Breaking

Wednesday, March 11, 2026

Wednesday, March 11, 2026

தேசிய அளவில் சிறந்த ஆசிரியர்களுக்கு விருது: சென்னை ஐஐடி சார்பில் வழங்கப்பட்டது


தேசிய அளவில் சிறந்த பள்ளி ஆசிரியர்​கள் 6 பேருக்கு சென்னை ஐஐடி விருதுகள் வழங்​கப்​பட்​டன. பள்ளி மாணவர்​களுக்கு கணிதம், இயற்​பியல், வேதி​யியல் ஆகிய பாடங்​களை நல்ல முறை​யில் பயிற்​று​வித்​து, அறி​வியல் ஆர்​வத்தை ஏற்​படுத்​தி, அவர்​கள் அறி​வியல் மற்​றும் பொறி​யியல் படிப்​பு​களில் சேர சிறப்​பாகப் பணி​யாற்​றும் பள்ளி ஆசிரியர்​களுக்கு சென்னை ஐஐடி தேசிய அளவில் விருது வழங்கி கவுர​வித்து வரு​கிறது.

கடந்த ஆண்​டிலிருந்து வழங்​கப்​படும் இந்த விருது, ‘முதல் கொள்​கைகள் ஆசிரியர் விருது’ என அழைக்​கப்​படு​கிறது. அந்த வகை​யில் 2026-ம் ஆண்​டுக்​கான ஐஐடி விருதுக்கு தேர்​வு செய்​யப்​பட்ட 6 ஆசிரியர்​களுக்கு ஐஐடி இயக்​குநர் காமகோடி நேற்று விருது வழங்​கி​னார்.

அவர் வாழ்த்​திப் பேசும்​போது, “ஒரு மாணவரின் எதிர்​காலத்தை வடிவ​மைப்​ப​தில் பள்ளி ஆசிரியர்​கள் முக்​கியப் பங்கு வகிக்​கின்​றனர். ஆசிரியர்​களால்​தான் மாணவர்​களின் சிந்​தனையை​யும் கற்​றலை​யும் மேம்​படுத்த முடி​யும்.

இத்​தகைய உயர் பணியை செய்​யும் ஆசிரியர்​களுக்கு உரிய அங்​கீ​காரம் கிடைப்​ப​தில்​லை. அந்த வகை​யில் மாணவர்​களுக்கு சிறந்த எதிர்​காலத்தை உரு​வாக்​கும் ஆசிரியர்​களுக்கு விருது வழங்கி ஐஐடி கவுரவிக்​கிறது.

இந்த விருது மற்ற ஆசிரியர்​களுக்​கும் உத்​வேகத்​தை​யும் ஊக்​கத்​தை​யும் அளிக்​கும் என்று நம்​பு​கிறோம். இதன்​மூலம் அனைத்து மாணவர்​களுக்​கும் தரமான கல்வி கிடைக்​கும். தேசிய கல்விக் கொள்கை 2020-ல் வலி​யுறுத்​தப்​பட்​டுள்​ளபடி நம் நாட்​டில் உயர் கல்விக்கு செல்​லும் மாணவர்​களின் எண்​ணிக்கை அதி​கரிக்​கப்பட வேண்​டும்” என்​றார்.

தொடர்ந்​து, டீன் (கல்​வி) பேராசிரியர் பிர​தாப் ஹரி​தாஸ் பேசும்​போது, “அடிப்​படை அறி​வியல் புரிதலுடன் ஐஐடி​யில் சேரும் மாணவர்​கள் உயர் கல்​வி​யிலும் வேலை​யிலும் சிறந்து விளங்​கு​கிறார்​கள். மாணவர்​கள் சரி​யான வழி​யில் படித்​தால் அறி​வியல், பொறி​யியல் படிப்புகள் மிகவும் உற்சாகம் அளிக்கும்'' என்றார்.
Wednesday, March 11, 2026

70,000 கணினி ஆசிரியர்கள் சட்டப்பேரவை தேர்தலை புறக்கணிக்க முடிவு!

அரசு பள்ளியில் பணி நியமனம் செய்யக் கோரி, வரும் சட்டப்பேரவைத் தேர்தலை புறக்கணிக்க 70 ஆயிரம் கணினி ஆசிரியர்கள் முடிவு செய்துள்ளனர். இந்தியாவிலேயே, தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில்தான் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடம் இல்லாமல் உள்ளது.

மத்திய அரசின் சமக்ரா சிக்சா திட்டத்தின் கீழ் அனைத்து மாநிலங்களும் கணினி அறிவியல் பாடத்தை பிரதான பாடமாகவும், தனிப் பாடமாகவும் கற்றுத் தரும் நிலையில், தமிழக அரசு கணினி அறிவியல் பாடத்தை அரசுப் பள்ளியில் கொண்டு வராமல் உள்ளது.

ஆனால், மத்திய அரசு, கணினி ஆசிரியர்களுக்கு வழங்கும் நிதியை மடைமாற்றம் செய்து, அதை எமிஸ் ஆபரேட்டர்களுக்கு பயன்படுத்து கின்றனர். இதனால், அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு கணினி அறிவியல் பாடத்தை கற்றுத் தர ஆசிரியர்களும் இல்லை, பாடங்களும் இல்லை.

மாணவர்கள் 5 பாடங்களை மட்டும் கற்று வருகின்றனர். எனவே, அனைத்து அரசுப் பள்ளிகளிலும் கணினி அறிவியல் ஆசிரியர்களை பணி நியமனம் செய்ய வேண்டும் என சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக தமிழ்நாடு பி.எட். கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரிகள் சங்க மாநில துணைத் தலைவர் அ.ஆரோக்கியசாமி கூறியது: தமிழக அரசு, மத்திய அரசு வழங்கிய நிதியை மடைமாற்றம் செய்து கேரளாவைச் சேர்ந்த தனியார் நிறுவனத்துக்கு கணினி ஆய்வகங்களை நிர்வகிக்கும் ஒப்பந்தம் வழங்கி உள்ளது.

அதுமட்டுமல்லாமல், கணினி ஆசிரியர்களை நியமிக்க வந்த நிதியில், அந்தப் பணிக்கு கல்வித் தகுதி இல்லாதவர்களை நியமனம் செய்து அலுவலகப் பணிக்கு மாற்றிக்கொண்டுள்ளனர்.இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சரிடம் பலமுறை முறையிட்டும் உரிய பதில் இல்லை.
Wednesday, March 11, 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 11.03.2026



பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதப்போகும் அனைத்து மாணாக்கர்களுக்கும் நல்வாழ்த்துகள்

திருக்குறள்: 

குறள் 617: 
மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான் 
தாளுளாள் தாமரையி னாள்.
   
விளக்க உரை:

 ஒருவனுடைய சோம்பலில் கரிய மூதேவி வாழ்கின்றாள், சோம்பல் இல்லாதவனுடைய முயற்சியிலே திருமகள் வாழ்கின்றாள்.

பழமொழி :

Live and let live.

 வாழு வாழ விடு.

இரண்டொழுக்க பண்புகள் :.

1.   திட்டமிட்டு செயல் பட்டால் வெற்றி நிச்சயம்.

2.எனவே  ஒரு செயலை தொடங்கும் முன், எவ்வாறு செய்து முடிக்க போகிறோம் என்று திட்டமிட்டு செயல் பட வேண்டும்.

