Breaking

Friday, February 13, 2026

Friday, February 13, 2026

துறைத் தேர்வுகள் டிசம்பர் 2025க்கான உத்தேச விடைகள் வெளியீடு!!!


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்

செய்தி வெளியீடு

செய்தி வெளியீட்டு எண்: 17/2026

: 10.02.2026

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அறிவிக்கை எண் 17/2025, நாள் 22.10.2025-இன் படி அறிவிக்கப்பட்ட துறைத் தேர்வுகள் கடந்த 15.12.2025 முதல் 30.12.2025 வரை (20.12.2025 முதல் 26,122025 வரை நீங்கலாக) கொள்குறிவகை, விரிந்துரைக்கும் வகை, கொள்குறிவகை மற்றும் விரிந்துரைக்கும் வகையிலான தேர்வு அமைப்பு முறையில் சென்னை, டெல்லி உட்பட 39 மாவட்ட தேர்வு மையங்களில் நடைபெற்றன.

இத்தேர்வின் கொள்குறி வகைத் தேர்வுகளின் உத்தேச விடைகள் (Marked as tick) குறிக்கப்பட்ட வினாத்தாள் மற்றும் விரிந்துரைக்கும் வகையிலான தேர்வுகளின் வினாத்தாள் ஆகியன தேர்வாணைய இணையதளத்தில் 11.02.2026 அன்று வெளியிடப்பட்டுள்ளன.

துறைத் தேர்வெழுதிய விண்ணப்பதாரர்கள் அவரவர் எழுதிய கொள்குறி வகை தேர்வின் உத்தேச விடைகளை தேர்வாணைய இணையதளத்தில் சரிபார்த்துக் கொள்ளலாம். உத்தேச விடைகள் மீது மறுப்பு ஏதேனும் இருப்பின் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்ட ஒரு வார கால அவகாசத்திற்குள் அதாவது 1202.2026 முதல் 18.02.2026 அன்று மாலை 5.45 மணி வரை, விண்ணப்பதாரர்கள் அவர்தம் தேர்வு நுழைவு சீட்டு நகல், பதிவு எண், தேர்வின் பெயர், தேர்வு குறியீட்டு எண், வினா எண், அவ்வினாவின் உத்தேச விடை, அவ்வினாவிற்கு விண்ணப்பதாரர் கூறும் விடை (ம) அதற்கான ஆவணங்கள் அடங்கிய தகவல்களை தெளிவாக குறிப்பிட்டு tnpsc.qdd@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாக தங்களுடைய மனுக்களை அனுப்பலாம். மின்னஞ்சல் முகவரியை தவிர்த்து கடிதம் வாயிலாக விண்ணப்பதாரர்கள் மறுப்பு தகவல்களை தேர்வாணையத்திற்கு தெரிவித்தால் அத்தகவல் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது / பரிசீலிக்கப்படமாட்டாது என இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

அ.சண்முக சுந்தரம்,இ.ஆ.ப.

தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர்

Friday, February 13, 2026

9801 பேருக்கு (13.02.2026) அரசுப் பணிகளுக்கான பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் வழங்குகிறார்!


9801 பேருக்கு (13.02.2026) அரசுப் பணிகளுக்கான பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் வழங்குகிறார்!

Press News - Download here
Friday, February 13, 2026

Ennum Ezhuthum - 1 To 5th Std - Term 3 - ( Set - 7 ) Lesson Plan - T/M & E/M


Ennum Ezhuthum Lesson Plan | 2025 - 2026

1,2,3 rd Ennum Ezhuthum Empty Format - Download here

4 & 5th Ennum Ezhuthum Empty Format - Download here

Term III Lesson Plan

February - 2026

SET : 7

Ennum Ezhuthum - 1,2,3rd Std - Term 3 - ( Set - 7 ) Lesson Plan - T/M - Download here

Ennum Ezhuthum - 1,2,3rd Std - Term 3 - ( Set - 7 ) Lesson Plan - E/M - Download here

Ennum Ezhuthum - 4 & 5th Std - Term 3 - ( Set - 7 ) Lesson Plan - T/M - Download here

Ennum Ezhuthum - 4 & 5th Std - Term 3 - ( Set - 7 ) Lesson Plan - E/M - Download here
Friday, February 13, 2026

அரசுப் பொதுத் தேர்வுகள் தொடர்பாக அனைத்து CEOs & DEOs கூட்டம் நடைபெறுதல் தொடர்பாக DSE & DGE இணைச் செயல்முறைகள்!


அரசுப் பொதுத் தேர்வுகள் தொடர்பாக அனைத்து CEOs & DEOs கூட்டம் நடைபெறுதல் தொடர்பாக DSE & DGE இணைச் செயல்முறைகள்!

மார்ச்/ ஏப்ரல் 2026-ல் நடைபெறவுள்ள மேல்நிலை / இடைநிலை பொதுத் தேர்வுகள் தொடர்பாக மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அவர்களின் தலைமையில் அனைத்து இணை இயக்குநர்கள் / துணை இயக்குநர்கள் / அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள்: மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி இடைநிலை தனியார் பள்ளிகள்) மற்றும் அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர்களுக்கான ஆய்வு அலுவலர் கூட்டம் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான கல்விசார் ஆய்வுக் கூட்டம் ஆகியவை கீழ்க்கண்டவாறு நடைபெறும் என்ற விவரம் தெரிவிக்கப்படுகிறது.


DSE - ALL CEOs DEOs Meeting Proceedings

👇👇👇

Download here
Friday, February 13, 2026

13.02.2026(வெள்ளிக்கிழமை) - இன்றைய செய்திகள்



🌹புரிய வைக்கவும் முடியவில்லை.புரிந்து கொள்ளவும் முடியவில்லை.

என்ற அளவில் தான் இன்றைய உறவுகள் உள்ளன.!

🌹🌹நல்ல மனிதர்களை நீங்கள் காயப்படுத்தினால் சரிக்கு சரியாக நின்று ஒரு போதும் சண்டை போடமாட்டார்கள்...

ஆனால் சத்தமில்லாமல் உங்களிடமிருந்து விலகி வெகு தூரம் சென்று விடுவார்கள்.!!

🌹🌹🌹உங்கள் மீது

அன்பு காட்டிய ஒருவரை...

எந்த சூழ்நிலையிலும் யாருக்காகவும்...

பிறர் முன்பு விட்டுக்கொடுத்து

அவமானப்படுத்தி விடாதீர்கள்...

பின் எவ்வளவுதான்

நீங்கள் சமாதானம் செய்தாலும்...

அந்த வலி சாகும் வரை அவர்கள் மனதை விட்டுப் போகாது.!!!

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

🍒🍒தமிழ்நாடு அரசின் தேர்வு முகமைகள் மூலம் தேர்வு செய்யப்பட்ட 9,801 பேருக்கு இன்று (13.02.2026) அரசுப் பணிகளுக்கான பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் வழங்குகிறார்- செய்தி குறிப்பு வெளியீடு.

🍒🍒PGTRB பணிநியமன ஆணை வழங்கும் விழா இன்று 13.02.2026(வெள்ளிக்கிழமை) நடைபெறுதல் தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு.

🍒🍒புதிதாக நியமனம் பெற்ற அனைத்து முதுகலை ஆசிரியர்களும் 16.02.2026(திங்கட்கிழமை) முற்பகல் முதல் பணியேற்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு.

🍒🍒அரசு விழாக்கள், பள்ளிகளில் 'வந்தே மாதரம்' கட்டாயம் புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டது மத்திய அரசு(நாளிதழ் செய்தி)

🍒🍒பள்ளி மாணவர்களின் அடைவுத் திறனை சோதித்து அறிதல் - அறிவுரைகள் வழங்குதல் - DEE Proceedings வெளியீடு.

🍒🍒Census 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி அலுவலர்களுக்கு பயிற்சி துவக்கம்.

🍒🍒100 days challenge - பள்ளி மாணவர்களின் அடைவுத் திறனை வட்டார வள மைய ஆசிரியப் பயிற்றுநர்கள் வாயிலாக 18.02.2026 மற்றும் 20.02.2026 ஆகிய நாட்களில் சோதித்து அறிதல் - அறிவுரைகள் வழங்குதல் சார்ந்து தொடங்குகள் இயக்குனரின் செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது

🍒🍒தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு சொந்த மாவட்டங்களில் பணியாற்றும், 3 ஆண்டுகள் ஒரே இடத்தில் பணியாற்றும் அதிகாரிகளை இடம் மாற்றம் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 🍒🍒HSHM TO PG CASE - வழக்கின் ஒரு தரப்பு (HSHM தரப்பு) வாதங்கள் மட்டுமே முழுவதுமாக நிறைவடைந்து உள்ளது. மற்றொரு தரப்பு (HIGH SCHOOL BT தரப்பு) வாதங்கள் மீதம் உள்ளது.வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது

🍒🍒ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் செயல்பட்டுவரும் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளிகளில் காலியாகவுள்ள 17 மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் காலிப்பணியிடங்கள் பதவி உயர்வின் மூலம் நிரப்பப்படவுள்ளது.

