Breaking

Monday, February 16, 2026

Monday, February 16, 2026

புதிய ஆசிரியர்கள் நியமனத்தால் தற்காலிக ஆசிரியர்கள் நீக்கம்?

தமிழகத்தில் அரசுப் பள்ளி னகளில் உள்ள காலி இடங்களில், பள்ளி மேலாண்மைக் குழு மூலம் நியமிக்கப்பட்ட தற்காலிக ஆசிரியர்கள் பணிபுரிந்து வரு கின்றனர். குறிப்பாக, பொதுத் தேர்வு நடைபெறும் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 வகுப் புகளுக்கு கூடுதல் முக்கியத்து வம் அளிக்கப்பட்டு, ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.

இந்நிலையில், டிஆர்பி மூலம் தேர்வு செய்யப்பட்ட முதுநிலை ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர் மற் றும் கணினி பயிற்றுநர்கள் என மொத்தம் 1,996 பேருக்கு முதல் வர் ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்கி, அவர் கள் பணியில் சேர்ந்துள்ளனர்.

இதனால், 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு பாடம் எடுத்து வரும் தற்காலிக ஆசிரியர்கள் விடுவிக்கப்படும் நிலை உள் ளது. அடுத்த மாதம் பொதுத் தேர்வு நடைபெற உள்ள நிலையில், மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில், தமிழக அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேர்வு நேரத்தி...

இதுகுறித்து பெற்றோர்கள் கூறியதாவது: தற்போது 1,996 ஆசிரியர்கள் நியமனம் செய் யப்பட்டுள்ளதால், இவர்கள் பணியில் சேர உள்ள இடங் களில் பணிபுரிந்த தற்காலிக ஆசிரியர்கள் விடுவிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. தேர்வு நேரத்தில் புதிய ஆசிரியர் கள் நியமனம் செய்யப்பட் டுள்ளதால், மாணவர்களுக்கு புரிதல் ஏற்படுவதில் சிக்கல் உண்டாகலாம். மேலும், கவனச் சிதறல் ஏற்படவும் வாய்ப்புள்ளது.

பழைய ஆசிரியர்கள் கொடுத்து வந்த வழிகாட்டுதல்களில் மாற்றம் ஏற்படும். முக்கிய வினாத்தாள்கள், பாடக் குறிப்புகளைப் பின்பற்றுவதில் சிரமம் ஏற்படும். இதனால், மதிப்பெண் குறையவும் வாய்ப்பு உள்ளது.

எனவே, தற்காலிக ஆசிரியர்களுக்கு நடப்பு கல்வியாண்டு முடியும்வரை பணி நீட்டிப்பு வழங்க வேண்டும். புதிய ஆசிரியர் நியமனத்தை சில மாதங்களுக்கு முன்னரோ அல்லது பொதுத்தேர்வுக்குப் பின்னரோ செய்திருக்கலாம். தேர்தலை மையப்படுத்தி தமிழக அரசு புதிய ஆசிரியர் நியமனத் தில் தீவிரம் காட்டியது தெரிகிறது. எனவே, புதிய ஆசிரியர் நியமனத்தால் மாணவர்கள் பாதிக்கப்படாத வகையில், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு பெற்றோர் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தரப்பில் கேட்டபோது, "பணி நியமனம் செய்யப்பட்டுள்ள ஆசிரியர்கள் பணிக்கு வந்ததும், அங்கு பணிபுரிந்த தற்காலிக ஆசிரியர்கள் நீக்கம் செய்யப்படுவது வழக்கம். தற்போதைய சூழல் குறித்து, அரசுதான முடிவெடுக்க வேண்டும்" என்றனர்
Monday, February 16, 2026

க்யூட் நுழைவுத் தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு

முது​நிலை படிப்​பு​களில் சேரு​வதற்​கான க்யூட் நுழைவுத் தேர்வு மார்ச் 6 முதல் 27-ம் தேதி வரை நடை​பெறுகிறது. இதற்​கான தேர்​வுக் கால அட்​ட​வணையை என்​டிஏ வெளி​யிட்​டுள்​ளது.

நாடு முழு​வதும் உள்ள மத்​திய பல்​கலைக்​கழகங்​கள் மற்​றும் அவற்​றின்​கீழ் இயங்​கும் கல்​லூரி​களில் இளநிலை, முது​நிலை பட்​டப் படிப்​பு​களில் சேர பல்​கலைக்​கழக பொது நுழைவுத் தேர்​வில் (க்​யூட்) தேர்ச்சி பெறவேண்​டும்.

இந்த தேர்வை தேசிய தேர்​வு​கள் முகமை (என்​டிஏ) ஆண்​டு​தோறும் நடத்​திவரு​கிறது. அதன்​படி, வரும் (2026-27) கல்வி ஆண்​டில் முது​நிலை படிப்​பு​களுக்​கான க்யூட் தேர்வு கணினி வழி​யில் மார்ச் மாதம் நடத்​தப்பட உள்​ள​தாக என்​டிஏ அறி​வித்​தது.

இதற்​கான இணை​யதள விண்​ணப்ப பதிவு கடந்த டிச.14-ல் தொடங்கி ஜன.25-ம் தேதி​யுடன் முடிந்​தது. 4.11 லட்​சம் பேர் விண்​ணப்​பித்​துள்​ளனர். இந்​நிலை​யில், தேர்​வுக் கால அட்​ட​வணையை என்​டிஏ தற்​போது வெளி​யிட்​டுள்​ளது. அதன்​படி, க்யூட் தேர்வு மார்ச் 6 முதல் 27-ம் தேதி வரை நடை​பெறுகிறது.

