Breaking

Wednesday, February 18, 2026

Wednesday, February 18, 2026

சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்தான பல சந்தேகங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளர் தெரிவித்த தகவல்கள்

நேற்று 17/02/26 தினம் டிட்டோஜாக் பொறுப்பாளர்கள் மரியாதைக்குரிய பள்ளிக் கல்வித் துறை செயலாளர் மற்றும் மரியாதைக்குரிய ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளர் திரு ராமேஸ்வர முருகன் தொடக்க கல்வி இயக்குனர் மரியாதைக்குரிய திரு நரேஷ் ஆகியோர்களை சந்தித்து தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பணியில் இருப்போருக்கான தகுதித் தேர்வு குறித்தான பல சந்தேகங்களை கேட்டு அறிந்தோம்

ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளர் திரு ராமேஸ்வர முருகன் அவர்கள் நம்மிடம் தெரிவித்த தகவல்கள்

1. ஆசிரியர் தகுதி தேர்வுக்கு தற்பொழுது பணியில் உள்ள அனைத்து ஆசிரியர்களும் விண்ணப்பிக்கும் வகையில் இணையதளம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறினார்

2. இதன் மூலம் பத்தாம் வகுப்பு முடித்து இடைநிலை ஆசிரியராக நியமனம் பெற்றவர்கள் 12 ஆம் வகுப்பில் இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம்

3. பனிரெண்டாம் வகுப்பு படிக்காதவர்கள் விண்ணப்பிக்க இயலாது என்ற நிலையும்

4. பன்னிரண்டாம் வகுப்பிலேயே ஆசிரியர் பயிற்சியை முடித்தவர்களும்(SGTT) விண்ணப்பிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது

5. பத்தாம் வகுப்பு 12ஆம் வகுப்பு மற்றும் பிஎட் ஆகியவற்றில் குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்களிருக்க வேண்டும் என்பது (ஏற்கனவே 40% என அறிவிக்கப்பட்டு இருந்தது) நீக்கப்பட்டுள்ளன

6. இடைநிலை ஆசிரியர் பணியிடத்தில் நியமிக்கப்பட்ட bed முடித்த ஆசிரியர்கள் தற்பொழுது அவர்கள் வகிக்கும் பதவிக்கு உண்டான தேர்வு எழுதினால் போதும்.

உதாரணத்திற்கு அவர் தற்பொழுது இடைநிலை ஆசிரியர் பதவியில் வேலை செய்து கொண்டிருந்தால் தாள் ஒன்றும் பட்டதாரி ஆசிரியராக வேலை செய்து கொண்டிருந்தால் தாள் இரண்டும்

தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்று இருந்தால் அவர் பணியில் தொடர தாள் ஒன்றும் பதவி உயர்வு பெற தாள் இரண்டும் எழுத வேண்டும்

7. பொதுவாக தற்போது தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியராக பணியாற்றி வருபவர் பணியில் தொடர தாள் ஒன்றும் பட்டதாரி ஆசிரியராக பதிவு உயர்வு பெற தாள் இரண்டும் தேர்வு எழுத வேண்டும்

8. மாற்றுத்திறனாளி ஆசிரியர்களுக்கும் இன சுழற்சி அடிப்படையிலேயே நிர்ணயிக்கப்பட்டுள்ள மதிப்பெண்களை அவர்களுக்கு தகுதி மதிப்பெண்களாக கொள்ளப்படுகிறது

9. *OC எனப்படும் இதர வகுப்பினருக்கு NCTE விதிகளின்படி 90 மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் அவர்களுக்கு அந்த மதிப்பெண்களை குறைக்க வாய்ப்பு இல்லை*

10. பிற இனத்தவர்களுக்கு(OBC,ST.ST) பேச்சு மதிப்பெண்ணை மாநில அரசுகள் நிர்ணயித்துக் கொள்ளலாம் என்ற NCTE விதிகளின்படியே மதிப்பெண்கள் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்கள்

11. பொதுவாக EMIS id உள்ளவர்கள் அனைவரும் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

12. சுயநிதி பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும் EMIS I'd வழங்கப்பட்டுள்ளதால் அவர்களும் விண்ணப்பிக்கலாம்

13. SMC மூலம் தற்பொழுது பள்ளிகளில் காலியாக உள்ள இடங்களில் நியமிக்கப்பட்டுள்ள தற்காலிக ஆசிரியர்களுக்கும் தற்காலிக EMIS id வழங்கப்பட்டுள்ளதால் அவர்களும் விண்ணப்பிக்கலாம்

14. தொடக்க நடுநிலைப் பள்ளிகளில்பனியாற்றும் ஆசிரியர்களின் பணிச் சான்றிதழில் தலைமை ஆசிரியர் கையொப்பம் வட்டார கல்வி அலுவலர் கையொப்பம் மற்றும் மாவட்ட கல்வி(தொடக்கக்கல்வி) அலுவலர் கையொப்பம் மூன்றும் இடம் பெற வேண்டும்

15. உயர்நிலை மேல்நிலை மற்றும் சுயநிதி பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் பணிச் சான்றிதழில் தலைமை ஆசிரியர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்(இடைநிலை/தனியார் பள்ளிகள்) கையொப்பம் இடம் பெற வேண்டும்

16. பொதுவாக பணியில் தொடர அந்தந்த பதவிக்கு உரிய தேர்வும் பதவி உயர்வில் செல்ல வேண்டுமாயின் அதற்கு உண்டான தேர்வு எழுத வேண்டும்

