Wednesday, February 18, 2026
அரசு / அரசு உதவிபெறும் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பிக்கவும் பணிச்சான்றுகள் வழங்குவதற்கு தேவையான ஆவணங்கள் இணைப்பது குறித்து அறிவுரை
TET FOR WORKING TEACHERS ONLINE APPLICATION-2026 Direct Link

💢 பணிபுரியும் ஆசிரியர்களுக்கான தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு - 2026
🟢தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு மட்டும் இத்தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது.
🟢விண்ணப்பதாரர்களுடைய
சரியான EMIS ID எண்ணை பூர்த்தி செய்ய வேண்டும். இவ்விவரங்கள் ஆசிரியர்
தேர்வு வாரியத்தினால் பின்னர் சரிபார்க்கப்படும்.
குறிப்பு:
🔴கொடுக்கப்பட்ட EMIS ID எண் தவறாக இருப்பின், அல்லது
🔴ஆசிரியராக
பணியில் சேர்ந்த நாள் 01.09.2025 அன்றோ அல்லது அதற்கு முன்பாகவோ
இல்லையெனில் தங்களுடைய விண்ணப்பம் செல்லாததாகக் கருதி நிராகரிக்கப்படும்.
- 🔊TRB அறிவிப்பு
TET FOR WORKING TEACHERS ONLINE APPLICATION - 2026 Direct Link
ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் சிறப்பு டெட் தேர்வு விண்ணப்பிக்கும் பகுதி தற்போது Open செய்யப்பட்டுள்ளது.
👇👇👇👇
TRB Direct Link - Click here
பள்ளிக் கல்வித் துறையின் நலத்திட்டங்களை கண்காணிக்க மாவட்ட வாரியாக உயர் அலுவலர்களை நியமனம் செய்து பள்ளிக் கல்வித் துறை செயலாளர் உத்தரவு!

