1 லட்சம் பள்ளிகளில் 1.2 கோடி மாணவர்களுக்கு ஆதார் புதுப்பிப்பு; நீட், ஜே.இ.இ தேர்வுகளுக்கு அப்டேட் கட்டாயம்
/indian-express-tamil/media/media_files/2026/03/04/aadhaar-update-4-2026-03-04-03-58-22.jpg)
/indian-express-tamil/media/media_files/2026/03/04/aadhaar-update-4-2026-03-04-03-58-22.jpg)



Take time by the forelock.
காலத்தே கடமையைச் செய்.
இரண்டொழுக்க பண்புகள் :.
1. எனது உணவானது விவசாயி போன்ற பலர் உழைப்பில் வருகிறது.
2. எனவே உணவை வீணாக்க மாட்டேன்.
பொன்மொழி :
உங்களை மேம்படுத்த நினைப்பவர்களுடன் மட்டுமே பழகுவது, உங்களுடைய சிறப்பு திறமைகளை வெளியே கொண்டு வருகிறது. - எபிக் டெட்டஸ்
பொது அறிவு :
01.ஜப்பானிய தேசிய உடையின் பெயர் என்ன?
கிமோனோ-Kimono
02.உலகின் மிக நீளமான குகை எது?
மாமத் குகை-Mammoth cave
அமெரிக்கா -America
English words :
hostilities-acts of fighting or war between enemies.
conflagration-very large and destructive fire.
தமிழ் இலக்கணம்:
அறிவியல் களஞ்சியம் :
துருவ காந்தம் (Magnetic Pole) மற்றும் காந்தப் புலம் (Magnetic Field) இரண்டும் ஒன்றல்ல. ஆனால் அவை நெருங்கிய தொடர்புடையவை. காந்தத்தின் வட/தென் முனைகள் துருவங்கள் எனப்படும் காந்தப் புலம் என்பது காந்தத்தைச் சுற்றியுள்ள கண்ணுக்குத் தெரியாத காந்த விசைப்பகுதி ஆகும். காந்தப்புலம் துருவங்களில் வலிமையாக இருக்கும்.
மார்ச் 05
நீதிக்கதை
அம்மா சொல் கேள்!
செழிப்பான ஒரு புல்வெளியில் ஆடுகள் மேய்ந்துகொண்டிருந்தன. அவற்றை மேய்த்துக்கொண்டு வந்தவன், மரத்தடியில் உட்கார்ந்து கண் மூடி, புல்லாங்குழல் வாசித்துக்கொண்டிருந்தான்.
புல்வெளியைச் சுற்றி வேலி போடப்பட்டிருற்தது. அதன் அருகே, ஓர் ஆட்டுக்குட்டி மேய்ந்து கொண்டிருந்தது.
வேலிக்கு வெளிப்பக்கம் இருந்த ஓநாய் ஒன்று ஆட்டுக் குட்டியைப் பார்த்தது.
வேலிக்குள் முகத்தை நுழைத்துக்கொண்டு, ஓநாய் எதையோ பார்ப்பது போல பாசாங்கு செய்தது. அதைப் பார்த்த ஒர் ஆட்டுக்குட்டி, “உனக்கு என்னவேண்டும்?” என்று கேட்டது.
ஓநாயும் “நண்பா, நண்பா…இங்கே இளசான புல் கிடைக்குமா என்று பார்க்கிறேன்! இளம்புல் என்றால் எனக்கு ரொம்பப் பிரியம். அதைத் தின்று, ஜில்லென்று தண்ணீர் குடித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! உங்களுக்கெல்லாம் அந்த யோகம் கிடைத்திருக்கிறது! எனக்கு அது கிடைக்கவில்லை…..” என்று வருத்தத்துடன் கூறியது.
“அப்படியா! நீ புல்லா சாப்பிடுவாய்? நீ மாமிசத்தைத்தான் சாப்பிடுவாய் என்று என் அம்மாவும் அப்பாவும் சொன்னார்களே?” என்று ஆச்சரியத்துடன் கேட்டது ஆட்டுக் குட்டி. “சேச்சே…அதெலாம் சுத்தப் பொய்!” என்றது ஓநாய்.
