Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, April 23, 2024

Tuesday, April 23, 2024

இளநிலை படிப்பை முடித்தவர்கள் இனி PhD-க்கு விண்ணப்பிக்கலாம் - புதிய விதிமுறைகள் அமல்..!

நான்காண்டுகள் இளநிலை பட்டப்படிப்பு (Undergraduate education) முடித்த மாணவர்கள், நேரடியாக ஆராய்ச்சிப் படிப்பான PhD படிக்க விண்ணப்பிக்கலாம் என, பல்கலைக்கழக மானியக்குழு (UGC) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதன்படி, நான்காண்டு இளங்கலை பட்டப்படிப்பில் குறைந்தபட்சம் 75% மதிப்பெண் அல்லது அதற்கு சமமான கிரேட் பெற்ற மாணவர்கள், நேரடியாக தேசிய தகுதித் தேர்வு (National Eligibility Test - NET) தேர்வு எழுதவும், பிஹெச்.டி படிக்கவும் இயலும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, முனைவர் படிப்புக்கு முதுநிலை படிப்பு (Post Graduation) கட்டாயம் என்றிருந்தது. அதேபோல, தேசிய தகுதித் தேர்வுக்கு முதுநிலை படிப்பை நிறைவு செய்து, அதில் குறைந்தபட்சம் 55% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும் என்ற விதி இருந்தது. தற்போது இந்த விதிமுறைகளில் தளர்வுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

இந்த அறிவிப்பானது, தேசிய கல்விக் கொள்கையின் கீழ் நான்கு ஆண்டுக்கால இளநிலை படிப்பை ஊக்குவிக்கும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ளது. 8 செமஸ்டர்கள், 4 ஆண்டுக்கால இளநிலை கல்வியைக் கற்போர், குறைந்தபட்சமாக 10-க்கு 7.5 சி.ஜி.பி.ஏ மதிப்பெண் (CGPA - Cumulative Grade Point Average) வைத்திருக்க வேண்டும்.

ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோஷிப் (JRF) உடன், அல்லது அது இல்லாமலேயே பிஹெச்.டியை தொடர, விண்ணப்பதாரர்கள் நான்கு ஆண்டுகள் இளங்கலைப் படிப்பில் குறைந்தபட்சம் 75% மதிப்பெண், அல்லது அதற்கு சமமான மதிப்பெண், கிரேட் பெற்றிருக்க வேண்டும்.

இதில் பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட, பொருளாதாரத்தில் பின்தங்கியோர் ஆகியோருக்கு மதிப்பெண்ணில் கூடுதலாக 0.5 % தளர்வு அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இளநிலை பட்டம் பெற்ற மாணவர்கள் தாங்கள் படித்த பிரிவில் மட்டுமல்லாமல், வேறு எந்தப் பாடத்தில் வேண்டுமானாலும் PhD படிக்கலாம் என்று பல்கலைக்கழக மானியக் குழு சார்பில் இவ்வருடத்துக்கான புதிய நெறிமுறைகளில் தளர்வுகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

இந்தத் தளர்வின் கீழ் முனைவர் பட்டத்துக்கு படிப்போர், தங்களின் ஆய்வுக் கட்டுரையைக் காப்புரிமையின் கீழ் வரும்படியோ, சக மதிப்பாய்வு செய்யப்பட்ட அல்லது பரிந்துரைக்கப்பட்ட பத்திரிகைகளில் அதன் குறியீட்டு எண்ணை (INTERNATIONAL STANDARD BOOK NUMBER - ISBN CODE) மட்டுமே வெளியிட வேண்டும். இதன்மூலம், பிற தளங்களிலிருந்து அக்கட்டுரைகள் திருடப்படுவதைத் தவிர்க்க இயலும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிப்பு குறித்து யுஜிசி தலைவர் ஜெகதீஷ் குமார் கூறுகையில், "முனைவர் படிப்புக்கான ஆய்வு செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் 4 வருட இளநிலை படிப்பைக் கற்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், இத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. பிஹெச்.டி கனவோடு படிக்கும் மாணவர்களுக்கு, உயர்கல்வி நிறுவனங்களில் சில தளர்வுகள் தரப்படவேண்டியது அவசியமாகிறது. 7.5 -க்கும் குறைவான சி.ஜி.பி.ஏ மதிப்பெண் வைத்துள்ளவர்கள், ஒரு வருடமாவது முதுநிலைப் படிப்பு படித்திருக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
Tuesday, April 23, 2024

Income Tax - April 2024 பிடித்தம் Automatic ஆக செய்துள்ளது எவ்வாறு?


1 . கரூர் ,நீலகிரி மற்றும் பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களுக்கு pay roll run நாமே ரன் செய்து கொள்ளலாம் எனும் பொழுது ஒருமுறை schedule run கொடுத்தால் போதுமானது .ஐந்து நிமிடத்திற்குள் ரிசல்ட்டின் பெயர் வந்துவிடும். மற்ற மாவட்டங்களுக்கு centralized run செய்து விட்டார்கள்.

2. வருமான வரி பிடித்தமானது new regime என்று தேர்வு செய்து பிடித்தவர்களுக்கு எந்த ஒரு குழப்பமும் இன்றி Month gross X 12 months = Income என்று கால்குலேட் செய்து அதனுடன் இரண்டு மாத DA arrear add செய்து total income calculate ஆகி வந்துள்ளது. பின்னர் standard Deduction 50000 கழித்துவிட்டு மீதமுள்ள தொகைக்கு வருமான வரி பிடித்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சரியாக வருகின்றது.இங்கு ஐடி மற்றும் செஸ் என்று தனியாக காண்பிக்கப்படும் .

IT மற்றும் cess இரண்டையும் 11 மாதங்களாக divide செய்து மாத ஊதியத்தில் பிடித்தம் மேற்கொள்ளப்படுகிறது.

இதன்படி பார்க்கும் பொழுது மாத ஊதியத்தில் பிடித்தம் செய்யப்பட்ட வருமான வரிக்கும் cess வித்தியாசம் காண்பிக்கப்படும். ஆனால் 11 மாதம் என்று பார்க்கும் பொழுது சரியே.

நாங்கள் மார்ச் மாதமும் பிடித்து மேற்கொள்ள வேண்டும் அந்தத் தொகை இங்கு வரவில்லை என்ன செய்வது என்று புலம்ப வேண்டாம் 12 வது மாதம் அதாவது 2025 பிப்ரவரி மாதத்தில் நாம் வருமான வரி பிடித்த மேற்கொள்ளப்படும் பொழுது அத்தகையையும் சேர்த்து தான் காண்பிக்கப் போகின்றோம்.

3. அடுத்ததாக old ரெஜிமுக்கு வருவோம் old ரெஜிம் கொடுத்தவர்கள் எந்தெந்த விதியின் கீழ் exception கேட்டிருந்தார்களோ அந்தந்த விதியின் கீழ் தொகையினை enter செய்திருந்தால் மட்டுமே இங்கு deduct செய்துவிட்டு மீதம் உள்ளவற்றிற்கு இன்கம் டேக்ஸ் பிடித்தம் மேற்கொள்ளப்பட்டிருக்கும். Attachment செய்திருக்க வேண்டியது இல்லை🏹vj🏹

Old regime என்று தேர்வு செய்தவர்கள் தொகையினை உள்ளீடு செய்யாமல் இருந்திருந்தால் ஆட்டோமெட்டிக்காக new ரெஜிமிற்கு மாறி இருக்கும். அப்பொழுது வருமான வரி பிடித்தம் அதிகமாக தான் வரும். குறிப்பாக வீட்டுக் கடன் பெற்றவர்கள் சரியாக தொகையினை உள்ளீடு செய்திருந்தால் சரியாக வந்திருக்கும்.

