Breaking

Thursday, February 19, 2026

Thursday, February 19, 2026

TET 2026 For Working Teachers - ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளர் திரு ராமேஸ்வர முருகன் அவர்கள் தெரிவித்த தகவல்கள்


ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளர் திரு ராமேஸ்வர முருகன் அவர்கள் தெரிவித்த தகவல்கள்*

1. ஆசிரியர் தகுதி தேர்வுக்கு தற்பொழுது பணியில் உள்ள அனைத்து ஆசிரியர்களும் விண்ணப்பிக்கும் வகையில் இணையதளம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறினார்

2. இதன் மூலம் பத்தாம் வகுப்பு முடித்து இடைநிலை ஆசிரியராக நியமனம் பெற்றவர்கள் 12 ஆம் வகுப்பில் இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம்

3. பனிரெண்டாம் வகுப்பு படிக்காதவர்கள் விண்ணப்பிக்க இயலாது என்ற நிலையும்

4. பன்னிரண்டாம் வகுப்பிலேயே ஆசிரியர் பயிற்சியை முடித்தவர்களும்(SGTT) விண்ணப்பிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது

5. பத்தாம் வகுப்பு 12ஆம் வகுப்பு மற்றும் பிஎட் ஆகியவற்றில் குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்களிருக்க வேண்டும் என்பது (ஏற்கனவே 40% என அறிவிக்கப்பட்டு இருந்தது) நீக்கப்பட்டுள்ளன

6. இடைநிலை ஆசிரியர் பணியிடத்தில் நியமிக்கப்பட்ட bed முடித்த ஆசிரியர்கள் தற்பொழுது அவர்கள் வகிக்கும் பதவிக்கு உண்டான தேர்வு எழுதினால் போதும்.

உதாரணத்திற்கு அவர் தற்பொழுது இடைநிலை ஆசிரியர் பதவியில் வேலை செய்து கொண்டிருந்தால் தாள் ஒன்றும் பட்டதாரி ஆசிரியராக வேலை செய்து கொண்டிருந்தால் தாள் இரண்டும்

தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்று இருந்தால் அவர் பணியில் தொடர தாள் ஒன்றும் பதவி உயர்வு பெற தாள் இரண்டும் எழுத வேண்டும்

7. பொதுவாக தற்போது தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியராக பணியாற்றி வருபவர் பணியில் தொடர தாள் ஒன்றும் பட்டதாரி ஆசிரியராக பதிவு உயர்வு பெற தாள் இரண்டும் தேர்வு எழுத வேண்டும்

8. மாற்றுத்திறனாளி ஆசிரியர்களுக்கும் இன சுழற்சி அடிப்படையிலேயே நிர்ணயிக்கப்பட்டுள்ள மதிப்பெண்களை அவர்களுக்கு தகுதி மதிப்பெண்களாக கொள்ளப்படுகிறது

9. OC எனப்படும் இதர வகுப்பினருக்கு NCTE விதிகளின்படி 90 மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் அவர்களுக்கு அந்த மதிப்பெண்களை குறைக்க வாய்ப்பு இல்லை

10. பிற இனத்தவர்களுக்கு (OBC,ST.ST) பேச்சு மதிப்பெண்ணை மாநில அரசுகள் நிர்ணயித்துக் கொள்ளலாம் என்ற NCTE விதிகளின்படியே மதிப்பெண்கள் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்கள்

11. பொதுவாக EMIS id உள்ளவர்கள் அனைவரும் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

12. சுயநிதி பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும்EMIS I'd வழங்கப்பட்டுள்ளதால் அவர்களும் விண்ணப்பிக்கலாம்

13. SMC மூலம் தற்பொழுது பள்ளிகளில் காலியாக உள்ள இடங்களில் நியமிக்கப்பட்டுள்ள தற்காலிக ஆசிரியர்களுக்கும் தற்காலிக EMIS id வழங்கப்பட்டுள்ளதால் அவர்களும் விண்ணப்பிக்கலாம்

14. தொடக்க நடுநிலைப் பள்ளிகளில்பனியாற்றும் ஆசிரியர்களின் பணிச் சான்றிதழில் தலைமை ஆசிரியர் கையொப்பம் வட்டார கல்வி அலுவலர் கையொப்பம் மற்றும் மாவட்ட கல்வி(தொடக்கக்கல்வி) அலுவலர் கையொப்பம் மூன்றும் இடம் பெற வேண்டும்

15. உயர்நிலை மேல்நிலை மற்றும் சுயநிதி பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் பணிச் சான்றிதழில் தலைமை ஆசிரியர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை/தனியார் பள்ளிகள்) கையொப்பம் இடம் பெற வேண்டும்

16. பொதுவாக பணியில் தொடர அந்தந்த பதவிக்கு உரிய தேர்வும் பதவி உயர்வில் செல்ல வேண்டுமாயின் அதற்கு உண்டான தேர்வு எழுத வேண்டும்

17. பட்டதாரி ஆசிரியர்கள் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆகியோர் தாள் இரண்டு மட்டும் எழுதினால் போதுமானது

18. இடைநிலை ஆசிரியர்கள் பணியில் தொடர மற்றும் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற தாள் ஒன்று மட்டும் எழுதினால் போதுமானது

19. தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பணியில் தொடர தாள் ஒன்று எழுதினால் போதுமானது

20. இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெற தாள் இரண்டு எழுத வேண்டும்

மேற்கண்ட தகவல்கள் நேற்று பெறப்பட்டன விண்ணப்பிக்க கால அவகாசம் போதுமான அளவு அளிக்கப்பட்டுள்ளதால் போதிய தகவல்கள் திரட்டிக் கொண்டு அதன் அடிப்படையில் தவறில்லாமல் விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Thursday, February 19, 2026

பொதுத் தேர்வில் சொல்வதை எழுத்துபவர்களாக (Scribes) பள்ளி ஆசிரியர்களையே நியமிக்க அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவு!



பொதுத் தேர்வில் சொல்வதை எழுத்துபவர்களாக (Scribes) பள்ளி ஆசிரியர்களையே நியமிக்க அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவு!

