Breaking

Saturday, March 14, 2026

Saturday, March 14, 2026

அவசரகதியில் தயாராகும் அரசாணைகள்: தேர்தல் நெருங்குவதால் அதிகாரிகள் ஜரூர்

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்குவதால், நிலுவையில் இருந்த கோப்புகள் தொடர்பாக, பல்வேறு துறைகளில் அரசாணைகள் தயாரிக்கும் பணிகள் அவசரமாக நடந்து வருகின்றன. தமிழகத்தில், தற்போதைய அரசின் பதவிக்காலம் முடிவடைய உள்ளது.

இதையடுத்து, சட்டசபை தேர்தல் தேதிகள் ஓரிரு நாட்களில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிடும். தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்து விட்டால், தமிழக அரசு தன்னிச்சையாக எந்த அரசாணையையும் பிறப்பிக்க முடியாது. அத்தியாவசிய தேவை இருப்பின், அது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு தெரிவிக்க வேண்டும். இந்நிலையில், கடந்த ஐந்து ஆண்டுகளில், பல்வேறு துறைகள் வாயிலாக வெளியிடப்பட்ட அறிவிப்புகளில் பலவற்றுக்கு இன்னும் அரசாணைகள் வரவில்லை. திட்டங்கள் தொடர்பான அறிவிப்புகள் மட்டுமல்லாது, நிர்வாக நடைமுறை தொடர்பாகவும் எடுக்கப்பட்ட கொள்கை முடிவுகள் நிலுவையில் உள்ளன. ஆட்சிக் காலம் முடிவதற்குள் அரசாணை பிறப்பிக்க வேண்டிய நெருக்கடி எழுந்துள்ளது.

இதனால், தலைமை செயலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி, வனத்துறை, பதிவுத் துறை, சுகாதாரம், கல்வி என பல்வேறு துறைகளில் நிலுவையில் உள்ள பணிகளுக்கு, அரசாணைகள் தயாரிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதற்கான கோப்புகள் அடிப்படையில், வரைவு அரசாணைகள் தயாரிக்கும் பணிகள், தலைமை செயலகத்தில் இரவு வரை நடக்கின்றன. ஒவ்வொரு துறையிலும், 20 முதல், 60 அரசாணைகள் தயாராகி வருவதாக கூறப்படுகிறது. தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன், இந்த பணிகளை முடிக்க வேண்டும் என்ற நெருக்கடியில், அந்தந்த துறை அதிகாரிகள் பரப்பரப்பாக வேலை செய்து வருவதாக, தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Saturday, March 14, 2026

திருமண முன்பணம் பெற்று தவணை நிலுவையில் உள்ள போது இரண்டாவதாக திருமணம் முன்பணம் பெறலாம் என்பதற்கான அரசாணை

திருமண முன்பணம் பெற்று தவணை நிலுவையில் உள்ள போது இரண்டாவதாக திருமணம் முன்பணம் பெறலாம் என்பதற்கான அரசாணை


Saturday, March 14, 2026

TRB மூலம் உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு முதற்கட்டமாக தெரிவு செய்யப்பட்ட 5 பேருக்கு பணிநியமனம் வழங்கி அரசாணை வெளியீடு!


TRB மூலம் உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு முதற்கட்டமாக தெரிவு செய்யப்பட்ட 5 பேருக்கு பணிநியமனம் வழங்கி அரசாணை வெளியீடு!

G.O.No.15 - Assistant Professor Appointment.pdf

👇👇👇👇

Saturday, March 14, 2026

10, +2 மாணவர்கள் விடைத்தாள் நகலை 3 மாதத்துக்குள் பெறலாம்! - ஆர்டிஐ சொல்வது என்ன?

தமிழகத்தில் 10 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள், தங்களது விடைத்தாள் நகல்களை தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் 3 மாத காலத்துக்குள் பக்கத்துக்கு ரூ.2 செலுத்தி பெற முடியும் என்பதை அரசு தேர்வுகள் இயக்ககம் தனது இணையத்தில் வெளியிட வேண்டுமென மாநில தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை எத்திராஜ் கல்லூரி மாணவியான ஆர்.பிரியதர்ஷினி மாநில தகவல் ஆணையத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்தார். அதில், ‘‘2023-ம் ஆண்டு முகப்பேர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றேன். நான் எழுதிய தமிழ், ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், கணக்குப்பதிவியல், விலங்கியல் உள்ளிட்ட அனைத்து பாடங்களுக்கும் விடைத் தாள்களின் நகல் கோரி விண்ணப்பித்தேன்.

ஆனால் தேர்வு முடிவு வெளியான 5 தினங்களுக்குள் விண்ணப்பித்தால் மட்டுமே விடைத்தாள் நகல் அளிக்கப்படும் எனக்கூறி இயற்பியல் பாடத்துக்கு மட்டும் விடைத்தாள் அளித்தனர். மற்ற பாடங்களுக்கு விடைத்தாள்கள் மறுக்கப்பட்டது. இதுபோன்ற பொதுத்தேர்வு விடைத்தாள்களை தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின்கீழ் கோரி பெற சட்டரீதியாக முழு உரிமை உள்ளது’’ என கோரியிருந்தார்.

இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த மாநில தகவல் ஆணையர் வி.பி.ஆர். இளம்பரிதி பிறப்பித்துள்ள உத்தரவில், ‘‘உச்ச நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்ற தீர்ப்புகளின் அடிப்படையில் திருத்தப்பட்ட விடைத்தாள்களை தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் கோரி பெறும் உரிமை அனைத்து மாணவர்களுக்கும் உள்ளது.

அதன்படி அரசுத் தேர்வு இயக்ககத்தால் நிர்ணயிக்கப்பட்ட தொகையை செலுத்தியோ அல்லது தகவல் பெறும் உரிமைச் சட்ட விதிகளின்படி பக்கத்துக்கு ரூ.2 வீதம் கட்டணம் செலுத்தியோ விடைத்தாள் நகல்களை 3 மாத காலத்துக்குள் பெறலாம். இந்த காலக்கெடுவை 6 மாதமாக நீட்டிப்பது குறித்தும் அரசு பரிசீலிக்க வேண்டும்.