இதற்​கான விரி​வான கால அட்​ட​வணை https://exams.nta.ac.in/CUET-PG என்ற தளத்​தில் வெளி​யிடப்​பட்​டுள்​ளது. கூடு​தல் விவரங்​களை www.nta.ac.in என்ற தளத்​தில் அறிய​லாம். ஏதேனும் சந்​தேகங்​கள் இருந்​தால் 011-40759000 என்ற தொலைபேசி எண் அல்​லது helpdesk-cuetpg@nta.ac.in என்ற மின்​னஞ்​சலில் தொடர்பு கொள்​ளலாம் என்று என்​டிஏ வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில்​ கூறப்​பட்​டுள்​ளது.
Monday, February 16, 2026

அரசுப் பள்ளிகளில் நியமிக்கப்பட்ட 1,021 புதிய ஆசிரியர்களுக்கு பிப்.18-ல் பயிற்சி

அரசுப் பள்ளிகளுக்கு புதிதாக தேர்வு செய்யப்பட்ட 1,021 முதுநிலை ஆசிரியர்களுக்கான ஒருநாள் பயிற்சி சென்னையில் பிப்ரவரி 18-ம் தேதி நடைபெற உள்ளது.

தமிழகத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) மூலம் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் ஸ்டாலின் சென்னையில் கடந்த 13-ம் தேதி வழங்கினார். புதிதாக நியமிக்கப்பட்ட அனைத்து முதுநிலை ஆசிரியர்களும் மருத்துவச் சான்றுடன் இன்று (பிப்.16) தங்களுக்கான பள்ளிகளுக்குச் சென்று பணியில் சேர உள்ளனர்.

இதைத் தொடர்ந்து, இவர்களுக்கான ஒருநாள் பயிற்சி சென்னையில் வரும் 18-ம் தேதிநடைபெற உள்ளது. இது தொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்பணியில் சேர்ந்த கோவை, கன்னியாகுமரி உள்ளிட்ட 26 மாவட்டங்களைச் சேர்ந்த 1,021 ஆசிரியர்களுக்கு சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பிப்.18-ம் தேதி புதுமுகப் பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. பயிற்சியை அமைச்சர் அன்பில் மகேஸ் தொடங்கி வைக்க உள்ளார். இந்த விவரத்தை சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலர்கள் தெரிவிக்க வேண்டும்’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.
Monday, February 16, 2026

TET : தேர்ச்சிக்கான மதிப்பெண் 60 என அறிவியுங்கள் - டெட்’டால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் மனு

தேர்ச்சிக்கான மதிப்பெண் 60 என அறிவியுங்கள் - டெட்’டால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் மனு
Monday, February 16, 2026

ஆசிரியர்களின் கவனத்திற்கு: TNTET 2026 பணிச் சான்றிதழ் (Annexure-I) நிரப்புவது எப்படி?



ஆசிரியர்களின் கவனத்திற்கு: TNTET 2026 பணிச் சான்றிதழ் (Annexure-I) நிரப்புவது எப்படி?

படிவத்தை நிரப்பும் முறை (How to Fill):

*Name of the Teacher:* உங்கள் பெயரை ஆங்கில பெரிய எழுத்துக்களில் (CAPITAL letters) எழுதவும்.

*Date of Birth and Age:* உங்கள் பிறந்த தேதி மற்றும் தற்போதைய வயது.

*Name of the Post held now:* தற்போது நீங்கள் வகிக்கும் பதவி (எ.கா: BT Assistant - Maths).

*Date of Joining in the present post:* தற்போதுள்ள பதவியில் சேர்ந்த தேதி.

*Date of Initial Appointment:* முதன்முதலில் ஆசிரியப் பணியில் சேர்ந்த தேதி.

*Name of the Post during Initial Appointment:* முதலில் பணியில் சேரும்போது இருந்த பதவி.

*Date of Regularization:* பணி வரன்முறை செய்யப்பட்ட தேதி.

*Working Department:* நீங்கள் பணிபுரியும் துறை (எ.கா: School Education Dept / Aided).

Working in Govt/Aided/Private: அரசு / உதவி பெறும் / தனியார் பள்ளி - இதில் பொருத்தமானதைக் குறிப்பிடவும்.

*Full Time / Consolidated / Part Time:* காலமுறை ஊதியம் (Time Scale) எனில் Full Time எனக் குறிப்பிடவும்.

*Name of the School with Address:* பள்ளியின் பெயர் மற்றும் முழு முகவரி.

*Working District:* பணிபுரியும் மாவட்டம்.

School UDISE CODE: பள்ளியின் 11 இலக்க யுடைஸ் குறியீடு.

*Qualification:* உங்கள் கல்வித்தகுதிகள் (D.T.Ed / B.Ed மற்றும் பாடம்).

*Teacher EMIS ID NO:* உங்கள் 8 இலக்க EMIS அடையாள எண்.

*IFHRMS Employee ID:* அரசு மற்றும் உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களுக்கான IFHRMS எண் (தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு இது தேவையில்லை).

*கையொப்பம்:* இடதுபுறம் நீங்கள் கையெழுத்திட வேண்டும்.

வலதுபுறம் உங்கள் பள்ளியின் தலைமை ஆசிரியர் (HM) அல்லது முதல்வர் (Principal) கையொப்பம் மற்றும் முத்திரை பெற வேண்டும். இறுதியில் மாவட்டக் கல்வி அலுவலரிடம் (DEO) மேலொப்பம் (Counter Signed) பெற வேண்டும்.
Monday, February 16, 2026

நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும் - நாடாளுமன்றத்தில் கள்ளக்குறிச்சி எம்.பி. மலையரசன் கோரிக்கை

நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும் - நாடாளுமன்றத்தில் கள்ளக்குறிச்சி எம்.பி. மலையரசன் கோரிக்கை
Monday, February 16, 2026

16.02.2026 (திங்கட்கிழமை) - இன்றைய செய்திகள்



🌹பசியில் நமக்கு உணவு கொடுத்தவர்களையும்.

கஷ்டத்தில் நமக்கு உதவி செய்தவர்களையும்..

துன்பத்தில் நம்மை ஆறுதல் படுத்தினவர்களையும்...

நமக்கு உடல்நிலை சரியில்லாத போது நம்மை விசாரித்தவர்களையும்..

ஒருநாளும் மறவாதிருங்கள்...

அவர்கள் தான் நம் உண்மையான சொந்தங்கள்,நண்பர்கள்.!