மார்ச் / ஏப்ரல் 2026 இல் நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை பொதுத்தேர்வுகளில் கடந்த ஆண்டினைப் போலவே அரசாணை (நிலை) எண் 54, பள்ளிக் கல்வி (பொது1) துறை, நாள் 29.02.2016 மற்றும் அரசாணை (நிலை) எண் 62, பள்ளிக் கல்வி (அ.தே) துறை, நாள் 25.03.2022 ஆகியவற்றைப் பின்பற்றியே சொல்வதை எழுதுபவர்கள் (Scribes) நியமிக்கப்பட உள்ளனர். எனவே, முந்தைய ஆண்டுகளைப் போல ஆசிரியர்களை சொல்வதை எழுதுபவர்களாக (Scribes) நியமிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்ற விவரம் தெரிவிக்கப்படுகிறது.
Thursday, February 19, 2026

NMMS 2025 - தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கான மதிப்பெண் விவரங்கள்


*🆕NMMS EXAM RESULT 2025*

*▪️தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கான மதிப்பெண் விவரங்கள்*

General Category :

SAT & MAT

இரண்டிலும் 90 க்கு 36 மதிப்பெண் எடுத்திருக்க வேண்டும்.

Reserved Category :

SAT & MAT

90 க்கு ஒவ்வொன்றிலும் 29 மதிப்பெண் எடுத்திருக்க வேண்டும்.
Thursday, February 19, 2026

ஆசிரியர்கள் TET தேர்விற்கு பணிச்சான்றுகள் பெற விண்ணப்பிக்க இணைக்கவேண்டிய ஆவணங்கள்- DEO's Proceedings

ஆசிரியர் தகுதித் தேர்வு 2026

அரசு / அரசு உதவிபெறும் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பிக்கவும் பணிச்சான்றுகள் வழங்குவதற்கு தேவையான ஆவணங்கள் இணைப்பது குறித்து அறிவுரை - DEO Proceedings

பார்வையில் காணும் ஆசிரியர் தேர்வி வாரிய அறிக்கையின்படி அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகளில் தற்போது பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு -2026 (TET) நடைபெற இருப்பதால், இதற்கு ஆன்லைன் (Online)இல் ஆசிரியர் விண்ணப்பிக்கும் போது பணிச்சான்றிதழ் (Service Certificate) பதிவேற்றம் செய்யப்பட வேண்டி இருப்பதால், இப்பணிச்சான்றிதழ் பெற விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள் கீழ்க்கண்ட சான்றிதழ் நகலுடன் விண்ணப்பிக்க அறிவுறுத்துமாறு வட்டாரக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


குறிப்பு : ஒரு ஆசிரியர் இரண்டு தேர்வுகளில் (TET Paper 1 மற்றும் TET Paper 2) விண்ணப்பம் செய்து இருந்தால் தனித்தனியாக கருத்துரு சமர்ப்பிக்கப்பட வேண்டும்)

1. முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டு வட்டாரக்கல்வி அலுவலர்

2. கையொப்பத்துடன் Annexure 1 - இரு நகல்களில்

3. சம்பந்தப்பட்ட ஆசிரியரின் விண்ணப்ப கடிதம்

4. பணி நியமன ஆணை நகல்

5. பணிப்பதிவேடு முதல் பக்க நகல்

6. முதன் முதலில் நியமனம் செய்த பதவியில் பணிவரன்முறை செய்யப்பட்ட ஆணை நகல் அல்லது பணிப்பதிவேடு பதிவு செய்யப்பட்ட பக்க நகல்

7. தற்போதைய பதவியில் பணிவரன்முறை செய்யப்பட்ட நகல் அல்லது பணிப்பதிவேடு பதிவு செய்யப்பட்ட பக்க நகல்

8. TET தாள் 1/ TET தாள் 2 உரிய கல்வித் தகுதித் சான்று நகல்கள்

Thursday, February 19, 2026

“என் வாழ்க்கையை மாற்றியமைத்த பயிற்சிகள்...” - அரிஷ் பகிர்வு | நான் முதல்வன் திட்டம்

என்னுடைய பெயர் அரிஷ். நான் அழகப்பா செட்டியார் அரசு பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் படித்து வருகிறேன். நான் சிவில் இன்ஜினியரிங் துறையைச் சேர்ந்த மாணவன். சிறு வயதிலிருந்தே கட்டிடங்கள், அணைகள், வடிவமைப்புகள் போன்றவற்றில் எனக்கு அதிக ஆர்வம் இருந்தது.

என்னுடைய பாட திட்டத்தை தாண்டி பல பாடங்களை நான் முதல்வன் திட்டத்தின் மூலம் படித்துக்கொண்டு இருக்கிறேன், அதில் ஒன்று “Water Distribution and Layout Using EPANET” என்ற பயிற்சியை நான் படித்தது என் வாழ்க்கையில் ஒரு முக்கியமான திருப்பமாக அமைந்தது.

ஒரு அணையை எவ்வளவு உயரத்தில் கட்ட வேண்டும், எவ்வளவு அளவு தண்ணீர் சேமிக்க வேண்டும், எந்த வகை inlet மற்றும் outlet குழாய்களை பயன்படுத்த வேண்டும், எந்த பொருட்களை தேர்வு செய்ய வேண்டும், குழாய்களின் விட்டம் என்ன இருக்க வேண்டும் போன்ற தொழில்நுட்ப விஷயங்களை ஆழமாக கற்றுக்கொண்டேன்.

இவை எல்லாம் புத்தக அறிவாக மட்டுமில்லாமல், நடைமுறை அனுபவமாக எனக்கு கிடைத்தது. இன்டெர்ஷிப் காக ஒரு நிறுவனத்திற்கு சென்றபோது ஒரு அணை கட்டுவதற்கான ப்ளான் போட சொன்னார்கள், நான் படித்த “Water Distribution and Layout Using EPANET” பயன் படுத்தி போட்ட ப்ளானை பார்த்து அங்கு இருந்த அதிகாரிளே ஆச்சரியப்பட்டார்கள்.