இதனை மாற்றம் செய்வது எவ்வாறு என்று தகவல் பெறப்பட்ட பின்னர் பதிவிடப்படும்.

வாழ்த்துக்கள்

1. அந்தந்த மாவட்டமே ரன் செய்வது போன்று முன்னெடுத்து சென்று கொண்டிருக்கின்ற CTA and wipro team

2. Income tax பிடித்தம் தானாகவே சரியாக deduct மேற்கொள்வது போன்று program செய்த team

3. ⁠ GPF Proposal online வழிமுறையில் எளிமையாக்கிய CTA and wipro team
Tuesday, April 23, 2024

கனவு ஆசிரியர் விருது பெற்றவர்களுக்கு உலக அளவில் / இந்திய அளவில் சுற்றுலா - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!


பள்ளிக் கல்வித் துறை - 2023 - 2024 ம் ஆண்டிற்கான மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் அரசின் நலத்திட்ட உதவிகளை மாணவர்களிடம் சிறப்பாக கொண்டு சேர்க்கும் ஆசிரியர்களை வெளிநாடுகளில் உலக அளவில் / இந்திய அளவில் புகழ் பெற்ற இடங்களுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்ல பள்ளிக்கல்வி இயக்குநருக்கு நிருவாக அனுமதி வழங்கி அரசாணை பெறப்பட்டது - தெரிவு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு விவரம் தெரிவிக்க கோருதல் - சார்பு - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

Kanavu Asiriyar _ National Tour_ Intimation Proceedings - Download here

இணைப்பு: ஆசிரியர்கள் பட்டியல்!👇

Tuesday, April 23, 2024

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான (23.04.2024) இன்றைய பலன்கள்

மேஷம் 

இன்று குடும்பத்தினருடன் அனுசரித்து செல்வது நன்மை தரும்.
உறவினர்கள் வருகை இருக்கும். மனோ தைரியம் கூடும். காரிய அனுகூலம் உண்டாகும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். உங்கள் திறமை வெளிப்படும். பொருளாதாரம் சம்பந்தாமாக தீவிர கவனம் செலுத்துவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6

ரிஷபம்
இன்று புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவது நல்லது. குழப்பங்கள் தீரும். காரிய வெற்றி உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வீண் செலவை குறைக்க திட்டமிட்டு செயல்படுவது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6

மிதுனம்
இன்று மன அமைதி குறையலாம். கூடுமானவரை பயணத்தை தவிர்ப்பது நன்மை தரும். எதிர்பார்த்த பணவரவு இருக்கும். புதிய நபர்களிடம் கவனமாக இருப்பது நன்மை தரும். உறவினர் உதவி கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9

கடகம்
இன்று தொழில் வியாபாரம் எதிர்பார்த்தபடி நன்கு நடக்கும். பணதட்டுப்பாடு ஏற்பட்டு பின்னர் சரியாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இருந்த சங்கடங்கள் சரியாகும். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு சாதகமான பதில் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

சிம்மம்
இன்று குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களது ஆலோசனை கேட்டு நடப்பது மனதுக்கு திருப்தி தரும். கணவன் மனைவிக்கிடையே மனம் விட்டு பேசுவதால் வருத்தங்கள் நீங்கும். பிள்ளைகளின் செயல்பாடுகள் மனதுக்கு திருப்தி தருவதாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 9

கன்னி
இன்று விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு வரும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பணவரத்து இருக்கும். காரிய தடங்கல்கள் உண்டாகும். குடும்ப கஷ்டம், கடன் தொல்லை நீங்கும். வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 1,2

துலாம்
இன்று பணவரத்து, காரிய தடை நீங்கும். மனதில் ஏதாவது கவலை தோன்றும், பய உணர்வு உண்டாகும். தூக்கம் குறையலாம். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. அடுத்தவருடன் பகை ஏற்படாமல் கவனமாக இருப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 5, 6

விருச்சிகம்
இன்று தொழில் வியாபாரம் சுமாராக இருக்கும். தொழில் தொடர்பாக அலைய வேண்டி இருக்கும் சரக்குகளை அனுப்பும் போது பாதுகாப்பாக அனுப்பி வைப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் காரிய தடைகளை சந்திக்க வேண்டி இருக்கும். அலுவலக பணிகள் மெதுவாக நடைபெறும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 4, 6

தனுசு
இன்று குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. கணவன் மனைவிக்கிடையே வாக்குவாதங்கள் உண்டாகலாம். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவது நல்லது. திடீர் செலவு ஏற்படலாம். சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்வது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 2, 9

மகரம்
இன்று மனக்கவலை உண்டாகும். மற்றவர்களிடம் பகை ஏற்படாமல் பழகுவது நல்லது. காரியங்களில் மெத்தன போக்கு காணப்படும். சக ஊழியர்களிடம் நிதானமாக பழகுவது நன்மை தரும். தொழிலில் எதிர்பார்த்த லாபங்கள் ஏற்படும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 9, 3
கும்பம்
இன்று மனோ தைரியம் உண்டாகும். மனதில் இருந்த கவலை, வருத்தம் நீங்கி மகிழ்ச்சி ஏற்படும். எல்லா முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். பணவரத்து அதிகரிக்கும். எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. பயணத்தின் போது கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 4, 6

மீனம்
இன்று தொழில் வியாபாரம் சீராகும். தொழில் தொடர்பாக எடுக்கும் முயற்சிகள் வெற்றியை தரும். வியாபாரத்திற்கு தேவையான பண உதவி கிடைக்கும். போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு வெற்றியை பெறுவார்கள். சக ஊழியர்களுடன் இருந்த பிரச்சனைகள் தீரும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 5, 6
Tuesday, April 23, 2024

B.E/B.Tech முடித்தவர்களுக்கு வேலை 400 பணியிடங்கள்

இந்திய அணுசக்தி கழகம் காலியாக உள்ள 400 Executive Trainees பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

நிறுவனம்: இந்திய அணுசக்தி கழகம்

பணியின் பெயர்: Executive Trainees

பணியிடங்கள்: 400

விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.04.2024

விண்ணப்பிக்கும் முறை: Online

கல்வி தகுதி: B.E/B.Tech or B.Sc in Engineering or ME/M.Tech

வயது வரம்பு: 18- 26 வயது வரை

சம்பளம்: Rs. 55,000

இந்த பணிக்கு தகுதியான நபர்கள் Shortlisting, Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

கூடுதல் விவரங்களுக்கு: https://www.npcilcareers.co.in
Tuesday, April 23, 2024

ஏப்.30 வரை கெடு.. PAN கார்டுல உங்க பெயர், DOB.. இதுகூட மேட்ச் ஆகணும்.. இல்லனா FUND-க்கு END.. திடீர் உத்தரவு!

பான் அட்டையில் உள்ள உங்களுடைய பெயர் மற்றும் பிறந்த தேதி ஆகிய இரண்டு விவரங்களும் ஒரு குறிப்பிட்ட "ஆவணத்துடன்" பொருந்த வேண்டுமென்றும்..

இதில் ஏதேனும் மாற்றங்கள் இருந்தால், அதை வருகிற ஏப்ரல் 30 ஆம் தேதிக்குள் திருத்திக்கொள்ள வேண்டுமென்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பான் கார்டில் (PAN Card) உள்ள பெயர் மற்றும் பிறந்த தேதி விவரங்கள் எதனுடன் பொருந்த வேண்டும்? அப்படி பொருந்தவில்லை என்றால்.. ஏப்ரல் 30 ஆம் தேதிக்கு பின்னர் என்னென்ன சிக்கல்களை சந்திக்க நேரிடும்? இந்த உத்தரவு எங்கிருந்து வந்துள்ளது? இது யாருக்கு எல்லாம் பொருந்தும்? இதோ விவரங்கள்:

எதனுடன் பொருந்த வேண்டும்? மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்களுக்கான மியூச்சுவல் ஃபண்ட் ஃபோலியோவில் (Mutual Fund Folio) உள்ள பெயர் மற்றும் பிறந்த தேதி விவரங்கள் ஆனது பான் கார்டு அல்லது மற்ற அடையாள அட்டையில் உள்ள பெயர் மற்றும் பிறந்த தேதியுடன் பொருந்த வேண்டும்.