துறைமுக மேல்நிலைப்பள்ளி - ஆசிரியர் தேவை காலிப்பணியிடங்கள் அறிவிப்பு
TET சான்றிதழில் உள்ள பிழைகளை சரி செய்யும் வசதி ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 18.02.2026
Hard work writes your destiny.
கடின உழைப்பே உங்கள் விதியை எழுதும்.
இரண்டொழுக்க பண்புகள் :
பொன்மொழி :
வணங்க ஆரம்பிக்கும் போதே வளர ஆரம்பிப்போம் - கோல்ட்ரிட்ஜ்
பொது அறிவு :
English words :
Famished-starving
Slugishly-slowly
தமிழ் இலக்கணம்:
அறிவியல் களஞ்சியம் :
பூஞ்சைகள் பிளாஸ்டிக்கை உடைக்கும் சரியான செயல்முறை இன்னும் முழுமையாக புரிந்து கொள்ளப்படவில்லை. இருப்பினும், பூஞ்சைகள் பிளாஸ்டிக்கை எளிய மூலக்கூறுகளாக சிதைக்கின்றன, பின்னர் அவை உறிஞ்சி அல்லது வெளியேற்றும் என்று நம்பப்படுகிறது.
பிப்ரவரி 18
![]() |
| மைக்கலாஞ்சலோ |
நீதிக்கதை
நன்மை தீமை இரண்டையும் ஏற்றுக்கொள்
ஒரு வயதான விவசாயி தன் வயலில் பாடுபட்டு உழைத்து அதில் வரும் சொற்பமான வருமானத்தில் வாழ்ந்துகொண்டிருந்தார். ஒரு நாள் அவர் வளர்த்து வந்த குதிரை காணாமல் போய்விட்டது. தகவலைக் கேள்விப்பட்ட அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் என்ன ஒரு துரதிர்ஷட நிலை? என்று பரிதாபமாக விசாரித்தனர். அவர்களின் ஆறுதலுக்கு விவசாயி மௌனமாக இருக்கலாம் என்று பதிலளித்தார்.
அடுத்த நாள் தொலைந்துப்போன அவருடைய குதிரை தன்னுடன் மூன்று குதிரைகளை அழைத்து வந்தது. இதை ஆச்சர்யமாக பார்த்த அக்கம் பக்கத்தினர், நீ ரொம்ப அதிர்ஷ்டசாலி, இப்பொழுது நான்கு குதிரை உனக்கு கிடைச்சிடுச்சு என்றனர். தனக்குக் கிடைத்த அதிர்ஷ்டத்தைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் மறுபடியும் இருக்கலாம் என்று கூறினார் விவசாயி.
ஒரு வாரத்துக்குப் பிறகு, விவசாயியின் மகன் குதிரையை வேகமாக ஓட்டிச்சென்று தவறுதலாக கீழே விழுந்து காலை உடைத்துக்கொண்டான். இப்பொழுது அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள், விவசாயிடம், உனக்கு ஒரு நல்லது நடந்தால், அடுத்து ஒரு கெட்டது நடக்குதே. உன் பையன் எழுந்து நடக்க பத்து மாதத்திற்கும்மேல் ஆகும் போல இருக்கிறதே, ரொம்ப கஷ்டமான நிலைமை என்று கூறி ஆதங்கப்பட்டனர். அப்போழுதும் அந்த விவசாயி பெரிதாக வருந்தாமல் இருக்கலாம் என்று அதே பதிலைக் கூறினார்.
ஒரே வாரத்தில் அந்த நாட்டில் போர் வந்துவிட்டது. வீட்டில் இருக்கும் எல்லா இளைஞர்களும் கட்டாயம் போரில் கலந்துகொள்ள வேண்டும் என்று கட்டளை பிறப்பிக்கப்பட்டது. வீடு வீடாக ராணுவத்தினர் புகுந்து இளைஞர்களை அழைத்துச் சென்றனர். ஆனால், அந்த ஏழை விவசாயியின் மகனுக்குக் கால் உடைந்து இருந்ததால் அவனை மட்டும் அழைத்துச் செல்லவில்லை. இதைக் கண்டு ஊர் மக்கள் அந்த விவசாயியின் அதிர்ஷ்டத்தைக் கண்டு புகழ்ந்தனர். இப்போதும் அந்த விவசாயி இருக்கலாம் என்று கூறினார்.
அந்த விவசாயி ஒவ்வொருமுறையும் கூறும் பதிலைக் கேட்டுக் கொண்டிருந்த அவருடைய நண்பர், அந்த விவசாயியைப் பார்த்து, உனக்கு நல்லது நடந்தாலும், கெட்டது நடந்தாலும் இருக்கலாம் இருக்கலாம் என்றே சொல்கிறாயே ஏன்? என்று கேட்டார்.
அதற்கு அந்த விவசாயி நல்லது, கெட்டது இரண்டும் நாணயத்தின் இருபக்கங்கள். யாருக்கும் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். சுகம், துக்கம் இவை இரண்டும் ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையவை என்பதை உணர்ந்தாலே போதுமானது என்றார்.
இன்றைய செய்திகள்
Tuesday, February 17, 2026
பள்ளிக் கல்வித் துறையில் புதிதாக பணியேற்றுள்ள 1709 முதுகலை ஆசிரியர்களின் சொந்த மாவட்ட விவரங்கள் பாடவாரியாக வெளியீடு!

தேர்வுப்பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கான நிலையான செயல்பாட்டு நெறிமுறைகள் - மார்ச்/ஏப்ரல் 2026 வெளியீடு.

‘10,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாற்றம் இல்லை’.. அன்பில் மகேஷ் விளக்கம்

Group 2 தேர்வுக்கான Hall Ticket வெளியீடு
குரூப்-2 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை இணையதளத்தில் டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ளது. குரூப்-2 பணியிடங்களுக்கான தாள்-II பொது அறிவு தேர்வு வரும் 22ம் தேதி முற்பகல் நடைபெற உள்ளது. https://www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது
தமிழ்நாடு அரசின் இடைக்கால வரவு செலவுத் திட்ட மதிப்பீடு - அறிக்கை!!!