🌹🌹எல்லோருடைய வலியையும் புரிந்து கொள்ள தேவையில்லை...

எல்லோருக்கும் வலிக்கும் என்பதை உணர்ந்தாலே போதும்...

யாரையும் காயப்படுத்தும் எண்ணம் எப்போதும் தோன்றாது.!!

🌹🌹🌹ஊசி தங்கத்தில் செய்தது என்று எடுத்து கண்ணில் குத்துவீர்களா

அதுபோலத்தான் எவ்வளவு நெருக்கமான உறவானாலும் நம் உணர்வுகளை மதிக்க தெரியாதவராயின்

அவர்களிடம் இருந்து ஒதுங்கியே இருங்கள்.!!!

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

📕📘பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் புலம்பல் - அடுத்தடுத்த திருப்புதல் தேர்வுகளால் திணறல்'

(நாளிதழ் செய்தி)

📕📘நாடு முழுவதும் உள்ள அரசு கல்லூரிகளில் கூடுதலாக 10,023 மருத்துவ இடங்களுக்கு ஒப்புதல்

📕📘CBSE 12-ம் வகுப்பு விடைத்தாள்களை ஆன்லைனில் திருத்தும் புதிய முறை அமல்

📕📘10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு: சென்னையில் பிப்.16-ல் ஆய்வுக் கூட்டம்

📕📘G.O -128 - TET - ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ் வாழ்நாள் முழுதும் செல்லும் - அரசாணை வெளியீடு.

📕📘இன்று 16/02/2026 முதுகலை ஆசிரியர்கள் பணி ஏற்பு செய்ய உள்ளார்...

வாழ்த்துகள்:-

👉1) ஏற்கனவே அரசுப் பணியில் இருப்பவர்கள் அதே CPS number இல் தொடரலாம்

👉2) பழைய ifhrms kalanjium id தான்... பழைய பள்ளி/அலுவலகத்தில் transfer போட்டு விட்டார்கள் எனில்

புதிய பணியிடத்தில் பிப்ரவரி மாதம் முழு சம்பளம் பெற்றுக் கொள்ளலாம்...

👉3) 15/2 வரை பழைய பள்ளி/ அலுவலகத்தில் partial pay போட ifhrms இல் வழிவகை இல்லை

( பழைய பள்ளி/அலுவலகத்தில் எந்த கணக்கு தலைப்பாக இருந்தாலும்)

1-15

16-28 என சரியாக பிரிந்து வரும்

எனவே புதிய பணியிடத்தில் தான் பிப்ரவரி மாதம் ஊதியம் பெற வேண்டும்...

👉4) 1/1/26 பிறகு புதிய நியமனம் எனில் TAPS திட்டம் தான் என்பது நீங்கள் அறிந்ததே

( PG appointment order இல் தெளிவாக உள்ளது)

👉5) இதுவரை ifhrms kalanjium id create செய்யும் போது automatically CPS number create ஆகி விட்டது ...

👉அதே போல TAPS number create ஆகும் என நினைக்கிறேன்...

👉6) ifhrms kalanjium id creation necessary details pdf ஆக இணைத்துள்ளேன்..

மார்க் mandatory...

👉7) I'd creation நாமே நமது login மூலம் செய்து விடலாம் treasury/CEO office contact செய்ய தேவையில்லை

👉8) ifhrms kalanjium இல் PG Post vacant ஆக இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்...

👉9) நமது பள்ளியில் உள்ள அனைத்து பணியிடங்கள் விவரங்கள் பார்க்க

👉Initiator login

e services

HR

Reports

Post occupancy details report.....

Action Click ok

Check in download...

👉இதில் அனைத்து பணியிடங்கள் விவரங்கள் இருக்கும்

👉பணியில் உள்ள பணியிடத்தின் கீழ் பணியாளர் பெயர் இருக்கும்...

👉பணியிடத்தின் கீழ் பணியாளர் பெயர் எதுவும் இல்லாமல் இருப்பின் அவை காலிப்பணியிடங்கள்

📕📘ஆசிரியர்களின் கவனத்திற்கு: TNTET 2026 பணிச் சான்றிதழ் (Annexure-I) நிரப்புவது எப்படி?

👉படிவத்தை நிரப்பும் முறை (How to Fill):

👉Name of the Teacher: உங்கள் பெயரை ஆங்கில பெரிய எழுத்துக்களில் (CAPITAL letters) எழுதவும்.

👉Date of Birth and Age: உங்கள் பிறந்த தேதி மற்றும் தற்போதைய வயது.

👉Name of the Post held now: தற்போது நீங்கள் வகிக்கும் பதவி (எ.கா: BT Assistant - Maths).

👉Date of Joining in the present post: தற்போதுள்ள பதவியில் சேர்ந்த தேதி.

👉Date of Initial Appointment: முதன்முதலில் ஆசிரியப் பணியில் சேர்ந்த தேதி.

👉Name of the Post during Initial Appointment: முதலில் பணியில் சேரும்போது இருந்த பதவி.

👉Date of Regularization: பணி வரன்முறை செய்யப்பட்ட தேதி.

👉Working Department: நீங்கள் பணிபுரியும் துறை (எ.கா: School Education Dept / Aided).

Working in Govt/Aided/Private: அரசு / உதவி பெறும் / தனியார் பள்ளி - இதில் பொருத்தமானதைக் குறிப்பிடவும்.

👉Full Time / Consolidated / Part Time: காலமுறை ஊதியம் (Time Scale) எனில் Full Time எனக் குறிப்பிடவும்.

👉Name of the School with Address: பள்ளியின் பெயர் மற்றும் முழு முகவரி.

👉Working District: பணிபுரியும் மாவட்டம்.

School UDISE CODE: பள்ளியின் 11 இலக்க யுடைஸ் குறியீடு.

👉Qualification: உங்கள் கல்வித்தகுதிகள் (D.T.Ed / B.Ed மற்றும் பாடம்).

👉Teacher EMIS ID NO: உங்கள் 8 இலக்க EMIS அடையாள எண்.