பொருந்தவில்லை என்றால் என்னவாகும்? மியூச்சுவல் ஃபண்ட் ஃபோலியோ மற்றும் பான் அட்டையில் உள்ள பெயர் மற்றும் பொருந்தவில்லை என்றால், இதில் ஏதேனும் முரண்பாடுகள் இருந்தால் ஏப்ரல் 30, 2024க்குள் சரிசெய்யப்பட வேண்டும். அப்படி செய்யவில்லை என்றால் ஏப்ரல் 30 ஆம் தேதிக்கு பின்னர் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்கள் பரிவர்த்தனை நிராகரிப்பை (Transaction Rejection) சந்திக்க நேரிடும்.

இந்த உத்தரவு எங்கிருந்து வந்துள்ளது? இது எம்எப் சென்ட்ரல் (MF Central) மற்றும் சிஏஎம்எஸ் (CAMS) போன்ற மியூச்சுவல் ஃபண்ட் டிரான்ஸ்ஃபர் ஏஜென்சிகளிடம் இருந்து வந்துள்ளது. முதலீட்டாளரின் பான் ற்றும் எம்எப் ஃபோலியோ ஆகிய இரண்டிற்கும் இடையேயான பெயர் / பிறந்த தேதியில் உள்ள பொருத்தமின்மை ஆனது பணப் பரிமாற்ற நிராகரிப்புக்கு வழிவகுக்கும் என்று அறிவித்துள்ளன.

மேலும் எம்எப் சென்ட்ரல் மற்றும் சிஏஎம்எஸ்-ன் கூற்றுப்படி, இந்த ஆணை செபியின் (Securities and Exchange Board of India -SEBI) சமீபத்திய வழிகாட்டுதல்கள் மற்றும் வருமான வரித் துறையின் (Income Tax) பான் சரிபார்ப்பு செயல்முறையின் மாற்றங்களுக்கு ஏற்ப உள்ளது. தடையற்ற சரிபார்ப்பை உறுதிசெய்ய, முதலீட்டாளர்கள் அனைத்து விண்ணப்பங்களிலும் கேஒய்சி படிவங்களிலும் (KYC Forms) சரியான பெயர் மற்றும் பிறந்த தேதி விவரங்களை வழங்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இம்மாத தொடக்கத்தில், ரூ.1000 அபராததுடன் பான் கார்டு தொடர்பான புதிய மாற்றம் அமலுக்கு வந்ததும் இங்கே குறிப்பிடத்தக்கது. அது பான் - ஆதார் இணைப்பு தொடர்பான காலக்கெடு ஆகும். ஏப்ரல் 1 ஆம் தேதிக்கு பிறகு பான்-ஆதாரை இணைபவர்களுக்கு ரூ.1,000 அபராதமும் விதிக்கப்படும் என்பதே அந்த கட்டாய மாற்றமாகும்.

ஒருவேளை நீங்கள் இன்னமும் உங்களுடைய பான் எண்ணை ஆதார் அட்டையுடன் இணைக்கவில்லை என்றால் ஆன்லைன் வழியாக அதை செய்வது எப்படி என்கிற வழிமுறைகள் இதோ: முதலில் வருமான வரி இ-ஃபைலிங் போர்ட்டலுக்கு (Income Tax e-filing portal) செல்லவும். அங்கே ஹோம் பேஜின் இடது புறத்தில் உள்ள குவிக் லிங்க்ஸ் என்கிற என்ற தலைப்பின் கீழ் லிங்க் ஆதார் (Link Aadhaar) என்கிற விருப்பத்தைக் கிளிக் செய்யவும்.

பின்னர் உங்கள் பான் மற்றும் ஆதார் நம்பரை உள்ளிட்டு வேலிடேட் (Validate) பட்டனை கிளிக் செய்யவும். அபராதம் குறித்து 'உங்கள் கட்டண விவரங்கள் சரிபார்க்கப்பட்டன' என்று ஒரு பாப்-அப் மெசேஜ் (Pop-up Message) தோன்றும். அதனை தொடர்ந்து பாண்-ஆதார் இணைப்பிற்கான கோரிக்கையைச் சமர்ப்பிக்க, கன்ட்டினியூ (Continue) பட்டனை கிளிக் செய்யவும்.

இப்போது தேவையான விவரங்களை உள்ளிட்டு லிங்க் ஆதார் (Link Aadhaar) என்கிற பட்டனை கிளிக் செய்யவும். பின்னர் ரிஜிஸ்டர் செய்யப்பட்டுள்ள மொபைல் எண்ணிற்கு வந்த ஒடிபி (OTP) நம்பரை உள்ளிடவும். அவ்வளவு தான் பான்-ஆதார் அட்டையை இணைப்பதற்கான உங்களது கோரிக்கை (Request to link the PAN-Aadhaar card) வெற்றிகரமாக சமர்ப்பிக்கப்படும்.
Tuesday, April 23, 2024

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 23.04.2024

உலகப் புத்தக நாள் (World Book Day

திருக்குறள்: 

"பால்: பொருட்பால். இயல்: அரசியல். 
அதிகாரம்: கல்வி 

குறள்:396

தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு.

விளக்கம்:

தோண்டத் தோண்ட ஊற்றுநீர் கிடைப்பது போலத் தொடர்ந்து படிக்கப் படிக்க அறிவு பெருகிக் கொண்டே இருக்கும்.

பழமொழி :

Little drops of water make the mighty ocean

சிறு துளி பெரு வெள்ளம்

இரண்டொழுக்க பண்புகள் :

 1. பெரியோர் , பெற்றோர்,  ஆசிரியர்களை மதித்து நடப்பேன்.

2. அவர்கள் மனம் புண் படும் படி பேசவோ நடந்து கொள்ளவோ மாட்டேன்.

பொன்மொழி :

நம் வாழ்க்கை தேடலில் தொலைக்கக் கூடாத மிகப்பெரிய புதையல்.. தன்னம்பிக்கை மற்றும் விடாமுயற்சி.!”

பொது அறிவு : 

1. ரப்பர் ஸ்டாம்பு மை தயாரிக்க பயன்படும் சேர்மம் எது?

விடை: கிளிசரால்

 2. உருவத்தில் பெரிய தேனீயாக அழைக்கப்படுவது எது?

விடை: இராணித்தேனீ 

English words & meanings :

 Upbeat - cheerful; உற்சாகமான.
Charismatic - likable person;  கவர்ந்திழுக்கும் நபர்.

ஆரோக்ய வாழ்வு : 

நுங்கு பயன்கள் : நுங்குக்கு, கொழுப்பைக் கட்டுப்படுத்தி, உடல் எடையைக் குறைக்கும் தன்மை அதிகம். உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் உணவுக் கட்டுப்பாட்டுடன், நுங்கை அதிகம் சேர்த்துக்கொள்ளலாம். நுங்கில் உள்ள நீரானது வயிற்றை நிரப்பி, பசியையும் தூண்டும். மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு - இரண்டுக்குமே நுங்கு மருந்தாக இருப்பது அதிசயம். நுங்கைச் சாப்பிட்டால் உடனடியாக நிவாரணம் கிடைக்கும்.  

