Breaking

Friday, February 6, 2026

Friday, February 06, 2026

உலகின் சிறந்த ஆசிரியர் - இந்தியாவைச் சேர்ந்த ஆசிரியர் தேர்வு - 1 மில்லியன் டாலர் பரிசு!

இந்தியாவை சேர்ந்த ரூபிள் நாகி என்பவர், இந்த ஆண்டின் சிறந்த ஆசிரியர் பரிசிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் இவருக்கு, 1 மில்லியன் டாலர் பரிசுத் தொகையைத் துபாய் இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் வழங்கியுள்ளார்.

உலக அரசாங்க உச்சி மாநாடு துபாயில், நவம்பர் 3 ஆம் தேதி முதல் 5 ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த மாநாட்டில், ஆசிரியர்களுக்கான மிக உயரிய விருதாக கருதப்படும் “உலகின் சிறந்த ஆசிரியர் பரிசு” இந்தியாவைச் சேர்ந்த ரூபிள் நாகி என்பவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இந்தப் பரிசை துபாய் இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் வழங்கினார். முன்னதாக, உலகின் சிறந்த ஆசிரியருக்கான பரிசு (Global Teachers Prize) 2015 ஆம் ஆண்டு முதல் லண்டனை தலைமையகமாகக் கொண்ட வர்க்கி அறக்கட்டளை நிறுவனத்தால் ஆண்டு தோறும் வழங்கப்படுகிறது. கல்விக்கு சிறந்த சேவை ஆற்றும் ஆசிரியர்கள் இப்பரிசிற்கு தேர்வு செய்யப்படுகின்றனர். இவர்களுக்கும் 1 மில்லியர் டாலர் பரிசுத் தொகை வழங்கப்படும்.

அந்த வகையில் இந்தாண்டு, நகர்ப்புற குடிசைப்பகுதிகளில் வாழும் குழந்தைகளிடையே கல்வி அணுகலை மாற்றியமைத்ததற்காக இந்தியாவைச் சேர்ந்த ரூபிள் நாகி என்பவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. முன்னதாக, 139 நாடுகளிலிருந்து வந்த 5,000-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், ரூபிள் நாகி தேர்வு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

யார் இந்த ரூபிள் நாகி?

ஜம்மு காஷ்மீரில் பிறந்த ரூபிள் நாகி, லண்டனில் உள்ள 'ஸ்லேட் ஸ்கூல் ஆஃப் ஃபைன் ஆர்ட்' கல்லூரியில் பயின்றவர். மேலும், இவர் ஒரு சர்வதேச அளவிலான புகழ்பெற்ற கலைஞர் மற்றும் சமூகச் செயல்பாட்டாளர் ஆவார். இவர், இந்தியாவின் குடிசைப் பகுதிகளில் உள்ள பாழடைந்த சுவர்களில் கல்வி சார்ந்த சித்திரங்களை வரைந்து, அவற்றைத் திறந்தவெளி வகுப்பறைகளாக மாற்றினார். இதன் மூலம், எளிய முறையில் வாசிப்பு, எழுதுதல் மற்றும் கணித அறிவை குழந்தைகளுக்குக் கொண்டு சென்றார்.

உலகின் சிறந்த ஆசிரியர் பரிசு

மேலும், 'ரூபிள் நாகி கலை அறக்கட்டளை' மூலம் இந்தியா முழுவதும் 800-க்கும் மேற்பட்ட கற்றல் மையங்களை உருவாக்கியுள்ளார். இந்தத் திட்டத்தின் மூலம் 1,50,000-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு வண்ணம் பூசிச் சீரமைத்ததோடு, 10 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகளுக்குக் கலை சார்ந்த கல்வியை வழங்கியுள்ளார். இவரது புதுமையான கற்பித்தல் முறையால், பின்தங்கிய பகுதிகளில் பள்ளிப் படிப்பைப் பாதியிலேயே நிறுத்தும் மாணவர்களின் எண்ணிக்கை 50 சதவீதத்திற்கும் மேல் குறைந்துள்ளது.


பரிசுத் தொகையின் திட்டம்:

இந்த பரிசுத் தொகை பெற்ற ரூபிள் நாகி பேசுகையில், தனக்குக் கிடைத்துள்ள 1 மில்லியன் டாலர் பரிசுத் தொகையை முழுவதுமாக, ஏழை எளிய இளைஞர்களுக்கு இலவசத் தொழிற்கல்வி மற்றும் டிஜிட்டல் கல்வியறிவு வழங்கும் கல்வி நிறுவனத்தை உருவாக்கப் பயன்படுத்தப் போவதாக அறிவித்துள்ளார். "கல்வி, கருணை மற்றும் தொடர் உழைப்பு ஆகியவை எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதற்கு இந்த விருது ஒரு சான்று."
Friday, February 06, 2026

TAPS ஆடும் மங்காத்தா! - செல்வ.ரஞ்சித் குமார்


TAPS ஆடும் மங்காத்தா! _✍🏼செல்வ.ரஞ்சித் குமார்_

TAPS எனும் Tamilnadu Assured Pension Scheme அறிவிப்பு வெளியான நாள் தொடங்கி அதற்குண்டான சங்கத் தலைமைகளின் வரவேற்புகள் தாண்டி பெரும்பான்மை ஊழியர்கள் மத்தியில் ஐயங்களும், கேள்விகளும், எதிர்ப்புகளும் எழுந்த வண்ணமே உள்ளன. TAPSஐ முன் வைத்து உள்ளே - வெளியே என்று ஒரு மங்காத்தா ஆட்டமே நடைபெற்று வருகிறது.

TAPSற்கு வெளியே, பெரும்பான்மை அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் விகற்பமாகக் கருதுவது சங்கங்களின் போக்கைத்தான். பழைய வரையறுக்கப்பட்ட ஓய்வூதிய உரிமைக்காகக் களம் கண்ட சங்கத் தலைமைகள், அவ்வுரிமையைத் தவிர்த்துவிட்டு, ஊதியம் & பணிக்காலத்தில் பல்வேறு படி நிலைகளில் உள்ள இலட்சக்கணக்கான ஊழியர்களுக்கான ஒரு புத்தம்புதிய திட்டமான TAPS என்ற திட்டத்தை அறிவித்தமாத்திரத்தில், அதன் சாதகபாதகங்கள் குறித்து கூட்டமைப்பாகக் கலந்து ஆராயும் நேரங்கூட ஒதுக்காது தங்களது அளவுகடந்த மகிழ்ச்சியை இனிப்பைப் பகிர்ந்து வெளிப்படுத்தினர். ஒருசில நிமிடங்களில் TAPSஐ பகுப்பாய்வு செய்யும் தொழிற்நுட்ப வல்லமை அப்போது அவர்களிடம் இருந்தது என்றால், அந்நிகழ்வில் பங்கேற்ற தலைமைச் செயலக சங்கம் பின்னர் வெளியிட்ட தனது அறிக்கையில் TAPS ஒரு சவலைக்குழந்தை (தாய்ப்பால் எனும் அடிப்படை உணவூட்டமே இல்லாது மெலிந்த குழந்தை) என்று குறிப்பிடவேண்டிய தேவை என்ன? என்ற கேள்வியும் ஊழியர்கள் மத்தியில் தொக்கி நிற்கிறது. தலைமைச் செயலக சங்க சுட்டிக்காட்டலைத் தொழிற்சங்கப் பார்வையோடே பார்ப்போமெனில், பறிக்கப்பட்ட முழுமையான ஓய்வூதிய உரிமையைக் கேட்டுப் போராடிய களத்தில், ஊட்டமே இல்லாத ஒரு திட்டத்திற்காகக் கொண்டாடவேண்டிய தேவையே இல்லையே.

எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன / ஆளும்கட்சிகள் அறிவித்துவிட்டன என்ற காரணத்திற்காக தமது உறுப்பினர்கள் சார்ந்த எந்தவொரு அறிவிப்பையும் கண்மூடித்தனமாக ஆதரிப்பதோ / எதிர்ப்பதோ தொழிற்சங்க இலக்கணமாகாது. கோரிக்கையை வடிவமைத்துக் களம் காண்பது சங்கங்களே அன்றி கட்சிகள் அல்ல.

ஆயிரம் விமர்சனங்கள் எழுந்தாலும் அதைத் தர்க்கரீதியாக ஆதாரத்துடன் மறுத்துத் தமது உறுப்பினர்களைத் தெளிவிக்க வேண்டிய பொறுப்பில் உள்ள சங்கங்கள், TAPS குறித்த மாற்றுச் சிந்தைக்குள்ளாகச் செல்ல வேண்டாம், எதிர்க்கருத்துகளுக்குச் செவிமடுக்க வேண்டாம், இதை எதிர்ப்போரெல்லாம் சமூகவிரோதிகள், TAPSஐ விமர்சிக்க வேண்டாம், விமர்சனங்களை அனுமதிக்கவும் வேண்டாமென அறிவுறுத்தி வருவதெல்லாம் தொழிற்சங்க இலக்கணத்திலேயே இல்லாத புதுவித நடைமுறையாக இருக்கிறது.

இவையெல்லாம், உறுப்பினர்களால் உறுப்பினர்களுக்காக உறுப்பினர்களே இயக்கும் சங்கங்கள் அதிகாரத்தின் பக்கம் சாய்க்கப்பட்டுவிட்டனவோ என்ற ஐயத்தை மிக வலுவாக அடிப்படை உறுப்பினர்கள் மத்தியில் எழுப்பியுள்ளதால் TAPS அதன் அறிமுக நிலையிலேயே தொழிற்சங்க நடைமுறைகளுக்கு உள்ளே 100% பாதகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது ஒருபுறமிருக்க, TAPS குறித்த எந்தவித விதிமுறைகளும் தற்போதுவரை வெளியாகாத நிலையில், விதிமுறைகளே இல்லாத / வெளியிடப்படாத TAPS ஊழியர்களுக்குச் சாதகமானதுதான் என்று அறிக்கைக்கம்புகள் சுற்றிவரும் சூழலில் TAPS குறித்த ஐயங்களை ஊழியர்களின் எதிர்கால நலனை முன்வைத்து விவாதித்துத் தெளிய வேண்டியது TAPSஐ எதிர்கொள்ளப் போகும் ஒவ்வொருவருக்குமான தேவையாக உள்ளது.

பணிக்கொடை மற்றும் ஓய்வூதியம் இரண்டும் ஒன்றல்ல. இரண்டும் வெவ்வேறு ஊழியர் உரிமைகள் - சட்டங்கள். தமிழ்நாட்டில் NPSஐ முன்வைத்து 2003ல் பழைய ஓய்வூதியத் திட்டம் நிறுத்தப்பட்டு CPS அறிவிக்கப்பட்டபோது பணிக்கொடையும் எவ்வித சட்டப்பூர்வ அறிவிப்புமின்றி உடன் பறிக்கப்பட்டுவிட்டது. அதே நேரம், NPSல் உள்ளோருக்கு அன்று முதல் இன்று வரை பணிக்கொடை வழங்கப்பட்டு வருகிறது. ஓய்வூதியமும் பணிக்கொடையும் வெவ்வேறானது என்பதை அதைப் பறிகொடுத்து 23 ஆண்டுகள் ஆகியும் நாம் உணரவேயில்லை என்பதும், இப்போதும் அதை உறுப்பினர்களுக்கு உணர்த்த சங்கங்கள் விரும்பவேயில்லை என்பதும் பெருங்கொடுமைதான்.

ஆம். ஊழியரது 10% சொந்தப் பணத்தை பணிக்கொடைக்கு ஈடாகக் கருதி TAPSல் பெற்றுக்கொள்ளலாம் என்றெல்லாம் சில மாமேதைகள் உருட்டி வருவது தொழிற்சங்கம் வலியுறுத்தும் ஊழியர் நலனிற்கு 100% எதிரான முரட்டு முடக்குவாதமே அன்றி வேறென்ன!?

பணிக்கொடைச் சட்டம் 1972ன் படியான கணக்கீட்டுகளின் அடிப்படையில் பார்த்தோமெனில், ரூ.25 இலட்சம் பணிக்கொடை என்பது அனைவருக்கும் கிடைக்கக்கூடியது அல்ல. தனிப்பட்ட ஊழியரின் பணிக்காலம் & அடிப்படை ஊதியம் சார்ந்தது. எனவே ரூ.25 இலட்சம் என்பது 90% ஊழியருக்கு ஒரு மாய எண் தான். மேலும், இந்த பணிக்கொடைச் சட்டம் குறித்து TAPS அரசாணையின் பார்வையில் மேற்கோள் காட்டப்படாததால், எந்த விதிமுறைகளின் அடிப்படையில் பணிக்கொடை நிர்ணயம் செய்யப்படப்போகிறது என்பது தற்போதுவரை உறுதியாகவில்லை.

TAPSல் ஊழியர்களுக்கான ஓய்வூதியம் அவர்களது 10% பிடித்தத்தில் இருந்துதான் வழங்கப்படும் என்றும் கூடுதல் தொகையை அரசு ஓய்வூதிய நிதியத்திற்கு வழங்கும் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் இதுவரையிலான CPS பிடித்தத்தொகை சுமார் ரூ.1,00,000 கோடி குறித்தோ அதன் எதிர்கால நிலை குறித்தோ எந்தவித குறிப்பும் அரசாணையில் இல்லை. மேலும், இந்திய ஓய்வூதியச் சட்டம் குறித்த பார்வையோ மேற்கோளோ அரசாணையில் இல்லை என்பதால், எந்தவிதமான கணக்கீடுகளின் அடிப்படையில் ஓய்வூதியம் நிர்ணயம் செய்யப்படப்போகிறது என்பதும் இன்றைய சூழலில் விடை தெரிந்தாக வேண்டிய வினாவே.

