Breaking

Monday, February 9, 2026

Monday, February 09, 2026

+2 அக மதிப்பீட்டிற்கான மதிப்பெண்கள் பட்டியல்கள் பதிவிறக்கம் செய்வது தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள்!

மேல்நிலை இரண்டாமாண்டு அக மதிப்பீட்டிற்கான மதிப்பெண்கள் பட்டியல்கள் பதிவிறக்கம் செய்வது தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள்!

DGE Proc +2 Internal Mark Uploading Instructions - Download here
Monday, February 09, 2026

புதிய தேர்வு தேதி TNPSC அறிவிப்பு.

புதிய தேர்வு தேதி



தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரத்து செய்யப்பட்ட குரூப் 2 மற்றும் குரூப் 2A முதன்மை தேர்வு மார்ச் 15ஆம் தேதி நடைபெறும்.

- TNPSC அறிவிப்பு.தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரத்து செய்யப்பட்ட குரூப் 2 மற்றும் குரூப் 2A முதன்மை தேர்வு மார்ச் 15ஆம் தேதி நடைபெறும் - TNPSC அறிவிப்பு.
Monday, February 09, 2026

Documents Required For NEET - UG 2026 Form Filling


Documents required for NEET-UG 2026 Form Filling

1) Passport Size Photo

2) Postcard Size Photo

3) Student's Signature in running handwritting

4) Fingerprints of all fingers of both hands (including thumb)

5) Class 10th Passing Certificate (Sanad for State Board & Regular Marksheet for CBSE)

6) Class 10th Marksheet (Pink Colored Marksheet for State Board & Regular Marksheet for CBSE)

7) Class 12th Marksheet (only for repeaters/droppers)*

8) Any Photo ID proof (Aadhar Card/PAN Card/ 12th Board Exam Admit Card/Bank Passbook)

9) Aadhar Card as Address Proof

10) Caste/EWS Certificate in Central Format or its reciept.


Exam Fee:

• OPEN: ₹1700

• OBC/EWS: ₹1600

👉🏻 Online Application Start: 08 February 2026

👉🏻 Last Date to Apply: 08 March 2026 (till 9:00 PM)

👉🏻 Last Date of Fee Payment: 08 March 2026 (till 11:50 PM)

👉🏻 Correction Window: 10 March to 12 March 2026
Monday, February 09, 2026

1/6/2006 பணி நியமனம் பெற்ற ஆசிரியர்கள் கவனத்திற்கு

நண்பர்களே வணக்கம் 🙏

1/6/2026 சிறப்பு நிலை பெற உள்ள 2003, 2004 & 2005 TRB நியமன (1/6/2006 பணி வரன் முறை) ஆசிரியர்களின் கனிவான கவனத்திற்கு..

இன்னும் 3½ மாதத்தில் சிறப்பு நிலை பெற உள்ளீர்கள்...

அதற்கு கீழ் கண்ட ஆவணங்கள் தயார் நிலையில் வைத்துக் கொள்ளுங்கள்...

1) பணி நியமன ஆணை

2) தொகுப்பூதியம் நீக்கம் செய்து பொதுவான ஆணை

3) 1.6.2006 முன் தேதி இட்டு பணி வரன் முறை ஆணை ( தனிப்பட்ட ஆணை அப்போது வழங்கினார்கள்)

4) தகுதி காண் பருவம் நிறைவு ஆணை

5) 1/6/2016 தேர்வு நிலை பெற்ற ஆணை

இவை அனைத்தும் பணிப் பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்

( பணிப் பதிவேட்டில் பதிவு உள்ள பக்க நகல் தேவைப்படும்)

இது தவிர

6) SSLC

7) HSC

8) UG

9) PG

10) B.Ed / D.T.Ed

கல்வி சான்றிதழ் நகல் மற்றும் உண்மைதன்மை பெறப்பட்ட விவரம் அவற்றின் SR entry details ...

1/6/2026 க்கு இப்போதே பதிவு செய்வதன் நோக்கம்...

உண்மைத் தன்மை பெறப்படாமல் இருப்பின் இப்போதே தலைமை ஆசிரியர் வழியாக விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம்..

அதே போல 10/12/UG/PG/B.Ed/D.T.Ed other state இல் படித்து இருப்பின் கட்டாயம் மதிப்பீடு (Evaluation) செய்யப்பட வேண்டும்...

உண்மைத் தன்மை/Evaluation ஏற்கனவே வாங்கி இருந்து பணிப் பதிவேட்டில் பதிவு எனில் ...

நன்று / போதும்

தற்போது மீண்டும் புதிதாக வாங்க தேவையில்லை...

அதே போல 1/6/2006 இல் இருந்து 31/12/2025 வரை பணிக் காலம் சரிபார்ப்பு விவரம் விடுதல் இன்றி பணிப் பதிவேட்டில் பதிவு செய்துள்ளதை உறுதி செய்து கொள்ளுங்கள்...

செய்முறை தேர்வு

பொதுத் தேர்வு

சட்ட மன்ற தேர்தல்

மதிப்பீட்டு பணி

கோடை விடுமுறை என வரும் நாட்களில் Busy ஆக 😊 இருப்போம்...