17. பட்டதாரி ஆசிரியர்கள் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆகியோர் தாள் இரண்டு மட்டும் எழுதினால் போதுமானது

18. இடைநிலை ஆசிரியர்கள் பணியில் தொடர மற்றும் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற தாள் ஒன்று மட்டும் எழுதினால் போதுமானது

19. தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பணியில் தொடர தாள் ஒன்று எழுதினால் போதுமானது

20. இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெற தாள் இரண்டு எழுத வேண்டும்

மேற்கண்ட தகவல்கள் நேற்று பெறப்பட்டன விண்ணப்பிக்க கால அவகாசம் போதுமான அளவு அளிக்கப்பட்டுள்ளதால் போதிய தகவல்கள் திரட்டிக் கொண்டு அதன் அடிப்படையில் தவறில்லாமல் விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்

கே.பி.ரக்‌ஷித்.

மாநிலத் தலைவர் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி
Wednesday, February 18, 2026

அரசு / அரசு உதவிபெறும் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பிக்கவும் பணிச்சான்றுகள் வழங்குவதற்கு தேவையான ஆவணங்கள் இணைப்பது குறித்து அறிவுரை

ஆசிரியர் தகுதித் தேர்வு 2026

அரசு / அரசு உதவிபெறும் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பிக்கவும் பணிச்சான்றுகள் வழங்குவதற்கு தேவையான ஆவணங்கள் இணைப்பது குறித்து அறிவுரை - DEO Proceedings

பார்வையில் காணும் ஆசிரியர் தேர்வி வாரிய அறிக்கையின்படி அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகளில் தற்போது பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு -2026 (TET) நடைபெற இருப்பதால், இதற்கு ஆன்லைன் (Online)இல் ஆசிரியர் விண்ணப்பிக்கும் போது பணிச்சான்றிதழ் (Service Certificate) பதிவேற்றம் செய்யப்பட வேண்டி இருப்பதால், இப்பணிச்சான்றிதழ் பெற விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள் கீழ்க்கண்ட சான்றிதழ் நகலுடன் விண்ணப்பிக்க அறிவுறுத்துமாறு வட்டாரக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

குறிப்பு : ஒரு ஆசிரியர் இரண்டு தேர்வுகளில் (TET Paper 1 மற்றும் TET Paper 2) விண்ணப்பம் செய்து இருந்தால் தனித்தனியாக கருத்துரு சமர்ப்பிக்கப்பட வேண்டும்)


1. முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டு வட்டாரக்கல்வி அலுவலர்

2. கையொப்பத்துடன் Annexure 1 - இரு நகல்களில்

3. சம்பந்தப்பட்ட ஆசிரியரின் விண்ணப்ப கடிதம்

4. பணி நியமன ஆணை நகல்

5. பணிப்பதிவேடு முதல் பக்க நகல்

6. முதன் முதலில் நியமனம் செய்த பதவியில் பணிவரன்முறை செய்யப்பட்ட ஆணை நகல் அல்லது பணிப்பதிவேடு பதிவு செய்யப்பட்ட பக்க நகல்

7. தற்போதைய பதவியில் பணிவரன்முறை செய்யப்பட்ட நகல் அல்லது பணிப்பதிவேடு பதிவு செய்யப்பட்ட பக்க நகல்

8. TET தாள் 1/ TET தாள் 2 உரிய கல்வித் தகுதித் சான்று நகல்கள்
Wednesday, February 18, 2026

TET FOR WORKING TEACHERS ONLINE APPLICATION-2026 Direct Link




💢 பணிபுரியும் ஆசிரியர்களுக்கான தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு - 2026

🟢தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு மட்டும் இத்தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது.

🟢விண்ணப்பதாரர்களுடைய சரியான EMIS ID எண்ணை பூர்த்தி செய்ய வேண்டும். இவ்விவரங்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தினால் பின்னர் சரிபார்க்கப்படும்.

குறிப்பு:

🔴கொடுக்கப்பட்ட EMIS ID எண் தவறாக இருப்பின், அல்லது

🔴ஆசிரியராக பணியில் சேர்ந்த நாள் 01.09.2025 அன்றோ அல்லது அதற்கு முன்பாகவோ இல்லையெனில் தங்களுடைய விண்ணப்பம் செல்லாததாகக் கருதி நிராகரிக்கப்படும்.

- 🔊TRB அறிவிப்பு 

TET FOR WORKING TEACHERS ONLINE APPLICATION - 2026 Direct Link

ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் சிறப்பு டெட் தேர்வு விண்ணப்பிக்கும் பகுதி தற்போது Open செய்யப்பட்டுள்ளது.

👇👇👇👇

TRB Direct Link - Click here

Wednesday, February 18, 2026

பள்ளிக் கல்வித் துறையின் நலத்திட்டங்களை கண்காணிக்க மாவட்ட வாரியாக உயர் அலுவலர்களை நியமனம் செய்து பள்ளிக் கல்வித் துறை செயலாளர் உத்தரவு!



பள்ளிக் கல்வித் துறையின் நலத்திட்டங்களை கண்காணிக்க மாவட்ட வாரியாக உயர் அலுவலர்களை நியமனம் செய்து பள்ளிக் கல்வித் துறை செயலாளர் உத்தரவு!