பொன்மொழி : 

எல்லோரையும் அன்புடன் அரவணைக்கும் ஒருவரால் எந்த நிலையையும் கடந்து முன்னேற முடியும் .

_____ அன்னை தெரசா

பொது அறிவு : 

01.தமிழ்நாட்டின் முதல் பெண் மருத்துவர் யார்?

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி

Dr. Muthulakshmi Reddy 

02.இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?

டாக்டர் விக்ரம் சாராபாய்

Dr.Vikram Sarabhai

English words :

Skippered -actors a captain of a boat or a ship

Exhausted-completely tired

அறிவியல் களஞ்சியம் :

புவியியல் துருவங்கள் (geographic poles) என்பவை பூமியின் சுழற்சி அச்சில் உறுதியாக நிலைத்திருப்பவை. ஆனால் காந்தத் துருவங்கள் அப்படியல்ல; அவை காலப்போக்கில் மெதுவாகவும், சில சமயங்களில் வேகமாகவும் இடம் மாறிக்கொண்டே இருக்கின்றன.

இந்த நகர்வு, வழிகாட்டல் (navigation), புவியியல் ஆய்வுகள் (geophysical surveys), அறிவியல் ஆராய்ச்சிகள் எனப் பல துறைகளில் ஆழமான தாக்கங்களை ஏற்படுத்துகிறது.

மார்ச் 11

சர் அலெக்ஸாண்டர் ஃபிளெமிங் அவர்களின் நினைவுநாள்

சர் அலெக்ஸாண்டர் ஃபிளெமிங் (Sir Alexander Fleming) (ஆகஸ்ட் 6, 1881 – மார்ச் 11, 1955) நுண்ணுயிர் கொல்லியான சிதைநொதியைக் கண்டுபிடித்தவர். மேலும், நுண்ணுயிர் கொல்லியான பெனிசிலினை பெனிசிலியம் நொடேடம் (Penicillium notatum) என்ற பூஞ்சையிலிருந்து பிரித்தெடுத்தார்.

உலகம் அறிந்துள்ள மருத்துவ முன்னேற்றங்களுள் பெனிசிலின் கண்டுபிடிப்பு தனிச்சிறப்பு வாய்ந்தது. பெனிசிலின் காலத்திற்கு முன் பிரசவத்தில் பெண்கள் இறப்பதும், பிறந்தபின் குழந்தைகள் இறப்பதும் சர்வ சாதாரணம். லேசான சிராய்ப்புகளும் கீறல்களும் கூட மரணத்திற்கு இட்டுச் சென்றன. ஒரு நுண்ணுயிரை வைத்து இன்னொன்றைக் கொல்லமுடிகிற பெனிஸிலின் போன்ற நச்சுமுறி மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகுதான் பல நோய்களிலிருந்து மனிதர்களைக் காப்பாற்ற முடிந்தது. பெனிசிலினைக் கண்டு பிடித்து நவீன நச்சுமுறி மருந்துகள் யுகத்தைத் தொடங்கிவைத்த பெருமைக்குரிய விஞ்ஞானிதான் அலெக்ஸாண்டர் ஃப்பௌமிங். பெனிசிலின் உலகெங்கிலும் உள்ள 20 கோடி மக்களின் உயிரைக் காப்பாற்றியுள்ளது என்கிறது ஒரு மதிப்பீடு.

நீதிக்கதை

 சிங்கமும் கழுதைப்புலியும்

சிங்கமும் கழுதைப்புலியும் பசுவைப் பிடித்து வைத்திருந்தன. ஒரு நாள் சிஙகம் பசுவைக் கொன்றது. கழுதைப்புலி தன் குட்டியை சிங்கத்திடம் அனுப்பி தன் பங்கைக் கேட்டது. கழுதைப்புலியின் பங்காக பசுவின் குடலை மட்டும் கொடுத்து அனுப்பியது சிங்கம்.

கழுதைப் புலியோ, “நீ ஏன் குடலைக் கொண்டு வந்தாய்? அரைவாசிப் பங்குதானே நமக்கு உரியது?” என்று கேட்டது.

குட்டி கழுதைப்புலி சொல்லியது: “நான் சின்னப்பயல். பெரியவர்கள் கொடுப்பதைத்தான் கொண்டு வர முடியும். நான் எப்படி சிங்கத்தோடு விவாதிக்க முடியும்”.

அதைக்கேட்டு கோபமான கழுதைப்புலி அந்தக் குடலோடு சிங்கத்தைப் பார்க்கப் போனது. சிங்கம் உணவை உண்டு குகைக்குள் ஒய்வெடுத்துக் கோண்டிருந்தது. கழுதைப்புலி வந்ததைக் கண்டு கண்களை அச்சமூட்டும் வகையில் வைத்திருந்தது. “ஏன் இங்கே வந்தாய்?” – கர்ஜித்தபடி சிங்கம் கேட்டது.

பசுவில் பாதி கேட்க வந்த கழுதைப்புலி தற்போது தன் எண்ணத்தை மாற்றிக்கொண்டு பேசியது: “ராஜ சிங்கமே! நீங்கள் குடல் அனுப்பியதற்கு மிக்க நன்றி, ஆனால் அதனை உங்களிடமே சேர்க்க முடிவு செய்து விட்டோம்”.

குடலை சிங்கத்திடம் கொடுத்து விட்டு திரும்பிய கழுதைப்புலியிடம் குட்டி கேட்டது: “பசுவில் பாதி கேட்கப்போன நீங்கள் குடலையும் கொடுத்து விட்டு வருகிறீர்களே?”.

“மகனே! சிங்கம் மிகக் கொடுரமாக இருந்தது. அதைக்கண்டு நடுங்கி விட்டேன். எனவே எனது பங்கையும் கொடுத்துவிட்டுப் பாராட்டி விட்டு வந்தேன். எல்லாம் நன்மைக்காக” என்றது தாய் கழுதைப்புலி.

நம்மை விட வலிமையானவர்களைக் கோபப்படுத்துவதை விட அவர்களை சாந்தப்படுத்துவதே பாதுகாப்பானது.

இன்றைய செய்திகள்

11.03.2026

⭐ மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மேம்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்

⭐ இந்தியாவிற்கு 700 மில்லியன் கியூபிக் மீட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. இதில் 85 சதவீதம் உணவு உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகிறது. மக்கள் தொகை அதிகரிப்பால் வருங்காலத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

⭐இந்தியா சுமார் 10 மில்லியன் டன் யூரியா மற்றும் 6.5 மில்லியன் டன் டி.ஏ.பி உரங்களை இறக்குமதி செய்து வருகிறது. இதில் 75% நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀 ஐபிஎல் போட்டி அட்டவணை நாளை வெளியீடு..!
ஐபிஎல் அட்டவணை இரண்டு கட்டங்களாக வெளியிடப்படுகிறது.முதல் 20 நாட்களுக்கான அட்டவணை வருகிற 12-ந்தேதி வெளியாக உள்ளது.

Today's Headlines

⭐ Approval from the Union Cabinet to upgrade Madurai Airport into an international airport..

⭐ India requires about 700 million cubic meters of water, out of this, 85% is used for food production ,due to the increasing population, there is a possibility of water shortage in the future.

⭐ India imports around 10 million tons of urea and 6.5 million tons of DAP (Di-Ammonium Phosphate) fertilizers, About 75% of these fertilizers are imported from other countries.

 *SPORTS NEWS* 

🏀 IPL match schedule to be released tomorrow. The IPL schedulewill be released in two phases and the schedule for the first 20 days will be announced initially.

