Breaking

Thursday, February 5, 2026

Thursday, February 05, 2026

Income Tax | Rebate | Marginal Relief : New Regimeன் பலன்கள் என்னென்ன? யாருக்கு?



Income Tax | Rebate | Marginal Relief : New Regimeன் பலன்கள் என்னென்ன? யாருக்கு?*

_✍🏼செல்வ.ரஞ்சித் குமார்_

நடப்பு (2025-26) நிதியாண்டில், New Regimeல் எதுவரை வரி உண்டு, Rebate, Marginal Relief எனும் வரித் தள்ளுபடிகள் எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்பதை இப்பதிவில் வரிசைக்கிரமமாகத் தெரிந்து கொள்வோம்.

`Total Gross Income :`

Pay + DA + All other Allowances + EL Surrender + Any Pay Arrear = Total Gross Income.

_(கூடுதலாக Savings & Investmentற்கான வட்டி ITRன் போது தானாகவே வருமானக் கணக்கில் சேர்க்கப்படும்)_


`Net Taxable Income :`

இந்த Total Gross Incomeல் இருந்து,


1. மாற்றுத்திறனாளி போக்குவரத்துப் படி

2. Standard Deduction Rs.75,000/-


உள்ளிட்டவற்றைக் கழித்துவரும் தொகையே Net Taxable Income. இத்தொகை 10ன் முழுமையாக்கப்பட்டு வரிவிதிப்புக் கணக்கீட்டிற்கு எடுத்துக்கொள்ளப்படும்.


`Tax Slab :`


Net Taxable Incomeற்கு 2025-26 நிதியாண்டில் பின்வருமாறு வரி விதிக்கப்படுகிறது.


Rs.4,00,000 வரை - வரியில்லை

Rs.4,00,001 to Rs.8,00,000 - 5%

Rs.8,00,001 to Rs.12,00,000 - 10%

Rs.12,00,001 to Rs.16,00,000 - 15%

Rs.16,00,001 to Rs.20,00,000 - 20%

Rs.20,00,001 to Rs.24,00,000 - 25%

Rs.24,00,000க்கு மேல் - 30%



`Rebate :`


Net Taxable Income Rs.12,00,000/-க்குள் இருப்பின் அதற்குண்டான வருமானவரி U/S.87Aன் கீழ் தள்ளுபடி செய்யப்படும்.


அதாவது Net Taxable Income Rs.12,00,000/- எனில்,

முதல் 4,00,000 × 0% = 0

2வது 4,00,000 × 5% = 20,000

3வது 4,00,000 × 10% = 40,000

என்று மொத்தமாக Rs.60,000/- வரி வரும். இந்தத் தொகையை Rebate ஆகக் கழிப்பதன் மூலம் வரி சுழியமாக்கப்படும். இவ்வாறுதான் 12 இலட்சம் வரை Tax இல்லை என்று கூறப்படுகிறது.


`Marginal Relief :`


Net Taxable Income மேற்படி Rebate வரம்பைவிட ரூ.10 கூடி Rs.12,00,010/- என்று வருமானால் Rebate கிடையாது என்பதால் அணற்கான வரியாக Rs.60,002/-ஐ செலுத்தியாக வேண்டும். Marginல இருந்து வெறும் 10 ரூவா கூடுனது குத்தமா? என்று தோன்றலாம். இக்குறையைப் போக்கத்தான் கடந்த 3 ஆண்டுகளாக Marginal Relief என்ற முறை நடைமுறையில் உள்ளது.

இதன்படி, Tax Marginஆன ரூ.12,00,000/-ஐவிடக் கூடுதலாக எவ்வளவு வருமானம் ஈட்டியுள்ளோமோ அதை மட்டும் வரியாகக் கட்டினால் போதும். மீதத்தொகை U/S.87Aன் கீழ் Marginal Relief என்று கழிக்கப்பட்டுவிடும்.

உதாரணமாக Net Taxable Income Rs.12,00,010/- என்றால், 12 இலட்சத்தைவிடக் கூடுதலாக உள்ள அந்த 10 ரூபாயை மட்டும் அப்படியே வரியாகக் (+ 4% Cess) கட்டிக் கொள்ளலாம்.

இந்த Marginal Relief முறை என்பது Net Taxable Income Rs.12,70,580/- வரை பயன்படுத்தப்படும்.

இதற்கு மேலான தொகை, அதாவது Net Taxable Income Rs.12,70,590/- எனில் இந்தக் கூடுதல் தொகையும், வழக்கமான கணக்கீட்டிற்கான வரியும் கிட்டத்தட்ட சமமாக வந்துவிடும். அதாவது,

Rs.4,00,000 = 0% = 0

Rs.4,00,000 = 5% = 20,000

Rs.4,00,000 = 10% = 40,000

Rs.70,590. = 15% = 10,589

மொத்த வரி = 70,589


எனவே, Rs.12,70,580/-ற்கு மேலான தொகைக்கு Marginal Reliefன் தேவை இருக்காது.


`Marginal Relief Formula :`


12 இலட்சத்துக்கு மேலே வரும் தொகையைக் கட்டினால் போதுமென்றால், அதற்கென ஒரு கணக்கீடு இருக்க வேண்டுமல்லவா? இருக்கிறது.

Marginal Relief = Actual Tax - Tax margin Excess Income

இந்த Marginal Reliefஐக் கண்டுபிடித்து அதை மொத்த வரியில் கழித்துவிட்டால் கட்ட வேண்டிய வரி கிடைத்துவிடும்.

உதாரணமாக Net Taxable Income Rs.12,10,000/- எனில்,

Rs.12,10,000/-ற்கான Actual Tax = 61,500

12Lஐ விடக் கூடுதல் வருமானம் = Rs.10,000

ஃ Marginal Relief (61,500 - 10,000) = Rs.51,500

ஆக, Net Taxable Income Rs.12,10,000/-க்கான நிகர வருமான வரி என்பது,

= Actual Tax - Marginal Relief

= 61,500 - 51,500

= Rs.10,000/-


2025-26 நிதியாண்டிற்கான EL Surrender உள்ளிட்ட உங்களது ஒட்டுமொத்த ஆண்டு வருமானத்தையும், அதற்குண்டான வருமானவரியையும் 100% துல்லியமாகத் தெரிந்து கொள்ள விரும்பினால், கீழே இணைப்பில் உள்ள அறிவுச்சாளரம் Income Tax Calculator 2026 உதவியாக இருக்கும். தேவையெனில் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.


https://arivuchaalaram.blogspot.com/2025/04/it-calculator-fy-2025-26.html
Thursday, February 05, 2026

ஜேஇஇ முதன்மைத் தேர்வு - தற்காலிக விடைக்குறிப்பு வெளியீடு



படிப்பு வழிகாட்டிகள்

பொறியியல் படிப்புக்கான ஜேஇஇ முதன்மைத் தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்பை என்டிஏ தற்போது வெளியிட்டுள்ளது.