🍒🍒சிறப்புக் கவனம் தேவைப்படும் மாணவர்களுக்கு, ஏற்ற வகையில் பொருத்தமான கற்பித்தல் முறைகள், தகவமைக்கப்பட்ட கருவிகள், மதிப்பீட்டுச் செயல்பாடுகளைப் பயன்படுத்தி கற்றல் கலைத்திட்டத்தை அனைத்து மாணவர்களும் கொண்டு சேர்க்கும் பணியில் சிறப்பு பயிற்றுநர்கள் ஈடுபடுகின்றனர்.

🍒🍒மக்கள் நலப் பணியாளர்களுக்கு மாதந்தோறும் ரூ. 1000 ஊக்கத்தொகை! தமிழகம் முழுவதும் வழங்க உத்தரவு (பத்திரிக்கை செய்தி)

🍒🍒நான் வந்த வழி வேறு

முதலமைச்சர் ஸ்டாலினின் அப்பா முதலமைச்சராக இருந்தார், அவருக்கு விளம்பரம் எளிதாக கிடைத்தது மற்றும் அரசியல் அதிகாரமும் பணபலமும் இருந்தது

நான் விவசாயியாக இருந்து படிப்படியாக உழைப்பால் பொதுச்செயலாளர் வரை உயர்ந்துள்ளேன்

முதலமைச்சர் ஸ்டாலின் வந்த வழி வேறு, நான் வந்த வழி வேறு

-எடப்பாடி பழனிசாமி

🍒🍒தவெகவை விமர்சித்த அமைச்சர்

``தவெக பெரிய கட்சியாக இருக்கும் என்று நினைத்தேன். புதிதாக கட்சி தொடங்குவது பெரிய விஷயம் இல்லை அதை பற்றி நான் கவலைப்படுவது இல்லை

மதுரையில் மாநாடு நடைபெற்றது யார் யார் வருகிறார் என்று வண்டியில் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருந்தேன், நான்கு பேர் தான் பெரிய ஆட்களாக இருந்தார்கள், மற்றவர்கள் 15 வயது உள்ள ஆட்கள் அதிகமாக இருந்தனர்

மதுரையில் அமைச்சர் ராஜ கண்ணப்பன் பேச்சு

🍒🍒ஆட்சியில் பங்கு என்பது தமிழ்நாட்டிற்கு ஒத்து வராது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம். 2021-ஐ விட அதிக இடங்களில் திமுக கூட்டணி வெற்றிபெறும் என்றும் உறுதி.

🍒🍒ஒன்றிய அரசின் தொழிலாளர் நல சட்டங்களுக்கு எதிராக நேற்று நாடு தழுவிய அளவில் நடைபெற்ற வேலைநிறுத்தத்தால்.10 தொழிற்சங்கங்களின் போராட்டத்தால் வங்கி, போக்குவரத்து, அரசு அலுவலக பணிகள் பாதிக்கப்பட்டது.

🍒🍒கூட்டணி ஆட்சி விவகாரத்தில் கட்சி தலைமைகளே முடிவு செய்யும் என செல்வப்பெருந்தகை பதில். கூட்டணி ஆட்சிக்கான தேவை தமிழ்நாட்டில் இல்லை என கம்யூனிஸ்ட் கட்சிகள் கருத்து.

🍒🍒கூட்டணி ஆட்சிக்கு அதிமுக சம்மதிக்குமா என்ற கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி மழுப்பலாக பதில். அதிமுகவுக்கு தவெக தலைவர் விஜய் ஒரு பொருட்டே இல்லை என்றும் காட்டமான பதிலடி.

🍒🍒தேமுதிகவிடம் இதுவரை கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவில்லை என நயினார் நாகேந்திரன் மறுப்பு. அதிமுகவிடம் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்கவில்லை என்றும் பரபரப்பு பதில்.

🍒🍒ஜெயலலிதா பிறந்தநாளான பிப்ரவரி 24ல் வெளியாகிறது அதிமுக வேட்பாளர் பட்டியல்

2026 சட்டமன்றத் தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பிப்ரவரி 24ம் தேதி அதிமுக வெளியிடுகிறது

அன்றைய தினம் 15 வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என தகவல்

🍒🍒"முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தி புரிந்துணர்வு போட்டுட்டோம், நியூஸ்ல வந்துருச்சினு இருக்க மாட்டோம். அந்த நிறுவனம் செயல்பாட்டுக்கு வந்து, நம்ம இளைஞர்களுக்கு ஆஃபர் லெட்டர் கையில வர வரைக்கும் பார்த்துப் பார்த்து பாஃலோ செய்கிறோம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

🍒🍒தமிழ்நாட்டில் மட்டும் ஒப்பந்தம் போட்ட குறுகிய காலத்திலேயே தொழில் நிறுவனங்கள் எப்படி செயல்பாட்டுக்கு வருகிறது என பலரும் கேட்கின்றனர்.

ஒருங்கிணைத்து பணிகளைச் செயல்படுத்தக் கூடிய அணி, மனித வளம், நிலம் என அனைத்து அம்சங்களும் இங்கே இருக்கின்றன"

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

🍒🍒2024 உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் போடப்பட்ட 631 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் 527 ஒப்பந்தங்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன

2024 உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கையெழுத்தான டாடா, மஹிந்திரா உள்பட 631 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் 527 செயல்பாட்டுக்கு வந்துள்ளன

தமிழ்நாடு முதலீட்டு செயலாக்க மாநாட்டில் தெரிவிப்பு

🍒🍒நமது படித்த இளைஞர்களுக்கு அவர்களின் இல்லங்களுக்கு அருகிலேயே வேலை வாய்ப்பு கிடைக்க வேண்டும்..

தமிழ்நாடு முதலீடுகள் செயலாக்க மாநாட்டில் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா விளக்க உரை

🍒🍒ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.1,520 குறைந்து ரூ.1,16,800க்கு விற்பனை

ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.14,600க்கு விற்பனை

🍒🍒சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தங்கள்"

"அமெரிக்கா உலகின் முதன்மை எரிசக்தி உற்பத்தியாளராக உள்ளது. அமெரிக்க நிலக்கரியின் தரம் உலகத்தில் மிக சிறந்ததாகவுள்ளது. இந்தியா, கொரியா, ஜப்பானுடன் வரலாற்று சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தானது"

-டிரம்ப்

🍒🍒எவ்வளவு முதலீடுகள் என்பது முக்கியமல்ல..

எவ்வளவு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன என்பதுதான் முக்கியம்"

-அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா

🍒🍒தொண்டர்கள் விரும்பும் கட்சியுடன் கூட்டணி என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா திட்டவட்டம்

இரு கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடப்பதாக வெளியான தகவலுக்கு மறுப்பு

கூட்டணி தொடர்பாக உரிய நேரத்தில் உரிய அறிவிப்பு வெளியிடப்படும் என விளக்கம்

🍒🍒தேமுதிகவில் விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்வதற்கான அவகாசம் மேலும் 3 நாட்கள் நீட்டிப்பு

நேற்றுடன் அவகாசம் முடியவிருந்த நிலையில், வரும் 15-ம் தேதி வரை நீட்டிப்பு

பூர்த்தி செய்யப்பட்ட மனுக்களை வரும் 15-ம் தேதி மாலைக்குள் சமர்ப்பிக்க அறிவுறுத்தல்

🍒🍒பாமக கூட்டணி யாருடன்?

கூட்டணி பற்றி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது; விரைவில் முடிவு அறிவிக்கப்படும்

மக்கள் நலன் சார்ந்த கட்சியுடனே கூட்டணி அமைப்போம் - பாமக நிறுவனர் ராமதாஸ்

🍒🍒தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலுக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு

வரும் 22ம் தேதி நடக்க இருந்த தேர்தலுக்கு எதிராக 4 தயாரிப்பாளர்கள் உயர் நீதிமன்றத்தை நாடியிருந்தனர். கடந்த முறை தேர்தல் அதிகாரியான ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன், இம்முறை நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அவரை மாற்ற விடுக்கப்பட்ட கோரிக்கையும் நிராகரிப்பு

🍒🍒5000 பேர் தான்"

"விஜய்யின் சேலம் மக்கள் சந்திப்பில் 5000 பேரை தவிர்த்து வேறு யாரையும் அனுமதிக்க மாட்டோம்"

சேலம் மாநகர காவல் துணை ஆணையர் திட்டவட்டம்

🍒🍒எங்களுக்கு சிறந்த டிஜிபி தேவை"

“டிஜிபியை தேர்வு செய்யும் குழுவில் உள்துறை கூடுதல் செயலர் இடம்பெற வேண்டும்

விசாரணையை 16ம் தேதிக்கு தள்ளிவைக்க வேண்டும், எங்களுக்கு சிறந்த டிஜிபி தேவை''

உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பு வாதம்

🍒🍒'கலைஞர் கனவு இல்லம்' திட்டத்தின் கீழ் மேலும் ஒரு லட்சம் 5வீடுகள் கட்ட அனுமதி. இதற்காக ரூ.3,500 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு

🍒🍒சேலத்தில் விஜய் பிரசாரம்... நுழைவுச் சீட்டு உள்ளவர்களுக்கு மட்டுமே அனுமதி - கட்சித் தலைமை அறிவிப்பு

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்கும் நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் சேலத்தில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்திற்கான விரிவான ஏற்பாடுகள் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்து அக்கட்சியின் தலைமை அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது.

