Breaking

Tuesday, March 3, 2026

Tuesday, March 03, 2026

பகுதிநேர பயிற்றுநர்களுக்கு ஊதிய உயர்வு மற்றும் சலுகைகள் வழங்கி அரசாணை வெளியீடு!


பகுதிநேர பயிற்றுநர்களுக்கான தொகுப்பூதியத்தினை ₹12,500/-லிருந்து ₹15,000/-ஆக உயர்த்தி அரசாணை வெளியீடு!

பள்ளிக் கல்வி - ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் கீழ் பணிபுரியும் 11,773 பகுதிநேர பயிற்றுநர்களுக்கு 01.01.2026 முதல் தொகுப்பூதியத்தினை ரூ.12,500/- லிருந்து ரூ.15,000/- என 11 மாதத்திற்கு (மே மாதம் நீங்கலாக) ரூ.2,500/- உயர்த்தி வழங்குதல் மற்றும் மே மாதத்திற்கு மட்டும் ரூ.10,000/-சிறப்பு உதவித்தொகை வழங்குதல் -ஆணை வெளியிடப்படுகிறது

G.O.Ms.No.52 - PTI Salary Hike -Download here
Tuesday, March 03, 2026

TNTET July 2026 - தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் விண்ணப்பித்தல் சார்ந்து- DEO Circular

மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் TET தாள்-1, தாள்.11 தேர்வெழுத விண்ணப்பிப்பவர்கள் பள்ளி முதல்வரின் சான்றொப்பம் பெற்ற விண்ணப்ப (Counter signed) நகலை மாவட்டக் கல்வி அலுவலகம் (தனியார் பள்ளிகள்), மூன்றாவது தளம், F" Block, இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 28.02.2026 (சனிக்கிழமை) அன்று காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை விண்ணப்பதாரரே நேரில் வந்து கீழ்கண்ட ஆவணங்களை சமர்ப்பிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து வகை தனியார் பள்ளிகளின் தாளாளர்கள் மற்றும் முதல்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

மாவட்டக் கல்வி அலுவலர்(பொ)

(தனியார் பள்ளிகள்),

இராணிப்பேட்டை.

1 பள்ளித் தாளாளரின் / முதல்வரின் முகப்பு கடிதம்

2. பூர்த்தி செய்யப்பட்ட TET விண்ணப்பம்

3. தற்போது பணிபுரியும் பள்ளியில் வழங்கப்பட்ட நியமன ஆணை (Appointment Letter)

4. பட்டபடிப்பு சான்றிதழ் நகல் பள்ளி தாளாளர்/ முதல்வரின் மேலொப்பமுடன்

(attestation) பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.

5.ஆதார் அட்டை நகல்

6. பள்ளியின் UDISE NO;

7. ஆசிரியரின் EMIS ID;

8. பள்ளியின் EMIS இணையத்திலிருந்து ஆசிரியரின் EMIS ID தெரியும் வகையில் ஸ்கிரீன் ஷாட் (Screenshot)-1நகல்

9. இணைப்பில் காணும் Annexure-I(Service Certificate-2026)




Tuesday, March 03, 2026

களஞ்சியம் செயலி NEW UPDATE VERSION 1.22.8


களஞ்சியம் செயலி NEW UPDATE

Surrender Leave Request Module updated

* Leave Request new enhanced

* Transfer of Pension Pay Office Module updated

* OTP and other SMS services enhanced

* Pensioner Approval Group sorted with ease

* Thiran360 now enabled in Employee Menu

👇👇👇👇👇👇👇

Tuesday, March 03, 2026

நிரந்தரப் பணியிடங்கள் IFHRMS ல் தற்காலிகப் பணியிடங்களாக தொடருதல் தொடர்பான விவரங்களை தொகுத்து அனுப்ப பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!


நிரந்தரப் பணியிடங்கள் IFHRMS ல் தற்காலிகப் பணியிடங்களாக தொடருதல் தொடர்பான விவரங்களை தொகுத்து அனுப்ப பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!

DSE - IFHRMS Salary Issue.pdf

👇👇👇👇Download here
Tuesday, March 03, 2026

சிறப்பு ஆசிரியர் தேர்வில் போனஸ் மதிப்பெண் தொடர்பான அரசாணைக்காக காத்திருக்கும் பகுதிநேர ஆசிரியர்கள்

டிஆர்பி சிறப்பு ஆசிரியர் தேர்வில் பகுதிநேர ஆசிரியர்களுக்கு போனஸ் மதிப்பெண் வழங்குவது தொடர்பான அரசாணை விரைவில் வெளியிடப்பட உள்ளது. இதைத்தொடர்ந்து, சிறப்பு ஆசிரியர் போட்டித் தேர்வு அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரசுப் பள்ளிகளில் உடற்கல்வி, தையல், ஓவியம், இசை உள்ளிட்ட பாடப் பிரிவுகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதிநேர சிறப்பு ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். வாரத்தில் 3 அரை நாட்கள் பணியாற்றும் அவர்களுக்கு தொகுப்பு ஊதியமாக மாதம் ரூ.12,500 வழங்கப்படுகிறது. பணி நிரந்தரம் கோரி அவர்கள் நீண்ட காலமாக போராடி வருகின்றனர்.

சமீபத்தில் அவர்கள் தொடர் போராட்டம் நடத்தியபோது, ‘தொகுப்பூதியம் ரூ.15 ஆயிரமாக உயர்த்தப்படும். கோடைவிடுமுறையான மே மாதம் ரூ.10 ஆயிரம் வழங்கப்படும்’ என்று பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதியளித்தார்.

ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) சிறப்பு ஆசிரியர் பணி நியமனத்துக்கு தேர்வு நடத்தும்போது, பகுதிநேர சிறப்பு ஆசிரியர்களுக்கு பணிக் காலத்துக்கு ஏற்ப குறிப்பிட்ட போனஸ் மதிப்பெண் அளிக்கப்படும் என்றும் வாக்குறுதி அளித்துள்ளார். எனினும், இதுதொடர்பாக இதுவரை அரசாணை வெளியிடப்பட வில்லை.

கடைசியாக 2017-ம் ஆண்டு சிறப்பு ஆசிரியர் நேரடி நியமனத்துக்கு போட்டித் தேர்வு நடத்தப்பட்டு, 1,300 பேர் நியமிக்கப்பட்டனர். அதன்பிறகு 8 ஆண்டுகளாக சிறப்பு ஆசிரியர் நியமனம் நடைபெறவில்லை.

தற்போது நடைமுறையில் உள்ள சிறப்பு ஆசிரியர் தேர்வில் எழுத்து தேர்வுக்கு 95 மதிப்பெண், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்புக்கு (சீனியாரிட்டி) 5 மதிப்பெண் வழங்கப்படுகிறது.