👉IFHRMS Employee ID: அரசு மற்றும் உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களுக்கான IFHRMS எண் (தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு இது தேவையில்லை).

👉கையொப்பம்: இடதுபுறம் நீங்கள் கையெழுத்திட வேண்டும்.

வலதுபுறம் உங்கள் பள்ளியின் தலைமை ஆசிரியர் (HM) அல்லது முதல்வர் (Principal) கையொப்பம் மற்றும் முத்திரை பெற வேண்டும். இறுதியில் மாவட்டக் கல்வி அலுவலரிடம் (DEO) மேலொப்பம் (Counter Signed) பெற வேண்டும்.

📕📘ஆசிரியர் தகுதித் தேர்வு

சிறுபான்மை நிறுவன பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள்

ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத வேண்டுமா ? உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. பணியில் உள்ள ஆசிரியர்கள் TNTET 2026 சிறுபான்மை நிறுவன ஆசிரியர்கள் எழுதலாம். தற்போதய கட்டாய சூழலை கருத்தில் கொண்டு ,வாய்ப்பை பயன்படுத்தி கொள்வது நலம் .அவசியம் விண்ணப்பம் செய்யவும்

📕📘புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதுகலை ஆசிரியர்களுக்கு வரும் 18 ம் தேதி ஒரு நாள் பணி நுழைவுப் பயிற்சி - Dir Proceedings வெளியீடு.

📕📘ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி மதிப்பெண்= குறைத்திட வழக்கு

WP(MD) No : 4173/2026

அரசாணை எண் : 23 பள்ளிக்கல்வித் துறை நாள் : 28.01.2026 , ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிக்கை எண் : 03 A/2025 நாள் .29.01.2026 சேலன்ஞ் செய்து வழக்கு தொடரப்பட்டு உள்ளது .

all other reserved category (BC , BC (M) , MBC , DNC , PWD) 50% மதிப்பெண் 40% (60) குறைத்திட வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மதுரை உயர் நீதிமன்றத்தில் இன்று திங்கள் கிழமை விசாரணைக்கு வருகின்றது.

📕📘அதிமுக தேர்தல் வாக்குறுதிகளை பட்டியலிட்ட ஈபிஎஸ்

ஆண்டுக்கு மூன்று கேஸ் சிலிண்டர் வழங்கப்படும்

மாணவர்கள் வங்கிகளில் பெற்ற கல்விக்கடன் தள்ளுபடி செய்யப்படும்

சிறுபான்மை வகுப்பு மகளிருக்கு சுயதொழில் தொடங்க வட்டியில்லா கடன்

முதியோர் உதவித்தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும்''

சத்தியமங்கலத்தில் அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி பேச்சு

📕📘திமுகவில் இணைந்தார் அதிமுக முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில் 📕📘“நயினாரின் பேச்சு கொஞ்சம் வருத்தமாகத்தான் இருக்கிறது" -வானதி சீனிவாசன் 📕📘இந்தியா முழுக்க எந்த டிரெண்ட் இருந்தாலும், தமிழகத்தின் நிரந்தர டிரெண்ட் கருப்பு, சிவப்புதான் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

📕📘"2021ஆம் ஆண்டை விட தற்போது தமிழ்நாட்டில் நமக்கு வரவேற்பும் ஆதரவும் கூடி உள்ளது"

ஜோலார்பேட்டை மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

📕📘2.50 கோடி வாக்குகள் உறுதி

2.50 கோடி வாக்குகளா? என மலைக்க வேண்டாம், ஒவ்வொருவரும் 50 வாக்குகளுக்கு பொறுப்பேற்க வேண்டும்

ஒவ்வொரு பூத்திலும் 350 வாக்குகளை இலக்காகக் கொண்டால் 2.50 கோடி வாக்குகள் உறுதி

தேர்தலுக்குள் ஒவ்வொரு வாக்காளரையும் தலா 5 முறையாவது சந்திக்க வேண்டும்

-முதல்வர் மு.க.ஸ்டாலின்

📕📘மத்திய கைலாஷில் புதிய மேம்பாலம் திறப்பு

அடையாறு - மத்திய கைலாஷ் சந்திப்பில் ரூ.60.68 கோடியில் புதியதாக கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

📕📘உப்பளத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் முல்லைக்காடு கப்பல் கட்டும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்

-தமிழ்நாடு அரசுக்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கோரிக்கை

📕📘தஞ்சை தெற்கு மாவட்ட திமுக சார்பில் ஆலடிக்குமுளை பைபாஸ் சாலையில் அமைக்கப்பட்டுள்ள அண்ணா மற்றும் கலைஞர் சிலையை திறந்து வைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

📕📘10 மாதக் குழந்தையின் உடல் உறுப்புகள் தானம்.

கேரளாவில் பத்தனம்திட்டா மாவட்டத்தைச் சேர்ந்த 10 மாத பெண் குழந்தை அலின் ஷெரினின் கல்லீரல், 2 சிறுநீரகங்கள், இதய வால்வு, 2 கண்கள் ஆகியவை தானமாக ஒப்படைப்பு

குழந்தை அலின் சமீபத்தில் நடந்த கார் விபத்தில் மூளைச்சாவு அடைந்த நிலையில், குழந்தையின் உடல் உறுப்பு தானத்திற்கு பெற்றோர் சம்மதம்

கேரளாவிலேயே மிகக் குறைந்த வயதில் உடல் உறுப்பு தானம் செய்த பெருமை அலின் ஷெரினுக்கு கிடைத்துள்ளது

📕📘நேபாள அணிக்கு எதிரான போட்டியில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது மேற்கிந்திய தீவுகள் அணி

📕📘நாளை பிப்.17ம் தேதி வங்கதேச பிரதமராக தாரிக் ரகுமான் பதவியேற்கிறார்

இந்தியாவின் பிரதிநிதியாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரியும் பதவியேற்பு விழாவில் பங்கேற்கிறார்கள் 📕📘தமிழ்நாட்டில் இறுதி வாக்காளர் பட்டியல் 23.02.2026 அன்று வெளியிடப்படும் என அறிவிப்பு.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

அன்பை கொடுப்பதிலும் பெறுவதிலும் தான் இன்பம் இருக்கிறது. என்றும் அன்புடன்

சு.வேலுமணி M.A.,B.Ed.,

தலைமையாசிரியர், மாவட்டச் செயலாளர்

&தகவல் தொழில் நுட்ப அணியின் மாநில அமைப்பாளர்,

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,

கரூர் மாவட்டம்.