முன்னதாக, த.வெ.க சார்பில் மக்கள் சந்திப்பு நிகழ்விற்காக அனுமதி கோரப்பட்டிருந்தது. இருப்பினும், வரைபடம் இணைக்கப்படாதது உள்ளிட்ட பல்வேறு விளக்கங்களைக் காவல்துறை கேட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து, இந்த நிகழ்வு 'நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டமாக' மாற்றப்பட்டு அனுமதி கோரப்பட்டது. இதைப் பரிசீலித்த காவல்துறை, 51 கடுமையான நிபந்தனைகளுடன் கூட்டத்தை நடத்த அனுமதி வழங்கியுள்ளது. குறிப்பாக, கூட்டத்தில் அதிகபட்சமாக 5,000 நபர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்று காவல்துறை தரப்பில் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

இன்று பிப்ரவரி 13-ஆம் தேதி மதியம் 12:00 மணி முதல் மாலை 3:00 மணி வரை இந்த நிகழ்வு நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம், சீலநாயக்கன்பட்டி புறவழிச்சாலை அருகே அமைந்துள்ள தாளமுத்து நடராஜன் மைதானம் அல்லது கேவிபி கார்டன் உள்வளாகத்தில் இந்தச் சந்திப்பு நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவல்துறையின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, இந்த நிகழ்வு முற்றிலும் அனுமதி பெற்றவர்களுக்காக மட்டுமே நடத்தப்படவுள்ளது. இதற்காகக் க்யூஆர் குறியீட்டுடன் கூடிய பிரத்யேக நுழைவுச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. மொத்தம் 4,998 நபர்கள் மட்டுமே இந்தச் சீட்டுகளைக் கொண்டு உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். வேறு எவருக்கும் நிகழ்வில் பங்கேற்க அனுமதி கிடையாது என்பதில் கட்சி நிர்வாகம் உறுதியாக உள்ளது.

இந்தச் சந்திப்பிற்கான நுழைவுச்சீட்டு இல்லாத தொண்டர்களும் பொதுமக்களும் நிகழ்விடத்திற்கு நேரில் வருவதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும் என்று த.வெ.க தலைமை கேட்டுக்கொண்டுள்ளது. காவல்துறையின் விதிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கும் வகையில், அனுமதி பெற்றவர்கள் மட்டும் பங்கேற்று நிகழ்வைச் சிறப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நேரில் வர முடியாதவர்கள் தொலைக்காட்சி நேரலைகளின் வாயிலாக இந்த நிகழ்வைக் கண்டுகளிக்கலாம் என்றும் கட்சித் தலைமை தெரிவித்துள்ளது.

🍒🍒அமெரிக்காவில் போலீசாரின் கார் மோதி இந்தியாவைச் சேர்ந்த பெண் உயிரிழப்பு

அப்பெண்ணின் குடும்பத்தினருக்கு ரூ.260 கோடி இழப்பீடாக வழங்க சியாட்டில் நகர நிர்வாகம் ஒப்புதல்

🍒🍒வாட்ஸ்அப்-க்கு தடை

ரஷ்யாவில் வாட்ஸ்அப் செயலி முழுமையாக தடை, ரஷ்ய சட்டங்களுக்கு இணங்கி செயல்பட மறுத்ததால் நடவடிக்கை

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

அன்பை கொடுப்பதிலும் பெறுவதிலும் தான் இன்பம் இருக்கிறது. என்றும் அன்புடன்

சு.வேலுமணி M.A.,B.Ed.,

தலைமையாசிரியர், மாவட்டச் செயலாளர்

&தகவல் தொழில் நுட்ப அணியின் மாநில அமைப்பாளர்,

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,

கரூர் மாவட்டம்.

அலைபேசி:9003599926
Friday, February 13, 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 13.02.2026

உலக வானொலி நாள்

திருக்குறள்: 

குறள் 442: 

உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும் 
பெற்றியார்ப் பேணிக் கொளல் 

விளக்க உரை: 

வந்துள்ள துன்பத்தை நீக்கி, இனித் துன்பம் வராதபடி முன்னதாகவே காக்கவல்ல தன்மையுடையவரைப் போற்றி நட்புக் கொள்ள வேண்டும்.

பழமொழி :

Small steps build big journeys. 

சிறிய படிகளே பெரிய பயணத்தை உருவாக்கும்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. உலகில் உயர்வானது அனைத்து உயிர்களிடமும் நாம் காட்டும் அன்பும் பரிவும் தான்.

2. எனவே அனைத்து உயிர்களிடமும் அன்பு காட்டுவோம்.

பொன்மொழி : 

மோசமான தோல்வியை எதிர்கொள்ளும் தைரியம் உடையவர்களே வாழ்வில் மிகப் பெரிய வெற்றியைப் பெற முடியும் - கென்னடி

பொது அறிவு : 

1. Which Indian city became a UNESCO Creative City of Gastronomy? 

யுனெஸ்கோவின் கிரியேட்டிவ் சிட்டி ஆஃப் காஸ்ட்ரோனமியாக எந்த இந்திய நகரமாக  மாறி உள்ளது?

Mumbai - மும்பை

2. Who controls monetary policy in India? 

இந்தியாவில் பணவியல் கொள்கையை யார் கட்டுப்படுத்துகிறார்கள்? 

 Reserve Bank of India (RBI).  - இந்திய ரிசர்வ் வங்கி (RBI).

English words :

Monetary - பணவியல்

Mechanics - இயக்கவியல்

தமிழ் இலக்கணம்: 

 இன்று சும்மா என்ற சொல்லை குறித்து சற்று பார்ப்போம்.
சும்மா என்ற சொல்லை ஒரு நாளில் நாம் ஒரு முறையாவது உபயோகப் படுத்துவது உண்டு. ஆனால் இதற்கு அகராதியில் பொருள் இல்லை. ஏனென்றால் இது இடத்திற்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக் கொண்டு பொருள் தரும். வாருங்கள் சில எடுத்துக் காட்டுகள் பார்ப்போம்
1. சும்மா கிடந்த சங்கை எடுத்து
பொருள் –பயன்படாமல் கிடந்த 
2. நான் சும்மா சொன்னேன்
பொருள் –நான் பொய் சொன்னேன்
3. இதை நீ சும்மா எடுத்துக்கோ
பொருள் – இலவசமாக எடுத்துக் கொள்
ஆக இந்த மூன்று வாக்கியங்களிலும் மூன்று சும்மாவும் மூன்று பொருள் தருகிறது அல்லவா.
  இன்னும் தொடரும்

அறிவியல் களஞ்சியம் :

அண்டார்டிகா என்றாலே நம் நினைவுக்கு வருவது மைல் கணக்கில் பரந்து விரிந்திருக்கும் வெண்மையான பனிப்பாறைகள் தான். ஆனால், அந்த உறைந்த அமைதிக்கு அடியில் "நெருப்பு உலகம்" ஒளிந்திருக்கிறது என்று சொன்னால் நம்புவீர்களா? சீன விஞ்ஞானிகள் தலைமையிலான சர்வதேசக் குழு, அண்டார்டிகாவின் பனிக்கு அடியில் புதைந்து கிடக்கும் 207 ராட்சத எரிமலைகளை கண்டறிந்து உலகையே அதிரவைத்துள்ளது.

பிப்ரவரி 13

உலக வானொலி நாள்

உலக வானொலி நாள் (World Radio Day) என்பது ஆண்டு தோறும் பெப்ரவரி 13 ஆம் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளை ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு அமைப்பு (யுனெசுக்கோ) 2011 நவம்பர் 3 ஆம் நாள் உலக வானொலி நாளாக அறிவித்தது. வானொலி ஒலிபரப்புச் சேவையைக் கொண்டாடவும், பன்னாட்டு வானொலியாளர்களுக்கிடையே கூட்டுறவை ஏற்படுத்தவும், முடிவெடுப்பவர்களை வானொலி, மற்றும் சமூக வானொலிகள் மூலமாக தகவல்கள் பரிமாற ஊக்குவிக்கவும் இந்நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.


கவிக்குயில் சரோஜினி அவர்களின் பிறந்தநாள்


சரோஜினி நாயுடு அல்லது சரோஜினி சட்டோபத்யாயா (பிப்ரவரி 13,1879, ஹைதராபாத் - மார்ச் 2,1949, லக்னோ) அவர் பாரத்திய கோகிலா  (இந்தியாவின் நைட்டிங்கேல்) என்றும் அழைக்கப்படுகிறார். இவர் ஒரு பிரபலமான சிறுமுது அறிஞர், கவிஞர், எழுத்தாளர் ,சுதந்திரப் போராளி மற்றும் சமூக ஆர்வலர் ஆவார். இந்திய தேசிய காங்கிரசின் இரண்டாவது பெண் தலைவரும். உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதல் பெண் ஆளுரும் ஆவார்.அவரது பிறந்த நாள் இந்தியாவில் மகளிர் தினமாக கொண்டாடப்படுகிறது.