Secretary Letter - Monitoring Officers

👇👇👇

Wednesday, February 18, 2026

துறைமுக மேல்நிலைப்பள்ளி - ஆசிரியர் தேவை காலிப்பணியிடங்கள் அறிவிப்பு

தூத்துக்குடி துறைமுக கல்வி கழகம் - துறைமுக மேல்நிலைப்பள்ளி - ஆசிரியர் தேவை காலிப்பணியிடங்கள் அறிவிப்பு

PG - வேதியியல் - SC-A

PG -பொருளியல் - SC-A

PG - வணிகவியல் - OC/GT

PG - விலங்கியல் - OC/GT

விண்ணப்பிக்க கடைசி நாள் : 04.03.2026
Wednesday, February 18, 2026

TET சான்றிதழில் உள்ள பிழைகளை சரி செய்யும் வசதி ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது

தகவலுக்காக..

ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழில் உள்ள பிழைகளை சரி செய்யும் வசதி ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தேவை உள்ளோர் பயன்படுத்திக்கொள்ளவும்.

ஆசிரியர் தகுதித் தேர்ச்சி சான்றிதழ் பதிவிறக்கம் செய்த அதே முறையில், LOGIN செய்யவும். அதில் CHANGE REQUEST என்ற MENU உள்ளது. ‌அதில் நமக்கு தேவையான திருத்தத்தை தேர்வு செய்து, அதற்குண்டான SUPPORTING DOCUMENTS UPLOAD செய்யவும்.. பின் PAY OPTION வரும். அதில் ரூ200+16=216 செலுத்த வேண்டியிருக்கும். இவை அனைத்தும் LAPTOP or COMPUTER ல் மட்டுமே செய்ய முடியும்.
Wednesday, February 18, 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 18.02.2026


மார்ட்டின் லூதர்
திருக்குறள்: 

குறள் 513: 

அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும் 
நன்குடையான் கட்டே தெளிவு 

விளக்க உரை: 

அன்பு, அறிவு, ஐயமில்லாமல் தெளியும் ஆற்றல், அவா இல்லாமை ஆகிய இந் நான்கு பண்புகளையும் நிலையாக உடையவனைத் தெளியலாம்.

பழமொழி :

Hard work writes your destiny.         

கடின உழைப்பே உங்கள் விதியை எழுதும்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. மூத்தோர் சொல் வார்த்தையும் முழு நெல்லிக்காயும் முதலில் கசக்கும் பின் இனிக்கும்.

2. எனவே மூத்தோர் சொல் கேட்டு நடப்பேன்.

பொன்மொழி : 

வணங்க ஆரம்பிக்கும் போதே வளர ஆரம்பிப்போம் - கோல்ட்ரிட்ஜ்

பொது அறிவு : 

01.இந்திய மக்களவையின் முதல் பெண் சபாநாயகர் யார்?

மீரா குமார்-Meira Kumar

02.இந்திய நாணயத்தின் (ரூபாய்) சின்னத்தை (₹) வடிவமைத்தவர் யார்?

 டி. உதய குமார்-தமிழ்நாடு
 D. Udaya Kumar - Tamilnadu

English words :

Famished-starving

Slugishly-slowly

தமிழ் இலக்கணம்: 

 வாக்கிய பிழை பாகம் 2
மாறன் சிறந்த இசை வல்லுனராக ஆக விரும்பினான்
வல்லுனராக –இதிலே ஆக என்று இருப்பதால் தனியாக ஒரு ஆக தேவையில்லை
2. பத்தே பத்து கடைகள் மட்டும் திறந்து இருந்தன.
பத்தே, மட்டும் இரண்டுமே அழுத்தம் கொடுக்கும் சொல். எனவே 
அ. பத்து கடைகள் மட்டும் திறந்து இருந்தன.

ஆ. பத்தே பத்து  கடைகள்  திறந்து இருந்தன.

என்று எழுத வேண்டும் 
நாளை மற்றும் ஒரு குறிப்பு பார்ப்போம்

அறிவியல் களஞ்சியம் :

பூஞ்சைகள் பிளாஸ்டிக்கை உடைக்கும் சரியான செயல்முறை இன்னும் முழுமையாக புரிந்து கொள்ளப்படவில்லை. இருப்பினும், பூஞ்சைகள் பிளாஸ்டிக்கை எளிய மூலக்கூறுகளாக சிதைக்கின்றன, பின்னர் அவை உறிஞ்சி அல்லது வெளியேற்றும் என்று நம்பப்படுகிறது.

பிப்ரவரி 18

மார்ட்டின் லூதர்  அவர்களின் நினைவுநாள்

மார்ட்டின் லூதர் (Martin Luther, நவம்பர் 10, 1483–பெப்ரவரி 18, 1546) ஒரு கிறித்தவத் துறவியும் செருமனிய மதகுருவும், இறையியலாளரும், பல்கலைக்கழகப் பேராசிரியரும், புரட்டஸ்தாந்தத்தின் தந்தையும், திருச்சபைச் சீர்திருத்தவாதியும் ஆவார். இவரது கருத்துக்கள் புரட்டஸ்தாந்தச் சீர்திருத்தத்தில் செல்வாக்குச் செலுத்தி மேனாட்டு நாகரிகத்தின் போக்கையே மாற்றியது. 