அலைபேசி:9003599926
Monday, February 16, 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 16.02.2026

தாதாசாகெப் பால்கே


திருக்குறள்: 

அதிகாரம் 51 

தெரிந்து தெளிதல் 

குறள் 501: 

அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின் 
திறந்தெரிந்து தேறப் படும்

 விளக்க உரை: 

அறம், பொருள், இன்பம், உயிர்காக அஞ்சும் அச்சம் ஆகிய நான்கு வகையாலும் ஆராயப்பட்ட பிறகே ஒருவன் (ஒரு தொழிலுக்கு உரியவனாகத்) தெளியப்படுவான்.

பழமொழி :

A little knowledge is a dangerous thing 

அற்ப அறிவு அல்லற்கிடம்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. மூத்தோர் சொல் வார்த்தையும் முழு நெல்லிக்காயும் முதலில் கசக்கும் பின் இனிக்கும்.

2. எனவே மூத்தோர் சொல் கேட்டு நடப்பேன்.

பொன்மொழி : 

நீங்கள் செய்யும் தர்மம் உங்கள் செல்வத்தை ஒருபோதும் குறைக்காது - நபிகள் நாயகம் 

பொது அறிவு : 

01.உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த பழம் எது?

        யுபரி கிங் மெலன் 

Yubari King melon

02.இந்தியாவில் உச்ச நீதிமன்ற நீதிபதிகளை யார் நியமிக்கிறார்கள்?

      குடியரசுத் தலைவர்

 President 

English words :

foliage –all the leaves of a tree or plant.

ஒரு மரம் அல்லது செடியின் இலைத்தொகுதி.

launch – start something new,

புதிதாக ஒன்றைத் தொடங்குதல்

தமிழ் இலக்கணம்: 

 சும்மா.... 2
1. சும்மா சொல்லிக் கொண்டு இருக்க மாட்டேன்
பொருள் –திரும்ப திரும்ப சொல்ல மாட்டேன்
2. கொஞ்ச நேரம் சும்மா இருக்க மாட்டியா?
பொருள் – அமைதியாக
3. சும்மா சும்மா ஏன் வருகிறாய்?
பொருள் –அடிக்கடி 
சும்மா என்பது ஒரு மாயச் சொல் தான் இல்லையா? எத்தனை சும்மாக்கள் பார்த்து விட்டோம்.

அறிவியல் களஞ்சியம் :

சமீபத்திய ஆய்வில், ஆஸ்பர்கிலஸ் டெரியஸ் மற்றும் என்ஜியோடோன்டியம் ஆல்பம் ஆகிய இரண்டு பூஞ்சைகள் பாட்டில் மூடிகள் மற்றும் உணவுப் பாத்திரங்களுக்குப் பயன்படுத்தப்படும் பாலிப்ரோப்பிலீன் என்ற பிளாஸ்டிக் வகையை உடைக்கும் என்று ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். பூஞ்சைகளால் பாலிப்ரொப்பிலீனின் ஆய்வக மாதிரிகளை வெறும் 140 நாட்களில் உடைக்க முடிந்தது, இது நூற்றுக்கணக்கான ஆண்டுகளில் பிளாஸ்டிக்கை தானே சிதைவடைவதற்கு எடுக்கும் குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும்.

பிப்ரவரி 16

தாதாசாகெப் பால்கே அவர்களின் நினைவுநாள்

தாதாசாகெப் பால்கே (Dadasaheb Phalke) என்று அழைக்கப்படும் துண்டிராஜ் கோவிந்த் பால்கே (Dhundiraj Govind Phalke, ஏப்ரல் 30, 1870 - பிப்ரவரி 16, 1944) இந்திய திரைப்படத்துறையின் தந்தையாக கருதப்படுகிறார். இந்தியாவிற்கு சினிமாவை முதலில் அறிமுகப்படுத்தியவர் இவர்தான். தொடக்கத்தில் வெளிவந்த படங்கள் எதுவும் வண்ணப்படங்கள் அல்ல. ஒலியும் இல்லாமல் ஊமைப்படங்களாகத்தான் இருந்தன. பால்கே தனது தீவிர முயற்சியினால் ஒரு சினிமாவை எழுதி இயக்கினார். படத்தின் பெயர் அரிச்சந்திரா. நடிகர்களை எப்படித் தேர்வு செய்வது என்று அவர் யோசிக்கவே இல்லை. தனது குடும்பத்திலிருந்த மொத்தம் 18 பேர்களையும் நடிகர்களாக ஆக்கி நடிக்க வைத்து விட்டார் பால்கே. எனவே முதல் இந்திய சினிமா ஒரு குடும்பப் படமே ஆகும்.
அவருடைய நினைவாக தாதாசாகெப் பால்கே விருது நிறுவப்பட்டது.

நீதிக்கதை

 ஒரு வரம் மூன்று பலன்கள்

ஒரு ஊரில் ஏழை மீனவன் ஒருவன் இருந்தான். அவனுடைய அம்மாவிற்குக் கண்பார்வை இல்லை. அவனுக்கு வெகு நாட்களாகக் குழந்தையும் இல்லை. ஒரு நாள் அவன் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றான். அப்போது, கரையில் ஒதுங்கிக் கிடந்த பெரிய மீனொன்று அவனைப் பார்த்துக் கெஞ்சியது. மீனவனே, நான் சாதாரண மீன் இல்லை. கடலில் உள்ள மீன்களுக்கெல்லாம் தலைவன். ஆழ்கடலில் வசிக்கும் நான், ஒரு பெரிய அலையில் சிக்கி இந்தக் கரைப் பகுதிக்கு வந்துவிட்டேன். இப்போது நீந்த முடியாத அளவிற்கு மிகவும் சோர்வாக உள்ளேன். எனக்கு ஒரு உதவி செய் மீனவனே. என்னை பத்திரமாக ஆழ்கடலுக்குக் கொண்டு போய்ச் சேர்த்துவிட்டால் உனக்கு ஒரு வரம் தருவேன்.