ஒழுங்கு நடவடிக்கை:

எனவே மனுதாரருக்கு அவர் கோரியுள்ள விடைத்தாள் நகல்களை செலவுத்தொகை ஏதுமின்றி 7 நாட்களுக்குள் வழங்க வேண்டும். அப்போதைய பொதுத்தகவல் அலுவலரான ஜெய தகவல் அறியும் உரிமை சட்ட விதிகளுக்கு புறம்பாக செயல்பட்டுள்ளதால் அவருக்கு ரூ.25 ஆயிரத்தை ஏன் அபராதமாக விதிக்கக்கூடாது என்பது குறித்து அவர் எழுத்துப்பூர்வ விளக்கத்தை மார்ச் 27 அன்று ஆஜராகி சமர்ப்பிக்க வேண்டும்.

இந்த மனுவை ஏற்கெனவே சரியாக விசாரித்த மேல்முறையீட்டு அலுவலர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படுகிறது.

அதேபோல மாணவர்கள் ரூ. 2 கட்டணத்தில் விடைத்தாள் நகல்களை 3 மாதத்துக்குள் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் பெறமுடியும் என்பதை அரசுத் தேர்வுகள் இயக்ககம் தனது இணைய தளத்திலும் அனைவரும் அறியும்வண்ணம் வெளியிட வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.
Saturday, March 14, 2026

இன்றைய செய்திகள் 14.03.2026(சனிக்கிழமை)

🌹மற்றவரின் மனதை நோகடித்து விடாமல் பார்த்து,பார்த்து வாழ்பவர்கள் தான்!அவ்வப்போது மற்றவர்களால் மனம் நோகடிக்கப்படுகிறார்கள்.!

🌹🌹வேண்டாம் என்கிற இடத்தை விட்டு 

வெளியே வந்துவிடுங்கள்...

இல்லையேல்...

முதலில் அவமதிப்பார்கள்...

அடுத்தது வெறுப்பார்கள்...

அடுத்து உங்களை 

தவறானவன் என்ற பட்டம் சூட்டிவிடுவார்கள்.!!

🌹🌹🌹நீ யாரை நம்புகிறாய் என்பதில் மிகவும் கவனமாக இரு.!

ஏனெனில்,துரோகம் எப்போதும் நம்பியவர்களிடம் இருந்து தான் வரும்.!!!

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

👔👔சர்வதேச கணித தினம்!

👉சர்வதேச கணித தினம் என்பது கணிதத்தைக் கொண்டாடும் ஒரு உலகளாவிய நிகழ்வாகும்! அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் கணிதத்தின் முக்கிய பங்கைப் பற்றி மக்களுக்குக் கற்பிப்பது, வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவது, பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு அதிகாரம் அளிப்பது மற்றும் நிலையான வளர்ச்சிக்கு பங்களிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. 

👉மார்ச் 14 ஆம் தேதியை சர்வதேச கணித தினமாக அறிவிக்கும் அறிவிப்பு யுனெஸ்கோவின் நிர்வாகக் குழுவின் 205வது அமர்வில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. பின்னர் இந்த நாள் 2019 நவம்பரில் நடந்த யுனெஸ்கோவின் பொது மாநாட்டின் 40வது அமர்வில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. பின்னர் 2020 ஆம் ஆண்டில், உலகம் அதன் முதல் சர்வதேச கணித தினத்தை மார்ச் 14, 2020 அன்று 'கணிதம் எல்லா இடங்களிலும் உள்ளது' என்ற கருப்பொருளுடன் கொண்டாடியது.

👔👔வருகின்ற (16.03.2026) திங்கட்கிழமை வரையறுக்கப்பட்ட விடுப்பு (RL&RH) எடுக்கலாம்.

👉காரணம்:

  ஷபேகாதர்

👔👔DEO முதன்மைத் தேர்வுக்கு ஹால்டிக்கெட் வெளியீடு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

👔👔கம்ப்யூட்டர் ஆபரேட்டர் பதவி - TNPSC Group- IIA தேர்வு மூலம் நிரப்பப்படும்

👔👔UPSC தேர்வு மதிப்பெண் விவரம் வெளியீடு

👔👔அஞ்சல் ஆயுள் காப்பீடு (PLI) புதிய பாலிசிகள் தொடர்பான ஒரு முக்கிய அறிவிப்பு

👉வரும் 01.04.2026 முதல் துவங்கப்படும் புதிய PLI பாலிசிகளுக்கு PAY RECOVERY MODE  (அதாவது சம்பளத்தில் பிடித்தம் செய்து கட்டும் வசதி) அஞ்சல் ஊழியர்களை தவிர்த்து மற்ற அரசு மற்றும் பொதுத்துறை ஊழியர்களுக்கு நிறுத்தப்பட்டுள்ளது.

👉எனவே 01.04.2026 முதல் துவங்கப்படும் புதிய PLI பாலிசிகளுக்கு அஞ்சல் ஊழியர்கள் தவிர்த்து மற்ற ஊழியர்களுக்கு PAY RECOVERY MODE பாலிசிகளை துவங்க வேண்டாம்.

👉இதற்கு பதிலாக அஞ்சல் சேமிப்பு கணக்கு,  IPPB கணக்கு, இதர வங்கி கணக்குகளில் இருந்தும் ஆட்டோ பேமென்ட் செய்யும் நடைமுறையை வாடிக்கையாளருக்கு தெளிவுபடுத்தவும்.                                                             👉மேலும் காப்பீடாளர் தங்களின் PLI பாலிசி Login மூலமாகவும் பிரீமியம் செலுத்தும் வசதியும் உள்ளது.

👉ஏற்கனவே பிடித்தம் செய்த பாலிசிகளுக்கு சம்பளத்தில் பிடித்தம் செய்யும் நடைமுறை தொடர்கிறது.