வீட்டில் நான் அணை வடிவமைப்பு, கட்டிடம் வடிவமைப்பு போன்ற டிசைன்களை உருவாக்கிக் கொண்டிருந்தால், அதை அவர்கள் ஆச்சரியமாக பார்த்து சந்தோஷப்படுவார்கள். அந்த தருணங்கள் எனக்கு மிகுந்த உற்சாகத்தை அளிக்கின்றன. மற்ற மாநிலங்களில் இதுபோன்ற பயிற்சிகள் இருந்தாலும், அதிக கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். நான் அரசு கல்லூரி மாணவன் என்பதால், கட்டணத்தைச் செலுத்துவதற்கே சிரமம் இருந்தது.

நான் முதல்வன் திட்டத்தின் மூலம் , Tamil Nadu Skill Development Corporation வழங்கிய இந்த இலவச பயிற்சிகள் என் வாழ்க்கையை மாற்றியமைத்துள்ளன. இது எனக்கு புதிய திறன்கள், புதிய நம்பிக்கை, புதிய எதிர்காலத்தை அளித்துள்ளது. இதற்காக தமிழ்நாடு அரசுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இன்று நான் இன்னும் சிறப்பாக வளர வேண்டும் என்ற தன்னம்பிக்கையுடன் முன்னேறிக் கொண்டிருக்கிறேன். நான் முதல்வன் திட்டத்தை எங்களுக்கு அளித்த தமிழக அரசுக்கு நன்றி
Thursday, February 19, 2026

SSLC பொதுத்தேர்வு பெயர்ப்பட்டியலில் திருத்தம் / சேர்த்தல் / நீக்கம் செய்ய அரசுத் தேர்வுகள் இயக்ககம் ஏற்பாடு!

SSLC பொதுத்தேர்வு பெயர்ப்பட்டியலில் திருத்தம் / சேர்த்தல் / நீக்கம் செய்ய அரசுத் தேர்வுகள் இயக்ககம் ஏற்பாடு!

Thursday, February 19, 2026

TET - 2026 பணிச்சான்று - தேவையின்றி அடுக்கப்படும் ஆவணங்கள்! தேர்வு & தேர்தல் காலத்தில் அவதிக்குள்ளாகும் ஒட்டுமொத்த கல்வித்துறை! தீர்வு யார் கரங்களில்?

TET 2026 பணிச்சான்று - தேவையின்றி அடுக்கப்படும் ஆவணங்கள்! தேர்வு & தேர்தல் காலத்தில் அவதிக்குள்ளாகும் ஒட்டுமொத்த கல்வித்துறை! தீர்வு யார் கரங்களில்?

✍🏼செல்வ.ரஞ்சித் குமார்_

ஆசிரியர் பணியில் உள்ளோருக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு 2026ற்கு விண்ணப்பிக்க ஆசிரியர்களின் Service Certificate தேவை. பணி நியமன அலுவலர் என்ற வகையில் தொடக்கக் கல்வித் துறைக்கு மாவட்டக் கல்வி அலுவலரும் பள்ளிக் கல்வித்துறைக்கு முதன்மைக் கல்வி அலுவலரும் அளிக்கும் பணிச் சான்றிதழ் தான் அங்கீகரிக்கப்படும்.

ஆனால், மேற்படி அலுவலகங்களில் ஆசிரியர்களின் பணிப் பதிவேடுகள் பராமரிக்கப்படுவதில்லை என்பதால் அவற்றைப் பராமரிக்கும் வட்டாரக் கல்வி அலுவலர் / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியரின் பரிந்துரையின் பேரில்தான் DEO / CEO ஆசிரியர்களுக்கான பணிச்சான்றிதழ்களை வழங்க இயலும்.

இந்தப் பரிந்துரையை வழங்கிட, பணி நியமனம் தொடங்கி, SRன் முதல்பக்கம், கல்வித் தகுதிக்கான சான்றிதழ்கள் என ஒவ்வொரு ஆசிரியரிடம் சராசரியாக 25 - 50 தாள்கள் அடங்கிய ஆவணங்கள் 2 / 3 பிரதிகளில் தேவைப்படுவதாக தகவல்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன.

தற்போது தேர்விற்கு விண்ணப்பிப்போரில் 99% தேர்வுநிலை / சிறப்புநிலை பெற்றவர்களே. அந்நிலைக்கான அங்கீகாரத்தின் போதே மேற்படி ஆவணங்களையெல்லாம் முறையாகச் சமர்ப்பித்து சரிபார்க்கப்பட்டு அவர்தம் பணிப் பதிவேடுகளில் உரிய பதிவுகளும் மேற்கொள்ளப்பட்டுவிட்டன.

அவ்வகையில் 100% சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு பணிபுரிந்து வருவோரின் கல்வித் தகுதிகளையும் பலமுறை சரிபார்த்து வட்டார / மாவட்ட அளவிலான பணிமூப்புப் பட்டியலில் சார்ந்த அலுவலகங்களால் வரிசைப்படுத்தப்பட்டுள்ள ஆசிரியர்களிடம் தற்போது பணிச் சான்று வழங்கிட அடுக்கடுக்கான ஆவணங்கள் கேட்கப்படுவதாகக் கூறப்படுவது என்பது என்னவகையான நடைமுறை என்று புலப்படவில்லை.

மேலும், பணிப்பதிவேட்டின் முன் பக்க நகல் உட்பட அனைத்து ஆவணங்களையும் நகலெடுத்து சமர்ப்பிக்க வேண்டுமெனில், பணிப்பதிவேடு (SR) என்ற ஒன்று எதற்காகப் பராமரிக்கப்பட வேண்டும் என்ற கேள்வி இதுவரை சங்கங்களால் முன்வைக்கப்பட்டதாகத் தெரியவில்லை.

ஒரு ஆசிரியர் தனக்கான பணிச் சான்று கோரி விண்ணப்பிக்கையில் அதிலுள்ள தரவுகள் பணிப்பதிவேட்டின் படி சரியாக உள்ளதா என்பதைச் சரிபார்த்து சரி எனில் அடுத்த மட்டத்திற்கு அனுப்புவதும், தவறு எனில் உரிய ஆவணங்களைக் கேட்டு சரிபார்த்து பணிப்பதிவேட்டில் உரிய பதிவுகளைச் செய்து அதன்பின் அடுத்த மட்டத்திற்கு அனுப்புவதுதான் பணிப்பதிவேட்டைப் பராமரிக்கும் அலுவலகத்தின் பணியாக அடிப்படைப் பணிகளுள் ஒன்றாக இருக்கக்கூடும்.