மீனவன் அந்த மீனைத் தூக்கி படகில் போட்டான். மிகவும் கஷ்டப்பட்டு படகைச் செலுத்திக் கொண்டுபோய் மீனை நடுக்கடலில் விட்டான். பிறகு, என்ன வரம் கேட்பது என்று யோசித்தான். அவனால் ஒரு முடிவு எடுக்க முடியவில்லை. எனவே அவன் சொன்னான். மீன்களின் ராஜாவே, நீ சொன்னபடி நான் செய்துவிட்டேன். ஆனால், என்ன வரம் கேட்பது என்று எனக்கு இப்போது தெரியவில்லை. வீட்டுக்குச் சென்று மற்றவர்களிடம் கலந்து ஆலோசித்துவிட்டு நாளை வந்து கேட்கிறேன். மீனும், நீ ஒரே ஒரு வரம்தான் கேட்க வேண்டும் என்று நினைவுபடுத்தி நன்றி கூறிச் சென்றது. மீனவன் வீட்டுக்குச் சென்றான். வீட்டில் பெற்றோரிடமும், மனைவியிடமும் நடந்ததைக் கூறினான். ராஜா மீனிடம் என்ன வரம் கேட்பது என்று ஆலோசித்தான்.

அவனது தந்தை கூறினார்: மகனே, நாம் நெடுங்காலமாக இந்த ஓட்டைக் குடிசையில்தான் வாழ்ந்து வருகிறோம். நமக்கு ஒரு நல்ல வீடு வேண்டும் என்று ராஜா மீனிடம் கேளேன்.

அடுத்ததாக அவனது அம்மா சொன்னார்கள்: மகனே, எனக்குக் கண் தெரியாமல் மிகவும் சிரமமாக இருக்கிறது. என் கண்கள் பார்வை பெற வேண்டும் என்று அந்த மீனிடம் கேள்.

கடைசியாக மனைவி கேட்டாள்: நமக்குத் திருமணம் ஆகி பல வருடங்கள் ஆகிவிட்டன. இன்னும் நமக்கு ஒரு குழந்தை இல்லை. எனவே, அந்த மீனிடம் நமக்கு ஒரு குழந்தை வேண்டும் என்று கேளுங்கள்.

மறுநாள், அந்த மீனவன் கடலுக்குச் சென்று ராஜா மீனிடம் ஒரே ஒரு வரம்தான் கேட்டான். அந்த ஒரு வரத்தில் அவன் பெற்றோரின் ஆசையும், அவன் மனைவின் விருப்பமும் நிறைவேறின. அப்படி அவன் என்ன வரம் கேட்டான்?

விடை: 

என் மகன் கீழே விளையாடிக் கொண்டிருப்பதை, எங்கள் வீட்டு மாடியிலிருந்து என் பெற்றோர் பார்த்து மகிழ வேண்டும் என்பது தான் அவன் கேட்ட வரம்.

இன்றைய செய்திகள்

16.02.2026

⭐சென்னையில் 'L' வடிவ மேம்பாலத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

⭐இந்தியாவின் முதல் நீருக்கடியில்  செல்லும் சாலை-ரெயில் சுரங்கப்பாதை  அசாமில் அமைகிறது!

⭐இந்தியாவில் சுமார் 4 கோடியே 20 லட்சம் பேர் தைராய்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀 டி20 தொடர்: முதல் போட்டியில் ஆஸ்திரேலியா மகளிர் அணியை எளிதாக வீழ்த்தியது இந்தியா.

🏀 டி20 உலகக் கோப்பை 2026: 9 விக்கெட் வித்தியாசத்தில் நேபாளத்தை வீழ்த்தியது வெஸ்ட் இண்டீஸ்

🏀
சர்வதேச டேபிள் டென்னிஸ் போட்டி சென்னையில் நடைபெற்று வருகிறது.

Today's Headlines


⭐Chief Minister M.K. Stalin inaugurated the 'L' shaped flyover in Chennai. 

⭐ India's first underwater road-rail tunnel to be built in Assam.

⭐ Studies suggest that around 42 million people in India are suffering from thyroid disorder. 

 *SPORTS NEWS*
🏀T 20 Series: India easily beat Australia Women in first match. 

🏀T 20 World Cup 2026: West Indies beat Nepal by 9 wickets

🏀 International Table Tennis Tournament is being held in Chennai.

Covai women ICT_போதிமரம்

Sunday, February 15, 2026

Sunday, February 15, 2026

தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு தேர்வு தேர்தலுக்கு முன்பா? பின்பா?

2026 ஏப்ரலில் சட்டசபை தேர்தல் வருவதால், திருப்பூர் மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளில், பள்ளித்தேர்தல்கள் தள்ளிப்போக அல்லது முன்கூட்டியே நடக்க வாய்ப்புகள் உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. தேர்தல் பணிகள் ஏப்ரலில் இருப்பதால், அதற்கு முன்னதாகவே தேர்வுகள் நடத்தப்படலாம், அல்லது பள்ளிகள் தேர்தல் அலுவலரிடம் ஒப்படைக்கப்படுவதால், தேர்வுகளில் மாற்றங்கள் வரலாம்.

தினமலர் செய்தி - லோக்சபா தேர்தல் நடக்கும் தருணத்தில், வாக்குப்பதிவுக்கு சில நாட்களுக்கு முன்பே பள்ளிகள் தேர்தல் அலுவலர் வசம் ஒப்படைக்கப்பட இருப்பதால், அதற்குள் இறுதியாண்டு தேர்வுகளை முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

முக்கிய தகவல்கள்:

தேர்தல் நேரம்: ஏப்ரல் மாதம் தேர்தல் வருவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. பள்ளித்தேர்வு: தேர்தல் காரணமாக, 1 முதல் 5-ஆம் வகுப்பு வரையான மாணவர்களுக்கான இறுதியாண்டு தேர்வுகள், முன்கூட்டியே நடத்தப்படலாம் அல்லது மாற்றப்படலாம்.