👔👔அரை நூற்றாண்டு வேலை - 5 ஆண்டில் செய்துள்ளோம்" - சென்னையில் அரசு மேற்கொண்டுள்ள திட்டங்களை மேற்கோள்காட்டி முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு

👔👔தட்டுப்பாடு காரணமாக சென்னையில் ஒரு வணிக சிலிண்டருக்கு 5000 ரூபாய்க்கு விற்பனை

சென்னையில் வணிக சிலிண்டருக்கு டிமாண்ட் அடிப்படையில் விலை நிர்ணயம்

வணிக சிலிண்டர் விலை உயர்வு காரணமாக ஓட்டல்களில் உணவுப்பொருட்கள் விலை அதிகரிப்பு பிரபல ஹோட்டல்களில் உணவு விலையுடன் கேஸ் பயன்பாட்டு கட்டணம் சேர்த்து வசூலிப்பு

👔👔போர் எதிரொலி: கோவில்பட்டி கடலை மிட்டாய் ஏற்றுமதி முடங்கியது – கோடிக்கணக்கில் தேக்கம்!

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக, உலகப்புகழ் பெற்ற கோவில்பட்டி கடலை மிட்டாய் ஏற்றுமதி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பல கோடி ரூபாய் மதிப்பிலான மிட்டாய்கள் தேக்கமடைந்துள்ளதால் உற்பத்தியாளர்கள் கவலையடைந்துள்ளனர்.

கோவில்பட்டி என்றாலே நினைவுக்கு வருவது அதன் சுவையான கடலை மிட்டாய் தான். கடந்த 2020-ம் ஆண்டு இதற்கு புவிசார் குறியீடு (Geographical Indication) கிடைத்த பிறகு, இதன் மவுசு சர்வதேச அளவில் அதிகரித்தது. கோவில்பட்டி சுற்றுவட்டாரத்தில் சுமார் 120 உற்பத்தி நிறுவனங்கள் உள்ளன. நேரடி மற்றும் மறைமுகமாக 20,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இத்தொழிலை நம்பி உள்ளனர்.

உற்பத்தியாகும் மிட்டாய்களில் 70 சதவீதம் சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், குவைத், ஓமன் மற்றும் பஹ்ரைன் போன்ற வளைகுடா நாடுகளுக்கே ஏற்றுமதி செய்யப்படுகிறது. அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள போர் சூழலால் பின்வரும் சிக்கல்கள் எழுந்துள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

போர் பதற்றத்தால் கடந்த 10 நாட்களாக ஏற்றுமதி முற்றிலுமாகத் தடைபட்டுள்ளது. ஏற்கனவே ஆர்டர் கொடுத்த வெளிநாட்டு நிறுவனங்கள் அவற்றை ரத்து செய்து வருகின்றன. பெட்ரோலியப் பொருட்கள் தட்டுப்பாட்டால், மிட்டாய் பேக்கிங் செய்யப் பயன்படும் பிபி கவர் (PP Cover) மற்றும் பிளாஸ்டிக் ஜார் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன.

ஏற்கனவே நிலவும் கடலை பருப்பு விலை ஏற்றத்தால் பாதிக்கப்பட்டிருந்த தொழிலுக்கு, இந்த ஏற்றுமதி முடக்கம் பெரும் இடியாக அமைந்துள்ளது.  ஏற்றுமதி முடங்கியுள்ளதால், அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இது குறித்து கோவில்பட்டி கடலை மிட்டாய் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர் சங்கத்தின் செயலாளர் கண்ணன் கூறுகையில்: "வளைகுடா நாடுகளுக்குத்தான் அதிகளவில் ஏற்றுமதி செய்து வருகிறோம். தற்போது நிலவும் போர் சூழலால் உற்பத்தி முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 

இதே நிலை நீடித்தால் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக் குறியாகும். கடலை மிட்டாய் மட்டுமின்றி, இதனுடன் ஏற்றுமதி செய்யப்படும் இதர இனிப்பு மற்றும் கார வகைகளும் தேக்கமடைந்துள்ளன," எனத் தெரிவித்தார்.

👔👔எரிசக்தியை தடையின்றி கொண்டு வர முன்னுரிமை தேவை; வளைகுடா நாடுகளில் உள்ள நிலைமை குறித்து ஈரான் அதிபருடன் பேசினேன் - ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாக பிரதமர் மோடி X தளத்தில் பதிவு.                                                                       

👔👔அஜித்குமாருக்கு பரிசளித்த மகிந்திரா நிறுவனம் 

ரேசிங் ஆர்வத்தை ஊக்குவிக்கும் விதமாக மகிந்திரா கார் நிறுவனம் நடிகர் அஜித்குமாருக்கு 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள World first formula E themed SUV  காரை பரிசாக வழங்கியது

மகிந்திரா குழுமத்தின் வாகன தொழில் பிரிவு தலைவர் ஆர் வேலுச்சாமி இதனை நடிகர் அஜித்குமாருக்கு வழங்கிய வீடியோ இணையத்தில் வைரல்

👔👔சிலிண்டர் தட்டுப்பாட்டை கண்டித்து வரும் ஞாயிற்றுக்கிழமை (மார்ச்.15) திமுக கூட்டணிக் கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

மதச்சார்பற்ற கூட்டணிக் கட்சிகளின் எம்.பி.க்கள்.,= எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட நிர்வாகிகள் என அனைவரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க இருப்பதாக தகவல்

👔👔சிலிண்டர் குறித்து வதந்தி பரப்புபவர்கள் நாட்டுக்கே எதிரானவர்கள்: பிரதமர் மோடி

தற்போது எல்பிஜி பற்றி நிறைய வதந்திகளும் உள்ளன. சிலர் பீதியை உருவாக்குகின்றனர்.அவர்கள் அவ்வாறு செய்வதன் மூலம் ஒட்டுமொத்த நாட்டுக்கும் அவர்கள் குறிப்பிடத்தக்க தீங்கு விளைவிக்கிறார்கள்

போரினால் ஏற்பட்ட இந்த நெருக்கடியைச் சமாளிக்க இந்தியாவும் எந்தவொரு முயற்சியையும் விட்டுவிடவில்லை. இதனைச் சமாளிக்க பல்வேறு நிலைகளிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சமீபத்தில், பல்வேறு உலக நாடுகளின் தலைவர்களுடனும் இதுகுறித்து நான் விவாதித்தேன். விநியோகச் சங்கிலியில் உள்ள தடைகளை சமாளிக்க தொடர்ச்சியான முயற்சிகளும் நடந்து வருகின்றன.

