Breaking

Tuesday, February 10, 2026

Tuesday, February 10, 2026

ஆசிரியையிடம் ரூ.74 லட்சம் ஊதியம் பிடிக்க பிறப்பித்த உத்தரவு ரத்து


அரசு உதவி பெறும் தனியார் பள்ளி ஆசிரியையிடம், 74 லட்சம் ரூபாய் சம்பளத் தொகையை வசூலிக்க, சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.கிருஷ்ணகிரியைச் சேர்ந்த மார்கரெட் விமலி என்பவர் தாக்கல் செய்த மனு:

கர்நாடக மாநிலம், மைசூரில், ஆசிரியர் பயிற்சி படிப்பை முடித்தேன். சென்னையில் உள்ள ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குனரகத்தில் விண்ணப்பித்து, மதிப்பீட்டு சான்றிதழ் பெற்றேன். ஹரூரில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக, இரண்டு ஆண்டுகள் பணியாற்றினேன், பின், கிருஷ்ணகிரியில் உள்ள பாத்திமா துவக்கப்பள்ளிக்கு மாற்றப்பட்டேன். 24 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன்.கடந்த 2004ல் அசல் சான்றிதழ்களை சமர்ப்பிக்கும்படி, கல்வித்துறை கோரியது; அதன்படி சமர்ப்பித்தேன். இதுவரை சான்றிதழை திருப்பித் தரவில்லை. 2012ல் பள்ளி தாளாளரிடம் இருந்து எனக்கு 'நோட்டீஸ்' வந்தது. நான் சமர்ப்பித்த மதிப்பீட்டு சான்றிதழ் பொய்யானது என்றும் சம்பளத்தை திருப்பி செலுத்தவும், அதில் கூறப்பட்டது. என்னை தற்காலிக பணி நீக்கம் செய்தும் உத்தரவிடப்பட்டது.இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன்.

தற்காலிக பணி நீக்க உத்தரவை, இரு நீதிபதிகள் அமர்வு 2012ல் ரத்து செய்தது. அவமதிப்பு வழக்கு தொடர்ந்ததை அடுத்து, என்னை மீண்டும் பணி அமர்த்தி, மாவட்ட தொடக்க கல்வி அதிகாரி உத்தரவிட்டார். இந்நிலையில், தணிக்கை அதிகாரியின் ஆட்சேபனையை சுட்டிக்காட்டி, சம்பளத்தை வசூலிப்பதற்கான உத்தரவை, கிருஷ்ணகிரியில் உள்ள வட்டார கல்வி அதிகாரி, கடந்த ஜூன் மற்றும் ஆகஸ்ட்டில் பிறப்பித்தார். உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மறுஆய்வு மனு தாக்கல் செய்து, அது நிலுவையில் இருப்பதாக கூறப்பட்டுஉள்ளது.

ஆனால், கடந்த நவம்பர் வரை, மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்படவில்லை.பள்ளியின் தாளாளரும் நோட்டீஸ் அனுப்பினார். எந்த விசாரணையும் இன்றி, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இத்தகைய உத்தரவு பிறப்பிக்க, வட்டார கல்வி அதிகாரிக்கு அதிகாரமில்லை. எனவே, வட்டார கல்வி அதிகாரி உத்தரவு மற்றும் பள்ளி தாளாளர் அனுப்பிய நோட்டீசுக்கு தடை விதிக்க வேண்டும்; அதை ரத்து செய்ய வேண்டும். தடையின்றி பணியில் தொடர, அனுமதிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன், விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் காசிநாதபாரதி ஆஜராகி, ''24 ஆண்டுகளுக்கான சம்பளத் தொகையாக 74 லட்சம் ரூபாயை செலுத்தும்படி உத்தரவிட்டுள்ளனர். ''ஏற்கனவே உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை கருத்தில் கொள்ளாமல், அதிகாரிகள் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்,'' என்றார்.இதையடுத்து, மனுவுக்கு பதில் அளிக்க, கல்வித் துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஆறு வாரங்களுக்கு, நீதிபதி தள்ளி வைத்தார். சம்பளத் தொகையை வசூலிக்கவும், நீதிபதி இடைக்காலத் தடை விதித்தார்.
Tuesday, February 10, 2026

பள்ளிதோறும் சிறப்புப் பயிற்றுநர்


சிறப்புக் கவனம் தேவைப்படும் மாணவர்களுக்கு, ஏற்ற வகையில் பொருத்தமான கற்பித்தல் முறைகள், தகவமைக்கப்பட்ட கருவிகள், மதிப்பீட்டுச் செயல்பாடுகளைப் பயன்படுத்தி கற்றல் கலைத்திட்டத்தை அனைத்து மாணவர்களும் அணுகும்படியாக மாற்றுபவர்கள் சிறப்புப் பயிற்றுநர்கள்.

இவர்கள் உள்ளடக்கிய கல்வி வகுப்பறையில் பொது ஆசிரியர்களுடன் இணைந்து செயல்படுகின்றனர். புலன் குறைபாடுடையோர், அறி வாற்றல் குறைபாடுடையோர், கற்றல் குறைபாடுடையோர், ஒன்றுக்கு மேற் பட்ட குறைபாடுகள் உடையோர் எனத் தமிழ்நாட்டில் 14 ஆயிரத்துக்கும் அதிகமான சிறப்பு மாணவர்கள் பயில் கின்றனர். இவர்களுக்கான கற்பித்தல், சிறப்புப் பயிற்றுநர்கள் இல்லாமல் முழுமையடையாது.

பள்ளிதோறும் சிறப்பு சிறார்: இந்திய மறுவாழ்வு அமைப்பினால் (Rehabil itation Council of India) அங்கீகரிக்கப்பட்ட சிறப்புக் கல்வியியல் பட்டம் (B.Ed. Special Education) பெற்றவர்கள் மட்டுமே இந்தியாவில் சிறப்புப் பயிற்றுநர்களாகப் பணியாற்ற இயலும். இவர்கள் மறுவாழ்வு நிபுணர்களுக்கான (Central Rehabilitation Registrar-CRR) பதிவேட்டில், பதிவு செய்து நடைமுறையில் பதிவு எண் கொண்டவராக இருப்பது அவசியம்.

இவர்கள் பார்வைக் குறைபாடு, கேட்டல் குறைபாடு, அறிவுத் திறன் குறைபாடு, ஆட்டிசம், கற்றல் குறைபாடு, ஒன்றுக்கும் மேற்பட்ட குறை பாடுகள் (Multiple Disabilties) என ஏதேனும் ஒரு துறையில் சிறப்புப் பயிற்சி பெற்றவர்கள் ஆவர்.

சமக்ர சிக்க்ஷா திட்டத்தின் கீழ் உள்ளடக்கிய கல்வி செயல் படுத்தப்படுகிறது. ​இதன் கீழ் சிறப்புப் பயிற்றுநர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு மண்டலத்தில் 30 பள்ளிகள் ஒதுக்கப்பட் டுள்ளன. ஒவ்வொரு பள்ளியிலும் சராசரியாக 5 முதல் 25 சிறப்புக் குழந்தைகள் உள்ளனர்.