எழுத்து தேர்வில் வெற்றி பெற்று சான்றிதழ் சரிபார்ப்புக்கு வரும் போது, இந்த மதிப்பெண்களின் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு பணி நியமனம் நடைபெறுகிறது.
Tuesday, March 03, 2026

பிளஸ் 2 தமிழ் மொழிப் பாடத் தேர்வு எளிது: அதிக மதிப்பெண் கிடைக்கும் என ஆசிரியர்கள் கருத்து



தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத் தேர்வு நேற்று தொடங்கியது. முதல் நாளில் தமிழ் உள்ளிட்ட மொழிப் பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெற்றன. இத்தேர்வை தமிழகம் முழுவதும் உள்ள 3,412 மையங்களில் 8 லட்சத்து 6,370 மாணவர்கள் எழுதினர். 1,600 தனித் தேர்வர்கள் உட்பட 9,919 பேர் தேர்வு எழுத வரவில்லை.

தேர்வு காலை 10.15 மணிக்கு தொடங்கி மதியம் 1.15 மணி வரை நடைபெற்றது. சென்னை தியாகராய நகரில் உள்ள குண்டூர் சுப்பையா மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பொதுத் தேர்வுக்கான ஏற்பாடுகளை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் ஆய்வு செய்தார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘‘பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் சரியாக தூங்காமல், சரியாக சாப்பிடாமல் உடல்நலனை கெடுத்துக் கொள்ளக் கூடாது. நன்கு படித்துவிட்டு, போதிய அளவு உறங்கிவிட்டு தேர்வுகளை எழுத வேண்டும்.

பெற்றோரும் மாணவர்களுக்கு அழுத்தத்தை கொடுக்க வேண்டாம். விருதுநகர் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கு சென்ற மாணவி விபத்தில் சிக்கிஉயிரிழந்த செய்தி வருத்தமளிக்கிறது. இயன்றவரை, அருகில் உள்ள தேர்வு மையங்கள்தான் மாணவர்களுக்கு ஒதுக்கப்படுகின்றன. எனினும், எதிர்பாராதவிதமாக இதுபோன்ற அசம்பாவிதங்கள் நிகழ்கின்றன.இதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று தெரிவித்தார்.

இதற்கிடையே, பிளஸ் 2 தமிழ் தேர்வு எளிதாக இருந்ததாக மாணவர்கள் தரப்பில் கூறப்பட்டது. இதுகுறித்து தமிழ் ஆசிரியர்களிடம் கேட்டபோது, ‘‘ஒரு மதிப்பெண் பகுதியில் மொத்தம் உள்ள 14 கேள்விகளில் 3 மட்டும் சற்று கடினமாக இருந்தன. மற்ற கேள்விகள் எளிதாகவே இருந்தன.

சிறுவினா, மனப்பாடம், இலக்கணம், நெடுவினா ஆகிய பகுதிகளில் காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் ஏற்கெனவே கேட்கப்பட்ட கேள்விகளே மீண்டும் இருந்தன. இதனால், சராசரியாக படிக்கும் மாணவர்கள்கூட தமிழ்ப் பாடத்தில் அதிக மதிப்பெண் பெற வாய்ப்பு உள்ளது’’ என்றனர்.

இன்று முதல் ‘பிளஸ் 1’ அரியர் தேர்வு: மாணவர்களுக்கான அழுத்தத்தை குறைக்கும் நோக்கில், நடப்பு ஆண்டு முதல் பிளஸ் 1 பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. எனினும், முந்தைய ஆண்டுகளில் பிளஸ் 1 பொதுத் தேர்வில் வெற்றி வாய்ப்பை இழந்த மாணவர்கள், அந்த பாடங்களை அரியர் தேர்வாக எழுத வேண்டும் என்று தேர்வுத் துறை அறிவித்தது. அதன்படி, பிளஸ் 1 அரியர் பொதுத் தேர்வு இன்று (மார்ச் 3) தொடங்குகிறது.
Tuesday, March 03, 2026

தொடக்க / நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் , பட்டதாரி ஆசிரியர்கள், வட்டார கல்வி அலுவலர்கள் தேர்வு நிலை தர ஊதியம் 5400 வழக்கு தீர்ப்பு விரிவான விளக்கம்!

தர ஊதியம் 5400

Grade Pay 5400

தொடக்க / நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் , பட்டதாரி ஆசிரியர்கள், வட்டார கல்வி அலுவலர்கள் தேர்வு நிலை தர ஊதியம் 5400 வழக்கு தீர்ப்பு

* ​அடிப்படை விதிகளே மேலோங்கும்.(Supremacy of Fundamental Rules): அரசாணைகள் அல்லது அரசு கடிதங்களை விட, சட்டப்பூர்வமான அடிப்படை விதிகளே (Fundamental Rules) மேலானவை. விதி 22-B-ல் உரிய திருத்தம் செய்யப்படாமல், ஒரு அரசு கடிதத்தின் மூலம் ஏற்கனவே வழங்கப்பட்ட ஊதியப் பயன்களைக் குறைக்க முடியாது.

* No Recovery ஆசிரியர்களின் தரப்பிலிருந்து எந்தவிதமான மோசடியோ அல்லது தவறான தகவலோ அளிக்கப்படாத நிலையில், பல ஆண்டுகளுக்குப் பிறகு ஏற்கனவே வழங்கப்பட்ட ஊதியத்தை வசூலிப்பது சட்டப்படி செல்லாது

* FR 22 B திருத்தப்படாத நிலையில் தணிக்கை தடை நிலுவையில் இருப்பதனால் , அரசாணைகளின் படி வழங்கப்பட்ட தேர்வு நிலை ஊதியத்தை குறைத்து AG பென்ஷன் நிர்ணயம் செய்ய கூடாது.AG எந்த தொகையையும் பிடிக்க கூடாது .FR 22 B திருத்தப்பட்ட பிறகு பென்ஷன் திருத்தி அமைக்கலாம் .ஆனால் கூடுதலாக வழங்கப்பட்ட தொகையை பிடிக்க கூடாது recovery கூடாது

* FR 22 B தான் மேலோங்கும்.அரசு கடிதம் FR 22 B ஐ நீர்த்து போக செய்ய முடியாது .

FR 22 B ன் படி தேர்வு நிலை ஊதிய நிர்ணயம் செய்யப்பட்டதை , அரசு கடிதம் மூலம் ரத்து செய்ய முடியாது.

* தர ஊதியம் 5400 ஏமாற்றியோ , தவறான விண்ணப்பம் மூலம் பெறப்படவில்லை என்பதை தணிக்கை தடைக்கு தொடக்கக் கல்வி இயக்குநர் வழங்கிய தெளிவாணை மூலம் உறுதியாகிறது .அரசாணையின் படி வழங்கப்பட்ட ஊதியத்தை ,மக்களின் வரிப்பணம் என்று காரணம் கூறி recovery ஏற்றுக் கொள்ள முடியாது.