👔👔இன்று திறக்கப்படும் சபரிமலை நடை.

மாதாந்திர பூஜைகளுக்காக பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று (மார்ச் 14) திறக்கப்பட உள்ளது.

பூஜைகள் நிறைவடைந்து மார்ச் 19ஆம் தேதி இரவு நடை அடைக்கப்படும்.

தொடர்ந்து பங்குனி உத்திர திருவிழாவுக்காக மார்ச் 22ஆம் தேதி மாலை சபரிமலை நடை திறக்கப்பட்டு மறுநாள் கொடியேற்றத்துடன் திருவிழா கோலாகலமாக தொடங்குகிறது.

👔👔நாங்கள் தனி மரம் இல்லை தோப்பு: சசிகலா

சட்டமன்றத் தேர்தலில் தென்னந்தோப்பு சின்னத்தில் போட்டியிட உள்ளதாக சசிகலா அறிவிப்பு

அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம்' என்ற பெயரில் தொடங்கிய கட்சியில் தான் இணைந்த 

சசிகலா அறிவிப்பு

👔👔மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்ட உதவி மருத்துவர்களுக்கு பணி ஆணைகளை வழங்கினார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்

👔👔ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்ஸி உடன் ஜெய்சங்கர் தொலைபேசியில் பேச்சு

👔👔நெடுஞ்சாலைத் துறை சார்பில் 11 சாலைகளை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

👔👔திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு.

👔👔திமுக மாணவரணி செயலாளராக முதல் முறையாக பெண் நியமனம்: ராஜீவ் காந்தி கொள்கை பரப்பு இணைச் செயலாளராக நியமனம்

👔👔12 மாதங்களில் 2 ஐசிசி தொடரில் சாம்பியன்; கவுதம் கம்பீரிடம் இதை விட வேறு என்ன எதிர்பார்க்கிறீர்கள்?: முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி பேட்டி

👔👔ஐபிஎல் தொடரில் கம்மின்ஸ், ஹேசல்வுட் ஆடுவதில் சிக்கல்

👔👔நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகி காளியம்மாள் அதிமுகவில் இணைந்தார்

👔👔சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக புரட்சி அதிமுக தலைவர் புகழேந்தி அறிவிப்பு

👔👔"பெண்களின் வேலைவாய்ப்புகளை மோசமாக பாதிக்கும்".. மாதவிடாய் விடுப்புக் கோரிய மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

👔👔திமுக போன்று வேறு எந்த கட்சிக்கும் வரலாறு கிடையாது: நடிகர் வடிவேலு பேச்சு

👔👔தாய்த்தமிழைக் காக்க எந்தத் தியாகத்துக்கும் ஆயத்தமாக இருக்கும் இளைஞர்களே… உழைப்பை மட்டும் கொடுங்கள் போதும்; உயிரை அல்ல: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

👔👔எடப்பாடி சாதித்தாரா இல்லையா என்பது தேர்தல் முடிவுகள் வந்த பிறகு தெரிந்துவிடும் : புதிய கட்சியை அறிவித்த பின் சசிகலா பேட்டி

👔👔தமிழ்நாட்டில் 90 நாட்களுக்கு பெட்ரோல், டீசல் கையிருப்பு உள்ளது.

👔👔பெட்ரோல் , டீசல் போதுமான அளவில் கிடைக்கிறது - அச்சத்தில் அதிகமாக வாங்க வேண்டாம் - இந்தியஆயில்

👔👔ஈரான் அதிபருடன் பிரதமர் பேச்சு

ஈரானில் போர் நீடித்துவரும் நிலையில் அந்நாட்டு அதிபருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு

அப்பாவி மக்களின் உயிரிழப்பு, உள்கட்டமைப்பு சேதம் குறித்து கவலை தெரிவித்தார்

ஈரான் வாழ் இந்தியர்கள் பாதுகாப்பு மற்றும் தடையற்ற எரிசக்தி போக்குவரத்து குறித்து பேச்சுவார்த்தை

👔👔30 இந்திய கப்பல்கள் காத்திருப்பு

ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் இந்தியக் கொடியுடன் 30க்கும் மேற்பட்ட கப்பல்கள் காத்திருப்பு

கப்பல்கள் நீரிணையைக் கடந்து செல்ல ஒத்துழைக்குமாறு ஈரான் அதிகாரிகளிடம் இந்தியா வலியுறுத்தி வருவதாக தகவல்

👔👔3.5 கோடி லிட்டர் விற்பனை 

பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படும் என பொதுமக்களிடையே அச்சத்தினால் வியாழக்கிழமை  ஒரே நாளில் 3.5 கோடி லிட்டர் பெட்ரோல், டீசல் விற்பனை. வழக்கமான நாட்களில் சராசரியாக 2 கோடி லிட்டர் பெட்ரோல் - டீசல் விற்பனையாகும் 

தமிழகத்தில் பெட்ரோல் - டீசலுக்கு எந்த தட்டுப்பாடும் இல்லை என  பெட்ரோலிய வணிகர் சங்கம் மீண்டும் விளக்கம்

👔👔விரைவில் தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநில தேர்தல் தேதியை ஓரிரு நாட்களில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு

கொல்கத்தாவில் இன்று பிரதமர் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ள நிலையில்,வரும் 15 அல்லது 16ஆம் தேதி அறிவிப்பு வெளியாகலாம் என தகவல்

👔👔ஜல் ஜீவன் நிதி - முதலமைச்சர் கடிதம்

ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் நிலுவையில் உள்ள நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் நிலுவையில் உள்ள ரூ.3112 கோடியை வழங்க கோரிக்கை

ஒகேனக்கல் குடிநீர் திட்டத்தின் 3-பாகத்திற்கு ஒப்புதல் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

அன்பை கொடுப்பதிலும் பெறுவதிலும் தான் இன்பம் இருக்கிறது.                              என்றும் அன்புடன்

சு.வேலுமணி M.A.,B.Ed.,

தலைமையாசிரியர்,                                                        மாவட்டச் செயலாளர்

&தகவல் தொழில் நுட்ப அணியின் மாநில அமைப்பாளர்,

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,

கரூர் மாவட்டம்.