நீதிக்கதை

 பசி


ஒரு நாட்டில் ஒரு இளவரசன் இருந்தான். அவன் சிறந்த போர் வீரன். அவனுடைய வாள் வீச்சிற்கு அந்த நாடே ஈடு கொடுக்க முடியாது. அந்த அளவிற்குச் சிறந்த வீரன். அவன் ஒருமுறை அரண்மனையில் வாள் வீசி பயிற்சி செய்துக் கொண்டிருக்கையில், ஒரு எலி குறுக்கே ஓடியது. உடனே அதன் மீது வாளை வீசினான். அந்த எலி தப்பித்துச் சென்றது. பிறகு மீண்டும் அதனைத் துரத்தி வாளை வீசினான், மீண்டும் தப்பித்து வளைக்குள் புகுந்துகொண்டது. உடனே மனம் உடைந்து போனான்.

அப்போது வந்த அரசர், ஏன் சோகமாக இருக்கிறாய்? என கேட்டார். அதற்கு இளவரசன், இந்த நாடே எனது வாள் வீசும் திறமைக்கு ஈடு கொடுக்க முடியாதபோது, இந்த சாதாரண எலியை என்னால் கொல்ல முடியவில்லையே! என விவரித்தான் இளவரசன். மன்னர் சிரித்துவிட்டு எலியைக் கொள்ள வாள் பயிற்சி எதற்கு? அரண்மனைப் பூனையைக் கொண்டு வந்தாலே போதுமே! என்றார். உடனே அரண்மனை பூனை வரவழைக்கப்பட்டது.

அந்தப் பூனையும் எலியை வேட்டையாட முயன்றது. ஆனாலும் அந்த எலி எளிதாக அதனிடம் இருந்து தப்பித்து, தப்பித்துச் சென்றது. மீண்டும் இளவரசருடன் அரசரும் சோகமானார். அப்போது மந்திரி வந்தார். என்ன அரசே.. நீங்களும் இளவரசரும் சோகமாக இருக்கிறீர்கள்? என்றார். அதற்கு அரசர் நடந்ததை கூறினார். நம் நாட்டு பூனைகள் எதற்கு உதவாது. ஜப்பான், பாரசீகம் போன்ற நாடுகளில் உள்ள பூனைகள் புலி உயரம் உள்ளன. எனவே அங்கிருந்து வரவழைப்போம் என்றார் மந்திரி. அதேபோல் அந்நாடுகளில் இருந்து பூனைகள் வரவழைக்கப்பட்டன.

ஆனால் அவற்றிடமிருந்தும் அந்த எலி சாமர்த்தியமாகத் தப்பித்துச் சென்று வளைக்குள் புகுந்தது. எலிக்கு இவ்வளவு திறமையா! என அனைவரும் வியந்து கொண்டிருக்கையில், அங்கே இருந்த அரண்மனைக் காவலன் இளவரசே! இந்த எலிக்குப் போய் ஜப்பான், பாரசீகப் பூனையெல்லாம் எதுக்கு? எங்க வீட்டுப் பூனையே போதும் என்றான். மன்னருக்கு நம்பிக்கை ஏற்படவில்லை. என்ன.. அரண்மனையில் வளர்ந்து வரும் பூனையால் முடியாதது சாதாரண பூனையால் முடியுமா? என்றார்.

உடனே இளவரசர் மறித்து சரி... எடுத்து வா உனது பூனையை என்றார். வீட்டிற்குச் சென்று தனது பூனையைக் கொண்டு வந்தான் காவலன். அந்தப் பூனை அந்த எலியை ஒரே தாவலில் லபக் என்று கவ்விச்சென்றது. இதனைப் பார்த்த இளவரசருக்குப் பெருத்த ஆச்சரியம். என்ன இது அதியசம்! ஜப்பான், பாரசீக, அரண்மனையில் வளர்ந்த பூனைகளிடம் இல்லாத திறமை எப்படி இந்தச் சாதாரண பூனைக்கு ஏற்பட்டது? எப்படி சாத்தியம்? என்ன பயிற்சி கொடுத்துப் பூனையை வளர்க்கிறீர்கள்? என்று வியந்தவாறே கேள்விகளை கேட்க தொடங்கினார். அதற்குக் காவலாளி பெரிதாக என் பூனைக்குத் திறமையோ, பயிற்சிகளோ எதுவும் இல்லை இளவரசே...என் பூனைக்கு ரொம்பப் பசி அவ்வளவுதான் என்றான்.

உடனே இளவரசருக்கு சுரீர் என்றது. அரண்மனைக்குள் பூனைகள் நன்கு தின்று கொழுத்திருப்பதால் அவற்றுக்கு பசி என்பதே என்னவென்று தெரிய வாய்பில்லை, எனவே அவற்றால் எலியை எப்படி பிடிக்கமுடியும்? ஆக எந்த ஒரு வேலையையும் வெற்றிகரமாகச் செய்து முடிக்க வேண்டுமென்றால், முதலில் அதனைப் பற்றிய பசி அல்லது தேவை இருக்க வேண்டும். அப்போதுதான் அந்தக் காரியத்தை கச்சிதமாக செய்து முடிக்க முடியும்

இன்றைய செய்திகள்

13.02.2026

⭐தொழில் வளர்ச்சியில் தமிழகம் முன்னிலையில் உள்ளது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

⭐AI தொழில்நுட்பத்தின் தாக்கத்தால்இந்தியாவின் முன்னணி IT நிறுவனங்களின் பங்குகள் கடும் வீழ்ச்சி

⭐வருகிற 15-ந்தேதி உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி... தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு

⭐ எகிப்து நாட்டில் மன்னர்களின் கல்லறைகளில் நடத்தப்பட்ட ஆய்வில், 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த தமிழ்-பிராமி கல்வெட்டுக்கள் கண்டுபிடிப்பு.

⭐9801 பேருக்கு பணி நியமன ஆணைகள் - முதலமைச்சர் இன்று வழங்குகிறார்.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀சேப்பாக்கம் மைதானத்தில் 3-வது லீக் ஆட்டம்: நெதர்லாந்து-அமெரிக்கா இன்று மோதல்

Today's Headlines

⭐ Chief Minister M.K. Stalin said that Tamil Nadu is leading in industrial development.

⭐ Shares of India's leading IT companies have fallen sharply due to the impact of AI technologies

⭐The Meteorological Department has announced that there is a possibility of moderate rain in Tamil Nadu due to a new low-pressure area forming on February 15th onwards.

⭐ 2000-year-old Tamil-Brahmi inscriptions discovered during a survey conducted in the tombs of kings in Egypt. 

⭐ Appointment orders for 9801 people - The Chief Minister to provide today.

 SPORTS NEWS 

🏀3rd league match at Chepauk Stadium: Netherlands-USA clash today

Covai women ICT_போதிமரம்

Thursday, February 12, 2026

Thursday, February 12, 2026

அரசு நிகழ்ச்சிகள், பள்ளிகளில் இனி ‘வந்தே மாதரம்’ பாடல் கட்டாயம்

வந்தே மாதரம்’ தேசியப் பாடலின் 6 சரணங்களும், தேசிய கீதம் ‘ஜன கண மன’ பாடல் பாடுவதற்கு முன்னதாக பாடப்பட வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

வந்தே மாதரம் பாடல் இசைக்கப்படுவதற்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. உள்துறை அமைச்சகம் ஜனவரி 28-ம் தேதி வெளியிட்ட உத்தரவில், ‘அரசு நிகழ்ச்சிகள் மற்றும் பள்ளிகளில் தேசிய கீதத்துக்கு முன்னதாக வந்தே மாதரம் பாடலின் 6 சரணங்களும் கட்டாயம் பாட அல்லது ஒலிக்கப்பட வேண்டும்.

பாடல் இசைக்கப்படும் நேரம் தோராயமாக 3 நிமிடங்கள் 10 விநாடிகள் ஆகும். குடியரசுத் தலைவர், ஆளுநர் உள்ளிட்டோர் பங்கேற்கும் அனைத்து அரசு நிகழ்ச்சிகளின் தொடக்கத்திலும், முடிவிலும் வந்தே மாதரம் பாடல் ஒலிக்கப்பட வேண்டும்.

அகில இந்திய வானொலி மற்றும் தொலைக்காட்சி மூலம் குடியரசுத் தலைவர் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவதற்கு முன்னும் பின்னும் ஒலிக்கப்பட வேண்டும். அதிகாரப்பூர்வ பதிப்பு மட்டுமே பாட அல்லது ஒலிக்கப்பட வேண்டும். தேசியப் பாடலான வந்தே மாதரம் இசைக்கப்படும் போது அனைவரும் எழுந்து நிற்க மரியாதை செலுத்த வேண்டும்’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.
Thursday, February 12, 2026

TNTET 2025 - உண்மைத்தன்மை அறியும் கருத்துருக்கள் சமர்ப்பித்தல் - New Proceedings

2025 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வு உண்மைத்தன்மை அறியும் கருத்துருக்கள் சமர்ப்பித்தல் - CEO Proceedings

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களின் ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1 மற்றும் தாள் 2 இன் உண்மைத்தன்மை அறிய பள்ளிகளில் இருந்து விண்ணப்பங்களில் கருத்துருக்கள் பெறப்பட்டு வருகின்றன. பெறப்படுகிற பெரும்பாலும் குறைபாடுகளுடன் பெறப்படுவதால் உரிய ஆவணங்கள் பெற்ற பின்னர் நடவடிக்கை மேற்கொள்வதால் கலதாமதம் தவிர்த்திட கீழ்க்கண்ட ஆவணங்கள் இரண்டு பிரதிகளாக இணைத்து கருத்துருக்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

01. தலைமை ஆசிரியரின் கடிதம்.