மைக்கலாஞ்சலோ அவர்களின் நினைவுநாள்

மைக்கலாஞ்சலோ



மைக்கலாஞ்சலோ டி லொடோவிக்கோ புவோனரோட்டி சிமோனி (Michelangelo di Lodovico Buonarroti Simoni, மார்ச் 6, 1475 - பெப்ரவரி 18, 1564) ஒரு இத்தாலிய மறுமலர்ச்சிக் கால ஓவியரும், சிற்பியும், கவிஞரும்,கட்டிடக்கலைஞருமாவார். இவர் மைக்கலாஞ்சலோ எனப் பொதுவாக அறியப்படுகிறார். இவரது கலைசார்ந்த பல்துறைத் திறமையின் உயர்ந்த தரம் காரணமாகச் சமகாலத்தவரான லியொனார்டோ டா வின்சியுடன் சேர்த்து இவரும் மறுமலர்ச்சிக் காலத் தந்தையெனக் கணிக்கப்படுகின்றார்.

மைக்கலாஞ்சலோவின் நீண்ட கால வாழ்க்கையில், அவர் படைத்தவைகள் அனைத்தும் அவரது அதிசயிக்கத்தக்க திறமைக்குச் சான்றாக அமைகின்றன. கடிதத் தொடர்புகள், வரைபடங்கள், நினைவுக் குறிப்புகள் என இவர் எழுதிக் குவித்தவை ஏராளம். இவைகளையும் சேர்த்தால், 16 ஆம் நூற்றாண்டில் அதிகமாக ஆவணப்படுத்தப்பட்ட கலைஞர் இவரே எனலாம்.

நீதிக்கதை

 நன்மை தீமை இரண்டையும் ஏற்றுக்கொள்

ஒரு வயதான விவசாயி தன் வயலில் பாடுபட்டு உழைத்து அதில் வரும் சொற்பமான வருமானத்தில் வாழ்ந்துகொண்டிருந்தார். ஒரு நாள் அவர் வளர்த்து வந்த குதிரை காணாமல் போய்விட்டது. தகவலைக் கேள்விப்பட்ட அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் என்ன ஒரு துரதிர்ஷட நிலை? என்று பரிதாபமாக விசாரித்தனர். அவர்களின் ஆறுதலுக்கு விவசாயி மௌனமாக இருக்கலாம் என்று பதிலளித்தார்.

அடுத்த நாள் தொலைந்துப்போன அவருடைய குதிரை தன்னுடன் மூன்று குதிரைகளை அழைத்து வந்தது. இதை ஆச்சர்யமாக பார்த்த அக்கம் பக்கத்தினர், நீ ரொம்ப அதிர்ஷ்டசாலி, இப்பொழுது நான்கு குதிரை உனக்கு கிடைச்சிடுச்சு என்றனர். தனக்குக் கிடைத்த அதிர்ஷ்டத்தைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் மறுபடியும் இருக்கலாம் என்று கூறினார் விவசாயி. 

ஒரு வாரத்துக்குப் பிறகு, விவசாயியின் மகன் குதிரையை வேகமாக ஓட்டிச்சென்று தவறுதலாக கீழே விழுந்து காலை உடைத்துக்கொண்டான். இப்பொழுது அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள், விவசாயிடம், உனக்கு ஒரு நல்லது நடந்தால், அடுத்து ஒரு கெட்டது நடக்குதே. உன் பையன் எழுந்து நடக்க பத்து மாதத்திற்கும்மேல் ஆகும் போல இருக்கிறதே, ரொம்ப கஷ்டமான நிலைமை என்று கூறி ஆதங்கப்பட்டனர். அப்போழுதும் அந்த விவசாயி பெரிதாக வருந்தாமல் இருக்கலாம் என்று அதே பதிலைக் கூறினார்.

ஒரே வாரத்தில் அந்த நாட்டில் போர் வந்துவிட்டது. வீட்டில் இருக்கும் எல்லா இளைஞர்களும் கட்டாயம் போரில் கலந்துகொள்ள வேண்டும் என்று கட்டளை பிறப்பிக்கப்பட்டது. வீடு வீடாக ராணுவத்தினர் புகுந்து இளைஞர்களை அழைத்துச் சென்றனர். ஆனால், அந்த ஏழை விவசாயியின் மகனுக்குக் கால் உடைந்து இருந்ததால் அவனை மட்டும் அழைத்துச் செல்லவில்லை. இதைக் கண்டு ஊர் மக்கள் அந்த விவசாயியின் அதிர்ஷ்டத்தைக் கண்டு புகழ்ந்தனர். இப்போதும் அந்த விவசாயி இருக்கலாம் என்று கூறினார்.

அந்த விவசாயி ஒவ்வொருமுறையும் கூறும் பதிலைக் கேட்டுக் கொண்டிருந்த அவருடைய நண்பர், அந்த விவசாயியைப் பார்த்து, உனக்கு நல்லது நடந்தாலும், கெட்டது நடந்தாலும் இருக்கலாம் இருக்கலாம் என்றே சொல்கிறாயே ஏன்? என்று கேட்டார்.

அதற்கு அந்த விவசாயி நல்லது, கெட்டது இரண்டும் நாணயத்தின் இருபக்கங்கள். யாருக்கும் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். சுகம், துக்கம் இவை இரண்டும் ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையவை என்பதை உணர்ந்தாலே போதுமானது என்றார்.

இன்றைய செய்திகள்

18.02.2026

⭐ 2030க்குள் 33% மின் பேருந்துகள்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு.

⭐இடைக்கால பட்ஜெட்டில் வேளாண்மைத்துறைக்கு ரூ.47,248 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 ⭐இடைக்கால பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.48,534 கோடி நிதி ஒதுக்கீடு - அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀டி20 உலகக் கோப்பை 2026: கனடாவை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது நியூசிலாந்து.