பணிச்சுமை: சிறப்புப் பயிற்றுநர்கள் அதிகப் பணிச்சுமையால், ஒரு குறிப்பிட்ட மாணவரை மீண்டும் சந்திக்கக் குறைந்தது ஒரு மாதமாகிறது. இது உள்ளடக்கிய கல்வியின் அர்த்தத்தையே நீர்த்துப்போக வைக்கிறது.

இவர்கள் மாற்றுத்திறன் உடையோருக்கான தனித்துவமான அடையாள அட்டை பெறுவதில் இருந்து அரசின் திட்டங்களைக் கொண்டுசேர்த்தல் என அனைத்து மட்டத்திலும் பணியாற்றுகின்றனர். இதனால் கற்பித்தல் பணியைத் திறம்படச் செய்ய இயலாத சூழலே காணப்படுகிறது.

பொதுப் பள்ளிகளில் சிறப்புப் பயிற்றுநர் களுக்கான மாணவர்-ஆசிரியர் விகிதம் ஆரம்ப நிலைக்கு 10:1, உயர் ஆரம்ப நிலைக்கு 15:1 இருக்க வேண்டுமெனக் கல்வி உரிமைச் சட்டம், 2009 (RTE) வலியுறுத்துகிறது. இதன்படி தமிழ் நாட்டுக்கு 13,000 சிறப்புப் பயிற்றுநர்கள் தேவைப்படுகின்றனர்.

தமிழ்நாட்டில், இந்திய மறுவாழ்வு அமைப்பி னால் அங்கீகரிக்கப்பட்ட 16 கல்வி நிறுவனங்களில் வருடத்துக்கு 700 பேர் சிறப்புக் கல்வியியல் பட்டம் பெறுகின்றனர். மேலும் சிறப்புக் கல்வி ஆசிரியர் பயிற்சி 1980களிலிருந்து வழங்கப்பட்டுக் குறிப்பிடத்தகுந்த அளவிலான சிறப்புக்கல்விப் பயிற்றுநர்கள் உருவாக்கப் பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் உள்ள 22 அரசு சிறப்புப்பள்ளிகளைத் தவிர்த்து பொதுப் பள்ளிகளில் உள்ளடக்கிய கல்வியின்கீழ் 1,649 சிறப்பு ஆசிரியர்கள் தொகுப்பு ஊதியத்தில் பணியாற்று கின்றனர். இவர்களின் பணிப் பாதுகாப்பை உறுதிசெய்வது, போதிய அளவிலான சிறப்புப் பயிற்றுநர்களுக்கான நிரந்தரப் பணியிடங்களை உருவாக்குவதே சிறப்புக் குழந்தைகளின் கல்வி வாய்ப்பினை உறுதிசெய்யும்.
Tuesday, February 10, 2026

ஆசிரியர்களும் தகுதித் தேர்வுகளும்...தினமணி நடுப்பக்கக் கட்டுரை

உலகம் நாகரிகம் பெற்ற காலத்திலிருந்தே கல்வியும், அதைக் கற்பிக்கும் ஆசிரியர்களும் மதிக்கப்பட்டனர். ஆசிரியப் பணி அறப்பணியாக மதிக்கப்பட்டது. புராண காலங்கள் என்றாலும், அறிவியல் காலங்கள் என்றாலும் சரி, ஆசிரியர் என்னும் குருமார்கள் அனைவராலும் வணங்கப்பட்டனர். குருமார்களின் திண்ணைப் பள்ளிகளிலேயே படிப்பிக்கப்பட்டனர். பாண்டவர்களும், கௌரவர்களும் ஒரே குருவிடம் பாடம் கேட்ட பெருமைக்குரியவர்கள்.

உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே

என்று புறநானூறு (183) பாடுகிறது. கற்பிக்கும் ஆசிரியருக்கு துன்பம் வரும்போது உதவி செய்தும், அவருக்குத் தேவையறிந்து பொருள் கொடுத்தும், வெறுப்பின்றி பணிவுடன் கற்றல் வேண்டும்.

பிரிட்டிஷாரின் வருகைக்குப் பின்னரே கல்வியும், ஆசிரியப் பணியும் நடைமுறைப்படுத்தப்பட்டன. கல்வித் துறை தொடங்கப்பட்டு, ஆசிரியர்களுக்கு ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டு அரசு ஊழியர்களாக ஆக்கப்பட்டனர். ஆசிரியர் பணிபெற வேண்டுமானால் பயிற்சி பெற வேண்டும் என்று அதற்கு அரசு விதிகளும் வகுக்கப்பட்டன.

இப்போது, மத்திய அரசின் இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களும், பட்டதாரி ஆசிரியர்களும் டெட் எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழகத்தில் தகுதித் தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தி வருகிறது.

தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் (என்சிடிஇ) விதிமுறையின்படி ஆண்டுக்கு இரண்டு தடவை 'டெட்' தேர்வு நடத்தப்பட வேண்டும். ஆனால், ஆசிரியர் தேர்வு வாரியம் அதுபோல் தேர்வை நடத்துவது கிடையாது. 2022-ஆம் ஆண்டு நடத்தவேண்டிய தேர்வு கடந்த 2023-ஆம் ஆண்டு பிப்ரவரியில் நடத்தப்பட்டது.

கடந்த 2025-ஆம் ஆண்டுக்கான 'டெட்' தேர்வு கடந்த நவம்பர் 15, 16-ஆம் தேதிகளில் நடைபெற்றது. 4.24 லட்சம் பேர் இந்தத் தேர்வை எழுதினர்.

பணியில் ஈடுபடுவோம் எனத் தெரிவித்துள்ளனர். ஆசிரியர்கள் தங்கள் குறைபாடுகளைக் கோரிக்கைகளாகத் தெரிவித்து அமைதி வழியில் போராட உரிமைப் படைத்தவர்கள். ஆனால் அவர்களை அடக்க முயல்வது நியாயம் இல்லை.

ஒரு தேசத்தின் தலைவிதியானது வகுப்பறைகளில் தீர்மானிக்கப்படுகிறது என்று கோத்தாரி கல்விக் குழு கூறுகிறது. மாணவர்களை நல்ல குடிமக்களாக உருவாக்கும் ஆசிரியர்களைப் போற்றாத சமுதாயம் எப்படி முன்னேறும்? இதை அரசும், கல்வித் துறையும் எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ள வேண்டும்.