* தற்போதைய வழக்கில்,

FR 22 B ன் படி

1.1.2006 க்கு முன்னர் தேர்வு நிலை/சிறப்பு தரத்திற்கு மாற்றப்பட்ட நபர்கள்

மற்றும்

1.1.2006 க்குப் பிறகு அடுத்த தேதியில் தேர்வு நிலை/சிறப்பு தரத்தில் திருத்தப்பட்ட ஊதிய விகிதங்களைத் தேர்வுசெய்தவர்கள் மற்றும் அவர்களின் பதவி உயர்வுக்குப் பிறகு, அரசு ஊழியர் அதே அளவு விகிதத்தைத் தக்க வைத்துக் கொள்ள அனுமதிக்கப்படுகிறார்கள். FR 22 B விதி திருத்தப்படாமல், ஊதிய விகிதங்களை திருத்துவது தொடர்பான ஒரு நபர் ஆணையத்தின் பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்ட தெளிவாணைகளின் அடிப்படையில் ஊதியத்தை குறைக்க முடியாது .அரசு தெளிவாணை கடிதங்களை விட FR 22 B மேலோங்கும் என்பது உறுதி படுத்தப்பட்டது .

* FR 22 B (11) (1) 1.1.2006 க்கு முன்னர் கீழ்ப் பதவியின் தேர்வு நிலை அல்லது சிறப்பு நிலைக்கு மாற்றப்பட்ட அரசு ஊழியர், 1.1.2006 க்குப் பிறகு பதவி உயர்வு அல்லது உயர் பதவிக்கு நியமிக்கப்பட்ட சந்தர்ப்பங்களில், மேலும் 1.1.2006 க்குப் பிறகு தேர்வு நிலை அல்லது சிறப்பு நிலைக்கு மாற்றப்பட்டு திருத்தப்பட்ட ஊதிய விகிதத்தைத் தேர்வுசெய்த சந்தர்ப்பங்களில்,

1.1.2006 க்குப் பிறகு, கீழ்நிலைப் பதவியின் தேர்வு நிலை அல்லது சிறப்பு நிலை ஒரே மாதிரியான அல்லது அதிக ஊதியக் குழு மற்றும் அல்லது தர ஊதியத்தைக் கொண்ட சந்தர்ப்பங்களில், அரசு ஊழியர் 17.08.2009 தேதியிட்ட அரசு கடிதம் எண்.45113/நிதி (பிசி) துறையில் வெளியிடப்பட்ட தெளிவுபடுத்தல்களின்படி, கீழ்நிலைப் பதவியின் தேர்வு நிலை அல்லது சிறப்பு நிலைக்கு பொருந்தக்கூடிய அதே ஒத்த அல்லது அதிக ஊதியக் குழு மற்றும் தர ஊதியத்தில் தொடர அனுமதிக்கப்படுவார். அரசு ஊழியர் பயன்படுத்தும் விருப்பத்தின் அடிப்படையில், பதவி உயர்வு அல்லது நியமனம் செய்யப்பட்ட தேதியிலிருந்து அல்லது கீழ்நிலைப் பதவியில் அடுத்த ஊதியக் குழு திரட்டப்பட்ட தேதியிலிருந்து ஒரு ஊதியக் குழு சலுகையுடன்.

FR 22 B (11) (1) இன்று வரையிலும் நடைமுறையில் உள்ளது .

* அரசு கடிதம் எண் 63305 நிதித்துறை நாள் 30.11.2010

ல் 4 (1) ன் படி ஊதிய நிர்ணயம் மட்டுப்படுத்தப்பட வேண்டும் .இது ஊதிய நிர்ணய தெளிவாணை கடிதம் .ஆனால் FR 22 B (11) (1) ன் படி தர ஊதியம் 5400 வழங்கப்பட்டது சரி .அரசின் தெளிவாணை கடிதத்தை விட FR 22 B மேலோங்கும்

நீதிமன்ற வழிகாட்டுதல்கள்

* 1.தேர்வு நிலை / சிறப்பு நிலையில் முறையே அப்பணியிடத்தின் முதல் மற்றும் இரண்டாம் நிலை பதவி உயர்வு பணியிடங்களின் சாதாரண நிலை ஊதிய விகிதத்திற்கு மட்டுப்படுத்தப்பட வேண்டும் என்ற ஆணை ரத்து செய்யப்படுகிறது. தேர்வு நிலை / சிறப்பு நிலைக்கு வழங்கப்பட்ட ஊதியத்தை recovery செய்ய கூடாது.

* 2.பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்களின் ஓய்வு கால பயன்களில் இருந்து recovery செய்ய கூடாது

* 3 .பணியில் உள்ள ஆசிரியர்களுக்கும் recovery கூடாது

* 4.ஊதியத்தில் தொகை பிடிக்கப்பட்டு இருந்தால் திருப்பி தர வேண்டியதில்லை.FR 22 B திருத்தம் செய்யப்பட்ட பிறகு ஏதேனும் தொகை வழங்க வேண்டி இருந்தால் வழங்கலாம்

* 5.FR 22 B திருத்தப்படும் வரை ஊதிய நிர்ணயத்தை அனைவருக்கும் திருத்த கூடாது .

* 6)G.O. Ms. No.63305/Pay Cell/2020-1 நாள் : 08.11.2020ஐப் பொறுத்து, FR 22-B இல் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட்டால், பணியில் இருப்பவர்களின் தேர்வு தரத்தில் அவர்களின் சம்பள அளவுகளை மறுசீரமைப்பதன் மூலம் பணியில் உள்ள நபர்களின் சம்பளத்தையும், தேர்வு தரத்தில் அவர்களின் சம்பள அளவுகளை மறுசீரமைப்பதன் மூலம் ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதிய சலுகைகளையும் திருத்த சுதந்திரம் கொண்டுள்ளனர். G.O. Ms. No.63305/Pay Cell/2010-1 நாள் 8.11.2010 இன் பத்தி 4 (i) இன் அடிப்படையில் செலுத்த வேண்டிய ஏற்றுக்கொள்ளத்தக்க ஓய்வூதியத்தைக் கணக்கிடுவதற்கு FR 22-B இல் செய்யக்கூடிய திருத்தங்களுக்கு ஏற்ப, இது வருங்காலமாக மட்டுமே பொருந்தும், பின்னோக்கி அல்ல.

* 7.)FR 22 B திருத்தம் செய்யப்பட்ட பிறகு HM - MS பணியில் 10 ஆண்டுகள் பணியாற்றியது அடிப்படையில் தேர்வு நிலை அனுமதிக்கப்படும்

* 8 )FR 22 B ல் திருத்தம் செய்யப்பட்ட பிறகு HM - PS தேர்வு நிலை ஊதிய நிர்ணயம் மாற்றப்பட்டு அதன் தொடர்ச்சியாக HM - MS தேர்வு நிலை ஊதிய நிர்ணயம் மாற்றப்படும் போது , ஏதேனும் தொகை வழங்க வேண்டி இருந்தால் நிலுவைத் தொகையுடன் வழங்கப்பட வேண்டும்.

* 9)ஓய்வு பெற இருப்பவர்களுக்குஓய்வு பெற்ற தேதியில் கடைசியாக பெற்ற ஊதியத்தின் அடிப்படையில் ஓய்வூதியம் AG அனுமதிக்க வேண்டும். ஓய்வு பெற்றவர்களுக்கு கடைசியாக பெற்ற ஊதியத்தின் அடிப்படையில் ஓய்வூதியம் கணக்கிட்டு நிலுவை தொகையுடன் வழங்க வேண்டும்.