நம் நாட்டில் ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் (ஜேஇஇ) தேர்ச்சி பெறவேண்டும். இவை ஜேஇஇ முதன்மைத் தேர்வு, பிரதானத் தேர்வு என இரு பிரிவாக நடைபெறும். இதில் முதன்மைத் தேர்வானது தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் ஆண்டுதோறும் 2 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி 2026-27-ம் கல்வியாண்டுக்கான ஜேஇஇ முதல்கட்ட முதன்மை தேர்வு கடந்த ஜனவரி 21 முதல் 29-ம் தேதி வரை நடத்தப்பட்டது. இந்த தேர்வை நாடு முழுவதும் 12 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து தேர்வுக்குரிய தற்காலிக விடைக்குறிப்பை என்டிஏ இன்று வெளியிட்டது. அவற்றை மாணவர்கள் jeemain.nta.nic.in என்ற தளத்தில் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இதில் ஏதேனும் ஆட்சேபனைகள் இருப்பின் அதன்விவரங்களை உரிய ஆதாரங்களுடன் மேற்கண்ட தளத்தில் பிப்ரவரி 6-க்குள் தெரிவிக்க வேண்டும்.

மேலும், கூடுதல் விவரங்களை /nta.ac.in/ என்ற வலைத்தளத்தில் அறியலாம். இதில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் மாணவர்கள் 011-40759000/69227700 என்ற தொலைபேசி எண் அல்லது jeemain@nta.ac.in எனும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்புக் கொண்டு விளக்கம் பெறலாம் என்று என்டிஏ தெரிவித்துள்ளது.
Thursday, February 05, 2026

TET தேர்வு 2025 - தேர்ச்சி சான்றிதழில் பிழைகள் இருப்பின் எப்படி சரிசெய்வது?

ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியம்

TET தேர்வு 2025 - பின்வருவனவற்றில் மாற்றத்திற்கான கோரிக்கை:-

1. ஆரம்ப மாற்றம்

2. பிறந்த தேதி மாற்றம்

3. எழுத்து மாற்றம்

4. பாலின மாற்றம்

விண்ணப்ப நகல், சான்றுகள் மற்றும் சலான் ரூ.200/-க்கு பின்வரும் வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும்.

பணம் செலுத்திய நகலுடன் உங்களது சான்றிதழில் உள்ள பிழையினை குறிப்பிட்டு, சான்றிதழ் நகல் ஒன்றும் இணைத்து ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு அனுப்ப வேண்டும்.

Thursday, February 05, 2026

மதிப்பீட்டு புலம் - Future Ready-பிப்ரவரி-2026

மதிப்பீட்டு புலம் - Future Ready-பிப்ரவரி-2026

வகுப்பு- 6 முதல் 9ஆம் வகுப்பு வரை

*வினாத்தாள் பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாள்கள் : 03.02.26 - 09.02.26.

இணையதள முகவரி :

https://exam.tnschools.gov.in.

💧அனைத்து அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் அடைவுத்தேர்வு மற்றும் உயர் சிந்தனை வினாக்களை எதிர்கொள்ளும் திறனை மேம்படுத்தும் பொருட்டு *Future Ready* திட்டம் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

💧 மாணவர்கள் *NAS/SLAS போன்ற அடைவுத் தேர்வுகளை* எளிதாக எதிர்கொள்ளவதற்கு ஏதுவாக *Future Ready* வினாக்கள் வடிவமைக்கப் பட்டுள்ளது.

💧அனைத்து அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு Future Ready வினாத்தாள்களை பதிவிறக்கம் செய்து பயிற்சி அளித்து அவர்களுக்கு உயர் சிந்தனை வினாக்களை எதிர்கொள்ளும் திறனை வளர்த்திட வேண்டும்.

💧 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்கள் வினாக்களை அனைத்து மாணவர்களும் பயன்பெறும் வகையில் வகுப்பறை செயல்பாடாக மேற்கொள்ள வேண்டும்.

அனைத்து அரசு நடுநிலை ,உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் Future Ready வினாத்தாள்கள் பதிவிறக்கம் செய்யப்பட்டு பயிற்சி அளிக்கப்படுவதை மாவட்ட கல்வி அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் பள்ளி பார்வையின் போது உறுதி செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
Thursday, February 05, 2026

அரசு கல்லூரிகளில் 426 விரிவுரையாளர் பணியிடங்கள்.. எப்படி விண்ணப்பிப்பது? முழு விவரம் இதோ!

தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 426 விரிவுரையாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு எப்படி விண்ணபிப்பது? என்பது குறித்து பார்க்கலாம்.

அரசு கலை மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் 426 விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் வெளியிட்ட அறிவிப்பில், 'தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலுக்கிணங்க 2025-26ஆம் கல்வியாண்டிற்கு பாடப்பிரிவுகளில் 15,000க்கும் மேற்பட்ட கூடுதல் இடங்களும், புதிய பாடப்பிரிவுகளும் தோற்றுவிக்கப்பட்டன.

தமிழக அரசின் அறிவிப்பு

மேலும், ஏழை எளிய மாணாக்கர்களின் உயர்கல்வித் தேவையினை பூர்த்தி செய்ய 37 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளும் தொடங்கப்பட்டுள்ளன.

கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்களில் உடனடியாக நிரந்தர ஆசிரியர்களை பணியமர்த்த இயலாத நிலையில், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலுக்கிணங்க மாணாக்கர்களுக்கான கல்வி கற்றலில் தொய்வு ஏற்படாமல் இருக்க முதற்கட்டமாக 574 கௌரவ விரிவுரையாளர்கள் பணியமர்த்தவும் பின்னர், 823 கௌரவ விரிவுரையாளர்கள் பணியமர்த்தவும் விளம்பரங்கள் வெளியிடப்பட்டு, தற்காலிகமாக 1,277 கௌரவ விரிவுரையாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.


