்தறி மதிப்பீடு மதிப்பெண்களை EMIS வலைதளத்தில் பதிவு செய்வதற்கான நேரடி இணைப்பு
👇👇👇👇👇👇


பதிவேற்றம் செய்வது எவ்வாறு
👇👇👇👇👇

Friday, April 26, 2024

ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் 2023-24 ஆம் கல்வி ஆண்டு மூன்றாம் பருவ தொகுத்தறி மதிப்பெண்களை EMIS வலைதளத்தில் பதிவு செய்தல் -சார்ந்து-வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கி தொடக்கக்கல்வி இயக்குநர் செயல்முறைகள்

தொடக்கக் கல்வி: ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் 2023-24 ஆம் கல்வி ஆண்டு மூன்றாம் பருவ தொகுத்தறி மதிப்பெண்களை EMIS வலைதளத்தில் பதிவு செய்தல் -சார்ந்து-வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கி தொடக்கக்கல்வி இயக்குநர் செயல்முறைகள்
👇👇👇👇👇👇👇
Click here to download pdf
Friday, April 26, 2024

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான (26.04.2024) இன்றைய பலன்கள்


மேஷம் 

இன்று தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களுக்காக அலைய வேண்டி இருக்கும்.
பணவரத்து எதிர்பார்த்தபடி வரும். முக்கிய நபர்களின் உதவியும் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற்ற வாய்ப்புகள் வரும். புதிய வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கலாம்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 3, 6

ரிஷபம்

இன்று குடும்பத்தில் எதிர்பாராமல் நடக்கும் சம்பவங்களால் இழுபறியாக இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் காணப்படும். பிள்ளைகளுடன் அனுசரித்து செய்வது கருத்து வேற்றுமை வராமல் இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெண் சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 1, 3, 9

மிதுனம்

இன்று சாமர்த்தியமாக செயல்பட்டு காரியங்களை வெற்றிகரமாக செய்து புகழ் பெறுவீர்கள். பயணங்கள் செல்ல நேரிடும். உத்தியோகத்தில் முன்னேற்றம் காணப்படும். கூடுதல் கவனம் செலுத்துவதன் மூலம் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், இள நீலம்
அதிர்ஷ்ட எண்: 3, 5, 9

கடகம்

இன்று எதிலும் எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது. காரிய தடை தாமதம் ஏற்படலாம். மனோ தைரியம் கூடும். எதிலும் மந்தமான சூழ்நிலை உருவாகும். ஆனாலும் கடும் முயற்சிக்குப் பின் எதிர்பார்த்தபடி காரியங்கள் நடந்து முடியும். மனகுழப்பம் நீங்கும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், கரும்பச்சை
அதிர்ஷ்ட எண்: 5, 9

சிம்மம்

இன்று வராமல் நின்ற பணம் வந்து சேரும். பயணங்கள் சாதகமான பலனை தரும். தொழில், வியாபாரம் முன்னேற்ற பாதையில் சென்றாலும் மனதிருப்தியளிக்காத நிலை காணப்படும். வியாபாரம் தொடர்பான காரியங்களில் முழுகவனம் செலுத்துவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 1, 5

கன்னி

இன்று புதிய நபர்களின் அறிமுகம் நன்மை தரலாம். அவர்களிடம் பொறுப்புகள் கொடுப்பதில் கூடுதல் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களின் திறமை வெளிப்படும். மேல் அதிகாரிகளின் ஆதரவும் இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 1, 3

துலாம்

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி காணப்படும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகள் நலனுக்காக பாடுபடவேண்டி இருக்கும். உறவினர்களிடமும் பழகுவதில் கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 1, 3, 9

விருச்சிகம்

இன்று பணவரத்து திருப்திகரமாக இருக்கும். எதிலும் மன்னேற்றம் காணப்படும். முழுகவனத்துடன் செய்யும் காரியம் வெற்றியாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுடன் முன்னேற்றம் காண்பீர்கள். மன அமைதி, குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சாம்பல் நிறம்
அதிர்ஷ்ட எண்: 2, 6

தனுசு

இன்று வாக்கு வன்மையால் எதையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். எதிர்ப்புகள் விலகும். உங்களது செயல்களுக்கு முட்டுக்கட்டை போட்டவர்கள் விலகி விடுவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இருந்த மறைமுக எதிர்ப்புகள் நீங்கி செயல்களில் வேகம் காண்பிப்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 3, 5

மகரம்

இன்று முயற்சிகள் சாதகமான பலன் தரும். பணவரத்து அதிகரிக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் சாதகமாக நடந்து முடியும். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் அகலும். தடைப்பட்ட பண உதவி கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 2, 9

கும்பம்

இன்று குடும்பத்தில் இருந்த வீண் பிரச்சனைகள் நீங்கி அமைதி ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மன கசப்பு மாறும். விருந்தினர்கள் வருகை இருக்கும். குடும்ப செலவுகள் குறையும். பிள்ளைகள் உங்களது ஆலோசனைகளை கேட்பார்கள். அவர்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுப்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 1, 3

மீனம்

இன்று நீங்கள் செய்யும் காரியங்களுக்கு இருந்த தடை நீங்கும். எதிர்ப்புகள் விலகும். பணவரத்து கூடும். குடும்பத்தினர் தொடர்பான கவலைகள் நீங்கும். அவர்களிடம் இருந்த கருத்து வேற்றுமை குறையும். வழக்குகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். தாய்வழி சொத்துக்கள் சேரும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, நீலம்
அதிர்ஷ்ட எண்: 5, 7