தினமணி
Tuesday, February 10, 2026

“நான் தான் அப்பா, அம்மா” - அமைச்சர் அன்பில் மகேஷ்


“நான் தான் அப்பா, அம்மா”

"மலேசியாவுக்கு கல்வி சுற்றுலா செல்லக்கூடிய மாணவர்கள் தனியாக இருக்கிறார்களே என்று பெற்றோர்கள் கவலைப்பட வேண்டாம். நான்கு நாளைக்கு அவர்களுக்கு நான் தான் அப்பா. நான் தான் அம்மா”




-அமைச்சர் அன்பில் மகேஷ்
Tuesday, February 10, 2026

அரசு மாதிரி பள்ளிகளில் அட்மிஷன் துவங்குகிறது

அரசு மாதிரி பள்ளிகளில் பிப்., இரண்டாவது வாரத்தில், 2026 - 2027ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை துவங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிற பள்ளிகளுக்கு முன்னுதாரணமாக செயல்படும் வகையில் மாதிரி பள்ளிகள், மாவட்டத்துக்கு ஒன்று வீதம், 2022ல் துவங்கப்பட்டது. நவீன உள்கட்டமைப்பு, உறைவிட வசதி, மற்றும் நீட், ஜே.இ.இ. போன்ற போட்டித் தேர்வுகளுக்கு மாணவ, மாணவியருக்கு சிறப்புப் பயிற்சி, உயர்கல்வியில் சேர ஊக்கம் உள்ளிட்டவற்றை ஒரே இடத்தில் மாதிரி பள்ளிகள் வழங்கி வருகிறது.

இத்தகைய பள்ளிகளில் முன்கூட்டியே மாணவர் சேர்க்கை துவங்குவது வழக்கம். அவ்வகையில், மாதிரி பள்ளிகளில் பிப்., இரண்டாவது வாரத்தில், 2026 - 2027ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை துவங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளி கல்வித்துறை இயக்குனரகம், முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், 'அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் மாதிரி பள்ளியில் சேர்க்க வேண்டிய மாணவர் குறித்த விபரம் சேகரிக்க வேண்டும்.

ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர் சேர்க்கையை பிப்., இரண்டாவது வாரமே துவங்க வேண்டும். முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையில் மாவட்டக் கல்வி அலுவலர், வட்டாரக் கல்வி அலுவலர், தலைமை ஆசிரியர்கள் அடங்கிய குழு அமைத்து, மாதிரி பள்ளியில் மாணவர் சேர்க்கை குறித்து ஆலோசனை கூட்டம் நடத்த வேண்டும்; அட்மிஷன் துவங்க வேண்டும்,' என்பன உள்ளிட்ட வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளது.
Tuesday, February 10, 2026

3-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு Foundational learning study (2025-2026)- மாதிரி வினாத்தாள்கள் வழங்குதல் மற்றும் பயிற்சி அளித்தல் சார்ந்து தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

3-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு Foundational learning study (2025-2026)- மாதிரி வினாத்தாள்கள் வழங்குதல் மற்றும் பயிற்சி அளித்தல் சார்ந்து தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!


Tuesday, February 10, 2026

6 கூடுதலாக புதிய செவிலியர் கல்லூரிகள் தொடங்கப்பட உள்ளன: ஒப்பந்த செவிலியர்கள் 719 பேருக்கு பணி நிரந்தர பணி நியமன ஆணை வழங்கப்பட உள்ளன - அமைச்சர் மா.சுப்பிரமணியம் தகவல்

தமிழ்நாட்டில் திருநெல்வேவி, திருச்சி, தர்மபுரி, வேலூர், ஈரோடு, திருவண்ணாமலை ஆகிய 6 மாவட்டங்களில் கூடுதலாக புதிதாக செவிலியர் கல்லூரி தொடங்கப்பட உள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் அறிவிப்பு

தமிழ்நாட்டில் திருநெல்வேவி, திருச்சி, தர்மபுரி, வேலூர், ஈரோடு, திருவண்ணாமலை ஆகிய 6 மாவட்டங்களில் கூடுதலாக புதிதாக செவிலியர் கல்லூரி தொடங்கப்பட உள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் அறிவிப்பு

தமிழகத்தில் கடந்த டிசம்பர் மாதம் செவிலியர்கள் பணி நிரந்தரம் கோரி மிகப்பெரும் போராட்டத்தை முன்னெடுத்தனர். இந்த சூழலில் போராடியவர்களின் கோரிக்கையை ஏற்று, 719 பேருக்கு வருகிற 13 -ஆம் தேதி முதல்வர் தலைமையில் பணி நியமன ஆணை வழங்கப்பட உள்ளது.

சுகாதாரத்துறையில் பணியாற்றி வந்த செவிலியர்கள், கடந்த டிசம்பர் மாதத்தில் செவிலியர்கள் போராட்டத்தில் குதித்தனர். 2014 ஆம் ஆண்டுகளில் மருத்துவ பணியாளர் தேர்வாணையம் மூலம் செவிலியர்கள் பணி அமர்த்தப்பட்டனர். 2 ஆண்டுகளுக்கு பிறகு அவர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என சொல்லப்பட்டது.
Tuesday, February 10, 2026

ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி சான்றிதழ் உண்மைத் தன்மை பெற TRB தெளிவுரை கடிதம் - 4.2.2026


முதலமைச்சரின் தனிப்பிரிவு, தலைமைச் செயலகம், சென்னை-600 006.

ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி சான்றிதழ் உண்மைத் தன்மை பெற தெளிவுரை வேண்டுதல் தொடர்பாக. :

அரசுப் பள்ளியில் பணிபுரிபவர் கல்வி எனில் தலைமையாசிரியர் மூலம் தேர்வுவெழுதிய மாவட்ட முதன்மைக் அலுவலருக்கு விண்ணப்பிக்கவும். அரசு நிதி உதவி பெறும். பள்ளியில் பணிபுரிபவர் எனில் நியமனம் பெற்ற மாவட்டக் கல்வி அலுவலர் மூலம் தேர்வுவெழுதிய மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு விண்ணப்பிக்கவும் தெரிவிக்கப்படுகிறது.



TET Genuine Clarification From TRB - Download here
Tuesday, February 10, 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 10.02.2026

திருக்குறள்: 

குறள் 502: 
குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும் 
நாணுடையான் கட்டே தெளிவு.                         
விளக்க உரை: 

நல்லகுடியில் பிறந்து குற்றங்களிலிருந்து நீங்கிப் பழியாச் செயல்களைச் செய்ய அஞ்சுகின்ற நாணம் உடையவனையே நம்பித் தெளிய வேண்டும்.

பழமொழி :

Knowledge is the real wealth.         

அறிவே உண்மையான செல்வம்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. உலகில் உயர்வானது அனைத்து உயிர்களிடமும் நாம் காட்டும் அன்பும் பரிவும் தான்.

2. எனவே அனைத்து உயிர்களிடமும் அன்பு காட்டுவோம்.

பொன்மொழி : 

செல்வத்தை உண்டாக்குவது உழைப்பு. உலகத்தை இயக்குவதும் உழைப்பே - வெப்ஸ்டர் 

பொது அறிவு : 

01.இந்திய தத்துவம்"" (Indian Philosophy) என்ற புகழ்பெற்ற நூலை எழுதியவர் யார்?

டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன் 

 Dr. S. Radhakrishnan 

02. உலைகள் மற்றும் உருகிய உலோகங்களில் உள்ள  அதிக வெப்பநிலையை அளவிடப்  பயன்படுவது எது?