ஏதேனும் document/entry இல்லாமல் இருந்தால் அதை பெற போதுமான கால அவகாசம் உள்ளது 👍

தங்களின் முன் திட்டமிடல்

தகவலுக்காக
க.செல்வக்குமார்
தலைமை ஆசிரியர்
மதுரை 8/2/26
Monday, February 09, 2026

ஜாக்டோ ஜியோ பாராட்டு விழா - முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உரை


"பழைய ஓய்வூதியத் திட்டம் பறிபோக அதிமுக அரசுதான் காரணம். வியர்வைத் துளி சிந்தி உழைத்தவர்களுக்கு ரத்தக் கண்ணீர் வர வைத்ததுதான் அதிமுக ஆட்சி." என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஜாக்டோ ஜியோ சார்பில் இன்று சென்னையில் நடந்த பாராட்டு விழாவில் பேசியுள்ளார்.

திட்டமிட்டு நிதி நெருக்கடியை மத்திய பாஜக அரசு உருவாக்கி வருகிறது என ஜாக்டோ ஜியோ சார்பில் TAPS ஓய்வூதிய முறையை அமல்படுத்திய முதல்வருக்கு சென்னையில் நடைபெற்ற பாராட்டு விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் ஜாக்டோ ஜியோ நன்றி அறிவிப்பு மாநாடு 08.02.2026 நடைபெற்றது. உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை அறிவித்த தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி அறிவிப்பு விழாவாக இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை அறிவித்த முதலமைச்சரின் மு க ஸ்டாலினுக்கு ஜாக்டோ ஜியோ அமைப்பு சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசுகையில், "அரசு ஊழியர்களுக்காக கலைஞர் செய்த சாதனைகள், சீர்திருத்தங்களை சொல்ல ஒரு மாநாடு போதாது. அரசியல்வாதிகள் கொள்கைப் பிடிப்போடு செய்யும் மக்கள் நலத்திட்டங்களை கொண்டு சேர்ப்போர் அரசு ஊழியர்கள் தான். ஆசிரியர்களால் தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை சிறந்து விளங்குகிறது.


22 ஆண்டுகால கோரிக்கைக்கு நிறைவு

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கடந்த 22 ஆண்டுகளாக முன்வைத்து வந்த உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் தொடர்பான கோரிக்கை தற்போது நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து, முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

ஆசிரியர்களின் பணியால் கல்வியில் இரண்டாவது மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. ஆசிரியர்கள் செய்வது பணி அல்ல, தொண்டு. நன்றி சொல்லி நமக்கான உறவை தூரமாக்கி விடாதீர்கள். அரசு ஊழியர்களின் கண்ணீர் துளிகளை துடைக்கவே கோரிக்கைகளை நிறைவேற்றுகிறோம். நீங்கள் பாடுபட்டு உருவாக்கியவர்கள் தான் தற்போது உலகம் முழுவதும் பணியாற்றி வருகிறார்கள். TAPS திட்டத்தின் கீழ் அரசு ஊழியர்களுக்கான சிறப்பு கருணை ஓய்வூதியம், 'உழைப்புக்கான உரிமைத் தொகை' என்ற பெயரில் வழங்கப்படும்" என்று கூறினார்.
Monday, February 09, 2026

ஆசிரியர்கள், ஊழியர்கள் அரசின் இரு கண்கள் - முதலமைச்சர்


ஆசிரியர்கள், ஊழியர்கள் அரசின் இரு கண்களாக உள்ளனர் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை நந்தனத்தில் இன்று (பிப்., 08) நடைபெற்ற ஜாக்டோ-ஜியோ பாராட்டு விழாவில் பேசிய முதலமைச்சர், 'ஆசிரியர்கள் செய்வது பணி அல்ல தொண்டு. அமைச்சரவையும், அரசு ஊழியர்களும் நாணயத்தின் இரு பக்கங்கள். மத்திய அரசின் நிதிப் பகிர்வு குறைந்த போதிலும் நமது அரசு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஆசிரியர்களின் உழைப்பால் தமிழ்நாடு கல்வியில் சிறந்து விளங்குகிறது' என தெரிவித்தார்.
Monday, February 09, 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 09.02.2026

திருக்குறள்: 

குறள் 501: 

அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின் 
திறந்தெரிந்து தேறப் படும். 

விளக்க உரை: 

அறம், பொருள், இன்பம், உயிர்காக அஞ்சும் அச்சம் ஆகிய நான்கு வகையாலும் ஆராயப்பட்ட பிறகே ஒருவன் (ஒரு தொழிலுக்கு உரியவனாகத்) தெளியப்படுவான்.

பழமொழி :

Hard paths create strong people. 

கடினமான பாதைகள் வலிமையான மனிதர்களை உருவாக்கும்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. உலகில் உயர்வானது அனைத்து உயிர்களிடமும் நாம் காட்டும் அன்பும் பரிவும் தான்.