இவற்றையெல்லாம்விட ஓய்வூதியம் வழங்கும் பொறுப்பு ஓய்வூதிய நிதியத்திடம் இருக்குமென்றே அரசாணையின் வழி அறிய முடிகிறது என்பதால் அரசின் ஓய்வூதியப் பொறுப்பில் இருந்து தன்னைத் தளர்த்திக்கொள்ள வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஓய்வூதிய நிதியத்தில் யார் யார் எல்லாம் இடம் பெறுவர் என்ற எந்தவிதக் குறிப்பும் அரசாணையில் இல்லை. நடைமுறையில் போக்குவரத்து & கூட்டுறவுத் துறைகளுக்கு இதே போன்ற ஓய்வூதிய நிதியங்கள் உள்ளன. இந்த ஓய்வூதிய நிதிய நடைமுறைகள் என்பது இந்திய ஓய்வூதியச் சட்டத்திற்கு அப்பாற்பட்டவையே. அதாவது ஓய்வூதியத்தை நிறுத்திவைக்கவோ தாமதப்படுத்தவோ ஓய்வூதிய நிதியத்தால் முடியும். உதாரணமாக பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு ஒத்த ஓய்வூதியம் பெறத் தகுதியுள்ள போக்குவரத்து ஊழியர்களுக்குக்கூட பணி ஓய்வின் போது முழுமையான ஓய்வூதியமோ பணிக்கொடையோ வழங்காது, பல கட்ட தவணைகளிலும், காலம் தாழ்த்தியும் வழங்கி வருவதை நாம் கண்கூடாகக் கண்டு வருகிறோம். நாளை இதே நிலை TAPSஐக் கையாளவுள்ள ஓய்வூதிய நிதியத்திற்கும் வராது என்று எவராலும் உறுதியளிக்க இயலாது.

ஊழியர்களின் 10% பிடித்தமானது பணிக்கொடை & ஓய்வூதியம் வழங்கப் போதுமானதாக இல்லாத சூழலில் கூடுதல் தொகையை அரசு ஓய்வூதிய நிதியத்திற்கு வழங்கும் என்பதும் அரசின் கொள்கை முடிவிற்கு உட்பட்டதே. வரும் காலங்களில் ஆட்சியாளர்களின் அவ்வப்போதைய முடிவைப் பொறுத்து மாறும் அபாயம் உள்ளது. மேலும், ஓய்வூதிய நிதியம் ஊழியர்களின் பங்களிப்பை என்ன செய்யப்போகிறது என்பதும் இதுவரை தெளிவுபடுத்தப்படப்படவில்லை.

போக்குவரத்துக் கழக ஓய்வூதிய நிதியம் ஓய்வூதியத்திற்கு என ஒதுக்கப்பட்ட நிதியான சுமார் 9000 கோடியை மாற்றுப் பணிகளுக்குப் பயன்படுத்தி மடைமாற்றிக்கொண்டதே ஊழியர்களுக்கு உரிய காலத்தில் ஓய்வூதியம் வழங்கப்படாததற்கான காரணமாகத் தொழிற்சங்கங்களால் கூறப்பட்டு வருகிறது. ஓய்வுதிய நிதியத்திற்கு என போக்குவரத்துக் கழகங்கள் ஒதுக்கிக் கொள்ளும் நிதியே இவ்வாறு இருக்கும் சூழலில் ஊழியர்களின் 10% பிடித்தத்தை வைத்துப் பராமரிக்கப்போகிற TAPSன் ஓய்வூதிய நிதியம் குறித்ததோ, அந்நிதி எவ்வாறு கையாளப்படப்போகிறது என்பது குறித்தோ எவ்வித ஆக்கப்பூர்வ கேள்விகளும் சங்கங்களிடம் இருந்து எழுப்பப்படாமல் இருப்பது பெரும் வியப்பாகத்தான் உள்ளது.

மேலும், 23 ஆண்டுகளாக எதிர்த்த CPSம் தற்போது அறிவித்த TAPSம் விருப்பத் தேர்வாக பணியிலுள்ள CPS பாதிப்பாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்பதில் இருந்தே இந்த இரு திட்டங்களும் எந்த அளவில் ஒப்புநோக்கப்பட்டுள்ளது என்பது வெளிப்பட்டுள்ளது. இத்தகைய விருப்பத் தேர்வுமுறை மத்திய அரசுப்பணிகளில் NPS & UPS இடையே உள்ளதையும், NPSஐவிட மேலானது என்று மலர்தூவப்பட்ட UPSற்கு ஊழியர்களில் 80%ற்கும் மேல் விருப்பம் தெரிவிக்கவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டிய தேவையுள்ளது. தொழிற்சங்கங்களின் 23 ஆண்டுகால ஓய்வூதிய உரிமை மீட்புப் போராட்டப் பயணம் என்பது 10% பிடித்தமற்ற - ஊழியர்களின் உழைப்பிற்கேற்ற கொடுபடா ஊதியமான - ஓய்வூதியச் சட்டப்பாதுகாப்புள்ள 'பழைய ஓய்வூதியத் திட்டம்' வேண்டித்தானே அன்றி ஊழியர்களிடமிருந்தே பிடித்து ஊழியர்களுக்குக் கொடுக்கும் திட்டங்களுக்காக அல்ல என்பதைத்தான் UPS விருப்பத் தேர்வின் தோல்வி வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது.

2003ல் நடைமுறைக்கு வந்த CPSல் Settlementற்கான விதிமுறைகளையே இடதுசாரி தொழிற்சங்கங்கள் காத்திருப்புப் போராட்டம் நடத்தி 2016ல் தான் பெற முடிந்தது. TAPSற்கான விதிமுறைகள் எப்போது வருமெனத் தெரியவில்லை. நாளையே கூட வெளிவரலாம். வெளிவரட்டும் அதன் பின்பு அது குறித்தத் தீர்க்கமான சாதகபாதகங்களைப் பொதுவெளியில் விவாதித்துத் தெளிவோம். சாதகமெனில் தாராளமாக மகிழ்வோம்.

அதுவரையில் உறுப்பினர்கள் உள்ளத்தில் எழுந்த ஐயங்களைக் கேள்வியாக அரசிடம் முன்வைப்பதே சங்கங்களுக்கான ஆக்கப்பூர்வ நடவடிக்கையாக இருக்க வேண்டுமே அன்றி, சொல்லாத விதிகளை கற்பனை செய்து ஊழியர்களைச் சமரசம் செய்துகொள்ள நிர்பந்திப்பது அல்ல. ஒருவேளை பின்னாளில் வெளிவரும் விதிமுறைகளில் அநேக பாதகங்கள் இருக்கும் சூழலில் சங்கங்களின் மீதான மிச்ச சொச்ச நம்பிக்கையும் அற்றுப்போய்விடும் அபாயம் உள்ளது.

TETOJAC போராட்டத்தின் போது 2010ல் தரப்பட்ட 750 தனி ஊதியத்தோடே (PP) 99% சங்கங்கள் தங்களைச் சமரசம் செய்து கொண்டதன் விளைவு 16 ஆண்டுகள் கடந்தும் இடைநிலை ஆசிரியர்களின் ஊதியப் பிரச்சினை பேசுபொருளாக மட்டுமே நீடித்துக்கொண்டிருக்கிறது. மற்றொரு புறம் கொடுத்த அந்த PPயும் Incrementற்கு இல்லாது, Promotion Fixationக்கு இல்லாது, EL Surrenderக்கு இல்லாது, 'PP இருக்கு ஆனா அது POயா இல்ல' என்று மாற்றப்பட்டுவிட்டது. இதைக் கேட்கக்கூட நாதியத்துக் கிடக்கிறது இடைநிலை ஆசிரிய இனம்.