.....................................

தீர்ப்பு பொது தீர்ப்பாகும் .FR 22 B திருத்தம் எல்லோருக்கும் செய்யப்படும் . தீர்ப்பில் AG க்கும் ஓய்வூதியம் வழங்குவது தொடர்பாக பொதுவான வழிகாட்டுதல் தான் வழங்கப்பட்டு உள்ளது . பிடிக்கப்பட்ட தொகையை திரும்ப உடனே வழங்க வேண்டியதில்லை என்பது திரு குணசேகரன் உச்ச நீதிமன்ற வழக்கின் தீர்ப்புக்கு எதிரானது .திரு குணசேகரன் தணிக்கையின் மூலம் கூடுதலாக வழங்கப்பட்ட தொகையை பிடித்த பிறகு , ஓய்வூதியம் பெற்றார். ஓய்வு பெறும் தருவாயில் பிடித்த தொகை 726651 உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு 27.01.2025 கல்வித்துறையால் வழங்கப்பட்டு உள்ளது.gratuity உட்பட நிறுத்தி வைக்கப்பட்டு / கட்டிய பிறகு ஓய்வூதியம் பெற்றவர்கள் உறுதியாக திரும்ப மேல் முறையீடு / சீராய்வில் உறுதியாக பெறலாம்.

சட்ட வழிகாட்டல் பெற தொடர்பு கொள்க

ஆ. மிகாவேல் ஆசிரியர் , மணப்பாறை
Tuesday, March 03, 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 03.03.2026


திருக்குறள்: 

குறள் 591: 

உடையர் எனப்படுவ தூக்கமஃ தில்லார் 
உடைய துடையரோ மற்று.  
        
விளக்க உரை: 

ஒருவர் பெற்றிருக்கின்றார் என்று சொல்லத்தக்க சிறப்புடையது ஊக்கமாகும், ஊக்கம் இல்லாதவர் வேறு எதைப் பெற்றிருந்தாலும் அதை உடையவர் ஆவரோ.

பழமொழி :

As you sow, so you reap.   

வினை விதைத்தவன் வினை அறுப்பான்.

இரண்டொழுக்க பண்புகள் :.

1. எனது உணவானது விவசாயி போன்ற பலர் உழைப்பில் வருகிறது.

2. எனவே உணவை வீணாக்க மாட்டேன்.

பொன்மொழி : 

நீ நடந்து போக பாதை இல்லையே என்று கவலைப்படாதே.  நீ நடந்தால் அதுவே பாதை - அடால்ஃப் ஹிட்லர்

பொது அறிவு : 

01.இந்தியாவில் காற்றாலை மின் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாநிலம் எது?

            குஜராத்- Gujarat

02. சென்னை உயர் நீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதி யார்?

 நீதிபதி.மனிந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா

Hon'ble Mr. Justice Manindra Mohan Shrivastava

English words :

Scrutinize - check closely   

 refrain - stop

தமிழ் இலக்கணம்: 

 சின்னக்கொடி
சின்ன கொடி 
எது சரி 
பிரித்து பார்ப்போம்
சின்னக்கொடி = சின்னம் + கொடி
இது சரி. கட்சியின் சின்னம் கொண்ட கொடி என்று பொருள் படும்.

சின்ன கொடி = சின்ன+கொடி
சிறிய கொடி என்று பொருள்.
இரண்டும் சரியே.
1. சின்னம் என்ற சொல் நாம் உபயோகப் படுத்தும் போது வல்லினம் மிகுந்து வரும்
2. எது சரியான சொல் என்ற சந்தேகம் இருந்தால் பிரித்து பார்த்தால் தெளிந்து விடும்

அறிவியல் களஞ்சியம் :

சர்வதேச பூமிச் சுழற்சி மற்றும் குறிப்பு முறைமைச் சேவை என்னும் நிறுவனம் அணுக்கடிகாரங்களைப் பயன்படுத்தி, மில்லி வினாடி துல்லியத்துடன் பூமியின் சுழற்சி நீளத்தைக் கண்காணித்து வருகிறது. 1972 முதல் இந்தப் பதிவுகள் வைக்கப்பட்டு வருகின்றன. பூமி அதன் உருவாக்கத்திலிருந்து பெற்ற சுழற்சி உந்தத்தின் காரணமாக சுழல்கிறது. சந்திரனின் ஈர்ப்பு விசை நீண்ட காலமாக அதன் வேகத்தைக் குறைத்து வருகிறது. சமீப காலங்களில், பூமியின் உள்ளகம், புவியின் மேலோடு, கடல் நீரோட்டங்கள், வளிமண்டல மாற்றங்கள் போன்ற சிக்கலான உள் காரணிகள் தினசரி சுழற்சி வேகத்தில் சிறிய ஏற்ற இறக்கங்களை ஏற்படுத்துகின்றன என கணிப்பு.

மார்ச் 03

உலகக் காட்டுயிர் நாள்

உலகக் காட்டுயிர் நாள் (World Wildlife Day) அருகிவரும் காட்டு விலங்குகள் மற்றும், தாவரயினங்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கமாக, ஒவ்வொரு ஆண்டும், மார்ச் 3 இல் உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. 2013, டிசம்பர் 20 அன்று, ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் (UNGA) 68 ஆவது அமர்வில் “காட்டு விலங்குகள், மற்றும் தாவரங்கள் அருகிவரும் உயிரினங்களின் சர்வதேச வர்த்தக சாசனம்” (CITES) மூலம் இந்நாளை உலகக் காட்டுயிர் நாளாக தாய்லாந்தினால் முன்மொழியப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது.
இம்முயற்சியில் சர்வதேச கவனத்தை ஈர்க்கும் பொருட்டு திரைப்பட விழா, விழிப்புணர்வு கருதரங்கங்களை ஐ. நா நடத்திவருகிறது.

நீதிக்கதை

 திருந்திய மகன்


சிவாவின் தந்தை கல் உடைக்கும் கூலித் தொழிலாளி. வெயிலில் மாதம் முழுவதும் உழைத்தாலும் கூட அவருக்கு மாத வருமானம் மிகவும் குறைவுதான். அந்த வருமானத்திலேயே அவர் குடியிருக்கும் வீட்டுக்கு வாடகை, உணவு மற்றும் இதரச் செலவுகளையும் பார்த்துக் கொள்ள வேண்டும். தான் படும் கஷ்டங்களைப் போல் தன்மகன் கஷ்டப்படக்கூடாது என்பதற்காக சிவாவை நன்றாகப் படிக்க வைக்க வேண்டும் என எண்ணினார்.