2. எனவே அனைத்து உயிர்களிடமும் அன்பு காட்டுவோம்.

பொன்மொழி : 

வலிமையே மகிழ்ச்சிகரமான, நிரந்தரமான, வளமான, அமரத்துவமான வாழ்க்கை ஆகும்
- சுவாமி விவேகானந்தர்

பொது அறிவு : 

01.உலகின் மிகப்பெரிய பள்ளி எது?

 சிட்டி மாண்டிசோரி பள்ளி  லக்னோ,இந்தியா
City Montessori School -Locknow, India


02.பூமியின் வடக்கே உள்ள கடைசி நகரம் எது?

லாங்கியர்பைன்-நார்வே 
Longyearbyen- Norway

English words :

clance-look quickly 

stare -looked fixedly

அறிவியல் களஞ்சியம் :

மலிவான AI சாட்பாட்கள் குறைந்த வசதி கொண்ட இடங்களில் மருத்துவ நோயறிதலை எளிதாக்குகின்றன. தோல் மீளுருவாக்கத்திற்கு உதவும் ‘rete ridges’ என்ற தண்டு செல் கட்டமைப்புகள் கண்டறியப்பட்டுள்ளன.

நீதிக்கதை

 ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு

கோபுரத்தில் சில நீல நிறப்புறாக்களும் சில வெள்ளை நிறப் புறாக்களும் அடைக்கலமாகி இருந்து வந்தன. கோபுரத்தில் சுத்தம்  வேலைகள் தொடங்க ஆரம்பித்ததால் இது நாள் வரை எதிரும் புதிருமாக இருந்து வந்த இருவகைப் புறாக் கூட்டமும் இப்போது ஒன்று கூடி வேறொரு இடம் தேடி புறப்பட்டன.

செல்லும் வழியில் ஓரிடத்தில் வெயிலில் உலர்த்துவதற்காக பரப்பப்பட்ட தானியங்களை கண்டதும் அனைத்தும் ஒன்று கூடி தானியங்களை தின்று தீர்த்து விட்டு மரக்கிளை ஒன்றில் அமர்ந்தன. 

தானியத்தை உலர்த்தும் பொருட்டு பரப்பி விட்டு சென்ற வேடன் தானிய மணிகள் ஒன்று கூட இல்லாதது கண்டு அதிர்ச்சியடைந்தான். தானியங்கள் காயப்போட்ட இடத்தில் புறாக்களின் எச்சம் கிடப்பதை பார்த்து வேடன் என்ன நடந்தது என்பதை ஊகித்தான்.

நாளைக்கு இந்த புறாக்களை எப்படியும் வலை விரித்து பிடித்து விட வேண்டும் என்று முடிவு செய்து அதன்படி மறுநாள் தயார் செய்து வலை விரித்தான். அடுத்த நாள் அங்கே வந்த புறாக்கள் தானியத்தைப் பார்த்ததும், அதை உண்ணும் ஆசையில் வேகமாக தரையிறங்கி உண்ணத் தொடங்கின. சில மணித்துளிகளில் அதன் கால்கள் வலைகளில் சிக்கிக் கொண்டன.

சற்று தொலைவில் மறைந்திருந்த வேடன் நிலைமையை நன்கு புரிந்து கொண்டு புறாக்களை பிடிக்க ஓடி வந்தான். வேடன் வருவதைப் பார்த்த புறாக்கள் ஆபத்தை உணர்ந்து கொண்டு, உயிர் மீதுள்ள ஆசையினால் புறாக்கள் எல்லாம் ஒன்றாக இறக்கையை விரித்து பறக்க, வலையோடு புறாக்கள் பறக்க ஆரம்பித்தன.

உடனே வேடன், அய்யய்யோ... புறாக்கள் போனாலும் பரவாயில்லை. நான் கஷ்டப்பட்டு தயாரித்த வலையும் அதோடு போகிறதே... என்று புலம்பிக் கொண்டே, பறந்து செல்லும் புறாக்களின் பின்னே ஓடினான். பறந்து செல்லும் போதே, அதில் இருந்த வெள்ளைப் புறாக்கள் கர்வத்தோடு, எங்களது வலிமையால்தான் நீங்களும் காப்பாற்றப்பட்டு இருக்கிறீர்கள். நாங்கள் சிறகை மிக வேகமாக அடித்து பறக்கவில்லை என்றால்....அவ்வளவுதான் என்று கூறின.

உடனே நீல நிறப் புறாக்களும் தன் பங்கிற்கு, நாங்கள்தான் வலிமையோடு பறந்தோம். உங்களுக்கு அழகு இருக்கலாம், ஆனால் ஆற்றல் கிடையாது என்று கூறிக் கொண்டு ஒன்றுக்கொன்று சண்டையிட்டுக் கொண்டே பறந்ததினால், அதன் பறக்கும் வேகம் குறைய ஆரம்பித்து, ஒரு மரக்கிளையில் வலை சிக்கிக் கொண்டது.