       பைரோமீட்டர் 

Pyrometer 

English words :

gaze-look with administration

peek-look secretly

தமிழ் இலக்கணம்: 

 தோப்பா‌ தோட்டமா? 
எந்த எந்த மரம் செடி கொடிகளுக்குப் பின்னால் தோப்பு என்ற சொல் வரும் அல்லது தோட்டம் என்ற சொல் வரும். இன்று காண்போம்.
மிக நீண்ட நாட்கள் இருந்து பயன் தரும் மரம் செடிகள் கூட்டம் தோப்பு என்று அழைக்கப்படும் குறுகிய கால மரம் செடிகள் கூட்டம் தோட்டம் என்று அழைக்கப் படும்
எ. கா : தென்னந் தோப்பு –நீண்ட கால பயன் தரும் மரம்
வாழைத் தோட்டம் குறுகிய கால பயன் தரும் மரம்.
மாந்தோப்பு 
பூந்தோட்டம்
சவுக்குத் தோப்பு
மல்லிகைத் தோட்டம்

அறிவியல் களஞ்சியம் :

நாசாவின் ஆர்டெமிஸ் II (Artemis II) நிலவு ராக்கெட் ஏவுதளத்திற்கு வந்துள்ளது. செவ்வாய் கிரகத்தில், பெர்செவரன்ஸ் ரோவர் முதன்முதலில் AI மூலம் திட்டமிடப்பட்ட பயணத்தை (AI-Planned Drive) மேற்கொண்டுள்ளது.

நீதிக்கதை

வாழ்க்கைக்கு வழிகாட்டிய பறவை

ஒரு கிராமத்தில் ராமு என்று ஒருவன் இருந்தான். அவனுக்குப் போதுமான அளவு செல்வம் இருந்தது!  அவன் மிகவும் சோம்பேறி. கிராமத்தில் உள்ளவர்கள் வேலைக்குச் செல்லும்போது இவன் மட்டும் உறங்கிக்கொண்டிருப்பான். 

ஒருநாள் மாலை அவன்   ஒரு சிறிய அழகான பறவையைப் பார்த்து தன் வீட்டிற்கு எடுத்துச் சென்றான். அதனுடன் விளையாடிப் பொழுதைக் கழிக்கலாம் என்று நினைத்து பறவைக்குச் சிறிது உணவு அளித்தான். அது உணவு உண்ணும் அழகைக் கண்டு ரசித்தான். சற்று நேரத்தில் இருட்டிவிட்டது! வழக்கம் போல் தூங்கி விட்டான். 

பொழுது விடிந்தது. கண்விழித்துப் பார்த்த அவன் அதிர்ந்து போனான்! அவன் உணவளித்த பறவை சுமார் மூன்றடி உயரம் வளர்ந்திருந்தது!

நான் சிறிய பறவையைத்தானே எடுத்து வந்தேன்! நீ எடுத்து வந்த பறவைதான் நான்! வளர்ந்துவிட்டேன். எனக்குப் பசிக்கிறது, ஏதாவது சாப்பிடக்கொடு என்றது பறவை. அதற்கு சிறிது தானியங்களைப் போட்டான். பறவை அதைத் தின்றுவிட்டு மீண்டும் பசிக்கிறது என்றது. 

ராமு தனக்காக இருந்த உணவையும் பறவைக்கு அளித்து விட்டான்.  வீட்டைவிட்டு வெளியே சென்றான். பகல் முழுதும் வெளியில் இருந்து விட்டு இரவு வீடு வந்து பார்த்தான். அந்தப் பறவை மிகப் பெரியதாக வளர்ந்து வீடு முழுவதையும் அடைத்துக் கொண்டிருந்தது! அவனால் வீட்டிற்கு உள்ளே செல்ல முடியவில்லை! 

ராமுவுக்கு பயமும் அதிர்ச்சியும் ஏற்பட்டது. வெளியே, குளிரில் படுத்து உறங்கினான். விடிந்தது! ராமு பசியாக இருந்தான். அப்போது அவ்வழியே மூட்டையைச் சுமந்து கொண்டு வந்த ஒரு வண்டியிலிருந்து இறங்கிய பெரியவர் ராமுவைப் பார்த்து, தம்பீ, மூட்டையை சற்று இறக்கித்தா. நான் உனக்குப் பணம் தருகிறேன் என்றார். 

எனக்கு உணவு கிடைக்குமா? வாங்கித் தருகிறேன் என்றார் பெரியவர். பசியோடு இருந்தவனுக்கு அவர் வாங்கித்தந்த உணவு அமிர்தமாக இருந்தது. சாப்பிட்டபின் வீட்டுக்குச் சென்றான். 

 பறவை சற்று சிறிதாக மாறியிருந்தது! எப்படி இது என்றான் ராமு. உன் சோம்பல் சற்று குறைந்துவிட்டது அல்லவா? அதனால்தான் என்றது. 

மறுநாள் கூலி வேலைக்குச் சென்றான். கிடைத்த கூலியில் வயிறார உண்டான். உணவை பறவைக்கும் வாங்கிக் கொண்டான். அவனுக்கு சந்தோஷமாக இருந்தது! இனி உழைத்து உண்ண வேண்டும் என்று தீர்மானித்து வீட்டுக்குச் சென்றான். 

பறவை முதலில் இருந்தது போலவே மிகவும் சிறியதாக இருந்ததைக் கண்டான்! இது எப்படி? என்று பறவையைக் கேட்டான். உன் சோம்பேறித்தனத்தை மாற்றவே நான் அப்படி செய்தேன். நான் வந்த வேலை முடிந்தது என்றது பறவை. 

எனக்கு மிகவும் மகிழ்ச்சி! இந்த உணவைச் சாப்பிடு என்றான் ராமு. என் மீது நீ கொண்ட அன்பிற்கு நன்றி! எனக்கு உணவு வேண்டாம். உன் சோம்பல் நீங்கியதே அதுதான் எனக்கு நிம்மதி! என் உணவை நான் தேடிக்கொள்ளுவேன் என்று கூறிவிட்டு வானை நோக்கிப் பறந்தது. 

அது வானில் ஓரு புள்ளியாய் மறையும் வரை பார்த்துக்கொண்டிருந்த ராமுவிற்கு அழுகை வந்தது. இது உலகிற்கு ஞானத்தை ஊட்ட நினைக்கும் பறவை போலிருக்கிறது என்று கண்களைத் துடைத்துக்கொண்டார். 

நீதி :

உழைத்து சாப்பிட்டால் வாழ்க்கையில் மகிழ்ச்சி நிலைக்கும்.

இன்றைய செய்திகள்

10.02.2026

⭐சந்திரயான்-4 லேண்டர் தரை இறங்குவதற்கான இடம் கண்டறியப்பட்டுள்ளது- இஸ்ரோ தகவல்

⭐டிஎன்பிஎஸ்சி சார்பில், ஒத்திவைக்கப்பட்டிருந்த குரூப் 2,2ஏ தேர்வுகள் மார்ச் 15ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

⭐மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழக ரயில் திட்டங்களுக்கு ₹7,611 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀டி20 உலகக் கோப்பை: ஓமனை எளிதாக வீழ்த்தியது ஜிம்பாப்வே.
முதலில் பேட்டிங் செய்த ஓமன் 103 ரன்னில் சுருண்டது.
ஜிம்பாப்வே 13.3 ஓவரில் சேஸிங் செய்தது.