அலைபேசி:9003599926

Saturday, March 14, 2026

பள்ளிக் கல்வித் துறையில் 7499 தற்காலிகப் பணியிடங்களை நிரந்தரப் பணியிடங்களாக மாற்றம் செய்து அரசாணை வெளியீடு!

பள்ளிக் கல்வி தற்காலிக பணியிடங்கள் 10 ஆண்டுகளுக்கு மேலாக தொடர் நீட்டிப்பு ஆணை பெற்று வரும் தற்காலிக பணியிடங்கள் தொடர்வதன் அவசியத்தை ஆராய குழு அமைக்கப்பட்டது - பள்ளிக் கல்வி இயக்ககத்தின் கீழ் உள்ள ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத 7499 பணியிடங்களை நிரந்தர பணியிடங்களாகவும், ஆசிரியரல்லாத 351 பணியிடங்களுக்கு பத்தாண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு வழங்கியும் மற்றும் தொழிற்கல்வி ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத 560 பணியிடங்களில் பணிபுரிபவர்கள் ஓய்வு பெறும் போது நாளடைவில் ஒழிவடையும் பணியிடங்களாகவும் (Vanishing post) அறிவித்து, இப்பணியிடங்களுக்கு பத்து ஆண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பும் வழங்கியும் மற்றும் பணிபுரிபவர்கள் ஓய்வு பெறும் போது இந்த பணியிடங்கள் சரண் செய்ய அனுமதியும் வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.

G.O.Ms.No.77 - Post Permanent - Download here

Friday, March 13, 2026

Friday, March 13, 2026

சமூக அறிவியல் ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று முதன்மை கல்வி அலுவலர்கள் சுற்றறிக்கை!!!

அரசு தலைமையாசிரியர்களின் கவனத்திற்கு 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 16.03.2026 அன்று ஆங்கிலத் தேர்வு முடிந்தவுடன் 25.03.2026 அன்று புதன்கிழமை கணிதத் தேர்வு நடைபெறவுள்ளது. ஆங்கிலத் தேர்விற்கும். கணிதத் தேர்விற்கும் இடையே 8 நாட்கள் இடைவெளியுள்ளது.

எனவே சமூக அறிவியல் தேர்விற்கு மாணவர்களுக்கு தேர்வு சார்ந்து பயிற்சி வழங்குவதற்கு 3 நாட்கள் மட்டுமே உள்ளது. ஆகையால் ஆங்கிலத் தேர்வு முடிந்த மறுநாள் 17.03.2026 அன்று மட்டும் சமூக அறிவியல் தேர்விற்கு மாணவர்களை தயார்படுத்துவதற்கு சமூக அறிவியல் பாட ஆசிரியர்களுக்கு அனுமதி வழங்குமாறு அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
ஆசிரியர் வேலைவாய்ப்பு



Friday, March 13, 2026

முதுகலை ஆசிரியர்கள் தேவை - விண்ணப்பிக்க கடைசி தேதி 23.3.2026

யு.டி.வி. மேல்நிலைப்பள்ளி

டவுன் ஸ்டேஷன் ரோடு, திருச்சிராப்பள்ளி-2.

இப்பள்ளியில் காலியாக உள்ள பின்வரும் முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு பொதுப்பிரிவில் (General Turn) தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
ஆசிரியர் பயிற்சி
Friday, March 13, 2026

அஞ்சல் ஆயுள் காப்பீடு (PLI) புதிய பாலிசிகள் தொடர்பான ஒரு முக்கிய அறிவிப்பு!

💼 *வரும் 01.04.2026 முதல் துவங்கப்படும் புதிய PLI பாலிசிகளுக்கு PAY RECOVERY MODE (அதாவது சம்பளத்தில் பிடித்தம் செய்து கட்டும் வசதி) அஞ்சல் ஊழியர்களை தவிர்த்து மற்ற அரசு மற்றும் பொதுத்துறை ஊழியர்களுக்கு நிறுத்தப்பட்டுள்ளது.

💼*எனவே 01.04.2026 முதல் துவங்கப்படும் புதிய PLI பாலிசிகளுக்கு அஞ்சல் ஊழியர்கள் தவிர்த்து மற்ற ஊழியர்களுக்கு PAY RECOVERY MODE பாலிசிகளை துவங்க வேண்டாம்.

💼 *இதற்கு பதிலாக அஞ்சல் சேமிப்பு கணக்கு, IPPB கணக்கு, இதர வங்கி கணக்குகளில் இருந்தும் ஆட்டோ பேமென்ட் செய்யும் நடைமுறையை வாடிக்கையாளருக்கு தெளிவுபடுத்தவும்.

💼 *மேலும் காப்பீடாளர் தங்களின் PLI பாலிசி Login மூலமாகவும் பிரீமியம் செலுத்தும் வசதியும் உள்ளது.