இதனைப் பார்த்த வேடனுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்ற பழமொழிக் கேற்ப இப்புறாக்கள் தப்பி விடுமோ என்று பயந்தேன். நல்லவேளையாக ஒற்றுமை நீங்கினால் அனை வருக்கும் தாழ்வு என்ற நெறிப்படி பறந்த புறாக்களே நன்றி என்று புறாக்களைப் பார்த்து கூறிக் கொண்டே அவைகளை தனது கூடைக்குள் போடத் தொடங்கினான்.

நீதி:ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு.

இன்றைய செய்திகள்

09.02.2026

⭐ இளநிலை மருத்துவ படிப்பில் சேருவதற்காக நீட் நுழைவுத்தேர்வுக்கு இன்று முதல் மார்ச் 8-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

⭐சென்னையில் கடும் பனிமூட்டம் விமான சேவைகள் பாதிப்பு

⭐ சவுதி அரேபிய அரசு இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளுக்கு வழங்கி வந்த கச்சா எண்ணெயை விலையை குறைக்க (ரூ.25) முடிவு செய்து உள்ளது. 

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀டி20 உலகக்கோப்பை அயர்லாந்தை 20 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது ஸ்ரீலங்கா.

🏀 ஆசிய துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் இந்தியா தங்கம் வென்றது.

Today's Headlines

⭐ Applications for the NEET entrance exam for admission to undergraduate medical courses can be submitted till March 8 itself.

⭐ Heavy fog in Chennai affects flight services

⭐ The Saudi Arabian government has decided to reduce the price of crude oil supplied to Asian countries, including India (by Rs.25). 

 SPORTS NEWS 

🏀Sri Lanka defeated Ireland by 20 runs in the T20 World Cup.

🏀India won gold at the Asian Shooting Championships.
Covai women ICT_போதிமரம்

Sunday, February 8, 2026

Sunday, February 08, 2026

50 லட்சம் பயனா்களைக் கடந்த ‘FASTag வருடாந்திர பாஸ்’ திட்டம்

வருடாந்திர ஃபாஸ்டேக் பாஸ் திட்டம், 6 மாதங்களுக்குள் 50 லட்சம் பயனர்களை கடந்தது

50 லட்சம் பயனா்களைக் கடந்த ‘ஃபாஸ்டேக் FASTag வருடாந்திர பாஸ்’ திட்டம்

தேசிய நெடுஞ்சாலைகளில் தொடா்ச்சியாக பயணம் செய்யும் வாகன ஓட்டிகளுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட ‘ஃபாஸ்டேக் வருடாந்திர பாஸ்’ திட்டத்தைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 50 லட்சத்தைக் கடந்துள்ளது.

மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகத்தால் கடந்த ஆண்டு சுதந்திர தினத்தில் தொடங்கப்பட்ட இத்திட்டத்தில் வெறும் 6 மாதங்களில் 50 லட்சம் போ் இணைந்துள்ளனா். இந்தக் குறுகிய காலகட்டத்திலேயே சுமாா் 26.55 கோடி முறை சுங்கச்சாவடி பரிவா்த்தனைகள் இத்திட்டத்தின் மூலம் நடந்துள்ளன.

இத்திட்டத்தின் சிறப்பம்சமான, ஒருமுறை கட்டணமாக ரூ.3,000 மட்டும் செலுத்திவிட்டு, ஆண்டு முழுவதும் அல்லது மொத்தம் 200 முறை சுங்கச்சாவடிகளை எவ்வித கூடுதல் கட்டணமுமின்றி கடக்கலாம்.

‘ராஜ்மாா்க்கயாத்ரா’ செயலி அல்லது இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் (என்எச்ஏஐ) வலைதளம் மூலம் இத்திட்டத்தில் இணையலாம். நாடு முழுவதும் உள்ள சுமாா் 1,150 சுங்கச்சாவடிகளில் இந்த வசதி செல்லுபடியாகும்.

நெடுஞ்சாலைகளில் அவ்வப்போது பயணம் செய்யும் வணிக ரீதியல்லாத சொந்த வாகன உரிமையாளா்களுக்கு இது பெரும் பண சேமிப்பை வழங்குகிறது.

தில்லி-என்சிஆா் பகுதியில் உள்ள பிஜ்வாசன் சுங்கச்சாவடியில் 57 சதவீத வாகனங்கள் இந்தப் பாஸ் மூலமே பயணிப்பதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. பழைய ஃபாஸ்டேக் கணக்குடன் இதை இணைக்க முடியும் என்பதால், பொதுமக்களிடையே இதற்கு அதிக வரவேற்பு உள்ளது.

2-ஆம் இடத்தில் Tamilnadu

இந்த வருடாந்திர பாஸ் பயன்பாட்டில் மாநில வாரியான புள்ளிவிவரங்களின்படி, சண்டீகா் 14 சதவீதப் பங்களிப்புடன் முதலிடத்தில் உள்ளது.