Today's Headlines

⭐ In Tamil Nadu, 33% Electric Buses by 2030: Chief Minister M. K. Stalin announced.

⭐ In the interim budget, ₹47,248 crore has been allocated to the agriculture sector.

⭐ In the interim budget, ₹48,534 crore has been allocated to the School Education Department, said Minister Thangam Thennarasu.

🏀 Sports News

🏀 In the ICC Men's T20 World Cup 2026, New Zealand defeated Canada by 8 wickets.

Covai women ICT_போதிமரம்

Tuesday, February 17, 2026

Tuesday, February 17, 2026

பள்ளிக் கல்வித் துறையில் புதிதாக பணியேற்றுள்ள 1709 முதுகலை ஆசிரியர்களின் சொந்த மாவட்ட விவரங்கள் பாடவாரியாக வெளியீடு!

பள்ளிக் கல்வித் துறையில் புதிதாக பணியேற்றுள்ள 1709 முதுகலை ஆசிரியர்களின் சொந்த மாவட்ட விவரங்கள் பாடவாரியாக வெளியீடு!

New PG Teachers Details

👇👇👇👇

Tuesday, February 17, 2026

தேர்வுப்பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கான நிலையான செயல்பாட்டு நெறிமுறைகள் - மார்ச்/ஏப்ரல் 2026 வெளியீடு.



தேர்வுப்பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கான நிலையான செயல்பாட்டு நெறிமுறைகள் - மார்ச்/ஏப்ரல் 2026

Examination Hand Book 2026

👇👇👇👇

Tuesday, February 17, 2026

‘10,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாற்றம் இல்லை’.. அன்பில் மகேஷ் விளக்கம்

தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், 10,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாற்றம் இருக்குமா? என்ற கேள்வி எழுந்து வருகிறது. இந்த நிலையில், ‘பொதுத்தேர்வு தேதிகளில் எந்த மாற்றமும் இருக்காது’ என அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று (பிப்.16) விளக்கமளித்துள்ளார். மேலும், “பொதுத்தேர்வுக்கு பின்பே தேர்தல் வருதால், தேர்வு பணிகளில் ஆசிரியர் பணியாற்றுவதில் எந்த பாதிப்பும் இருக்காது. தேர்தல் ஆணையத்துடன் கலந்து ஆலோசனை நடத்திய பிறகே பொதுத் தேர்வு தேதி இறுதி செய்யப்பட்டது” என்றார்.
Tuesday, February 17, 2026

Group 2 தேர்வுக்கான Hall Ticket வெளியீடு


 

குரூப்-2 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை இணையதளத்தில் டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ளது. குரூப்-2 பணியிடங்களுக்கான தாள்-II பொது அறிவு தேர்வு வரும் 22ம் தேதி முற்பகல் நடைபெற உள்ளது. https://www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது

Tuesday, February 17, 2026

தமிழ்நாடு அரசின் இடைக்கால வரவு செலவுத் திட்ட மதிப்பீடு - அறிக்கை!!!



தமிழ்நாடு அரசின் இடைக்கால வரவு செலவுத் திட்ட மதிப்பீடு - PART I

TN Interim Budget -Part-1-Tamil-Copy.pdf

👇👇👇

TN Interim Budget Part - I - Click Here To Download PDF

 

Tuesday, February 17, 2026

பீகார் மாநிலத்தில் ஆசிரியர் தகுதி தேர்வில் அனைத்து பிரிவை சார்ந்த பெண்களுக்கும் தேர்ச்சி சதவீதம் 40 % மட்டுமே



BIHAR - SHE MODEL

பீகார் மாநிலத்தில் ஆசிரியர் தகுதி தேர்வில் அனைத்து பிரிவை சார்ந்த பெண்களுக்கும் தேர்ச்சி சதவீதம் 40 % மட்டுமே....

*150 மதிப்பெண்களுக்கு 60 மதிப்பெண்கள் மற்றும் அதற்கு மேல் எடுத்த பெண் ஆசிரியர்கள்* அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பு!!!

For the Bihar TET (specifically STET 2025/2026), the minimum passing marks for women candidates are set at 40%, which translates to 60 marks out of 150. This 40% qualifying criteria applies to all female candidates, regardless of their specific social category (General, OBC, etc.) as per recent regulations.

Key Details for Bihar STET (Female Candidates):

Total Marks: 150

Minimum Qualifying Percentage: 40%

Passing Marks (Numerical): 60

Applicable To: All women candidates

Exam Structure: Objective-type (MCQ) with no negative marking

👇👇👇👇

Bihar-STET-2025-Official-Notification - Download here
Tuesday, February 17, 2026

தமிழ்நாடு இடைக்கால பட்ஜெட் 2026 - முக்கிய அறிவிப்புகள் உடனுக்குடன் ...



நெடுஞ்சாலை

நடப்பாண்டில் 253 கி.மீ. நீளமுள்ள சாலைகளை 1,647 கோடி மதிப்பீட்டில் நான்கு வழித்தட சாலைகளாக அகலப்படுத்துவதற்கான பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன.