💼 *ஏற்கனவே பிடித்தம் செய்த பாலிசிகளுக்கு சம்பளத்தில் பிடித்தம் செய்யும் நடைமுறை தொடர்கிறது.
Friday, March 13, 2026

ஐஎஃப்எஸ் முதன்மைத் தேர்வில் வென்றவர்களுக்கு அழைப்பு - தமிழக அரசு பயிற்சி மையத்தில் ஏற்பாடு


ஐஎஃப்எஸ் முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழக மாணவர்களுக்கு அரசு பயிற்சி மையத்தில் வரும் 17-ம் தேதி மாதிரி ஆளுமைத் தேர்வு நடத்தப்பட உள்ளது. எனவே, முதன்மைத் தேர்வில் வெற்றிபெற்றுள்ள மாணவர்கள் இதில் பங்கேற்க இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, தமிழக அரசின் பயிற்சித் துறை தலைவர் எஸ்.கோபால சுந்தர ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் (யுபிஎஸ்சி) நடத்தப்படும் அகில இந்திய குடிமைப் பணிகளுக்கான தேர்வுகளை எதிர்கொள்ளும் ஆர்வலர்களுக்கு, தமிழக அரசின் அகில இந்திய குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மையத்தில் முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் ஆளுமைத் தேர்வுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

தற்போது, இம்மையத்தின் சார்பில், இந்திய வனப்பணி (ஐஎஃப்எஸ்) முதன்மைத் தேர்வில் வெற்றி பெற்ற தேர்வர்களுக்கு வரும் 17-ம் தேதி அன்று மாதிரி ஆளுமைத் தேர்வு நடத்தப்பட இருக்கிறது. இந்த மாதிரி ஆளுமைத் தேர்வில் பங்கேற்க விரும்பும் தேர்வர்கள் www.civilservicecoaching.com என்ற இணைய தளத்தில் 13-ம் தேதி (இன்று) முதல் 15-ந் தேதி மாலை 5 மணிக்குள் பதிவு செய்ய வேண்டும். விண்ணப்ப விவரங்களை (DAF) பதிவு செய்து அவற்றை aicscc.gov@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

கூடுதல் விவரங்களுக்கு, 044-24621475 என்ற தொலைபேசி எண் மூலமாகவும், 93457 66957 என்ற வாட்ஸ்-அப் எண் மூலமாகவும், aicscc.gov@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
Friday, March 13, 2026

தமிழ்நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் போதுமான அளவில் கிடைக்கிறது - அச்சத்தில் அதிகமாக வாங்க வேண்டாம் என இந்தியஆயில் வேண்டுகோள்.

தமிழ்நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் போதுமான அளவில் கிடைக்கிறது - அச்சத்தில் அதிகமாக வாங்க வேண்டாம் என இந்தியஆயில் வேண்டுகோள்.
Friday, March 13, 2026

DEO முதன்மைத் தேர்வுக்கு ஹால்டிக்கெட் வெளியீடு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

டிஇஓ முதன்​மைத் ​தேர்​வுக்​கான ஹால்​டிக்​கெட் இணை​யதளத்​தில் வெளி​யிடப்​பட்​டிருப்​ப​தாக டிஎன்பிஎஸ்சி அறி​வித்​துள்​ளது.

இதுதொடர்​பாக, டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்​டுப்​பாட்டு அலு​வலர் பி.  வெங்கட பிரியா நேற்று வெளி​யிட்ட செய்​திக் ​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: டிஎன்பிஎஸ்சி குரூப் 1- சி கீழ் வரும் மாவட்ட கல்வி அதி​காரி நேரடி நியமனத்​துக்​கான முதன்​மைத்​தேர்வு மார்ச் 22-ம் தேதி முதல் 25-ம்் தேதி வரை நடை​பெற உள்​ளது.

இத்​தேர்​வெழுத அனு​ம​திக்​கப்​பட்​டுள்ள தேர்​வர்​களுக்கு தேர்​வுக்​கூட நுழைவுச்​ சீட்டு தேர்​வாணை​யத்​தின் இணை​யதளத்​தில் (www.tnpsc.gov.in) பதிவேற்​றம் செய்​யப்​பட்​டுள்​ளது.

தேர்​வர்​கள் தேர்​வுக்​கூட அனு​ம​திச்​ சீட்டை தங்​களின் ஒரு​முறை பதிவு (ஓடிஆர்) வாயி​லாக விண்​ணப்ப எண் மற்​றும் பிறந்த தேதியை குறிப்​பிட்டு பதி​விறக்​கம் செய்​து​கொள்​ளலாம். இவ்​வாறு வெங்கட பிரியா தெரிவித்துள்​ளார்​.
Friday, March 13, 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 13.03.2026

திருக்குறள்: 

அதிகாரம் 82 / CHAPTER 82 – 

தீ நட்பு 

குறள் 811: 

பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை 
பெருகலிற் குன்றல் இனிது.      

 விளக்க உரை:

 அன்பு மிகுதியால் பருகுவார் போல் தோன்றினாலும் நற்பண்பு இல்லாதவரின் நட்பு, வளர்ந்து பெருகுவதை விடத் தேய்ந்து குறைவது நல்லது.

பழமொழி :

All is well that ends well. 

நல்ல தொடக்கம் நல்ல முடிவைத் தரும்.

இரண்டொழுக்க பண்புகள் :.

1.   திட்டமிட்டு செயல் பட்டால் வெற்றி நிச்சயம்.

2.எனவே  ஒரு செயலை தொடங்கும் முன், எவ்வாறு செய்து முடிக்க போகிறோம் என்று திட்டமிட்டு செயல் பட வேண்டும்.

பொன்மொழி : 

வெற்றி மகிழ்ச்சிக்கு திறவுகோல் அல்ல மகிழ்ச்சியே வெற்றிக்கு திறவுகோல்

பொது அறிவு : 

01.இந்தியாவில் இருந்து அதிகம் ஏற்றுமதி செய்யப்படும் முக்கிய காய்கறி எது?

 வெங்காயம் - Onion

02.  மகாத்மா காந்திக்கு தேசத் தந்தை  பட்டத்தை வழங்கியவர் யார்?

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்

Netaji Subhas Chandra Bose 

English words :

Carry on- continue to do something

Carry out-perform or complete  task

தமிழ் இலக்கணம்: 

வயிறு+இல் = வயிறில் அல்ல *வயிற்றில்*


கயிறு + இல் = கயிறில் அல்ல *கயிற்றில்*


கயிறு+ ஐ = கயிறை அல்ல *கயிற்றை*


வீடு + ஐ =  வீடை அல்ல *வீட்டை* 


ஆறு + பக்கம் = ஆறுபக்கம் அல்ல 

 *ஆற்றுப்பக்கம்*

இப்போது நீங்கள் மிகத் தெளிவாக தெரிந்து கொள்ளலாம் று,டு ஆகிய எழுத்துக்கள் உடன் வேற்றுமை உருபு அல்லது மற்ற சொற்கள் சேர்ந்து வரும் போது இந்த எழுத்துக்களுக்கு முன்னாடியும் வல்லினம் மிகுந்து வரும்

அறிவியல் களஞ்சியம் :

மனித மூளையானது ஒரு சிறிய மின்விளக்கை ஒளிரச் செய்யக்கூடிய மின்சாரத்தை (சுமார் 12-25 வாட்ஸ்) உருவாக்குகிறது.