பொதுத்தேர்வு: பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் வழக்கம்போல மார்ச் - ஏப்ரல் மாதங்களில் நடைபெறும், அதற்கடுத்து, ஆரம்ப மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கான தேர்வுகள் முன்னதாகவே முடிக்கப்படலாம்.

தகவல் மூலம், தேர்தல் பணிகள் காரணமாக தேர்வுகள் முன்கூட்டியே முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது, இது வழக்கத்திற்கு மாறான தேர்வுகள்.
Sunday, February 15, 2026

ஆசிரியை சஸ்பெண்ட் - முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு

மாணவர்களை பிரம்பால் அடித்ததாக எழுந்த புகாரில், ஆசிரியை, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார்.

தர்மபுரி மாவட்டம், இலக்கியம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில், 380க்கும் மேற்பட்ட மாண வர்கள் படித்து வருகின்ற னர். தலைமை ஆசிரியர் பழனிசாமி உள்பட 29 ஆசிரியர்கள் பணியாற்றி வரு கின்றனர்.இந்த பள்ளியில் 10ம் வகுப்பில் 80 மாணவர் கள் படித்து வருகின்றனர். இந்த மாணவர்கள் சில ரின் மதிப்பெண் குறைந்த தால், இப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியை ஒருவர், மாணவர்களை முட்டி போட வைத்து பிரம்பால் அடித்துள்ளார்

தர்மபுரி இலக்கியம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் சமூக அறிவியல் பட்டதாரி ஆசிரியையாக பணிபுரிந்து வருபவர் மரியா ஷில்பா. இவர், 10ம் வகுப்பில் படிக்கும் சில மாணவர்களின் கைகளில் பிரம்பால் அடிப்பது, பள்ளி வராண்டாவில் முட்டியிட செய்வது போன்ற காட்சிகள், வைரலானது. இது தொடர்பாக கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து, ஆசிரியை மரியா ஷில்பாவை,'சஸ்பெண்ட்' செய்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜோதிசந்திரா நேற்று உத்தரவிட்டுள்ளார்.

Sunday, February 15, 2026

அரசுப் பள்ளிகளில் வாசிப்பு திறன் சோதனை

தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டில் 14,000-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு பயிலும் மாணவா்களின் வாசிப்பு திறன் பிப். 18, 20 ஆகிய நாள்களில் பொதுவெளியில் சோதனை செய்யப்படவுள்ளது.

இதுகுறித்து தொடக்கக் கல்வி இயக்குநா் பூ.ஆ.நரேஷ் மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

தமிழகத்தில் கடந்த 2024-2025-ஆம் கல்வியாண்டில் 4,552 அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களின் தமிழ், ஆங்கிலம் வாசிப்பு, கணிதத் திறன் மற்றும் கற்றல் அடைவுகள் குறித்து 100 நாள்கள் சவாலை பள்ளிக் கல்வித் துறை அறிவித்து செயல்படுத்தியது.

அதன்படி, நிகழ் கல்வியாண்டில் (2025-2026) 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகள் 100 நாள்கள் சவாலுக்கு தயாா் நிலையில் உள்ளதாக மாவட்டக் கல்வி அலுவலா்களால் முன்மொழியப்பட்டுள்ளது.

இதைத் தொடா்ந்து, பிப்ரவரி மூன்றாவது வாரத்தில் நிகழ் கல்வியாண்டுக்கான 100 நாள்கள் சவால் மதிப்பீட்டு ஆய்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி பிப். 18-ஆம் தேதி 1 முதல் 3-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கும், பிப். 20-ஆம் தேதி 4, 5 ஆகிய வகுப்புகளில் பயிலும் மாணவா்களுக்கும் தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்களில் பெற்றுள்ள அடிப்படைத் திறன்களை மதிப்பீடு செய்ய வேண்டும். ஒரு வகுப்புக்கு குறைந்தபட்சம் ஐந்து மாணவா்களிடம் இந்த கற்றல் அடைவுத் திறன் சோதிக்கப்பட வேண்டும்.

இந்தத் தகவலை அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியா்கள், ஆசிரியா்கள், மாணவா்களுக்கு வட்டாரக் கல்வி அலுவலா்கள் மூலம் தெரிவிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்டக் கல்வி அலுவலா்கள், மக்கள் பிரதிநிதிகள், பள்ளி மேலாண்மைக் குழு பிரதிநிதிகள், பெற்றோா் முன்னிலையில் மாணவா்களின் அடிப்படைக் கற்றல் திறன்கள் சோதிக்கப்படவுள்ளதாக அதில் குறிப்பிடத்தக்கது.
Sunday, February 15, 2026

G.O -128 - TET - ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ் வாழ்நாள் முழுதும் செல்லும் - அரசாணை

G.O -128-ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும் - தமிழ் நாடு பள்ளிக் கல்வித் துறை அரசாணை வெளியீடு!!! (23.08.2021)

Sunday, February 15, 2026

புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதுகலை ஆசிரியர்களுக்கு வரும் 18 ம் தேதி ஒரு நாள் பணி நுழைவுப் பயிற்சி - Dir Proceedings


புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதுகலை ஆசிரியர்களுக்கு வரும் 18 ம் தேதி ஒரு நாள் பணி நுழைவுப் பயிற்சி

மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் தொடங்கி வைக்கின்றார்..