இதைத் தொடா்ந்து, தமிழ்நாடு 12.3 சதவீதத்துடன் இரண்டாம் இடத்திலும், தில்லி 11.5 சதவீதத்துடன் மூன்றாம் இடத்திலும் உள்ளன.
Sunday, February 08, 2026

Income Tax - Marginal Relief மற்றும் CA பற்றிய விழிப்புணர்வு பதிவு

2025-26 நிதியாண்டு வருமான வரி கணக்கிடும்போது Marginal Relief மற்றும் Conveyance Allowance பற்றி விழிப்புடன் இருங்கள்.

இங்கே சொல்லப்படும் விளக்கங்கள் New Regimeக்கு மட்டுமே பொருந்தும்.

Marginal Relief பற்றிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் இந்த நிதியாண்டில் எனக்கு தெரிந்த ஒருவர் Rs.58000 வருமான வரி கணக்கிட வேண்டிய நிலையில் Rs.71,000 என கணக்கிட்டிருந்தார்.

Conveyance Allowance பற்றிய விழிப்புணர்வு இல்லாததால் மற்றொருவர் சென்ற நிதியாண்டில் Rs.75,000 வருமான வரி கட்ட வேண்டிய நிலையில் ரூ.80,000 வருமானவரி கட்டி இருக்கிறார்.

*Salary Income*

12 மாத சம்பளம், DA Arrears, Bonus, EL Surrender மற்றும் இதர நிலுவைத்தொகை ஆகியவைகளின் கூட்டுத்தொகை என்பது Total Salary Income.

*Standard Deduction*

இதில் Standard Deduction 75000 கழிக்க வேண்டும். (Permanant Disabled ஆசிரியர்களாக இருந்தால் அவர்கள் சம்பளத்தில் மாதா மாதம் பெறும்Conveyance Allowance ரூ.2500 மொத்தம் ரூ.30,000 கழிக்கலாம்).

*Taxable Income*

இந்த இரண்டையும் கழித்துவிட்டு வரும் தொகை Taxable Income ஆகும். இந்த தொகைக்கு தான் வருமான வரி கணக்கிடப்படுகிறது.

*Income Tax Slab*

Upto 4,00,000 - Nil Tax

4,00,001 to 8,00,000 – 5% tax (ie) Rs.20,000.

8,00,001 to 12,00,000 – 10% tax (ie) Rs.40,000.

12,00,001 to 16,00,000 – 15% tax (ie) Rs.60,000.

16,00,001 to 20,00,000 – 20% tax (ie) Rs.80,000.

20,00,001 to 24,00,000 – 25% tax (ie) Rs.1,00,000

Exeeding 24,00,000 – 30% tax


*Tax Rebate U/s 87A*

Taxable Income 12,00,000 இருப்பவர்கள் Income Tax Slab இன் படி வருமான வரி ரூ.60,000 வருமான வரி கட்ட வேண்டும். ஆனால் Taxable Income 12,00,000 இருப்பவர்களுக்கு வருமான வரிச் சட்டம் U/s 87A வின் படி முழு வருமானவரி தொகையும் தள்ளுபடி செய்யப்படும். எனவே தான் Taxable Income 12,00,000 இருப்பவர்கள் வருமான வரி கட்ட தேவை இல்லை.

*Marginal Relief*

Taxable Income 12,00,001 முதல் 12,75,000 வரை இருப்பவர்களுக்கு வருமான வரிச் சட்டம் Marginal Relief என்ற சலுகை அளிக்கிறது.

*Example 1*

உதாரணமாக Taxable Income 12,00,200 இருந்தால் Tax Rebate U/s 87A இன் படி வரி தள்ளுபடி கிடையாது.

Income Tax Slab இன் படி இவர்களுக்கு Rs.60,030 வருமான வரியும் அதற்குரிய 4% CESS ம் சேர்த்து கட்ட வேண்டி வரும் வரும். ஆனால் இவருக்கு Marginal Relief சலுகை இவருக்கு கிடைக்கிறது. Marginal Relief Rs.59,830 கழித்துவிட்டு இவர் வருமான வரி Rs.200ம் அதற்குரிய 4% CESS ம் சேர்த்து வருமான வரி செலுத்தினால் போதும்.

இவர் Marginal Relief பற்றி அறியவில்லை என்றால் Rs.60,030 வருமான வரியும் அதற்குரிய 4% CESS ம் சேர்த்து கட்டுவார். இது, மிகப்பெரிய இழப்பாக அமையும்.

*Example 2*

உதாரணமாக Taxable Income 12,50,00 இருந்தால் Tax Rebate U/s 87A இன் படி வரி தள்ளுபடி கிடையாது.

Income Tax Slab இன் படி இவர்களுக்கு Rs.67,500 வருமான வரியும் அதற்குரிய 4% CESS ம் சேர்த்து கட்ட வேண்டி வரும் வரும். ஆனால் Marginal Relief சலுகை இவர்களுக்கு கிடைக்கிறது. இவர் Marginal Relief Rs.17,500 கழித்துவிட்டு வருமான வரி Rs.50,000ம் அதற்குரிய 4% CESS ம் சேர்த்து வருமான வரி செலுத்தினால் போதும்.

