Breaking

Tuesday, February 24, 2026

Tuesday, February 24, 2026

THIRAN - பிப்ரவரி மாத மதிப்பீடு சார்ந்த தகவல்கள்


THIRAN - February Assessment Information

- பிப்ரவரிமாத திறன் மதிப்பீடு 25.02.2026 (புதன் கிழமை) முதல் 27.02.2026 (வெள்ளி கிழமை) வரை தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதம் பாடங்களுக்கு நடைபெறவுள்ளது.

- அதற்கான வினாத்தாள், exam.tnschools.gov.in என்ற இணையத்தளத்தில் 24.02.2026 முதல் பதிவிறக்கம் செய்ய கிடைக்கும்.

- அனைத்து திறன் மாணவர்களும் இந்த மாதாந்திர மதிப்பீட்டில் பங்குபெற வேண்டும்.

- அதிகமான கேள்விகள் BLO பிரிவில், பாடம் 01 முதல் 15 வரையில் இருந்து கேட்கப்பட வாய்ப்புள்ளது.

- 25.02.2026 முதல் 07.03.2026 வரை EMIS -இல் மதிப்பெண் உள்ளீடு (Mark Entry) செய்ய இயலும்.
Tuesday, February 24, 2026

ஆசிரியர் மீது பொய் புகார் - ஆசிரியைகள், அதிகாரிகளுக்கு சிறை - நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

அரசு பள்ளி ஆசிரியர் மீது போலியாக பாலியல் புகார் தெரிவித்து பணி நீக்கம் செய்த மாவட்ட கல்வி அலுவலர், இரண்டு ஆசிரியைகள் ஆகியோருக்கு தலா மூன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக மேலும் 4 கல்வித்துறை அதிகாரிகளுக்கும் தனித்தனியே சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டம் மயிலாடும்பாறை அருகே நரியூத்து ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கணித பட்டதாரி ஆசிரியராக பணிபுரிந்தவர் கோகிலபாண்டியன். இதே பள்ளியில் பணியாற்றிய ஆசிரியைகள் சிலர் கோகிலபாண்டியனுக்கு எதிராக பாலியல் புகார் அளித்தனர். இதனடிப்படையில் 2016 செப்.16-ம் தேதி கோகிலபாண்டியன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

இதை தொடர்ந்து தன்மீது முன்விரோதம் காரணமாக பாலியல் புகார் அளிக்கப்பட்டதாக உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் கோகிலபாண்டியன் வழக்கு தொடர்ந்தார்.

நீதிமன்ற உத்தரவின்படி விசாகா கமிட்டி அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்றது. இதில் சத்துணவு அமைப்பாளர் நந்தினியின் பெயரில் கோகிலபாண்டியனுக்கு எதிராக போலியான ஆவணம் தயாரித்து, ஆசிரியைகள் வனிதா மற்றும் ராமலட்சுமி ஆகியோர் பொய் புகார் அளித்தது உறுதியானது.

இதில் மாவட்டக் கல்வி அலுவலர்கள் உள்ளிட்ட கல்வித்துறை அதிகாரிகள் பலருக்கு தொடர்பு இருந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின்பேரில், கோகிலபாண்டியனின் தற்காலிக பணி நீக்கம், பணிக்காலமாக கருதி ஊதியம் வழங்க உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, ஆண்டிபட்டி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் கோகிலபாண்டியன் வழக்கு தொடர்ந்தார்.

விசாரணை முடிந்த நிலையில் நீதித்துறை நடுவர் பாசில்முகமது தீர்ப்பளித்தார். இதில், மாவட்டக் கல்வி அலுவலர் மொக்கத்துரை, ஆசிரியைகள் வனிதா, ராமலட்சுமி ஆகிய 3 பேருக்கும் தலா மூன்றரை ஆண்டுகள் சிறைத் தண்டனையும், மற்றொரு மாவட்டக் கல்வி அலுவலர் கணேஷுக்கு ஒன்றரை ஆண்டுகள் சிறை தண்டனையும் அளித்து உத்தரவிட்டார்.

மேலும் மாவட்டக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளராக பணிபுரிந்த முனியாண்டி, வட்டாரக் கல்வி அலுவலர்கள் ஸ்ரீதேவி மற்றும் ஹெலன் மெட்டில்டா ஆகிய 3 பேருக்கும் தலா ஆறு மாதம் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார். அத்துடன் ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாதிக்கப்பட்ட கோகிலபாண்டியன், தற்போது ஆண்டிபட்டி ராஜகோபாலன்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியில் பணிபுரிந்து வருகிறார்.
Tuesday, February 24, 2026

அரசுப் பள்ளிகளில் ஆண்டுத் தேர்வு தேதி & விடுமுறை நாட்கள் அறிவிப்பு


அரசுப் பள்ளிகளில் ஆண்டுத் தேர்வு தேதி & கோடை விடுமுறை நாட்கள் அறிவிப்பு

புதுச்சேரியில் CBSE பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் அரசு பள்ளிகளில் 

1 - 9 ஆம் வகுப்பு வரையும் 11 ஆம் வகுப்பிற்கும் மார்ச் 12 தொடங்கி 17ஆம் தேதி ஆண்டு தேர்வு.

மார்ச் 18 - 31 வரை விடுமுறை; 

ஏப்ரல் ஒன்றாம் தேதி புதிய கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் துவக்கம்.