“அப்படியென்றால் இரு. நான் வெளியே வந்து, மலையின் அந்தப் பக்கம் இளம்புல் இருக்குமிடத்தைக் காட்டுகிறேன். நாம் இரண்டு பேரும் போய், அதைச் சாப்பிட்டுவிட்டு, ஃப்ரெண்ட்ஸாக ஜாலியாகச் சுற்றலாம்!” என்று சொல்லிவிட்டு ஆட்டுக்குட்டி வேலி இடுக்கின் வழியாக நுழைந்து, ஓநாயின் பக்கம் போயிற்று.
“உடனே ஓநாய் அதன்மீது பாய்ந்து அதைக் கொன்று தின்றது.
அந்த ஆட்டுக் குட்டிக்குத் அது போகட்டும், பரவாயில்லை… என்று தானாகத் தெரியவில்லை. அனுபவம் நிறைந்த அம்மா, அப்பா பேச்சை கேட்டிருந்தால், மதிப்பு வாய்ந்த, தன் உயிரை இழந்திருக்காது அல்லவா?
இன்றைய செய்திகள்


TET SR Entry DEE Reg : CLICK DOWNLOAD


Even a pin is good for something.
சிறு துரும்பும் பல் குத்த உதவும்.
இரண்டொழுக்க பண்புகள் :.
1. எனது உணவானது விவசாயி போன்ற பலர் உழைப்பில் வருகிறது.
2. எனவே உணவை வீணாக்க மாட்டேன்.
பொன்மொழி :
இருக்கும் இடத்திலிருந்து தொடங்குங்கள். இருப்பதைப் பயன்படுத்துங்கள். முடிந்ததைச் செய்யுங்கள் -ஆர்தர் ஆஷ்
பொது அறிவு :
01. தென்னாட்டு தாகூர் என்று அழைக்கப்படுபவர் கவிஞர் யார்?
கவிஞர்.வாணிதாசன்
Thiru.Vanidasan
02. உலகின் நெல் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு எது?
இந்தியா-India
English words :
benevolent –kind, friendly and helpful to others.
நட்பிணக்கமும் உதவி மனப்பான்மையும் கொண்ட.
banter –friendly comments and jokes.
நட்பு முறையிலான குறிப்புரையும் கேலிப்பேச்சும்.
தமிழ் இலக்கணம்:
அறிவியல் களஞ்சியம் :
பூமியின் காந்த துருவங்கள் என்பது கோளின் காந்தப்புலக் கோடுகள் செங்குத்தாக இருக்கும் புள்ளிகள், மையத்தில் இருக்கும் இரும்பு நிக்கலின் திரவ இயக்கம் காரணமாக தொடர்ந்து மாறுகின்றன. வட காந்த துருவம் தற்போது கனடாவிலிருந்து சைபீரியாவை நோக்கி அலைந்து திரிந்து வேகத்தில் முடுக்கிவிடப்படுகிறது. அதே நேரத்தில் தெற்கு காந்த துருவம் அண்டார்டிகாவிலிருந்து தொலைவில் உள்ளது. இதனால் திசைகாட்டிகள் இந்தப் பகுதிகளுக்கு அருகில் நம்பகத்தன்மை குறைவாக உள்ளது. இந்தக் கம்பங்கள் நிலையானவை அல்ல; அவை புவியியல் காலத்தில் அலைந்து திரிந்து துருவ முனைப்பை மாற்றியமைக்கின்றன. பாறைகளில் பதிவுகளை விட்டுச் செல்கின்றன. ஆனால் மையத்தின் உருகிய இரும்பு மற்றும் நிக்கல், இந்த மாறும் புலத்தின் பின்னால் உள்ள இயந்திரமாகும். இது விண்வெளி கதிர்வீச்சுக்கு எதிரான ஒரு முக்கியமான கவசமாகும்.
