Breaking

Sunday, March 1, 2026

Sunday, March 01, 2026

School Calendar - March 2026


மார்ச் 2026 மாத பள்ளி நாட்காட்டி - 19.03.2026 தெலுங்கு வருடப் பிறப்பு 20.03.2026 என்று தவறுதலாக இருந்தது தற்போது அது சரிசெய்யப்பட்டுள்ளது - இணைப்பு: 2026ஆம் ஆண்டின் பொது விடுமுறை அரசாணை!

மார்ச் -2026 நாள்காட்டி..


மார்ச் -7 சனி - ஆசிரியர் குறை தீர் நாள்.

மார்ச் -2 - திங்கள் - +2 தேர்வு ஆரம்பம்

மார்ச் -11 - புதன் - 10 தேர்வு ஆரம்பம்

மார்ச் -26 - வியாழன் - *+2 தேர்வு முடிவு.

ஏப்ரல் - 6 -திங்கள் - *10 ஆம் வகுப்பு தேர்வு முடிவு.


அரசு விடுமுறை நாள்கள்..


மார்ச் -19 - வியாழன் - தெலுங்கு வருடப்பிறப்பு

மார்ச் -21 - சனி - ரம்ஜான்

மார்ச் -31 - செவ்வாய் - மகாவீரர் ஜெயந்தி


RL & RH news


*02.03.2026 -- திங்கள்--மாசிமகம்

04.03.2026 -- புதன் - *பகவான் வைகுண்டசாமி அவதாரதினம்

*16-03-2026 - திங்கள் - *ஷபேகாதர்


March 2026 Calendar & Govt Holidays 2026

👇👇👇👇

Download here ( Revised ...)
Sunday, March 01, 2026

8 லட்சம் பேர் எழுதும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் நாளை தொடக்கம்

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்​தேர்வு நாளை (மார்ச் 2) தொடங்கி 26-ம் தேதி வரை நடை​பெற உள்​ளது. இத்​தேர்​வில் 8.27 லட்​சம் பேர் பங்​கேற்​கிறார்​கள்.

தமிழக பள்​ளிக்​கல்வி பாடத்​திட்​டத்​தில் 10, பிளஸ் 2 வகுப்​பு​களுக்கு பொதுத்​தேர்வு நடத்​தப்​பட்டு வரு​கிறது. அதன்​படி நடப்பாண்​டுக்​கான பிளஸ் 2 பொதுத்​தேர்வு நாளை தொடங்கி 26-ம் தேதி நிறைவுபெறுகிறது. முதல்​நாளில் தமிழ் உட்பட மொழிப் பாடங்​களுக்​கான தேர்வு நடை​பெறும்.

இந்த தேர்வை மாநிலம் முழு​வதும் அமைக்​கப்​பட்​டுள்ள 3,412 தேர்வு மையங்​களில் 8 லட்​சத்து 27,475 பேர் எழுதுகின்​றனர். இதில் 7,545 பள்ளி​களில் இருந்து 7 லட்​சத்து 99,692 மாணவர்​கள், 27,783 தனித்​தேர்​வர்​கள் மற்​றும் 281 கைதி​களும் அடங்​கு​வர். மேலும் 7,465 மாணவர்​கள் ஸ்கிரைப் உதவி​யுடன் தேர்​வெழுதவுள்​ளனர்.

பொதுத்​தேர்​வுக்​கான அறை கண்​காணிப்​பாளர் பணி​யில் 44,624 ஆசிரியர்​கள் ஈடு​படுத்​தப்பட உள்​ளனர். முறை​கேடு​களைத் தடுக்க 4,540 நிலை​யான மற்​றும் பறக்​கும் படைகள் அமைக்​கப்பட்​டுள்​ளன. அதே​போல், மாவட்ட ஆட்​சி​யர், முதன்​மை, வட்​டாரக் கல்வி அலு​வலர் மற்​றும் வரு​வாய்த் துறை அதி​காரி​கள் தலை​மை​யிலும் சிறப்பு கண்​காணிப்​புக் குழுக்​கள் ஏற்​படுத்​தப்​பட்​டுள்​ளன. 154 வினாத்​தாள் கட்​டுக்​காப்பு மையங்​களில் 24 மணி நேரம் ஆயுதம் தாங்​கிய காவல்​துறை அதி​காரி​கள் பாது​காப்பு பணி​யில் ஈடு​பட்​டுள்​ளனர்.