மே 1 - 31 ஆம் தேதி வரை கோடை விடுமுறை; 

மீண்டும் ஜூன் ஒன்றாம் தேதி பள்ளிகள் தொடங்கும் - புதுச்சேரி பள்ளி கல்வித்துறை.
Tuesday, February 24, 2026

TET Application - தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்கள் தெரிவித்த தகவல்

இன்று நடைபெற்ற வட்டார கல்வி மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கான காணொளிக் கூட்டத்தில்

*தொடக்கக் கல்வி இயக்குனர் மற்றும் தொடக்கக் கல்வி இணை இயக்குனர் (நிர்வாகம்) அவர்கள் தெரிவித்த தகவலின் படி

பணிபுரியும் ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்கும் ஆசிரியர்களுக்கு பணிச்சான்று service certificste வழங்குவதற்கு

ஆசிரியர்கள் முகப்பு கடிதத்துடன் பணிச் சான்று anexture 1 கடிதம் 3 பிரதிகள் மட்டும் வட்டார கல்வி அலுவலர் வாயிலாக

மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலருக்கு விண்ணப்பித்தால் போதும்

மேலும் வேறு எந்த வித இணைப்பும் தேவையில்லை என தெரிவித்துள்ளார்கள்

தாள் ஒன்று மட்டும் தாள் இரண்டுக்கு தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

விரைவில் முறையான ஆணை வெளிவரும்

#TNTF flash

Tuesday, February 24, 2026

Foundational Learning Study 2025 - 26 | 3ம் வகுப்பு மாதிரி வினாத்தாள் இணைப்பு - பயிற்சிகளை மாணவர்களுக்கு ஆசிரியர்கள் மூலம் வழங்கிட உத்தரவு.


மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரின் கடிதத்தில் 2026 பிப்ரவரி/ மார்ச் மாதத்தில் 3ம் வகுப்பு மாணவர்களுக்கு Foundational Learning Study (2025.26) தொடர்பான தமிழ், ஆங்கிலம் மற்றும் உருது ஆகிய மொழிகளுக்கான NCERTயால் தயாரிக்கப்பட்ட மாதிரி வினாத்தாட்கள் கள அளவில் சோதனைகள் மேற்கொள்வதற்காக அனுப்பப்பட்டுள்ளது.

இம்மாதிரி வினாத்தாட்களை அனைத்துப் பள்ளிகளுக்கு அனுப்பிடவும் 3ம் வகுப்பு மாணவர்களுக்குத் தேவையான பயிற்சிகளை ஆசிரியர்கள் மூலம் வழங்கிடவும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் வாயிலாக அனைத்துப் பள்ளித் தலைமயாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அறிவுரைகள் வழங்குமாறு அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி) அறிவுறுத்தப்படுகிறார்கள்.


இணைப்பு-

1. தமிழ் மாதிரி வினாத்தாள்

2. ஆங்கில மாதிரி வினாத்தாள்

Tamil_FLS 2025-26_Sample Questions - Download here

English_FLS 2025-26_Sample Questions - Download here

Tuesday, February 24, 2026

ரயில்வே தேர்வில் வென்றது எப்படி? - ரம்யா பகிர்வு | நான் முதல்வன் திட்டம்

வணக்கம், என் பெயர் ரம்யா. என் அம்மா வீட்டு வேலை செய்கிறார்கள். என் அப்பா ஓட்டுநராக பணிபுரிகிறார். கடந்த முன்று வருடங்களுக்கு மேலாக இந்தியன் ரயில்வே துறை தேர்வுகளை எழுதியிருந்தேன். என்னால் ஆனால் எந்தத் தேர்விலும் இறுதி கட்டம் வரை சென்று தேர்ச்சி பெறமுடியாமல் இருந்தேன்.

‘நான் முதல்வன்’ திட்டத்தின் போட்டி தேர்வுகள் பிரிவில் வங்கி SSC, RRB உறைவிடப் பயிற்சி மையம் பற்றி என் தோழிகள் மூலமாக எனக்கு தெரிய வந்தது. அங்கு 6 மாத கட்டணமில்லா பயிற்சி நடைபெறுகிறது என்று தெரிந்து அதில் சேர்ந்தேன், அங்கு கட்டணமில்லாமல் பயிற்சி, புத்தகங்கள், தங்கும் வசதி மற்றும் உணவு வசதி அனைத்தையும் வழங்கினர். WIFI, ஆய்வக வசதிகளும் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தன.

பயிற்சி நிறுவனங்களில் இருந்து வந்து எங்களுக்கு பயிற்சி கொடுத்தார்கள். குழுவாக சேர்ந்துபடித்ததில் பல விஷயங்களை தெரிந்துக் கொள்ள முடிந்தது, ஒருவருக்கு ஒருவர் தகவல்களை பகிர்ந்துகொண்டு படிக்க முடிந்தது, நான் தனியாக படிக்கும்பொழுது இவைகளை தெரிந்துகொள்ள தவறிவிட்டேன், நான் முதல்வன் பயிற்சியில் சந்தேகங்கள் எழுந்த பொழுது எனக்கு தெளிவாகவும் பொறுமையாகவும், விளக்கமாக சொல்லிக்கொடுத்தார்கள்.

நான் முதல்வன் திட்டத்தினால் இப்பொழுது, இந்தியன் ரயில்வே துறை தேர்வில் தேர்வு எழுதி Assistant Loco Pilot ஆக தேர்ச்சி பெற்றுள்ளேன். "நான் முதல்வன் திட்டத்தை" எங்களுக்கு அளித்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருக்கும், துணை முதலமைச்சருக்கும் நன்றி.