இதன் தொடர்ச்சியாக மேலும், தமிழ் மற்றும் ஆங்கில மொழி பாடப்பிரிவுகளுக்கு 306 கௌரவ விரிவுரையாளர்களை தற்காலிகமாக பணியமர்த்துவதற்கு ஆணையிடப்பட்டது. இத்துடன் ஏற்கனவே வெளியிடப்பட்ட பணியிடங்கள் சேர்க்கை பெறாத 120 பணியிடங்களும் சேர்த்து ஆகமொத்தம் 426 தற்காலிக கௌரவ விரிவுரையாளர் பணியிடங்கள் 29 பாடப்பிரிவுகளுக்கு நிரப்பப்படவுள்ளது. இது குறித்த முழு விவரங்கள் https://www.tngasa.org என்ற இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேர்முகத் தேர்வு மதிப்பீடுகளின் அடிப்படையில் தேர்வு

மேற்குறிப்பிட்டுள்ள இணையதளம் வாயிலாக இன்று (04.02.2026) முதல் 09.02.2026 வரை தகுதியுள்ள நபர்கள் தங்களது விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். தமிழ்நாடு அரசின் நெறிமுறைகளைப் பின்பற்றியும், கல்வித்தகுதி மற்றும் நேர்முகத் தேர்வு மதிப்பீடுகளின் அடிப்படையிலும் கௌரவ விரிவுரையாளர்கள் தெரிவு செய்யப்படுவர்' என்று கூறப்பட்டுள்ளது.

எப்படி விண்ணப்பிப்பது?

தமிழக அரசு அறிவித்துள்ள தற்காலிக கௌரவ விரிவுரையாளர் பணியிடங்களுக்கு தமிழக கல்லூரிக் கல்வி இயக்ககத்தின் tngasa.in அல்லது dce.tn.gov.in ஆகிய இணையதளங்கள் வாயிலாக சென்று விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்யும்போது தனிப்பட்ட விவரங்கள், கல்வித்தகுதி மற்றும் அனுபவம் ஆகியவற்றை சரியாக பதிவிட வேண்டும். புகைப்படம், கையொப்பம் மற்றும் கல்விச் சான்றிதழ்களை ஸ்கேன் செய்து பதிவேற்ற வேண்டியது இருக்கும். இந்த பணியிடங்களுக்கான கல்வித்தகுதி உள்ளிட்ட விவரங்களை மேற்கண்ட இணையதளங்களை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
Thursday, February 05, 2026

முதியோருக்கு ரூ. 2,000; கல்விக் கடன் ரத்து; 3 சிலிண்டர்கள் இலவசம்! அதிமுக வாக்குறுதி!

அதிமுக ஆட்சிக்கு வந்தால் முதியோருக்கான மாத ஓய்வூதியம் ரூ. 2,000 ஆக உயர்த்தப்படும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகவிருக்கும் நிலையில், அதிமுகவின் இரண்டாம் கட்ட வாக்குறுதிகள் வெளியிடப்பட்டுள்ளது.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய எடப்பாடி பழனிசாமி தெரிவித்ததாவது:

“அதிமுக ஆட்சிக்கு வந்தால் முதியோர் ஓய்வூதியத் தொகை ரூ. 2000 ஆக உயர்த்தப்படும். கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், ஆதரவற்ற பெண்களுக்கான மாத உதவித் தொகை ரூ. 1,200-இல் இருந்து ரூ. 2000 ஆக உயர்த்தப்படும்.

மாணவர்களின் வங்கிக் கல்விக் கடன் ரத்து செய்யப்படும். அந்த தொகையை அரசே ஏற்கும்.

அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஆண்டுக்கு 3 சமையல் சிலிண்டர்கள் இலவசமான வழங்கப்படும்.

ஜல்லிகட்டில் உயிரிழப்போரின் குடும்பங்களுக்கு நிவாரணமாக ரூ. 10 லட்சமும், காயமடைந்தோருக்கு ரூ. 2 லட்சமும் வழங்கப்படும். அரசாணை வெளியிட்ட இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு அரசு சார்பில் ரூ. 5 லட்சம் வழங்கப்படும்.

மாற்றுத் திறனாளிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். இஸ்லாமிய உள்ளிட்ட சிறுபான்மையின பெண்கள் சுயதொழில் தொடங்க வட்டியில்லா கடன் வழங்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே, கடந்த ஜன. 17 ஆம் தேதி முதல்கட்டமாக 5 தேர்தல் வாக்குறுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அவை, மகளிர் உதவித் தொகை ரூ. 2,000 ஆக உயர்த்தப்படும், ஆண்களுக்கும் நகரப் பேருந்துகளில் கட்டணமில்லை, கிராமப்புறங்களில் வீடுகள் இல்லாதவர்களுக்கு அம்மா இல்லம் திட்டம் சார்பில் நிலம், நகர்ப்புறங்களில் வசிக்கும் வீடுகள் இல்லாதவர்களுக்கு அடுக்குமாடிக் குடியிருப்புகள், 150 நாள்கள் வேலைத்திட்டம், 5 லட்சம் மகளிருக்கு அம்மா இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.
Thursday, February 05, 2026

Kalanjiyam App - Annual Pay Statement Published - For Income Tax Purpose - Direct Download Link




Financial Year 2025-2026 Download Pay Drawn (Kalanjiyam app)

களஞ்சியம் appல் 2025-26 நிதி ஆண்டிற்கான Pay Drawn Particulars வெளியிடப்பட்டுள்ளது ஓராண்டிற்கான ஊதிய விவரங்களை பதிவிறக்கம் செய்து வருமான வரி படிவம் பூர்த்தி செய்ய பயன்படுத்திக் கொள்ளுங்கள்







App செய்ய Direct link

👇👇👇👇👇


Thursday, February 05, 2026

Income Tax - Kalanjiyam Appல் - மாத வருமானம் வரி பிடித்தம் பற்றி தெரிந்து கொள்வதற்கு