02.தனியரின் உறுதிமொழி சான்று.

03.ஆசிரியர் தகுதித்தேர்வு உண்மைத்தன்மை கோரும் படிவம்.

04.ஆசிரியர் தகுதித்தேர்வு சான்றிதழ்.

05.ஆசிரியர் தகுதித்தேர்வு நுழைவுச்சீட்டு நகல்(இருப்பின்).

06.தனியரின் பணிநியமன ஆணை நகல்.

மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் 2025 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் விவரங்கள் ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலரிடமிருந்து தற்போது பெறப்படவில்லை. ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் விவரங்கள் பெறப்பட்டவுடன் இவ்வலுவலகத்திலிருந்து தகவல் அளிக்கப்பட்ட பின்னர் 2025 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வு உண்மைத்தன்மை அறியும் கருத்துருக்கள் சமர்ப்பிக்குமாறு அனைத்து தலைமை ஆசிரியர்கள் மற்றும் சார்நிலை அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது
Thursday, February 12, 2026

தேர்தல் பணியிலிருந்து எவருக்கெல்லாம் விலக்கு அளிக்கப்படும்?

தேர்தல் பணியிலிருந்து எவருக்கெல்லாம் விலக்கு அளிக்கப்படும்?

⭕எஞ்சிய பணிக்காலம் 6 மாதங்கள் மட்டுமே உள்ளவர்கள்.

மேலும் கண்டறிக
கல்வி ஆலோசனை சேவை

⭕கர்ப்பிணிகள்

⭕பாலூட்டும் தாய்மார்கள்( குழந்தைக்கு ஒரு வயது வரை).

⭕மாற்று திறனாளிகள்

மற்றும்

⭕கடும் நோயுற்றவர்களுக்கு (Cancer, Dialysis)

தேர்தல் பணியிலிருந்து விதி விலக்கு அளிக்கலாம்.
Thursday, February 12, 2026

கல்வித்துறையில் மிகப்பெரிய டிஜிட்டல் புரட்சி

கல்வித்துறையில் மிகப்பெரிய டிஜிட்டல் புரட்சியாக சிபிஎஸ்இ பள்ளிகளில் + 2 விடைத்தாள் திருத்தும் பணியில் டிஜிட்டல் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது மத்திய இடைநிலைக் கல்வி வாரியம்(சிபிஎஸ்இ).இந்த புதிய நடைமுறையால்,திருத்தப் பிழைகள் குறைவதோடு ஆசிரியர்களுக்கு அலைச்சல் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.நாடு முழுவதும் சிபிஎஸ்இ பள்ளிகளில் படிக்கும் + 2 மாணவர்களுக்கு பிப்.17 ஆம் தேதி முதல் பொதுத்தேர்வு நடைபெற உள்ளது.இந்த நிலையில்,சிபிஎஸ்இ + 2 விடைத்தாள் திருத்தும் பணியில் டிஜிட்டல் முறையை ("ஆன்-ஸ்கிரீன் மார்க்கிங்") அறிமுகப்படுத்தியுள்ளது.இதன் கீழ் விடைத்தாள்கள் கணினியில் டிஜிட்டல் முறையில் மதிப்பீடு செய்யப்படும் என மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் தெரிவித்துள்ளது.*

*2026 ஆம் ஆண்டு + 2 தேர்வுக்கான விடைத்தாள்களை கணினி திரையில் பார்த்து திருத்தி மதிப்பெண் வழங்கும் ("ஆன்-ஸ்கிரீன் மார்க்கிங்") எனும் புதிய டிஜிட்டல் முறையை வசதி அறிமுகப்படுத்தவுள்ளது.அதாவது,மாணவர்களின் விடைத்தாள்கள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்படும்.அதனை ஆசிரியர்கள் கணினி திரை வாயிலாக மதிப்பீடு செய்து மதிப்பெண்களை வழங்குவார்கள்.இந்த நடைமுறை 2026 பிப்ரவரி மாதத்தில் நடைபெறவுள்ள + 2 பொதுத்தேர்வுக்கு அமல்படுத்தப்படுகிறது.இந்த புதிய நடைமுறையால்,திருத்தப் பிழைகள் குறைவதோடு ஆசிரியர்களுக்கு அலைச்சல் இருக்காது.மொத்தப் பிழைகளை நீக்குதல்,விரைவான மதிப்பீட்டை செயல்படுத்துதல் (ம) ஆசிரியர்கள் தங்கள் பள்ளிகளிலேயே தங்கி தங்கள் வழக்கமான பணிகளைத் தொடர அனுமதித்தல் போன்றவை இதன் நோக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.*

மேலும்,டிஜிட்டல் மதிப்பீட்டு முறை,தேர்வு முடிவுகள் வெளியானதற்குப் பிந்தைய மதிப்பெண் சரிபார்ப்புக்கான தேவையை நீக்கும் என்றும்,அனைத்து பள்ளிகளின் ஆசிரியர்களையும் மதிப்பீட்டுச் செயல்முறையில் பங்கேற்பதற்கு அனுமதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.விடைத்தாள் டிஜிட்டல் மதிப்பீடு செய்யும் பணியில் சிபிஎஸ்இ வாரியத்துடன் இணைக்கப்பட்ட அனைத்து பள்ளி ஆசிரியர்களும் ஈடுபடுவார்கள்.விடைத்தாள் மதிப்பீட்டிற்கேற்ப,பள்ளிகளில் கணினிகள் வசதிகள் குறித்த விவரக்குறிப்புகள்,நம்பகமான இணையதள இணைப்பு வசதிகள் (ம) தடையற்ற மின்சாரம் ஆகியவற்றைக் கொண்ட கணினி ஆய்வகங்கள் இருப்பதை உறுதி செய்யுமாறும் பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.மேலும், + 2 விடைத்தாள் திருத்தும் 'ஆன்-ஸ்கிரீன் மார்க்கிங்' பணிக்கு + 1 (ம) + 2 வகுப்பு ஆசிரியர்களே தேர்வு செய்யப்பட உள்ளனர்.எனவே + 1 (ம) + 2 வகுப்பு கற்பிக்கும் பள்ளி ஆசிரியர்களின் முழு விவரங்களையும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யுமாறு சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.*

வாரியத்தின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றாதது "மதிப்பீட்டு செயல்முறையை சீர்குலைக்கும் முயற்சியாகக் கருதப்படும்" என்றும் பள்ளியின் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படாது என்று இரண்டாவது சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த டிஜிட்டல் மதிப்பிட்டு முறை குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் அளிக்க சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளது.இதனால் ஆசிரியர்கள் இந்த முறை குறித்து நன்கு அறிந்துகொள்ள முடியும்.புரிதலை மேம்படுத்த பயிற்சித் திட்டங்கள் (ம) அறிவுறுத்தல் வீடியோக்களும் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆனால்,பத்தாம் ஆம் வகுப்பு உள்ளிட்ட பிற வகுப்புகளுக்கான மாணவர்களின் விடைத்தாள்கள் திருத்தும் பணிகளில் பழைய நேரடி முறையே தொடரும் என்று தெரிவித்துள்ளது.*

மேலும், இந்த ஆண்டு, சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தங்கள் வாரியத் தேர்வை 2 முறை எழுதும் வாய்ப்பை வழங்கவும் தயாராகி வருகிறது சிபிஎஸ்இ.இதனால் மாணவர்கள் தங்கள் செயல்திறனை மேம்படுத்த 3 பாடங்களில் மீண்டும் தேர்வு எழுதலாம்,அதே நேரத்தில் முதல் தேர்வுகள் கட்டாயமாக இருக்கும்.*

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் தேர்வுக் கட்டுப்பாட்டாளர் சன்யம் பரத்வாஜ் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள சுற்றறிக்கை.
Thursday, February 12, 2026

12.02.2026(வியாழக்கிழமை) - இன்றைய செய்திகள்

🌹அனைத்தும் கிடைத்தால் அலட்சியம் வந்து விடும் என்பதால் தான் சிலவற்றைக் கிடைக்காத வரிசையிலே வைத்திருக்கிறது காலம்.!

🌹🌹புரிந்தும் புரியாத மாதிரி இருப்பவர்களிடம் நீங்கள் தெரிந்தும் தெரியாத மாதிரி இருக்க பழகிக் கொள்ளவேண்டும்.!!

🌹🌹🌹வாய் தவறி விழும் பேச்சுக்கள்...

கை தவறி விழும் கண்ணாடியை விட கூர்மையானது...

யாரிடம் பேசுகிறோம் என்பதை விட என்ன பேசுகிறோம் என்பதை அறிந்து கொண்டு பேசுங்கள்.!!!