ஏப்ரல் 23

உலகப் புத்தக நாள் (World Book Day


உலகப் புத்தக நாள் (World Book Day) அல்லது உலகப் புத்தக மற்றும் பதிப்புரிமை நாள் (World Book and Copyright Day) அல்லது உலக புத்தக நாள், என்பது வாசித்தல், பதிப்பித்தல் மற்றும் பதிப்புரிமையூடாக அறிவுசார் சொத்துக்களைப் பாதுகாத்தல் போன்றவற்றை வளர்க்கும் நோக்குடன் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு நிறுவனம் (யுனெஸ்கோ) ஆண்டுதோறும் ஏப்ரல் 23 ஆம் நாளன்று ஒழுங்கு செய்யும் ஒரு நிகழ்வு ஆகும். இது 1995 ஆம் ஆண்டு முதன் முதலாகக் கொண்டாடப்பட்டது. 

பாரிஸ் நகரில் 1995 ஆகத்து 25 முதல் நவம்பர் 16 வரை நடந்த யுனெஸ்கோவின் 28வது மாநாட்டில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்படது. அத்தீர்மானம் வருமாறு,

"அறிவைப் பரப்புவதற்கும், உலகெங்கிலும் உள்ள பல்வேறு கலாசாரங்கள் பற்றிய விழிப்புணர்வினைப் பெறுவதற்கும், புரிதல், சகிப்புத்தன்மை போன்றவற்றின் மூலம் மனிதர்களின் ஒழுக்கத்தினை மேம்படுத்தவும், புத்தகம் ஒரு சிறந்த கருவியாக உள்ளதால் ஏப்ரல் 23 உலக புத்தக தினமாக கொண்டாடப்படும்"

நீதிக்கதை

 மூன்று பொம்மைகள்


மன்னர் ஒருவரின் சபையிலே மதிநுட்பம் வாய்ந்த புலவர் ஒருவர் இருந்தார். மன்னர் எதைச் செய்தாலும், புலவருடன் கலந்தாலோசனை செய்த பின்பே முடிவெடுப்பார். இதனைக் கண்டு சபையில் இருந்த அமைச்சர்கள் மிகுந்த கோபம் கொள்வதுண்டு.

அமைச்சர்களின் கோபத்தையும் மன வருத்தத்தையும் மன்னர் அறிந்து கொண்டார். அவர்களுக்கு உண்மையைப் புரியவைக்க வேண்டும் என விரும்பினார். அதற்குரிய வாய்ப்பு மன்னருக்குக் கிடைத்தது.

மன்னரும் அமைச்சர்களும் கூடியிருந்த சபைக்குச் சிற்பக்கலைஞர் ஒருவர் வந்தார். அவர் தம்மிடம் மூன்று பொம்மைகள் உள்ளது என்றும்

அவற்றை மன்னர் வாங்கிக் கொள்ள வேண்டும் என்றார்.

"பொம்மைகளைக் காட்டுங்கள் என்றார் மன்னர்.

கலை நயம் மிகுந்த பொம்மைகள் மூன்றை, சிற்பி தனது பையிலிருந்து எடுத்து மன்னனின் பார்வைக்காக வைத்தார்.

அழகான பொம்மைகள்; மூன்றும் ஒரே அளவு; ஒரே அச்சில் வார்த்தது போலத் தோற்றமளித்தன.

மன்னர் ஒரே மாதிரியான தோற்றமுள்ள பொம்மைகளில் ஒன்றை மட்டுமே வாங்க நினைத்தார்.

"அமைச்சர்களே! இவற்றுள் எது நன்றாக இருக்கிறது என்று தேர்ந்தெடுங்கள்" என்றார்.

அமைச்சர்கள் வியப்படைந்தனர். "மன்னரே! மூன்று பொம்மைகளும் ஒன்று போலவே இருப்பதால் எதை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். இதில் தேர்வு செய்ய என்ன இருக்கிறது?" என்று கூறினார்கள்.

"அப்படியா. சரி, சிற்பியாரே! முதல் பொம்மையைக் கொடுங்கள். அதையே எடுத்துக் கொள்ளலாம்" என்றார்.

அச்சமயம் சபைக்கு வந்தார் புலவர்."மன்னரே, சற்றுப் பொறுங்கள். மூன்று பொம்மைகளில் எது சிறந்தது என்பதை நான கண்டறிந்து தேர்வு செய்கிறேன்” என்றார் புலவர்.

மன்னரும் அமைச்சர்களும் புலவர் எவ்வாறு தேர்வு செய்யப்போகிறார் என்பதை அறியும் ஆவலுடன் இருந்தார்கள்.

புலவர் பொம்மைகள் இருந்த இடத்திற்கு வந்தார். சிறிய கல் ஒன்றை எடுத்து ஒரு பொம்மையின் காதில் போட்டார். அந்தக் கல், மற்றொரு காது வழியாக வெளியே வந்து விட்டது

அந்தக் கல்லை, அடுத்த பொம்மையின் காதில் போட்டார். காதுக்குள் போட்ட கல், பொம்மையின் வாய் வழியாக வெளியில் வந்து விட்டது."

மூன்றாவது பொம்மையின் காதில் கல்லைப் போட்டார். அந்தக் கல், வெளியே வராமல் பொம்மைக்குள்ளேயே தங்கி விட்டது.

"மன்னரே! முதல் பொம்மை தனது காதால் கேட்டதை, மற்றொரு காதால் வெளியில் விட்டு விடும். அடுத்த பொம்மை காதால் கேட்டதை வாயால் சொல்லி விடும். மூன்றாவது பொம்மையோ காதால் கேட்டதை எவரிடமும் கூறாது. எனவே மூன்றாவது பொம்மையே நல்ல பொம்மை"

புலவரின் தேர்வைக் கண்டு மன்னர் கைதட்டி ஆரவாரித்துப் பாராட்டினார். புலவரின் நுண்மதியை அமைச்சர்களும் வியந்து போற்றினார்கள்.

இன்றைய செய்திகள்

23.04.2024

*அமெரிக்க குடியுரிமை பெற்ற 2- வது பெரிய நாடாக இந்தியா திகழ்கிறது.

*கடந்த 4 மாதங்களில் பிரேசிலில் டெங்கு காய்ச்சலுக்கு 1,600 பேர் பலி.

*தமிழகத்தில் வெப்ப அலை வீசக்கூடும்: வானிலை மையம் எச்சரிக்கை.

*ஏ.டி.பி., சாலஞ்சர் கோப்பை டென்னிஸ் இரட்டையரில் இந்தியாவின் ரித்விக், -பூனாச்சா ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.

*கேன்டிடேட் செஸ் போட்டியில் சாம்பியன்: தமிழக வீரர் குகேசுக்கு தலைவர்கள் வாழ்த்து.

Today's Headlines

*India is the 2nd largest country of American citizenship.

 *1,600 people have died of dengue fever in Brazil in the last 4 months.

 *Heat wave likely to hit Tamil Nadu: Meteorological Department warns.

 * India's Rithvik-Poonacha duo won the ATP Challenger Cup tennis doubles title.

 * Leaders congratulate Tamil Nadu player kugesh who won the Champion in candidate chess tournament:
 Prepared by

Covai women ICT_போதிமரம்

Monday, April 22, 2024

Monday, April 22, 2024

ஓவர் எடையை டக்குனு குறைக்க பெருஞ்சீரகத்தை இப்படி சாபிடுங்கள்

உடல் எடையை குறைக்க நாம் அனைவருமே பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம். இந்த உடல் பருமன் நமது உடலை ஒருமுறை ஆக்கிரமித்துவிட்டால், அதைக் குறைப்பது என்பது மிகவும் கடினமானதாகும்.