நடப்பாண்டில் 1057 கி.மீ. நீளமுள்ள சாலைகள் 1000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தரம் உயர்த்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த இடைக்கால வரவு - செலவுத் திட்ட மதிப்பீடுகளில் நெடுஞ்சாலைகள் மற்றும் மற்றும் சிறு துறைமுகங்கள் துறைக்கு ரூ.21,132 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
போக்குவரத்துத் துறைக்கு

தமிழக இடைக்கால பட்ஜெட்டில் போக்குவரத்துத் துறைக்கு ரூ.13,062 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
ஓய்வூதியத் திட்டம்

தமிழ்நாடு இடைக்கால பட்ஜெட்டில் அரசு ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்துக்கு ரூ. 11,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சுற்றுலா


சுற்றுலாவுக்காக 30.79 கோடி பேர் தமிழ்நாடு வந்துள்ளனர்.

2024ஆம் ஆண்டில் 30.79 கோடி சுற்றுலா பயணிகள் எண்ணிக்கையுடன் நாட்டிலேயே தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது.
போக்குவரத்துத் துறைக்கு ரூ.13,062 கோடி

தமிழ்நாடு இடைக்கால பட்ஜெட்டில் போக்குவரத்துத் துறைக்கு ரூ. 13,062 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், தமிழ்நாடு அரசின் மகளிர் விடியல் பேருந்து பயணத் திட்டத்துக்கு ரூ. 1,722 கோடி ஒதுக்கீடு செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திருக்கோயில் பணிகள்

19 முக்கிய கோயில்களில் ரூ.1000 கோடி மதிப்பிலான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

5 ஆண்டுகளில் 4,180 திருக்கோயில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள 12,931 திருக்கோயில்களில் ரூ.8,100 கோடியில் திருப்பணிகள்!
மெட்ரோவுக்கு ரூ. 63,246 கோடி

மூன்று வழித்தடங்களில் ரூ. 63,246 கோடி மதிப்பீட்டில் 118.9 கி.மீ. தொலைவுக்கான சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகள் விரைந்து நடைபெற்று வருகின்றன.

பூந்தமல்லி புறவழிச் சாலை முதல் போரூர் வரையிலான மெட்ரோ வழித்தடம் வடபழனி மெட்ரோவுடன் இணைக்கப்பட்டுள்ளன. விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும்
மின்தேவை

மின்சார தேவையைக் கருத்தில் கொண்டு எரிசக்தித் துறைக்கு ரூ.18,091 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு!
தகவல் தொழில்நுட்பத்துறைக்கு ரூ.219 கோடி ஒதுக்கீடு

தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் இருந்து தகவல் தொழில்நுட்ப ஏற்றுமதி பதிவாகியுள்ளது.

திருச்சி, மதுரை, ஒசூரில் புதிய டைடல் பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

ரூ.388 கோடியில் புதிய மினி டைடல் பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது
போக்குவரத்துத் துறை

போக்குவரத்துத் துறைக்கு ரூ.13,062 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மகளிர் விடியல் பயணம் திட்டத்துக்கு ரூ.1722 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
மக்கள் நல்வாழ்வு துறை

இடைக்கால பட்ஜெட்டில் மக்கள் நல்வாழ்வு துறைக்கு ரூ.22,090 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு!
வீட்டு மனை பட்டா

கடந்த 5 ஆண்டுகளில் ஆட்சேபனையற்ற அரசு புறப்போக்கும் நிலங்களில் வசிக்கும் 77,800 பேருக்கு வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டுள்ளது.
புதுமைப் பெண் - தமிழ்ப் புதல்வன்

புதுமைப் பெண் திட்டத்தில் 6.95 லட்சம் மாணவிகளும், தமிழ்ப் புதல்வன் திட்டங்களில் 5.40 லட்சம் மாணவர்களும் என ஒட்டுமொத்தமாக 12 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயனடைந்துள்ளனர்
ரூ.374 கோடியில் நதிக்கரை மேம்பாடுத் திட்டம்

காவிரி, வைகை, நொய்யல், தாமிரபரணி ஆறுகளில் கழிவுநீர் கலப்பதை தடுத்து, கரையோரம் பூங்காஆகியவை அமைத்து நதிக்கரை மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள ரூ.374 கோடி ஒதுக்கீடு செய்யப்படகிறது.
துறை வாரியாக

இளைஞர் நலன், விளையாட்டுத்துறைக்கு ரூ.718 கோடி ஒதுக்கீடு

உயர்கல்வித் துறைக்கு ரூ.8,505 கோடி ஒதுக்கீடு
கலைஞர் கனவு இல்லம்

2030 ஆம் ஆண்டுக்குள் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டப்படும் என்ற இலக்குடன் தொடங்கப்பட்ட கலைஞர் கனவு இல்லத் திட்டத்தில் இதுவரை 1.71 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

மேலும், 29,000 வீடுகள் கட்டுமானப் பணியில் இருக்கின்றன.

2001 வரை தமிழக அரசால் கட்டப்பட்ட 1.14 லட்சம் வீடுகள் ரூ. 969 கோடியில் புனரமைக்கப்பட்டுள்ளன.
பள்ளிக் கல்வித்துறை


தமிழக அரசு தாக்கல் செய்திருக்கும் இடைக்கால பட்ஜெட்டில் பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.48,534 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் அறிவிப்பு!
மகத்தான சாதனை


விடியல் பேருந்து திட்டத்தில் 888 கோடி முறை மகளிர் பயணம் செய்து பயனடைந்துள்ளனர்.

6 லட்சம் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1.40 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

19 தோழி விடுதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

மகளிர் நலன் காக்கும் இத்தகையை திட்டங்களை பல மாநிலங்கள் பின்பற்ற தொடங்கி உள்ளன.

மகப்பேறு இறப்பு விகிதம் மற்றும் சிசு இறப்பு விகிதம் தேசிய சாராசரியை விட தமிழ்நாட்டில் குறைவாக உள்ளது.

பெண் ஓதுவார் நியமனம் நமது அரசின் மகத்தான சாதனை
888 முறை பயணம்


மாநகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் விடியல் பேருந்து திட்டத்தில் 888 கோடி முறை பயணம் செய்து பெண்கள் பயனடைந்துள்ளனர்.

மேலும், மாநிலம் முழுவதும் 6 லட்சம் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ. 1.40 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

மகப்பேறு இறப்பு விகிதம் மற்றும் சிசு இறப்பு விகிதம் தேசிய சாராசரியை விட தமிழ்நாட்டில் குறைவாகவே உள்ளது.
ரூ.285 கோடியில் அருங்காட்சியகங்கள்



சோழர் அருங்காட்சியம், நவாய் அருங்காட்சியம், நொய்யல் அருங்காட்சியம் என்று மொத்தம் ரூ.285 கோடியில் தமிழகத்தில் அருங்காட்சியங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

உலகத் தரத்தில் கீழடி மற்றும் பொருநை அருங்காட்சியம் திறந்து வைக்கப்பட்டு பெரிய வரவேற்பை பெற்றுள்ளன.
பட்ஜெட் தாக்கல்


பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது.

தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.
முக்கிய அறிவிப்புகள் வெளியாகும்


அனைத்துத் தரப்பு மக்களின் எதிா்பாா்ப்புகளையும் பூா்த்தி செய்யும் வகையில் பல புதிய திட்டங்கள் இடம்பெறும் என்று தெரிகிறது. குறிப்பாக, பெண்கள், விவசாயிகள், இளைஞா்கள், சிறு வணிகா்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பயனளிக்கும் திட்டங்கள் இடம்பெறக்கூடும்.

இடைக்கால பட்ஜெட் ஏன்?


ஒவ்வோா் ஆண்டும் பிப்ரவரி இறுதி அல்லது மாா்ச் முதல் வாரத்தில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதற்கான சட்டப்பேரவைக் கூட்டத் தொடா் நடைபெறுவது வழக்கம். நிகழாண்டில் பேரவைத் தோ்தல் நடைபெற உள்ளதால் இடைக்கால நிதிநிலை அறிக்கையாக தாக்கல் செய்யப்படுகிறது.

இடைக்கால பட்ஜெட்


தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2026-27ஆம் ஆண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சா் தங்கம் தென்னரசு தாக்கல் செய்து வருகிறார்.

தோ்தல் ஆண்டு என்பதால் இடைக்கால நிதிநிலை அறிக்கையில், பல்வேறு சலுகை அறிவிப்புகள் இடம்பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tuesday, February 17, 2026

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நலன் குறித்து இன்றைய பட்ஜெட்டில் தமிழக அரசு வெளியிடப்பட்டுள்ள முக்கிய அறிவிப்புகள்


அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நலன் குறித்து இன்றைய பட்ஜெட்டில் தமிழக அரசு வெளியிடப்பட்டுள்ள முக்கிய அறிவிப்புகளின் தொகுப்பு...

👇👇👇👇

Download here
Tuesday, February 17, 2026

RH / RL - Restricted Holidays 2026 - வரையறுக்கப்பட்ட விடுப்பு 2026

2026ஆம் ஆண்டுக்கான வரையறுக்கப்பட்ட விடுப்பு நாட்கள் ( மத விடுப்பு விரைவில் பதிவேற்றம் செய்யபடும். அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பதிவிறக்கம் செய்து வைத்துக்கொள்ளவும், ஆண்டு முழுவதும் தேவைப்படும்.

அரசு RH/RL list மட்டுமே வெளியீடு செய்யும்...

எந்த எந்த பண்டிகை எந்த நாளில் வருகிறது என்று பட்டியல் எதுவும் *அரசு வெளியிடுவது இல்லை..*

இந்த ஆண்டு 2025 RH/RL சில குழப்பங்கள் இருந்தது ...

2026 RH/RL பட்டியல் *பண்டிகை தேதிகளின்* அடிப்படையில் தயாரித்து இணைத்துள்ளேன்...

இஸ்லாமிய பண்டிகை பிறையின் அடிப்படையில் மாறுதலுக்கு உட்பட்டது நீங்கள் அறிந்ததே...

ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை தினத்தில் வரும் RH yellow colour highlighted 😊

ஒரே நாளில் இரண்டு பண்டிகை blue colour highlighted..

*GO (Ms) No 14 HRM ( FRiii) Dept Dated 1.2.22 இன் படி 33 Festival/Occasion*

Tuesday, February 17, 2026

JEE முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியீடு


JEE 2026 முதன்மைத் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது; jeemain.nta.ac.inஎன்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்

மாணவர்கள் தங்கள் மதிப்பெண்களையும் தரவரிசைப் பட்டியலையும் இணையதளம் மூலம் சரிபார்த்துக் கொள்ளலாம்; நடப்பாண்டில் முதல் அமர்வில் 13 லட்சம் பேர் தேர்வு எழுதிய நிலையில் 12 மாணவர்கள் 100% பெற்றுள்ளனர்
Tuesday, February 17, 2026

சுற்றுச் சூழல் ஒருங்கிணைப்பாளர்களுக்கு மாறுதல் வழங்குவது நிர்வாகக் காரணங்களால் ரத்து செய்து ஆணை வழங்குதல் - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