தமிழ்நாடு அரசின் இடைக்கால வரவு செலவுத் திட்ட மதிப்பீடு - PART I
TN Interim Budget -Part-1-Tamil-Copy.pdf
👇👇👇
பீகார் மாநிலத்தில் ஆசிரியர் தகுதி தேர்வில் அனைத்து பிரிவை சார்ந்த பெண்களுக்கும் தேர்ச்சி சதவீதம் 40 % மட்டுமே
BIHAR - SHE MODEL
பீகார் மாநிலத்தில் ஆசிரியர் தகுதி தேர்வில் அனைத்து பிரிவை சார்ந்த பெண்களுக்கும் தேர்ச்சி சதவீதம் 40 % மட்டுமே....
*150 மதிப்பெண்களுக்கு 60 மதிப்பெண்கள் மற்றும் அதற்கு மேல் எடுத்த பெண் ஆசிரியர்கள்* அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பு!!!
For the Bihar TET (specifically STET 2025/2026), the minimum passing marks for women candidates are set at 40%, which translates to 60 marks out of 150. This 40% qualifying criteria applies to all female candidates, regardless of their specific social category (General, OBC, etc.) as per recent regulations.
Key Details for Bihar STET (Female Candidates):
Total Marks: 150
Minimum Qualifying Percentage: 40%
Passing Marks (Numerical): 60
Applicable To: All women candidates
Exam Structure: Objective-type (MCQ) with no negative marking
👇👇👇👇
Bihar-STET-2025-Official-Notification - Download here
தமிழ்நாடு இடைக்கால பட்ஜெட் 2026 - முக்கிய அறிவிப்புகள் உடனுக்குடன் ...