மேலும் விவரங்களுக்கு: https://naanmudhalvan.tn.gov.in/

வெற்றி நிச்சயம் திட்டம்:

வணக்கம் என் பெயர் பார்க்கவி, நான் தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து பட்டுக்கோட்டை பக்கத்துல பாவாஜன் கிராமத்தில் இருந்து வருகிறேன். நான் படித்து வளர்ந்தது எல்லாமே என் அம்மாச்சி வீட்டில் தான், எனக்கு அப்பா கிடையாது, நான் ரொம்ப படிக்க கஷ்டப்பட்டு வளர்ந்தவள்.


தோழிகள் மூலமாக வெற்றி நிச்சயம் பற்றி அறிந்து, நான் சென்னைக்கு வந்தேன், சென்னைக்கு முதன்முதலில் வரும்போது யாரையும் எனக்கு தெரியாது, எப்படி இங்கு இருக்க போகிறோம் என்ற பயம் இருந்தது. ஆனால் இங்கே வெற்றி நிச்சயம் திட்டத்தின் மூலமாக பயிற்சி பெற்று, வெற்றி நிச்சயம் மூலமாக "Trans Energy Private Limited" என்ற நிறுவனத்தில் நல்ல வேலையும் கிடைத்தது.

இப்பொழுது நான் நல்ல நிலைமையில் இருக்கிறேன், என்னோட அம்மாவையும் நான் நன்றாக பார்த்துக் கொள்கிறேன், இப்பொழுது நான் தைரியமாகவும் , பாதுகாப்பாகவும் உணர்கிறேன். வெற்றி நிச்சயம் திட்டத்தால் தான் இந்த நல்ல நிலமைக்கு என்னால் வர முடித்தந்து.

எங்க அம்மாவிடம், நான் இருக்கிறேன் அம்மா உனக்கு என்று தைரியமாக சொல்ல முடிகிறது, எங்களுக்கு என்று ஒரு சொந்த வீடு இல்லை. ஆனால் சொந்தமாக வீடு கட்டி எங்க அம்மாவை அங்கு உட்கார வைப்பேன் என்ற தைரியம் உள்ளது. இந்த தைரியத்தை கொடுத்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அய்யாவிற்கும், துணை முதலமைச்சருக்கும், மிக்க நன்றி.
Tuesday, February 24, 2026

பிளஸ்-2 படித்த ஆதிதிராவிட, பழங்குடியின மாணவர்கள் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்புக்கு மார்ச் 25-க்குள் விண்ணப்பிக்கலாம்

பிளஸ்-2 படித்து முடித்த ஆதி​தி​ரா​விடர், பழங்​குடி​யின மாணவர்​கள், 3 ஆண்டு இளங்​கலை ஹோட்டல் மேனேஜ் மென்ட் படிப்​புக்கு விண்​ணப்​பிக்​கு​மாறு மாவட்ட ஆட்​சி​யர் ரஷ்மி சித்​தார்த் ஜகடே தெரி​வித்​துள்​ளார்.

இது தொடர்​பாக அவர் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது:தமிழ்​நாடு ஆதி​தி​ரா​விடர் வீட்டு வசதி மற்​றும் மேம்​பாட்​டுக் கழகம் மூலம் பிளஸ்-2 முடித்த ஆதி​தி​ரா​விடர் மற்​றும் பழங்​குடி​யின மாணவர்​கள், தேசிய தேர்வு முகமை சார்​பில் நடத்​தப்​படும் தேசிய ஹோட்டல் மேலாண்மை கவுன்​சில் இணை நுழைவுத் தேர்வு மூல​மாக, தரமணி​யில் இயங்கி வரும் இன்​ஸ்​டிடியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் கேட்​டரிங் டெக்​னாலஜி அண்ட் அப்​ளைடு நியூட்​ரிஷன் நிறு​வனத்​தில் 3 ஆண்டு முழு நேர இளங்​கலை அறி​வியல் பட்​டப் படிப்​பில் சேர்ந்து பயில விண்​ணப்​பங்​கள் பெறப்​பட்டு வரு​கின்​றன.


தேசிய ஹோட்டல் மேலாண்மை கவுன்​சில் இணை நுழைவுத் தேர்வு வரும் ஏப்​.25-ம் தேதி ஆன்​லைன் வாயி​லாக நடை​பெறவுள்​ளது. இத்​தேர்வை எழுத மாணவர்​கள் மார்ச் 25-ம் தேதிக்​குள் விண்​ணப்​பிக்க வேண்​டும். தேர்வு தொடர்​பான கூடு​தல் விவரங்​களை அறிய​வும், முன்​ப​திவு செய்​ய​வும் http://exams.nta.nic.in/nchm-jee/ என்ற இணை​யதளத்தை அணுகலாம்.

ஹோட்டல் மேனேஜ்மென்ட் கேட்​டரிங் டெக்​னாலஜி​யில் பயில, ஆதி​தி​ரா​விடர் மற்​றும் பழங்​குடி​யின மாணவர்​கள் பிளஸ்-2 வகுப்​பில் 45 சதவீதம் தேர்ச்சி பெற்​றிருக்க வேண்​டும்.

குடும்ப ஆண்டு வரு​மானம் ரூ.3 லட்​சத்​துக்​குள் இருக்க வேண்​டும். தாட்கோ மூல​மாக படிப்​பில் சேர www.tahdco.com என்ற இணை​யதளத்​தில் பதிவு செய்ய வேண்​டும்.