ஏற்​பாடு​கள், கட்​டுப்​பாடு​கள் தேர்வு மையங்​களில் குடிநீர்,இருக்​கை, மின்​சா​ரம், காற்​றோட்​டம், வெளிச்​சம் மற்​றும் கழிப்​பறை வசதி​கள் செய்யப்​பட்​டுள்ளன. இதுத​விர மாணவர்​களுக்​கும், ஆசிரியர்​களுக்​கும் பல்​வேறு கட்​டுப்​பாடு​கள் விதிக்​கப்​பட்​டுள்ளன.

தேர்வறைக்குள் செல்போன் உள்​ளிட்ட மின்​சாதனப் பொருட்கள்கொண்​டுவரத்தடை விதிக்கப்பட்​டுள்​ளது. ஹால்​டிக்​கெட்​டில் உள்ள விதிகளைப் பின்பற்றி மாணவர்​கள் நடக்க வேண்டும்.விடைத்​தாளில் நீலம் அல்​லது கருப்பு நிற பேனாவால் மட்​டுமே எழுத வேண்​டும்.

அதே​போல், விடைத்​தாள்களில் எவ்​வித சிறப்​புக் குறி​யீடு,தேர்வெண், பெயர் ஆகிய​வற்றை குறிப்​பிடக் ​கூ​டாது. மேலும், மாற்​றுத் திற​னாளி மாணவர்​களுக்​கான கூடு​தல் நேரம் உட்பட சிறப்பு சலுகைகள் வழங்​குதல் சார்ந்​தும் அறி​வுறுத்​தல்​கள் வழங்​கப்​பட்​டுள்​ளன. ஆள்​மாறாட்டம் செய்​வது, துண்​டுத்​தாள் அல்​லது பிற மாணவர்களை பார்த்து எழுதுதல், விடைத்​தாள் மாற்​றம் செய்​தல் போன்ற ஒழுங்​கீன செயல்​களில் ஈடு​படும் மாணவர் மீது நடவடிக்கை எடுக்​கப்படும்.

அதி​கபட்சம் 3 ஆண்​டு​ அல்​லது நிரந்​தரமாக தேர்வெழுத தடைவிதிக்​கப்படும். ​தேர்வு குறித்த சந்​தேகங்​கள் மற்​றும் புகார்களைத் தெரிவிக்க 14417 மற்​றும் 94983 83075, 94983 83076 எண்​களை​ தொடர்​புகொள்​ளலாம்​.
Sunday, March 01, 2026

இன்று தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தங்களது மொபைல் ஃபோனில் வந்த செய்தி.


இன்று தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தங்களது மொபைல் ஃபோனில் வந்த செய்தி.

*வருமான வரிச் சட்டத்தின்படி, "புதிய வரி6 முறை" என்பது 2026-27 நிதியாண்டிற்கான இயல்புநிலை வரி முறையாகும்.

*நீங்கள் பழைய வரி முறையைத் தேர்வுசெய்ய விரும்பினால், 13.03.2026 அன்று அல்லது அதற்கு முன் களஞ்சியம் மொபைல் செயலி அல்லது வலைத்தளம் மூலம் அவ்வாறு செய்யுங்கள். ஒருமுறை பயன்படுத்தினால், விருப்பமே இறுதியானதாக இருக்கும். - தமிழ்நாடு கருவூலம்

SMS From TN Treasury

Sir/Madam, As per the Income Tax Act, the "New Regime" is the default tax regime for FY 2026-27. If you wish to opt for the Old Regime, please do so on or before 13.03.2026 through the Kalanjiyam mobile app or website. Once exercised, the option will be final. - TN Treasury

அடுத்த நிதியாண்டுக்கு வருமான வரி தேர்வு செய்யும் வசதி களஞ்சியம் செயலியில் தற்போது தரப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் OLD REGIME என தவறாக தேர்வு செய்தவர்கள் அடுத்த நிதியாண்டுக்கு சரியாக தேர்வு செய்யவும். கடைசி தேதி - 13/03/2026
Sunday, March 01, 2026

நிருவாக நலன் கருதி 4 மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு மாறுதல் வழங்கி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!


நிருவாக நலன் கருதி 4 மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு மாறுதல் வழங்கி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!