குறிப்பாக உடற்பயிற்சி, உணவுக்கட்டுப்பாடு மற்றும் பல வைத்தியங்களை பின்பற்றிய பிறகு தான் உடல் எடை குறையத் தொடங்கும். கோடைக்காலத்தில் உடல் பருமனை குறைக்க பெருஞ்சீரகம் தண்ணீர் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். பெருஞ்சீரகம் உடல் பருமனை குறைக்க உதவுவதோடு, வயிற்றை குளிர்ச்சியாகவும் வைத்திருக்க உதவுகிறது. அதுமட்டுமின்றி இந்த பெருஞ்சீரகம் தண்ணீர் கல்லீரலை நச்சுத்தன்மையாக்கவும் உதவுகிறது, இது உடலில் நிறைந்திருக்கும் கொழுப்பு திரட்சியைக் குறைக்க உதவுகிறது. எனவே காலையில் வெறும் வயிற்றில் பெருஞ்சீரகம் தண்ணீரை குடிப்பதால் உடலில் எண்ணென நன்மைகள் கிடைக்கும் என்பதை தெரிந்துக்கொள்வோம்.

வெறும் வயிற்றில் பெருஞ்சீரகம் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் | Benefits of drinking fennel water on an empty stomach:

* காலையில்பெருஞ்சீரகம்தண்ணீரை குடித்து வந்தால், உங்கள் செரிமானம் மும்பை விட சிறப்பாக பலப்படுத்த உதவும் மற்றும் நல்ல செரிமானத்திற்கு உதவும்.

* பெருஞ்சீரகம் தண்ணீர் கல்லீரலை நச்சுத்தன்மையாக்கி சுத்தப்படுத்த உதவுகிறது. இதனால் உடலில் கொழுப்பு அதிகம் சேராமல் இருக்கும்.

* மலச்சிக்கலால் அவதிப்பட்டாலோ அல்லது வாயு அதிகமாக இருந்தாலோ, காலையில் எழுந்தவுடன் பெருஞ்சீரகம் தண்ணீர் குடிப்பது நன்மை பயக்கும்.

* பெருஞ்சீரகம் தண்ணீர் குடிப்பது இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும், மேலும் பிபியைக் கட்டுப்படுத்த உதவும்.

* பெருஞ்சீரகத்தில் அதிகளவு நார்ச்சத்து நிறைந்துள்ளது, இது உங்கள் வயிற்றை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.

* பெருஞ்சீரகம் தண்ணீர் உடலையும் மனதையும் அமைதிப்படுத்த உதவும் ஒரு மசாலா பொருளாகும். எனவே அலுவலகம் அல்லது வேலையில் ஏதேனும் மன அழுத்தம் ஏற்பட்டால், நாள் முழுவதும் பெருஞ்சீரகம் தண்ணீர் குடிப்பதால் நிவாரணம் கிடைக்கும்.

* பெருஞ்சீரகம் தண்ணீர் தனது குழந்தைக்கு உணவளிக்கும் தாய்க்கும் நன்மை பயக்கும், இது அதிக பால் உற்பத்தி செய்ய உதவும்.

* உங்கள் சுவாசத்தில் துர்நாற்றம் வீசுகிறதா? இருக்கவே இருக்கிறது பெருஞ்சீரகம். இதிலுள்ள நறுமணம் மிகுந்த எண்ணெய் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் நம்முடைய வாயில் உள்ள பாக்டீரியாவை எதிர்த்து போராடுவதோடு வாய் துர்நாற்றத்தை போக்குகிறது.

பெருஞ்சீரகம் தண்ணீரை தயாரிக்கும் செயல்முறை | How to prepare fennel water:
பெருஞ்சீரகம் தண்ணீர் தயாரிக்க, ஒரு கிளாஸ் தண்ணீரை எடுத்து முதலில் ஒரு ஸ்பூன் பெருஞ்சீரகத்தை சேர்க்கவும். இந்த தண்ணீர் இரவு முழுவதும் ஊற வைத்து, காலையில் வெதுவெதுப்பாக கொத்து வைத்து, வடிகட்டி குடிக்கவும்.
Monday, April 22, 2024

ஓட்டுப்பதிவின்போது பாதுகாப்பும் இல்லை; பரிவும் இல்லை தேர்தல் கமிஷனுக்கு ஆசிரியர்கள் புகார்

தமிழகத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை; விபத்து, பணிப்பளு காரணமாக 4 ஆசிரியர்கள் உயிரிழந்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது குறித்து தேர்தல் கமிஷனுக்கு ஆசிரியர் சங்கங்கள் புகார் அனுப்பியுள்ளன.

ஏப்.19ல் நடந்த லோக்சபா தேர்தல் ஓட்டுப் பதிவுக்காக 68 ஆயிரத்து 321 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டன. இவற்றில் 3 லட்சத்து 32 ஆயிரத்து 233 பேர் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இவர்களில் பெரும்பாலும் ஆசிரியர்களே. தேர்தலுக்கு முன் அவர்களுக்கு 3 கட்டமாக பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

ஆனாலும் எந்த தேர்தலிலும் இல்லாத வகையில் பல்வேறு இன்னல்களை ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சந்தித்துள்ளனர். இதற்கு பிரதான காரணம், ஓட்டுச்சாவடிகளில் மேற்கொள்ள வேண்டிய பராமரிப்பு பணி, மாவட்டம் வாரியாக தேர்தல் பணிக்கு ஒதுக்கிய நிதி சரிவர செலவிடப்படவில்லை என பொதுவான குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் சீனிவாசன், தமிழக இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் இயக்க பொதுச் செயலாளர் ராபர்ட் கூறியதாவது:

ஓட்டுப்பதிவுக்கு முன்பே ஓட்டுச்சாவடிகளில் உரிய வசதிகளை மேற்கொள்ள வேண்டும் என ஆசிரியர் சங்கங்கள் வலியுறுத்தின. தேர்தல் கமிஷன் ஒதுக்கிய ரூ.8.88 கோடி நிதியை குறிப்பிட்டு மதுரை உள்ளிட்ட கலெக்டர்களுக்கு மனுக்கள் அளித்தோம். ஆனால் பெரும்பாலான மாவட்டங்களில் கண்டுகொள்ளவில்லை.

மருத்துவ காரணங்களை குறிப்பிட்டு தேர்தல் பணியில் விலக்கு கேட்ட ஆசிரியர், அரசு ஊழியர்களுக்கும் கண்டிப்புடன் மறுக்கப்பட்டன.

மன உளைச்சல்

ஓட்டுப் பதிவு நாளில் ஓட்டுச் சாவடிகளில் போதிய கழிப்பறை வசதி இன்றி ஆசிரியைகள் இரவு முழுவதும் கஷ்டப்பட்டனர். குடிநீர் கிடைக்கவில்லை. மூன்று வேளை உணவு கிடைக்காமல் பிஸ்கட், தண்ணீரை குடித்து சமாளித்தனர். ஓட்டுப் பதிவு முடிந்த மறுநாள் அதிகாலை 4:00 மணி வரை ஓட்டுப் பெட்டிகளை எடுக்க வராததால் பூத்துகளிலேயே இருந்து மனஉளைச்சலுக்கு ஆளாகினர்.

அதன் பின் வீடுகளுக்கு திரும்பும்போது வாகன வசதி, பாதுகாப்பு கேள்விக்குறியானது.மனஉளைச்சல், உடல்சோர்வுடன் வீடு திரும்பிய தருமபுரி காமலாபுரம் தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர் கணேசன் நெஞ்சு வலியால் இறந்தார். ஆசிரியர் செல்வராஜ், சேலம் ஆத்துார் ஒன்றிய ஆசிரியை சில்வியா கேத்தரின் அனிதா, அவரது கணவர் ஜான் பிரகாஷ் ஆகியோர் சாலை விபத்துகளிலும் சிக்கினர். ஆசிரியை சிகிச்சையில் உள்ளார். மற்ற இருவர் உயிரிழந்தனர்.