படிப்​புக்​கான செலவை தாட்கோ ஏற்​கும். படிப்​பு​களை வெற்​றிகர​மாக முடிக்​கும் பட்​சத்​தில் மாணவர்​களுக்கு நட்​சத்​திர விடு​தி​கள், உயர்தர உணவகங்​கள், விமானத் துறை, கப்​பல் துறை மற்​றும் சேவைத் துறை சார்ந்த நிறு​வனங்​களில் பணிபுரிய வழி​வகை செய்​யப்​படும். ஆரம்ப கால மாத ஊதி​ய​மாக ரூ.25 ஆயிரம்​ முதல்​ ரூ.35 ஆயிரம்​ வரை பெறலாம்​. இவ்​​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.
Tuesday, February 24, 2026

சென்னை ஐஐடியில் பிஎஸ் மேலாண்மை, தரவு அறிவியல் பட்டப்படிப்பு அறிமுகம்

பிஎஸ் மேலாண்மை மற்றும் தரவு அறிவியல் எனும் 4 ஆண்டு இளநிலை அறிவியல் பட்டப் படிப்பை, சென்னை ஐஐடி அறிமுகப்படுத்தியுள்ளது.

புதிய பட்டப் படிப்புகள் தொடர் பான அறிமுக நிகழ்ச்சி சென்னை ஐஐடி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. அதன் பின்னர், சென்னை ஐஐடி இயக்குநர் வீ.காம கோடி செய்தியாளர்களிடம் கூறியதாவது: சென்னை ஐஐடி சார்பில் ஏற்கனவே தரவு அறிவியல், எலக்ட்ரானிக் சிஸ்டம்ஸ், ஏரோனாட்டிக்ஸ் ஸ்பேஸ் டெக் ஆகிய 3 பிஎஸ் இளநிலை அறிவியல் படிப்புகள் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளன. தற்போது 4-வதாக மேலாண்மை மற்றும் தரவு அறிவியல் எனும் 4 ஆண்டு இளநிலை அறிவியல் படிப்பை அறிமுகப் படுத்துகிறோம்.

இந்த பிஎஸ் படிப்பில் சேரு வோரை வணிக ரீதியாக முடிவெடுத்தல், சிந்தித்து திட்டமிடல், தரவு சார்ந்த சிக்கல்களை தீர்க்கும் திறன் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெறச் செய்யும் வகையில் பாடத் திட்டம் வடிவமைக்கப் பட்டுள்ளது. இந்த பாடத்திட்டத்தில் படித்து தேர்ச்சி பெறுவோருக்கு ஐஐடியின் இளநிலை அறிவியல் பட்டம் வழங்கப்படும். இது ஐஐடி வழங்கும் இதர இளநிலைப் பட்டங்களுக்கு நிகரான அங்கீகாரத்தைக் கொண்டிருக்கும்.

பிளஸ் 2 வகுப்பு அல்லது அதற்கு சமமான கல்வித் தகுதியுள்ள டிப்ளமோ முடித்தவர்கள் உட்பட எவரும் இப்படிப்பில் சேரலாம். இதை தனிபட்டப் படிப்பாகவோ அல்லது வேறு கல்வித் திட்டத்துடன் இணைந்தோ அல்லது பணியில் இருந்து கொண்டே தொடரலாம். தகுதித் தேர்வு மூலமாகவோ அல்லது ஜேஇஇ பிரதானத் தேர்வில் கலந்துக் கொள்ளும் தகுதியைப் பெறுவதன் மூலமாகவோ இந்த படிப்பில் சேர்க்கப்படுகிறார்கள்.

இதன் வகுப்புகள் ஜூன் மாதம் தொடங்கும். இதற்கு மே 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இந்த புதிய பிஎஸ் படிப்புக்கான பாடத்திட்டம், மாணவர் சேர்க்கை விவரங்களை ஐஐடி இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்வில், ஃபோர்டு மோட் டார் நிறுவனத்தின் இந்தியா பிரிவுத் தலைவர் கங்கப்ரியா சக்ரவர்த்தி, சுந்தரம் ஃபைனான்ஸ் லிமிடெட் நிர்வாக இயக்குநர் ராஜீவ் சி.லோச்சன், சென்னை ஐஐடி மேலாண்மைக் கல்வித் துறை தலைவர் சஜி மேத்யூ உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.
Tuesday, February 24, 2026

பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதும் தனித் தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட் நாளை வெளியீடு

தமிழகத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத உள்ள தனித் தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட் நாளை வெளியிடப்படவுள்ளது.

இதுகுறித்து தேர்வுத் துறை இயக்குநர் கே.சசிகலா வெளியிட்ட அறிவிப்பு விவரம்: தமிழக பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில் பொதுத் தேர்வு பிளஸ் 2 வகுப்புக்கு மார்ச் 2 முதல் 26ம் தேதி வரையும், பிளஸ் 1 வகுப்புக்கு (அரியர்) மார்ச் 2 முதல் 27ம் தேதி வரையும் நடைபெற உள்ளது.