*மாத வருமானம் வரி பிடித்தம் பற்றி தெரிந்து கொள்வதற்கு....*

*KALANJIYAM WEBSITE*

⬇️

*LOGIN*

⬇️

*e service (HR & pin)*

⬇️

*EMPLOYEE SELF SERVICE*

⬇️

*REPORT*

⬇️


*INCOME TAX PROJECTIONS REPORT SELF SERVICE & CLICK ACTION BUTTON*

⬇️

*Write month name* (Jan-2025) & *CLICK Continue button*

⬇️

*CLICK Submit*

⬇️

(new screen) *OK*

⬇️

*CLICK MONITORING REQUEST STATUS*

⬇️

*CLICK VIEW OUTPUT*

⬇️

*DOWNLOAD*🙏
Thursday, February 05, 2026

Passport NOC பெறுதல் தொடர்பாக தமிழ்நாடு அரசு சமீபத்தில் வெளியிட்ட அரசாணையின் விளக்கம் (ந.பழனிச்செல்வம்)



கடவுச்சீட்டு மற்றும் தடையில்லாச் சான்று பெறுதல் தொடர்பாக தமிழ்நாடு அரசு சமீபத்தில் வெளியிட்ட அரசாணையின் விளக்கம்

தகவல் தொகுப்பு

ந.பழனிச்செல்வம்,
முதுகலை ஆசிரியர் (வணிகவியல்),
அரசு மேல்நிலைப் பள்ளி,
ஹைவேவிஸ் (மேகமலை)
உத்தமபாளையம் -வட்டம்
தேனி மாவட்டம் - 625515


Thursday, February 05, 2026

கல்லூரிகளில் தற்காலிக அடிப்படையில் கௌரவ விரிவுரையாளர் பணிக்கான இணைய வழி விண்ணப்ப பதிவு -2026 ( Direct Link...)




அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் தற்காலிக அடிப்படையில் கௌரவ விரிவுரையாளர் பணிக்கான இணைய வழி விண்ணப்ப பதிவு -2026

👇👇👇👇

Online Application for Guest Lecturers in Govt Arts and Science Colleges and Govt Education Colleges - 2026
Thursday, February 05, 2026

TNPSC குரூப்-4 பணியிடங்களுக்கான 2ம் கட்ட மூல சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு அறிவிப்பு.

TNPSC குரூப்-4 பணியிடங்களுக்கான 2ம் கட்ட மூல சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு பிப். 24, 25 ஆகிய 2 நாட்கள் TNPSC அலுவலகத்தில் நடைபெறும் என தெரிவிப்பு.

ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு IV (தொகுதி IV) தேர்வில் தேர்வர்கள் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் தரவரிசை விவரங்கள் 22.10.2025 அன்று தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டன.
Thursday, February 05, 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 05.02.2026



கிறிஸ்டியானோ ரொனால்டோ

திருக்குறள்: 

குறள் 417: 

பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லா ரிழைத்துணர்ந் 
தீண்டிய கேள்வி யவர்.        

விளக்க உரை: 

நுட்பமாக உணர்ந்து நிறைந்த கேள்வியறிவை உடையவர், ( ஒரு கால் பொருள்களைத்) தவறாக உணர்ந்திருந்தாலும் பேதைமையானவற்றைச் சொல்லார்.

பழமொழி :

Effort is the key to success. 

முயற்சியே வெற்றியின் சாவி.

இரண்டொழுக்க பண்புகள் :

1. பணத்தை விட அறிவே உயர்ந்தது

2. எனவே அறிவைப் பெருக்க அனைத்தும் படிப்போம்.

பொன்மொழி : 

பிறரிடம் உள்ள நல்ல விஷசயங்களை கற்றுக் கொள்ள மறுப்பவன் இறந்தவனுக்கு சமம்.

       - விவேகானந்தர்.

பொது அறிவு : 

01. எந்த நாட்டின் பாராளுமன்றம் அமைதிக்கான நோபல்  பரிசை தேர்வு செய்து பரிந்துரைக்கிறது?

நார்வே பாராளுமன்றம்

The Norwegian Parliament 

02.பலூனில் முதல்முறையாக  உலகைச் சுற்றிப் பறந்த முதல் அமெரிக்கர் யார்?

ஸ்டீவ் ஃபோசெட் -Steve Fossett

English words :

haunting-sad and unforgettable 

piblings-aunt and uncle

தமிழ் இலக்கணம்: 

 அது, இது, அஃது, இஃது 
உயிர் மெய் எழுத்துக்கு முன் அது, இது வரும்
எ. கா. அது மாலாவின் புத்தகம்
இது பாரதியின் வீடு
ஆனால் உயிர் எழுத்துக்கு முன்னால் அஃது, இஃது தான் வரும்
அஃது 
*உ* ன்னுடைய வீடா?
இஃது 
*அ* வரின் கவிதை

அறிவியல் களஞ்சியம் :

இந்த பாலைவனம் நீண்ட காலமாக 'இருண்ட மண்டலம்' என வகைப்படுத்தப்பட்டுள்ளது. பல தசாப்தங்களாக ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், இந்த நிகழ்விற்கான சரியான காரணம் இன்னும் தெரியவில்லை. அமெரிக்க ஆய்வுக்குப் பிறகு, மெக்சிகோ அரசு சிஹுவாஹுவா பாலைவனத்தில் ஒரு பெரிய ஆய்வகத்தை நிறுவியது. இது 'தி ஜோன்' என அறியப்படுகிறது.

பிப்ரவரி 05

கிறிஸ்டியானோ ரொனால்டோ அவர்களின் பிறந்தநாள்


கிறிஸ்டியானோ ரொனால்டோ டோசு சாண்டோசு அவேரோ (பிறப்பு: 5 பிப்ரவரி 1985 ) ஒரு போர்த்துகீசிய கால்பந்து வீரர் ஆவார். இவர் சவுதி புரோ லீக்கில் அல் நாசர் அணிக்காகவும், போர்ச்சுகல் தேசிய அணிக்காகவும் விளையாடுகிறார். ஒரு முன்கள வீரரான இவர் தான் விளையாடும் அணிகளின் தலைவராகவும் உள்ளார். ரொனால்டோ ஐந்து பாலோன் தி'ஓர் விருதுகளையும், மூன்று யுஇஎஃப்ஏ ஆண்டின் சிறந்த வீரர் விருதுகளையும், நான்கு ஐரோப்பிய தங்க காலணி விருதுகளையும் வென்றுள்ளார். இவர் ஏழு லீக் பட்டங்கள், ஐந்து யூஈஎஃப்ஏ வாகையர் கூட்டிணைவு, யூஈஎஃப்ஏ ஐரோப்பிய கோப்பை மற்றும் யூஈஎஃப்ஏ பன்னாட்டு கூட்டிணைவு உட்பட 33 கோப்பைகளை வென்றுள்ளார்.