சிவா ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தான். சிவா! கடமைக்காக பள்ளிக்கு சென்று வந்தானே தவிர, ஒழுங்காகப் படித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற எண்ணம் அவனுக்குச் சிறிது கூட இல்லை. பள்ளியில் சிறிதுநேரம் இருப்பான். பிறகு சில மாணவர்களுடன் சேர்ந்து விளையாடிக் கொண்டும் பொழுதை கழித்து வந்தான். தன் தந்தையிடம் செலவுக்குக் காசு வாங்கிக் கொள்வான்.

அவர், சிவா தனக்கு ஒரே மகன் என்பதாலும், படிக்கும் மாணவர்கள் ஏதாவது வாங்கிச் சாப்பிடுகிறார்கள் என்றும் எண்ணி அவன் கேட்கும்பொழுதெல்லாம் பணம் கொடுப்பார். சிவா, தன் தந்தையார் கொடுத்த பணத்தை வாங்கிச் சாப்பிடாமல், தீய நண்பர்களுடன் சேர்ந்து சூதாட்டம் ஆடினான். மற்றவர்கள் அவன் கெட்டவன் என வெறுத்து ஒதுக்கும்படி அவனுடைய செயல்கள் இருந்தன.

அவனுடைய வகுப்பாசிரியர், அவனுடைய நடவடிக்கைகள் சரியில்லை என்று கண்டித்தார். பிறகு, அவனுடைய அப்பாவிடம் அவனைக் கண்டித்து வளர்க்குமாறும் சொன்னார். ஆனால், இவற்றால் எந்தப் பயனும் ஏற்படவில்லை. சிவாவின் தந்தையார் அவனுடைய செயல்களால் பெரிதும் மனம் வருந்தினார்.

ஒருநாள் காவல்துறையினர் 10 பேரை சாலையில் அடித்து உதைத்தபடி, இழுத்துச் சென்று கொண்டிருந்தனர். இதை பார்த்த சிவா கூடியிருந்தவர்களிடம், அவர்களை ஏன் காவல் துறையினர் அடிக்கிறார்கள்? என்று கேட்டான். அவர்கள் சூதாட்டம் ஆடிக் கொண்டிருந்தவர்கள், என்று கூறினர். பலநாட்களாக அவர்கள் அகப்படவில்லையென்றும், இன்று வகையாக அகப்பட்டுக் கொண்டார்கள் என்றும் அவர்கள் அவனிடம் கூறினர்.

அதைக் கேட்டதும் சிவாவிற்கு கை, கால்கள் உதறல் எடுத்தது. மற்றவர்கள் வெறுக்கும்படி நடந்தால் இப்படித்தான் உதைபட வேண்டும் போலிருக்கிறது என்று எண்ணி அன்றிலிருந்து திருந்திவிட்டான். அன்றிலிருந்து தீய நண்பர்களுடன் சேராமல், தந்தையிடம் பணம் வாங்காமல் பள்ளிக்கு ஒழுங்காக சென்று பாடங்களை நன்றாக படித்து வந்தான். தன் மகன் சிவா திருந்தியதைக் கண்ட அவன் தந்தை மிகவும் மகிழ்ச்சியடைந்தார்.

இன்றைய செய்திகள்

03.03.2026

⭐இன்றைய செய்திகள்

⭐ இந்தாண்டின் மார்ச் முதல் மே வரையில், வட இந்தியாவில் வழக்கத்தை விட அதிக வெப்பம் பதிவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

⭐ ஈரான் மீது அமெரிக்கா & இஸ்ரேல் நடத்திய தாக்குதலின் காரணமாக உலக அளவில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், கடந்த 2 நாட்களில் மட்டும் இந்தியாவில் சுமார் 850 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. 

⭐மத்திய கிழக்கில் போர் சூழல் இந்தியாவின் ரூ.6 ஆயிரம் கோடி அரிசி ஏற்றுமதி கடும் பாதிப்பு

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀T20 WC 2026:அரை இறுதியில் நியூஸிலாந்தை எதிர்கொள்கிறது தென் ஆப்பிரிக்கா!

🏀ரஞ்சி கோப்பை இறுதிப்போட்டி: கர்நாடகாவை வீழ்த்தி வரலாறு படைத்த ஜம்மு காஷ்மீர்

Today's Headlines

⭐ The India meteorological department has said that North India will experience warmer then usual temperatures from March to May this year.                        

⭐ As global tensions rise due to the US and Israel's attack on Iran around 850 flights have been cancelled in India in the last 2 days.  

⭐ India's rupees 6000  crore rice exports hit hard by the war situation in the middle East.                                 

⭐Sports news :
 
⭐ T20 WC 2026 South Africa to face New Zealand in the Semi final.            

⭐ Ranji trophy final -Jammu and Kashmir creates history by defeating Karnataka

Covai women ICT_போதிமரம்

Monday, March 2, 2026

Monday, March 02, 2026

1 முதல் 9 வகுப்புகள் வரை முழு ஆண்டு தேர்வு எப்பொழுது - அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு

மூன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை முழு ஆண்டு தேர்வு எப்பொழுது நடைபெறும் என்று தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு அன்பில் மகேஷ் கொய்யா மொழி அவர்கள் அறிவித்துள்ளார்கள்

தற்போது நடைபெற்று வரும் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொது தேர்வுகள் நிறைவடைந்த உடன் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு முழு ஆண்டு தேர்வை நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளதாக மாண்புமிகு அமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளார்கள்

வருகின்ற ஏப்ரல் மாதம் தமிழக சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுவதால் பள்ளிகளுக்கான முழு ஆண்டு தேர்வினை விரைந்து முடிக்க உத்வேசிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது

அதன்படி ஏப்ரல் இரண்டாம் வாரத்திற்குள் அனைத்து வகுப்புகளுக்கும் முழு ஆண்டு தேர்வை முடித்து முடித்துவிட திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் அறிவித்துள்ளார்கள்
Monday, March 02, 2026

Elections Conduct of two-days Training programme for Returning Officers/ Assistant Returning Officers (AROS) for General Elections to TNLA, 2026 Instructions Communicated -Regarding.


Elections Conduct of two-days Training programme for Returning Officers/ Assistant Returning Officers (AROS) for General Elections to TNLA, 2026 Instructions Communicated -Regarding.

I am to invite your kind attention to the references cited and to inform that it is decided to conduct 2 days Zonal level Training Programme for Returning Officers/Assistant Returning Officers in the districts like Chennai, Villupuram, Salem, Coimbatore, Madurai, Tiruchirappalli and Tirunelveli on 03.03.2026 and 04.03.2026.The details of zone-wise training and the SLMTs details who will conduct the training session as Resource Person are as follows

Election Training March 3&4 - Download here
Monday, March 02, 2026

தொடக்க / நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் , வட்டார கல்வி அலுவலர்கள் , பட்டதாரி ஆசிரியர்கள் தர ஊதியம் 5400 வழக்கின் தீர்ப்பு விவரம் :

தர ஊதியம் 5400

Grade Pay 5400

தொடக்க / நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் , வட்டார கல்வி அலுவலர்கள் , பட்டதாரி ஆசிரியர்கள் தர ஊதியம் 5400 வழக்கின் தீர்ப்பு

இன்று 02.03.2026 தீர்ப்பு அளிக்கப்பட்டது.