அதைவிடுத்து பதிந்த பதிவுகளுக்கே மீண்டும் மீண்டும் நகல்கள் கேட்பதால், அதுவும் பணிப்பதிவேட்டின் பதிவுகளின் நகல்களையும் சேர்த்துக் கேட்பதால், பணிப்பதிவேட்டுப் பராமரிப்பு அலுவலர் இம்முறை மட்டும் சராசரியாக 25 தாள்களில் 300 ஆசிரியர்களிடம் 2 நகல்களில் 15,000 தாள்கள் அடங்கிய விண்ணப்பங்களைப் பெற்று அதில் ஒப்பமிட்டு அனுப்பும் நிலையில், மாவட்ட (கல்வி மாவட்ட) அளவில் 2,000 ஆசிரியர்களுக்கான பணிச் சான்றிதழ்களை வழங்கிட வேண்டிய DEO / CEO அலுவலகத்தில் 50,000 தாள்களை அடங்கிய கோப்புகள் குவியப்போகின்றன. அதாவது 100 A4sheet Bundle. அதாவது 3 ஆள் உயரத்திற்கு சுமார் 18 அடி உயரத்திற்கு ஒவ்வொரு DEO / CEO அலுவலகத்திலும் குவியப்போகின்றன. அக்குவியலை பக்கம்பக்கமா ஆய்ந்து ஒரு மாதத்திற்குள் சான்றிதழ் வழங்குவது சாத்தியாமா என்றால். . . . . வாய்ப்பில்லை தான்.

அலுவலர்களின் பணிச்சுமையையோ இவற்றை நகலெடுக்க ஆசிரியர்களால் செலவழிக்கப்பட உள்ள ஒட்டுமொத்தத் தொகையையோ, அலைச்சல்களையோ ஒருபுறம் ஒதுக்கி வைத்துவிட்டாலும், இதற்காகும்தாள்களைத் தயாரிக்க வேண்டி அழிக்கப்படக்கூடிய இயற்கை வளங்களையும் கருத்தில் கொள்ள வேண்டியது வேறு எவரையும் விட சுற்றுச்சூழல் கல்வியை உலகிற்குப் போதிக்கும் ஆசிரியர்களுக்கு மிக முக்கிய பொறுப்பாக உள்ளது.

இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டுதான் TET உள்ளிட்ட தேர்வுகளின் விண்ணப்பங்கள் Onlineல் பெறப்பட்டு வருகிறது. மற்ற துறைகள் மாறிவிட்டன. அவர்களுக்குக் கற்பித்த - கற்பிக்கும் நாம் மாறுவது எப்போது என்றுதான் தெரியவில்லை.

Service Certificateஐ பொறுத்தவரை 3 தாள்களில் முடிய வேண்டிய நடைமுறைதான். ஆசிரியர்கள் கோருவதை BEO/HM பணிப்பதிவேட்டில் சரிபார்த்து கையொப்பமிட்டு DEO/CEOவிற்கு அனுப்பினால் போதுமானது. கல்வித்துறை அல்லாத மற்ற துறைகளில் பலகாலமாக இதுதான் நடைமுறையே.

கல்வித்துறையில் மாறுதல் கலந்தாய்வுகளே ஆசிரியர்களின் அனைத்துவித தகவல்களும் அடங்கிய EMIS வழிதான் நடைபெறுகிறது எனும் போது, அதன் மூலமே Service Certificate விண்ணப்பித்து Online Approval வழியே ஆசிரியர்கள் பெற்றுக்கொள்ளும் நடைமுறையைக் கொண்டு வருவது கல்வித்துறைக்கும் இலகுவான பணிதான்.

இதையும் தாண்டி ஒருபடி மேலே சென்று, Individual EMIS Loginல் TRBயின் TETற்கு விண்ணப்பிக்கும் நடைமுறையைக் கொண்டுவரும் வல்லமையும் சார்ந்த இரு துறைகளுக்குமே இருக்கிறது.

இவற்றையெல்லாம் அவர்களுக்கு விரைந்து நினைவூட்ட / வலியுறுத்த வேண்டிய நிலையில் சங்கங்கள் உள்ளன. ஆசிரியர்களோ அலுவலர்களோ யாராயினும் அவர்தம் பணிச் சூழலை எளிமையாக்கித் தருவதுதானே அனைத்துத்துறை சார் சங்கங்களின் பொறுப்பு. பொறுப்பை விரைந்து உணர்ந்து செயல்பட்டால் பயனுள்ளதாக இருக்கும்.

ஆசிரியர்களின் பலதரப்பட்ட கல்வித் தகுதிகளால் TETற்கு விண்ணப்பிப்பதில் எழுந்த குழப்பத்தைத் தற்போது டிட்டோஜாக் தீர்த்து வைத்துள்ளது. அதனோடே கூடுதலாக,

1. தேவையற்ற Xerox குவிப்பு நடைமுறையைத் தவிர்த்து SR அடிப்படையில் Service Certificate வழங்கிடல்

2. EMIS Online Approval வழி Service Certificate வழங்கிடல்

3. EMIS மூலம் TETற்கு விண்ணப்பித்தல்

என்ற மூன்றில் ஒன்றையாகிலும் நடைமுறைக்குக் கொண்டுவர களத்தில் விரைந்து இறங்க வேண்டும்.

கூடுதலாக, TET முடித்தால் தான் பணியில் தொடர முடியும் என்பதே கல்வித்துறையின் தற்போதைய நடைமுறை என்பதால், அந்நடைமுறைக்கு இணங்கும் ஆசிரியர்களிடம் சமூக வலைதளங்களில்,

* ~முன் அனுமதி வாங்கு~

* ~தடையின்மைச் சான்று NOC வாங்கு~

என்று 'பாஸ் பெருசா பெயிலு பெருசா' காமடி போல உருட்டிக் கொண்டிருப்போரிடம், *அட வண்டுருட்டான் தலையன்களா, நாமா நம்ம விருப்பத்துல எழுதப்போனாத்தான் Pre permission, NOC எல்லாம் தேவ; அவுகளே நீ எழுதுனாத்தேன் வேலைல வைப்போம்னு சொல்றதுக்கெல்லாம் தேவையில்ல!'* என்று முற்றுப்புள்ளி வைப்பதும் காலத்தின் தேவை. ஏனெனில், ஆசிரியர்களின் தேவையற்ற அவதிகளுக்கு அடித்தளமிடுவதே இதுபோன்ற சமூக வலைத்தள வாந்திகளே!