Today's Headlines

⭐ISRO has Informed that the Landing Site for   Chandrayaan-4 Lander   has been found.

Covai women ICT_போதிமரம்

Monday, February 9, 2026

Monday, February 09, 2026

+2 அக மதிப்பீட்டிற்கான மதிப்பெண்கள் பட்டியல்கள் பதிவிறக்கம் செய்வது தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள்!

மேல்நிலை இரண்டாமாண்டு அக மதிப்பீட்டிற்கான மதிப்பெண்கள் பட்டியல்கள் பதிவிறக்கம் செய்வது தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள்!

DGE Proc +2 Internal Mark Uploading Instructions - Download here
Monday, February 09, 2026

புதிய தேர்வு தேதி TNPSC அறிவிப்பு.

புதிய தேர்வு தேதி



தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரத்து செய்யப்பட்ட குரூப் 2 மற்றும் குரூப் 2A முதன்மை தேர்வு மார்ச் 15ஆம் தேதி நடைபெறும்.

- TNPSC அறிவிப்பு.தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரத்து செய்யப்பட்ட குரூப் 2 மற்றும் குரூப் 2A முதன்மை தேர்வு மார்ச் 15ஆம் தேதி நடைபெறும் - TNPSC அறிவிப்பு.
Monday, February 09, 2026

Documents Required For NEET - UG 2026 Form Filling


Documents required for NEET-UG 2026 Form Filling

1) Passport Size Photo

2) Postcard Size Photo

3) Student's Signature in running handwritting

4) Fingerprints of all fingers of both hands (including thumb)

5) Class 10th Passing Certificate (Sanad for State Board & Regular Marksheet for CBSE)

6) Class 10th Marksheet (Pink Colored Marksheet for State Board & Regular Marksheet for CBSE)

7) Class 12th Marksheet (only for repeaters/droppers)*

8) Any Photo ID proof (Aadhar Card/PAN Card/ 12th Board Exam Admit Card/Bank Passbook)

9) Aadhar Card as Address Proof

10) Caste/EWS Certificate in Central Format or its reciept.


Exam Fee:

• OPEN: ₹1700

• OBC/EWS: ₹1600

👉🏻 Online Application Start: 08 February 2026

👉🏻 Last Date to Apply: 08 March 2026 (till 9:00 PM)

👉🏻 Last Date of Fee Payment: 08 March 2026 (till 11:50 PM)

👉🏻 Correction Window: 10 March to 12 March 2026
Monday, February 09, 2026

1/6/2006 பணி நியமனம் பெற்ற ஆசிரியர்கள் கவனத்திற்கு

நண்பர்களே வணக்கம் 🙏

1/6/2026 சிறப்பு நிலை பெற உள்ள 2003, 2004 & 2005 TRB நியமன (1/6/2006 பணி வரன் முறை) ஆசிரியர்களின் கனிவான கவனத்திற்கு..

இன்னும் 3½ மாதத்தில் சிறப்பு நிலை பெற உள்ளீர்கள்...

அதற்கு கீழ் கண்ட ஆவணங்கள் தயார் நிலையில் வைத்துக் கொள்ளுங்கள்...

1) பணி நியமன ஆணை

2) தொகுப்பூதியம் நீக்கம் செய்து பொதுவான ஆணை

3) 1.6.2006 முன் தேதி இட்டு பணி வரன் முறை ஆணை ( தனிப்பட்ட ஆணை அப்போது வழங்கினார்கள்)

4) தகுதி காண் பருவம் நிறைவு ஆணை

5) 1/6/2016 தேர்வு நிலை பெற்ற ஆணை

இவை அனைத்தும் பணிப் பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்

( பணிப் பதிவேட்டில் பதிவு உள்ள பக்க நகல் தேவைப்படும்)

இது தவிர

6) SSLC

7) HSC

8) UG

9) PG

10) B.Ed / D.T.Ed

கல்வி சான்றிதழ் நகல் மற்றும் உண்மைதன்மை பெறப்பட்ட விவரம் அவற்றின் SR entry details ...

1/6/2026 க்கு இப்போதே பதிவு செய்வதன் நோக்கம்...

உண்மைத் தன்மை பெறப்படாமல் இருப்பின் இப்போதே தலைமை ஆசிரியர் வழியாக விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம்..

அதே போல 10/12/UG/PG/B.Ed/D.T.Ed other state இல் படித்து இருப்பின் கட்டாயம் மதிப்பீடு (Evaluation) செய்யப்பட வேண்டும்...

உண்மைத் தன்மை/Evaluation ஏற்கனவே வாங்கி இருந்து பணிப் பதிவேட்டில் பதிவு எனில் ...

நன்று / போதும்

தற்போது மீண்டும் புதிதாக வாங்க தேவையில்லை...

அதே போல 1/6/2006 இல் இருந்து 31/12/2025 வரை பணிக் காலம் சரிபார்ப்பு விவரம் விடுதல் இன்றி பணிப் பதிவேட்டில் பதிவு செய்துள்ளதை உறுதி செய்து கொள்ளுங்கள்...

செய்முறை தேர்வு

பொதுத் தேர்வு

சட்ட மன்ற தேர்தல்

மதிப்பீட்டு பணி

கோடை விடுமுறை என வரும் நாட்களில் Busy ஆக 😊 இருப்போம்...

ஏதேனும் document/entry இல்லாமல் இருந்தால் அதை பெற போதுமான கால அவகாசம் உள்ளது 👍

தங்களின் முன் திட்டமிடல்

தகவலுக்காக
க.செல்வக்குமார்
தலைமை ஆசிரியர்
மதுரை 8/2/26
Monday, February 09, 2026

ஜாக்டோ ஜியோ பாராட்டு விழா - முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உரை


"பழைய ஓய்வூதியத் திட்டம் பறிபோக அதிமுக அரசுதான் காரணம். வியர்வைத் துளி சிந்தி உழைத்தவர்களுக்கு ரத்தக் கண்ணீர் வர வைத்ததுதான் அதிமுக ஆட்சி." என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஜாக்டோ ஜியோ சார்பில் இன்று சென்னையில் நடந்த பாராட்டு விழாவில் பேசியுள்ளார்.

திட்டமிட்டு நிதி நெருக்கடியை மத்திய பாஜக அரசு உருவாக்கி வருகிறது என ஜாக்டோ ஜியோ சார்பில் TAPS ஓய்வூதிய முறையை அமல்படுத்திய முதல்வருக்கு சென்னையில் நடைபெற்ற பாராட்டு விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் ஜாக்டோ ஜியோ நன்றி அறிவிப்பு மாநாடு 08.02.2026 நடைபெற்றது. உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை அறிவித்த தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி அறிவிப்பு விழாவாக இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை அறிவித்த முதலமைச்சரின் மு க ஸ்டாலினுக்கு ஜாக்டோ ஜியோ அமைப்பு சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசுகையில், "அரசு ஊழியர்களுக்காக கலைஞர் செய்த சாதனைகள், சீர்திருத்தங்களை சொல்ல ஒரு மாநாடு போதாது. அரசியல்வாதிகள் கொள்கைப் பிடிப்போடு செய்யும் மக்கள் நலத்திட்டங்களை கொண்டு சேர்ப்போர் அரசு ஊழியர்கள் தான். ஆசிரியர்களால் தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை சிறந்து விளங்குகிறது.