* No recovery is ordered, totally 8 directions are given, it was not pronounced in open court..

* Recovery கூடுதலாக வழங்கப்பட்ட தொகையை திரும்ப செலுத்த வேண்டியதில்லை.

* Refixation FR 22 B தீர்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது.

* தீர்ப்பில் 8 வழிகாட்டல் வழங்கப்பட்டு உள்ளது

* Recovery செய்ய மாட்டோம் என்று அரசு தரப்பில் கூறப்பட்டு உள்ளதால் அரசு வழக்கை மேல் முறையீடு செய்ய வாய்ப்பில்லை.

* கல்வித்துறை recovery பிடிக்க மாட்டோம் என்று நீதிமன்றத்தில் கூறியுள்ள நிலையில்.. பொது செயல்முறை வெளியிடப்பட வேண்டும் . தீர்ப்பு கூறப்பட்டவுடன் செயல்முறை வெளியிடப்படும் என்று டிட்டோ ஜாக்கிடம் இயக்குநர் தெரிவித்தவாறு கல்வித்துறை செயல்முறை ஆணை வெளியிட வேண்டும்.


* தீர்ப்பு பொது தீர்ப்பாக கூறப்பட்டு இருக்கும்

* நகல் கிடைத்தவுடன் விரிவாக பதிவு செய்கின்றேன்

* சட்ட வழிகாட்டல் பெற தொடர்பு கொள்க .

ஆ. மிகாவேல் ஆசிரியர் .

மணப்பாறை
Monday, March 02, 2026

"விரைவில் தேர்வுகளை முடிக்க ஏற்பாடு " - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ்

"விரைவில் தேர்வுகளை முடிக்க ஏற்பாடு”

சட்டமன்றத் தேர்தல் வருவதால் விரைந்து அனைத்து வகுப்புகளுக்கும் தேர்வுகளை முடிக்க ஏற்பாடு; பொதுத்தேர்வுகள் முடிந்த உடனே ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை முழு ஆண்டு தேர்வு தொடங்கும்

ஏப்ரல் இரண்டாம் வாரத்திற்குள் இந்த தேர்வுகள் அனைத்தும் நிறைவு செய்யப்பட்டு மாணவர்களுக்கு விடுமுறை விடப்படும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ்
Monday, March 02, 2026

கேந்த்ரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழை பயிற்று மொழியாக்க திட்டம்

'தமிழகத்தில் இயங்கும் சில குறிப்பிட்ட கேந்த்ரிய வித்யாலயா பள்ளிகளில், பரிட்சார்த்த முறையில், தமிழை பயிற்றுமொழியாக அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என, சென்னை கேந்த்ரிய வித்யாலயா சங்கதன் மண்டல துணை ஆணையர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

கோவை, சவுரிபாளையம், கேந்த்ரிய வித்யாலயா பள்ளியில், தமிழை பயிற்று மொழியாக அமல்படுத்த வேண்டும் என, மறுமலர்ச்சி மக்கள் இயக்க தலைவர் ஈஸ்வரன், சென்னை கேந்த்ரிய வித்யாலயா சங்கதன் மண்டல அலுவலகத்திற்கு மனு அளித்தார். மனுவுக்கு, துணை ஆணையர் செந்தில்குமார் அளித்த பதில்: நாடு முழுதும் பணிபுரியும் மத்திய அரசு மற்றும் பாதுகாப்பு துறை ஊழியர்களுக்கு, எப்போது வேண்டுமானாலும் பணி மாறுதல் இருக்கலாம். அச்சமயங்களில், அவர்கள் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படாமல் இருக்கவே கே.வி., பள்ளிகள் உருவாக்கப்பட்டன. இதனால், கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ், இப்பள்ளிகள், சிறப்பு வகை பள்ளிகளாக கருதப்படுகின்றன. இங்கு, மத்திய அரசு கொள்கைகள், கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின் கட்டமைப்புக்குள், கே.வி., சங்கதன் வழிகாட்டுதல்படி சேர்க்கை பணிகள் நடக்கின்றன. தமிழகத்தில் இயங்கும் குறிப்பிட்ட சில கே.வி., பள்ளிகளில், தமிழை பயிற்று மொழியாக அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இம்முன்னோடி திட்டத் தின் முடிவுகள் மற்றும் மதிப்பீட்டின் அடிப்படையில், மற்ற கே.வி., பள்ளிகளில் அந்தந்த பிராந்திய மொழி, பயிற்றுமொழியாக்குவது குறித்து எதிர்காலத்தில் முடிவு எடுக்கப்படும். இவ்வாறு, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மறுமலர்ச்சி மக்கள் இயக்க தலைவர் ஈஸ்வரன் கூறுகையில், ''கே.வி., பள்ளிகளில் தமிழை ஒரு பாடமாக கட்டாயம் கற்பிக்க வேண்டுமென, நீண்ட காலமாக போராடியதற்கு கிடைத்த வெற்றியாக இந்த அறிவிப்பு உள்ளது; இது வரவேற்கத்தக்கது. ''இதேபோல, ஆங்கிலம் பயிற்றுமொழியாக உள்ள கே.வி., பள்ளிகளில், தமிழ் ஒரு மொழிப்பாடமாக கற்பிக்க வேண்டும். மத்திய அரசின் கீழ் இயங்கும் அனைத்து வகை பள்ளிகளிலும், தமிழை கட்டாய மொழிப்பாடமாக மாற்ற வேண்டும்,'' என்றார்.
Monday, March 02, 2026

2,469 இடைநிலை ஆசிரியா்கள்; 11 பழங்குடி பட்டியலின ஆசிரியா்களுக்கு பணி நியமன ஆணை: அமைச்சா் அன்பில் மகேஸ் வழங்கினாா்!

ஊராட்சி ஒன்றிய மற்றும் சிறுபான்மை மொழி தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் காலியாக இருந்த இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியா்கள் பணியிடங்களுக்கு ஆசிரியா் தோ்வு வாரியம் மூலம் 2,469 போ் தோ்வு செய்யப்பட்டு, அவா்களுக்கான பணி நியமன ஆணைகளை பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா். மேலும், 11 பழங்குடியினா் பிரிவைச் சோ்ந்தவா்களுக்கும் பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
பள்ளிக்கல்வித் துறையில் தொடக்கக் கல்வி இயக்கக் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் ஊராட்சி ஒன்றிய தொடக்க, நடுநிலைப் பள்ளிகள், சிறுபான்மை மொழி உதவிப் பள்ளிகளில் கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் ஆசிரியா் பணியிடங்கள் காலியாக இருந்தன.

இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியா் காலிப் பணியிடங்களை நிரப்ப அரசு ஒப்புதல் அளித்து ஆசிரியா் தோ்வு வாரியத்தின் மூலம் ஆசிரியா் தகுதித் தோ்வு, போட்டித் தோ்வில் தோ்ச்சிப் பெற்றவா்கள் 2025-ஆம் ஆண்டு முதல் நேரடி நியமனம் செய்யப்பட்டனா்.