மார்ச் 04
தேசிய தொழிலாளர்கள் பாதுகாப்பு தினம்
தேசிய தொழிலாளர்கள் பாதுகாப்பு தினம் என்ற பெயரில் இந்தியாவில் தொழிலாளர்கள் பாதுகாப்பு தினம் மார்ச் 4ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.தேசிய அளவிலான பாதுகாப்புக்குழு அமைப்பு 1966இல் தொழிலாளர் நல அமைச்சகத்தால் நிறுவப்பட்டது.
பிறகு 1971ஆம் ஆண்டு மார்ச் 4ஆம் தேதி தேசிய பாதுகாப்பு கவுன்சில் உருவாக்கப்பட்டது. மும்பையை தலைமையகமாகக் கொண்டு அனைத்து மாநிலத்திலும் இதன் பிரிவுகள் செயல்படுகின்றன.
தொழிலாளர்கள் விபத்துகளின்றி பணிபுரிந்திடவும், பாதுகாப்பு உணர்வுடனும், உடல்நலன் மற்றும் சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் பணி செய்திட வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தவே அனைத்து தொழிற்சாலைகளிலும் இத்தினம் கொண்டாடப்படுகிறது.
நீதிக்கதை
ஏமாந்த சிறுத்தை
ஒரு நாள் சிறுத்தை பசியுடன் உணவைத் தேடியது. அப்போது ஒரு கறுப்பு மானையும் புள்ளி மானையும் கண்டது.
அவை இரண்டும் மலையடிவாரத்தில் மேய்ந்து கொண்டிருந்தன. சிறுத்தை மிகுந்த எச்சரிக்கையுடன் மலையடிவாரத்தருகே சென்றது. ஆனால் எதனைத் தாக்குவது என அது முடிவு செய்யவில்லை.
அதே நேரத்தில் சிறுத்தையைப் பார்த்த மான்கள் இரண்டும் வேகமாக ஓடின. பிறகு அவை இரண்டும் ஒரு இடத்தில் இடது வலது பாதைகளில் ஓடின.
சிறுத்தை அந்த இடத்துக்கு வந்தது. ‘எதைத் துரத்தலாம்’ என்று தயங்கி நின்றது. பிறகு, ‘சரி.. கறுப்பு மானைத் துரத்தலாம். அதன் இறைச்சிதான் சுவையாக இருக்கும்’ என்று முடிவு செய்து கறுப்பு மானைத் துரத்தத் தொடங்கியது. ஆனால் அதற்குள் அது தொலைதூரம் ஓடிப் போய் விட்டது.
உடனே சிறுத்தை “அது வேகமாக ஓடக் கூடிய மான். அதைப் பிடிக்க முடியாது. பசி வேறு அதிகமாகி விட்டது. சரி… புள்ளி மானைப் பிடிக்கலாம்” என்று தீர்மானித்து மற்ற பாதையில் ஓடியது. ஆனால் புள்ளிமான் எப்போதோ பஞ்சாய்ப் பறந்துவிட்டிருந்தது.
முக்கியமான நேரத்தில் முக்கியமான முடிவை விரைவாக எடுக்க வேண்டும்.
இன்றைய செய்திகள்
⭐மத்திய - மாநில உறவு: தமிழ்நாடு அரசுக்கு ஆதரவளித்த கர்நாடகா... நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
⭐ஈரானின் 131 நகரங்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் இதுவரை 555 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.
⭐ ஈரான்-அமெரிக்கா, இஸ்ரேல் இடையேயான மோதலால் இந்தியாவில் வன்முறை வெடிக்க வாய்ப்பு உள்ளதாக மாநில அரசுகளுக்கு இந்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
🏀 விளையாட்டுச் செய்திகள்
🏀டி20 உலகக் கோப்பை:2-வது அரையிறுதியில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் நாளை மோதுகிறது.
🏀உலகின் உயரிய விளையாட்டு விருதுக்கு இந்திய மகளிர் அணி பரிந்துரை. இந்தப் பிரிவில் இங்கிலாந்து மகளிர் கால்பந்து அணி உள்பட 5 அணிகள் இந்தியாவுடன் போட்டியிடுகின்றன.
Today's Headlines