நீதிக்கதை

ஒரு ஊரில் ஒரு குட்டிப்பறவை இருந்தது. அது பல இடங்களுக்கும் உணவு தேடி பறந்தது. ஓரிடத்தில், ஒரே ஒரு புழு சுற்றிக்கொண்டிருந்தது. பறவை அதைக் கொத்த முயன்ற போது, புழு பறவையிடம், என்னை மட்டும் சாப்பிட்டு விட்டால், உன் பசி தீர்ந்து விடுமா? சற்று தூரத்தில் நாற்பது, ஐம்பது புழுக்கள் இருக்கின்றன. கொஞ்ச தூரம் பறந்து சென்றால் அவற்றையும் சேர்த்து சாப்பிடலாம், என்றது. இரக்கமில்லாத அந்தப் பறவை, எப்போதோ கிடைக்கப் போகும் நாற்பது, ஐம்பது புழுக்களுக்காக, உன்னையும் விட்டு விட்டால் என்னாகும்? இப்போது, உன்னைத் தின்று பசியாறிக் கொள்கிறேன். பிறகு என் வழியில் நான் செல்கிறேன், என்று சொல்லி, புழுவை விழுங்கி விட்டது.


கொஞ்ச தூரம் பறந்து சென்று ஓரிடத்தில் அமர்ந்தது. அது அமர்ந்த இடம் ஒரு வலை. அதில் இருந்து மீள முடியவில்லை. வேடன் அதை தூக்க வந்தான். பறவை அவனிடம், வேடனே! நான் சாதாரண குஞ்சுப்பறவை. என்னிடம் என்ன இறைச்சி இருக்கும்! என்னுடன் வா! என் இருப்பிடத்தில் பல கொழுத்த பறவைகள் உள்ளன. அவற்றைப் பிடித்துச் சென்றால், உனக்கு நிறைய இறைச்சி கிடைக்கும் என்று சொல்லி தப்பிக்கப் பார்த்தது. அட பறவையே! நாளை கிடைக்கப்போகும் பலாக்காய்க்காக, இன்று கிடைக்கும் கிளாக்காயை எவனாவது விடுவானா? ஹூம்... இன்றைய உணவையே நான் பார்க்கிறேன், நாளைக்குரியதை, அந்த நாராயணன் பார்த்துக் கொள்வான், என்றவன், பறவையின் கழுத்தை திருகி விட்டான்.

நீதி: நாம் பிறருக்கு துன்பம் விளைவிக்கும்போது  நமக்கும் இன்னல் வரும்.

இன்றைய செய்திகள்

05.02.2026

⭐'என் கனவு என் எதிர்காலம்' திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

⭐தமிழகத்தில் ஆதிதிராவிடர் முன்னேற்றத் திட்டத்தின் கீழ் 2025-26 நிதியாண்டில் ரூ.66.37 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் மேலும் 1,514 ஆதிதிராவிடர் பயனாளிகளுக்கு ரூ.14.35 கோடி சிறு வணிக கடன் வழங்கப்பட்டுள்ளது.

⭐மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சியை வாபஸ் பெறுவதாக உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀16-வது இளையோர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) ஜிம்பாப்வே மற்றும் நமிபியாவில் நடந்து வருகிறது.

Today's Headlines

⭐Chief Minister M.K. Stalin launched the project "My Dream My Future"

⭐In Tamil Nadu, Rs. 66.37 crore has been allocated under the Adi Dravidar Munnetra Kazhagam (ADMP) in the financial year 2025-26, and Rs. 14.35 crore of small business loans have been provided to 1,514 Adi Dravidar beneficiaries.

⭐Home Ministry of  India announced withdrawal of President's rule in Manipur.

*SPORTS NEWS*

🏀The 16th Under-19 Cricket World Cup is going on in Zimbabwe and Namibia.

Covai women ICT_போதிமரம்

Wednesday, February 4, 2026

Wednesday, February 04, 2026

TET - Genuineness Certificate பெற & SR பதிவு செய்ய தேவையான அனைத்து படிவங்களும் ஒரே கோப்பில்...

TET - Genuineness Certificate பெற & SR பதிவு செய்ய தேவையான படிவங்கள்

தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வு உண்மைத்தன்மை சான்றிதழ் பெற மற்றும் பணிப்பதிவேட்டில் பதிவு செய்ய தேவையான படிவங்கள்

TNTET - Genuineness Certificate & SR Entry Format

TNTET - Genuineness Certificate பெற & SR Entry செய்ய தேவையான படிவங்கள்

(Attach TET certificate & Hall ticket)

👇👇👇👇

TET - Genuineness Certificate & SR Entry Format - Download here
Wednesday, February 04, 2026

HS HM TO PG CASE UPDATE DATE 04-02-2026

உச்சநீதிமன்றத்தில் HSHM TO PG இன்று(04-02-2026) 12.30 க்கு ஆரம்பித்து நீதி அரசர் திரு ஹமானுல்லா அவர்கள் மற்றும் நீதியரசர் திரு மகாதேவன் அவர்கள் முன்னிலையில் ஒரு மணி வரை நடைபெற்றது

ஒரு பட்டதாரி ஆசிரியர் முதுகலை ஆசிரியர் ஆன பிறகு அவருடைய Service Period (LIEN)  கண்டிப்பாக துண்டிக்கப்படுகிறது என்று நீதிபதி கூறியுள்ளார்.

பட்டதாரி ஆசிரியருக்கு சாதகமாக வாதடிய வழக்கறிஞர் LIEN பற்றிய பிரச்சனை தான் இந்த வழக்கின் கரு என்று நீதிபதியிடம் தெளிவாக விவரித்தார்.

இதற்கு பதில் அளித்த நீதிபதி அது எதிர்தரப்பு வழக்கறிஞரான திரு சிதம்பரம் அவர்களுக்கும் நன்கு தெரியும் என்றும் நீதிபதி அவர்கள் நகைச்சுவையாக கூறியுள்ளார்

மேலும் இந்த வழக்கை நீண்ட காலம் விசாரிக்க எங்களுக்கு விருப்பமில்லை என்றும் நீதியரசர்கள் கூறியுள்ளார்கள்

எனவே இந்த வழக்கு நாளை மிகச்சரியாக 12 மணிக்கு விசாரணைக்கு வருகிறது

நாளைய விசாரணையுடன் இந்த வழக்கு முடிந்துவிடும் என்று 100% முழுவதும் நம்பலாம்.