Covai women ICT_போதிமரம்

Tuesday, March 10, 2026

Tuesday, March 10, 2026

பேராசிரியர் அன்பழகன் விருதுக்கு தகுதியான பள்ளிகளை தெரிவு செய்து அனுப்ப பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு


பேராசிரியர் அன்பழகன் விருதுக்கு தகுதியான பள்ளிகளை தெரிவு செய்து அனுப்ப பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு

👇👇👇👇

DSE - Anbazhagan Award 2026 - Download here
Tuesday, March 10, 2026

மெரினாவில் 'கற்றனைத் தூறும் அறிவு' என்ற பெயரில் அமைக்கப்பட்டுள்ள சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!!


சென்னை மெரினா கடற்கரையில் ரூ.1.43 கோடி மதிப்பீட்டில் 'கற்றனைத் தூறும் அறிவு' என்ற பெயரில் அமைக்கப்பட்டுள்ள சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். கற்றனைத் தூறும் அறிவு! சாதனைச் சரித்திரம் நூலினையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியில் திமுக இளைஞரணி சார்பில் நிறுவப்பட்டுள்ள கலைஞரின் முழு உருவ வெண்கல சிலையை காணொலிக் காட்சி வாயிலாக முதலமைச்சர் திறந்து வைத்தார்.
Tuesday, March 10, 2026

பிளஸ் 2 வேதியியல் கடினம்: தேர்ச்சி குறைய வாய்ப்பு

பிளஸ் 2 பொதுத்தேர்வில் வேதியியல் வினாத்தாள் கடினமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.

பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 2-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி வேதியியல், கணக்குப் பதிவியல், புவியியல் ஆகிய பாடங்களுக்கான தேர்வுகள் நேற்று நடைபெற்றன. இத்தேர்வை 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மையங்களில் 7.91 லட்சம் மாணவர்கள் எழுதினர். 10,159 மாணவர்கள் தேர்வில் பங்கேற்கவில்லை.

இந்நிலையில், வேதியியல் வினாத்தாள் கடினமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து ஆசிரியர்களிடம் கேட்டபோது, ‘‘வேதியியல் வினாத்தாளில் 1, 5 மதிப்பெண் பகுதிகளில் சில கேள்விகள் கடினமாக இருந்ததால் பதில் அளிப்பது சிரமமாக இருந்தது. பல்வேறு எதிர்பாராத கேள்விகள் கேட்கப்பட்டதால் இந்தாண்டு வேதியியல் பாடத்தில் தேர்ச்சி மற்றும் ‘சென்டம்’ பெறும் மாணவர்கள் எண்ணிக்கை சற்று குறையக்கூடும்.

கணக்குப்பதிவியல் எளிது: அதேநேரம் கணக்குப் பதிவியல் வினாத்தாள் எளிதாக இருந்தது. 1, 2, 3, 5 மதிப்பெண் பகுதியில் இடம்பெற்ற பெரும்பாலான வினாக்கள் எளிதாக இருந்தன. மெல்லக் கற்கும் மாணவர்கள்கூட அதிக மதிப்பெண் பெறும் அளவுக்கு வினாத்தாள் இருந்தது.

இதனால், நூற்றுக்கு நூறு மதிப்பெண்பெறும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்’’ என்றனர்.

இயற்பியல், பொருளியல் மற்றும் வேலைவாய்ப்புத் திறன் பாடத் தேர்வுகள் மார்ச் 13-ம் தேதி நடைபெற உள்ளது. ஒட்டுமொத்தமாக பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 26-ம் தேதியுடன் முடிய உள்ள நிலையில், தேர்வு முடிவுகள் மே 8-ல் வெளியிடப்பட உள்ளது குறிப்பிடத் தக்கது
Tuesday, March 10, 2026

மதிப்பீட்டு புலம் - Future Ready-மார்ச்-2026

வகுப்பு- 6 முதல் 9ஆம் வகுப்பு வரை

வினாத்தாள் பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாள்கள் : 09.03.26 - மாலை 5.00 மணி முதல் 13.03.26 மாலை 5.00 மணி வரை.

💧அனைத்து அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் அடைவுத்தேர்வு மற்றும் உயர் சிந்தனை வினாக்களை எதிர்கொள்ளும் திறனை மேம்படுத்தும் பொருட்டு *Future Ready* திட்டம் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

💧 மாணவர்கள் NAS/SLAS போன்ற அடைவுத் தேர்வுகளை எளிதாக எதிர்கொள்ளவதற்கு ஏதுவாக Future Ready வினாக்கள் வடிவமைக்கப் பட்டுள்ளது.

💧அனைத்து அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு Future Ready வினாத்தாள்களை பதிவிறக்கம் செய்து பயிற்சி அளித்து அவர்களுக்கு உயர் சிந்தனை வினாக்களை எதிர்கொள்ளும் திறனை வளர்த்திட வேண்டும்.

💧 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்கள் வினாக்களை அனைத்து மாணவர்களும் பயன்பெறும் வகையில் வகுப்பறை செயல்பாடாக மேற்கொள்ள வேண்டும்.

அனைத்து அரசு நடுநிலை ,உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் Future Ready வினாத்தாள்கள் பதிவிறக்கம் செய்யப்பட்டு பயிற்சி அளிக்கப்படுவதை மாவட்ட கல்வி அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் பள்ளி பார்வையின் போது உறுதி செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இணையதள முகவரி :

Tuesday, March 10, 2026

SSLC பொதுத் தேர்வு - மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலர் அளவிலேயே சலுகைக்கான ஆணை வழங்க அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு!!!




SSLC பொதுத் தேர்வு - மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலர் அளவிலேயே சலுகைக்கான ஆணை வழங்க அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு!

DGE - CEO Order Letter - Download here
Tuesday, March 10, 2026

இன்றைய செய்திகள் 10.03.2026(செவ்வாய்க்கிழமை)

🌹நேரத்திற்கு தகுந்தாற் போல் வேஷத்தை மாற்றவும்,ஆளுக்கு தகுந்தாற்போல் பாசத்தை காட்டவும் தெரிந்தவர்களே, மற்றவர்களால் அதிகம் கவரப்படுகிறார்கள்.!

🌹🌹அலட்சியம் மற்றும் புறக்கணிப்பு, பெரும்பாலும், வெளிப்படையான வெறுப்பைக் காட்டிலும்,அதிக சேதத்தை ஏற்படுத்துகின்றன.!!

🌹🌹🌹ஒருவர் இப்படி தான் என மனதால் தீர்மானித்து விட்டால்... அவர் நல்லதே செய்தாலும் மனம் குறைகளை மட்டும்தான் தேடும்...

அவர் நல்லவராகவே இருந்தாலும் குறைகளை மட்டும் தான் சொல்ல தோன்றும்...

இதுவே மனித இயல்பாகும்.!!!

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

⛑️⛑️2025-2026 ஆம் கல்வியாண்டில் சிறந்த பள்ளிகளுக்கான பேராசிரியர் பெயரில் விருதுகள் வழங்குதல் - தகுதியான பள்ளிகளை தெரிவு செய்து அனுப்பக் கோருதல் சார்ந்து பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு.