👇👇👇👇

DEOs Transfer Order - Download here

Saturday, February 28, 2026

Saturday, February 28, 2026

BEO Promotion - 01.01.2026 நிலவரப்படி மாநில அளவில் தகுதிவாய்ந்தோர் பட்டியல் (Panel List) கோருதல் - DEE Proceedings

தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை-6. ந.க.எண்.000786/ஐ1/2026, நாள். 26 .02.2026

தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப்பணி 2025 - 2026 ஆம் கல்வியாண்டில் வட்டாரக்கல்வி அலுவலர் காலிப்பணியிடங்களில் 50% பதவி உயர்வு மூலம் நியமனம் – 2026 ஆம் ஆண்டு 01.01.2026 நிலவரப்படி மாநில அளவில் தகுதிவாய்ந்தோர் பட்டியல் (Panel List) கோருதல் - சார்பு.

Saturday, February 28, 2026

Pay Matrix Level 10 ல் cell No 45 கடந்தவர்கள் விவரம் கேட்டு தொடக்கக் கல்வி இயக்குநர் கடிதம் ...


தொடக்கக் கல்வி திருமதி.சா.ரோஸ்லின் அரியலூர் மாவட்டம், அரியலூர் கல்வி மாவட்டம், திருமானூர் ஒன்றியம், புதுக்கோட்டை ஆர்.சி. தூயமேரி தொடக்கப் பள்ளி இடைநிலை ஆசிரியர் ஹில்டா என்பாரின் 01.01.2026 நிலையில் ஆண்டு ஊதிய உயர்வு பெற Pay Matrix விவிவாக்கம் செய்து ஊதியம் பெற அனுமதி வழங்குதல் கூடுதல் விவரங்கள் கோருதல் தொடர்பாக.

PAY MATRIX LEVEL EXTEND DETAILS.pdf

👇👇👇👇

Saturday, February 28, 2026

அரசு பள்ளிகளில் நாளை முதல் மாணவர் சேர்க்கை தொடக்கம்


2026-27ஆம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கை - 01.03.2026 முதல் மாணவர் சேர்க்கை தொடங்க தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு.

தொடக்கக் கல்வி -2026-27ஆம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கை - 0103.2026 முதல் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடங்குதல் 5+ வயதுடைய குழந்தைகளை அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் சேர்க்கை செய்தல் - அறிவுரைகள் வழங்குதல் - தொடர்பாக

அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 5 வயது பூர்த்தி அடைந்த மற்றும் பள்ளி வயது குழந்தைகள் அனைவரையும் அரசுப் பள்ளிகளில் சேர்ப்பதற்கு ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 1 முதல் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என பார்வை (3)யில் காணும் அரசாணையில் வழிகாட்டு நெறிமுறைகளுடன் ஆணைகள் வெளியிடப்பட்டு உள்ளது.

மேற்படி அரசாணையில் தெரிவிக்கப்பட்ட வழிகாட்டுதல்களை கவனமுடன் பின்பற்றி 2026-27ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைப் பணிகளை ஒவ்வொரு பள்ளியிலும் 01.03.2026 முதல் தொடங்கிட அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வட்டாரக் கல்வி அலுவலர்கள் வாயிலாக உரிய அறிவுரைகள் வழங்கிட அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி) அறிவுறுத்தப்படுகிறார்கள்.

👇👇👇👇👇

DEE - 2026-27 Admission Proceedings - Download here
Saturday, February 28, 2026

பள்ளி பொதுத்தேர்வு - கண்ட்ரோல் ரூம்கள் திறப்பு.

மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெறவுள்ள 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடர்பான புகார்களை தெரிவிக்க கண்ட்ரோல் ரூம் அமைப்பு.

மார்ச் 2ம் தேதி முதல் ஏப்ரல் 6ம் தேதி வரை கண்ட்ரோல் ரூம்கள் இயங்கும்.

94983 83075, 94983 83076 ஆகிய எண்களில் தேர்வு தொடர்பாக பெற்றோர், மாணவர்கள் தொடர்பு கொள்ளலாம்.
Saturday, February 28, 2026

ஏஐ அச்சுறுத்தல் இல்லாத பணிகளை பட்டியலிட்ட ஸ்ரீதர் வேம்பு!

இன்றைய டிஜிட்டல் டெக் உலகில் செயற்கை நுண்ணறிவின் தாக்கம் பணி சார்ந்த அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. டெக் நிறுவனங்களின் ஆட்குறைப்பு நடவடிக்கை அதற்கு உதாரணம். இந்த சூழலில் ஏஐ அச்சுறுத்தல் இல்லாத 10 வேலைகளை சோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு பட்டியலிட்டுள்ளார்.