நெடுஞ்சாலை
நடப்பாண்டில் 253 கி.மீ. நீளமுள்ள சாலைகளை 1,647 கோடி மதிப்பீட்டில் நான்கு வழித்தட சாலைகளாக அகலப்படுத்துவதற்கான பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன.
நடப்பாண்டில் 1057 கி.மீ. நீளமுள்ள சாலைகள் 1000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தரம் உயர்த்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த இடைக்கால வரவு - செலவுத் திட்ட மதிப்பீடுகளில் நெடுஞ்சாலைகள் மற்றும் மற்றும் சிறு துறைமுகங்கள் துறைக்கு ரூ.21,132 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
போக்குவரத்துத் துறைக்கு
தமிழக இடைக்கால பட்ஜெட்டில் போக்குவரத்துத் துறைக்கு ரூ.13,062 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
ஓய்வூதியத் திட்டம்
தமிழ்நாடு இடைக்கால பட்ஜெட்டில் அரசு ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்துக்கு ரூ. 11,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சுற்றுலா
சுற்றுலாவுக்காக 30.79 கோடி பேர் தமிழ்நாடு வந்துள்ளனர்.
2024ஆம் ஆண்டில் 30.79 கோடி சுற்றுலா பயணிகள் எண்ணிக்கையுடன் நாட்டிலேயே தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது.
போக்குவரத்துத் துறைக்கு ரூ.13,062 கோடி
தமிழ்நாடு இடைக்கால பட்ஜெட்டில் போக்குவரத்துத் துறைக்கு ரூ. 13,062 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், தமிழ்நாடு அரசின் மகளிர் விடியல் பேருந்து பயணத் திட்டத்துக்கு ரூ. 1,722 கோடி ஒதுக்கீடு செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திருக்கோயில் பணிகள்
19 முக்கிய கோயில்களில் ரூ.1000 கோடி மதிப்பிலான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
5 ஆண்டுகளில் 4,180 திருக்கோயில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள 12,931 திருக்கோயில்களில் ரூ.8,100 கோடியில் திருப்பணிகள்!
மெட்ரோவுக்கு ரூ. 63,246 கோடி
மூன்று வழித்தடங்களில் ரூ. 63,246 கோடி மதிப்பீட்டில் 118.9 கி.மீ. தொலைவுக்கான சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகள் விரைந்து நடைபெற்று வருகின்றன.
பூந்தமல்லி புறவழிச் சாலை முதல் போரூர் வரையிலான மெட்ரோ வழித்தடம் வடபழனி மெட்ரோவுடன் இணைக்கப்பட்டுள்ளன. விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும்
மின்தேவை
மின்சார தேவையைக் கருத்தில் கொண்டு எரிசக்தித் துறைக்கு ரூ.18,091 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு!
தகவல் தொழில்நுட்பத்துறைக்கு ரூ.219 கோடி ஒதுக்கீடு
தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் இருந்து தகவல் தொழில்நுட்ப ஏற்றுமதி பதிவாகியுள்ளது.
திருச்சி, மதுரை, ஒசூரில் புதிய டைடல் பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
ரூ.388 கோடியில் புதிய மினி டைடல் பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது
போக்குவரத்துத் துறை
போக்குவரத்துத் துறைக்கு ரூ.13,062 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மகளிர் விடியல் பயணம் திட்டத்துக்கு ரூ.1722 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
மக்கள் நல்வாழ்வு துறை
இடைக்கால பட்ஜெட்டில் மக்கள் நல்வாழ்வு துறைக்கு ரூ.22,090 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு!
வீட்டு மனை பட்டா
கடந்த 5 ஆண்டுகளில் ஆட்சேபனையற்ற அரசு புறப்போக்கும் நிலங்களில் வசிக்கும் 77,800 பேருக்கு வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டுள்ளது.
புதுமைப் பெண் - தமிழ்ப் புதல்வன்
புதுமைப் பெண் திட்டத்தில் 6.95 லட்சம் மாணவிகளும், தமிழ்ப் புதல்வன் திட்டங்களில் 5.40 லட்சம் மாணவர்களும் என ஒட்டுமொத்தமாக 12 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயனடைந்துள்ளனர்
ரூ.374 கோடியில் நதிக்கரை மேம்பாடுத் திட்டம்
காவிரி, வைகை, நொய்யல், தாமிரபரணி ஆறுகளில் கழிவுநீர் கலப்பதை தடுத்து, கரையோரம் பூங்காஆகியவை அமைத்து நதிக்கரை மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள ரூ.374 கோடி ஒதுக்கீடு செய்யப்படகிறது.
துறை வாரியாக
இளைஞர் நலன், விளையாட்டுத்துறைக்கு ரூ.718 கோடி ஒதுக்கீடு