⛑️⛑️இளங்கலை மருத்துவ பட்டப் படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வு எழுத விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி மார்ச் 11 என்று அறிவிக்கப்பட்டுள்ளது

⛑️⛑️ஆசிரியர் தகுதித் தேர்வு முடித்த தட்டச்சர்களை விடுத்து அமைச்சு பணியாளர்களுக்கு உண்டான ஆசிரியர் பணி மாறுதல் என்பது இல்லை என தெரிவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது

⛑️⛑️முதல் வகுப்பு மாணவர்கள் சேர்க்கை குறித்தும், வயது தளர்வு வழங்குவது குறித்தும் இயக்குநர் அவர்களின் தெளிவுரை - குரல் பதிவு வெளியீடு.

⛑️⛑️திட்டமிட்டபடி நீட் தேர்வு மே 3, 2026 அன்று நடைபெறும் - NTA

⛑️⛑️10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு கூடுதல் வழிமுறைகள் வெளியீடு.

⛑️⛑️தந்தை இறந்த துக்கத்திலும் தேர்வு எழுதிய 12 ம் வகுப்பு மாணவன்.முதலில் தேர்வெழுத அனுப்ப மறுத்த உறவினர்கள். மாணவனின் எதிர்காலத்தை கருதி உடனடியாக தலையிட்டு தேர்வெழுத வைத்த தலைமை ஆசிரியர்.. தேர்வுக்கு பின் தனது காரிலேயே மாணவனை அழைத்து சென்று அவரது வீட்டில் விட்ட தலைமை ஆசிரியரின் நெகிழ்ச்சி செயல்..

🍒🍒100 டாலரை கடந்த கச்சா எண்ணெய் விலை:

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 100 டாலரை கடந்துள்ளது.

ஈரான் ஹோர்மோஸ் நீரிணையை மூடியதால் உலகளாவிய விநியோகத்தில் பாதிப்பு.

இதன் விளைவாக அமெரிக்க சந்தையில் கச்சா எண்ணெய் விலை சுமார் 18% உயர்ந்து 110 டாலர் வரை சென்றது.

⛑️⛑️"புரிந்துகொள்ளாதவர்கள் முட்டாள்கள்"

ஈரான் அணு அச்சுறுத்தல் முழுமையாக முடிவுக்கு வந்தால் உலகளவில் எண்ணெய் விலை விரைவாக குறையும்.

குறுகிய காலத்திற்கு எண்ணெய் விலை உயர்ந்தாலும், அது உலக பாதுகாப்புக்கும் அமைதிக்கும் செலுத்த வேண்டிய சிறிய விலையே.

இதை புரிந்துகொள்ளாதவர்கள் முட்டாள்கள்.

தனது Truth Social சமூக வலைதளத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பதிவு.

⛑️⛑️வீட்டு உபயோக சிலிண்டர் மீது முக்கியத்துவம்:

வணிகப் பயன்பாட்டு சிலிண்டர் உற்பத்தி குறைப்பு என தகவல்..

வீட்டு உபயோக சிலிண்டர் விநியோகத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவு..

வீட்டு உபயோக சிலிண்டர் 1 வைத்திருந்தால் 21 நாட்களில் புக்கிங் செய்யலாம்..

வீட்டு உபயோக சிலிண்டர் 2 வைத்திருந்தால் 30 நாட்களில் புக்கிங் செய்யலாம்

⛑️⛑️விஜய் ஆஜராவது சந்தேகம்:

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த வழக்கில் தவெக தலைவர் விஜய் இன்று ஆஜராகமாட்டார்; வழக்கறிஞர் மூலம் ஆஜராவதில் இருந்து விலக்கு கோர விஜய் தரப்பு முடிவு என தகவல்.

இதே வழக்கு தொடர்பாக அடுத்தடுத்து 2 நாட்கள் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்; இன்று முதல் தவெக வேட்பாளர் நேர்காணல் தொடங்க உள்ளதை ஒட்டி விஜய் ஆஜராக மாட்டார் என தகவல்.

⛑️⛑️புதுச்சேரியிலும் குடும்ப தலைவிகளுக்கு ரூ.5000 வரவு வைப்பு.

தமிழகத்தை போல் புதுவை மாநிலத்திலும் குடும்ப தலைவிகளுக்கு வங்கிக் கணக்கில் ரூ.5000 வரவு வைப்பு.

சிவப்பு நிற குடும்ப அட்டைகளுக்கு மார்ச், ஏப்ரல் என இரு மாதங்களுக்கு வழங்கப்பட வேண்டிய ரூ.2,500 உதவித் தொகையை சேர்த்து மொத்தமாக வழங்கப்பட்டுள்ளது.

⛑️⛑️வெள்ளியங்கிரி மலை கோவிலுக்கு சென்ற பக்தர் பலி

கோவை வெள்ளியங்கிரி மலை ஏறிய, கெம்பட்டி சேர்ந்த ஹரிதாஸ் என்பவர் உயிரிழப்பு

நடப்பு ஆண்டில் வெள்ளியங்கிரி மலைக்கு சென்றதில் ஏற்பட்ட 3வது உயிரிழப்பு என்பது குறிப்பிடத்தக்கது

⛑️⛑️பாக்.,-ல் பெட்ரோல் விலை உயர்வு

பாகிஸ்தானில் பெட்ரோல் விலை 321 ரூபாயாகவும், டீசல் 335 ரூபாயாகவும் உயர்வு

எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் நீண்ட வரிசையில் நின்று வாங்கிச் சென்ற மக்கள்

⛑️⛑️சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பு வர உள்ள நிலையில் மதுரைக்கு துணை ராணுவத்தினர் வந்தடைந்தனர்.

⛑️⛑️தங்கம் விலை குறைவு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைவு

ஒரு சவரன் ரூ.1,19,600க்கும், ஒரு கிராம் ரூ.14,950க்கும் விற்பனை ⛑️⛑️மார்ச் 11 ஆம் தேதி பிரதமர் மோடியின் திருச்சி வருகையை ஒட்டி பஞ்சப்பூர் மற்றும் பிரதமர் செல்லும் வழித்தடங்களில் சிறப்பு

பாதுகாப்பு குழுவினர் தீவிர கண்காணிப்பு

⛑️⛑️புதிய தலைவருக்கும் டிரம்ப் வார்னிங்

``ஈரானின் புதிய உச்ச தலைவராக தேர்வாகியுள்ள மோஜ்தபா காமேனி, அமெரிக்காவின் அங்கீகாரம் இல்லாமல் நீண்ட காலம் பதவியில் நீடிக்க முடியாது. அயதுல்லா அலி காமேனியின் மகனான மோஜ்தபா தகுதியற்றவர்''

* டிரம்ப் விமர்சனம்

⛑️⛑️இன்று (மார்ச் 10) காலை 10 மணிக்கு, தொகுதி பங்கீடு தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் 2 ஆம் கட்ட பேச்சு வார்த்தைக்கு திமுக அழைப்பு

⛑️⛑️மார்ச் 12ல் தவெக போராட்டம்

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கோரி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மார்ச் 12ல் தவெக போராட்டம் அறிவிப்பு

தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்த் போராட்டம் குறித்து அறிவிப்பு

⛑️⛑️கேஸ் விலை உயர்வைத் திரும்பப் பெற வேண்டும்”

சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் பேட்டி

⛑️⛑️கச்சா எண்ணெய் விலை உயர்வை தடுக்க, தங்கள் நாடுகளின் எண்ணெய் இருப்பை விற்க G7 அமைப்பு பரிசீலனை!

கச்சா எண்ணெய் விலை உயர்வை தடுக்க, தங்கள் நாடுகளின் எண்ணெய் இருப்பை சர்வதேச சந்தையில் விற்க G7 பரிசீலனை.

G7 நாடுகளின் சுமார் 30% எண்ணெய் இருப்பை (400 மில்லியன் பீப்பாய்கள்) சந்தையில் விற்க திட்டம் என தகவல். இச்செய்தி வெளியான 2 மணி நேரத்தில் எண்ணெய் விலை $15 சரிந்து $105க்கு கீழ் வர்த்தகம்

⛑️⛑️இந்திய பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி!

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 2371 புள்ளிகள் குறைந்து 76,558 புள்ளிகளில் வர்த்தகம்.

தேசிய பங்குச்சந்தை எண்கள் நிஃப்டி 720 புள்ளிகள் சரிந்து 24,731 புள்ளிகளில் வர்த்தகம்.

மத்திய கிழக்கு போரால் இந்தியா, ஜப்பான், தென் கொரியா உட்பட பெரும்பாலான ஆசிய நாடுகளின் பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சியுடன் வர்த்தகம்

⛑️⛑️'தாய்க்கிழவி' திரைப்படம் 10 நாட்களில் ரூ.50 கோடி வசூலை எட்டியது

⛑️⛑️தி.மு.க. சார்பில் திருச்சி சிவா மற்றும் கான்ஸ்டன்டைன் ரவீந்திரனும், அ.தி.மு.க. சார்பில் தம்பிதுரையும், காங்கிரஸ் சார்பில் கிறிஸ்டோபர் திலக்கும், தே.மு.தி.க. சார்பில் சுதீஷும், பா.ம.க. சார்பில் அன்புமணியும் மாநிலங்களவை எம்.பி.க்களாக போட்டியின்றி தேர்வாகியுள்ளனர்.

⛑️⛑️தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையுமாறு தவெகவுடன் பேச்சு நடத்தவில்லை; விஜய்க்கு துணை முதலமைச்சர் பதவி என்பதெல்லாம் முழுக்க முழுக்க வதந்தி; தமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தான்

அதிமுக - பாஜக கூட்டணியில் துணை முதலமைச்சர் பதவியை விஜய்க்கு கொடுக்க உள்ளதாக வெளியான செய்திக்கு நயினார் நாகேந்திரன் பதில்

⛑️⛑️தஞ்சையில் நடைபெற்ற தனது கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்ற தவெக தலைவர் விஜயை பின்தொடர்ந்ததால் விபத்தில் சிக்கி படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இளைஞரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் அமைச்சர் அன்பில் மகேஷ்

மருத்துவ செலவை பற்றி கவலைப்பட வேண்டாம், தான் பார்த்து கொள்கிறேன் என அமைச்சர் உறுதி ⛑️⛑️நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு சட்டத்தை நடைமுறைப்படுத்த கோரி தாக்கல் செய்த பொதுநல மனு

மனுவுக்கு பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் 4 வாரம் அவகாசம்

⛑️⛑️ஈரான் புதிய உச்சத்தலைவராக மொஜ்தபா காமேனி தேர்வு

"தனது தந்தையின் பணிகளை மொஜ்தபா கண்ணியத்துடன் தொடர்வார். கடும் சோதனைகளுக்கு மத்தியில் ஈரான் மக்களை அவர் ஒன்றிணைப்பார்; ஈரானுடன் ரஷ்யா உறுதியாக நிற்கும்"

-ரஷ்ய அதிபர் புதின்

⛑️⛑️ “சமீப காலமாக தவணை முறையில் சில கட்சிகள் தேர்தல் வாக்குறுதிகளை அளிக்கின்றன; அதுவும் திராவிட மாடல் அரசின் திட்டத்தை டாப்-அப் செய்து அறிவிக்கின்றனர்

ஏனென்றால் அந்த திட்டங்களில் எல்லாம் தடுக்கவோ, நிறுத்தவோ யோசிக்கக் கூட முடியாது என்பது அவர்களுக்கே தெரியும்

எவராலும் மாற்ற முடியாத திட்டங்களை நாம் கொண்டு வந்துருக்கிறோம்”

-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

⛑️⛑️திருவனந்தபுரம் வந்த ‘டி20 உலக கோப்பை சாம்பியன் மற்றும் தொடர் நாயகன்’ சஞ்சு சாம்சன் - மாநில அரசின் சார்பில் வரவேற்ற அமைச்சர் சிவன் குட்டி

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

அன்பை கொடுப்பதிலும் பெறுவதிலும் தான் இன்பம் இருக்கிறது. என்றும் அன்புடன்

சு.வேலுமணி M.A.,B.Ed.,

தலைமையாசிரியர், மாவட்டச் செயலாளர்

&தகவல் தொழில் நுட்ப அணியின் மாநில அமைப்பாளர்,

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,

கரூர் மாவட்டம்.

அலைபேசி:9003599926
Tuesday, March 10, 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 10.03.2026



திருக்குறள்: 

குறள் 613: 

தாளாண்மை என்னுந் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னுஞ் செருக்கு.              
விளக்க உரை: 

பிறர்க்கு உதவிசெய்தல் என்னும் மேம்பட்ட நிலைமை முயற்சி என்று சொல்லப்படுகின்ற உயர்ந்த பண்பில் நிலைத்திருக்கின்றது.

பழமொழி :

The childhood shows the man.    

விளையும் பயிர் முளையிலேயே தெரியும்.

இரண்டொழுக்க பண்புகள் :.

1.   திட்டமிட்டு செயல் பட்டால் வெற்றி நிச்சயம்.

2.எனவே  ஒரு செயலை தொடங்கும் முன், எவ்வாறு செய்து முடிக்க போகிறோம் என்று திட்டமிட்டு செயல் பட வேண்டும்.

பொன்மொழி : 

உணவுக்கு மிகவும் சுவை தரும் பொருள்- பசி. ஆம். பசி இருந்தால் உணவு சுவையாக இருக்கும் - சாக்ரடீஸ்

பொது அறிவு : 

01.உலகின் மிக வேகமான பறவை 

எது?

பெரெக்ரின் ஃபால்கன் -

 Peregrine Falcon

02.அறை வெப்பநிலையில் (சுமார் 20-25°C) திரவமாக இருக்கும் ஒரே உலோகம் எது?

       பாதரசம் - Mercury 

English words :

Grave-serious

Put up with -tolerate

தமிழ் இலக்கணம்: 

தவறான பேச்சு மொழியும் சரியான எழுத்து மொழியும் 2
1. மல்லிகை மணம் வீசுகிறது (வீசி எறிகிறோமா என்ன)
      மல்லிகை   மணம் கமழ்கிறது –சரி 
2. மாறன் கண் முழித்தான் (திரு திரு என்றா)
      மாறன் கண் விழித்தான் 

அறிவியல் களஞ்சியம் :

பூமியின் காந்தப் புலம் என்பது ஒரு நிலைத்த அமைப்பு அல்ல. உருகிய நிலையில் உள்ள வெளிப்புற மையப்பகுதியில் (outer core) நடைபெறும் மிகச் சிக்கலான இயற்பியல் செயல்முறைகளால் அது இடையறாது மாறிக்கொண்டே இருக்கிறது. இந்த மாற்றங்களின் மிக வெளிப்படையான வெளிப்பாடுதான்  காந்தத் துருவங்களின் நகர்வு ஆகும்.

மார்ச் 10

சாவித்திரிபாய் புலே அவர்களின் நினைவுநாள்
சாவித்திரிபாய் புலே (Savitribai Jyotirao Phule, 3 சனவரி 1831 – 10 மார்ச் 1897) ஒரு சமூக சீர்திருத்தவாதியும், கவிஞரும் ஆவார்.இவர் இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் என அழைக்கப்படுகிறார். இவர் தன் கணவர் மகாத்மா ஜோதிராவ் புலேயுடன் (Mahatma Jyotirao Govindrao Phule) இணைந்து, ஆங்கிலேயர் காலத்தில் பெண் உரிமைக்காகவும், கல்விக்காகவும் பாடுபட்டவர். இவர்கள் பெண் கல்விக்காக முதல் பள்ளியை பூனாவிற்கருகிலுள்ள பிடெ வாடாவில் 1848 ஆம் ஆண்டு நிறுவினர்.

சாவித்திரிபாய் புலே பிறப்பின் 186 ஆவது ஆண்டு நிறைவை தேடு பொறி கூகுளானது, ஜனவரி 3, 2017 அன்று ”கூகுள் டூடுள்” கொண்டு அடையாளப்படுத்திச் சிறப்பித்தது.

ஜோதிராவ் புலே 1846ஆம் ஆண்டில் ஒரு பள்ளியை தொடங்கி சாவித்திரிபாயுடன் பாத்திமா ஷேக் என்ற பெண்ணையும் சேர்த்து சூத்திரர், ஆதிசூத்திரர் ஆகிய பெண்களுக்குக் கல்வி புகட்டினார். பின்னர் 1848ஆம் ஆண்டு சாவித்திரிபாய் ஆசிரியர் பயிற்சி பெற்றார். மீண்டும் 1848ஆம் ஆண்டு புனேவில் 9 மாணவிகளுடன் ஒரு பள்ளியைத் துவங்கி அதில் சாவித்திரிபாய் தலைமையாசிரியராகப் பணி செய்தார். சுமார் 6 மாதங்களுக்குப்பின் அப்பள்ளி மூடப்பட்டு வேறோர் இடத்தில் பள்ளி தொடங்கப்பட்டது. பழமைவாதிகளும் மேல்சாதியினரும் சாவித்திரிபாய் கல்விப் பணி செய்வதைக் கடுமையாக எதிர்த்தனர். அவர் மீது சேற்றினையும், மலத்தினையும் வீசிப் பல தொல்லைகள் அளித்தனர். தினமும் பள்ளி செல்லும்போது பழைய ஆடைகளை அணிந்து பள்ளி சென்று பின் வேறோர் சேலை அணிந்து கொள்வார். பல துன்பங்களுக்கு இடையில் கல்விப் பணியாற்றினார்.

நீதிக்கதை

வரும்முன் காப்போம்

தேரிக்குடியிருப்பு என்ற ஊரின் எல்லையில் இருந்த காட்டில் பெரிய குளம் இருந்தது, அதனை ஒட்டி சிறிய நீரோடை ஓடிக் கொண்டிருக்கும்.

அந்த குளத்தில் நிறைய மீன்கள், நண்டுகள், மற்றும் அனைத்து நீர்வாழ் இனங்கள் வாழ்ந்து வந்தன. அவற்றில் ராமு, சோமு, தாமு என்ற மூன்று மீன்கள் நல்ல நண்பர்களாக இருந்தார்கள். அந்த மூவரும் எங்கே சென்றாலும் ஒன்றாகவே போவார்கள். ஒரு பயமும் இல்லாமல் சந்தோசமாக வாழ்ந்து வந்தார்கள்.

அவர்கள் மகிழ்ச்சியை கெடுக்கும் விதமாக ஒரு நாள் மாலையில் ஒரு இரண்டு மனிதர்கள் அங்கே வந்தார்கள், வேட்டையாடிய களைப்பு முகத்தில் தெரிந்தது, குளத்து நீரை அருந்தி விட்டு, குளத்தை நன்றாக ஆராய்ந்தார்கள், பின்னர் அவர்களில் ஒருவர் “இந்த குளத்தில் நிறைய மீன்கள் இருக்கிறதே, அதுவும் நன்றாக வளர்ந்து கொழு கொழு என்று இருக்கிறதே, நாம் வீணாக காடு மேடு என்று அலைந்து வேட்டையாட வேண்டாம், பேசாம இங்கே நாளை வந்து வலையை விரிப்போம், மாட்டிக் கொள்ளும் மீன்களை விற்று பணம் சம்பாதிக்கலாம்” என்றார். மற்றவரும் “ஆகா, அருமையான யோசனையாக இருக்கிறதே” என்றார்.

இவர்கள் பேசுவதை கேட்ட ராமு என்ற மீன் பெருங்கவலை அடைந்தது, உடனே தன் நண்பர்களான சோமு, தாமுவிடம் கூறியது. காட்டின் நடுவில் இருந்ததால் இதுவரை பெரிய ஆபத்து வந்தது இல்லை, குளத்தில் நடுவில் போய் இருந்தால் பறவைகள் கூட தங்களை ஒன்றும் செய்தது இல்லை, இன்றோ இந்த மனிதர்களால் பெரிய ஆபத்து வந்து விட்டதே என்ன செய்யலாம் என்று யோசித்தன.

ராமு எப்போவும் வரும்முன் காத்துக் கொள்ளும் மனம் படைத்த மீன், மற்ற மீன்களைப் பார்த்து, நாளை கண்டிப்பாக அவர்கள் இங்கே வருவார்கள், நாம் இன்று இரவே இக்குளத்தை விட்டு நீரோடையின் உதவியால் அருகில் இருக்கும் வேறு குளத்திற்கு போகலாம். சில காலம் போனபின்பு மீண்டும் இங்கே வரலாம் என்றது.

ராமுவின் நல்ல யோசனையை மற்ற இருவரும் ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்கள் சும்மா சொல்லிவிட்டு போயிருப்பார்கள், அவர்களாவது நம்மை பிடிப்பதாவது, நீ வீணாக பயப்படுகிறாய் என்றன.

ராமு எவ்வளவோ சொல்லிப் பார்த்தது, ஆனால் சோமு,தாமு இருவரும் கேட்கவில்லை. ராமு அவர்களிடம் மன்னிப்பு கேட்டு விட்டு தான் இன்று இரவே அந்த குளத்தை விட்டு போவதாக சொல்லி விட்டு இரவே தப்பி வேற குளத்திற்கு போய் விட்டது.

மறு நாள் காலையில் சோமு, தாமு இருவரும் கூடி பேசினார்கள், மீன் பிடிப்பதாக சொன்னவர்களை காணவில்லை, சும்மா பேச்சு சொன்னதை நம்பி ராமு வேற குளத்திற்கு போனது முட்டாள்த்தனம் என்று கேலி செய்தன.


சிறிது நேரத்தில் வலை விரிப்பதாக சொன்ன இருவரும் பெரிய வலையை எடுத்து வந்து எங்கே வலை வீசுவது என்று பேசினார்கள்.

அவ்வளவு தான் அதைக் கேட்டு சோமு “அய்யோ கடவுளே!, ராமு அப்போவே சொன்னதே, இரவே தப்பியிருக்கலாமே” என்று புலம்பியது.

ஆனால் தாமு அந்த சூழ்நிலையிலும் கொஞ்சமும் பயப்படவில்லை, “ஏன் பயப்படுகிறாய், குளத்தில் எவ்வளவோ இடங்கள் இருக்கின்றன, நாம் மறைந்துக் கொள்ளலாம்” என்றது.

சோமு கொஞ்சம் கொழு கொழு மீன், அதற்கு பயம் வந்து விட்டது, அதற்குள் மீனவர்கள் வலை வீச, தாமூ ஓடி ஒளிந்துக் கொண்டது. சோமு மாட்டிக் கொண்டது, வலையில் இருந்து தன்னை விடுவிக்க படாத பாடு பட்டது.

இறுதியில் சோமுவின் வால் பகுதியும் முதுகும் சேதமடைந்து, வலையில் இருந்து விடுபட்டு நீரோடையில் பாய்ந்து தப்பி விட்டது. உடல் எங்கும் ரத்தம், வரும் முன்னால் காக்காமல் வந்த போது காக்க நினைத்த தன் முட்டாள்தனத்தை நினைத்து வருந்தியது.

தாமு குளத்தின் உள்ளே இருந்த பாறையின் அடியில் ஒளிந்துக் கொண்டது, தான் வீரமாக தப்பியதை நினைத்து பெருமைப்பட்டது. அது ரொம்ப நேரம் நீடிக்கவில்லை. வந்த இருவரில் ஒருவர் நீண்ட கம்பை எடுத்து குளத்தின் அடியில் இருக்கும் பாறைகளில் செலுத்தி அசைத்தார், அவ்வாறு செய்கையில் ஒரு முறை அந்த கம்பானது தாமுவை தாக்கியது, தாமு தப்பிக்க நினைத்து அதிலிருந்து வெளியே வர, அங்கே இருந்த வலையில் மாட்டிக் கொண்டது.


சிறிது நேரத்தில் மீனவர்கள் வலையை வெளியே எடுத்து மாட்டிய அனைத்து மீன்களையும் தரையில் போட்டு கொன்றார்கள். அதில் தாமுவும் ஒரு மீன்.

வரும்முன் காப்போம் என்ற கொள்கை கொண்ட ராமு ஒரு ஆபத்தும் இல்லாமல் தப்பி, மகிழ்ச்சியாக வாழ்ந்தது, வந்த போது காப்போம் என்ற கொள்கை உடைய சோமு, உடல் எங்கும் காயப்பட்டு, மற்ற மீன்களுக்கு பயந்து பயந்து வாழ்ந்தது, வந்தப்பின்பு பார்ப்போம் என்ற கொள்கை உடைய தாமுவோ கொல்லப்பட்டு விட்டது.

குழந்தைகளே! இக்கதையானது நம் அனைவருக்கும் நல்ல பாடம். எந்த விசயத்தையும் வரும் முன்பே யோசிக்க வேண்டும், மழைக்காலம் என்றால் வெளியே செல்லும் போது கையில் குடை இருக்க வேண்டும்.

தேர்வு வருகிறது என்றால் ஒரு வாரத்திற்கு முன் அனைத்துப் பாடங்களையும் படித்து முடிக்க வேண்டும். கடைசி நேரத்தில் படிக்கத் தொடங்கினால் அது பயன் அளிக்காது, எனவே நாம் எப்போவும் வரும்முன் காப்போம் என்ற கொள்கையை பின்பற்ற வேண்டும், பின்பற்றினால் கவலையின்றி வாழலாம். 


இன்றைய செய்திகள்

10.03.2026

⭐தமிழகத்தில் ஜூலை 17 முதல் ஆக.30 வரை டிஜிட்டல் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடைபெற உள்ளது.

⭐உடுமலையில் 3,000 ஆண்டு கால அதிசயம்: கல்லாபுரத்தில் கண்டறியப்பட்ட பிரம்மாண்ட கற்திட்டை!

⭐ இந்தியாவில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படுவதைத் தடுக்கும் நோக்கில், சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்குமாறு மத்திய பெட்ரோலிய அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

⭐அமெரிக்கா & ஈரான் தேசத்திற்கும் இடையே ஏற்பட்ட போர் காரணமாக, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் (UAE) உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது

🏀விளையாட்டுச் செய்திகள்

🏀இந்த டி20 உலக கோப்பை தொடரில் மூன்று முறை சாம்பியனான அணி, டி20 உலக கோப்பையை தக்க வைத்த அணி மற்றும் உள்ளூரில் டி20 உலக கோப்பையை வென்ற முதல் அணி எனப் பல பெருமைகளை தன்வசம் ஆக்கியுள்ளது இந்திய அணி.

Today's Headlines

⭐ In Tamilnadua digital population census will be conducted from July 17 to August 30

⭐ A 3,000-year-old wonder was discovered in Udumalai. A massive stone structure has been identified at Kallapuram

⭐ To prevent  cooking gas shortage in India the Central Petroleum Ministry has instructed to increase the production of cooking gas

⭐ Due to the war between the United States and Iran there is a risk of food shortage in the United Arab Emirates (UAE)

 *SPORTS NEWS* 

🏀The Indian team has achieved many honors in this T20 World Cup series, including being the three-time champion, the team that retained the T20 World Cup, and the first team to win the T20 World Cup domestically.

Covai women ICT_போதிமரம்

Monday, March 9, 2026

Monday, March 09, 2026

சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கை குறித்து நாளை கருத்து கேட்பு கூட்டம் - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

நாளை சம வேலைக்கு சம ஊதிய கருத்து கேட்பு கூட்டம்

தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப்பணி சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கை குறித்து குழு அமைத்து அரசாணை வெளியிடப்பட்டது இக்கோரிக்கை சார்பாக அழைக்கப்படாத பிற சங்கங்களுக்கான ஐந்தாவது கூட்டம் 10.03.2026 அன்று பிற்பகல் 2.30 மணியளவில் நடைபெற உள்ளது - தகவல் தெரிவித்தல் - சார்ந்து.
Monday, March 09, 2026

2026-2027ஆம் கல்வி ஆண்டில் - 1ம் வகுப்பு மாணவர் சேர்க்கை குறித்த தகவல்கள்


2026-2027ஆம் கல்வி ஆண்டில் முதலாம் வகுப்பில் மாணவர் சேர்க்கை குறித்த தகவல்கள்

* 31-07-2021 வரை பிறந்த குழந்தைகளை தலைமை ஆசிரியர்கள் தாங்களாகவே முதலாம் வகுப்பில் சேர்க்கை செய்து கொள்ளலாம்.

* 01-08-2021 முதல் 31-08-2021 வரை பிறந்த குழந்தைகளை வட்டாரக்கல்வி அலுவலர் அவர்களின் அனுமதி பெற்று சேர்க்கை செய்து கொள்ளலாம்.

* 01-09-2021 முதல் 31-12-2021 வரை பிறந்த குழந்தைகளை முதலாம் வகுப்பில் சேர்க்கை செய்து விட்டு வட்டாரக்கல்வி அலுவலர் மூலமாக மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி) அவர்களுக்கு தளர்வாணை வேண்டி விண்ணப்பம் செய்து தளர்வாணை பெற வேண்டும்.
Monday, March 09, 2026

ஜனவரி மாதத்திற்கான ஊதியம் கட்; இடைநிலை ஆசிரியர்கள் அதிர்ச்சி

சம வேலைக்கு சம ஊதியம் கோரி, போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்களுக்கு, ஜனவரி மாதத்திற்கான ஊதியம் நிறுத்தப்பட்டது, கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

'சம வேலைக்கு சம ஊதியம்' என்ற ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி, இடைநிலை ஆசிரியர்கள், கடந்த ஆண்டு டிச., 26 முதல், சென்னையில் தொடர் முற்றுகைப் போராட்டம் நடத்தி வந்தனர்.அரையாண்டு விடுமுறைக்கு பின், ஜனவரி, 5ல் பள்ளிகள் திறக்கப்பட்டன. எனினும், இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் தொடர்ந்தது.வகுப்பறைகளில் கற்பித்தல் செயல்பாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதனால், தொடக்கக்கல்வி இயக்குனரகம், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியது.அதில், 'பணிக்கு வருகை தராமல், போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு, ஊதியமில்லாத விடுப்பு பதிவு செய்ய வேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டது.இந்த சூழலில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சருடன் நடந்த பேச்சில் உடன்பாடு ஏற்பட்டது.