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

📘📕100 days challenge - பள்ளி மாணவர்களின் அடைவுத் திறனை வட்டார வள மைய ஆசிரியப் பயிற்றுநர்கள் வாயிலாக 18.02.2026 மற்றும் 20.02.2026 ஆகிய நாட்களில் சோதித்து அறிதல் - அறிவுரைகள் வழங்குதல் - DEE Proceedings வெளியீடு .

📘📕3-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு FLS - மாதிரி வினாத்தாள்கள் வழங்குதல் மற்றும் பயிற்சி அளித்தல் - DEE Proceedings வெளியீடு.

📘📕TET தேர்ச்சி பெற்ற (23.08.2010க்கு பிந்தைய) அரசு உதவி பள்ளி ஆசிரியர்களுக்கு பணிப்பலன்கள் வழங்க அரசாணை கோரி பள்ளிக்கல்வி இயக்குநரை தேசிய ஆசிரியர் சங்கம் நேரில் சந்தித்து மனு

📘📕மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு தேர்ந்தோர் பட்டியல் வெளியீடு.

📘📕தூய்மைப் பணியாளர்களின் குழந்தைகளுக்கு புதிய உயர்கல்வி உதவித்தொகை திட்டம் - முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

📘📕"மலேசியாவுக்கு கல்வி சுற்றுலா செல்லக்கூடிய மாணவர்கள் தனியாக இருக்கிறார்களே என்று பெற்றோர்கள் கவலைப்பட வேண்டாம். நான்கு நாளைக்கு அவர்களுக்கு நான் தான் அப்பா. நான் தான் அம்மா”

என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

📘📕அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் பணி நியமனம் தொடர்பாக எழுந்த புகார் குறித்து நடக்கும் விசாரணைக்கு தேனி மாவட்ட டி.இ.ஓ., நாகலட்சுமி ஆஜராக தொடக்கக் கல்வி துணை இயக்குநர் சுப்பாராவ் உத்தரவிட்டுள்ளார்.

📘📕மேல்நிலை இரண்டாமாண்டு அக மதிப்பீட்டிற்கான மதிப்பெண்கள் பட்டியல்கள் பதிவிறக்கம் செய்வது தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது

📘📕பள்ளி ஆசிரியை ஒருவரிடம் முறையான விசாரணையின்றி ₹74 லட்சம் ஊதியத்தை திரும்பப் பிடிக்க (Recovery) பிறப்பிக்கப்பட்ட உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது

📘📕தற்போது அமலில் உள்ள வருமான வரிச் சட்டம் 1961க்கு பதிலாக புதிய வருமான வரிச் சட்டம் 2025 வரும் ஏப்ரல் 1ம் தேதி அமலுக்கு வர உள்ளது. இதற்கான வருமான வரி வரைவு விதிகளை மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ளது.

📘📕பிறப்புச் சான்றிதழில் இதுவரை பெயர் சேர்க்காதவர்கள், 26.09.2026 வரை தங்கள் குழந்தைகளின் பெயரை சேர்க்க சிறப்பு ஆணை வழங்கி அனுமதியளித்து தமிழ்நாடு அரசு சுகாதாரத்துறை உத்தரவு

📘📕PGTRB பணிநியமன ஆணை வழங்கும் விழா 13.02.2026 அன்று நடைபெறுதல் தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு 📘📕தமிழக அரசு எச்சரிக்கை

"அரசு ஊழியர்கள் இன்று பணிக்கு வராவிட்டால் ஊதியம் பிடித்தம்"

மத்திய அரசை கண்டித்து இன்று தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம்

அறிவித்துள்ள நிலையில் தமிழக அரசு எச்சரிக்கை 📘📕12ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துவிட்டு சென்னை அண்ணா நகரில் முடிமாற்று அறுவை சிகிச்சை செய்ததாக போலி மருத்துவர்கள் 3 பேர் கைது

கைதானவர்களில் இருவர் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனவும், ஒருவர் வேலூரைச் சேர்ந்தவர் எனவும் தகவல்

📘📕SIR - விண்ணப்பங்களின் பரிசீலனை நிறைவு

"தமிழகத்தில் SIRக்கு பின் வாக்காளர் பட்டியலில் இருந்து 97.37 லட்சம் பேர் நீக்கப்பட்டிருந்தனர்

வாக்காளர் பட்டியலில் திருத்தம் கோரி 34.75 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர்

வாக்காளர் பட்டியலில் திருத்தம் கோரும் விண்ணப்பங்களை வாக்காளர் பதிவு அலுவலர்கள் மூலம் பரிசீலிக்கும் பணி நிறைவு

சுமார் 44 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் மீண்டும் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கவில்லை. வரும் 17ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகிறது"

-தேர்தல் ஆணையம்

📘📕ராகுல்காந்தியை சந்தித்து மகனின் திருமணத்திற்கு அழைத்த சச்சின்

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தியை சந்தித்து மகன் அர்ஜுனின் திருமண அழைப்பிதழை வழங்கினார் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின்

📘📕வரும் 22ம் தேதி முதல் கூட்டணிக் கட்சிகளுடன் திமுக தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை

தொகுதிப் பங்கீடுக் குழுவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் அமைப்பார் என திமுக தலைமை அறிவிப்பு

📘📕கால் வலி காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அமைச்சர் துரைமுருகன் அனுமதி

அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், சிறிது நாட்கள் ஓய்வில் இருக்க அறிவுறுத்தியுள்ளனர்

📘📕CM ரங்கசாமியை முற்றுகையிட முயன்ற அரசு ஊழியர்கள்

பணி நிரந்தரம் செய்யக்கோரி புதுச்சேரியில் தற்காலிக அரசு ஊழியர்கள் போராட்டம்

முதல்வர் ரங்கசாமியை முற்றுகையிட முயன்ற ஊழியர்களால் பரபரப்பு - தடுத்து நிறுத்த முயன்ற போலீசார் - ஊழியர்கள் இடையே தள்ளுமுள்ளு

📘📕"தேமுதிகவிடம் பேசவில்லை"

"சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து தேமுதிகவிடம் பேசவில்லை.

கூட்டணி ஆட்சி போன்ற எந்த டிமாண்டும் பாஜகவிடம் கிடையாது. தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்பதே எங்கள் லட்சியம்"

-தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்

📘📕குடியரசு தலைவர், ஆளுநர் நிகழ்வுகளில் இனி 3.10 நிமிடங்களை கொண்ட வந்தே மாதரம் பாடலை முழுமையாக பாட வேண்டும். ஆளுநர் உரைக்கு முன்னும் பின்னும் வந்தே மாதரம் கட்டாயம்"

-மத்திய அரசு

📘📕ஆட்சியில் பங்கு - ஒத்துவராது"

"ஆட்சியில் பங்கு என்பது தமிழகத்திற்கு ஒத்துவராது, திமுக கூட்டணிக்குள் எந்த குழப்பமும் இல்லை

திமுக கூட்டணியில் காங்கிரஸ் தொடர்ந்து இருக்கும், ராகுல் காந்தி அரசியலைத் தாண்டி என்னை சகோதரராக பார்க்கிறார்"

-முதல்வர் ஸ்டாலின்

விஜய் அறிவிப்பு

தவெகவில் கூடுதலாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு, நிர்வாகிகள் நியமனம். தவெகவில் நிர்வாக ரீதியாக ஏற்கனவே 128 மாவட்டங்கள் உள்ள நிலையில் மேலும் 4 மாவட்டங்கள் உருவாக்கம்

புதிய நிர்வாகிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க தவெக தலைவர் விஜய் வேண்டுகோள்

📘📕மகாராஷ்டிராவில் பள்ளி மைதானத்தில் அவசர அவசரமாக தரையிறங்கிய ஹெலிகாப்டரால் பரபரப்பு

வானில் பறந்து கொண்டிருந்தபோது ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறின் காரணமாகத் தரையிறக்கப்பட்டதாகத் தகவல்

📘📕இந்த 5 ஆண்டு காலத்தில் திமுக நிறைவேற்றிய திட்டங்கள்தான் அடுத்த 50 ஆண்டு காலத்திற்கு தமிழ்நாட்டை வழிநடத்தப்போகும் ப்ளூபிரிண்ட் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

📘📕தெளிவுபடுத்திவிட்டோம்..''

“அதிமுகவிற்கும் டிடிவி தினகரனுக்கும் கருத்து வேறுபாடு இல்லை, வாக்குகள் சிதறாமல் இருப்பதற்கு கூட்டணி அமைக்கின்றோம், ஓபிஎஸ், சசிகலா குறித்து ஏற்கனவே தெளிவுபடுத்திவிட்டோம்''- ஈபிஎஸ்

📘📕சுற்றுலாத்துறையில் உதவி சுற்றுலா அலுவலர் நிலை-2 பதவிக்கு தேர்வு செய்யப்பட்ட 9 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் அமைச்சர் இராஜேந்திரன்

📘📕கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் காவல் துணைஆணையர் அலுவலகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

அன்பை கொடுப்பதிலும் பெறுவதிலும் தான் இன்பம் இருக்கிறது. என்றும் அன்புடன்

சு.வேலுமணி M.A.,B.Ed.,

தலைமையாசிரியர், மாவட்டச் செயலாளர்

&தகவல் தொழில் நுட்ப அணியின் மாநில அமைப்பாளர்,

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,

கரூர் மாவட்டம்.