22 ஆண்டுகால கோரிக்கைக்கு நிறைவு

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கடந்த 22 ஆண்டுகளாக முன்வைத்து வந்த உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் தொடர்பான கோரிக்கை தற்போது நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து, முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

ஆசிரியர்களின் பணியால் கல்வியில் இரண்டாவது மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. ஆசிரியர்கள் செய்வது பணி அல்ல, தொண்டு. நன்றி சொல்லி நமக்கான உறவை தூரமாக்கி விடாதீர்கள். அரசு ஊழியர்களின் கண்ணீர் துளிகளை துடைக்கவே கோரிக்கைகளை நிறைவேற்றுகிறோம். நீங்கள் பாடுபட்டு உருவாக்கியவர்கள் தான் தற்போது உலகம் முழுவதும் பணியாற்றி வருகிறார்கள். TAPS திட்டத்தின் கீழ் அரசு ஊழியர்களுக்கான சிறப்பு கருணை ஓய்வூதியம், 'உழைப்புக்கான உரிமைத் தொகை' என்ற பெயரில் வழங்கப்படும்" என்று கூறினார்.
Monday, February 09, 2026

ஆசிரியர்கள், ஊழியர்கள் அரசின் இரு கண்கள் - முதலமைச்சர்


ஆசிரியர்கள், ஊழியர்கள் அரசின் இரு கண்களாக உள்ளனர் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை நந்தனத்தில் இன்று (பிப்., 08) நடைபெற்ற ஜாக்டோ-ஜியோ பாராட்டு விழாவில் பேசிய முதலமைச்சர், 'ஆசிரியர்கள் செய்வது பணி அல்ல தொண்டு. அமைச்சரவையும், அரசு ஊழியர்களும் நாணயத்தின் இரு பக்கங்கள். மத்திய அரசின் நிதிப் பகிர்வு குறைந்த போதிலும் நமது அரசு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஆசிரியர்களின் உழைப்பால் தமிழ்நாடு கல்வியில் சிறந்து விளங்குகிறது' என தெரிவித்தார்.
Monday, February 09, 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 09.02.2026

திருக்குறள்: 

குறள் 501: 

அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின் 
திறந்தெரிந்து தேறப் படும். 

விளக்க உரை: 

அறம், பொருள், இன்பம், உயிர்காக அஞ்சும் அச்சம் ஆகிய நான்கு வகையாலும் ஆராயப்பட்ட பிறகே ஒருவன் (ஒரு தொழிலுக்கு உரியவனாகத்) தெளியப்படுவான்.

பழமொழி :

Hard paths create strong people. 

கடினமான பாதைகள் வலிமையான மனிதர்களை உருவாக்கும்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. உலகில் உயர்வானது அனைத்து உயிர்களிடமும் நாம் காட்டும் அன்பும் பரிவும் தான்.

2. எனவே அனைத்து உயிர்களிடமும் அன்பு காட்டுவோம்.

பொன்மொழி : 

வலிமையே மகிழ்ச்சிகரமான, நிரந்தரமான, வளமான, அமரத்துவமான வாழ்க்கை ஆகும்
- சுவாமி விவேகானந்தர்

பொது அறிவு : 

01.உலகின் மிகப்பெரிய பள்ளி எது?

 சிட்டி மாண்டிசோரி பள்ளி  லக்னோ,இந்தியா
City Montessori School -Locknow, India


02.பூமியின் வடக்கே உள்ள கடைசி நகரம் எது?

லாங்கியர்பைன்-நார்வே 
Longyearbyen- Norway

English words :

clance-look quickly 

stare -looked fixedly

அறிவியல் களஞ்சியம் :

மலிவான AI சாட்பாட்கள் குறைந்த வசதி கொண்ட இடங்களில் மருத்துவ நோயறிதலை எளிதாக்குகின்றன. தோல் மீளுருவாக்கத்திற்கு உதவும் ‘rete ridges’ என்ற தண்டு செல் கட்டமைப்புகள் கண்டறியப்பட்டுள்ளன.

நீதிக்கதை

 ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு

கோபுரத்தில் சில நீல நிறப்புறாக்களும் சில வெள்ளை நிறப் புறாக்களும் அடைக்கலமாகி இருந்து வந்தன. கோபுரத்தில் சுத்தம்  வேலைகள் தொடங்க ஆரம்பித்ததால் இது நாள் வரை எதிரும் புதிருமாக இருந்து வந்த இருவகைப் புறாக் கூட்டமும் இப்போது ஒன்று கூடி வேறொரு இடம் தேடி புறப்பட்டன.

செல்லும் வழியில் ஓரிடத்தில் வெயிலில் உலர்த்துவதற்காக பரப்பப்பட்ட தானியங்களை கண்டதும் அனைத்தும் ஒன்று கூடி தானியங்களை தின்று தீர்த்து விட்டு மரக்கிளை ஒன்றில் அமர்ந்தன. 

தானியத்தை உலர்த்தும் பொருட்டு பரப்பி விட்டு சென்ற வேடன் தானிய மணிகள் ஒன்று கூட இல்லாதது கண்டு அதிர்ச்சியடைந்தான். தானியங்கள் காயப்போட்ட இடத்தில் புறாக்களின் எச்சம் கிடப்பதை பார்த்து வேடன் என்ன நடந்தது என்பதை ஊகித்தான்.

நாளைக்கு இந்த புறாக்களை எப்படியும் வலை விரித்து பிடித்து விட வேண்டும் என்று முடிவு செய்து அதன்படி மறுநாள் தயார் செய்து வலை விரித்தான். அடுத்த நாள் அங்கே வந்த புறாக்கள் தானியத்தைப் பார்த்ததும், அதை உண்ணும் ஆசையில் வேகமாக தரையிறங்கி உண்ணத் தொடங்கின. சில மணித்துளிகளில் அதன் கால்கள் வலைகளில் சிக்கிக் கொண்டன.

சற்று தொலைவில் மறைந்திருந்த வேடன் நிலைமையை நன்கு புரிந்து கொண்டு புறாக்களை பிடிக்க ஓடி வந்தான். வேடன் வருவதைப் பார்த்த புறாக்கள் ஆபத்தை உணர்ந்து கொண்டு, உயிர் மீதுள்ள ஆசையினால் புறாக்கள் எல்லாம் ஒன்றாக இறக்கையை விரித்து பறக்க, வலையோடு புறாக்கள் பறக்க ஆரம்பித்தன.