அதன்படி, 2,342 இடைநிலை ஆசிரியா்கள் நியமனம் செய்யப்பட்டனா். அதேபோல், தேசிய திறந்தவெளி பள்ளி நிறுவன மூலம் தோ்ச்சி பெற்ற 25 போ், ஆதரவற்ற விதவைகள் 4 , பிறமொழி சிறுபான்மையின ஆசிரியா்கள் 68 நபா், பட்டதாரி ஆசிரியா்கள் 18 போ், 1 பின்னடைவுப் பணியிடம் என மொத்தம் 2,458 நபா் இடைநிலை ஆசிரியா்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

மேலும், உயா்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் தீா்ப்புகளைப் பின்பற்றி இனச்சுழற்சி முறையில் ஆதிதிராவிடா், பழங்குடியினா் 12 குறைவு பணியிடங்களுக்கும் இடைநிலை ஆசிரியா்கள் தோ்வு செய்யப்பட்டு சான்றிதழ் சரிபாா்ப்புப் பணி நடைபெற்றது. இதில் தோ்ச்சி பெற்ற 11 பழங்குடி பட்டியலின இடைநிலை ஆசிரியா்களுக்கு பணிநியமன ஆணை வழங்கப்பட்டது.

இதற்கான நிகழ்ச்சியில் தலைமைச் செயலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பணிநியமன ஆணைகளை பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழங்கினாா்.

இதன்மூலம் கடந்த ஓராண்டில் மொத்தம் 2,469 இடைநிலை ஆசிரியா்கள் பணி இடங்கள் நிறப்பப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Monday, March 02, 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 02.03.2026


திருக்குறள்: 

குறள் 581: 

ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும் 
தெற்றென்க மன்னவன் கண்.

 விளக்க உரை: 

ஒற்றரும் புகழ் அமைந்த நீதிநூலும் ஆகிய இவ்விருவகைக் கருவிகளையும் அரசன் தன்னுடைய கண்களாகத் தெளியவேணடும்.

பழமொழி :

As the fool things so the bell clinks. 

  பயந்தவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய். 

இரண்டொழுக்க பண்புகள் :.

1. எனது உணவானது விவசாயி போன்ற பலர் உழைப்பில் வருகிறது.

2. எனவே உணவை வீணாக்க மாட்டேன்.

பொன்மொழி : 

பயத்தை வெல்ல விரும்பினால் வீட்டில் உட்கார்ந்து அதைப்பற்றி சிந்தித்துக் கொண்டே இருந்தால் மட்டும் போதாது . வெளியில் வந்து செயலில் இறங்க வேண்டும்- டேல் கார்னகி

பொது அறிவு : 

01.உலகின் மிக நீளமான நீர்ப்பாசன கால்வாய் எது?

இந்திரா காந்தி கால்வாய் - இந்தியா 

 Indira Gandhi Canal - India 

02.தாவரங்களின் மிக நுண்ணிய  வளர்ச்சியைக் கண்டறியவும், அளவிடவும் உதவும் முக்கியக் கருவி  எது?

கிரெஸ்கோகிராஃப் -Crescograph

English words :

Passed out -became unconscious

Passed away-died

தமிழ் இலக்கணம்: 

 சின்னத்தம்பி
சின்னதம்பி
இந்த இரண்டில் எது சரி? வல்லினம் மிகுமா மிகாதா என்று காண்போம் வாருங்கள்.
பிரித்து பார்ப்போம்.
சின்னத்தம்பி = சின்னம்+ தம்பி 
இதன் பொருள் சின்னம் உடைய தம்பி. அப்படி ஒரு சொல் கிடையாது.
அடுத்த சொல்லைப் பார்ப்போம்
சின்னதம்பி = சின்ன+ தம்பி.
இதன் பொருள் சிறிய தம்பி எனவே
 *சின்னதம்பி* என்பதே சரியான சொல் ஆகும்.
 ......தொடரும்

அறிவியல் களஞ்சியம் :

 2020 ஆம் ஆண்டு முதல், பூமி அதன் சொந்த சுழற்சி வேக சாதனைகளை மீண்டும் மீண்டும் உடைத்து வருகிறது. 2024, ஜூலை 5, அன்று, பூமி வழக்கத்தைவிட 1.66 மில்லி வினாடிகள் வேகமாக சுழன்றது, இதுவே இதுவரை அளக்கப்பட்ட  எல்லா காலத்திற்குமான குறுகிய நாள். 2024 ஜூலை 9 அன்று 1.36 மில்லி வினாடிகள் குறைவான நேரத்திலும், ஜூலை 22 அன்று  1.34 மில்லி வினாடிகள் குறைவான நேரத்திலும் பூமி சுழன்றது என்று அறியப்பட்டது

மார்ச் 02

சரோஜினி நாயுடு அவர்களின் நினைவு நாள் 




சரோஜினி நாயுடு அல்லது சரோஜினி சட்டோபத்யாயா (பிப்ரவரி 13,1879ஹைதராபாத் - மார்ச் 2,1949லக்னோ) அவர் இந்தியாவின் நைட்டிங்கேல் என்றும் அழைக்கப்படுகிறார். இவர் ஒரு பிரபலமான சிறுமுது அறிஞர், கவிஞர், எழுத்தாளர் ,சுதந்திரப் போராளி மற்றும் சமூக ஆர்வலர் ஆவார். இந்திய தேசிய காங்கிரசின் இரண்டாவது பெண் தலைவரும் உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதல் பெண் ஆளுனரும் ஆவார்.அவரது பிறந்த நாள் இந்தியாவில் மகளிர் தினமாக கொண்டாடப்படுகிறது.

1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 15 ஆம் நாள் இந்தியா சுதந்திரம் பெற்றதற்குப் பிறகு அவர் யுனைட்டட் ப்ரொவின்சஸ் (தற்போது உத்தரப்பிரதேசம் என்று அழைக்கப்படுகிறது) ன் ஆளுநராக பதவியேற்றார். இதன் வழியாக இந்தியாவின் முதல் பெண் ஆளுநரானார். மார்ச் 2, 1949 அன்று மாரடைப்பால் அவர் மரணமடைந்தார்.

நீதிக்கதை

 அதி புத்திசாலிகள்!


முன்னொரு காலத்தில் ஒரு நாட்டில் வாழும் மக்கள், இந்த உலகத்திலேயே தாங்கள்தான் பெரிய அறிவாளிகள் என்று நினைத்துக் கொண்டிருந்தனர். ஆனால், அவர்கள் அனைவரும் சரியான முட்டாள்கள் என்பது அவர்களுக்கு தெரியாது. ஒருநாள் அவர்கள் மரத்தால் ஒரு பெரிய வீடு கட்டத் தீர்மானித்தனர். அதற்கான நல்ல மரத்தைத் தேர்ந்தெடுப்பதற்காக அவர்கள் காட்டுக்குப் போக முடிவு செய்தனர். அப்போது, அவர்களில் மிகவும் அதிபுத்திசாலியான ஒருவன் சொன்னான்.