இன்று இதை விடக் கொடுமையாக TAPSன் வகைதொகை தெரியாத போதே கட்டவுட்டிற்கு பாக்கெட் பால் பீச்சும் ரசிக மனநிலைக்குள்ளாக தொழிற்சங்கங்க மூளைகள் ஆணியடிக்கப்பட்டுவிட்டன. ஓரிரு சங்கங்கள் மாத்திரமே எதிர்ப்பை / மாற்றத்தை வலியுறுத்தித் தங்களது உறுப்பினர்களுக்கு உண்மையாக இருக்க முன்வந்துள்ளன. வேறு சில விழுங்கவும் முடியாது துப்பவும் முடியாது வாயடைத்துக் கிடக்கின்றன. 750PPயைவிட மிகக் கொடிய வரலாற்றை எழுதிவிடாதபடி சங்கங்களின் கரங்களைத் தடுக்கப் போவது யாரோ!?

ரிலீஸ் ஆகாத படங்களுக்கு விருது கொடுப்பதும், வெளியிடப்படாத விதிகளுக்கு நன்றிக் கூடுகைகள் நடத்துவதும் தேவையற்ற வகையில் - வலிந்து ஆட்சியாளர்களுக்கு எதிரான அதிருப்தியை உருவாக்கிவிட்டுள்ளன என்பதை இதில் ஈடுபட்டுள்ளோர் உணர்ந்தாலும் உணர்த்த வேண்டிய இடத்தில் உரைக்காது சாலையில் சேலைகட்டி சோலைத் தீயை மறைக்கப் பார்க்கின்றனர். இத்தகைய அதீத மதிநுட்பம் சோலை, சேலை, சாலை, சாலையில் பயணிப்போர் என அனைவருக்கும் தீங்கைத்தான் விளைவிக்கும்.

10 இலட்சம் குடும்பங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் TAPS, தனது மங்காத்தாவை சங்கங்களைத் தாண்டி சபையிலும் விளையாடும் வல்லமை மிக்கது. அவையோர் இக்கள எதார்த்தத்தை உணர்ந்து காலத்தே செயல்பட முன்வந்தால் மட்டுமே யாவருக்கும் நன்மை தொடரும்.
Friday, February 06, 2026

நிரந்தரப் பணியிடங்கள் ஆசிரியர்கள் தேவை!

நிரந்தர ஆசிரியர் தேவை

எமது பள்ளியில் காலியாக உள்ள நிரந்தர முதுகலை ஆசிரியர் (ஆங்கிலம்) பணி இடத்திற்கு தகுதி பெற்றவர்கள் 06.02.2026 க்குள் உரிய ஜாதி சான்றிதழுடன் பள்ளி செயலருக்கு விண்ணப்பிக்கவும்.

முதுகலை ஆசிரியர் ஆங்கிலம் SCA (அருந்ததியர்)

கல்வித் தகுதி : BA., (Eng), MA., (Eng) B.Ed.,

ஊதியம் / வயது வரம்பு அரசு விதிகளின்படி

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

செயலர், சீனிவாசா மேல்நிலைப்பள்ளி மேலையூர், பூம்புகார்-609107,சீர்காழி தாலுக்கா மயிலாடுதுறை மாவட்டம்.
Friday, February 06, 2026

கல்லூரி மாணவர்களை ‘ஸ்கிரைப்’ ஆக நியமிக்கும் உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தல்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம், பள்ளிக் கல்வித் துறை அமைச்சருக்கு எழுதியுள்ள கடிதம்: பிளஸ் 2, 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு, அவர்கள் சொல்வதைக் கேட்டு எழுதுவதற்காக இதுவரை ஆசிரியர்களும், கல்வியாளர்களுமே ஸ்கிரைப்பாக நியமிக்கப்பட்டு வந்தனர்.

ஆனால், இந்தஆண்டு பொதுத்தேர்வு,திருப்புதல் தேர்வுகளில், கல்லூரியில் 2-ம் ஆண்டு படிக்கும் மாணவர்கள், இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களை இப்பணியில் ஈடுபடுத்த அரசு தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது.

முறையான பயிற்சி இல்லாத நபர்களை தேர்வு எழுத்தர்களாக நியமிப்பது மாற்றுத் திறனாளி மாணவர்களின் மதிப்பெண் குறைந்து அவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும்.

எனவே, தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள சுற்றறிக்கையை ரத்து செய்து விட்டு, பழைய நடைமுறையை பின்பற்ற வேண்டும்.
Friday, February 06, 2026

State Government Salary Package (SGSP) - அரசு ஊழியர்களுக்கான காப்பீட்டுத் திட்டத்தில் மேலும் 3 வங்கிகள் இணைப்பு - அரசாணை வெளியீடு!

State Government Salary Package (SGSP) - அரசு ஊழியர்களுக்கான காப்பீட்டுத் திட்டத்தில் மேலும் 3 வங்கிகள் இணைப்பு - அரசாணை வெளியீடு!

G.O.(Ms).No.29, SGSP - 3 Banks.pdf

👇👇👇👇

Friday, February 06, 2026

CTET பிப்ரவரி 2026: அனுமதி அட்டை வெளியீடு - தேர்வு வழிமுறைகள் – CBSE முக்கிய அறிவிப்பு

மத்திய கல்வி வாரியம் (CBSE), பிப்ரவரி 2026ல் நடைபெறவுள்ள மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு (CTET) தொடர்பான அனுமதி அட்டை மற்றும் தேர்வு நாள் வழிமுறைகளை வெளியிட்டுள்ளது.

தேர்வர்கள் தங்களது விவரங்களை கவனமாக சரிபார்த்து, விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அனுமதி அட்டையில் தெளிவான புகைப்படமும் கையொப்பமும் இல்லையெனில் தேர்வில் பங்கேற்க அனுமதி வழங்கப்படாது. பெயர், பிறந்த தேதி, பாலினம், பிரிவு போன்ற விவரங்கள் இறுதி உறுதிப்படுத்தல் பக்கத்துடன் பொருந்துகிறதா என்பதை தேர்வர்கள் சரிபார்க்க வேண்டும். ஏதேனும் பிழைகள் இருந்தால் உடனடியாக CBSE-க்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

தேர்வர்கள் தேர்வு மையத்திற்கு குறைந்தது இரண்டு மணி நேரத்திற்கு முன்பாக வர வேண்டும். காலை அமர்விற்கு காலை 9.30 மணிக்குப் பிறகும், பிற்பகல் அமர்விற்கு மதியம் 2.30 மணிக்குப் பிறகும் நுழைவு அனுமதி வழங்கப்படாது. தேர்வர்கள் அச்சிடப்பட்ட அனுமதி அட்டை, அசல் புகைப்பட அடையாள அட்டை, நீலம் அல்லது கருப்பு நிற பால் பாயின்ட் பேனா மற்றும் 500 மில்லி அளவிலான வெளிப்படையான தண்ணீர் பாட்டிலை கட்டாயம் கொண்டு வர வேண்டும்.

செல்லுபடியாகும் அனுமதி அட்டை மற்றும் அடையாள அட்டை இல்லாமல் தேர்வு மையத்திற்குள் நுழைய அனுமதி இல்லை என்று CBSE தெளிவுபடுத்தியுள்ளது. தேர்வர்கள் வருகைப் பதிவில் கையொப்பமிட்டு, தேர்வு முடியும் முன் வெளியேறக்கூடாது.