TETற்கு விண்ணப்பிக்க 2 மாதங்கள் காலமிருப்பினும், இலட்சக்கணக்கில் ஆசிரியர்கள் தேர்வெழுத உள்ளதால் காலம், பொதுத் தேர்தல், பொதுத்தேர்வுப் பணி & TRB Server உள்ளிட்டவற்றின் நிலையையும் அறிந்து சங்கங்கள் விரைந்து செயல்பட சார்ந்த ஆசிரியர்கள் அனைவருமே தங்களது மட்டத்தில் தொடர் அழுத்தங்களைக் கொடுத்தாக வேண்டும். இப்ப அழுத்தம் தரலேனா பின்னாடி வழக்கம்போல அவதிதான்படனும். ஐந்தாண்டுத் தவறை இனியும் தொடராதிருந்தால் தொல்லைகள் குறையும்!
Thursday, February 19, 2026

NMMS January 2026 - Scholarship Examination Result Published






National Means Cum Merit Scholarship Scheme Examination - January - 2026 Result

👇👇👇👇 Check Your Result


2025-2026-ம் கல்வி ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் அங்கீகாரம் பெற்ற அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை திட்ட தேர்வு அரசுத் தேர்வுகள் இயக்ககத்தால் 10.01.2026 அன்று நடைப்பெற்றது.

தற்போது தேர்வெழுதிய மாணவர்களின் மதிப்பெண் விவரங்கள் அரசுத் தேர்வுகள் இயக்கக www.dge.tn.gov.in இணையதளத்தில் 18.02.2026 அன்று வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் மாணவர் விவரங்களாகிய பெயரில் உள்ள எழுத்துக்கள், பிறந்த தேதி, மாற்றுத்திறனாளி வகை மற்றும் இனம் (Community) ஆகியவற்றில் திருத்தங்கள் ஏதேனும் இருப்பின் உரிய ஆதாரங்களுடன் தேர்வு நுழைவுச்சீட்டினை இணைத்து dgedsection@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 24.02.2026-க்குள் தெரிவிக்குமாறு கூட கேட்டுக் கொள்ளப்படுகிறது
Thursday, February 19, 2026

தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று பணிபுரியும் தற்காலிக ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்’ - ராமதாஸ்




தற்காலிக ஆசிரியராக பணியாற்றி பணி வாய்ப்பு இழந்தவர்களுக்கும் நிரந்தரப் பணி வழங்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

“2013-17 ஆம் ஆண்டுகளில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று 2022-23 ஆம் கல்வி ஆண்டில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் சுமார் 5,000 பேர் தற்காலிக ஆசிரியர்களாக பணியில் சேர்ந்தனர். சென்னை ஐகோர்ட்டு வழிகாட்டுதலின் படியும், முதன்மைக் கல்வி அலுவலர்களின் செயல் முறையின் படியும் மாவட்ட கல்வி அலுவலகம் மூலம் ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்து மாதிரி வகுப்புகள் எடுத்து இவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் பணியில் சேர்ந்த காலக்கட்டம் கொரோனா காலகட்டத்தின் இறுதி காலம் என்பதால் அப்போது நிலவிய கடினமான நிதி நெருக்கடியின் காரணமாக 5 மாதங்கள் நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் இல்லாமல் கடினமான சூழ்நிலையில் பணியாற்றியுள்ளனர். பணியில் சேர்ந்த நாள் முதல் இன்றைய நாள் வரை இடைநிலை ஆசிரியர்களுக்கு 12,000 ரூபாய் ஊதியமும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு 15,000 ரூபாய் ஊதியமும் மதிப்பூதியம் என தரப்படுகிறது.

இவர்கள் கற்றல் பணியை மட்டும் மேற்கொள்ளாமல் அரசின் நலத்திட்டங்களை மாணவர்களிடம் கொண்டு போய் சேர்ப்பது, அரசுக்கு நற்பெயர் அளிக்கும் வகையில் மாணவர்களை பண்புள்ளவர்களாகவும், நல்ல மதிப்பெண் எடுப்பவர்களாகவும் உருவாக்குவது போன்ற பணிகளை திறம்பட செய்து வருகின்றனர். மேலும் அனைத்து பணியிடை பயிற்சிகளும் பெற்று கூடுதல் தகுதி பெற்ற ஆசிரியர்களாகவும் உருவெடுத்துள்ளனர்.

அதேசமயம் இவர்களுக்கு தற்செயல் விடுப்பு, மருத்துவ விடுப்புகள் அளிக்கப்படுவதில்லை. இதனால் உடல் நல பாதிப்பு ஏற்பட்டால் கூட விடுப்பு எடுக்காமல் பணியாற்றியாக வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளனர். ஆனாலும் இவர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் முறையே மாதாமாதம் வழங்கப்படுவதில்லை. 5 மாதம், 3 மாதம், 2 மாதம் என காலம் கடந்துதான் வழங்கப்படுகிறது.


இந்த குறைவான சம்பளத்தை கூட மாதாமாதம் முறையாக வழங்காமல் காலம் தாழ்த்தி வழங்குவதால் இந்த ஊதியத்தை மட்டுமே நம்பியுள்ள இவர்களது குடும்பத்தினர் கடும் பொருளாதார நெருக்கடியை சந்திக்கின்றனர். ஆசிரியர் பணிக்கு தகுதித் தேர்வு கட்டாயம் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ள நிலையில், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று பணியாற்றி வரும் இவர்களைப் பணி நிரந்தரம் செய்வதில் எந்த சட்ட சிக்கலும் இருக்காது.



எனவே, கல்வித்துறை மூலம் தற்காலிக ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டு இடைநிலை ஆசிரியர்களாகவும், பட்டதாரி ஆசிரியர்களாகவும் 4 ஆண்டுகளாக பணியாற்றி வரும் இவர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அல்லது அரசுக்கு நிதி நெருக்கடி இருக்குமாயின் பதிவு மூப்பு அடிப்படையில், ஊதியத்தை உயர்த்தி தொகுதிப்பூதியமாக வழங்கி இவர்களின் பணி பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.