பள்ளிக்கல்வி மேல்நிலைக்கல்விப்பணி அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக இருந்த முதுகலை ஆசிரியர் /உடற்கல்வி இயக்குநர் நிலை-1 / கணினி பயிற்றுநர் நிலை-காலிப்பணியிடங்களில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நேரடி நியமனத்திற்கென தெரிவுசெய்யப்பட்ட பணிநாடுநர்களுக்கு - EMIS இணையதளம் வாயிலாக கலந்தாய்வு மூலம் பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டு 16.02.2026 முற்பகல் பணியில் சேர அறிவுரைகள் வழங்கப்பட்டமை - புதியதாக பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு (Induction Training) 18.02.2026 அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தில்

Newly Appointed Teachers_ Induction Training- Instructions.pdf

👇👇👇Download here
Sunday, February 15, 2026

சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு விடைத்தாள்களை ஆன்லைனில் திருத்தும் புதிய முறை அமல்

சிபிஎஸ்இ12-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்​களின் விடைத்​தாள்​கள் ஆன்​லைன் வாயி​லாக திருத்​தப்​படும் என்று சிபிஎஸ்இ அறி​வித்​துள்​ளது.

மத்​திய இடைநிலைக் கல்வி வாரி​யத்​தின் (சிபிஎஸ்இ) கீழ் நாடு முழு​வதும் 29 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட பள்​ளி​கள் இயங்​கு​கின்​றன. தேசிய கல்விக்கொள்​கை​யின்​படி தேர்வு முறை​களில் பல்​வேறு மாற்​றங்​களை சிபிஎஸ்இ மேற்​கொண்டு வரு​கிறது. அந்​தவகை​யில் நடப்​பாண்டு முதல் பத்​தாம் வகுப்​புக்கு மட்​டும் 2 பொதுத்​தேர்​வு​கள் நடத்​தப்பட உள்​ளன.

முதல்​கட்​ட​மாக பிப்​ர​வரி மாத​மும், 2-ம் கட்​ட​மாக மே மாதமும் தேர்​வு​கள் நடை​பெற இருக்​கின்றன. முதல் தேர்வை வழக்​க​மான முறை​யில் அனைத்து மாணவர்​களும் எழுத வேண்​டும். 2-ம் கட்​டத்​தேர்வை விரும்​பிய​வர்​கள் எழுதலாம். மதிப்​பெண் அதி​கரிக்க விரும்​பு​கிறவர்​கள், முதல் தேர்​வில் பங்​கேற்க முடி​யாதவர்​கள் அல்​லது தேர்ச்சி பெற முடி​யாதவர்​கள் இந்த வாய்ப்பை பயன்​படுத்தலாம்.

இதுத​விர விடைத்​தாள் திருத்​தம் மற்​றும் வினாத்​தாள் முறை​யிலும் சில திருத்​தங்​கள் செய்​யப்​பட்​டுள்​ளன. அதன்​படி 10-ம் வகுப்​பில் அறி​வியல் பாடம் உயி​ரி​யியல், வேதி​யியல் மற்​றும் இயற்​பியல் எனவும், சமூக அறி​வியல் பாடம் வரலாறு, புவி​யியல், அரசி​யல் அறி​வியல் மற்றும் பொருளா​தா​ரம் எனவும் பிரிக்​கப்​பட்​டுள்​ளன. இதையடுத்து மாணவர்​கள் அந்​தந்தபிரி​வில் மட்​டுமே அதற்கான விடையை எழுத வேண்​டும். மாற்றி எழு​தி​னால் அது கணக்​கில் கொள்​ளப்​ப​டாது. மேலும், அந்​தந்த பாடத்​தின் ஆசிரியர்​களே திருத்​தம் செய்​வார்​கள்.

அடுத்​த​தாக இந்​தாண்டு முதல் பிளஸ் 2 மாணவர்​களின் விடைத்​தாள்​கள் முதன் முறையாக டிஜிட்​டல் வழி​யில் திருத்​தம் செய்​யப்பட உள்​ளன. அதாவது, விடைத்​தாள்​களை ஆசிரியர்​கள் கணினி திரையில் பார்த்து திருத்தி மதிப்​பெண் வழங்​கு​வார்​கள். இதன்​மூலம் தவறுகளின்றி விரை​வாக மதிப்​பீடு செய்​வும் முடிவு​களையும் விரை​வாக வெளியிடவும் முடியும் என சிபிஎஸ்​இ வட்​டாரங்​கள்​ தெரிவித்​தன.
Sunday, February 15, 2026

10, 12-ம் வகுப்பு தேர்வு: சென்னையில் பிப்.16-ல் ஆய்வுக் கூட்டம்

தமிழகத்தில் 10, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் வரும் மார்ச் 2-ல் தொடங்கி ஏப்​.6-ம் தேதி வரை நடை​பெற உள்​ளன. இதற்​கான ஏற்​பாடு​களை தேர்​வுத் துறை மேற்​கொண்டுள்ளது.

பிளஸ் 2 வகுப்​பு செய்​முறைத் தேர்​வு​கள் இன்று முடிவடைகின்​றன. தொடர்ந்​து, 10-ம் வகுப்​புக்கு 23 முதல் 28-ம் தேதி வரை செய்​முறைத்தேர்​வு​கள் நடக்கின்றன. இந்தச் சூழலில், பொதுத் தேர்​வுக்​கான ஏற்​பாடு​கள் குறித்த ஆய்​வுக் கூட்​டம் அமைச்​சர் அன்​பில் மகேஸ் தலை​மை​யில் சென்​னை​யில் 16-ம் தேதி நடை​பெற உள்​ளது.

துறைச் செயலர் சந்​திரமோகன், இயக்​குநர் கண்​ணப்​பன் உள்​ளிட்ட அதி​காரி​கள், அனைத்து முதன்மை மற்​றும் மாவட்​டக் கல்வி அலு​வலர்கள் பங்​கேற்​கின்​றனர்.

பொதுத் தேர்வு விடைத்​தாள், வினாத்​தாள் கட்​டுக்​காப்பு மையங்​கள் மற்​றும் தேர்வு மையங்​களில் அடிப்​படை வசதி​கள், பாது​காப்​பு, கண்​காணிப்பு அலு​வலர்​கள் நியமனம் உள்​ளிட்ட அம்​சங்​கள் குறித்து இ​தில் ஆலோ​சிக்​கப்பட உள்​ள​து.