இவர் Marginal Relief பற்றி அறியவில்லை என்றால் Rs.67,500 வருமான வரியும் அதற்குரிய 4% CESS ம் சேர்த்து கட்டுவார். இது, இழப்பாக அமையும்.

*Conveyance Allowance*

Disabled Persons தம் சம்பளத்தில் பெறும் Conveyance Allowance தொகை முழுதையும் Standard Deduction இல் கழித்துகொள்ளலாம்.

*Example 1*

மாதா மாதம் ரூ.2500 Conveyance Allowance பெறும் ஒருவர் Salary Income ரூ.13,00,000 பெற்றிருந்தால் Standard Deduction இல் ரூ.75000 மற்றும் ரூ.30000 என மொத்தம் ரூ.1,05,000 கழித்துக்கொள்ளலாம். எனவே, அவருடைய Taxable Income Rs.11,95,000. வருமான வரிச் சட்டம் U/s 87A வின் படி இவருக்கு Nil Tax.

இவர் Conveyance Allowance பற்றி அறியவில்லை என்றால் Standard Deduction ரூ.75000 மட்டும் கழித்து Taxable Income Rs.12,25,000 என தவறாக கணக்கீடு செய்து Marginal Relief இன் படி Rs.25,000 வருமான வரியும் அதற்குரிய 4% CESS ம் சேர்த்து கட்டுவார். இது, இழப்பாக அமையும்.

*Example 2*

மாதா மாதம் ரூ.2500 Conveyance Allowance பெறும் ஒருவர் Salary Income ரூ.13,40,000 பெற்றிருந்தால் Standard Deduction இல் ரூ.75000 மற்றும் ரூ.30000 என மொத்தம் ரூ.1,05,000 கழித்துக்கொள்ளலாம். எனவே, அவருடைய Taxable Income Rs.12,35,000. Marginal Relief ன் படி இவருக்கு Tax 35,000 + 4% CESS.

இவர் Conveyance Allowance பற்றி அறியவில்லை என்றால் Standard Deduction ரூ.75000 மட்டும் கழித்து Taxable Income Rs.12,65,000 என தவறாக கணக்கீடு செய்து Marginal Relief இன் படி Rs.65,000 வருமான வரியும் அதற்குரிய 4% CESS ம் சேர்த்து கட்டுவார். இது, இழப்பாக அமையும்.

.*விழிப்புடன் இருக்கவே...*

மீண்டும் சொல்கிறேன்.... Marginal Relief பற்றிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் இந்த நிதியாண்டில் எனக்கு தெரிந்த ஒருவர் Rs.58000 வருமான வரி கணக்கிட வேண்டிய நிலையில் Rs.71,000 என கணக்கிட்டிருந்தார்.

Conveyance Allowance பற்றிய விழிப்புணர்வு இல்லாததால் மற்றொருவர் சென்ற நிதியாண்டில் Rs.75,000 வருமான வரி கட்ட வேண்டிய நிலையில் ரூ.80,000 வருமானவரி கட்டி இருக்கிறார்.

விழிப்புடன் இருங்கள்...
Sunday, February 08, 2026

3ஆவது பிரசவத்திற்கும் சம்பளத்துடன் கூடிய பேறுகால விடுப்பு (Maternity Leave) - Court Judgment Copy



3ஆவது பிரசவத்திற்கும் விடுப்பு

பெண் ஊழியர்களின் 3ஆவது பிரசவத்திற்கும் சம்பளத்துடன் கூடிய பேறுகால விடுப்பு வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் மீண்டும் உத்தரவு.

உயர்நீதிமன்றத்தில் பணியாற்றும் பி.மங்கையர்கரசி என்பவர் தொடர்ந்த வழக்கில் இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவு.

அனைத்து துறை செயலாளர்களுக்கும் இந்த உத்தரவு நகலை அனுப்பவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Sunday, February 08, 2026

மே மாதம் 3 ஆம் தேதி நீட் தேர்வு நடைபெறும் - தேசிய தேர்வுகள் முகமை அறிவிப்பு.



மே மாதம் 3 ஆம் தேதி நீட் தேர்வு நடைபெறும் - தேசிய தேர்வுகள் முகமை அறிவிப்பு.

*நாடு முழுவதும் மே 3ஆம் தேதியன்று இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நடைபெறும் என அறிவிப்பு.

*இன்று முதல் மார்ச் 8ஆம் தேதி வரை நீட் தேர்வுக்கு https://neet.nta.nic.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் - தேசிய தேர்வு முகமை.
Sunday, February 08, 2026

PGTRB பணி நியமன கலந்தாய்வுக்குப் பிறகு ஆங்கிலம், வேதியியல் மற்றும் பொருளியல் பாடங்களுக்கான காலிப் பணியிட விவரங்கள்!

PGTRB பணி நியமன கலந்தாய்வுக்குப் பிறகு ஆங்கிலம், வேதியியல் மற்றும் பொருளியல் பாடங்களுக்கான காலிப் பணியிட விவரங்கள்!

PG Vacancies after 07.02.2026.pdf

👇👇👇

Sunday, February 08, 2026

PG TO HSHM Promotion வழக்கின் நிலைப்பாடு என்ன?