இத்தேர்வுகளை எழுத உள்ள தனித் தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட் நாளை (பிப்.23) மதியம் வெளியிடப்பட உள்ளது. இதையடுத்து தனித் தேர்வர்கள் www.dge.tn.gov.in எனும் வலைதளத்தில் சென்று தங்கள் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

மேலும், பிளஸ் 1 (அரியர்) மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுத உள்ள தனித் தேர்வர்களுக்கு இரு தேர்வுகளுக்கும் சேர்த்து ஒரே ஹால் டிக்கெட் மட்டுமே வழங்கப்படும். கூடுதல் விவரங்களை மேற்கண்ட தளத்தில் அறியலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதேபோல, பள்ளி மாணவர்களுக்கான ஹால் டிக்கெட்களும் அவரவர் பள்ளிகளிலேயே அடுத்த வாரம் வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
Tuesday, February 24, 2026

சிறப்பு ‘டெட்’ தேர்வுக்கு ‘எமிஸ்’ மூலம் எளிமையாக விண்ணப்பிக்க ஏற்பாடு: ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்

சிறப்பு `டெட்' தேர்வுக்கு `எமிஸ்' தளத்தின் மூலம் எளிமையாக விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யுமாறு பள்ளிக்கல்வி அமைச்சருக்கு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் த.ராமஜெயம், மாநில பொதுச் செயலாளர் வெ.சரவணன் ஆகியோர் நேற்று வெளியிட்ட அறிக்கை: பணியில் உள்ள ஆசிரியர்களுக்காக சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

அதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு நடந்துகொண்டிருக்கிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஒவ்வோர் ஆசிரியருக்கும் பணிப்பதிவேடு (எஸ்ஆர்) பராமரிக்கப்படுகிறது.

அதில், அவர்கள் பணியில் சேர்ந்த நாள், கல்விச் சான்றிதழின் பதிவு அவற்றின் உண்மைத் தன்மை பதிவுகள், தகுதிகாண் பருவம், பணிவரன் முறை உள்ளிட்ட அனைத்து தகவல்களும் இடம்பெற்றிருக்கும்.

மேலும் ஆசிரியர் இடமாறுதல் விண்ணப்பங்கள் தற்போது பள்ளியிலேயே அந்தந்த ஆசிரியர் ஐடி மூலம் பதிவு செய்து பணி மாறுதல் ஆணை வழங்கும் மின்-ஆளுமை வசதியும் உள்ளது. எனவே, சிறப்பு டெட் தேர்வுக்கு ஆசிரியர்கள் எமிஸ் ஐடி மூலம் எளிமையாக விண்ணப்பிக்க பள்ளிக்கல்வி அமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
Tuesday, February 24, 2026

Re-opening of Online Application Portal for Common University Entrance Test (UG) - 2026 Examination - reg.

The National Testing Agency (NTA) will conduct the Common University Entrance Test (CUET-UG) 2026 in Computer-Based Test (CBT) mode from 11 May to 31 May 2026 (tentative) in India and in few cities outside India.

2. The online application process was initially open from 03 January 2026 to 30 January 2026, with the last date for fee payment being 31 January 2026 (up to 11:50 PM). Subsequently, the deadline was extended up to 04 February 2026, and the fee payment window remained open until 07 February 2026. The NTA has received multiple representations from candidates requesting a further extension of the last date for submission of application forms and payment of application fees.

3. In response to the requests received, the NTA has decided to re-open the submission of the online application form and payment of the application fee from 23 February 2026 (Afternoon) to 26 February 2026 (upto 11:50 PM), to facilitate the candidate.

4. Candidates are advised to ensure that all information entered during the online registration process is accurate and complete. As this is a special extended period, no correction facility will be provided after submission of the application form.

5. Candidates are also advised to take note of the above and act accordingly. It is further advised to regularly check NTA website(s) https://nta.ac.in and https://cuet.nta.nic.in/ for latest updates.

6. For any queries or /clarifications, candidates can call NTA Help Desk at 011-40759000 or email at cuet-ug@nta.ac.in.
Tuesday, February 24, 2026

விலையில்லாச் சீருடை வழங்கும் திட்டம் - விவரங்களை EMIS portalல் உள்ளீடு (Yes or No) செய்ய அறிவுறுத்துதல் தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.

2026-2027 ஆம் கல்வியாண்டிற்கு 2025-2026 ஆம் விலையில்லாச் சீருடை வழங்கும் திட்டம் கல்வியாண்டில் 1 முதல் 7 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ /மாணவிகளுக்கு அடுத்த கல்வியாண்டிற்கு வழங்கும் சீருடைத் துணிகள் அளவீடு செய்தல் விடுபட்ட மாணவ / மாணவிகளின் விவரம் கல்வி மாவட்டம் மற்றும் பள்ளிகள் வாரியாக EMIS-லிருந்து பெறப்பட்டது EMIS portalல் உள்ளீடு (Yes or No) செய்ய அறிவுறுத்துதல் தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.

பார்வையில் காணும் EMIS இல் இருந்து பெறப்பட்ட மின்னஞ்சலின்படி, 2020-2027 ஆண்டிற்கு விலையில்லாச் சீருடை வழங்க அளவெடுக்கும் பணி மேற்கொள்ள ஏதுவாக, 2025-2026 ஆம் கல்வியாண்டில் 1 முதல் 7 ஆம் வகுப்பு வரை பயிலும் சத்துணவு உண்ணும் மாணவ/மாணவிகளின் விவரங்கள் விடுபட்டுள்ளது எனவும், விடுபட்ட விவரங்களை EMIS தளத்தில் உள்ளீடு செய்யுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே. தொடக்கக் கல்வி இயக்கக நிருவாகத்தின் கீழ் செயல்படும் அரசு / அரசு உதவிபெறும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் 1 முதல் 7 ஆம் வகுப்பு வரை பயிலும் சத்துணவு உண்ணும் மாணவ / மாணவிகளின் (இத்துடன் இணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள) விடுபட்ட விவரங்களை நாளை 24.02.2026 அன்று காலை 11.00 மணிக்குள் EMIS தளத்தில் உடனடியாக உள்ளீடு செய்யுமாறு அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள் மூலம் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கிடுமாறு அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் (தொடக்கக் கல்வி) தெரிவிக்கப்படுகிறது.

மேலும் மேற்குறிப்பிட்ட பொருள் சார்ந்து EMIS portalல் உள்ளீடு (Yes or No) செய்யப்படாத கல்வி மாவட்டங்களை இணை இயக்குநர் (உதவி பெறும் பள்ளிகள்) அவர்கள் Google Meet மூலம் (25.03.2026 மாலை 3.00 மணியளவில்) ஆய்வு செய்வார் என அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் (தொடக்கக் கல்வி) தெரிவிக்கப்படுகிறது.

இது மிகவும் அவசரம்.
Tuesday, February 24, 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 24.02.2026



ஸ்டீவ் ஜொப்ஸ்

திருக்குறள்: 

குறள் 215: 

ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் 
பேரறி வாளன் திரு.    

 விளக்க உரை: 

ஒப்புரவினால் உலகம் வாழுமாறு விரும்பும் பேரறிவாளியின் செல்வம், ஊரார் நீருண்ணும் குளம் நீரால் நிறைந்தாற் போன்றது.

பழமொழி :

Pride goes before a fall. 

அகம்பாவம் அழிவை தரும்.

இரண்டொழுக்க பண்புகள் :.

1. உழைக்கப் பழகியவர் எங்கு இருந்தாலும் உயர்ந்த நிலையை அடைவர்.

 2.எனவே எப்போதும் உழைப்பை நாடுவேன்.

பொன்மொழி : 

நான் எதையும் சாதிக்க வல்லவன் என்று சொல் . நீ உறுதியுடன் இருந்தால் பாம்பின் விஷம் கூட சக்தியற்றதாகி விடும் .- சுவாமி விவேகானந்தர்

பொது அறிவு : 

01.அடால்ஃப் ஹிட்லர்  பிறந்த நாடு எது?

ஆஸ்திரியா-Austria

02.தமிழ்நாட்டின் முதல் கல் கோவில் (குடைவரைக் கோவில்) எது?

திரிமூர்த்தி கோவில்  மண்டகப்பட்டு -விழுப்புரம்

 Tirumurti Temple Mandagapattu

Villuppuram 

English words :

bountiful –abundant. அபரிதமான அளவு 

bonanza –a situation which creates a great profit

செல்வச்செழிப்பு

தமிழ் இலக்கணம்: 

விலங்குகளின் சரியான ஒலிக்கான வார்த்தை
ஆந்தை –அலறும்
யானை –பிளிரும் 
மயில் –அகவும் 
குயில் –கூவும்
புலி  –உறுமும்
சிங்கம் –கெர்ச்சிக்கும் 

அறிவியல் களஞ்சியம் :

பூமி உருவானபோது ஒரு நாளின் நேரம்(6 மணி): பூமி சுமார் 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவானபோது, ​​ஒரு நாள் என்பது  சுமார் 6 மணி நேரம் மட்டுமே. சந்திரன் மிக நெருக்கமாக இருந்ததாலும், வேகமான கோளின் சுழற்சியாலும், பூமி இன்று இருப்பதைவிட கணிசமாக வேகமாகச் சுழன்றது. பில்லியன்கணக்கான ஆண்டுகளில், சந்திரனில் இருந்து வரும் அலை சக்திகள் படிப்படியாக இந்த சுழற்சியைக் குறைத்தன

பிப்ரவரி 24

ஸ்டீவ் ஜொப்ஸ் அவர்களின் பிறந்தநாள்

ஸ்டீவ் ஜொப்ஸ் (தமிழக வழக்கு: ஸ்டீவ் ஜாப்ஸ்) (Steve Jobs, பிறப்பு பெப்ரவரி 24, 1955- அக்டோபர் 5, 2011) ஆப்பிள் நிறுவனத்தின் தலைவரும் தலைமை ஆட்சியரும், கணினித் துறையின் குறிப்பிடத்தக்க ஓர் ஆளுமையாளரும் ஆவார். இவர் 1985 ஆம் ஆண்டில், அமெரிக்க நாட்டரசு, அவர்களின் குடியரசுத் தலைவரால் வழங்கிப் பெருமை செய்யும் அந்நாட்டின் தலையாய பரிசாகிய தொழில்நுட்பத்துக்கும் புதுமையாக்கத்துக்குமான பதக்கத்தை வென்றார்.

ஸ்டீவ் ஜொப்ஸ், 1976 இல் ஆப்பிள் கம்பியூட்டர் நிறுவனத்தைத் தொடங்கியவர்களுள் ஒருவர். இவர் பிக்ஃசார் அசைபட நிறுவனத்தின் (Pixar Animation Studios) தலைமை ஆட்சியராகவும், வால்ட் டிசினி (Walt Disney) போன்ற பல நிறுவனங்களின் ஆட்சிப் பேராய இயக்குநர்களில் ஒருவராகவும் இருந்தார். ஆகத்து 24, 2011 அன்று உடல்நிலை காரணமாக தலைவர் பதவியிலிருந்து விலகினார். இவரையடுத்து டிம் குக் பொறுப்பேற்றார்.2011 ஆம் ஆண்டு அக்டோபர்  06 ஆம் திங்கள்  அதிகாலை ஸ்டீவ் ஜொப்ஸ்  உயிரிழந்தார்.

நீதிக்கதை

 பழைய நிலைமையை மறந்து விடாதே!

முன்னொரு காலத்தில், ஒரு நாட்டை ஆண்ட அரசரிடம் விவேகமிக்க மந்திரி ஒருவர் இருந்தார். அவர் பெயர் தனயன். அரசர், எங்கு சென்றாலும், தனயனை அழைத்துச் செல்வார். தனயனின் ஆலோசனைப்படியே அனைத்தையும் செய்வார்.