*இதுவே மறு சீராய்வு மனு என்பதால் இதற்குப் பிறகு விசாரணையே இல்லை என்பதை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்*

*நாளையே தீர்ப்பு வழங்கப்பட அதிகபட்ச வாய்ப்புகள் உள்ளது.*

Wednesday, February 04, 2026

தவறான ஊதிய நிர்ணயம் , ஊதிய நிலுவை பிடித்தல் உச்ச நீதிமன்ற தீர்ப்பு - SLP (C) No 11540/2024 , தீர்ப்பு நாள் : 30.01.2026





தவறான ஊதிய நிர்ணயம், ஊதிய நிலுவை பிடித்தல் recovery , உச்ச நீதிமன்ற தீர்ப்பு



* உச்ச நீதிமன்றம் SLP (C) 11540/2024

* ஊதியக் குழு ஊதிய நிர்ணயத்தின் படி தவறுதலாக தர ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இந்த வழக்கில் பள்ளிக்கல்வித் துறை எதிர்மனுதாரர் என்பது குறிப்பிடத்தக்கது.

* மதுரை உயர் நீதிமன்றம் தர ஊதியம் தவறுதலாத ஆசிரியருக்கு / அரசு ஊழியருக்கு வழங்கப்பட்டு இருந்தால் மக்களின் வரிப்பணம் என்ற கருத்தை கூறி ,தவணை முறையில் தவறுதலாக கூடுதலாக வழங்கப்பட்ட தொகையை பிடிக்க தீர்ப்பு அளித்தது .



* மதுரை உயர் நீதிமன்ற தனி நீதிபதி தீர்ப்பில் /In view of facts and circumstances, this Court do not find any



irregularity or infirmity in respect of correcting the erroneous scale of pay

and the consequential recovery. The respondents are directed to recover the

amount by way of instalments./ என்று கூறப்பட்டது

* மேல் முறையீட்டில் இரண்டு நீதிபதி அமர்வு 50% அரசு ஊழியரும் , 50% ஊதிய நிர்ணய அதிகாரியும் திரும்ப செலுத்த வேண்டும் என்று தீர்ப்பு அளித்தது. அரசு ஊழியர் / ஆசிரியர்கள் கூடுதலாக வழங்கப்பட்ட தொகை பிடித்தல் தொடர்பான உச்ச நீதிமன்ற வழிகாட்டு நெறிமுறைகளை மனுதாரர் வழக்கறிஞர் தெரிவித்த போதும் , நீதிமன்றம் ஏற்கவில்லை.

* மதுரை உயர் நீதிமன்ற மேல் முறையீட்டு தீர்ப்பில் /Therefore, this Court is of the considered opinion that 50% of the

amount shall be recovered from the

appellant and remaining 50% shall be

recovered from the erring officials./




* மதுரை உயர் நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

* SLP ( C ) 11540 / 2024 ல் 50% ஆசிரியர் , 50% அதிகாரி திரும்ப செலுத்த வேண்டும் என்பதை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து தீர்ப்பு அளித்துள்ளது.



* நிலுவை தொகை பிடித்தல் தொடர்பான உச்ச நீதிமன்ற CA No 11527/2014 Rafiq masih தீர்ப்பு மிக விரிவான வழிகாட்டுதலை வழங்கிய தீர்ப்பு. இத்தீர்ப்பின் படி ஊதிய நிர்ணயம் 5 ஆண்டுகளை கடந்து இருந்தால் திரும்ப செலுத்த வேண்டியதில்லை .C ., D பிரிவு ஊழியர் திரும்ப செலுத்த வேண்டியதில்லை . ஓய்வு பெற ஓராண்டு இருக்கும் போது தணிக்கை சட்டத்திற்கு எதிரானது. இந்த தீர்ப்பை மத்திய அரசு மாநில அரசுகள் செயல்படுத்த சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

ஆ. மிகாவேல் ஆசிரியர் ,

மணப்பாறை

9047191706
Wednesday, February 04, 2026

பென்ஷன்' உயர்வு அறிவிப்போடு நிற்கிறது ‘டாப்ஸ்’ திட்டத்துக்கு இதுவரை விதிமுறை வகுக்கலே இல்லை...

பென்ஷன்' உயர்வு அறிவிப்போடு நிற்கிறது ‘டாப்ஸ்’ திட்டத்துக்கு இதுவரை விதிமுறை வகுக்கலே இல்லை...

Wednesday, February 04, 2026

4.02.2026(புதன்கிழமை) - இன்றைய செய்திகள்

🌹உங்களுடைய தவறுகளை உங்களிடமே சொல்பவர்களை இழந்து விடாதீர்கள்...

ஏனெனில் அவர்கள் நீங்கள் மற்றவர்களிடம் தலை குனியக் கூடாது என்று எண்ணுபவர்கள்.!

🌹🌹தேவைகள் முடிந்தபின்பு தேரே என்றாலும் தெருவில் தான் நிக்கனும்...

👉தேவைக்கு மட்டும் பயன்படுத்தினால் அதற்கு பெயர் பாசம் அல்ல சுயநலம்.!!

🌹🌹🌹படிப்பு,பணம்,பதவி, புகழ்,அந்தஸ்து, அதிகாரம் என்று எத்தனையோ இருந்தாலும்...

சக மனிதரை மதிக்கத் தெரியாதவர் மனிதரே அல்ல...

மிருகத்துக்கும் கீழானவர்.!!!

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

🌈🌈8.02.2026(ஞாயிறு) அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி அறிவிப்பு மாநாடு - ஜாக்டோ ஜியோ

🌈🌈ஜாக்டோ - ஜியோ : ஆசிரியர் அரசு ஊழியர் அரசுப் பணியாளர் நடத்தும் முதல்வருக்கு நன்றி அறிவிப்பு மாநாடு அழைப்பிதழ் வெளியீடு.

🌈🌈முதல்வருக்கு நன்றி அறிவிப்பு மாநாடு ஆசிரியர்கள் புறக்கணிப்பு என வரும் செய்தி தவறான செய்தியாகும். நன்றி அறிவிப்பு மாநாட்டில் முதல்வர் நல்ல செய்தி அறிவிக்க வாய்ப்பு என கருதி மிகுந்த எழுச்சியோடு ஆசிரியர்கள் புறப்பட தயாராகிக் கொண்டுள்ளனர்.