அதுபோலவே ஓராண்டு முதல் நான்கு ஆண்டு வரை தற்காலிக ஆசிரியராக பணியாற்றி பணி வாய்ப்பு இழந்தவர்களுக்கும் நிரந்தரப் பணி வாய்ப்பு வழங்க வேண்டும். மேலும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு கொடுத்ததைப் போல இவர்களுக்கும் மே மாத ஊதியம் 15,000 ரூபாய் வழங்க வேண்டும். சம்பளத்துடன் கூடிய தற்செயல் மற்றும் மருத்துவ விடுப்புகள் வழங்கப்பட வேண்டும்.”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Thursday, February 19, 2026

SSLC பொதுத்தேர்வு பெயர்ப்பட்டியலில் திருத்தம் / சேர்த்தல் / நீக்கம் செய்ய அரசுத் தேர்வுகள் இயக்ககம் ஏற்பாடு!

SSLC பொதுத்தேர்வு பெயர்ப்பட்டியலில் திருத்தம் / சேர்த்தல் / நீக்கம் செய்ய அரசுத் தேர்வுகள் இயக்ககம் ஏற்பாடு!



Thursday, February 19, 2026

உள்ளூர் விடுமுறை அறிவிப்பு



விழுப்புரம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் தேரோட்டத்தையொட்டி பிப்.21ல் உள்ளூர் விடுமுறை

பிப்.21ல் விழுப்புரத்தில் அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை
Thursday, February 19, 2026

நிரந்தர பணியிடம் ஆசிரியர் தேவை!


செயின்ட் மேரீஸ் உயர்நிலைப்பள்ளி
குத்துக்கல்வலசை - 627803,
தென்காசி மாவட்டம்.
(சிறுபான்மை அரசு உதவி பெறும் பள்ளி) நிரந்தர பட்டதாரி
ஆசிரியர் தேவை - அறிவியல்
1. ஊதியம் மற்றும் ஊதிய விகிதம் :
அரசு விதிகளின்படி
2. கல்வித்தகுதி : B.Sc. / M.Sc; பி.எட் with TET Pass கல்விச் சான்றிதழ்கள், சாதிச்சான்று மற்றும் இதர சான்றிதழ்களின் புகைப்பட நகல்களுடன் 24.02.2026க்குள் விண்ணப்பிக்கவும்.

தாளாளர்
Thursday, February 19, 2026

நலத்திட்டங்களுக்கு நியமிக்கப்பட்ட கண்காணிப்பு அலுவலர்களே (Monitoring Officers) பொதுத் தேர்வு பணிகளையும் மேற்கொள்ள பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் உத்தரவு!



நலத்திட்டங்களுக்கு நியமிக்கப்பட்ட கண்காணிப்பு அலுவலர்களே (Monitoring Officers) பொதுத் தேர்வு பணிகளையும் மேற்கொள்ள பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் உத்தரவு!

Public Exam Monitoring Officers - Download here
Thursday, February 19, 2026

TET தேர்வு எழுதவுள்ள ஆசிரியர்களுக்கு அனுபவம் வாய்ந்த பயிற்றுநர்களைக் கொண்டு பயிற்சி வழங்க உத்தரவு



சிறப்பு தகுதி தேர்வுக்கு (TET) DIET வழியாக இணையதளப் பயிற்சி - அரசு முதன்மைச் செயலாளர் கடிதம் - 13.10.2025

பார்வையில் காணும் அரசாணையில் தற்போது பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்காக மட்டும் முறைப்படியான ஆசிரியர் தகுதித் தேர்வுகளுடன், 2026ஆம் ஆண்டில் ஜனவரி 2026, ஜூலை 2026, மற்றும் டிசம்பர் 2026 ஆகிய மாதங்களில் சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுகளை நடத்த ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவருக்கு அனுமதி அளித்து ஆணையிடப்பட்டுள்ளது.

2. எனவே, தற்போது பணிபுரிந்து வரும் ஆசிரியர்களை ஆசிரியர் தகுதித் தேர்வு (Special TET) எழுத தயார் செய்யும் வகையில் அவர்களுக்கு மாவட்டந்தோறும் /வருவாய் வட்டம் / இணையவழியில் (online) மாவட்ட கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின்(DIETs) அனுபவம் வாய்ந்த பயிற்றுநர்களைக் கொண்டு பயிற்சி வழங்க தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறேன்.
Thursday, February 19, 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 19.02.2026


திருக்குறள்: 

குறள் 519: 

வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாக 
நினைப்பானை நீங்குந் திரு 

விளக்க உரை: 

மேற்கொண்ட தொழிலில் எப்போதும் முயற்சி உடையவனின் உறவைத் தவறாக நினைக்கும் தலைவனை விட்டுச் செல்வம் நீங்கும்.

பழமொழி :

An empty sack cannot stand upright 

வெறும் கையால் முழம் போட முடியாது

இரண்டொழுக்க பண்புகள் :

1. மூத்தோர் சொல் வார்த்தையும் முழு நெல்லிக்காயும் முதலில் கசக்கும் பின் இனிக்கும்.

2. எனவே மூத்தோர் சொல் கேட்டு நடப்பேன்.

பொன்மொழி : 

வாழ்க்கையில் எந்த நெருக்கடி நிலையில் இருக்கும்பொழுதும் வாய்மையை கடைப்பிடிப்பது போல உறுதியான நிச்சயமான பாதுகாப்பு வேறு எதுவும் கிடையாது- கார்லஸ் டிக்கின்ஸ்

பொது அறிவு : 

01.2000 ரூபாய் நோட்டின் பின்புறத்தில்  இடம்பெற்றுள்ள சின்னம் எது?

    மங்கள்யான்- Mangalyaan

02.உலகின் மிகப்பெரிய மற்றும் மிக உயரமான கடிகாரம்  எங்குள்ளது?

      மெக்கா-சவூதி அரேபியா

 Mecca-Saudi Arabia.

English words :

regret –to feel sorry that you did something or that you did not do something.