அதிகளவிலான சம்பளத்தை காட்டிலும் மனிதர்களை மையமாக கொண்ட பணிகளை அவர் பட்டியலிட்டுள்ளார். ஏற்கெனவே கடந்த ஆண்டு அக்டோபரில் அமெரிக்கவாழ் இந்தியர்கள் தாயகம் தர வேண்டும் என அவர் கூறியிருந்தார். மறுபக்கம் ஏஐ தாக்கத்தால் ஐடி துறை சார்ந்து பணியில் உள்ளவர்கள் பணியிழப்புக்கு ஆளாகி வருகின்றனர். இந்த சூழலில் தற்போது இக்கருத்தை ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.

நாம் சேர்க்கின்ற பொருளாதார மதிப்பை நமக்கான சுயமதிப்போடு இணைத்து பார்த்தால் இன்றைய ஏஐ காலத்தில் அது பெரிய நெருக்கடியாக அமையும்.

மறுபக்கம் பார்த்தால் குழந்தை பராமரிப்பு, அவர்களுக்கு பாடம் போதிப்பது, முதியோர் பராமரிப்பு, பெரிய சம்பளம் கொடுக்கும் பணியை விடுத்து விவசாயத்துக்கு திரும்புவது, கானகங்களை நேசிப்பவர்கள் வனக்காப்பாளர்களாக செல்வது, உள்ளூர் கோயில்களில் தினசரி பூஜைகளை மேற்கொள்ளும் பூசாரி, இசைக்கலைஞராக தினசரி பயிற்சி செய்து, சிறிய அளவிலான பார்வையாளர்கள் இருந்தாலும் அவர்கள் முன் இசைப்பது போன்ற செயல்களை மேற்கொள்ள யாரும் முன்வருவதில்லை. ஏனெனில், இந்த செயல்களுக்காக யாரும் உங்களுக்கு அதிக சம்பளம் தருவதில்லை.

இருந்தாலும் இந்த செயல்களில் ஈடுபடுபவர்கள் ஏஐ-யால் பாதிக்கப்பட மாட்டார்கள். மனிதகுலம் அத்தகைய செயல்பாட்டுக்கு தன்னைத்தானே ஒழுங்கமைத்துக் கொள்ளலாம்” என ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார். அவரது இந்த சமூக வலைதள பதிவுக்கு பயனர்கள் பலர் கலவையான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
Saturday, February 28, 2026

ஆதரவற்ற விதவைகளின் மாதாந்திர வருமான உச்சவரம்பை உயர்த்தி அரசாணை வெளியீடு!



ஆதரவற்ற விதவைகளின் மாதாந்திர வருமான உச்சவரம்பை உயர்த்தி அரசாணை வெளியீடு!

2016-ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் (பணி நிபந்தனைகள்) சட்டம் ஆதரவற்ற விதவைகள்-மாதாந்திர வருமான உச்சவரம்பை உயர்த்துதல் - ஆணைகள்-வெளியிடப்படுகின்றன.

G.O.Ms.No.15 - Destitute Widow Income - Download here
Saturday, February 28, 2026

தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் விதிகள் வழிகாட்டு நெறிமுறைகள் உடனடியாக வெளியிட வேண்டும் - ஜாக்டோ - ஜியோ அறிக்கை


தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் விதிகள் வழிகாட்டு நெறிமுறைகள் தமிழக அரசு உடனடியாக வெளியிடக் கோருதல் தொடர்பாக ஜாக்டோ - ஜியோ அறிக்கை வெளியீடு.

Jactto Geo Letter on TAPS - Download here
Saturday, February 28, 2026

TET INSTRUCTIONS : ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளர் திரு.ராமேஸ்வர முருகன் அவர்கள் தெரிவித்த தகவல்கள்

1.ஆசிரியர் தகுதி தேர்வுக்கு தற்பொழுது பணியில் உள்ள அனைத்து ஆசிரியர்களும் விண்ணப்பிக்கும் வகையில் இணையதளம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

2. இதன் மூலம் பத்தாம் வகுப்பு முடித்து இடைநிலை ஆசிரியராக நியமனம் பெற்றவர்கள் 12 ஆம் வகுப்பில் இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம்.