நான் குதிரை வண்டியில் ஏறி முதலில் போகிறேன். நீங்களெல்லாம் பின்னால் வாருங்கள்! என்றான். எல்லாரும் அதை ஏற்றுக் கொண்டனர். அதிபுத்திசாலி குதிரை வண்டியில் ஏறி காட்டுக்குப் பாய்ந்து சென்றான். ஆனால், வழியில் அவன் குதிரைவண்டி ஒரு கல்லின் மீது ஏறியதால் கவிழ்ந்தது. அவன் கையிலிருந்த கோடாரி தூரத்தில் சென்று விழுந்தது. அவனும் ஆழமான ஒரு குழியில் விழுந்து விட்டான்.


குதிரை வண்டிக்குப் பின்னால் வந்த மற்ற அறிவாளிகள், அதிபுத்திசாலியின் கோடாரி வழியில் கிடப்பதைப் பார்த்தனர். அவர்களில் மிகச் சிறந்த அறிவாளி அவன்தான் என்பதால், அவன் கோடாரியை விட்டுச் சென்றதற்கு ஏதும் முக்கியமான காரணம் இருக்கும் என்று மற்றவர்கள் நினைத்தனர். அதனால், எல்லாரும் மரம் வெட்டுவற்காகத் தங்கள் கையில் எடுத்து வந்திருந்த கோடாரியை அப்படியே போட்டுவிட்டுத் தொடர்ந்து சென்றனர்.


காட்டுக்குச் சென்று வெட்டுவதற்கு ஏற்ற மரத்தைத் தேர்ந்தெடுத்தனர். ஆனால், யார் கையிலும் கோடாரி இல்லையே, பிறகு எப்படி மரம் வெட்டுவது? எல்லாரும் ஒன்றாக அமர்ந்து இதற்கு என்ன வழியென்று சிந்தித்தனர். அவர்களில் ஒரு அறிவாளி, இந்த மரத்தின் கிளையைப் பிடித்து தொங்குகிறேன். நீங்கள் அனைவரும் என்னுடைய காலைப் பிடித்து தொங்குங்கள். அப்படி தொங்கினால் மரக்கிளை வளைந்து ஒடிந்து விழும். நாம் அதை எடுத்துச் சென்று வீடு கட்டலாம் என்றான். எல்லோரும் அதை ஏற்றுக் கொண்டனர். அந்த அறிவாளி சொன்னது போலவே செய்தனர். மரக்கிளை ஒடிந்து கீழே விழும் நேரத்தில் முதலில் மரக்கிளையைப் பிடித்து தொங்கிய அறிவாளியின் கை வழுக்கியது. கை வழுக்கி அனைவரும் கீழே விழுந்தனர். மரக்கிளை முன்பு இருந்தது போலவே நீளாமாக ஆனது.


அவர்கள் அனைவரும் மீண்டும் கூடி அமர்ந்து சிந்தித்தனர். அவர்களில் ஒருவன் அப்போது நல்ல படியாகச் சிந்தித்தான். அவன் சொன்னான். நண்பர்களே, நாம் திரும்பிச் சென்று, வழியில் போட்டுவிட்டு வந்த கோடாரிகளை மீண்டும் எடுத்து வரலாம். அதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை! என்றான். அவ்வாறு அவர்கள் சென்று தங்கள் கோடாரிகளுடன் திரும்பி வந்தனர். தேவையான மரத்தை வெட்டி எடுத்துக்கொண்டு கிராமத்துக்குச் சென்றனர். தங்களது புத்திசாலித்தனத்தை நினைத்து தங்களை தாங்களே மிகவும் பாராட்டிக் கொண்டனர்.

இன்றைய செய்திகள்

02.03.2026

⭐ தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று துவங்குகிறது. தமிழ்நாட்டில் 8.07 லட்சம் மாணவர்கள் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வை எழுத உள்ளனர்.

⭐ வர்த்தகம், முதலீடு, கல்வி, உற்பத்தி, கலாச்சாரம், கடல்சார் பாரம்பரியம், விவசாயம் மற்றும் AI உள்ளிட்ட பல துறைகளில் ஒத்துழைப்பு வழங்கும் வகையில் மொத்தம் 17 ஒப்பந்தங்கள் மற்றும் ஆவணங்களில் இந்தியாவும் இஸ்ரேலும் கையெழுத்திட்டுள்ளன.

⭐அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே ஜெனிவாவில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து அமெரிக்க ராணுவம் இஸ்ரேலியப் படைகளுடன் இணைந்து ஈரான் மீது தாக்குதலைத் ஆரம்பித்துள்ளது

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀சூப்பர் 8 சுற்று: கடைசி போட்டியில் ஜிம்பாப்வேவை எளிதாக வீழ்த்தியது தென்ஆப்பிரிக்கா.

Today's Headlines

⭐ The 12th standard public examination in Tamilnadu begins today. 8.07 lakh students in Tamilnadu are going to write the 12th standard public examination.

⭐ India and Israel have signed a total of 17 agreements and documents to provide cooperation in several areas including trade, investment, education, manufacturing, culture, maritime heritage, agriculture and AI.

⭐The US military has launched an attack on Iran in conjunction with Israeli forces after talks between the US and Iran in Geneva failed 

 *SPORTS NEWS*

🏀Super 8 round: South Africa easily beat Zimbabwe in the final match.

Covai women ICT_போதிமரம்

Sunday, March 1, 2026

Sunday, March 01, 2026

School Calendar - March 2026


மார்ச் 2026 மாத பள்ளி நாட்காட்டி - 19.03.2026 தெலுங்கு வருடப் பிறப்பு 20.03.2026 என்று தவறுதலாக இருந்தது தற்போது அது சரிசெய்யப்பட்டுள்ளது - இணைப்பு: 2026ஆம் ஆண்டின் பொது விடுமுறை அரசாணை!

மார்ச் -2026 நாள்காட்டி..


மார்ச் -7 சனி - ஆசிரியர் குறை தீர் நாள்.

மார்ச் -2 - திங்கள் - +2 தேர்வு ஆரம்பம்

மார்ச் -11 - புதன் - 10 தேர்வு ஆரம்பம்

மார்ச் -26 - வியாழன் - *+2 தேர்வு முடிவு.

ஏப்ரல் - 6 -திங்கள் - *10 ஆம் வகுப்பு தேர்வு முடிவு.


அரசு விடுமுறை நாள்கள்..


மார்ச் -19 - வியாழன் - தெலுங்கு வருடப்பிறப்பு

மார்ச் -21 - சனி - ரம்ஜான்

மார்ச் -31 - செவ்வாய் - மகாவீரர் ஜெயந்தி


RL & RH news


*02.03.2026 -- திங்கள்--மாசிமகம்

04.03.2026 -- புதன் - *பகவான் வைகுண்டசாமி அவதாரதினம்

*16-03-2026 - திங்கள் - *ஷபேகாதர்


March 2026 Calendar & Govt Holidays 2026

👇👇👇👇

Download here ( Revised ...)