🌈🌈கேரளாவில் 10ம் வகுப்பு பாடத்திட்டத்தை 25 சதவீதம் குறைக்க அம்மாநில பள்ளிக்கல்வித்துறை முடிவு

அதிகப்படியான கல்விச்சுமையால் மாணவர்கள் பாதிக்கப்படுவதைத் தவிர தேர்ச்சி விகிதத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை என்பதால் நடவடிக்கை என தகவல்

🌈🌈86 புதிய கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் பட்டியல் வெளியீடு.

🌈🌈G.O 3 - தலைமைச்செயலகப் பணி - மாற்றுத்திறனாளி அரசு ஊழியர் பதவி உயர்வுக்கு ஏற்ற 13 பணியிடங்கள் - அரசாணை வெளியீடு.

🌈🌈முதுகலை ஆசிரியராக தெரிவு செய்யப்பட்ட நாடுநர்களுக்கு பணி நியமன ஆணை வழங்குதல் - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

முதுகலை ஆசிரியர் நேரடி நியமனம் - EMIS இணையதளம் வழியாக கலந்தாய்வு நடைபெறுவது தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு.

🌈🌈தர ஊதியம் 5400

சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடக்க / நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ,பட்டதாரி ஆசிரியர் , வட்டாரக் கல்வி அலுவலர் தர ஊதியம் 5400 வழக்குகள் தொகுப்பு வழக்குகளாக விசாரிக்கப்பட்ட நிலையில் விரைவில் தீர்ப்பு கிடைக்கும் என தகவல்.

🌈🌈ஹால் டிக்கெட் வெளியீடு.

👉 சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு.

சிபிஎஸ்இ பள்ளிகளில் படிக்கும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் 17ஆம் தேதி முதல் ஏப்ரல் 9ஆம் தேதி வரை பொதுத்தேர்வு நடைபெறுகிறது.

10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முதற்கட்டமாக வரும் 17ஆம் தேதி முதல் மார்ச் 9ஆம் தேதி வரை பொதுத்தேர்வு நடைபெறுகிறது.

🌈🌈முதலமைச்சரின் புத்தாய்வு திட்டம் - அனைத்து அரசுப் பள்ளிகளிலும் கற்றல் விளைவுகளை மதிப்பீடு செய்வதற்கும், உயர் தொழில் நுட்ப ஆய்வகங்களை பார்வையிடுவதற்கும் அனுமதி வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது

🌈🌈மாபெரும் தமிழ்க் கனவு’ திட்டத்தின் கீழ் ஆசிரியா்களுக்கான பயிற்சிப் பட்டறை நடத்துவதற்காக ரூ.1.08 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

🌈🌈சம்பளத்தை பார்க்காமல் ; நாட்டிற்கு என்ன செய்யமுடியும் என நோக்குங்கள்' - பத்ம ஸ்ரீ விருது பெற்ற ஐஐடி இயக்குனர் காமகோடி

🌈🌈பள்​ளி​களில் ஆய்​வுப் பணி​களை மேம்​படுத்​தும் நோக்​கில் 'பள்ளிப் பார்​வை-2.0' எனும் புதிய செயலி அறி​முகம் செய்​யப்​பட்​டுள்​ளது.

🌈🌈வீடில்லாமல், தெருத் தெருவாக சுற்றித் திரியும் தெரு நாய்களை கணக்கெடுக்க பள்ளிக்கு ஓர் ஒருங்கிணைப்பு அலுவலர் (ஆசிரியர்) நியமிக்கப்பட வேண்டும் என்று கோவை மாநகராட்சியின் மாநகராட்சி கல்வி அலுவலர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

🌈🌈தமிழ் கலாச்சாரமே அறிவியலின் ஊற்றுக்கண்: பூம்புகார் கல்லூரியில் ஜப்பான் அறிஞர் வியப்பு

🌈🌈+2 செய்முறைத் தேர்வுகள் நடத்த வேண்டிய நாட்கள் மற்றும் அறிவுரைகள் - DGE செயல்முறைகள் வெளியீடு.

🌈🌈தலைமை ஆசிரியர்கள் நியமனம் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது.வழக்கு முடிந்ததும் தலைமை ஆசிரியர்கள் உடனடியாக நியமிக்கப்படுவார்கள்-அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்

🌈🌈சிஎஸ்ஐஆர் நெட் தேர்வு முடிவுகள் வெளியீடு

🌈🌈2-ம் கட்ட ஜேஇஇ முதன்மைத் தேர்வுக்கு 25-க்குள் விண்ணப்பிக்கலாம்.

🌈🌈இந்தியாவுக்கு விதிக்கப்பட்ட

25% வரி 18%ஆக குறைப்பு"

பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் நடைபெற்ற ஆலோசனைக்குப்பின் அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு

🌈🌈Yamaha EC-06 அறிமுகம்

எதிர்பார்ப்பை ஏற்படுத்திய Yamaha EC-06 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம்

அதிகபட்சமாக 169 கி.மீ. வேகம் செல்லும் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் இந்திய சந்தை மதிப்பு ரூ.1,67,600 என நிர்ணயம்

🌈🌈கௌதம் மேனன் இயக்கத்தில் மாதவன், ரீமா சென் நடித்துள்ள மின்னலே திரைப்படம் பிப்.13ம் தேதி ரீ ரிலீஸ் ஆகிறது

🌈🌈Sim-ல் கொட்டிய தங்க மழை

சீனாவில் பழைய பொருட்களில் இருந்து உலோகங்களை பிரித்தெடுக்கும் கியாவோ என்ற நபர், தூக்கி வீசப்பட்ட பழைய சிம் கார்டுகள் உட்பட பல மின்னணு கழிவுகளில் இருந்து ரூ.26 லட்சம் மதிப்பிலான 191 கிராம் தங்கத்தை பிரித்தெடுத்துள்ள சம்பவம் உலகையே மிரள செய்திருக்கிறது

🌈🌈சாலையில் கிடந்த 45 சவரன் நகையை மீட்டு

உரிமையாளரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர் பத்மாவை நேரில் அழைத்து தங்க சங்கிலியை

பரிசளித்து பாராட்டிய நடிகர் ரஜினிகாந்த்

🌈🌈சென்செக்ஸ் உயர்வு

மும்பை பங்குச்சந்தை குறியீடு சென்செக்ஸ் 2,500 புள்ளிகள் உயர்வு, தேசிய பங்குச்சந்தை குறியீடு நிஃப்டி 750 புள்ளிகள் உயர்வு

இந்தியா, அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் காரணமாக இந்திய பங்குச்சந்தையில் எழுச்சி

🌈🌈பட்ஜெட் வெறும் ஏமாற்றம் தான்"

"மத்திய பட்ஜெட் வெறும் ஏமாற்றம் தான், வரும் தேர்தலில் மத்திய அரசுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்"

-முதல்வர் ஸ்டாலின்

🌈🌈விஜய்யிடம் என்ஜின் உள்ளதா?"