ஒன்றைச் செய்தமைக்காக/செய்யாமைக்காக வருத்த உணர்வு கொள்ளுதல்

remorse –a feeling of sadness because you have done something wrong.

தவறு செய்துள்ளமை காரணமாக மனத்தில் தோன்றும் வருத்த உணர்வு.

தமிழ் இலக்கணம்: 

 தன்/தம் பயன் படுத்தும் இடங்கள்
ஒருமை வரும்போது *தன்* உபயோகப் படுத்த வேண்டும்.
1. அருளன் *தன்* கையால் பரிசைப் பெற்றுக் கொண்டான்
2. சிறுமிகள் *தம்* கரங்களால் மலர் தூவினர் 
ஆனால் இதற்கு விலக்கும் உண்டு. மரியாதைக்குரியவர்களைக் குறிக்கும் போது ஒருமையில் இருந்தாலும் *தம்*  என்று தான் குறிக்க வேண்டும் 
சான்றோர் தம்மைத் தாம் புகழ மாட்டார்கள்

தலைவர் தம் பணத்தைக் கொடுத்து பள்ளி மாணவர்களுக்கு புத்தகம் வாங்கிக் கொடுத்தார்.

அறிவியல் களஞ்சியம் :

நமது  பூமிப்பந்து சுற்றிக்கொண்டு இருக்கிறது என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால், முழுமையான காரணம் பலருக்குத் தெரியாது. சூரியனின் ஈர்ப்பு விசையால் சுழல்வதாக எண்ணிக்கொண்டு இருக்கிறோம். பூமி சுழல்வதற்கான முக்கிய காரணம், அதன் உருவாக்கத்தின் தொடக்க காலத்தில் இருந்தே பெறப்பட்ட கோண உந்தம் (Angular Momentum) ஆகும். சுமார் 4.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு சூரிய மண்டலம், அதாவது சூரிய விண்மீன் ஒரு பெரும் சுழலும் வாயு மற்றும் தூசியின் மேகத்தில் இருந்து உருவானது. இந்த மேகம் சுழன்று கொண்டே இருந்தது. அப்போது உருவானதுதான் இந்த பூமி.  பூமி உள்ளிட்ட கோள்கள் உருவாகும்போது, இந்தப் பிரபஞ்ச அளவிலான சுழற்சியின் உந்தம் அனைத்துக்  கோள்களுக்கும் பரிமாறப்பட்டது. இந்த உந்தத்தை இழக்க எந்த புற விசையும் இல்லாததால், பூமி இன்றும் தொடர்ந்து சுழன்று கொண்டே இருக்கிறது.

பிப்ரவரி 19


நீதிக்கதை

 அன்பை வெளிப்படுத்தும் விதம்

ஒரு நாள் வகுப்பறையில் ஆசிரியை மாணவர்களிடம், அன்பை வெளிப்படுத்தும் எதையும் கொண்டு வாருங்கள் என்று கூறி நான்கு மாணவிகளை அனுப்பினார். திரும்பி வந்த மாணவிகளில் ஒரு மாணவியின் கைகளில் மலர் இருந்தது. இன்னொரு மாணவியிடம் வண்ணத்துப் பூச்சி இருந்தது. மற்றொரு மாணவியிடம் ஒரு குஞ்சுப்பறவை இருந்தது. 

நான்கு மாணவிகளில் முதலில் கிளம்பிப்போன மாணவி கடைசியில் வெறும் கையுடன் திரும்பி வந்தாள். ஆசிரியை அந்த மாணவியிடம் நீ ஏன் எதையும் கொண்டு வரவில்லை என்று கேட்டார்.

அதற்கு அந்த மாணவி, நானும் மலரைப் பார்த்தேன். அழகாய் இருந்தது. செடியிலேயே இருக்கட்டும் என்று விட்டுவிட்டேன். வண்ணத்துப் பூச்சியைப் பார்த்தேன். அழகாய் இருந்தது. சுதந்திரமாய்ப் பறக்கட்டும் என்று விட்டுவிட்டேன். குஞ்சுப் பறவையைப் பார்த்தேன். தாய்ப்பறவை தேடுமென்று விட்டுவிட்டேன் என்று பதில் கூறினாள். 

மாணவி கூறிய பதிலைக் கேட்டவுடன் ஆசிரியை அந்த மாணவியை அணைத்துக் கொண்டார். அன்பு என்றால் இது தான். ஒன்றுமே கொடுக்க வேண்டாம். எதையுமே பறிக்காமல் இருந்தால் அதுவே போதும் என்றார்.

இன்றைய செய்திகள்

19.02.2026

⭐ தமிழகத்தில் சமூக பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் முதியோர், மாற் றுத்திறனாளிகள் & ஆதரவற்ற விதவைகளுக்கு வழங்கப்படும் ஓய்வூதியங்கள் மூலம் சுமார் 35.33 லட்சம் நபர்கள் பயன்பெற்று வருகின்றனர்.

⭐உலகின் சர்க்கரை கிண்ணம் என அழைக்கப்படும் கியூபாவில் எரிபொருள் தட்டுப்பாடு நாளுக்கு நாள் மோசமான நிலையை அடைந்துவருகிறது. இதனால் அந்நாட்டின் பொருளாதாரமும், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையையும் முடங்கியுள்ளது.

⭐’ரஷ்யாவிடம் இருந்து 2000 குழந்தைகள் மீட்பு' - உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀டி20 உலகக் கோப்பை:
நமீபியாவை வீழ்த்தி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது பாகிஸ்தான்.

Today's Headlines

⭐ Under the social security schemes in Tamil Nadu, about 3.533 million (35.33 lakh) people are benefiting from pensions provided to senior citizens, persons with disabilities, and destitute widows.

⭐ In Cuba, which is known as the “Sugar Bowl of the World,” the fuel shortage is worsening day by day. As a result, the country’s economy and the normal life of the people have been severely affected.

⭐ ‘2,000 children rescued from Russia’ – Ukrainian President Zelenskyy

🏀 Sports News

🏀 T20 World Cup:
Pakistan advanced to the Super 8 round after defeating Namibia.