இதனால், மந்திரி தனயனின் புகழ், நாடு முழுவதும் பரவியது. இதைக்கண்ட சிலர், மந்திரி மீது பொறாமை கொண்டனர். தனயன் எங்கு சென்றாலும், தன்னுடன் ஒரு பெட்டியை எடுத்துச் செல்வது வழக்கம். பொறாமைக்காரர்கள் இதை வைத்தே அரசனிடம் கோள் மூட்ட எண்ணினர்.

அரசே, மந்திரி நல்லவர் போல் நடித்து, நம்மை ஏமாற்றுகிறார். அரண்மனையில் உள்ள விலை உயர்ந்த பொருட்களை எல்லாம் அபகரித்து தன் பெட்டியில் வைத்துள்ளார். வேண்டுமானால் அதைச் சோதனை செய்து பாருங்கள் என்றனர்.

அரசனுக்கும், சிறிது சந்தேகம் ஏற்பட்டது. ஒருநாள் வேட்டைக்குப் போகும்போது, மந்திரி வழக்கம் போல் பெட்டியை தன்னோடு எடுத்து வந்தார். பெட்டியில் என்ன? என்று கேட்டார் அரசர். உடனே மந்திரி, பெட்டியைத் திறந்து காட்டினார், ஆடு மாடு மேய்ப்பவன் உடுத்தும் கந்தல் துணி இருந்தது.

இதெல்லாம் என்ன? என்று ஆச்சர்யத்துடன் கேட்டார் அரசர். அரசே! ஆடு மேய்த்துக் கொண்டிருந்த போது, என் புத்திக்கூர்மையை பார்த்து, என்னை மந்திரி ஆக்கினீர்கள். இவ்வளவு உயர் பதவி கிடைத்தால், சிலர் பழைய நிலைமையை மறந்து விடுவர். எனக்கு அப்படியிருக்க மனம் வரவில்லை. பழைய நிலைமையை சுமந்தபடியே, மந்திரி பதவியில் இருக்க விரும்புகிறேன். அதனால் தான், இப்பெட்டியை எந்நேரமும் என்னுடன் வைத்திருக்கிறேன் என்றார் மந்திரி.

மந்திரியை பெரிதும் பாராட்டியதோடு, பொறாமைக்காரர்களுக்கு தக்க தண்டனையும் கொடுத்தார் அரசர். மந்திரிக்கு பல பரிசுகள் கொடுத்து கௌரவித்தார். பொறாமைக்காரர்கள், தாங்கள் செய்த சூழ்ச்சியே, தங்களது வீழ்ச்சிக்கு காரணமானதை எண்ணி வருந்தினர்.

நீதி : கேடு நினைப்பவன் கெடுவான்.

இன்றைய செய்திகள்

24.02.2026

⭐தமிழகத்தில் பனிப்பொழிவு தொடர்ந்து வரும் நிலையில், நிமோனியா எனப்படும் நுரையீரல் தொற்று பரவல் அதிகரித்து உள்ளது.

⭐ ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் போர் விமானங்கள் பெஹ்சுத் மாவட்டத்தில் நடத்திய தாக்குதலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 17 பேர் பலியாகி உள்ளனர்.

⭐ஈரானை விட்டு வெளியேறுங்கள்.
இந்தியர்களுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில் நேற்று இந்திய அணி தென் ஆப்பிரிக்க அணியுடன் மோதியது. இந்த போட்டியில் இந்திய அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

Today's Headlines

⭐ As cold weather continues in Tamil Nadu, the spread of the lung infection called pneumonia has increased.

⭐ In Afghanistan, 17 members of the same family were killed in an attack carried out by Pakistani warplanes in the Behsood district.

⭐ “Leave Iran.” The central government has strongly urged Indians.

🏀 Sports News

🏀 In the Super 8 round of the T20 World Cup series, the Indian team faced the South African team yesterday. In this match, the Indian team lost by a margin of 76 runs.

Covai women ICT_போதிமரம்

Monday, February 23, 2026

Monday, February 23, 2026

ஆன்லைன் வழியில் விடைத்தாள் திருத்தம்: சி.பி.எஸ்.இ., முடிவுக்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு

சி.பி.எஸ்.இ., பொதுத்தேர்வு எழுதும் பிளஸ் 2 மாணவர்களின் விடைத்தாள்கள், இந்தாண்டு முதல், 'ஆன்லைன்' வழியாக மதிப்பீடு செய்ய உள்ள நிலையில், அதற்கேற்ப போதிய பயிற்சி வழங்கப்படவில்லை என்று, ஆசிரியர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர். இந்தாண்டு, சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 பொதுத்தேர்வில், 31,000 பள்ளிகளைச் சேர்ந்த, 18.5 லட்சம் மாணவர்கள் பங்கேற்கின்றனர். அவர்கள், 120 பாடங்களுக்கு தேர்வுகள் எழுதுகின்றனர்.