உடனே வேடன், அய்யய்யோ... புறாக்கள் போனாலும் பரவாயில்லை. நான் கஷ்டப்பட்டு தயாரித்த வலையும் அதோடு போகிறதே... என்று புலம்பிக் கொண்டே, பறந்து செல்லும் புறாக்களின் பின்னே ஓடினான். பறந்து செல்லும் போதே, அதில் இருந்த வெள்ளைப் புறாக்கள் கர்வத்தோடு, எங்களது வலிமையால்தான் நீங்களும் காப்பாற்றப்பட்டு இருக்கிறீர்கள். நாங்கள் சிறகை மிக வேகமாக அடித்து பறக்கவில்லை என்றால்....அவ்வளவுதான் என்று கூறின.

உடனே நீல நிறப் புறாக்களும் தன் பங்கிற்கு, நாங்கள்தான் வலிமையோடு பறந்தோம். உங்களுக்கு அழகு இருக்கலாம், ஆனால் ஆற்றல் கிடையாது என்று கூறிக் கொண்டு ஒன்றுக்கொன்று சண்டையிட்டுக் கொண்டே பறந்ததினால், அதன் பறக்கும் வேகம் குறைய ஆரம்பித்து, ஒரு மரக்கிளையில் வலை சிக்கிக் கொண்டது.

இதனைப் பார்த்த வேடனுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்ற பழமொழிக் கேற்ப இப்புறாக்கள் தப்பி விடுமோ என்று பயந்தேன். நல்லவேளையாக ஒற்றுமை நீங்கினால் அனை வருக்கும் தாழ்வு என்ற நெறிப்படி பறந்த புறாக்களே நன்றி என்று புறாக்களைப் பார்த்து கூறிக் கொண்டே அவைகளை தனது கூடைக்குள் போடத் தொடங்கினான்.

நீதி:ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு.

இன்றைய செய்திகள்

09.02.2026

⭐ இளநிலை மருத்துவ படிப்பில் சேருவதற்காக நீட் நுழைவுத்தேர்வுக்கு இன்று முதல் மார்ச் 8-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

⭐சென்னையில் கடும் பனிமூட்டம் விமான சேவைகள் பாதிப்பு

⭐ சவுதி அரேபிய அரசு இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளுக்கு வழங்கி வந்த கச்சா எண்ணெயை விலையை குறைக்க (ரூ.25) முடிவு செய்து உள்ளது. 

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀டி20 உலகக்கோப்பை அயர்லாந்தை 20 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது ஸ்ரீலங்கா.

🏀 ஆசிய துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் இந்தியா தங்கம் வென்றது.

Today's Headlines

⭐ Applications for the NEET entrance exam for admission to undergraduate medical courses can be submitted till March 8 itself.

⭐ Heavy fog in Chennai affects flight services

⭐ The Saudi Arabian government has decided to reduce the price of crude oil supplied to Asian countries, including India (by Rs.25). 

 SPORTS NEWS 

🏀Sri Lanka defeated Ireland by 20 runs in the T20 World Cup.

🏀India won gold at the Asian Shooting Championships.
Covai women ICT_போதிமரம்

Sunday, February 8, 2026

Sunday, February 08, 2026

50 லட்சம் பயனா்களைக் கடந்த ‘FASTag வருடாந்திர பாஸ்’ திட்டம்

வருடாந்திர ஃபாஸ்டேக் பாஸ் திட்டம், 6 மாதங்களுக்குள் 50 லட்சம் பயனர்களை கடந்தது

50 லட்சம் பயனா்களைக் கடந்த ‘ஃபாஸ்டேக் FASTag வருடாந்திர பாஸ்’ திட்டம்

தேசிய நெடுஞ்சாலைகளில் தொடா்ச்சியாக பயணம் செய்யும் வாகன ஓட்டிகளுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட ‘ஃபாஸ்டேக் வருடாந்திர பாஸ்’ திட்டத்தைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 50 லட்சத்தைக் கடந்துள்ளது.

மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகத்தால் கடந்த ஆண்டு சுதந்திர தினத்தில் தொடங்கப்பட்ட இத்திட்டத்தில் வெறும் 6 மாதங்களில் 50 லட்சம் போ் இணைந்துள்ளனா். இந்தக் குறுகிய காலகட்டத்திலேயே சுமாா் 26.55 கோடி முறை சுங்கச்சாவடி பரிவா்த்தனைகள் இத்திட்டத்தின் மூலம் நடந்துள்ளன.

இத்திட்டத்தின் சிறப்பம்சமான, ஒருமுறை கட்டணமாக ரூ.3,000 மட்டும் செலுத்திவிட்டு, ஆண்டு முழுவதும் அல்லது மொத்தம் 200 முறை சுங்கச்சாவடிகளை எவ்வித கூடுதல் கட்டணமுமின்றி கடக்கலாம்.

‘ராஜ்மாா்க்கயாத்ரா’ செயலி அல்லது இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் (என்எச்ஏஐ) வலைதளம் மூலம் இத்திட்டத்தில் இணையலாம். நாடு முழுவதும் உள்ள சுமாா் 1,150 சுங்கச்சாவடிகளில் இந்த வசதி செல்லுபடியாகும்.

நெடுஞ்சாலைகளில் அவ்வப்போது பயணம் செய்யும் வணிக ரீதியல்லாத சொந்த வாகன உரிமையாளா்களுக்கு இது பெரும் பண சேமிப்பை வழங்குகிறது.

தில்லி-என்சிஆா் பகுதியில் உள்ள பிஜ்வாசன் சுங்கச்சாவடியில் 57 சதவீத வாகனங்கள் இந்தப் பாஸ் மூலமே பயணிப்பதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. பழைய ஃபாஸ்டேக் கணக்குடன் இதை இணைக்க முடியும் என்பதால், பொதுமக்களிடையே இதற்கு அதிக வரவேற்பு உள்ளது.

2-ஆம் இடத்தில் Tamilnadu

இந்த வருடாந்திர பாஸ் பயன்பாட்டில் மாநில வாரியான புள்ளிவிவரங்களின்படி, சண்டீகா் 14 சதவீதப் பங்களிப்புடன் முதலிடத்தில் உள்ளது.

இதைத் தொடா்ந்து, தமிழ்நாடு 12.3 சதவீதத்துடன் இரண்டாம் இடத்திலும், தில்லி 11.5 சதவீதத்துடன் மூன்றாம் இடத்திலும் உள்ளன.
Sunday, February 08, 2026

Income Tax - Marginal Relief மற்றும் CA பற்றிய விழிப்புணர்வு பதிவு

2025-26 நிதியாண்டு வருமான வரி கணக்கிடும்போது Marginal Relief மற்றும் Conveyance Allowance பற்றி விழிப்புடன் இருங்கள்.

இங்கே சொல்லப்படும் விளக்கங்கள் New Regimeக்கு மட்டுமே பொருந்தும்.

Marginal Relief பற்றிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் இந்த நிதியாண்டில் எனக்கு தெரிந்த ஒருவர் Rs.58000 வருமான வரி கணக்கிட வேண்டிய நிலையில் Rs.71,000 என கணக்கிட்டிருந்தார்.