Covai women ICT_போதிமரம்

Wednesday, February 18, 2026

Wednesday, February 18, 2026

சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்தான பல சந்தேகங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளர் தெரிவித்த தகவல்கள்

நேற்று 17/02/26 தினம் டிட்டோஜாக் பொறுப்பாளர்கள் மரியாதைக்குரிய பள்ளிக் கல்வித் துறை செயலாளர் மற்றும் மரியாதைக்குரிய ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளர் திரு ராமேஸ்வர முருகன் தொடக்க கல்வி இயக்குனர் மரியாதைக்குரிய திரு நரேஷ் ஆகியோர்களை சந்தித்து தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பணியில் இருப்போருக்கான தகுதித் தேர்வு குறித்தான பல சந்தேகங்களை கேட்டு அறிந்தோம்

ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளர் திரு ராமேஸ்வர முருகன் அவர்கள் நம்மிடம் தெரிவித்த தகவல்கள்

1. ஆசிரியர் தகுதி தேர்வுக்கு தற்பொழுது பணியில் உள்ள அனைத்து ஆசிரியர்களும் விண்ணப்பிக்கும் வகையில் இணையதளம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறினார்

2. இதன் மூலம் பத்தாம் வகுப்பு முடித்து இடைநிலை ஆசிரியராக நியமனம் பெற்றவர்கள் 12 ஆம் வகுப்பில் இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம்

3. பனிரெண்டாம் வகுப்பு படிக்காதவர்கள் விண்ணப்பிக்க இயலாது என்ற நிலையும்

4. பன்னிரண்டாம் வகுப்பிலேயே ஆசிரியர் பயிற்சியை முடித்தவர்களும்(SGTT) விண்ணப்பிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது

5. பத்தாம் வகுப்பு 12ஆம் வகுப்பு மற்றும் பிஎட் ஆகியவற்றில் குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்களிருக்க வேண்டும் என்பது (ஏற்கனவே 40% என அறிவிக்கப்பட்டு இருந்தது) நீக்கப்பட்டுள்ளன

6. இடைநிலை ஆசிரியர் பணியிடத்தில் நியமிக்கப்பட்ட bed முடித்த ஆசிரியர்கள் தற்பொழுது அவர்கள் வகிக்கும் பதவிக்கு உண்டான தேர்வு எழுதினால் போதும்.

உதாரணத்திற்கு அவர் தற்பொழுது இடைநிலை ஆசிரியர் பதவியில் வேலை செய்து கொண்டிருந்தால் தாள் ஒன்றும் பட்டதாரி ஆசிரியராக வேலை செய்து கொண்டிருந்தால் தாள் இரண்டும்

தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்று இருந்தால் அவர் பணியில் தொடர தாள் ஒன்றும் பதவி உயர்வு பெற தாள் இரண்டும் எழுத வேண்டும்

7. பொதுவாக தற்போது தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியராக பணியாற்றி வருபவர் பணியில் தொடர தாள் ஒன்றும் பட்டதாரி ஆசிரியராக பதிவு உயர்வு பெற தாள் இரண்டும் தேர்வு எழுத வேண்டும்

8. மாற்றுத்திறனாளி ஆசிரியர்களுக்கும் இன சுழற்சி அடிப்படையிலேயே நிர்ணயிக்கப்பட்டுள்ள மதிப்பெண்களை அவர்களுக்கு தகுதி மதிப்பெண்களாக கொள்ளப்படுகிறது

9. *OC எனப்படும் இதர வகுப்பினருக்கு NCTE விதிகளின்படி 90 மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் அவர்களுக்கு அந்த மதிப்பெண்களை குறைக்க வாய்ப்பு இல்லை*

10. பிற இனத்தவர்களுக்கு(OBC,ST.ST) பேச்சு மதிப்பெண்ணை மாநில அரசுகள் நிர்ணயித்துக் கொள்ளலாம் என்ற NCTE விதிகளின்படியே மதிப்பெண்கள் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்கள்

11. பொதுவாக EMIS id உள்ளவர்கள் அனைவரும் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

12. சுயநிதி பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும் EMIS I'd வழங்கப்பட்டுள்ளதால் அவர்களும் விண்ணப்பிக்கலாம்

13. SMC மூலம் தற்பொழுது பள்ளிகளில் காலியாக உள்ள இடங்களில் நியமிக்கப்பட்டுள்ள தற்காலிக ஆசிரியர்களுக்கும் தற்காலிக EMIS id வழங்கப்பட்டுள்ளதால் அவர்களும் விண்ணப்பிக்கலாம்

14. தொடக்க நடுநிலைப் பள்ளிகளில்பனியாற்றும் ஆசிரியர்களின் பணிச் சான்றிதழில் தலைமை ஆசிரியர் கையொப்பம் வட்டார கல்வி அலுவலர் கையொப்பம் மற்றும் மாவட்ட கல்வி(தொடக்கக்கல்வி) அலுவலர் கையொப்பம் மூன்றும் இடம் பெற வேண்டும்

15. உயர்நிலை மேல்நிலை மற்றும் சுயநிதி பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் பணிச் சான்றிதழில் தலைமை ஆசிரியர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்(இடைநிலை/தனியார் பள்ளிகள்) கையொப்பம் இடம் பெற வேண்டும்

16. பொதுவாக பணியில் தொடர அந்தந்த பதவிக்கு உரிய தேர்வும் பதவி உயர்வில் செல்ல வேண்டுமாயின் அதற்கு உண்டான தேர்வு எழுத வேண்டும்

17. பட்டதாரி ஆசிரியர்கள் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆகியோர் தாள் இரண்டு மட்டும் எழுதினால் போதுமானது

18. இடைநிலை ஆசிரியர்கள் பணியில் தொடர மற்றும் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற தாள் ஒன்று மட்டும் எழுதினால் போதுமானது

19. தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பணியில் தொடர தாள் ஒன்று எழுதினால் போதுமானது

20. இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெற தாள் இரண்டு எழுத வேண்டும்

மேற்கண்ட தகவல்கள் நேற்று பெறப்பட்டன விண்ணப்பிக்க கால அவகாசம் போதுமான அளவு அளிக்கப்பட்டுள்ளதால் போதிய தகவல்கள் திரட்டிக் கொண்டு அதன் அடிப்படையில் தவறில்லாமல் விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்

கே.பி.ரக்‌ஷித்.

மாநிலத் தலைவர் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி