Breaking

Wednesday, February 4, 2026

Wednesday, February 04, 2026

TET - Genuineness Certificate பெற & SR பதிவு செய்ய தேவையான அனைத்து படிவங்களும் ஒரே கோப்பில்...

TET - Genuineness Certificate பெற & SR பதிவு செய்ய தேவையான படிவங்கள்

தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வு உண்மைத்தன்மை சான்றிதழ் பெற மற்றும் பணிப்பதிவேட்டில் பதிவு செய்ய தேவையான படிவங்கள்

TNTET - Genuineness Certificate & SR Entry Format

TNTET - Genuineness Certificate பெற & SR Entry செய்ய தேவையான படிவங்கள்

(Attach TET certificate & Hall ticket)

👇👇👇👇

TET - Genuineness Certificate & SR Entry Format - Download here
Wednesday, February 04, 2026

HS HM TO PG CASE UPDATE DATE 04-02-2026

உச்சநீதிமன்றத்தில் HSHM TO PG இன்று(04-02-2026) 12.30 க்கு ஆரம்பித்து நீதி அரசர் திரு ஹமானுல்லா அவர்கள் மற்றும் நீதியரசர் திரு மகாதேவன் அவர்கள் முன்னிலையில் ஒரு மணி வரை நடைபெற்றது

ஒரு பட்டதாரி ஆசிரியர் முதுகலை ஆசிரியர் ஆன பிறகு அவருடைய Service Period (LIEN)  கண்டிப்பாக துண்டிக்கப்படுகிறது என்று நீதிபதி கூறியுள்ளார்.

பட்டதாரி ஆசிரியருக்கு சாதகமாக வாதடிய வழக்கறிஞர் LIEN பற்றிய பிரச்சனை தான் இந்த வழக்கின் கரு என்று நீதிபதியிடம் தெளிவாக விவரித்தார்.

இதற்கு பதில் அளித்த நீதிபதி அது எதிர்தரப்பு வழக்கறிஞரான திரு சிதம்பரம் அவர்களுக்கும் நன்கு தெரியும் என்றும் நீதிபதி அவர்கள் நகைச்சுவையாக கூறியுள்ளார்

மேலும் இந்த வழக்கை நீண்ட காலம் விசாரிக்க எங்களுக்கு விருப்பமில்லை என்றும் நீதியரசர்கள் கூறியுள்ளார்கள்

எனவே இந்த வழக்கு நாளை மிகச்சரியாக 12 மணிக்கு விசாரணைக்கு வருகிறது

நாளைய விசாரணையுடன் இந்த வழக்கு முடிந்துவிடும் என்று 100% முழுவதும் நம்பலாம்.

*இதுவே மறு சீராய்வு மனு என்பதால் இதற்குப் பிறகு விசாரணையே இல்லை என்பதை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்*

*நாளையே தீர்ப்பு வழங்கப்பட அதிகபட்ச வாய்ப்புகள் உள்ளது.*

Wednesday, February 04, 2026

தவறான ஊதிய நிர்ணயம் , ஊதிய நிலுவை பிடித்தல் உச்ச நீதிமன்ற தீர்ப்பு - SLP (C) No 11540/2024 , தீர்ப்பு நாள் : 30.01.2026





தவறான ஊதிய நிர்ணயம், ஊதிய நிலுவை பிடித்தல் recovery , உச்ச நீதிமன்ற தீர்ப்பு



* உச்ச நீதிமன்றம் SLP (C) 11540/2024

* ஊதியக் குழு ஊதிய நிர்ணயத்தின் படி தவறுதலாக தர ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இந்த வழக்கில் பள்ளிக்கல்வித் துறை எதிர்மனுதாரர் என்பது குறிப்பிடத்தக்கது.

* மதுரை உயர் நீதிமன்றம் தர ஊதியம் தவறுதலாத ஆசிரியருக்கு / அரசு ஊழியருக்கு வழங்கப்பட்டு இருந்தால் மக்களின் வரிப்பணம் என்ற கருத்தை கூறி ,தவணை முறையில் தவறுதலாக கூடுதலாக வழங்கப்பட்ட தொகையை பிடிக்க தீர்ப்பு அளித்தது .



* மதுரை உயர் நீதிமன்ற தனி நீதிபதி தீர்ப்பில் /In view of facts and circumstances, this Court do not find any



irregularity or infirmity in respect of correcting the erroneous scale of pay

and the consequential recovery. The respondents are directed to recover the

amount by way of instalments./ என்று கூறப்பட்டது

* மேல் முறையீட்டில் இரண்டு நீதிபதி அமர்வு 50% அரசு ஊழியரும் , 50% ஊதிய நிர்ணய அதிகாரியும் திரும்ப செலுத்த வேண்டும் என்று தீர்ப்பு அளித்தது. அரசு ஊழியர் / ஆசிரியர்கள் கூடுதலாக வழங்கப்பட்ட தொகை பிடித்தல் தொடர்பான உச்ச நீதிமன்ற வழிகாட்டு நெறிமுறைகளை மனுதாரர் வழக்கறிஞர் தெரிவித்த போதும் , நீதிமன்றம் ஏற்கவில்லை.

* மதுரை உயர் நீதிமன்ற மேல் முறையீட்டு தீர்ப்பில் /Therefore, this Court is of the considered opinion that 50% of the

amount shall be recovered from the

appellant and remaining 50% shall be

recovered from the erring officials./




* மதுரை உயர் நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

* SLP ( C ) 11540 / 2024 ல் 50% ஆசிரியர் , 50% அதிகாரி திரும்ப செலுத்த வேண்டும் என்பதை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து தீர்ப்பு அளித்துள்ளது.



* நிலுவை தொகை பிடித்தல் தொடர்பான உச்ச நீதிமன்ற CA No 11527/2014 Rafiq masih தீர்ப்பு மிக விரிவான வழிகாட்டுதலை வழங்கிய தீர்ப்பு. இத்தீர்ப்பின் படி ஊதிய நிர்ணயம் 5 ஆண்டுகளை கடந்து இருந்தால் திரும்ப செலுத்த வேண்டியதில்லை .C ., D பிரிவு ஊழியர் திரும்ப செலுத்த வேண்டியதில்லை . ஓய்வு பெற ஓராண்டு இருக்கும் போது தணிக்கை சட்டத்திற்கு எதிரானது. இந்த தீர்ப்பை மத்திய அரசு மாநில அரசுகள் செயல்படுத்த சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

ஆ. மிகாவேல் ஆசிரியர் ,

மணப்பாறை

9047191706
Wednesday, February 04, 2026

பென்ஷன்' உயர்வு அறிவிப்போடு நிற்கிறது ‘டாப்ஸ்’ திட்டத்துக்கு இதுவரை விதிமுறை வகுக்கலே இல்லை...

பென்ஷன்' உயர்வு அறிவிப்போடு நிற்கிறது ‘டாப்ஸ்’ திட்டத்துக்கு இதுவரை விதிமுறை வகுக்கலே இல்லை...

Wednesday, February 04, 2026

4.02.2026(புதன்கிழமை) - இன்றைய செய்திகள்

🌹உங்களுடைய தவறுகளை உங்களிடமே சொல்பவர்களை இழந்து விடாதீர்கள்...

ஏனெனில் அவர்கள் நீங்கள் மற்றவர்களிடம் தலை குனியக் கூடாது என்று எண்ணுபவர்கள்.!

🌹🌹தேவைகள் முடிந்தபின்பு தேரே என்றாலும் தெருவில் தான் நிக்கனும்...

👉தேவைக்கு மட்டும் பயன்படுத்தினால் அதற்கு பெயர் பாசம் அல்ல சுயநலம்.!!

🌹🌹🌹படிப்பு,பணம்,பதவி, புகழ்,அந்தஸ்து, அதிகாரம் என்று எத்தனையோ இருந்தாலும்...

சக மனிதரை மதிக்கத் தெரியாதவர் மனிதரே அல்ல...

மிருகத்துக்கும் கீழானவர்.!!!

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

🌈🌈8.02.2026(ஞாயிறு) அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி அறிவிப்பு மாநாடு - ஜாக்டோ ஜியோ

🌈🌈ஜாக்டோ - ஜியோ : ஆசிரியர் அரசு ஊழியர் அரசுப் பணியாளர் நடத்தும் முதல்வருக்கு நன்றி அறிவிப்பு மாநாடு அழைப்பிதழ் வெளியீடு.

🌈🌈முதல்வருக்கு நன்றி அறிவிப்பு மாநாடு ஆசிரியர்கள் புறக்கணிப்பு என வரும் செய்தி தவறான செய்தியாகும். நன்றி அறிவிப்பு மாநாட்டில் முதல்வர் நல்ல செய்தி அறிவிக்க வாய்ப்பு என கருதி மிகுந்த எழுச்சியோடு ஆசிரியர்கள் புறப்பட தயாராகிக் கொண்டுள்ளனர்.

🌈🌈கேரளாவில் 10ம் வகுப்பு பாடத்திட்டத்தை 25 சதவீதம் குறைக்க அம்மாநில பள்ளிக்கல்வித்துறை முடிவு

அதிகப்படியான கல்விச்சுமையால் மாணவர்கள் பாதிக்கப்படுவதைத் தவிர தேர்ச்சி விகிதத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை என்பதால் நடவடிக்கை என தகவல்

🌈🌈86 புதிய கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் பட்டியல் வெளியீடு.

🌈🌈G.O 3 - தலைமைச்செயலகப் பணி - மாற்றுத்திறனாளி அரசு ஊழியர் பதவி உயர்வுக்கு ஏற்ற 13 பணியிடங்கள் - அரசாணை வெளியீடு.

🌈🌈முதுகலை ஆசிரியராக தெரிவு செய்யப்பட்ட நாடுநர்களுக்கு பணி நியமன ஆணை வழங்குதல் - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

முதுகலை ஆசிரியர் நேரடி நியமனம் - EMIS இணையதளம் வழியாக கலந்தாய்வு நடைபெறுவது தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு.

🌈🌈தர ஊதியம் 5400

சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடக்க / நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ,பட்டதாரி ஆசிரியர் , வட்டாரக் கல்வி அலுவலர் தர ஊதியம் 5400 வழக்குகள் தொகுப்பு வழக்குகளாக விசாரிக்கப்பட்ட நிலையில் விரைவில் தீர்ப்பு கிடைக்கும் என தகவல்.

🌈🌈ஹால் டிக்கெட் வெளியீடு.

👉 சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு.

சிபிஎஸ்இ பள்ளிகளில் படிக்கும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் 17ஆம் தேதி முதல் ஏப்ரல் 9ஆம் தேதி வரை பொதுத்தேர்வு நடைபெறுகிறது.

10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முதற்கட்டமாக வரும் 17ஆம் தேதி முதல் மார்ச் 9ஆம் தேதி வரை பொதுத்தேர்வு நடைபெறுகிறது.

🌈🌈முதலமைச்சரின் புத்தாய்வு திட்டம் - அனைத்து அரசுப் பள்ளிகளிலும் கற்றல் விளைவுகளை மதிப்பீடு செய்வதற்கும், உயர் தொழில் நுட்ப ஆய்வகங்களை பார்வையிடுவதற்கும் அனுமதி வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது

🌈🌈மாபெரும் தமிழ்க் கனவு’ திட்டத்தின் கீழ் ஆசிரியா்களுக்கான பயிற்சிப் பட்டறை நடத்துவதற்காக ரூ.1.08 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

🌈🌈சம்பளத்தை பார்க்காமல் ; நாட்டிற்கு என்ன செய்யமுடியும் என நோக்குங்கள்' - பத்ம ஸ்ரீ விருது பெற்ற ஐஐடி இயக்குனர் காமகோடி

🌈🌈பள்​ளி​களில் ஆய்​வுப் பணி​களை மேம்​படுத்​தும் நோக்​கில் 'பள்ளிப் பார்​வை-2.0' எனும் புதிய செயலி அறி​முகம் செய்​யப்​பட்​டுள்​ளது.

🌈🌈வீடில்லாமல், தெருத் தெருவாக சுற்றித் திரியும் தெரு நாய்களை கணக்கெடுக்க பள்ளிக்கு ஓர் ஒருங்கிணைப்பு அலுவலர் (ஆசிரியர்) நியமிக்கப்பட வேண்டும் என்று கோவை மாநகராட்சியின் மாநகராட்சி கல்வி அலுவலர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

🌈🌈தமிழ் கலாச்சாரமே அறிவியலின் ஊற்றுக்கண்: பூம்புகார் கல்லூரியில் ஜப்பான் அறிஞர் வியப்பு

🌈🌈+2 செய்முறைத் தேர்வுகள் நடத்த வேண்டிய நாட்கள் மற்றும் அறிவுரைகள் - DGE செயல்முறைகள் வெளியீடு.

🌈🌈தலைமை ஆசிரியர்கள் நியமனம் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது.வழக்கு முடிந்ததும் தலைமை ஆசிரியர்கள் உடனடியாக நியமிக்கப்படுவார்கள்-அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்

🌈🌈சிஎஸ்ஐஆர் நெட் தேர்வு முடிவுகள் வெளியீடு

🌈🌈2-ம் கட்ட ஜேஇஇ முதன்மைத் தேர்வுக்கு 25-க்குள் விண்ணப்பிக்கலாம்.

🌈🌈இந்தியாவுக்கு விதிக்கப்பட்ட

25% வரி 18%ஆக குறைப்பு"

பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் நடைபெற்ற ஆலோசனைக்குப்பின் அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு

🌈🌈Yamaha EC-06 அறிமுகம்

எதிர்பார்ப்பை ஏற்படுத்திய Yamaha EC-06 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம்

அதிகபட்சமாக 169 கி.மீ. வேகம் செல்லும் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் இந்திய சந்தை மதிப்பு ரூ.1,67,600 என நிர்ணயம்

🌈🌈கௌதம் மேனன் இயக்கத்தில் மாதவன், ரீமா சென் நடித்துள்ள மின்னலே திரைப்படம் பிப்.13ம் தேதி ரீ ரிலீஸ் ஆகிறது

🌈🌈Sim-ல் கொட்டிய தங்க மழை

சீனாவில் பழைய பொருட்களில் இருந்து உலோகங்களை பிரித்தெடுக்கும் கியாவோ என்ற நபர், தூக்கி வீசப்பட்ட பழைய சிம் கார்டுகள் உட்பட பல மின்னணு கழிவுகளில் இருந்து ரூ.26 லட்சம் மதிப்பிலான 191 கிராம் தங்கத்தை பிரித்தெடுத்துள்ள சம்பவம் உலகையே மிரள செய்திருக்கிறது

🌈🌈சாலையில் கிடந்த 45 சவரன் நகையை மீட்டு

உரிமையாளரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர் பத்மாவை நேரில் அழைத்து தங்க சங்கிலியை

பரிசளித்து பாராட்டிய நடிகர் ரஜினிகாந்த்

🌈🌈சென்செக்ஸ் உயர்வு

மும்பை பங்குச்சந்தை குறியீடு சென்செக்ஸ் 2,500 புள்ளிகள் உயர்வு, தேசிய பங்குச்சந்தை குறியீடு நிஃப்டி 750 புள்ளிகள் உயர்வு

இந்தியா, அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் காரணமாக இந்திய பங்குச்சந்தையில் எழுச்சி

🌈🌈பட்ஜெட் வெறும் ஏமாற்றம் தான்"

"மத்திய பட்ஜெட் வெறும் ஏமாற்றம் தான், வரும் தேர்தலில் மத்திய அரசுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்"

-முதல்வர் ஸ்டாலின்

🌈🌈விஜய்யிடம் என்ஜின் உள்ளதா?"

"விஜய்யிடம் என்ஜின் உள்ளதா? என்ற கேள்வி என்னிடம் உள்ளது. விஜய் பேசும் போது மக்கள் கைத்தட்ட வேண்டும். அப்படி தான் அவர் பேச்சு உள்ளது. அவரது பேச்சில் ஆழமான கருத்து இல்லை"

அண்ணாமலை

🌈🌈தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குமரிக்கு வருகை தர உள்ளார்

குமரி மாவட்டத்தில் அரசு சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்ள இருக்கிறார் இதற்காக வரும் 19 ஆம் தேதி இரவு நாகர்கோவில் வருகிறார், மறுநாள் 20 ஆம் தேதி அரசு விழாவில் பங்கேற்க உள்ளார்.

🌈🌈துரோகிகளை துணைக்கு அழைத்து வந்தாலும், பா.ஜ.க. அரசின் ஆணவத்துக்கும் ஆதிக்கத்துக்கும் அண்ணாவின் தமிழ்நாட்டில் GetOut-தான் - ஆண்டுகள் எத்தனை ஆனாலும், தமிழ்நாட்டை அண்ணாதான் ஆள்கிறார்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

🌈🌈சித்தராமையாவுடன் நிற்பேன்''

முதல்வர் பதவி விவகாரத்தில் சித்தராமையாவுடன் மோதல் இருப்பதாக பரவும் தகவலுக்கு துணை முதல்வர் டி.கே சிவகுமார் மறுப்பு

அனைத்து நெருக்கடிகளிலும் சித்தராமையாவுடன் நிற்பேன்; எதிர்காலத்திலும் அந்த ஒற்றுமை தொடரும் எனவும் அவர் விளக்கம்

🌈🌈"NDA கூட்டணி பலமாக உள்ளது. தேமுதிகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து ஈபிஎஸ் முடிவு செய்வார். ஓபிஎஸ்-ஐ மீண்டும் இணைப்பது, அதிமுகவின் உட்கட்சி பிரச்சினை. அவரை என்டிஏ கூட்டணியில் இணைப்பது குறித்து பாஜக தலைமை முடிவு செய்யும்"- பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி

🌈🌈சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ஒரே நாளில் ரூ.2,560 உயர்ந்துள்ளது.

ஆபரணத் தங்கம் விலை காலையில் சவரனுக்கு ரூ.640 உயர்ந்த நிலையில் பிற்பகலில் ரூ.1,920 உயர்ந்து, சவரன் ரூ.1,14,160க்கு விற்பனையாகிறது.

சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.300க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை காலையில் கிராமுக்கு ரூ.20 குறைந்திருந்த நிலையில் பிற்பகலில் ரூ.20 உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.20,000 உயர்ந்து ஒரு கிலோ ரூ.3 லட்சத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது.

🌈🌈'இந்தியாவை விட்டு வெளியேறுங்கள்' - WHATSAPP நிறுவனத்திடம் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி காட்டம்

🌈🌈5 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் 16ம் தேதி புதுச்சேரி வருகிறார் பிரதமர் மோடி.

பிரதமர் வருகையையொட்டி, உப்பளம் இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில் செயற்கை ஓடுதள பாதை, சாரதாம்பாள் நகரில் உள்ள நீச்சல்குளம் ஆகியவற்றை திறந்த வைக்க உள்ளார்.

🌈🌈நடைபெறும் பட்ஜெட் கூட்டத்தொடரில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 6 நாடாளுமன்ற உறுப்பினர்களும் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த 3 நாடாளுமன்ற உறுப்பினர்களும் என மொத்தம் 9 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவையில் இருந்து கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்

🌈🌈இரண்டாவது சிம்பொனியின்

எழுத்துப்பணி கிட்டத்தட்ட முடிந்துவிட்டது...

புதிய ஸ்டுடியோவிற்கு வந்து 5 ஆண்டுகள் நிறைவு

இளையராஜா சமூக வலைதளத்தில் பதிவு

🌈🌈செஞ்சி அருகே பாக்கம்-கெங்கவரம் பகுதியில் வனவிலங்கு சரணாலயம் அமைக்க அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்க வேண்டும்: தமிழக அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை

🌈🌈100 நாள் வேலை திட்டத்தை சிதைக்கும் ஒன்றிய பாஜ அரசை கண்டித்து தமிழக காங்கிரஸ் சார்பில் 5ம் தேதி சென்னையில் பிரமாண்ட நடைபயணம்: செல்வப்பெருந்தகை அறிவிப்பு

🌈🌈இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மதிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுகிறார் : சபாநாயகர் அப்பாவு பேட்டி

🌈🌈கரூர் சம்பவத்திற்கு எட்டிப் பார்க்காத விஜய் 7 கோடி மக்களை எப்படி காப்பாற்றுவார்: அமைச்சர் ஐ.பெரியசாமி காட்டம்

🌈🌈தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் திமுக அரசால் ஏதாவது ஒரு நன்மை: அமைச்சர் முத்துசாமி பேட்டி

🌈🌈மியான்மரில் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆகப் பதிவாகியுள்ளது.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

அன்பை கொடுப்பதிலும் பெறுவதிலும் தான் இன்பம் இருக்கிறது. என்றும் அன்புடன்

சு.வேலுமணி M.A.,B.Ed.,

தலைமையாசிரியர், மாவட்டச் செயலாளர்

&தகவல் தொழில் நுட்ப அணியின் மாநில அமைப்பாளர்,

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,

கரூர் மாவட்டம்.

அலைபேசி:9003599926
Wednesday, February 04, 2026

முதுகலை ஆசிரியர் பணி நியமன கலந்தாய்வு - முக்கிய அறிவிப்பு!


📢 முதுகலை ஆசிரியர் பணி நியமன கலந்தாய்வு - முக்கிய அறிவிப்பு! 📢

2023-24, 2024-25 ஆண்டிற்கான முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் மற்றும் கணினி பயிற்றுநர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான கலந்தாய்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

🗓 கலந்தாய்வு நடைபெறும் நாட்கள் & பாடங்கள்:

• 07.02.2026 (சனிக்கிழமை): தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல் மற்றும் பொருளியல்.

• 09.02.2026 (திங்கட்கிழமை): தாவரவியல், விலங்கியல், வரலாறு, புவியியல், வணிகவியல், கணினி பயிற்றுநர் நிலை-1, உடற்கல்வி இயக்குநர் நிலை-1 மற்றும் அரசியல் அறிவியல்.

📍 இடம்:

விண்ணப்பதாரர்களின் வீட்டு முகவரி அடிப்படையில் அந்தந்த மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகங்களில் கலந்தாய்வு நடைபெறும்.


📄 கொண்டு செல்ல வேண்டிய அசல் சான்றிதழ்கள்:

கலந்தாய்வின் போது கீழ்க்கண்ட சான்றிதழ்கள் முதன்மைக்கல்வி அலுவலர்களால் சரிபார்க்கப்படும்:

• SSLC & HSC சான்றிதழ்கள்

• இளங்கலை (UG), முதுகலை (PG) & பி.எட் (B.Ed) பட்டச் சான்றிதழ்கள்

• சாதிச் சான்றிதழ் (Community Certificate)

• PSTM சான்றிதழ் (பொருந்தினால்)

• மாற்றுத்திறனாளி சான்றிதழ் (பொருந்தினால்)


✨ பணி நியமன ஆணை:

பணி நியமன ஆணைகள் சென்னையில் நடைபெறும் விழாவில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் வழங்கப்படும்.
Wednesday, February 04, 2026

21.02.2026 சனிக்கிழமை அன்று அனைத்து வகை பள்ளிகளும் முழு வேலை நாள் - CEO Proceeding

தென்காசி மாவட்ட ஆட்சியர் அவர்களால் 16.10.2025 அன்று மழையின் காராணமாக உள்ளுர் விடுமுறை அளிக்கப்பட்டதற்காக ஈடுசெய்யும் விதமாக வருகின்ற 21.02.2026 சனிக்கிழமை அன்று அனைத்து வகை பள்ளிகளும் முழு வேலை நாளாக செயல்பட வேண்டும் என அறிவிக்கப்படுகிறது.


Wednesday, February 04, 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 04.02.2026



உலகப் புற்றுநோய் நாள்

திருக்குறள்: 

குறள் 304: 

நகையும் உவகையுங் கொல்லுஞ் சினத்தின் 
பகையும் உளவோ பிற.      

விளக்க உரை: முகமலர்ச்சியும் அகமலர்ச்சியும் கொல்லுகின்ற சினத்தை விட ஒருவனுக்கு பகையானவை வேறு உள்ளனவோ?

பழமொழி :

Small efforts daily lead to big results.     

தினசரி சிறு முயற்சிகள் பெரிய பலனை தரும்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. பணத்தை விட அறிவே உயர்ந்தது

2. எனவே அறிவைப் பெருக்க அனைத்தும் படிப்போம்.

பொன்மொழி : 

இயற்கைக்கு மாறுபட்ட செயல்களை என்றும் செய்ய முனையக்கூடாது. உலக நடைமுறைக்கு ஒவ்வாத செயல்களைச் செய்வதில்லை என்று உறுதி எடுங்கள்.

        - ஔவையார்

பொது அறிவு : 

01.ஆழ்கடல் ஆய்வுக்காக பிரத்தியேகமாகப் பயன்படுத்தப்பட்ட முதல் முக்கிய ஆய்வுக் கப்பல் எது?

 HMS சேலஞ்சர்- HMS Challenger

02.சந்திரனின் மேற்பரப்பை துல்லியமாக புகைப்படம் எடுத்த முதல் விண்கலம் எது?

 அமெரிக்கா-லூனார் ஆர்பிட்டர் 1 America -Lunar Orbiter 1

English words :

cascade-waterfall 

studious-hardworking

தமிழ் இலக்கணம்: 

 இரண்டு வட மொழிச் சொற்கள் சேர்ந்து ஒரு சொல் வரும் போது வல்லினம் மிகாது
தேசம் + பிதா = தேசபிதா
ஆனால் முதல் எழுத்து வடமொழி சொல்லாக இருந்து அடுத்த சொல் தமிழ் சொல்லாக இருந்தால் வல்லினம் மிகும்
தேச+தந்தை = தேசத் தந்தை.
தேசம் வடமொழிச் சொல். தந்தை தமிழ் சொல்

அறிவியல் களஞ்சியம் :

1970 ஆம் ஆண்டில் அமெரிக்க ஏவுகணை விபத்துக்குள்ளான போது 'மௌன மண்டலத்தைப்' பற்றிய ஆராய்ச்சி தொடங்கியது. விசாரணைக்கு அனுப்பப்பட்ட அமெரிக்க விமானப்படை குழு, ஜிபிஎஸ் கருவிகள் உட்பட அனைத்து மின்னணு உபகரணங்களும் செயலிழந்திருந்ததை கண்டது. இதனால் அந்த குழு இதற்கு 'மௌன மண்டலம்' என்று பெயரிட்டது.

பிப்ரவரி 04

வீரமாமுனிவர் அவர்களின் நினைவுநாள்

வீரமாமுனிவர் (Constanzo Beschi, நவம்பர் 8, 1680 - பெப்ரவரி 4, 1747) இத்தாலி நாட்டிலுள்ள கேசுதிகிலியோன் என்னும் இடத்தில் பிறந்தார். இவரின் இயற்பெயர் - கான்ச்டன்டைன் சோசப்பு பெச்கி (Constantine Joseph Beschi). இவர் இயேசு சபையைச் சேர்ந்த குரு ஆவார். கிறித்தவ மதத்தைப் பரப்பும் நோக்கில், 1709ஆம் ஆண்டு இயேசுசபையில் குருவானபின், 1710-ஆம் ஆண்டு தமிழகத்துக்கு அதாவது அவரது 30-ஆவது அகவையில் வந்தார்.

இவர் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் சிறப்பான பணிகளைச் செய்துள்ளார். 23 நூல்களைத் தமிழில் எழுதியதுடன், இயேசு கிறித்துவின் வாழ்க்கை தொடர்பான நிகழ்ச்சிகளையும் இயேசுவின் தந்தையாகிய புனித யோசேப்பின் வரலாற்றையும் தமிழ்ப் பண்பாட்டுக்கேற்ப "தேம்பாவணி" என்ற பெருங்காவியமாக இயற்றியது இவரின் தமிழ்ப் புலமைக்குச் சான்றாக உள்ளது. சுப்ரதீபக் கவிராயர் மூலம் தமிழில் புலமை பெற்றார்.


உலகப் புற்றுநோய் நாள்


உலகப் புற்றுநோய் நாள் (World Cancer Day) என்பது புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும், நோய்த் தடுப்பு முறைகள், மற்றும் புற்றுநோய்க்கான சிகிச்சை முறைகளைப் பரப்புவதற்கும் உலகளாவிய அளவில் ஆண்டுதோறும் பெப்ரவரி 4 ஆம் நாள் கொண்டாடப்படும் ஒரு நிகழ்வாகும். உலகப் புற்றுநோய் நாள் 2008 ஆம் ஆண்டில் எழுதப்பட்ட உலகப் புற்றுநோய்ப் பிரகடனத்தை ஆதரிக்கும் நோக்கில் பன்னாட்டுப் புற்றுநோய் எதிர்ப்பு ஒன்றியம் (Union for International Cancer Control) என்ற அமைப்பினால் ஆரம்பிக்கப்பட்டது. 2020 ஆம் ஆண்டுக்குள் புற்றுநோய் இறப்பு வீதம், மற்றும் புற்றுநோய்த் தாக்கத்தை 2020 ஆம் ஆண்டுக்குள் குறிப்பிடத்தக்களவு குறைத்தலே இதன் முதன்மை நோக்கம் ஆகும்.

நீதிக்கதை

 கர்வம் கொண்ட மயில்


குறள் :

அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை 

வியந்தான் விரைந்து கெடும். 


விளக்கம் :

மற்றவர்களை மதிக்காமலும், தன் வலிமையை உணர்ந்து கொள்ளாமலும், தன்னைத் தானே பெரிதாக விளம்பரப் படுத்திக் கொண்டிருப்பவர்கள் விரைவில் கெட்டுத் தொலைவார்கள். 


கதை :

ஒரு தோப்பில் ஒரு மயில் வசித்து வந்தது. அந்த மயிலுக்கு தன் அழகை எண்ணி அதிக பெருமை. ஒரு நாள் அந்த தோப்புக்கு எங்கிருந்தோ வந்து சேர்ந்தது குரங்கு ஒன்று. அந்த குரங்கிடம் தன் தோகையை காட்டி பெருமைப்பட்டு கொண்டது மயில். அதற்கு குரங்கோ, மயிலே இந்த தோகையையும் அதை விரித்து நீ ஆடுவதையும் பார்க்க மனிதர்கள் உன்னை தேடி வர வேண்டும். 


ஆனால் அந்த குயிலை பார். தினமும் பறந்து மனிதர்கள் இருக்கும் பகுதிக்கு செல்கிறது. அழகாக பாடி மனிதர்களை சந்தோசப்படுத்துகிறது. மனிதர்கள் தங்கள் வீட்டுக்குள் இருந்தே அதன் அழகிய குரலை கேட்டு மகிழ்கின்றனர். அவர்களை சந்தோசப்படுத்தி விட்டு மீண்டும் மாலையில் தன் கூட்டுக்கு வந்து விடுகிறது. உன்னை விட அந்த குயிலே இறைவனின் அற்புத படைப்பு என்றது. 


இதை கேட்டு ஆத்திரமடைந்த மயில் மறுநாள் மனிதர்கள் வாழும் பகுதிக்கு சென்று கத்த தொடங்கியது. அதன் கர்ண கொடூர சத்தம் பொறுக்க முடியாமல் மனிதர்கள் அந்த மயிலை அடித்து தோப்புக்குள் விரட்டினார்கள். 


நீதி :

தனக்கு எல்லாம் தெரியும் என்று பெருமை கொண்டு காரியம் செய்தால் அவமானமே மிஞ்சும்.

இன்றைய செய்திகள்

04.02.2026

⭐செங்கல்பட்டு மாவட்டம்,மதுராந்தகம் அரசு
மருத்துவமனையில் அறுவை சிகிச்சை அரங்கம் கட்டவும், மருத்துவ உபகரணங்கள் வாங்கவும் அரசு ரூ.12 கோடி நிதி அறிவித்துள்ளது.

⭐இந்தியாவில் 5 லட்சத்துக்கு மேல் மக்கள்தொகை கொண்டுள்ள 2ம் & 3-ம் நிலை நகரங்கள் அனைத்திலும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த இந்திய அரசு திட்டமிட்டு உள்ளது. 

⭐ இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்திலுள்ள உத்தர்காஷி, சாமோலி, ருத்ரப்ரயாக், பித்தோராகர், பாகேஷ்வர் ஆகிய நகரங்களுக்கு பனிச்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀5 அணிகள் இடையிலான 4-வது மகளிர் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் வதோதராவில் நடந்து வருகிறது. இதில் லீக் சுற்று முடிவில் 12 புள்ளிகளுடன் முதலிடம் (6 வெற்றி, 2 தோல்வி) பிடித்த ஸ்மிர்தி மந்தனா தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ் சர்ஸ் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

Today's Headlines

⭐  The government has announced a fund of Rs. 12 crore for the construction of operating theatres in hospitals and the purchase of medical equipment for Chengalpattu District, Madurantakam government  hospital.

⭐The Government of India is planning to improve infrastructure facilities in all Tier 2 & 3 cities in India with a population of more than 5 lakhs..

⭐ Avalanche warnings have been issued for the cities of Uttarkashi, Chamoli, Rudraprayag, Pithoragarh, and Bageshwar in the Indian state of Uttarakhand.

 *SPORTS NEWS* 

🏀The 4th Women's Premier League (WPL) 20-over cricket match between 5 teams is underway in Vadodara, Gujarat.
The Smriti Mandhana-led Royal Challengers Bangalore team, which finished first with 12 points (6 wins, 2 losses) at the end of the league round, advanced directly to the final.

Covai women ICT_போதிமரம்

Tuesday, February 3, 2026

Tuesday, February 03, 2026

டெட் தேர்வில் தகுதிப் பெற்றவரா? தமிழ்நாடு அரசில் 2,000 ஆசிரியர் காலிப்பணியிடங்கள் விரைவில் அறிவிப்பு வெளியாகலாம்

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) மூலம் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவரா நீங்கள்? இந்த வருடமே தமிழ்நாடு அரசின் ஆசிரியராக பணியாற்ற உங்களுக்கு ஒரு வாய்ப்பு வரவுள்ளது.

டிஆர்பி 2026 தேர்வுஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் கடந்த ஜனவரி 30-ம் தேதி ஆசிரியர் தகுதித் தேர்வின் முடிவுகள் வெளியாகின. இத்தேர்வில் தகுதிப் பெற்றவர்கள் அடுத்தது என்ன செய்யலாம் என சிந்தித்துக்கொண்டுள்ளனர். டெட் தகுதித் தேர்வில் இரண்டாம் தாள் தகுதிப் பெற்றவர்களுக்கு இந்தாண்டே தமிழ்நாடு அரசின் ஆசிரியராக பணிபுரிய வாய்ப்பு உள்ளது. வரும் மார்ச் மாதம் சுமார் 2,000 காலிப்பணியிடங்கள் வரை காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
Tuesday, February 03, 2026

Professional Tax Slab Details

தொழில்முறை வரி (Professional Tax) என்பது இந்தியாவில் உள்ள மாநில அரசுகளால், தொழில், வணிகம் அல்லது வேலைவாய்ப்பு மூலம் வருமானம் ஈட்டும் நபர்கள் மீது விதிக்கப்படும் ஒரு நேரடி வரியாகும். இது உள்ளாட்சி அமைப்புகளால் (மாநகராட்சி/நகராட்சி) ஆறு மாதத்திற்கு ஒருமுறை வசூலிக்கப்படுகிறது. இந்த வரி வருமான வரிக்கு (Income Tax) தனித்துவமானது மற்றும் கட்டாயமானதாகும்

Professional Tax Slab Details
Tuesday, February 03, 2026

Professional Tax - தொழில்முறை வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுபவர்கள் - விவரம்!

♨️ முன்னாள் இராணுவத்தினருக்கு #தொழில்முறை_வரி_விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்பது குறித்து #கருவூலங்கள் மற்றும் கணக்குத் துறை ஆணையர் விளக்கம்.

#தொழில்முறை_வரி செலுத்துவதில் இருந்து #விலக்கு அளிக்கப்படுபவர்கள் - விவரம்

மேற்கோள் காட்டப்பட்டுள்ள குறிப்பில், முன்னாள் இராணுவ வீரர்களுக்கு தொழில்முறை வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளதா என்பதை தெளிவுபடுத்துமாறு கோரப்பட்டது.

இது தொடர்பாக, தொழில்முறை வரி விதிகளின் கீழ் சில தனிநபர்கள் தொழில்முறை வரி செலுத்துவதற்கு மாநில அரசால் வழங்கப்பட்ட விலக்குகள் பின்வருமாறு தெரிவிக்கப்படுகின்றன.

நிரந்தர ஊனம் அல்லது மன ஊனம் உள்ள குழந்தைகளின் பெற்றோர்.

#இராணுவச்_சட்டம், 1950, விமானப்படை சட்டம், 1950 மற்றும் கடற்படைச் சட்டம், 1957 இல் வரையறுக்கப்பட்டுள்ள படைகளின் உறுப்பினர்கள், துணைப் படைகள் அல்லது ரிசர்வ் வீரர்கள் உட்பட, மாநிலத்தில் பணியாற்றுபவர்கள்.

ஜவுளித் தொழிலில் பத்லி தொழிலாளர்கள்.

நிரந்தர உடல் ஊனத்தால் (குருட்டுத்தன்மை உட்பட) பாதிக்கப்பட்ட ஒரு நபர்.

மகிளா பிரதான்ஷேத்ரிய பச்சத் யோஜனா அல்லது சிறு சேமிப்பு இயக்குநர் திட்டத்தின் கீழ் முகவராக பிரத்தியேகமாக ஈடுபட்டுள்ள பெண்கள்.

மன ஊனத்தால் பாதிக்கப்பட்ட நபர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள்.

65 வயதுக்கு மேற்பட்ட தனிநபர்கள்.

எனவே, மேற்கூறிய நபர்கள் தொழில்முறை வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறார்கள்.

மேலும் விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பு அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளலாம்.

#கருவூலங்கள்_மற்றும்_கணக்குத்_துறை : R.C எண். 43316/D2/2019 நாள் : 12.12.2019

Tuesday, February 03, 2026

சிறப்பு 'டெட்' அறிவிப்பு எப்போது ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு

அரசு, தனியார் பள்ளிகளில் பணிப்புரியும் ஆசிரியர்களுக்கு, ஜன., மாதமே நடத்துவதாக தெரிவிக்கப்பட்ட, சிறப்பு 'டெட்' தேர்வு அறிவிப்பு எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு வலுத்துள்ளது.

உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி, அரசு, தனியார் பள்ளிகளில், 1 - 8ம் வகுப்புகளுக்கு, கற்பித்தல் பணியில் ஈடுபடும் அனைவரும் கட்டாயம் ஆசிரியர் தகுதித்தேர்வு (டெட்) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இது, பணியை தொடரவும், பதவி உயர்வுக்கும் கட்டாயமாக்கப்பட்டது. இதனால், டெட் தேர்ச்சி பெறாமல் பணியில் உள்ளோருக்காக, சிறப்பு டெட் தேர்வு நடத்தப்படும் என, 2025, அக்., மாதம் அரசாணை வெளியிடப்பட்டது.

இதில், 2026ல், ஜனவரி, ஜூலை, டிசம்பர் மாதங்களில் சிறப்பு டெட் தேர்வு, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) மூலம் நடத்தப்படும். இதன் முடிவுகளுக்கு பின், மீதமுள்ள தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள் எண்ணிக்கை அடிப்படையில், 2027ல் தேவைக்கேற்ப சிறப்பு டெட் தேர்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, டிச., 3ம் தேதி, டி.ஆர்.பி., இணையதளத்தில், சிறப்பு டெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியானது. ஆனால், காரணம் தெரிவிக்காமல், அன்றைய தினமே, இணையதளத்தில் இருந்து விண்ணப்பம் நீக்கப்பட்டது.

இதனால், விரைவில் சிறப்பு 'டெட்' தேர்வு அறிவிப்பு வெளியிட வேண்டுமென்ற கோரிக்கை வலுத்துள்ளது. தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொது செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட் கூறுகையில், “அரசு, உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள், இத்தேர்வை எதிர்கொள்ள, மாநில கல்வியியல் பயிற்சி ஆராய்ச்சி நிறுவனம் சார்பில், மாவட்ட, வட்டார வாரியாக, வார இறுதி நாட்களில் பணியிடை பயிற்சி வழங்குவதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால், எந்தவித பயிற்சி வகுப்புகளும் நடத்தப்படவில்லை. அரசாணையில் குறிப்பிட்டபடி, ஆண்டுக்கு மூன்று முறை தேர்வு நடத்தினால் தான், ஆசிரியர்களால் கற்பித்தல் பணிகளோடு, சுய தயாரிப்பு பயிற்சிகளுக்கும் நேரம் ஒதுக்க முடியும். இத்தேர்வை தள்ளி வைத்தால், பதவி உயர்வுக்கும் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது.

ஜனவரியில் நடத்துவதாக தெரிவிக்கப்பட்ட சிறப்பு 'டெட்' தேர்வுக்கு, இம்மாத இறுதிக்குள் அறிவிப்பு வெளியிட வேண்டும். மேலும், அரசு, உதவிபெறும் பள்ளிகளில் பணியில் உள்ளோருக்கு, அனுபவம் அடிப்படையில் வெயிட்டேஜ் மதிப்பெண்கள் வழங்க வேண்டும்,” என்றார்.
Tuesday, February 03, 2026

CTET 2026 திருத்தப்பட்ட தேதி அறிவிப்பு

CTET 2026 திருத்தப்பட்ட தேதி அறிவிப்பு

It was notified vide Public Notice No. CBSE/CTET/Feb/2026/e-150092/IB dated 25.11.2025 that the 21 Edition of CTET Examination will be conducted on 08th February, 2026 (Sunday).

Now, due to large number of applications received from the candidates, it has been decided to conduct the CTET examination on 07th & 08th February, 2026 (Saturday & Sunday) in 140 cities all over the country. Further, the candidates are also informed that the schedule of examination on both the days will be as below:
Tuesday, February 03, 2026

விரைவில் முதுகலை ஆசிரியர் கலந்தாய்வு?

ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) மூலம் தேர்வு செய்யப்பட்ட 1,960 முதுகலை ஆசிரியர்களுக்கு விரைவில் பணி நியமனம் வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை முன்னிட்டு, முதுகலை ஆசிரியர் காலிப்பணியிட விவரங்களை உடனடியாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யுமாறு பள்ளிக்கல்வித் துறை இணை இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார்.

இந்த நடவடிக்கையால், முதுகலை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு (Counselling) விரைவில் நடைபெறும் என எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்கள் நீண்ட நாட்களாக பணிநியமனத்தை எதிர்நோக்கி இருப்பதால், இந்த அறிவுறுத்தல் அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் உள்ளது.

கலந்தாய்வு தேதி மற்றும் நடைமுறை குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது
Tuesday, February 03, 2026

ஜாக்டோ - ஜியோ : ஆசிரியர் அரசு ஊழியர் அரசுப் பணியாளர் நடத்தும் முதல்வருக்கு நன்றி அறிவிப்பு மாநாடு அழைப்பிதழ்!!!


ஜாக்டோ - ஜியோ

ஆசிரியர் அரசு ஊழியர் அரசுப் பணியாளர் நடத்தும்

நன்றி அறிவிப்பு மாநாடு

ஆசிரியர்-அரசு ஊழியர்- அரசுப் பணியாளர் பேரினமே திரண்டு வாரீர்! வாரீர்!

08 பிப்ரவரி ஞாயிற்றுக்கிழமை

4.00 மணி

YMCA மைதானம் நந்தனம்,சென்னை



Tuesday, February 03, 2026

2-ம் கட்ட ஜேஇஇ முதன்மைத் தேர்வுக்கு 25-க்குள் விண்ணப்பிக்கலாம்

ஏப்​ரல் மாதம் நடை​பெறும் ஜேஇஇ 2-ம் கட்ட முதன்​மைத் தேர்​வில் பங்​கேற்க விரும்​புவோர் பிப்​.25-க்​குள் விண்​ணப்​பிக்க வேண்​டும் என்று என்​டிஏ தெரி​வித்​துள்​ளது.

ஐஐடி, என்​ஐடி போன்ற மத்​திய உயர்​கல்வி நிறு​வனங்​களில் இளநிலைப் படிப்​பு​களில் சேர ஒருங்​கிணைந்த நுழைவுத் தேர்​வில் (ஜேஇஇ) தேர்ச்சி பெற வேண்​டும். முதன்​மைத் தேர்​வு, பிர​தானத் தேர்வு என இது இரு பிரி​வாக நடத்​தப்​படும். இதில் முதன்​மைத் தேர்வை தேசிய தேர்​வு​கள் முகமை (என்​டிஏ) ஆண்​டு​தோறும் 2 கட்​டமாக நடத்துகிறது.

அதன்​படி, 2026-27-ம் கல்வி ஆண்​டுக்​கான ஜேஇஇ முதல்​கட்ட முதன்​மைத் தேர்வு ஜன.21 முதல் 30-ம் தேதி வரை நடத்​தப்பட்​டது. சுமார் 12 லட்​சம் பேர் தேர்வு எழு​தினர். இதன் முடிவு​கள் பிப்​.12-ம் தேதி வெளியிடப்பட உள்​ளன. இதை தொடர்ந்​து, ஜேஇஇ 2-ம் ​கட்ட தேர்வு ஏப்.1 முதல் 9-ம் தேதி வரை நடை​பெற உள்​ளது. இதற்​கான இணை​யதள விண்​ணப்ப பதிவு தற்போது தொடங்​கி​யுள்ளது.விருப்​பம் உள்ள மாணவர்​கள் jeemain.nta.nic.in என்ற இணையதளம் மூலமாக பிப்​.25-க்​குள் விண்​ணப்​பிக்க வேண்​டும்.

முதல்​கட்ட தேர்வை எழு​தி​ய​வர்​களும் பங்​கேற்​கலாம். தமிழ், ஆங்​கிலம், இந்தி உட்பட 13 மொழிகளில் தேர்வு நடை​பெறும். ஹால் டிக்​கெட் வெளி​யீடு உள்​ளிட்ட இதர விவரங்​கள் பின்​னர் வெளி​யிடப்​படும் கூடு​தல் தகவல்​களை nta.ac.in என்ற தளத்​தில் அறிய​லாம். விண்​ணப்​பிப்​ப​தில் சிரமம் இருந்​தால், 011-40759000/ 69227700 என்ற தொலைபேசி எண் அல்​லது jeemain@nta.ac.in எனும் மின்​னஞ்​சலில் தொடர்பு கொண்டு விளக்​கம் பெறலாம் என்று என்​டிஏ வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.
Tuesday, February 03, 2026

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் 2026-ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை தொடக்கம்


தமிழ்நாடு திறந்​தநிலை பல்​கலைக்​கழகத்​தில் 2026 ஆண்​டுக்​கான (ஜனவரி-டிசம்​பர்) மாணவர் சேர்க்கை தொடங்​கியது.

தமிழ்நாடு திறந்​தநிலை பல்​கலைக்​கழகம் தொலை​தூரக் கல்வி திட்​டத்​தில் தமிழ், ஆங்​கிலம், வரலாறு, மேலாண்​மை, வர்த்​தகம், சமூக​வியல், சமூகப் ​பணி, பொருளா​தா​ரம், பொது நிர்​வாகம் உள்​ளிட்ட பல்​வேறு துறை​களில் 11 இளங்​கலை படிப்​பு​களை​யும் 11 முதுகலை படிப்​பு​களை​யும் வழங்கி வரு​கிறது.

இவை தவிர, பல்​வேறு பாடங்​களில் 11 டிப்​ளமா படிப்​பு​கள், 12 சான்​றிதழ் படிப்​பு​கள் உள்​ளிட்​ட​வை​யும் வழங்​கப்​பட்டு வரு​கின்​றன. இந்நிலை​யில், 2026 ஆண்​டுக்​கான (ஜனவரி-டிசம்​பர்) மாணவர் சேர்க்கை நேற்று தொடங்​கப்​பட்​டது. இச்​சேர்க்​கையை பல்​கலைக்​கழக பதி​வாளர் கு.இ​ரா.செந்​தில்​கு​மார் தொடங்​கி ​வைத்​தார்.

இந்​நிகழ்ச்​சி​யில் மாணவர் சேர்க்கை பிரிவு இயக்​குநர் ஆர்​.ஆறு​முகம், மாணவர் உதவி மற்​றும் சேவைப் பிரிவு இயக்​குநர் த.ர​வி​மாணிக்​கம், பாடநூல் தயாரிப்பு மற்​றும் விநி​யோகப் பிரிவு இயக்​குநர் பா.​பாண்​டிய​ வடிவு ஆகியோர் பங்​கேற்​றனர்.

வெவ்​வேறு பாடப் பிரிவு​கள், அவற்​றுக்​கான அடிப்​படைக் கல்​வித் தகு​தி​கள், மாணவர் சேர்க்கை விதி​முறை​கள் உள்​ளிட்ட அனைத்து விவரங்​களை​யும் பல்​கலைக்​கழகத்​தின் இணை​யதளத்​தில் (www.tnou.ac.in) தெரிந்​துக் ​கொள்​ளலாம் என பதி​வாளர் செந்​தில்​ கு​மார் தெரி​வித்​துள்​ளார்​.