நாமக்கல் ராசிபுரம் ஒன்றியம் ஜெயபாலன் தேர்தல் பயிற்சிக்கு சென்றபோது விபத்தில் பலியானார். மொத்தம் 4 பேர் உயிரிழந்தனர்.

ஆசிரியர்கள் உயிரிழப்பு, தேர்தல் பணியில் பாதுகாப்பு குறைபாடு, அடிப்படை வசதி பிரச்னைகள் இதுகுறித்து தேர்தல் கமிஷனுக்கு புகார் அனுப்பப்பட்டுள்ளது.

வருங்காலங்களில் ஓட்டுப்பதிவு முடிந்து இரவுக்குப்பின் பின் வீடுகளுக்கு திரும்பும் ஆசிரியைகளுக்கு மாவட்ட நிர்வாகம் வாகன வசதி செய்துதர வேண்டும். உணவு, பாதுகாப்பு ஏற்பாடு செய்ய வேண்டும்.

ஓட்டுப்பதிவுக்கு முன் ஆசிரியர்களின் பிரச்னைகளை கேட்டு அதை நிறைவேற்ற வேண்டும் என்றனர்.
Monday, April 22, 2024

5ம் வகுப்பு வரை அனிமேஷன் பாடம் பள்ளிகளுக்கு இயக்குனரகம் உத்தரவு.

வரும் கல்வி ஆண்டில் இருந்து, 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, அனிமேஷன் வீடியோ பாடங்களை நடத்துமாறு, ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் ஒருங்கிணைந்த சமக்ர சிக் ஷா கல்வி திட்டத்தின் கீழ், தொடக்க, நடுநிலை பள்ளி மாணவர்களுக்கு, டிஜிட்டல் வழி கல்வி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து அரசு தொடக்க, நடுநிலை பள்ளிகளிலும், ஸ்மார்ட் கிளாஸ் என்ற நவீன டிஜிட்டல் வழி வகுப்புகளுக்கான கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படுகின்றன.

இதற்காக, மத்திய அரசின் நிதியில் கிராமப்புற பள்ளிகளிலும், ஆன்லைன் இணையதள இணைப்புகள் பெறப்படுகின்றன. இந்த பணிகள் வரும் ஜூனுக்குள் நிறைவு பெற்று விடும் நிலையில், புதிய கல்வி ஆண்டில், மாணவர்களுக்கு டிஜிட்டல் பாடங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, அனிமேஷன் வகை வீடியோக்களை பாடங்களாக நடத்துவதற்கு, தொடக்க கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. மணற்கேணி என்ற செயலியில், இந்த வீடியோ பாடங்கள் உள்ளதாகவும், அவற்றை பதிவிறக்கி, பாடங்களை நடத்த வேண்டும் என்றும் ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
Monday, April 22, 2024

இளங்கலை படிப்புகளில் சேர ஏழை மாணவர்களுக்கு இலவச கல்வி திட்டம்: சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு

பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், ஆதரவற்றவர்கள், முதல் தலைமுறையினர், மூன்றாம் பாலினத்தவர் ஆகியோர் இலவச கல்வி திட்டத்தில் இளங்கலை படிப்பில் சேர்ந்து பயன்பெறலாம் என்று சென்னை பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை பல்கலைக்கழக பதிவாளர் ஏழுமலை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

ஏழை மாணவர்கள் இளங்கலை படிப்புகளில் சேர்ந்து பயன்பெறும் வகையில், சென்னை பல்கலைக்கழகத்தில் கடந்த 2010-11 கல்வி ஆண்டு முதல் இலவச கல்வி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ், வரும் (2024-25) கல்வி ஆண்டில் சென்னை பல்கலைக்கழகத்தின் இணைப்பு அங்கீகாரம் பெற்ற அரசு உதவி பெறும் கல்லூரிகள், தனியார் சுயநிதி கல்லூரிகளில் இளங்கலை படிப்புகளில் சேர பிளஸ் 2 முடித்த ஏழை மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மாணவர்கள் 2023-24 கல்வி ஆண்டில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குடும்ப ஆண்டுவருமானம் ரூ.3 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள், ஆதரவற்ற மாணவர்கள், குடும்பத்தில் பட்டப்படிப்புக்கு வரும் முதல் தலைமுறை மாணவர்கள், மூன்றாம் பாலினத்தவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

இலவச கல்வி திட்டம் மற்றும் பதிவேற்றம் செய்ய வேண்டிய சான்றிதழ்கள் விவரம் சென்னை பல்கலைக்கழக இணையதளத்தில் (www.unom.ac.in) வெளியிடப்பட்டுள்ளது. பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியான தேதியில் இருந்து 15 நாட்களுக்குள் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் விண்ணப்பம், சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். அனைத்து சான்றிதழ்களுடன் பதிவேற்றம் செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Monday, April 22, 2024

ஏப்ரல் 22 - 26 வரையிலான பள்ளி நாட்காட்டி & TN Attendance Appல் பதிவு செய்யும் முறை.


ஏப்ரல் 22 - 26 வரையிலான பள்ளி நாட்காட்டி & TN Attendance Appல் பதிவு செய்யும் முறை..

* 22.04.2024 - திங்கள் - அறிவியல் தேர்வு

* 23.04.2024 - செவ்வாய் - சமூக அறிவியல் தேர்வு.

* 22,23 வருகைப் பதிவு "Partially working" in TN Attendance App...

* 24,25,26 தேதி -- வருகைப் பதிவு FULLY NOT WORKING in TN Attendance App...

*26.04.2024 - வெள்ளி -- கல்வி ஆண்டின் பள்ளி இறுதி வேலை நாள்...
Monday, April 22, 2024

Medical Insurance: மருத்துவ காப்பீடு பெற புதிய வழிமுறைகள்! யாரெல்லாம் இனி தகுதியானவர்கள்?

இனி 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் தனிநபர் மருத்துவ காப்பீடு பெறலாம் என இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.

காப்பீடுகள் பல வகை என்றாலும் நமக்கு மிகவும் முக்கியமான மற்றும் அவசர நிலையில் உதவுவது மருத்துவ காப்பீடு தான். இன்று இருக்கும் சூழலில் பல நிறுவனங்கள் நமக்கு மருத்துவ காப்பீடு வழங்கி வருகிறது. பாலிசி கவரேஜ் என ரூ. 5 லட்சம், ரூ.10 லட்சம் என கோடி ரூபாய் வரை காப்பீடு கிடைப்பது உண்டு. தற்போது மருத்துவ காப்பீடு பெறுவதற்கான புதிய வழிமுறைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மருத்துவ காப்பீடு:

ஏப்ரல் 1, 2024 முதல் மருத்துவ காப்பீட்டுக் கொள்கைகளை வாங்குவதற்கான வயது வரம்பை இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (IRDAI) நீக்கியுள்ளதால், இப்போது 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் புதிய மருத்துவ காப்பீட்டுக் கொள்கைகளை வாங்க முடியும் என்று தெரிவித்துள்ளது. காப்பீட்டாளர்கள், மூத்த குடிமக்கள், மாணவர்கள், குழந்தைகள், மகப்பேறு மற்றும் தகுதிவாய்ந்த ஆணையத்தால் குறிப்பிடப்பட்ட வேறு எந்தக் பிரிவிற்கும் இந்த மருத்துவக் காப்பீட்டு வழங்கப்படும்.