அவர்களின் விடைத்தாள்கள் குறைந்தபட்சம், 6,000 பள்ளிகளில் உள்ள மையங்களில், 'ஆன்லைன்' வாயிலாக திருத்தப்பட உள்ளன. இதுவரை, மாணவர்களின் விடைத்தாள்களை நேரடியாக கையில் எடுத்து படித்து, அதிலேயே மதிப்பெண்களை வழங்கும் முறை நடைமுறையில் இருந்தது. தற்போது, விடைத்தாள்கள், 'ஸ்கேன்' செய்யப்பட்டு, ஆசிரியர்களின் கணினிக்கு அனுப்பப்படும். கணினி திரையில் அதை படித்துப் பார்த்து, வழங்கப்பட்டுள்ள குறிப்பேட்டில், மதிப்பெண்களை வழங்க வேண்டும். இந்த முறை எளிதாகவும், விரைவாகவும் முடியும் என, சி.பி.எஸ்.இ., தெரிவித்துள்ளது. அதேசமயம், தேர்வு துவங்குவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னர் தான், இந்த முறை பற்றி சி.பி.எஸ்.இ., அறிவித்தது. இதனால், மாணவர்களும் ஆசிரியர்களும் குழப்பம் அடைந்தனர். இந்நிலையில், சி.பி.எஸ்.இ., வாரியம், விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு, ஆன்லைன் வழியாக திருத்துவது குறித்து பயிற்சி வழங்கியது. ஏற்கனவே, மாணவர்களுக்கு தேர்வுப் பயிற்சி அளித்து வரும் ஆசிரியர்களுக்கு, அந்த பயிற்சியில் பங்கேற்பதில் சிரமம் ஏற்பட்டது.

இதுகுறித்து, ஆசிரியர்கள் கூறியதாவது: காலத்துக்கு ஏற்ப, இடைநிலை கல்வி வாரியம், 'டிஜிட்டல்' முறைக்கு மாறுவதில் தவறில்லை. அதேசமயம், அனைத்து விடைத்தாள் திருத்தும் மையங்களிலும், இணையதள இணைப்புடன் கூடிய, நல்ல கணினிகள் இருக்குமா என்பது சந்தேகமே. மேலும், அனுபவம் வாய்ந்த வயதான ஆசிரியர்களுக்கு, விடைத்தாள்களில் எழுதப்பட்டு இருப்பதை படித்துப் பார்த்து, மதிப்பெண் வழங்கும் முறை தான் பழக்கமாகி இருக்கிறது. திடீரென கணினி வழியில் படிப்பதும், அவற்றை பெரிதாக்குவதோ, சிறிதாக்குவதோ இயலாத காரியம். விடைத்தாள்களை ஸ்கேன் செய்வோர், ஏதாவது ஒரு பக்கத்தை விடுவதற்கும், பென்சிலால் வரையப்பட்ட வரைபடங்கள் உள்ளிட்டவற்றை தெளிவாக ஸ்கேன் செய்யாமல் விடுவதற்கும் வாய்ப்புகள் அதிகம். இதுபோல பல சிக்கல்கள் உள்ளன. அவற்றுக்கெல்லாம் சி.பி.எஸ்.இ., வாரியம் தீர்வு காண வேண்டும். அப்போது தான் மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருப்பர். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Monday, February 23, 2026

இறுதி வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? – சரிபார்ப்பது எப்படி ?

இறுதி வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? – சரிபார்ப்பது எப்படி ?

தமிழகத்தில் சிறப்பு தீவிர திருத்தத்துக்குப் பிந்தைய இறுதி வாக்காளர் பட்டியலில், மொத்த வாக்காளர்கள் 5,67,07,380.

இறுதி வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா என்பதை தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் சரிபார்க்கலாம்.

https://electoralsearch.eci.gov.in/ என்ற இணையதளத்தில் அடையாள அட்டை எண் மற்றும் மாநிலத்தை பதிவு செய்து தேடலாம்.

அடையாள அட்டை எண் தெரியாதவர்கள் மாநிலம், பெயர், உறவினர் பெயர், பிறந்த தேதி அல்லது வயது, பாலினம் போன்ற விவரங்களை பதிவு செய்து பெயர் இருப்பதை அறியலாம்.

மேலும், வாக்காளர் அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணை பதிவு செய்து, அந்த எண்ணுக்கு வரும் ஒடிபி எண்ணை உள்ளிட்டு சரிபார்க்கலாம்.

பெயர் இருந்தால் ‘View Details’ பகுதியில் முழு விவரங்களை காண முடியும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
Monday, February 23, 2026

மார்ச் 4ஆம் தேதி உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு.

திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டம் உள்ளூர் விடுமுறை.

கன்னியாகுமரி அய்யா வைகுண்டசாமியின் 194ஆவது அவதாரத் திருவிழாயொட்டி தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களுக்கு மார்ச் 4ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு.

பொதுத்தேர்வு இருப்பின் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள், மாணவர்களுக்கு விடுமுறை கிடையாது என்றும் அறிவிப்பு மார்ச் 4ஆம் தேதி விடுமுறையை ஈடு செய்ய மார்ச் 7ஆம் தேதி வேலை நாள் என்றும் அறிவிப்பு.
Monday, February 23, 2026

பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையிலிருந்து பாதுகாக்கும் சட்டம் - ஆசிரியர்களுக்கு பயிற்சி..

பள்ளிக்கல்வி - சமூக நலம் பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையிலிருந்து பாதுகாக்கும் சட்டம் 2013 ( தடுப்பு, தடை (ம) தீர்வு ) - இன் படி துறைத்தலைவர்கள் மற்றும் கிளை அலுவலக தலைமை அதிகாரிகள் இணையதளத்தில் அறிக்கை சமர்பித்தல் மற்றும் உள்ளக குழு (IC) மற்றும் பாதுகாப்பு பெட்டி செயல்பாடு, அதன் சட்டம் குறித்து பயிற்சி வழங்கும் பொருட்டு அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளித் தலைமையாசிரியர்கள் கலந்து கொள்ளுதல் - தொடர்பாக,...