தடைசெய்யப்பட்ட பொருட்கள் குறித்து கடுமையான விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

உலோகப் பொருட்கள், புத்தகங்கள், குறிப்புகள், பென்சில் பெட்டி, நகைகள், மின்னணு சாதனங்கள், கடிகாரம், பணப்பை, கைப்பை, மொபைல் போன், கணக்குப்பொறி உள்ளிட்ட எந்தவொரு சாதனமும் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படாது.

உணவு மற்றும் பானங்களும் தடை செய்யப்பட்டுள்ளன. ஆனால் நீரிழிவு நோயாளிகள் தேவையான உணவுப் பொருட்களை வெளிப்படையான பையில் கொண்டு வந்து கண்காணிப்பாளர் வசம் ஒப்படைக்கலாம்.
தேர்வின்போது முறைகேடு, வேடமாற்றம் அல்லது ஒழுங்கு குலைவு நடந்தால், தேர்வரின் தேர்ச்சி ரத்து செய்யப்படுவதுடன் எதிர்காலத் தேர்வுகளில் பங்கேற்க தடை விதிக்கப்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

பதில்கள் ஒற்றுமையைக் கண்டறியும் வகையில் ஆய்வு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாற்றுத் திறனாளி தேர்வர்களுக்கான சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. அரசு மருத்துவச் சான்றிதழ் சமர்ப்பித்தால் எழுத்தர் (scribe) வசதி வழங்கப்படும். தகுதியுள்ளவர்களுக்கு அரசு விதிகளின்படி கூடுதல் நேரமும் வழங்கப்படும்.

பயோமெட்ரிக் வருகை பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனவே தேர்வர்கள் முன்கூட்டியே மையத்தை அடைய வேண்டும்; தாமதம் ஏற்பட்டால் தேர்வு நேரம் குறையக்கூடும்.

மேலும், அனுமதி அட்டை தற்காலிகமானது மட்டுமே; CTET தேர்ச்சி பெற்றாலும் வேலை உறுதி கிடைக்காது. இறுதி தகுதி சரிபார்ப்பு நியமன அமைப்புகளால் மேற்கொள்ளப்படும். தேர்வர்கள் தேர்வு மையத்தின் இடம் மற்றும் போக்குவரத்து வசதிகளை முன்கூட்டியே சரிபார்க்குமாறு CBSE அறிவுறுத்தியுள்ளது.

Hall ticket download link:

Central Teacher Eligibility Test | CTET | India https://share.google/mgWqnihHouGfeolXC
Friday, February 06, 2026

Ennum Ezhuthum - 1 To 5th Std - Term 3 - ( Set - 6 ) Lesson Plan - T/M & E/M

Ennum Ezhuthum Lesson Plan | 2025 - 2026

Ennum Ezhuthum - 1,2,3rd Std - Term 3 - ( Set - 6 ) Lesson Plan - T/M - Download here

Ennum Ezhuthum - 1,2,3rd Std - Term 3 - ( Set - 6 ) Lesson Plan - E/M - Download here

Ennum Ezhuthum - 4 & 5th Std - Term 3 - ( Set - 6 ) Lesson Plan - T/M - Download here

Ennum Ezhuthum - 4 & 5th Std - Term 3 - ( Set - 6 ) Lesson Plan - E/M - Download here
Friday, February 06, 2026

பிப்.8-ல் நடைபெற உள்ள நிப்ட் நுழைவுத் தேர்வுக்கு ஹால் டிக்கெட் வெளியீடு



நாடு முழு​வதும் உள்ள தேசிய ஆடை வடிவமைப்பு தொழில்​நுட்ப நிறு​வனங்​களில் (நிப்ட்) இளநிலை, முது​நிலை, பிஎச்டி படிப்​பு​களில் சேர நுழைவுத் தேர்வு கட்டாயம். அந்த வகை​யில் 2026-ம் ஆண்டு மாணவர் சேர்க்​கைக்​கான தேசிய அளவிலான நிப்ட் நுழைவுத் தேர்வு வரும் 8-ம் தேதி நடை​பெற உள்​ளது.

இந்​நிலை​யில், தேர்​வுக்கான ஹால் டிக்​கெட்​களை என்​டிஏ தற்​போது வெளி​யிட்​டுள்​ளது. மாணவர்​கள் தங்​கள் ஹால் டிக்​கெட்டை https://exams.nta.nic.in/niftee என்ற இணை​யதளத்​தில் பதி​விறக்​கம் செய்​து​கொள்ள வேண்​டும். கூடு​தல் விவரங்​களை http://www.nta.ac.in எனும் தளத்​தில் அறிய​லாம்.

இதில் ஏதேனும் சந்​தேகம் இருந்​தால், 011-40759000/ 69227700 என்ற தொலைபேசி எண் அல்​லது nift@nta.ac.in எனும் மின்​னஞ்​சலை மாணவர்​கள் தொடர்பு கொண்டு விளக்​கம் பெறலாம் என்று என்​டிஏ வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறப்​பட்​டுள்​ளது.
Friday, February 06, 2026

சிவில் சர்வீஸ் தேர்வுக்கான அறிவிப்பு வெளியீடு



ஐஏஎஸ், ஐஎஃப்​எஸ், ஐபிஎஸ், ஐஆர்​எஸ் உள்​ளிட்ட உயர் பணி​களுக்​காக குடிமைப் பணி (சி​வில் சர்​வீஸ்) தேர்வு ஆண்​டு​தோறும் நடத்​தப்​படு​கிறது. தேசிய அளவி​லான இத்​தேர்வை மத்​திய அரசுப் பணி​யாளர் தேர்​வாணை​யம் (யுபிஎஸ்​சி) நடத்​துகிறது.

அந்த வகை​யில், 2026-ம் ஆண்​டுக்​கான சிவில் சர்​வீஸ் தேர்வு அறி​விப்பை யுபிஎஸ்சி தற்​போது வெளி​யிட்​டுள்​ளது. அதன்​படி, இந்த ஆண்டு ஐஏஎஸ், ஐஎஃப்​எஸ், ஐபிஎஸ் உள்​ளிட்ட 23 வித​மான பதவி​களில் மொத்​தம் 933 காலி இடங்​கள் நிரப்​பப்பட உள்​ளன.

இத்​தேர்வு எழுத ஏதேனும் ஒரு பட்​டப் படிப்​பில் தேர்ச்சி பெற்​றிருந்​தால் போதும். வயது வரம்பு பொதுப் பிரி​வினருக்கு 21 முதல்32 வரை. ஓபிசி வகுப்​பினருக்கு 3 ஆண்​டும், எஸ்​சி, எஸ்டி பிரி​வினருக்கு 5 ஆண்​டும் வயது வரம்​பில் தளர்வு அளிக்​கப்​படும். தகு​தி​யுடைய பட்​ட​தா​ரி​கள் https://upsconline.nic.in என்ற இணை​யதளம் மூல​மாக பிப்​.24-ம் தேதி வரை ஆன்​லைனில் விண்​ணப்​பிக்​கலாம்.
Friday, February 06, 2026

7.36 லட்​சம் பேர் எழு​திய நெட் தேர்வு முடிவுகள் வெளியீடு



பல்​கலைக்​கழகங்​கள், கல்​லூரி​களில் உதவிப் பேராசிரிய​ராக பணிபுரிய​வும், இளநிலை ஆராய்ச்​சிப் படிப்​புக்​கான (ஜேஆர்​எஃப்) மத்​திய அரசின் உதவித் தொகை பெற​வும், பிஎச்டி மாணவர் சேர்க்​கைக்​கும் தேசிய தகு​தித் தேர்​வில் (நெட்) தேர்ச்சி பெற வேண்​டும். தேசிய தேர்​வு​கள் முகமை (என்​டிஏ) சார்​பில் ஜூன், டிசம்​பர் என ஆண்​டுக்கு 2 முறை கணினி வழியில் இந்த தேர்வு நடத்​தப்​படு​கிறது.

அதன்​படி, 2025-ம் ஆண்​டுக்​கான 2-ம் கட்ட யுஜிசி நெட் தேர்வு கடந்த டிச.31 முதல் ஜன.7-ம் தேதி வரை பாட​வாரி​யாக நடத்​தப்​பட்​டது. மொத்​தம் 9.94 லட்​சம் பட்​ட​தா​ரி​கள் விண்​ணப்​பித்த நிலை​யில், 7.36 லட்​சம் பேர் மட்​டுமே தேர்வு எழு​தினர்.
இந்​நிலை​யில், நெட் தேர்வு முடிவு​களை என்​டிஏ நேற்று முன்​தினம் இரவு வெளி​யிட்​டது. இதில், உதவிப் பேராசிரியர் பணிக்கு 54,713 பேர், ஜேஆர்​எஃப் உதவித் தொகைக்கு 5,108 பேர், பிஎச்டி படிப்​புக்கு ஒரு லட்​சத்து 17,058 பேர் என மொத்​தம் ஒரு லட்​சத்து 76,879 பட்​ட​தா​ரி​கள் (24%) தேர்ச்சி பெற்​றுள்​ளனர்.


தேர்வு முடிவு களை ugcnet.nta.nic.in என்ற இணை​யதளத்​தில் அறிந்து கொள்​ளலாம். கூடு​தல் விவரங்​களை www.nta.ac.in என்ற தளத்​தில் அறிய​லாம் என்​று என்​டிஏ வெளி​யிட்ட அறி​விப்​பில்​ கூறப்​பட்​டுள்​ளது.
Friday, February 06, 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 06.02.2026


திருக்குறள்: 

குறள் 283: 

களவினா லாகிய ஆக்கம் அளவிறந் 
தாவது போலக் கெடும்.     

விளக்க உரை: 

களவு செய்து பொருள் கொள்வதால் உண்டாகிய ஆக்கம் பெருகுவது போல் தோன்றி இயல்பாக இருக்க வேண்டிய அளவையும் கடந்து கெட்டு விடும்.

பழமொழி :

Work hard in silence ; let success make the noise. 

அமைதியாக உழை; வெற்றி உன் பெயரை பேசட்டும்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. பணத்தை விட அறிவே உயர்ந்தது

2. எனவே அறிவைப் பெருக்க அனைத்தும் படிப்போம்.

பொன்மொழி : 

படித்த ஜாதி, படிக்காத ஜாதி என்றொரு ஜாதி உண்டாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

  - காமராஜர்

பொது அறிவு : 

01.இந்திய சினிமா துறையில் வாழ்நாள் பங்களிப்பிற்காக இந்திய அரசால் வழங்கப்படும் மிக உயர்ந்த தேசிய விருது எது?

தாதாசாகேப் பால்கே விருது  Dadasaheb Phalke Award

02.நவீன "தமிழ் உரைநடையின் தந்தை" எனப் போற்றப்படுபவர்யார்?
 ஆறுமுக நாவலர்
Arumuga Navalar 

English words :

strangle-choke

cranky-easily irritable

தமிழ் இலக்கணம்: 

 சுடு தண்ணீர்
இது தவறு. 
சுடு என்றால் சூடான
தண்ணீர் பிரித்தால் தன்மை+நீர் என்று வரும். தன்மை என்றால் குளிர்ந்த என்று பொருள் 
இப்போ சுடு தண்ணீர் என்பதன் பொருள் சூடான குளிர்ந்த நீர் என்று ஆகி விடும். இது தவறு எனவே சுடு நீர் அல்லது வெந்நீர் என்றே சொல்ல வேண்டும்

அறிவியல் களஞ்சியம் :

பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, இப்பகுதி 'தெதிஸ் கடல்' என்று அழைக்கப்பட்ட கடலாக இருந்தது என்று ஆராய்ச்சி சுட்டிக்காட்டுகிறது. இந்த பாலைவனத்தின் தற்போதைய மேற்பரப்பு, பண்டைய கடற்பரப்பின் ஒரு பகுதியாக இருந்திருக்கலாம் என கருதப்படுகிறது.

உள்ளூர்வாசிகள் இந்த பாலைவனத்தில் இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகள் அல்லது ஏலியன்கள் இருப்பதாகக் கூறுகின்றனர்.

பிப்ரவரி 06

பெண் பிறப்புறுப்பு சிதைவுக்கான பூஜ்ஜிய சகிப்புத்தன்மை நாள் (FGM), ஆண்டுதோறும் பிப்ரவரி 6 அன்று அனுசரிக்கப்படுகிறது, இது முன்னேற்றத்தை முன்னிலைப்படுத்தவும் இந்த தீங்கு விளைவிக்கும் நடைமுறையை முடிவுக்குக் கொண்டுவர விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஒரு வாய்ப்பை வழங்குகிறது.

நீதிக்கதை

 சிங்கத்தின் வீரம்

ஒரு காட்டில் சிங்கம் ஒன்று இருந்தது. அந்த சிங்கத்தின் பிடரி ரோமங்களுக்கிடையே ஒரு ஈ வாழ்ந்து வந்தது. அந்த ஈ, நான் சிங்கத்தின் பிடரி ரோமங்களுக்கிடையே வாழ்ந்திருப்பதால்தான், சிங்கம் இவ்வளவு வீரமாக இருக்கிறது. நான் இருப்பதால்தான் சிங்கம் நன்றாக வேட்டையாடி பசி இல்லாமல் இருக்கிறது.

இந்த சிங்கத்தின் வாழ்விற்கே நான்தான் காரணம். நான் இல்லாவிட்டால், சிங்கத்தால் எதுவுமே செய்யமுடியாது என்று நினைத்துக் கொண்டிருந்தது. ஒரு நாள், தலை அரித்ததால் ஒரு சிறு மரத்தில் தலையை உரசிக்கொண்டது சிங்கம். ஈ இதை எதிர்பார்க்காததால், மரத்திற்கும் சிங்கத்தின் தலைக்குமிடையே சிக்கி சற்று அழுந்திவிட்டது. மிகவும் கோபம் வந்துவிட்டது ஈ க்கு. அது பறந்து சிங்கத்தின் முன்னால் வந்து கேட்டது. 

ஏய்.... சிங்கமே! உனக்கு என்ன அறிவு கெட்டுப் போய்விட்டதா? ஏன் தலையை மரத்தில் உரசி, உன் பிடரியில் வசிக்கும் எனக்குத் தொந்தரவு செய்கிறாய்? இதோ, நான் உன்னைவிட்டு இப்போதே போகிறேன்! என்னை இழந்து நீ துன்பப்பட்டால்தான் உனக்கு என் அருமை புரியும். சிங்கத்திற்கு ஒன்றுமே புரியவில்லை. அது மீண்டும் மரத்தில் தலையை உரசியது. அப்போது, மரம் அசைந்து சருகுகள் உதிர்ந்தன.

இதைப் பார்த்துக் கத்தியது ஈ அட... முட்டாள் சிங்கமே, பார்! நான் உன்னைவிட்டுப் போகிறேன் என்று சொன்னவுடனே, காற்றடித்து சருகுகள் உன் மீது உதிர்கின்றன. இனி வரக்கூடிய துன்பங்களையெல்லாம் நன்றாக அனுபவி! இனிமேல் நான் உனக்கு உதவி செய்யமாட்டேன். பிறகு ஈ பறந்து சென்றது. இந்த ஈ இவ்வளவு காலம் என் பிடரியில் இருந்தது என்று இப்போதுதான் எனக்குத் தெரிகிறது என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டது சிங்கம். தான் இல்லாவிட்டால் எதுவுமே நடக்காது என்று அகம்பாவம் கொள்பவர்கள் இந்த ஈக்களைப் போன்றவர்கள்தான். எத்தனையோ அறிஞர்களும், மகான்களும், பேராற்றல் மிக்கவர்களும் வந்து சென்ற இடம் இந்த உலகம். அந்த நினைவும், பணிவும் நமக்கு வேண்டும்.

இன்றைய செய்திகள்

06.02.2026

⭐ரூ.1,267 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப்பணிகள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

⭐தமிழகத்தில் வெப்பநிலை உயரக்கூடும்- வானிலை ஆய்வு மையம் தகவல்

⭐ இந்தியாவின் தலைநகர் டெல்லியில் 2026-ஆம் ஆண்டின் முதல் 15 நாட்களில் மட்டும் 807 பேர் காணாமல்போயி ருப்பதாக டெல்லி காவல்துறை வெளியிட்டுள்ளது. 

⭐ இந்தியாவின் பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO), "திட எரிபொருள் ராம்ஜெட்" என்ற மிக நீண்ட தூரம் சென்று வான் இலக்குகளைத் தாக்கும் ஏவுகணைத் தொழில்நுட்பத்தை செயல்படுத்துகிறது.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀10-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 7-ந்தேதி தொடங்குகிறது.
நடப்பு சாம்பியனான இந்திய அணி மூன்றாவது முறை சாம்பியன் ஆக வாய்ப்பு உள்ளது.

🏀டிராபி. 2025-26 ரஞ்சி டிராபி தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.  காலிறுதி போட்டிகள் நாளை முதல் தொடங்க உள்ளது.

Today's Headlines

⭐Chief Minister M.K. Stalin laid the foundation stone for new projects worth Rs. 1,267 crore. 

⭐ The Meteorological Department warned that temperatures may rise in Tamil Nadu.

⭐ Delhi Police has revealed that 807 people went missing in the first 15 days of 2026 alone in the Indian capital Delhi.

⭐The Defence Research and Development Organisation (DRDO) is implementing a "solid fuel ramjet" missile technology that can hit air targets from a very long distance.

 SPORTS NEWS 

🏀The 10th T20 World Cup begins on the 7th. The defending champions, India, have a chance to be the champions for the third time.

🏀Trophy. The 2025-26 Ranji Trophy is currently underway. The quarter-finals are set to begin tomorrow.

Covai women ICT_போதிமரம்

Thursday, February 5, 2026

Thursday, February 05, 2026

Income Tax | Rebate | Marginal Relief : New Regimeன் பலன்கள் என்னென்ன? யாருக்கு?



Income Tax | Rebate | Marginal Relief : New Regimeன் பலன்கள் என்னென்ன? யாருக்கு?*

_✍🏼செல்வ.ரஞ்சித் குமார்_

நடப்பு (2025-26) நிதியாண்டில், New Regimeல் எதுவரை வரி உண்டு, Rebate, Marginal Relief எனும் வரித் தள்ளுபடிகள் எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்பதை இப்பதிவில் வரிசைக்கிரமமாகத் தெரிந்து கொள்வோம்.

`Total Gross Income :`

Pay + DA + All other Allowances + EL Surrender + Any Pay Arrear = Total Gross Income.

_(கூடுதலாக Savings & Investmentற்கான வட்டி ITRன் போது தானாகவே வருமானக் கணக்கில் சேர்க்கப்படும்)_


`Net Taxable Income :`

இந்த Total Gross Incomeல் இருந்து,


1. மாற்றுத்திறனாளி போக்குவரத்துப் படி

2. Standard Deduction Rs.75,000/-


உள்ளிட்டவற்றைக் கழித்துவரும் தொகையே Net Taxable Income. இத்தொகை 10ன் முழுமையாக்கப்பட்டு வரிவிதிப்புக் கணக்கீட்டிற்கு எடுத்துக்கொள்ளப்படும்.


`Tax Slab :`


Net Taxable Incomeற்கு 2025-26 நிதியாண்டில் பின்வருமாறு வரி விதிக்கப்படுகிறது.


Rs.4,00,000 வரை - வரியில்லை

Rs.4,00,001 to Rs.8,00,000 - 5%

Rs.8,00,001 to Rs.12,00,000 - 10%

Rs.12,00,001 to Rs.16,00,000 - 15%

Rs.16,00,001 to Rs.20,00,000 - 20%

Rs.20,00,001 to Rs.24,00,000 - 25%

Rs.24,00,000க்கு மேல் - 30%



`Rebate :`


Net Taxable Income Rs.12,00,000/-க்குள் இருப்பின் அதற்குண்டான வருமானவரி U/S.87Aன் கீழ் தள்ளுபடி செய்யப்படும்.


அதாவது Net Taxable Income Rs.12,00,000/- எனில்,

முதல் 4,00,000 × 0% = 0

2வது 4,00,000 × 5% = 20,000

3வது 4,00,000 × 10% = 40,000

என்று மொத்தமாக Rs.60,000/- வரி வரும். இந்தத் தொகையை Rebate ஆகக் கழிப்பதன் மூலம் வரி சுழியமாக்கப்படும். இவ்வாறுதான் 12 இலட்சம் வரை Tax இல்லை என்று கூறப்படுகிறது.


`Marginal Relief :`


Net Taxable Income மேற்படி Rebate வரம்பைவிட ரூ.10 கூடி Rs.12,00,010/- என்று வருமானால் Rebate கிடையாது என்பதால் அணற்கான வரியாக Rs.60,002/-ஐ செலுத்தியாக வேண்டும். Marginல இருந்து வெறும் 10 ரூவா கூடுனது குத்தமா? என்று தோன்றலாம். இக்குறையைப் போக்கத்தான் கடந்த 3 ஆண்டுகளாக Marginal Relief என்ற முறை நடைமுறையில் உள்ளது.

இதன்படி, Tax Marginஆன ரூ.12,00,000/-ஐவிடக் கூடுதலாக எவ்வளவு வருமானம் ஈட்டியுள்ளோமோ அதை மட்டும் வரியாகக் கட்டினால் போதும். மீதத்தொகை U/S.87Aன் கீழ் Marginal Relief என்று கழிக்கப்பட்டுவிடும்.

உதாரணமாக Net Taxable Income Rs.12,00,010/- என்றால், 12 இலட்சத்தைவிடக் கூடுதலாக உள்ள அந்த 10 ரூபாயை மட்டும் அப்படியே வரியாகக் (+ 4% Cess) கட்டிக் கொள்ளலாம்.

இந்த Marginal Relief முறை என்பது Net Taxable Income Rs.12,70,580/- வரை பயன்படுத்தப்படும்.

இதற்கு மேலான தொகை, அதாவது Net Taxable Income Rs.12,70,590/- எனில் இந்தக் கூடுதல் தொகையும், வழக்கமான கணக்கீட்டிற்கான வரியும் கிட்டத்தட்ட சமமாக வந்துவிடும். அதாவது,

Rs.4,00,000 = 0% = 0

Rs.4,00,000 = 5% = 20,000

Rs.4,00,000 = 10% = 40,000

Rs.70,590. = 15% = 10,589

மொத்த வரி = 70,589


எனவே, Rs.12,70,580/-ற்கு மேலான தொகைக்கு Marginal Reliefன் தேவை இருக்காது.


`Marginal Relief Formula :`


12 இலட்சத்துக்கு மேலே வரும் தொகையைக் கட்டினால் போதுமென்றால், அதற்கென ஒரு கணக்கீடு இருக்க வேண்டுமல்லவா? இருக்கிறது.

Marginal Relief = Actual Tax - Tax margin Excess Income

இந்த Marginal Reliefஐக் கண்டுபிடித்து அதை மொத்த வரியில் கழித்துவிட்டால் கட்ட வேண்டிய வரி கிடைத்துவிடும்.

உதாரணமாக Net Taxable Income Rs.12,10,000/- எனில்,

Rs.12,10,000/-ற்கான Actual Tax = 61,500

12Lஐ விடக் கூடுதல் வருமானம் = Rs.10,000

ஃ Marginal Relief (61,500 - 10,000) = Rs.51,500

ஆக, Net Taxable Income Rs.12,10,000/-க்கான நிகர வருமான வரி என்பது,

= Actual Tax - Marginal Relief

= 61,500 - 51,500

= Rs.10,000/-


2025-26 நிதியாண்டிற்கான EL Surrender உள்ளிட்ட உங்களது ஒட்டுமொத்த ஆண்டு வருமானத்தையும், அதற்குண்டான வருமானவரியையும் 100% துல்லியமாகத் தெரிந்து கொள்ள விரும்பினால், கீழே இணைப்பில் உள்ள அறிவுச்சாளரம் Income Tax Calculator 2026 உதவியாக இருக்கும். தேவையெனில் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.


https://arivuchaalaram.blogspot.com/2025/04/it-calculator-fy-2025-26.html
Thursday, February 05, 2026

ஜேஇஇ முதன்மைத் தேர்வு - தற்காலிக விடைக்குறிப்பு வெளியீடு



படிப்பு வழிகாட்டிகள்

பொறியியல் படிப்புக்கான ஜேஇஇ முதன்மைத் தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்பை என்டிஏ தற்போது வெளியிட்டுள்ளது.

நம் நாட்டில் ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் (ஜேஇஇ) தேர்ச்சி பெறவேண்டும். இவை ஜேஇஇ முதன்மைத் தேர்வு, பிரதானத் தேர்வு என இரு பிரிவாக நடைபெறும். இதில் முதன்மைத் தேர்வானது தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் ஆண்டுதோறும் 2 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி 2026-27-ம் கல்வியாண்டுக்கான ஜேஇஇ முதல்கட்ட முதன்மை தேர்வு கடந்த ஜனவரி 21 முதல் 29-ம் தேதி வரை நடத்தப்பட்டது. இந்த தேர்வை நாடு முழுவதும் 12 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து தேர்வுக்குரிய தற்காலிக விடைக்குறிப்பை என்டிஏ இன்று வெளியிட்டது. அவற்றை மாணவர்கள் jeemain.nta.nic.in என்ற தளத்தில் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இதில் ஏதேனும் ஆட்சேபனைகள் இருப்பின் அதன்விவரங்களை உரிய ஆதாரங்களுடன் மேற்கண்ட தளத்தில் பிப்ரவரி 6-க்குள் தெரிவிக்க வேண்டும்.

மேலும், கூடுதல் விவரங்களை /nta.ac.in/ என்ற வலைத்தளத்தில் அறியலாம். இதில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் மாணவர்கள் 011-40759000/69227700 என்ற தொலைபேசி எண் அல்லது jeemain@nta.ac.in எனும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்புக் கொண்டு விளக்கம் பெறலாம் என்று என்டிஏ தெரிவித்துள்ளது.
Thursday, February 05, 2026

TET தேர்வு 2025 - தேர்ச்சி சான்றிதழில் பிழைகள் இருப்பின் எப்படி சரிசெய்வது?

ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியம்

TET தேர்வு 2025 - பின்வருவனவற்றில் மாற்றத்திற்கான கோரிக்கை:-

1. ஆரம்ப மாற்றம்

2. பிறந்த தேதி மாற்றம்

3. எழுத்து மாற்றம்

4. பாலின மாற்றம்

விண்ணப்ப நகல், சான்றுகள் மற்றும் சலான் ரூ.200/-க்கு பின்வரும் வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும்.

பணம் செலுத்திய நகலுடன் உங்களது சான்றிதழில் உள்ள பிழையினை குறிப்பிட்டு, சான்றிதழ் நகல் ஒன்றும் இணைத்து ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு அனுப்ப வேண்டும்.

Thursday, February 05, 2026

மதிப்பீட்டு புலம் - Future Ready-பிப்ரவரி-2026

மதிப்பீட்டு புலம் - Future Ready-பிப்ரவரி-2026

வகுப்பு- 6 முதல் 9ஆம் வகுப்பு வரை

*வினாத்தாள் பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாள்கள் : 03.02.26 - 09.02.26.

இணையதள முகவரி :

https://exam.tnschools.gov.in.

💧அனைத்து அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் அடைவுத்தேர்வு மற்றும் உயர் சிந்தனை வினாக்களை எதிர்கொள்ளும் திறனை மேம்படுத்தும் பொருட்டு *Future Ready* திட்டம் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

💧 மாணவர்கள் *NAS/SLAS போன்ற அடைவுத் தேர்வுகளை* எளிதாக எதிர்கொள்ளவதற்கு ஏதுவாக *Future Ready* வினாக்கள் வடிவமைக்கப் பட்டுள்ளது.

💧அனைத்து அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு Future Ready வினாத்தாள்களை பதிவிறக்கம் செய்து பயிற்சி அளித்து அவர்களுக்கு உயர் சிந்தனை வினாக்களை எதிர்கொள்ளும் திறனை வளர்த்திட வேண்டும்.

💧 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்கள் வினாக்களை அனைத்து மாணவர்களும் பயன்பெறும் வகையில் வகுப்பறை செயல்பாடாக மேற்கொள்ள வேண்டும்.

அனைத்து அரசு நடுநிலை ,உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் Future Ready வினாத்தாள்கள் பதிவிறக்கம் செய்யப்பட்டு பயிற்சி அளிக்கப்படுவதை மாவட்ட கல்வி அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் பள்ளி பார்வையின் போது உறுதி செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.