"விஜய்யிடம் என்ஜின் உள்ளதா? என்ற கேள்வி என்னிடம் உள்ளது. விஜய் பேசும் போது மக்கள் கைத்தட்ட வேண்டும். அப்படி தான் அவர் பேச்சு உள்ளது. அவரது பேச்சில் ஆழமான கருத்து இல்லை"

அண்ணாமலை

🌈🌈தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குமரிக்கு வருகை தர உள்ளார்

குமரி மாவட்டத்தில் அரசு சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்ள இருக்கிறார் இதற்காக வரும் 19 ஆம் தேதி இரவு நாகர்கோவில் வருகிறார், மறுநாள் 20 ஆம் தேதி அரசு விழாவில் பங்கேற்க உள்ளார்.

🌈🌈துரோகிகளை துணைக்கு அழைத்து வந்தாலும், பா.ஜ.க. அரசின் ஆணவத்துக்கும் ஆதிக்கத்துக்கும் அண்ணாவின் தமிழ்நாட்டில் GetOut-தான் - ஆண்டுகள் எத்தனை ஆனாலும், தமிழ்நாட்டை அண்ணாதான் ஆள்கிறார்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

🌈🌈சித்தராமையாவுடன் நிற்பேன்''

முதல்வர் பதவி விவகாரத்தில் சித்தராமையாவுடன் மோதல் இருப்பதாக பரவும் தகவலுக்கு துணை முதல்வர் டி.கே சிவகுமார் மறுப்பு

அனைத்து நெருக்கடிகளிலும் சித்தராமையாவுடன் நிற்பேன்; எதிர்காலத்திலும் அந்த ஒற்றுமை தொடரும் எனவும் அவர் விளக்கம்

🌈🌈"NDA கூட்டணி பலமாக உள்ளது. தேமுதிகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து ஈபிஎஸ் முடிவு செய்வார். ஓபிஎஸ்-ஐ மீண்டும் இணைப்பது, அதிமுகவின் உட்கட்சி பிரச்சினை. அவரை என்டிஏ கூட்டணியில் இணைப்பது குறித்து பாஜக தலைமை முடிவு செய்யும்"- பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி

🌈🌈சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ஒரே நாளில் ரூ.2,560 உயர்ந்துள்ளது.

ஆபரணத் தங்கம் விலை காலையில் சவரனுக்கு ரூ.640 உயர்ந்த நிலையில் பிற்பகலில் ரூ.1,920 உயர்ந்து, சவரன் ரூ.1,14,160க்கு விற்பனையாகிறது.

சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.300க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை காலையில் கிராமுக்கு ரூ.20 குறைந்திருந்த நிலையில் பிற்பகலில் ரூ.20 உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.20,000 உயர்ந்து ஒரு கிலோ ரூ.3 லட்சத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது.

🌈🌈'இந்தியாவை விட்டு வெளியேறுங்கள்' - WHATSAPP நிறுவனத்திடம் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி காட்டம்

🌈🌈5 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் 16ம் தேதி புதுச்சேரி வருகிறார் பிரதமர் மோடி.

பிரதமர் வருகையையொட்டி, உப்பளம் இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில் செயற்கை ஓடுதள பாதை, சாரதாம்பாள் நகரில் உள்ள நீச்சல்குளம் ஆகியவற்றை திறந்த வைக்க உள்ளார்.

🌈🌈நடைபெறும் பட்ஜெட் கூட்டத்தொடரில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 6 நாடாளுமன்ற உறுப்பினர்களும் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த 3 நாடாளுமன்ற உறுப்பினர்களும் என மொத்தம் 9 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவையில் இருந்து கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்

🌈🌈இரண்டாவது சிம்பொனியின்

எழுத்துப்பணி கிட்டத்தட்ட முடிந்துவிட்டது...

புதிய ஸ்டுடியோவிற்கு வந்து 5 ஆண்டுகள் நிறைவு

இளையராஜா சமூக வலைதளத்தில் பதிவு

🌈🌈செஞ்சி அருகே பாக்கம்-கெங்கவரம் பகுதியில் வனவிலங்கு சரணாலயம் அமைக்க அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்க வேண்டும்: தமிழக அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை

🌈🌈100 நாள் வேலை திட்டத்தை சிதைக்கும் ஒன்றிய பாஜ அரசை கண்டித்து தமிழக காங்கிரஸ் சார்பில் 5ம் தேதி சென்னையில் பிரமாண்ட நடைபயணம்: செல்வப்பெருந்தகை அறிவிப்பு

🌈🌈இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மதிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுகிறார் : சபாநாயகர் அப்பாவு பேட்டி

🌈🌈கரூர் சம்பவத்திற்கு எட்டிப் பார்க்காத விஜய் 7 கோடி மக்களை எப்படி காப்பாற்றுவார்: அமைச்சர் ஐ.பெரியசாமி காட்டம்

🌈🌈தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் திமுக அரசால் ஏதாவது ஒரு நன்மை: அமைச்சர் முத்துசாமி பேட்டி

🌈🌈மியான்மரில் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆகப் பதிவாகியுள்ளது.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

அன்பை கொடுப்பதிலும் பெறுவதிலும் தான் இன்பம் இருக்கிறது. என்றும் அன்புடன்

சு.வேலுமணி M.A.,B.Ed.,

தலைமையாசிரியர், மாவட்டச் செயலாளர்

&தகவல் தொழில் நுட்ப அணியின் மாநில அமைப்பாளர்,

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,

கரூர் மாவட்டம்.

அலைபேசி:9003599926