நீதிக்கதை

 கருத்துடன் செயல்படு

ஓரு நாள் ஒருவன் அவன் வீட்டுப் பரணைச் சுத்தம் செய்து கொண்டிருந்தான். அப்போது அதுவரை அவன் கவனித்திராத ஒரு புத்தகத்தைக் கண்டெடுத்தான்.

அது ஒரு மிகப் பழைய புத்தகம். பக்கங்கள் மஞ்சள் படிந்து மடித்துப் போயிருந்தன. பக்கங்களைத் திருப்புகையில் மிகக் கவனம் தேவையிருந்தது. இல்லாவிட்டால் பக்கங்கள் உதிரத் தொடங்கின.

அவன் அந்தப் புத்தகம் மந்திர மாயங்களைப் பற்றியது என்று அறிந்து கொண்டான். எத்தனையோ முறை படிக்க முயன்றும் அவன் ஒரே ஒரு பத்தியில் உள்ள கருத்தை மட்டும் தெரிந்து கொள்ள முடிந்தது. மற்றவை அவனுக்குப் புரியவில்லை.

அந்தப் பத்தியில் கருங்கடற் கரையில் கிடக்கும் மாய சக்தி மிக்க ஒரு கறுப்புக் கூழாங்கல்லைப் பற்றிச் சொல்லப்பட்டிருந்தது. அந்தக் கல்லால் எதைத் தொட்டாலும் அதைத் தங்கமாக மாற்றி விடுமாம். அந்தக் கல்லை எப்படிக் கண்டு கொள்வது என்றும் அந்தப் புத்தகத்தில் சொல்லப் பட்டிருந்தது. தொட்டுப் பார்த்தால் மற்ற கற்கள் எல்லாம் பனிக் கட்டி போல் குளிராய் இருக்க, அந்தக் கல் மட்டும் வெதுவெதுப்பாய் இருக்குமாம்.

இதைத் தெரிந்து கொண்ட மனிதனுக்கு இருப்புக் கொள்ளவில்லை. கருங்கடல் கரை நோக்கி உடனே புறப்பட்டான்.

அங்கு தினமும் காலையிலிருந்து மாலை வரை அவன் ஒவ்வொரு கல்லாய் தொட்டுப் பார்த்துத் தேடத் துவங்கினான். கடற்கரையில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை கருங்கூழாங்கற்கள் கிடந்தன. அவனுக்கு ஒரு முறை சோதித்த கல்லை மறுபடி மறுபடி சோதிக்காமல் இருக்க வேண்டுமே என்ற கவலை வந்து விட்டது. சோதித்த கல்லைக் கடலுக்குள் உடனே எறிந்து விட்டால் குழப்பம் வராது என்று யோசித்து, அதன்படியே ஒவ்வொன்றாகக் கற்களைக் கடலுக்குள் எறிந்தான்.

பல மாதங்களும் வருடங்களும் கடந்து போயின. கல்லும் கிடைக்கவில்லை, அவனும் விடுவதாய் இல்லை. கற்களைத் தொட்டுப் பார்த்து கடலுக்குள் எறியும் பணி அவனுக்கு அனிச்சைச் செயல் போல் ஆகி விட்டது.

ஒரு நாள் மாலை, மிகுந்த தேடலுக்குப் பிறகு களைத்துப் போய் கடற்கரையை விட்டுச் செல்லும் போது ஒரு கறுப்புக் கூழாங்கல் அவன் கண்ணில் பட்டது. அதைக் கையில் எடுத்தான். அது வெதுவெதுப்பாய் இருந்தது. ஆனால், பல வருடப் பழக்கத்தால், எப்பொழுதும் போல் அதையும் யோசிக்குமுன் கடலில் தூர எறிந்து விட்டான்.

செய்யும் செயல்களில் எப்பொழுதும் கருத்தும் கவனமும் தேவை. பழக்கங்களுக்கு அடிமையாவதைத் தவிர்க்க வேண்டும்.

இன்றைய செய்திகள்

13.03.2026

⭐அமராவதி, காவிரி ஆறுகள் இணையும் இடத்திலிருந்து கரூர், அரவக்குறிச்சி, ஒட்டன்சத்திரம், ஆத்தூர், திண்டுக்கல் உள்ளிட்ட 7 தொகுதிகளில் உள்ள ஏரி, குளங்களுக்கு தண்ணீரைக் கொண்டுவர ரூ.5,400 கோடி புதிய திட்டத்துக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

⭐ பல உணவகங்கள் தற்காலிகமாக மூடப்பட்டு வருவதால் ஸ்விக்கி மற்றும் ஸோமாடோ போன்ற பார்ட்னர்கள்  பாதிக்கப்பட்டுள்ளன.

⭐ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மீது ஈரான் டிரோன்கள்,ஏவுகணைகளை வீசியது.பக்ரைனில் உள்ள முக்கிய எண்ணை சேமிப்பு கிடங்குகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டன.

🏀விளையாட்டுச் செய்திகள்

🏀இந்திய அணியை முன்னாள் வீரர்கள் மட்டுமின்றி வெளிநாட்டு பிரபலங்களும் வெகுவாக பாராட்டி வருகிறார்கள்.
அந்த வகையில் வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் கேப்டனும், அதிரடி பேட்ஸ்மேனுமான விவியன் ரிச்சர்ட்சும் இந்திய அணியை புகழ்ந்து உள்ளார்.

Today's Headlines

⭐ The Tamilnadu government has approved a new project worth ₹5,400 crore to bring water to lakes and ponds in 7 constituencies including Karur, Aravakurichi, Ottanchathiram, Athur, and Dindigul from the point where the Amaravathi and Kaveri rivers meet.