BT யிலிருந்து PG ஆக பதவி உயர்வில் சென்றவர்கள் ,PG ஆக பணியேற்ற நாள் முதல் ஒரு வருடத்திற்குள் உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்டிருந்தால் மட்டுமே அவர்கள் தொடர்ந்து அதே உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராக தொடர்ந்து பணியாற்ற முடியும்.

ஒரு ஆசிரியர் ஒரே நேரத்தில் இரண்டு பதவிகளை வகிக்க முடியாது என்றும் BT OR PG ஒன்றில் மட்டுமே தொடர முடியும் என்பதால் PG TO HSHM Promotion ஐ உச்சநீதிமன்ற நீதிபதி ஏற்கவில்லை. 

BT யிலிருந்து PG ஆக பதவி உயர்வில் சென்றவர்கள் தங்களின் தகுதி காண் பருவத்தை முடித்து விட்டால் அவர் PG ஆக மட்டுமே தொடர முடியும் என்பது நீதிபதியின் கருத்தாக அமைந்தது. RULE NUMBER 10(A)(1) பற்றி விவாதிக்கப்பட்டது. PROMOTION RULE ல் ஒருவரை HSHM ஆக பதவி உயர்வு செய்வதில் Feeder category யில் PG இல்லை என்பது நீதி அரசரின் கருத்தாக அமைந்தது. RULE ல் இல்லாதது அரசாணையில் உள்ளது.

காலம் காலமாக பாரம்பரியமாக செல்கிறோம் என்பதை ஏற்க முடியாது. விதிகளில் இருக்க வேண்டும். நீங்கள் BT ஆக ஒருமுறை நேரடியாக நியமிக்கப்பட்டு விட்டீர்கள். பிறகு PG ஆக Recruitment by transfer மூலம் மீண்டும் நியமிக்கப்பட்டு விட்டீர்கள்.

தங்களுக்குரிய ஓராண்டு தகுதி காண் பருவத்தை முடித்து விட்டீர்கள். இன்றைய 40 நிமிட விவாதங்கள் மிகச் சிறப்பாக நடைபெற்றுள்ளது. 

Next hearing - final 11.02.2026
Sunday, February 08, 2026

பிப்ரவரி 17-ம் தேதி தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட் தாக்கல்..


தமிழ்நாடு 2026-ஆம் ஆண்டு, பிப்ரவரி திங்கள் 17-ஆம் நாள், செவ்வாய்க்கிழமை அன்று காலை 9.30 மணிக்கு, சென்னை-600 009, தலைமைச் செயலகத்திலுள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்கள் கூட்டியுள்ளார்கள்.

மேலும், 2026-ஆம் ஆண்டு, பிப்ரவரி திங்கள் 17-ஆம் நாள், செவ்வாய்க்கிழமை அன்று காலை 9.30, 2026-2027-ஆண்டிற்கான இடைக்கால நிதிநிலை அறிக்கை பேரவைக்கு அளிக்கப்பெறும்.

2026-2027-ஆம் ஆண்டிற்கான முன்பண மானியக் கோரிக்கைகள் மற்றும் 2025-2026-ஆம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானியக் கோரிக்கைகள் (இறுதி) ஆகியன 2026-ஆம் ஆண்டு, பிப்ரவரி திங்கள் 20-ஆம் நாள், வெள்ளிக்கிழமை அன்று பேரவைக்கு அளிக்கப்பெறும்.
Sunday, February 08, 2026

இனி ரயில்வேயின் அனைத்து சேவைகளுக்கும் Rail one செயலிதான்!

புறநகர் மற்றும் முன்பதிவு இல்லாத டிக்கெட்டுகளை எடுக்க பயன்படும் யு.டி.எஸ் மொபைல் செயலி வரும் மார்ச் 1ஆம் தேதி முதல் முழுமையாக நிறுத்தப்பட உள்ளது.

இதற்கு மாற்றாக ரயில்வேயின் அனைத்து சேவைகளையும் வழங்கும் ரயில் ஒன் (RailOne) எனும் புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

புதிய செயலியையை ஊக்குவிக்கும் வகையில், அதன் மூலம் டிக்கெட் எடுப்பவர்களுக்கு 3% கட்டணச் சலுகை வழங்கப்படும் என ரயில்வே அறிவிப்பு.
Sunday, February 08, 2026

குரூப் 2, 2A முதன்மைத் தேர்வுகள் ஒத்திவைப்பு.

தமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெற இருந்த குரூப் 2, 2A முதன்மைத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அஅறிவிப்பு.

அரும்பாக்கம் மையத்தில் தேர்வர்களுக்கு ஒதுக்கப்பட்ட எண் இல்லை என்பன உள்ளிட்ட பல்வேறு குளறுபடி எழுந்த நிலையில் TNPSC நடவடிக்கை.

Saturday, February 7, 2026

Saturday, February 07, 2026

CTET : ஆசிரியர் பணி தகுதிக்கான ‘சிடெட்’ தேர்வு இன்று தொடக்கம்

தமிழ், ஆங்​கிலம் உள்​ளிட்ட 20 மொழிகளில் ஆசிரியர் பணிக்​கான ‘சிடெட்’ தேர்வு நாடு முழு​வதும் இன்று தொடங்​கு​கிறது.