Conveyance Allowance பற்றிய விழிப்புணர்வு இல்லாததால் மற்றொருவர் சென்ற நிதியாண்டில் Rs.75,000 வருமான வரி கட்ட வேண்டிய நிலையில் ரூ.80,000 வருமானவரி கட்டி இருக்கிறார்.

*Salary Income*

12 மாத சம்பளம், DA Arrears, Bonus, EL Surrender மற்றும் இதர நிலுவைத்தொகை ஆகியவைகளின் கூட்டுத்தொகை என்பது Total Salary Income.

*Standard Deduction*

இதில் Standard Deduction 75000 கழிக்க வேண்டும். (Permanant Disabled ஆசிரியர்களாக இருந்தால் அவர்கள் சம்பளத்தில் மாதா மாதம் பெறும்Conveyance Allowance ரூ.2500 மொத்தம் ரூ.30,000 கழிக்கலாம்).

*Taxable Income*

இந்த இரண்டையும் கழித்துவிட்டு வரும் தொகை Taxable Income ஆகும். இந்த தொகைக்கு தான் வருமான வரி கணக்கிடப்படுகிறது.

*Income Tax Slab*

Upto 4,00,000 - Nil Tax

4,00,001 to 8,00,000 – 5% tax (ie) Rs.20,000.

8,00,001 to 12,00,000 – 10% tax (ie) Rs.40,000.

12,00,001 to 16,00,000 – 15% tax (ie) Rs.60,000.

16,00,001 to 20,00,000 – 20% tax (ie) Rs.80,000.

20,00,001 to 24,00,000 – 25% tax (ie) Rs.1,00,000

Exeeding 24,00,000 – 30% tax


*Tax Rebate U/s 87A*

Taxable Income 12,00,000 இருப்பவர்கள் Income Tax Slab இன் படி வருமான வரி ரூ.60,000 வருமான வரி கட்ட வேண்டும். ஆனால் Taxable Income 12,00,000 இருப்பவர்களுக்கு வருமான வரிச் சட்டம் U/s 87A வின் படி முழு வருமானவரி தொகையும் தள்ளுபடி செய்யப்படும். எனவே தான் Taxable Income 12,00,000 இருப்பவர்கள் வருமான வரி கட்ட தேவை இல்லை.

*Marginal Relief*

Taxable Income 12,00,001 முதல் 12,75,000 வரை இருப்பவர்களுக்கு வருமான வரிச் சட்டம் Marginal Relief என்ற சலுகை அளிக்கிறது.

*Example 1*

உதாரணமாக Taxable Income 12,00,200 இருந்தால் Tax Rebate U/s 87A இன் படி வரி தள்ளுபடி கிடையாது.

Income Tax Slab இன் படி இவர்களுக்கு Rs.60,030 வருமான வரியும் அதற்குரிய 4% CESS ம் சேர்த்து கட்ட வேண்டி வரும் வரும். ஆனால் இவருக்கு Marginal Relief சலுகை இவருக்கு கிடைக்கிறது. Marginal Relief Rs.59,830 கழித்துவிட்டு இவர் வருமான வரி Rs.200ம் அதற்குரிய 4% CESS ம் சேர்த்து வருமான வரி செலுத்தினால் போதும்.

இவர் Marginal Relief பற்றி அறியவில்லை என்றால் Rs.60,030 வருமான வரியும் அதற்குரிய 4% CESS ம் சேர்த்து கட்டுவார். இது, மிகப்பெரிய இழப்பாக அமையும்.

*Example 2*

உதாரணமாக Taxable Income 12,50,00 இருந்தால் Tax Rebate U/s 87A இன் படி வரி தள்ளுபடி கிடையாது.

Income Tax Slab இன் படி இவர்களுக்கு Rs.67,500 வருமான வரியும் அதற்குரிய 4% CESS ம் சேர்த்து கட்ட வேண்டி வரும் வரும். ஆனால் Marginal Relief சலுகை இவர்களுக்கு கிடைக்கிறது. இவர் Marginal Relief Rs.17,500 கழித்துவிட்டு வருமான வரி Rs.50,000ம் அதற்குரிய 4% CESS ம் சேர்த்து வருமான வரி செலுத்தினால் போதும்.

இவர் Marginal Relief பற்றி அறியவில்லை என்றால் Rs.67,500 வருமான வரியும் அதற்குரிய 4% CESS ம் சேர்த்து கட்டுவார். இது, இழப்பாக அமையும்.

*Conveyance Allowance*

Disabled Persons தம் சம்பளத்தில் பெறும் Conveyance Allowance தொகை முழுதையும் Standard Deduction இல் கழித்துகொள்ளலாம்.

*Example 1*

மாதா மாதம் ரூ.2500 Conveyance Allowance பெறும் ஒருவர் Salary Income ரூ.13,00,000 பெற்றிருந்தால் Standard Deduction இல் ரூ.75000 மற்றும் ரூ.30000 என மொத்தம் ரூ.1,05,000 கழித்துக்கொள்ளலாம். எனவே, அவருடைய Taxable Income Rs.11,95,000. வருமான வரிச் சட்டம் U/s 87A வின் படி இவருக்கு Nil Tax.

இவர் Conveyance Allowance பற்றி அறியவில்லை என்றால் Standard Deduction ரூ.75000 மட்டும் கழித்து Taxable Income Rs.12,25,000 என தவறாக கணக்கீடு செய்து Marginal Relief இன் படி Rs.25,000 வருமான வரியும் அதற்குரிய 4% CESS ம் சேர்த்து கட்டுவார். இது, இழப்பாக அமையும்.

*Example 2*

மாதா மாதம் ரூ.2500 Conveyance Allowance பெறும் ஒருவர் Salary Income ரூ.13,40,000 பெற்றிருந்தால் Standard Deduction இல் ரூ.75000 மற்றும் ரூ.30000 என மொத்தம் ரூ.1,05,000 கழித்துக்கொள்ளலாம். எனவே, அவருடைய Taxable Income Rs.12,35,000. Marginal Relief ன் படி இவருக்கு Tax 35,000 + 4% CESS.

இவர் Conveyance Allowance பற்றி அறியவில்லை என்றால் Standard Deduction ரூ.75000 மட்டும் கழித்து Taxable Income Rs.12,65,000 என தவறாக கணக்கீடு செய்து Marginal Relief இன் படி Rs.65,000 வருமான வரியும் அதற்குரிய 4% CESS ம் சேர்த்து கட்டுவார். இது, இழப்பாக அமையும்.

.*விழிப்புடன் இருக்கவே...*

மீண்டும் சொல்கிறேன்.... Marginal Relief பற்றிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் இந்த நிதியாண்டில் எனக்கு தெரிந்த ஒருவர் Rs.58000 வருமான வரி கணக்கிட வேண்டிய நிலையில் Rs.71,000 என கணக்கிட்டிருந்தார்.

Conveyance Allowance பற்றிய விழிப்புணர்வு இல்லாததால் மற்றொருவர் சென்ற நிதியாண்டில் Rs.75,000 வருமான வரி கட்ட வேண்டிய நிலையில் ரூ.80,000 வருமானவரி கட்டி இருக்கிறார்.

விழிப்புடன் இருங்கள்...