⭐ Many restaurants are being temporarily closed, which has affected partners such as Swiggy and Zomato.

⭐ Iran launched drones and missiles toward the United Arab Emirates. Attacks were also carried out on major oil storage facilities in Bahrain.

 *SPORTS NEWS* 

🏀 The Indian team is receiving widespread praise not only from former Indian players but also from international personalities. In that line, former West Indies cricket team captain and legendary batsman Vivian Richards has praised the Indian team.

Covai women ICT_போதிமரம்

Thursday, March 12, 2026

Thursday, March 12, 2026

Kalanjiyam Appல் ஓய்வூதியதாரர்கள் தங்கள் ஓய்வூதியம் பெறும் கருவூலத்தை (Treasury) மாற்றிக்கொள்ளும் வசதி

சமீபத்திய புதுப்பிப்புகளில் (Update), ஓய்வூதியதாரர்களுக்கான "Transfer of Pension Pay Office" என்ற புதிய பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு மாவட்டத்தில் உள்ள கருவூலத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்திற்கோ அல்லது அதே மாவட்டத்திற்குள் உள்ள வேறு கிளைக்கோ மாற்றிக்கொள்ள விண்ணப்பிக்கலாம்.

Kalanjiyam செயலி மூலம் கருவூலம் மாற்றும் முறை :

Kalanjiyam செயலியில் உங்கள் User ID (PPO Number) மற்றும் கடவுச்சொல் (Password) கொண்டு உள்நுழையவும்.

உள்ளே Pensioner மெனுவை தேர்ந்தெடுக்கவும்.

அங்கு கொடுக்கப்பட்டுள்ள "Transfer of Pension Pay Office" அல்லது "Treasury Change" என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.

நீங்கள் எந்த கருவூலத்திற்கு மாற விரும்புகிறீர்கள் என்ற விவரங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும்.

முக்கிய குறிப்புகள்:

Approval:

நீங்கள் செயலியில் சமர்ப்பிக்கும் கோரிக்கை, சம்பந்தப்பட்ட கருவூல அதிகாரிகளால் சரிபார்க்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்ட பின்னரே மாற்றம் நடைமுறைக்கு வரும்.

* Web Portal:

செயலியில் ஏதேனும் தொழில்நுட்பக் கோளாறு இருந்தால், ifhrms.tn.gov.in என்ற இணையதளம் மூலமாகவும் இதே மாற்றத்தைச் செய்துகொள்ளலாம்.

* Mustering:

வருடாந்திர நேர்காணல் (Mustering) நிலுவையில் இருந்தால் அல்லது கருவூல கணக்கு தணிக்கையில் (Audit) ஏதேனும் நிலுவை இருந்தால் இந்தச் செயல்முறையில் தாமதம் ஏற்படலாம்.

இப்பதிவினை பிற ஓய்வூதிய நண்பர்களும் பயன்படுத்தும் வகையில் அனைவருக்கும் பகிரலாம்.
Thursday, March 12, 2026

டான்செட், சீட்டா நுழைவுத் தோ்வுகளுக்கு விண்ணப்பம்: அண்ணா பல்கலை.


டான்செட், சீட்டா நுழைவுத் தோ்வுகளுக்கு மார்ச் 16 முதல் ஏப்ரல் 10ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலை தெரிவித்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழக துறை கல்லூரிகள், உறுப்பு பொறியியல் கல்லூரிகள், அண்ணாமலை பல்கலைக்கழகம், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல், கலை அறிவியல் கல்லூரிகள் மற்றும் தனியாா் கல்லூரிகளில் எம்பிஏ, எம்சிஏ படிப்புகளில் சேர டான்செட் என்ற பொது நுழைவுத் தோ்வு எழுத வேண்டும்.

அதேபோல், அண்ணா பல்கலைக்கழக துறை கல்லூரிகள், உறுப்பு பொறியியல் கல்லூரிகள், அரசு மற்றும் தனியாா் பொறியியல் கல்லூரிகள், சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் எம்.இ., எம்.டெக்., எம்.ஆா்க்., எம்.பிளான். படிப்புகளில் சேர வேண்டுமானால் சீட்டா (CEETA) என்ற பொது நுழைவுத் தோ்வு எழுத வேண்டும். இந்த 2 நுழைவுத் தோ்வுகளையும் தமிழக அரசு சாா்பில் அண்ணா பல்கலைக்கழகம் ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.

இந்த நிலையில், வரும் 2026 - 27-ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவா் சோ்க்கைக்கான டான்செட், சீட்டா பொது நுழைவுத் தோ்வுக்கான அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, டான்செட் நுழைவுத் தோ்வு மே 9ஆம் தேதியும், சீட்டா பொது நுழைவுத் தோ்வு மே 10ஆம் தேதி நடைபெறவிருக்கிறது.
Thursday, March 12, 2026

5 400 தர ஊதிய வழக்கில் நீதிமன்ற தீர்ப்பினை எதிர்த்து அரசின் சார்பில் மேல்முறையீடு

5400 தர ஊதிய வழக்கில் நீதிமன்ற தீர்ப்பினை எதிர்த்து அரசின் சார்பில் மேல்முறையீடு செய்ய மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி) நாமக்கல் அவர்கள் வட்டார கல்வி அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
Thursday, March 12, 2026

வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான மதிப்பூதியம் வரும் மார்ச் 31க்குள் வங்கிக் கணக்கில் ECS முறையில் வரவு வைக்க தேர்தல் ஆணையம் உத்தரவு...

வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான மதிப்பூதியம் வரும் மார்ச் 31க்குள் வங்கிக் கணக்கில் ECS முறையில் வரவு வைக்க தேர்தல் ஆணையம் உத்தரவு...

Electoral Rolls Booth Level Officers appointed to assist the Electoral Registration Officers Remuneration payable to the Booth Level Officers for the year 2025-2026 Allocation of funds to 38 districts-Sanctioned Orders Issued

👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