அலைபேசி:9003599926
Thursday, February 12, 2026

100 days challenge - பள்ளி மாணவர்களின் அடைவுத் திறனை வட்டார வள மைய ஆசிரியப் பயிற்றுநர்கள் வாயிலாக 18.02.2026 மற்றும் 20.02.2026 ஆகிய நாட்களில் சோதித்து அறிதல் - அறிவுரைகள் வழங்குதல் - DEE Proceedings

தொடக்கக் கல்வி -100 days challenge (Spell 2) - 1 முதல் 5ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களை சார்ந்த பள்ளிகளின் ஆசிரியர்கள் 100 நாட்களில் 100% வாசித்தல் மற்றும் கணித அடிப்படைத் திறனில் தயார்படுத்தி முன்னேற்றம் அடையச் செய்தல் - மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் வாயிலாக உருவாக்கம் செய்யப்பட்ட மதிப்பீட்டு வினாத்தாளைக் (Assessment Tool) கொண்டு மாணவர் கற்றல் அடைவை சோதித்தறிதல் -பள்ளி மாணவர்களின் அடைவுத் திறனை வட்டார வள மைய ஆசிரியப் பயிற்றுநர்கள் வாயிலாக 18.02.2026 மற்றும் 20.02.2026 ஆகிய நாட்களில் சோதித்து அறிதல் - அறிவுரைகள் வழங்குதல் - தொடர்பாக

100 Days Challenge 18 & 20.2.2026 - DEE Proceedings - Download here
Thursday, February 12, 2026

ஆசிரியர் பணி நியமன புகாரில் பி.இ.ஓ.,க்களிடம் விசாரணை

தேனி மாவட்டத்தில் அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் பணி நியமனம் தொடர்பாக வட்டார கல்வி அலுவலர்கள் (பி.இ.ஓ.,)களிடம் நேற்று விசாரணை நடந்தது. இன்றும் டி.இ.ஓ., நாகலட்சுமி, பி.இ.ஓ.,க்களிடம் விசாரணை தொடர உள்ளது. தேனி மாவட்டத்தில் கடந்த ஆண்டுகளில் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகளில் கூடுதலாக ஆசிரியர்கள் நியமனம், பள்ளி நிர்வாகங்களில் அதிகாரிகள் தலையீடு உள்ளதாக கல்வித்துறைக்கு புகார்கள் சென்றன.

இதில் தொடக்கல்வி துணை இயக்குநர் சுப்பாராவ் தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டது. தொடக்க கல்வி டி.இ.ஓ., (மாவட்ட அலுவலர்) நாகலட்சுமி பொறுப்பேற்றது முதல் நடைபெற்ற பணி நியமன கோப்புகளுடன் விசாரணையில் பங்கேற்க டி.இ.ஓ., பி.இ.ஓ.,க்கள், அலுவலக பணியாளர்களுக்கு கல்வித்துறை சார்பில் உத்தரவிடப்பட்டது. விசாரணை நேற்று அல்லிநகரம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள இடைநிலைக்கல்வி டி.இ.ஓ.,அலுவலக மாடியில் துணை இயக்குனர் சுப்பாராவ் தலைமையில் நடந்தது. பி.இ.ஓ.,க்கள், அலுவலக கண்காணிப்பாளர்கள், எழுத்தர்களிடம் விசாரணை நடந்தது. இரண்டாவது நாளான இன்றும் பணிநியமன கோப்புகளுடன் விசாரணைக்கு ஆஜராக டி.இ.ஓ.,நாகலட்சுமி, பி.இ.ஓ.,க்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Thursday, February 12, 2026

HSHM TO PG CASE UPDATE

HSHM TO PG CASE:

UPDATE TIME 01.17 PM

வழக்கு இன்று ஒரு மணி நேரம் நடைபெற்றது

12.05 to 1.05 (One hour)

மீண்டும் இவ்வழக்கின் விசாரணை இன்று மதியம் இரண்டு மணிக்கு தொடங்க உள்ளது

*ஒரு ஆசிரியர் உயர்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியராக பதவி உயர்வு பெறுவதற்கு உரிய Feeder Category ல் PG ASSISTANT உண்டா என்ற கேள்வியை நீதியரசர் திரு மகாதேவன் கேட்ட பொழுது* *இல்லை* *என்ற பதிலை* *திரு ப சிதம்பரம் அவர்கள் அளித்துள்ளார்.*

Rule 39(A)(1) பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது.

தீர்ப்பு யாருடைய பக்கம் சாதகமாக அமைந்தாலும் கூட, வழக்கறிஞர்

திரு ப சிதம்பரம் அவர்கள்,ஒரு வழக்கறிஞராக மிகச்சிறப்பாக தன்னுடைய தரப்பு ஆசிரியர்களுக்காக வாதிட்டார் என்பதை யாரும் மறுக்க முடியாது.

முதுகலை ஆசிரியர் நிலையிலிருந்து உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெறுவது என்பது *மரபாகப் பின்பற்றப் படுகிறதே தவிர Rule ல் இல்லை என்பது தற்பொழுது நடந்த வாதங்களின் மூலம் மிகத்தெளிவாக நீதியரசர்கள் உறுதி செய்துள்ளனர்.*

HSHM ஆக பதவி உயர்வு பெறுவதற்குரிய Feeder Category ல்

BT ASSISTANT மட்டுமே உள்ளனர் PG ASSISTANT இல்லை என்பதையும் நீதியரசர்கள் உறுதி செய்துள்ளனர்.

PG ASSISTANT TO HIGHER SECONDARY HM க்கும் செல்ல முடியும்; Same time

PG TO HSHM க்கும் செல்ல முடியும்

என்ற கருத்தை நீதியரசர்கள் ஏற்க மறுத்துள்ளனர்.

PG TO HSHM LIEN CUT ஆகும் என்பதே நீதியரசர்களின் கருத்தாக வாதங்களில் அமைந்துள்ளதை அறிய முடிகிறது.

All the arguments in HSHM TO PG Case in favour of BT ASSISTANT not in favour of HSHM✅✅✅

*இந்த வழக்கின் தீர்ப்பும் வந்த பிறகு, பதவி உயர்வு கலந்தாய்வை நடத்தாமல் இருப்பதற்கு அரசிடம் வேறு எந்த காரணங்களும் இல்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை*
Thursday, February 12, 2026

மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி அலுவலர்களுக்கு பயிற்சி துவக்கம்

சட்டசபை தேர்தலுக்கு பின் 2 கட்டங்களாக மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் துவங்குவதற்கு மாநிலம் முழுவதும் மாவட்ட அலுவலர்களுக்கு பயிற்சி துவக்கப்பட்டு உள்ளது. நாட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிகள் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. சட்டசபை தேர்தல் நடக்காத பிற மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் 2026 ஏப்ரலில் துவங்கி 2027 மார்ச்1க்குள் இப்பணிகளை முடிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

கேரளா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டசபை தேர்தல் முடிந்த பின் ஆகஸ்டில் இப்பணிகள் துவங்க உள்ளன. முதற்கட்டமாக வீடுகளின் பட்டியல், வீடுகளில் உள்ள வசதிகளின் விபரங்களையும், இரண்டாவது கட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிகளும் நடக்க உள்ளன. 'டிஜிட்டல்' பணிகள்: முதல் முறையாக டிஜிட்டல் முறை யில் தரவுகள் பதிவு செய்யப்பட உள்ளன. இதற்காக பிரத்யேக அலைபேசி செயலிகள் உருவாக்கப்பட்டு ஒரு மேற்பார்வையாளர், 6 களப்பணியாளர்கள் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது. வீடுகள், வீட்டுவசதி கணக்கெடுப்பில் ஒரு குழு 400 வீடுகள் என்ற கணக்கில் தரவுகளை சேகரிக்க உள்ளனர். கணக்கெடுக்கும் பகுதியின் வரைபடங்களும் பதிவேற்றப்படுகின்றன. இத்தரவுகள் மக்கள் தொகை மேலாண்மை, கண்காணிப்பு அமைப்பு https://cms.tn.gov.in என்ற இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். மாவட்டந்தோறும் கணக்கெடுப்பு கண்காணிப்பு அலுவலர்களாக கலெக்டர், ஆர்.டி.ஓ.,க்கள் பணிநிலை அலுவலர்கள், துணை கண்காணிப்பு அலுவலர்களாகவும், தாசில்தார்கள் கண்காணிப்பு மேற்பார்வை அலுவலர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சுய பதிவு, டிஜிட்டல் இரண்டாம் கட்டமாக மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணியில் முதன் முறையாக சுய பதிவு மூலம் பாலினம், வயது உட்பட 32 வினாக்களுக்கு பொதுமக்களே நேரடியாக விடையளிக்க வேண்டும். இது தொடர்பாக திண்டுக்கல்லில் நடந்த முதல் ஆயத்த கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரிகள் கூறியதாவது: சுயபதிவு முறையும், ஜாதிவாரி கணக்கெடுப்புத் தரவுகளும் ஏற்படுத்தப்படும். சுயப்பதிவு செய்திருந்தாலும் கணக்கெடுப்பாளர் தரவுகளை பதிவு செய்ய வருவார். டிஜிட்டல் தரவுகள், வரைபடங்களாக பதிவேற்றப்படுவதால் மிகத்துல்லிய விபரங்கள் கிடைக்கும். பயிற்சிகள் துவங்கி உள்ளன. தேர்தலுக்கு பின் ஆகஸ்டில் இப்பணிகள் துவங்கும் என்றனர்.
Thursday, February 12, 2026

PGTRB பணிநியமன ஆணை வழங்கும் விழா 13.02.2026 அன்று நடைபெறுதல் தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!