3. பனிரெண்டாம் வகுப்பு படிக்காதவர்கள் விண்ணப்பிக்க இயலாது என்ற நிலையும்

4. பன்னிரண்டாம் வகுப்பிலேயே ஆசிரியர் பயிற்சியை முடித்தவர்களும்(SGTT) விண்ணப்பிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

5. பத்தாம் வகுப்பு 12ஆம் வகுப்பு மற்றும் பிஎட் ஆகியவற்றில் குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்களிருக்க வேண்டும் என்பது (ஏற்கனவே 40% என அறிவிக்கப்பட்டு இருந்தது) நீக்கப்பட்டுள்ளன.

6. இடைநிலை ஆசிரியர் பணியிடத்தில் நியமிக்கப்பட்ட B.ed முடித்த ஆசிரியர்கள் தற்பொழுது அவர்கள் வகிக்கும் பதவிக்கு உண்டான தேர்வு எழுதினால் போதும். உதாரணத்திற்கு அவர் தற்பொழுது இடைநிலை ஆசிரியர் பதவியில் வேலை செய்து கொண்டிருந்தால் தாள் ஒன்றும், பட்டதாரி ஆசிரியராக வேலை செய்து கொண்டிருந்தால் தாள் இரண்டும், தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்று இருந்தால் அவர் பணியில் தொடர தாள் ஒன்றும் பதவி உயர்வு பெற தாள் இரண்டும் எழுத வேண்டும்

7. பொதுவாக தற்போது தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியராக பணியாற்றி வருபவர் பணியில் தொடர தாள் ஒன்றும் பட்டதாரி ஆசிரியராக பதிவு உயர்வு பெற தாள் இரண்டும் தேர்வு எழுத வேண்டும்.

8. மாற்றுத்திறனாளி ஆசிரியர்களுக்கும் இன சுழற்சி அடிப்படையிலேயே நிர்ணயிக்கப்பட்டுள்ள மதிப்பெண்களை அவர்களுக்கு தகுதி மதிப்பெண்களாக கொள்ளப்படுகிறது.

9.OC எனப்படும் இதர வகுப்பினருக்கு NCTE விதிகளின்படி 90 மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் அவர்களுக்கு அந்த மதிப்பெண்களை குறைக்க வாய்ப்பு இல்லை.

10. பிற இனத்தவர்களுக்கு(OBC,ST.ST) பேச்சு மதிப்பெண்ணை மாநில அரசுகள் நிர்ணயித்துக் கொள்ளலாம் என்ற NCTE விதிகளின்படியே மதிப்பெண்கள் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்கள்.

11. பொதுவாகEMIS id உள்ளவர்கள் அனைவரும் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

12. சுயநிதி பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும்EMIS I'd வழங்கப்பட்டுள்ளதால் அவர்களும் விண்ணப்பிக்கலாம்.

13. SMC மூலம் தற்பொழுது பள்ளிகளில் காலியாக உள்ள இடங்களில் நியமிக்கப்பட்டுள்ள தற்காலிக ஆசிரியர்களுக்கும் தற்காலிக EMIS id வழங்கப்பட்டுள்ளதால் அவர்களும் விண்ணப்பிக்கலாம்.

14. தொடக்க நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் பணிச் சான்றிதழில் தலைமை ஆசிரியர் கையொப்பம் . வட்டார கல்வி அலுவலர் கையொப்பம் மற்றும் மாவட்ட கல்வி (தொடக்கக்கல்வி) அலுவலர் கையொப்பம் மூன்றும் இடம் பெற வேண்டும்.

15. உயர்நிலை / மேல்நிலை மற்றும் சுயநிதி பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் பணிச் சான்றிதழில் தலைமை ஆசிரியர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்(இடைநிலை/தனியார் பள்ளிகள்) கையொப்பம் இடம் பெற வேண்டும் 

16. பொதுவாக பணியில் தொடர அந்தந்த பதவிக்கு உரிய தேர்வும் பதவி உயர்வில் செல்ல வேண்டுமாயின் அதற்கு உண்டான தேர்வு எழுத வேண்டும்

17. பட்டதாரி ஆசிரியர்கள்/ நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆகியோர் தாள் இரண்டு மட்டும் எழுதினால் போதுமானது.

18. இடைநிலை ஆசிரியர்கள் பணியில் தொடர மற்றும் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற தாள் ஒன்று மட்டும் எழுதினால் போதுமானது.

19. தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பணியில் தொடர தாள் ஒன்று எழுதினால் போதுமானது.

20. இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெற தாள் இரண்டு எழுத வேண்டும்.

மேற்கண்ட தகவல்கள் நேற்று பெறப்பட்டன விண்ணப்பிக்க கால அவகாசம் போதுமான அளவு அளிக்கப்பட்டுள்ளதால் போதிய தகவல்கள் திரட்டிக் கொண்டு அதன் அடிப்படையில் தவறில்லாமல் விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Friday, February 27, 2026

Friday, February 27, 2026

மாற்றுத்திறனாளித் தேர்வர்கள் தொடர்பாக பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் குறித்து அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள்!

மாற்றுத்திறனாளித் தேர்வர்கள் தொடர்பாக பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் குறித்து அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள்!

DGE - PH Candidate Instructions - Download here
Friday, February 27, 2026

தொழில்நுட்ப பணிகள் தேர்வு சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல்: டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது

ஒருங்​கிணைந்த தொழில்​நுட்ப பணி​கள் தேர்​வுக்​கான கணினிவழி சான்​றிதழ் சரி​பார்ப்​புக்​கு, அனு​ம​திக்​கப்​பட்ட தேர்​வர்​களின் பட்​டியலை டிஎன்பிஎஸ்சி வெளி​யிட்​டுள்​ளது.

இதுதொடர்​பாக, டிஎன்பிஎஸ்சி செய​லா​ளர் பானோத் ம்ரு​கேந்​தர் லால் நேற்று வெளி​யிட்ட செய்​திக் குறிப்​பு: கடந்த 2025-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடை​பெற்ற ஒருங்​கிணைந்த தொழில்​நுட்ப பணி​கள் தேர்​வில் (நேர்​காணல் இல்​லாத பதவி​கள்) விண்​ணப்​ப​தா​ரர்​கள் பெற்ற மதிப்​பெண் மற்​றும் தரவரிசை விவரங்​கள் கடந்த ஜன.23-ம் தேதி அன்று வெளி​யிடப்​பட்​டன.

இப்​ப​தவி​களுக்​கான கணினிவழித்​திரை சான்​றிதழ் சரி​பார்ப்​புக்​கு, மதிப்​பெண், தரவரிசை மற்​றும் இடஒதுக்​கீடு அடிப்​படை​யில், தற்​காலிக​மாக அனு​ம​திக்​கப்​பட்ட தேர்​வர்​களின் பதிவெண்​கள் அடங்​கிய பட்​டியல் தேர்​வாணை​யத்​தின் இணை​யதளத்​தில் (www.tnpsc.gov.in) வெளி​யிடப்​பட்​டுள்​ளது. இவ்​வாறு அவர் தெரி​வித்​துள்​ளார்.
Friday, February 27, 2026

அரசு கல்லூரி உதவி பேராசிரியர் தேர்வு: முதல்கட்டமாக 5 பாடங்களுக்கான முடிவு வெளியீடு

அரசு கலை அறிவியல் கல்லூரி உதவிப் பேராசிரியர் தேர்வில் முதல்கட்டமாக 5 பாடங்களுக்கான முடிவுகள் வெளியிடப் பட்டுள்ளன.

இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் எஸ்.ஜெயந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது: அரசு கலை அறிவியல் கல்லூரிகள் மற்றும் அரசு கல்வியியல் கல்லூரிகளில் காலியாகவுள்ள உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த 2025-ம் ஆண்டு டிச.27-ம்தேதி எழுத்துத்தேர்வு நடத்தப்பட்டது. அத்தேர்வை 42 ஆயிரத்து 64 பேர் எழுதினர்

மொத்தம் 48 பாடங்களுக்கு நடத்தப்பட்ட இந்த தேர்வில் தற்போது முதல்கட்டமாக வரலாற்றுக் கல்வி, மனித உரிமைகள், இந்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலா, கடல்வாழ் உயிரியல், வனஉயிரியல் ஆகிய 5 பாடங்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத்தேர்வுக்கு அனுமதிக்கப் பட்டுள்ள தேர்வர்களின் பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் (https://trb.tn.gov.in) வெளியிடப்பட்டுள்ளது.