மூன்று ஆண்டுகளுக்கு மேல் -மேல்நிலைக்கல்விப்பணி பணியிலிருக்கும் சுற்றுச் சூழல் ஒருங்கிணைப்பாளர்களுக்கு மாறுதல் வழங்குவது நிர்வாகக் காரணங்களால் ரத்து செய்து ஆணை வழங்குதல் - சார்பு

பார்வை 4ன்படி, சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர்களை மூன்று ஆண்டுகள் பணிநிறைவு செய்தவுடன் பள்ளிகளுக்குத் திருப்பி அனுப்பவும், அப்பணிக்கு வர விருப்பம் தெரிவிக்கும் முதுகலை ஆசிரியர்களுக்கு மாவட்டத்திற்குள் மாறுதல் வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களையும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

தேர்வுகள் நெருங்கும் நிலையிலும் மற்றும் நிர்வாகக் காரணங்களினால் தற்போதைய நிலையில் பார்வை 4-ல் காணும் ஆணையை இரத்து செய்து இதன் மூலம் ஆணை வழங்கப்படுகிறது. பின்னாளில் மே 2026ல் பொது மாறுதல் கலந்தாய்வின் போது இது குறித்து பரிசீலிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
Tuesday, February 17, 2026

2026-2027ஆம் நிதியாண்டுக்கான இடைக்காலப் பட்ஜெட்டை நாளை தாக்கல்...


2026-2027ஆம் நிதியாண்டுக்கான இடைக்காலப் பட்ஜெட்டை நாளை காலை 9:30 மணிக்கு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார். இந்த முறையும் காகிதம் இல்லா பட்ஜெட்டாகவே தாக்கல் செய்யப்படுகிறது....

( ஏதாவது இருக்குமா......,!?)
Tuesday, February 17, 2026

கூட்டுறவு சங்கத்தில் லாப பங்குத் தொகை கேட்டு போராடும் ஆசிரியர்கள்!

லாபகரமாக இயங்கி வரும் ஆசிரியர்கள் கூட்டுறவு சங்கம், உறுப்பினர்களுக்கு லாப பங்கீட்டுத் தொகையைத் தராமல் 2 ஆண்டுகளாக இழுத்தடித்து வருவதாக புகார் எழுந்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் சேது பாவாசத்திரம் ஒன்றியத்தில் அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் இணைந்து OP 193- சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றிய ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் கூட்டுறவு சிக்கன மற்றும் கடன் சங்கம் என்ற பெயரில் கூட்டுறவு சங்கத்தை நடத்தி வருகின்றனர்.

இதில் ஆசிரியர்கள், அலுவலர்கள் என 145 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இந்தக் கூட்டுறவு சங்கத்தில் கடன் பெறுவோரிடம் இருந்து மாதந்தோறும் தவணைத் தொகை பிடித்தம் செய்யப்படுவதால், வாராக்கடன் ஏதுமின்றி லாபகரமாக கூட்டுறவு சங்கம் இயங்கி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் சங்கத்தின் லாபத் தொகையில் இருந்து உறுப்பினர்களுக்கு லாப பங்கீட்டுத் தொகை வழங்கப்படுவது வழக்கம்.

குறிப்பாக தீபாவளி, பொங்கல் பண்டிகையின்போது இந்தத் தொகை வழங்கப்படுவதால் பெரும் உதவியாக இருந்து வந்தது. இந்நிலையில், 2023- 2024, 2024- 2025 ஆகிய 2 ஆண்டுகளுக்கான லாப பங்கீட்டுத் தொகை உறுப்பினர்களுக்கு வழங்கப்படவில்லை.

இதுகுறித்து கூட்டுறவு சங்க துணைப் பதிவாளர் முதல் மாநில பதிவாளர் வரை முறையிட்டும் இதுவரை பலனில்லை என கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இதுகுறித்து தமிழக ஆசிரியர் கூட்டணியின் சேதுபாவாசத்திரம் வட்டாரக் கிளை செயலாளர் ப.ராஜ்மோகன் கூறியது: கூட்டுறவு சங்கத்தில் கடந்த 2 ஆண்டுகளாக லாப பங்கீட்டுத் தொகை வழங்காதது குறித்து அதிகாரிகளிடம் முறையிட்டும் இதுவரை வழங்கப்படவில்லை. தணிக்கை முடியவில்லை என காரணம் கூறி தட்டிக்கழித்து வருகின்றனர்.

ஒவ்வொறு உறுப்பினருக்கும் குறைந்தபட்சம் ரூ.20 ஆயிரம் முதல் லாப பங்கீட்டுத் தொகை கிடைக்கும். இந்தத் தொகை பேரூதவியாக இருக்கும் என்பதால் நாங்கள் தொடர்ந்து கேட்டு வருகிறோம். ஆனால், கூட்டுறவுத் துறை அதிகாரிகள் பல்வேறு காரணங்களைக் கூறி காலம் கடத்தி வருகின்றனர் என்றார்.

இதுகுறித்து சங்கத்தின் செயலாட்சியர் ரமேஷிடம் கேட்டபோது அவர் கூறியது: கூட்டுறவுத் துறை அதிகாரிகள் மூலம் சங்கத்தில் தணிக்கை செய்யுமாறு கூட்டுறவு சங்க தலைமையிடத்துக்கு பரிந்துரை செய்துள்ளோம். தணிக்கை செய்வதற்கான ஆணை வந்ததும், தணிக்கை செய்யப்பட்டு, அதன்பிறகு லாப பங்கீட்டுத் தொகை உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் என்றார்.