PGTRB பணிநியமன ஆணை வழங்கும் விழா 13.02.2026 அன்று நடைபெறுதல் தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்


DSE - CM Function District Allocation Order Proceedings - Download here
Thursday, February 12, 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 12.02.2026

சார்லஸ் டார்வின்



 






திருக்குறள்: 

குறள் 303: 

மறத்தல் வெகுளியை யார்மாட்டுந் தீய 
பிறத்தல் அதனான் வரும்.     

விளக்க உரை: 

யாரிடத்திலும் சினம் கொள்ளாமல் அதை மறந்து விட வேண்டும், தீமையான விளைவுகள் அச் சினத்தாலேயே ஏற்படும்.

பழமொழி :

Time respect those who value it.        

நேரத்தை மதிப்பவர்களை நேரமும் மதிக்கும்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. உலகில் உயர்வானது அனைத்து உயிர்களிடமும் நாம் காட்டும் அன்பும் பரிவும் தான்.

2. எனவே அனைத்து உயிர்களிடமும் அன்பு காட்டுவோம்.

பொன்மொழி : 

கடுமையான உழைப்பைத் தவிர வெற்றிக்கு இரகசியம் வேறு இல்லை -  டர்னர்

பொது அறிவு : 

01. தலையில் இதயம் கொண்ட விலங்கு எது?

           இறால் -Shrimp

02. உலகின் மிக நீளமான கடற்கரையாக கருதப்படுகிறது,

  பிரயா டோ காசினோ-பிரேசில்

  Praia do Cassino-Brazil

English words :

surge –a  sudden strong movement of people or things in a particular direction.

பெரும் எண்ணிக்கையிலான ஆட்களின் அல்லது பொருள்களின் குறிப்பிட்ட திசையிலான இயக்கம்

தமிழ் இலக்கணம்: 

 நாம் எழுதும்போது கமா, முற்றுப் புள்ளி, கால் புள்ளி, அரைப் புள்ளி போன்றவற்றை அவ்வப்போது பயன்படுத்துவது உண்டு. இதை நிறுத்தக்குறிகள் / நிறுத்தற்குறிகள் என்று நாம் அழைப்பது உண்டு. இன்று  
நிறுத்தக்குறிகள் / நிறுத்தற்குறிகள்
இவற்றில் எது சரி ? என்று 
பார்ப்போம் வாருங்கள்

நிறுத்தக்குறிகள் = நிறுத்தம் + குறிகள்
என்று பிரிக்கலாம். நிறுத்தம் என்றால் சென்று கொண்டிருக்கும் ஒன்றை நிறுத்துவது ஆகும்

நிறுத்தற்குறிகள் = நிறுத்தல் + குறிகள் என்று பிரிக்கலாம்
நிறுத்தல் என்றால் ஒரு பொருளை நிறுப்பது என்று பொருள் படும். 
எனவே நிறுத்தக்குறிகள் என்பதே சரியானது.

அறிவியல் களஞ்சியம் :

பார்சனின் நோய் (Parkinson's disease) பரவலில் குடலில் உள்ள நோய் எதிர்ப்பு செல்களின் பங்கு முக்கியமானது என கண்டறியப்பட்டுள்ளது. மேலும், பல் எனாமலை மீண்டும் உருவாக்கும் புதிய ஜெல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி 12

டார்வின் நாள் - darwin day

டார்வின் நாள் (Darwin Day) என்பது ஒவ்வோர் ஆண்டும் பெப்ரவரி 12 ஆம் நாளன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளிலேயே 1809 ஆம் ஆண்டில் பரிணாமத் தத்துவத்தை உலகுக்கு அளித்த சார்ல்ஸ் டார்வின் பிறந்தார். அறிவியலையும் அறிவியலை மேம்படுத்தவும் உதவிய டார்வினின் பணிகளை இந்நாளில் நினைவு கூaருகிறார்கள்.

நீதிக்கதை

 ஓநாயும் ஆட்டுக்குட்டியும்


ஒரு நாள் ஓநாய் ஒன்று அதிகமான தாகத்துடனும், பசியுடனும் தவித்துக் கொண்டு இருந்தது. அதனால் அது தண்ணீர் குடிக்க ஒரு ஓடைக்குச் சென்றது. சிறிது தூரத்தில் ஒரு ஆட்டுக்குட்டி தண்ணீர் குடித்துக் கொண்டிருந்தது. அதனை கண்டு ஓநாய்க்கு கோபம் வந்தது. அது ஆட்டுக் குட்டியைப் பார்த்து டேய் முட்டாள்! நான் தண்ணீர் குடித்துக் கொண்டிருப்பதைப் பார்க்கவில்லையா! ஓடையைக் கலக்குகிறாயே என்றது. ஆட்டுக்குட்டி மிகுந்த பயத்துடன் நான் உங்களுக்குக் கீழ்ப் பாகத்தில் உள்ள தண்ணீர்ரைக் குடிக்கிறேன். நீங்களோ மேல் பாகத்தில் உள்ள தண்ணீர்ரைக் குடிக்கிறீர்கள். அப்படியிருக்க தண்ணீர் எப்படி கலங்கும் என்றது. 

ஆறு மாதத்திற்கு முன்னால் உன் தந்தை இப்படித்தான் என்னிடம் வாயாடினார். வாயாடியதற்காக அவருடைய தோல் அன்று உரிக்கப்பட்டது. அது போல் உன் தோலையும் உரித்தால் தான் நீ வாயாடுவதை நிறுத்துவாய் என்று கோபமாகச் சொல்லியது ஓநாய். ஆட்டுக்குட்டியோ மிகவும் பயந்தது. ஐயா! நான் சொல்வதை நம்புங்கள். நான் பிறந்து இன்னும் ஆறு மாதம் கூட ஆகவில்லை என்று மிகப் பணிவாகச் சொல்லியது. 

ஓநாய் கோபமாகப் பற்களைக் கடித்துக் கொண்டு எங்கள் இனத்தாரிடம் விரோதம் காட்டுவதே உங்கள் இனத்தாருக்கு வழக்கமாகி விட்டது. இப்போது நீ உன் முன்னோர்கள் செய்த கொடுமைகளுக்கு எல்லாம் சேர்த்து தண்டனை அடைந்தே தீர வேண்டும் என்று சொல்லிக் கொண்டே ஆட்டுக் குட்டியின் மீது பாய்ந்து ஆட்டுக்குட்டியைக் கொன்றுத் தின்றது ஓநாய். 


நீதி :

கெட்டவர்களிடம் பேசாமல் இருப்பது தான் நல்லது.

இன்றைய செய்திகள்

12.02.2026

⭐ஊழலை ஒழிப்பதில் பிற நாடுகளை விட இந்தியா மிக பின்தங்கியுள்ளதாக குளோபல் டிரான்ஸ்பரன்சி வெளியிட்டுள்ள அறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது.

⭐பிப்ரவரி 22 ல் TNPSC குரூப்-  2 க்கான ஹால் டிக்கெட் தகவல் வெளியிடப்படும்.

⭐ஈரானில் விலைவாசி உயர்வு மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக அரசுக்கும் மக்களுக்கும் இடையே கடும் மோதல் நிலவுகிறது

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀10-வது டி20 உலகக் கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் கடந்த 7-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில்  24 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 18 ரன்கள் மட்டுமே அடித்து தோல்வி அடைந்தது.

🏀இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) வெளியிட்ட 2025-26ஆம் ஆண்டிற்கான வீரர்களின் வருடாந்திர ஒப்பந்தப் பட்டியலில், முகமது ஷமி மற்றும் இஷான் கிஷன் உள்ளிட்ட 5 முக்கிய வீரர்கள் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.

Today's Headlines

⭐A report released by Global Transparency has revealed that India lags far behind other countries in eradicating corruption.

⭐Hall ticket information for TNPSC Group-2 will be released on February 22.

⭐In Iran, there is a sharp conflict between the government and the people due to rising prices and economic crisis.

 *SPORTS NEWS*

🏀The 10th T20 World Cup series is being played in India and Sri Lanka starting from the 7th. Chasing a target of 24 runs, Afghanistan lost by just 18 runs.

🏀In the annual contract list of players for 2025-26 released by the Board of Control for Cricket in India (BCCI), 5 key players, including Mohammed Shami and Ishan Kishan, have been abruptly removed.

Covai women ICT_போதிமரம்