வயது தடையில்லை:

முன்னதாக, 65 வயதுக்கு மேற்பட்ட நபர்கள் பாலிசிகளை வாங்க முடியாது. ஆனால், ஏப்ரல் 1, 2024 முதல் நடைமுறைக்கு வந்துள்ள மாற்றங்கள், வயதைப் பொருட்படுத்தாமல், எந்தவொரு தனிநபரும் உடல்நலக் காப்பீட்டுக் கொள்கையை வாங்குவதற்குத் தகுதியானவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் இந்தப் புதிய முடிவு, இந்தியாவில் சுகாதாரப் பாதுகாப்புச் சூழலை மேம்படுத்துவதற்கும், , காப்பீட்டு வழங்குநர் நிறுவனங்களைத் தங்கள் சலுகைகளைப் பன்முகப்படுத்த ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

சுகாதார கொள்கைகள்:

தற்போதைய அறிவிப்பின் படி, ​​பாலிசிதாரர் முதலில் அவருக்கு இருக்கும் உடல்நலக் குறைபாடுகளை வெளிப்படுத்தினாரா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல், ஏற்கனவே இருக்கும் அனைத்து நிபந்தனைகளும் 36 மாதங்களுக்குப் பிறகு பாதுகாக்கப்பட வேண்டும் அதாவது காப்பீட்டுக்குள் கொண்டுவர வேண்டும். இந்த 36 மாதங்களுக்குப் பிறகு ஏற்கனவே இருக்கும் நிபந்தனைகளின் அடிப்படையில் க்ளைம்களை நிராகரிப்பதில் இருந்து சுகாதார காப்பீட்டாளர்கள் தடைசெய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

காப்பீட்டு நிறுவனங்கள் மருத்துவமனைச் செலவுகளை ஈடுசெய்யும் இழப்பீட்டு அடிப்படையிலான சுகாதாரக் கொள்கைகளை அறிமுகப்படுத்துவதில் இருந்து தடைசெய்யப்பட்டுள்ளன. அதற்குப் பதிலாக, அவை நன்மை சார்ந்த கொள்கைகளை வழங்க மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
Monday, April 22, 2024

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது - பள்ளிகளுக்கு எச்சரிக்கை!!!

மாண்புமிகு முதல்வர் தனிப்பிரிவில் 14417 - ல் பெறப்பட்ட புகார் மனுவில் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை மற்றும் அரசு பொது விடுமுறை நாட்களில் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்துவதாகவும் , இதனால் மாணவர்களுக்கு உளவியல் ரீதியாக பாதிப்புகளை ஏற்படுத்துவதாகவும் புகார் பெறப்பட்டுள்ளது.

இப்புகார் சார்பாக அனைத்து பள்ளிகளும் கோடை விடுமுறை மற்றும் அரசு பொது விடுமுறை நாட்களில் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகளை தவிர்க்குமாறும் , மாணவர்களை சிறப்பு வகுப்புகளுக்கு வரவழைக்க அழுத்தம் தரக் கூடாது என்றும் இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.
Monday, April 22, 2024

PhD படிக்க இனி இது மட்டும் போதும்

இனி‌ PhD படிக்க 4 ஆண்டுகால இளங்கலைப் பட்டம் பெற்றால் போதும் என பல்கலைக்கழக மானியக் குழுத் தலைவர் ஜெகதேஷ் குமார் அறிவித்துள்ளார்.

குறைந்தபட்சம் 75% மதிப்பெண்கள் பெற்று 4 ஆண்டுகால இளங்கலைப் பட்டம் பெற்ற மாணவர்கள் நேரடியாக PhD படிப்பை தொடரலாம்.

மேலும், இளங்கலைப் பட்டம் பெற்ற மாணவர்கள் தங்கள் படிப்பைப் பொருட்படுத்தாமல் எந்தப் பாடத்தில் வேண்டுமானாலும் PhD படிக்கலாம். அதேபோல், 4 ஆண்டுகால இளங்கலை பட்டம் பெற்ற மாணவர்கள் இனி தேசிய தகுதித் தேர்வில் (NET) நேரடியாக பங்கேற்கலாம் என தெரிவித்துள்ளார்.
Monday, April 22, 2024

கற்றாழை வீட்டில் வளர்ப்பதால் பல நன்மைகள் கிடைக்கும்

கற்றாழை செடிக்கு அதிக பராமரிப்பு தேவை இல்லை.கற்றாழை செடியை வீட்டில் வளர்ப்பதால் பல நன்மைகள் கிடைக்கும்.

மருத்துவ குணம் நிறைத்த கற்றாழையை பலரும் வீட்டில் வலது வருகின்றனர்.
கற்றாழை ஒரு மருத்துவ தாவரமாகும். கற்றாழை வழக்கமான குடல் செரிமானத்தை ஊக்குவிக்கிறது.மேலும் வீக்கத்தைக் குறைத்து கல்லீரலை சுத்தப்படுத்த உதவுகிறது.
கற்றாழை செடிகள் வீட்டில் நேர்மறை ஆற்றலை பரப்புகின்றன .கற்றாழை ஆன்மிக ரீதியாகவும் எதிர்மறையான விஷயங்களில் இருந்து தள்ளி வைக்கப்படுகிறது என நம்பப்படுகிறது.
கற்றாழை ஜெல் பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது.கற்றாழை தோலை நீக்கி அதில் உள்ள ஜெல்லை உண்ணலாம்,ஜுஸாக குடிக்கலாம்,ஜெல்லை சருமத்தில் தடவினால் தோல் பிரகாசமாக வைகைக்கும்.
கற்றாழையில் வைட்டமின் ஏ, சி, ஈ ஆகியவை சருமம் மற்றும் கூந்தலின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது .கற்றாழை ஜெல் முகப்பருவை எதிர்த்து செயல்படுகிறது .கற்றாழை ஜெல்லை தலையில் தடவி சிறிது நேரம் கழித்து குளித்தால் பொடுகு பிரச்சனை குறையலாம் .
கற்றாழை சாறு உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது. ஆக்ஸிஜனேற்ற அழுத்தம், ஃப்ரீ ரேடிக்கல்கள், புற ஊதா சேதம் போன்ற எதிர்மறை பிரச்சனைகளை எதிர்த்துப் போராடுகிறது. புற்றுநோயாளிகளுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
Monday, April 22, 2024

சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த இதை செய்யுங்கள்

பொதுவாக இப்போது நாட்டில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த முடியாமல் பலர் அவதிப்படுகின்றனர் .இதற்கு என்ன சிகிச்சை செய்யலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம் 

1. சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த ஒரு டம்ளர் நீரில் 6-8 துளசி இலைகளை சேர்த்து கொதிக்க வைத்து, அந்நீரைக் குடித்து வருவோருக்கு சுகர் கண்ட்ரோலில் இருக்கும் .

2.சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த இஞ்சியை ஒரு டம்ளர் நீரில் தட்டிப் போட்டு கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்

3.சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த சிறிது வெந்தயத்தை இரவு தூங்கும் முன் நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்நீரைக் கொதிக்க வைத்து வடிகட்டி வெறும் வயிற்றில் குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்

4.சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த ஒரு டீஸ்பூன் பட்டைத் தூளை ஒரு டம்ளர் நீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து, விடவும் .

5.மறுநாள் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடித்து வருவோருக்கு சுகர் மாத்திரையே தேவைப்படாது

6. சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த வேப்பிலையை மென்று சாப்பிடலாம்

7.சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த 7-8 வேப்பிலையை ஒரு டம்ளர் நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி குடிக்க வேண்டும்..
Monday, April 22, 2024

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 22.04.2024

புவி நாள் (Earth Day)




திருக்குறள்: 

பால்:பொருட்பால்

இயல்: அரணியல்

அதிகாரம்: நாடு

குறள் எண் : 734

குறள்:
உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
சேரா தியல்வது நாடு.

பொருள்:
மிகுந்த பசியும், நீங்காத நோயும், வெளியில் இருந்து வந்து தாக்கும் பகையும் இல்லாத நாடுதான் சிறந்த நாடு எனப் பாராட்டப்படும்.