ஒரு காலியிடத்துக்கு 3 பேர்’ என்ற விகிதாச்சார அடிப்படையில் தேர்வர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

சான்றிதழ் சரிபார்ப்பு மார்ச் 23-ம் தேதியும்,நேர்முகத்தேர்வு 24-ம் தேதியும் நடைபெறும். இதற்கான அழைப்புக்கடிதம் இணையதளத்தில் வெளியிடப்படும்.

மேலும், இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட தேர்வர்களுக்கு மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி வாயிலாகவும் தகவல் தெரிவிக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Friday, February 27, 2026

பொதுத் தேர்வு வினாத்தாள்களில் பிழைகள் ஏதேனும் இருந்தால் தெரிவிக்கலாம்

தேர்வுத் துறை இயக்குநர் க.சசிகலா, அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: தமிழகத்தில் பிளஸ்-2, பிளஸ்-1 (அரியர்) மற்றும் பத்தாம் வகுப்புபொதுத் தேர்வுகள் மார்ச் 2 முதல் ஏப்.6-ம் வரை நடைபெறுகிறது.

இந்த பொதுத் தேர்வு வினாத்தாள்கள் சார்ந்து ஏதேனும் கருத்து இருப்பின் அது தொடர்பாக ஆசிரியர்கள், மாணவர்களின் கருத்துகளைப் பெற்று தெரிவிக்க வேண்டும்.

அதாவது கேள்வி சரியில்லை என்று பொதுப்படையாக கூறாமல் எந்த வினாவில் தவறு அல்லது முரண்பாடு உள்ளது என்பதை குறிப்பிட வேண்டும்.


தேர்வு நடைபெற்ற நாளிலேயே அந்தந்த பாடம் சார்ந்த கருத்துகளை தெரிவிக்கவேண்டும். இவ்வாறு இல்லாமல் கேள்வித்தாளில் முரண்பாடு, தவறு உள்ளது என்று பொதுப்படையாக கூறுவது தவிர்க்கப்பட வேண்டும். இந்த தகவல்களை அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Friday, February 27, 2026

TET தேர்வில் மாற்றுத்திறனாளிகளுக்கு தேர்ச்சி மதிப்பெண் 40% ஆக குறைப்பு - புதிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம் - TRB பத்திரிகைச் செய்தி!



ஆசிரியர் தேர்வு வாரியம், சென்னை-06

பத்திரிகைச் செய்தி

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிக்கை எண்.03/2025, நாள் 11.08.2025 ன்படி 2025 ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் I 15.11.2025 அன்றும் தாள்-II 16.11.2025 அன்றும் நடத்தப்பட்டது.

அரசாணை (நிலை) எண். 23 பள்ளிக் கல்வித் (TRB) துறை நாள்:28.01.2026 ல் தெரிவிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச மதிப்பெண்கள் அடிப்படையில் OMR விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட்டு தேர்வு முடிவுகள் 30.01.2026 அன்று ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டது. தகுதி பெற்ற தேர்வர்களுக்கு 02.022026 பி.ப முதல் தகுதிச் சான்றுகள் (e-certificate) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் (www.trb.tngov.in) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது அரசாணை (நிலை) எண் : 46 பள்ளிக் கல்வித் (TRB) துறை நாள் : 25.02.2026 ல் மாற்றுத்திறனாளி (PWD Candidate) தேர்வர்களுக்கு குறைந்தபட்ச தகுதி மதிப்பெண் 40% என அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இவ்வரசாணையில் ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிக்கை 6:03/2025 நாள்:11.08.2025ன் படி தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியிடப்பட்ட அறிவிக்கைக்கும் பொருந்தும் எனத்

எனவே, மேற்கண்ட அரசாணையின் அடிப்படையில் மாற்றுத் திறனாளி (PWD Candidate) தேர்வர்களுக்கு TET தேர்வில் தகுதி பெறுவதற்கு குறைந்தப்பட்ச மதிப்பெண்கள் 60 (or) 40% என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதால் தேர்வர்கள் தங்களது விண்ணப்பத்தில் தெரிவித்திருந்த மாற்றுத்திறனாளி என்ற விவரத்தின் அடிப்படையில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகிறது. மேலும், தகுதி பெற்ற தேர்வர்கள் தங்களது தகுதிச் சான்றிதழ்களை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் (www.trb.tn.gov.in) 28.022026 முற்பகல் முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்படுகிறது.

தலைவர்