இடைநிலை ஆசிரியர்கள், ஜன., 31ல் தங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.எனினும், போராட்டத்தில் பங்கேற்ற, 10,000க்கும் அதிகமான ஆசிரியர்களுக்கு, ஜனவரி மாத ஊதியத்தை பள்ளிக்கல்வித்துறை நிறுத்தியுள்ளது.இது குறித்து, அவர்கள் கூறியதாவது: தி.மு.க., அறிவித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி போராட்டம் நடத்திய, ஆசிரியர்களின் ஊதியத்தை, அரசே நிறுத்தி வைத்துள்ளது. இது, ஆசிரியர்கள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
Monday, March 09, 2026

Ennum Ezhuthum - 1 To 5th Std - Term 3 - ( Set - 10 ) Lesson Plan - T/M & E/M

March - 2026

SET : 10

Ennum Ezhuthum - 1,2,3rd Std - Term 3 - ( Set - 10 ) Lesson Plan - T/M - Download here

Ennum Ezhuthum - 1,2,3rd Std - Term 3 - ( Set - 10 ) Lesson Plan - E/M - Download here

Ennum Ezhuthum - 4 & 5th Std - Term 3 - ( Set - 10 ) Lesson Plan - T/M - Download here

Ennum Ezhuthum - 4 & 5th Std - Term 3 - ( Set - 10 ) Lesson Plan - E/M - Download here
Monday, March 09, 2026

10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு கூடுதல் வழிமுறைகள் வெளியீடு

10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மையங்களில் பின்பற்ற வேண்டிய கூடுதல் வழிமுறைகளை தேர்வுத் துறை வெளியிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 2-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 10-ம் வகுப்புக்கு மார்ச் 11-ம் தேதி முதல் தேர்வு தொடங்குகிறது. பொதுத்தேர்வு மையங்களை மேற்பார்வையிடுவதற்காக முதன்மைக்கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள் ளனர். இவர்கள் வினாத்தாள்களை பாதுகாத்தல், தேர்வறை, சிசிடிவி கண்காணிப்பை உறுதிசெய்தல் போன்ற பணிகளை மேற்கொள்கின்றனர்.

இந்நிலையில் தேர்வுத் துறை இயக்குநரகம் சார்பில், முதன்மைக் கண்காணிப்பாளர்களுக்கு கூடுதலாக சில முக்கிய அறிவுறுத்தல்கள் வழங்கப்

பட்டுள்ளன. அதன்படி, தேர்வு மையத்தில் பணிபுரியும் முதன்மை கண்காணிப்பாளர், அறை கண்காணிப்பாளர், நிலையான படை உறுப்பினர், துறைஅலுவலர் உட்பட அனைத்து பணியாளர்கள் நியமன ஆணையை ஆய்வு அலுவலர் கேட்கும்போது சமர்ப்பிக்க வேண்டும்.

செல்போன் பயன்பாட்டு உறுதிமொழி சான்று தேர்வு முடிந்த பின்னர் பெறப்பட வேண்டும். அறை கண்காணிப்பாளர்களாக நியமனம் செய்யப்படும் ஆசிரியர்கள் அன்றைய தேர்வுக்கான பாடத்தை பயிற்றுவிக்கும் ஆசிரியர்களாக இல்லாததை உறுதிசெய்து கொள்ள வேண்டும்.

மாணவர் உடல்நலன்: தேர்வெழுதும் மாணவருக்கு அம்மைநோய் இருப்பின், அவர் தேர்வெழுத தனியாக ஒரு அறையை ஏற்பாடு செய்ய வேண்டும் என்பன உட்பட பல்வேறு அறிவுறுத்தல்கள் அதில் கூறப்பட்டுள்ளன.
Monday, March 09, 2026

மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலராக கூடுதல் பொறுப்பு அலுவலர் நியமனம் ஆணையிடுதல் தொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்..

திருவள்ளுர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் திருமதி.கோ.கற்பகம் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதி 08.03.2026 முதல் மருத்துவ விடுப்பு - நிருவாக காரணங்களின் பொருட்டு கூடுதல் பொறுப்பு அலுவலர் நியமனம் ஆணையிடுதல் தொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்..
Monday, March 09, 2026

தேர்வு பணியில் உறுதிமொழி சான்று: ஆசிரியர்கள் எதிர்ப்பு

பொதுத்தேர்வு பணியில் ஈடு படுவோரிடம், உறுதிமொழி சான்றில் கையெழுத்து பெறுவதற்கு, ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் துவங்கி உள்ளன.

10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு, வரும் 11ம் தேதி துவங்குகிறது. இந்நிலையில், தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் தங்களின் அலைபேசிகளை, தேர்வு கட்டுப்பாட்டு அறையில் ஒப்படைத்து விட்டு, உறுதிமொழி சான்றிதழில் கையெழுத்திட வேண்டும் என, அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவுறுத்தி உள்ளது. அந்த உறுதிமொழி படிவத்தில், 'தேர்வு பணியின் போது, தேர்வு மையத்துக்கு வருகை புரிந்ததில் இருந்து, பணி முடிந்து செல்லும் வரை, என் அலைபேசியில் இருந்து, தேர்வு வினாத்தாள் தொடர்பாக எந்த செய்தியையும் பகிரவில்லை என உண்மையாக உறுதியளிக்கிறேன்; எந்தவித களங்கம் விளைவிக்கும் செயலிலும் ஈடுபடவில்லை' என கூறப்பட்டுள்ளது. இந்த உறுதிமொழி படிவத்துக்கு, ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

இது குறித்து, தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் பொதுச் செயலர் அன்பழகன் கூறுகையில், ''தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களிடம், குற்றவாளிகள் கண்ணோட்டத்தில் உறுதிமொழி சான்று கேட்பது ஏற்புடையதல்ல. இது, ஆசிரியர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது. உறுதிமொழி பெறும் நடைமுறையை, பள்ளிக்கல்வித் துறை ரத்து செய்ய வேண்டும்' என, தெரிவித்தார்.
Monday, March 09, 2026

IFHRMS - GBM 2.0 (Global Beneficiary Master) குறித்த Updates...


நண்பர்களே தற்போது கருவூலத் துறையில் இருந்து ஒவ்வொரு துறைக்கும் கீழ்காணும் வேலைகளை குறிப்பிட்ட தேதிக்குள் முடிக்கச் சொல்லி, செயல்முறைகள் வழங்கப்பட்டுள்ளது.

IFHRMS - GBM 2.0 (Global Beneficiary Master) குறித்த Updates...👇👇👇

GBM 2.0 - Download here

Courtesy:

Mr.V.Vijayan Sir,

Karur.