உயர்கல்வித் துறைக்கு ரூ.8,505 கோடி ஒதுக்கீடு
கலைஞர் கனவு இல்லம்
2030 ஆம் ஆண்டுக்குள் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டப்படும் என்ற இலக்குடன் தொடங்கப்பட்ட கலைஞர் கனவு இல்லத் திட்டத்தில் இதுவரை 1.71 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
மேலும், 29,000 வீடுகள் கட்டுமானப் பணியில் இருக்கின்றன.
2001 வரை தமிழக அரசால் கட்டப்பட்ட 1.14 லட்சம் வீடுகள் ரூ. 969 கோடியில் புனரமைக்கப்பட்டுள்ளன.
பள்ளிக் கல்வித்துறை
தமிழக அரசு தாக்கல் செய்திருக்கும் இடைக்கால பட்ஜெட்டில் பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.48,534 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் அறிவிப்பு!
மகத்தான சாதனை
விடியல் பேருந்து திட்டத்தில் 888 கோடி முறை மகளிர் பயணம் செய்து பயனடைந்துள்ளனர்.
6 லட்சம் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1.40 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.
19 தோழி விடுதிகள் அமைக்கப்பட்டுள்ளன.
மகளிர் நலன் காக்கும் இத்தகையை திட்டங்களை பல மாநிலங்கள் பின்பற்ற தொடங்கி உள்ளன.
மகப்பேறு இறப்பு விகிதம் மற்றும் சிசு இறப்பு விகிதம் தேசிய சாராசரியை விட தமிழ்நாட்டில் குறைவாக உள்ளது.
பெண் ஓதுவார் நியமனம் நமது அரசின் மகத்தான சாதனை
888 முறை பயணம்
மாநகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் விடியல் பேருந்து திட்டத்தில் 888 கோடி முறை பயணம் செய்து பெண்கள் பயனடைந்துள்ளனர்.
மேலும், மாநிலம் முழுவதும் 6 லட்சம் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ. 1.40 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.
மகப்பேறு இறப்பு விகிதம் மற்றும் சிசு இறப்பு விகிதம் தேசிய சாராசரியை விட தமிழ்நாட்டில் குறைவாகவே உள்ளது.
ரூ.285 கோடியில் அருங்காட்சியகங்கள்
சோழர் அருங்காட்சியம், நவாய் அருங்காட்சியம், நொய்யல் அருங்காட்சியம் என்று மொத்தம் ரூ.285 கோடியில் தமிழகத்தில் அருங்காட்சியங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
உலகத் தரத்தில் கீழடி மற்றும் பொருநை அருங்காட்சியம் திறந்து வைக்கப்பட்டு பெரிய வரவேற்பை பெற்றுள்ளன.
பட்ஜெட் தாக்கல்
பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது.
தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.
முக்கிய அறிவிப்புகள் வெளியாகும்
அனைத்துத் தரப்பு மக்களின் எதிா்பாா்ப்புகளையும் பூா்த்தி செய்யும் வகையில் பல புதிய திட்டங்கள் இடம்பெறும் என்று தெரிகிறது. குறிப்பாக, பெண்கள், விவசாயிகள், இளைஞா்கள், சிறு வணிகா்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பயனளிக்கும் திட்டங்கள் இடம்பெறக்கூடும்.
இடைக்கால பட்ஜெட் ஏன்?
ஒவ்வோா் ஆண்டும் பிப்ரவரி இறுதி அல்லது மாா்ச் முதல் வாரத்தில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதற்கான சட்டப்பேரவைக் கூட்டத் தொடா் நடைபெறுவது வழக்கம். நிகழாண்டில் பேரவைத் தோ்தல் நடைபெற உள்ளதால் இடைக்கால நிதிநிலை அறிக்கையாக தாக்கல் செய்யப்படுகிறது.
இடைக்கால பட்ஜெட்
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2026-27ஆம் ஆண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சா் தங்கம் தென்னரசு தாக்கல் செய்து வருகிறார்.
தோ்தல் ஆண்டு என்பதால் இடைக்கால நிதிநிலை அறிக்கையில், பல்வேறு சலுகை அறிவிப்புகள் இடம்பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நலன் குறித்து இன்றைய பட்ஜெட்டில் தமிழக அரசு வெளியிடப்பட்டுள்ள முக்கிய அறிவிப்புகள்
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நலன் குறித்து இன்றைய பட்ஜெட்டில் தமிழக அரசு வெளியிடப்பட்டுள்ள முக்கிய அறிவிப்புகளின் தொகுப்பு...
👇👇👇👇
Download here
RH / RL - Restricted Holidays 2026 - வரையறுக்கப்பட்ட விடுப்பு 2026

JEE முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியீடு
சுற்றுச் சூழல் ஒருங்கிணைப்பாளர்களுக்கு மாறுதல் வழங்குவது நிர்வாகக் காரணங்களால் ரத்து செய்து ஆணை வழங்குதல் - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

2026-2027ஆம் நிதியாண்டுக்கான இடைக்காலப் பட்ஜெட்டை நாளை தாக்கல்...