பழமொழி :

Sweet are the uses of adversity

வறுமை வாழும் முறையைக் கற்றுக் கொடுக்கிறது

இரண்டொழுக்க பண்புகள் :

 1. பெரியோர் , பெற்றோர்,  ஆசிரியர்களை மதித்து நடப்பேன்.

2. அவர்கள் மனம் புண் படும் படி பேசவோ நடந்து கொள்ளவோ மாட்டேன்.

பொன்மொழி :

பொருள் இல்லாதவன் ஏழையல்ல. எப்போதும் மனதில் ஆசையைச் சுமந்து திரிபவனே ஏழை.___ நபிகள் நாயகம்

பொது அறிவு : 

1. திரவத்தங்கம் என்று அழைக்கப்படுவது எது?

விடை: பெட்ரோலியம் 

 2. “தமிழ் மொழி” என்பது?

விடை: இரு பெயரொட்டுப் பண்புத்தொகை

English words & meanings :

 minuscule - extremely small, மிகமிகச் சிறிதான, 

microcosm-a small model of some thing large, நுண்ணிய மாதிரி

ஆரோக்ய வாழ்வு : 

நுங்கு பயன்கள் :நுங்கில், வைட்டமின் பி, இரும்புச்சத்து, கால்சியம், ஜிங்க், பொட்டாசியம் போன்ற பல்வேறு சத்துக்களும் உள்ளன. இதில் அடங்கியுள்ள சத்துக்கள் உடலுக்கு ஆரோக்கியத்தை தருவதோடு, உடல்வெப்பத்தை தணிக்கக் கூடியது. வெயில் காலத்தில் ஏற்படும் அம்மை நோய்களை தடுத்து உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கக்கூடியது.

ஏப்ரல் 22

புவி நாள்


புவி நாள் (Earth Day) என்பது ஆண்டுதோறும் ஏப்ரல் 22ம் நாளன்று புவியின் சுற்றுச் சூழலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, அச்சூழல் மாசடைவதைத் தடுக்கும் நோக்கோடு அனைத்து நாடுகளிலும் 1970ஆம் ஆண்டு முதல் கடைப்பிடிக்கப்பட்டுவரும் ஒரு சிறப்பு நாளாகும்.

1969ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் யுனெஸ்கோ மாநாடு ஒன்று நிகழ்ந்தது. அக்கூட்டத்தில் கலந்துகொண்டவர்களுள் ஒருவர் ஜான் மெக்கானெல் (John McConnell). அவர் உலக அமைதிக்காகக் குரல்கொடுத்த ஒரு மாமனிதர். மனிதரும் பிற உயிரினங்களும் வாழ்கின்ற பூமியின் அழகைச் சிறப்பிக்கவும், பூமியின் இயற்கைச் சூழலைக் குலைத்து மாசுபடுத்தாமல் காக்கவும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது தேவை என்று அவர் வலியுறுத்தினார். அதோடு, ஆண்டுதோறும் புவி நாள் என்றொரு நாளைக் கொண்டாடுவது பொருத்தம் என்றும் மெக்கானெல் கருத்துத் தெரிவித்தார். இவ்வாறு புவி நாள் என்னும் பெயரும் கருத்தும் எழுந்ததாகக் கருதப்படுகிறது.


அதேசமயத்தில், ஐக்கியஅமெரிக்காவில் சுற்றுச்சூழலியல் நிபுணரும் மேலவை உறுப்பினருமான கேலார்ட் நெல்சன் என்பவர் சுற்றுச்சூழல் பற்றிய அறிவைப் பரப்பத் தகுந்த நாளாக 1970 ஆம் ஆண்டு ஏப்ரல் 22 நடத்த அழைப்பு விடுத்தார். இந்த நாளின்போது புவியின் வடகோளப் பகுதி வசந்த காலமாகவும், தென்கோளப் பகுதி இலையுதிர் காலமாகவும் காணப்படுகிறது.

அவரது அழைப்பை ஏற்று 20 மில்லியன் மக்கள் இந்நிகழ்வில் பங்கெடுத்தார்கள். அன்றிலிருந்து ஆண்டுதோறும் இந்நாள் 175 நாடுகளில் (புவி [பூமி] நாளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

நீதிக்கதை

 அரசன் கண்ட கனவு


ஒரு அரசனுக்கு அவனுடைய எல்லா பற்களும் விழுந்து பொக்கைவாயுடன் இருப்பதாக ஒரு கனவு வந்தது. இதனால் காலையில் பீதியுடன் எழுந்த அவன், அந்தக் கனவால் என்ன விளைவுகள் நேருமோ என்று பயந்துபோய் முதல் வேலையாக ஒருநாடி ஜோதிடரை வரவழைத்தான்.

அந்த நாடிஜோதிடர் தனது ஓலைச்சுவடியை எடுத்து, அதில் பொக்கைவாய் கனவு பற்றி விளக்கியிருந்த ஒரு ஓலையை வாசித்துவிட்டு, அரசே! உங்கள் மனைவி, குழந்தைகள், சொந்த பந்தங்கள் எல்லாம் உங்களுக்கு முன்பே இறந்து விடுவார்கள் என்று பலன் சொன்னார். உடனே அந்த அரசன் மிகவும் கோபமுற்று, இவனைப் பிடித்து சிறையில் தள்ளுங்கள்! என்று உத்தரவிட்டான். அதன் பிறகும் மன்னனின் மனம் சமாதானமடையவில்லை.

இன்னொரு நாடி ஜோதிடரை வரவழைத்து, அவரிடம் தன் பொக்கைவாய் கனவின் அர்த்தம் என்ன என்று வினவினான். அந்த ஜோதிடரும் அதே மாதிரியான ஓலைச்சுவடியைத்தான் வைத்திருந்தார். அவரும் அதைப்பார்த்துவிட்டு, மன்னா! உங்கள் சொந்த, பந்தங்களையெல்லாம் விட நீங்கள் நீண்ட காலம் நீடூடி வாழ்வீர்கள் என்று பலன் கூறினார். 

இதனால் மனம் குளிர்ந்த அரசன், அந்த ஜோதிடருக்கு தகுந்த பரிசுகள் வழங்கி அனுப்பி வைத்தான். இருவரும் அதே ஓலையைத்தான் படித்தார்கள். அதே விஷயத்தைதான் சொன்னார்கள். ஒருவர் எல்லோரும் இறந்து விடுவார்கள் என்றார். இன்னொருவர் எல்லோரையும் கடந்து வாழ்வீர்கள் என்றார். அவ்வளவுதான் வித்தியாசம்.

நீதி :
பேசும் வார்த்தைகளை கவனமுடன் கையாண்டால் வாழ்வில் ஜெயிக்கலாம்

இன்றைய செய்திகள்

22.04.2024

*பாராளுமன்ற தேர்தல்: 
தமிழகத்தில் ஆண்களை விட அதிகமாக வாக்களித்து அசத்திய பெண்கள். 

*கர்நாடக மாநிலம், உத்தரகனடா மாவட்டத்தில் ஆற்றில் மூழ்கி 6 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த 6 பேரும், ஹூப்ளி நகரைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். 

*ராணுவ உதவிக்கு ஒப்புதல் அளித்த அமெரிக்கா: இஸ்ரேல் பிரதமர், உக்ரைன் அதிபர் வரவேற்பு.

*மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 23-ந்தேதி வரை மழைக்கு வாய்ப்பு.

*பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார் வினேஷ் போகத்.

Today's Headlines

*Parliamentary Elections:
Women vote more than men in Tamil Nadu.

*6 people have drowned in the river in Uttarakhand district of Karnataka state. All the 6 deceased belonged to the same family from Hubli.

*US approves military aid: Israel PM, Ukraine president welcome.

*Chance of rain in Western Ghats districts till 23rd.

*Vinesh Phogat qualified for Paris Olympics.
 Prepared by

Covai women ICT_போதிமரம்