மத்​திய அரசின் இலவச கட்​டாயக் கல்வி உரிமைச் சட்​டத்​தின்​படி, ஆசிரியர் பணி​யில் சேரு​வதற்​கு, மத்​திய ஆசிரியர் தகு​தித் தேர்​வில் (சிடெட்) கட்​டா​யம் தேர்ச்சி பெற வேண்​டும். 2 தாள்​கள் கொண்ட இந்தத்தேர்வை மத்​திய இடைநிலைக்கல்வி வாரி​யம் (சிபிஎஸ்இ) சார்பில் ஆண்​டுதோறும் ஜூலை,டிசம்​பர் என 2 முறை தேர்வு நடத்தி வரு​கிறது.

இடைநிலை ஆசிரியர் பணிக்கு முதல் தாள் தேர்​வும், பட்​ட​தாரி ஆசிரியர் பணிக்கு 2-ம் தாள் தேர்​வும் நடத்​தப்​படு​கிறது. இந்தத் தேர்​வில் ஒரு​முறை தேர்ச்சி பெற்​றால், அதன்சான்​றிதழ் வாழ்​நாள் முழு​வதும்செல்​லத்​தக்​கதாகும்.

இந்​நிலை​யில், நடப்பு ஆண்​டுக்​கான சிடெட் தேர்வு இன்​றும், நாளை​யும் (பிப்​.7, 8) நடை​பெறுகிறது. மொத்​தம் 150 மதிப்​பெண்​கள். தமிழ், இந்​தி, ஆங்​கிலம் உள்​ளிட்ட 20 மொழிகளில் தேர்வு நடைபெறும்.

தேர்​வர்​களுக்​கான ஹால் டிக்​கெட் கடந்த 5-ம் தேதி வெளி​யிடப்​பட்​டது. அதன் விவரங்​களை https://ctet.nic.in/ என்ற இணை​யதளத்​தில் அறிய​லாம். தேர்வு மையத்​துக்கு காலை அமர்​வுக்கு 9.30 மணிக்​கும், பிற்பகல் 2.30 மணிக்​கும் முன்​பாக தேர்வர்கள் வந்​து​விட வேண்​டும்.

ஹால் டிக்​கெட்​டில் கூறப்​பட்​டுள்ள விதி​களை முறையாக பின்​பற்றி தேர்​வறை​யில் செயல்பட வேண்​டும். முறை​கேடு​களில் ஈடு​பட்​டால், தேர்ச்சி ரத்து செய்​யப்​படு​வதுடன், எதிர்​காலத் தேர்​வு​களில் பங்​கேற்க தடை​யும்​ விதிக்கப்படும் என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.
Saturday, February 07, 2026

அரசு ஊழியர்கள் ராஜினாமா செய்தால் ஓய்வூதியம் பெற முடியாது: ஐகோர்ட்

'அரசு ஊழியர், மருத்துவ காரணங்களுக்காக ராஜினாமா செய்தால், ஓய்வூதியம் உள்ளிட்ட பணப்பலன்கள் பெற தகுதியில்லை' என, சென்னை உயர் நீதிமன்ற மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு தெளிவுபடுத்தி உள்ளது.

மருத்துவ காரணங்களுக்காக ராஜினாமா செய்த அரசு ஊழியர்கள் இருவர், தங்களை விருப்ப ஓய்வு பெற்றவர்களாகக் கருதி, ஓய்வூதியம் வழங்க, அரசுக்கு உத்தரவிட கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். பணியை ராஜினாமா செய்த அரசு ஊழியர், ஓய்வூதியம் பெற தகுதி உள்ளதா, இல்லையா என்பது தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றம், இரு வேறு தீர்ப்புகளை வழங்கியுள்ளது. இந்நிலையில், இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், டி.பரத சக்கரவர்த்தி மற்றும் சி.குமரப்பன் அடங்கிய, மூன்று நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த உத்தரவு: பணி விதிகளில் ஓய்வு, விருப்ப ஓய்வு, கட்டாய ஓய்வு, ராஜினாமா ஆகிய சொற்றொடர்கள், வெவ்வேறு பொருளை உணர்த்துகின்றன.

தமிழக ஓய்வூதிய விதிகள், உடல் அல்லது மன அளவில் பலவீனம் போன்ற மருத்துவ காரணங்கள் அடிப்படையில், ராஜினாமா செய்வோருக்கு மட்டுமே, ஓய்வூதியம் வழங்க வகை செய்கிறது. மற்ற மருத்துவ காரணங்களை கூறி ராஜினாமா செய்தவர், முந்தைய பணிக் காலத்தை இழந்து விடுவதால், ஓய்வூதியப் பலன்களைக் கோர முடியாது. இவ்வாறு நீதிபதிகள், தங்கள் உத்தரவில் தெளிவுப்படுத்தி உள்ளனர்.