Breaking

Monday, March 16, 2026

Monday, March 16, 2026

பொதுத்தேர்வில் ChatGPT - 81 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் - 17 ஆசிரியர்கள் மீது FIR பதிவு

பொதுத்தேர்வில் ChatGPT மூலம் மோசடி.. 81 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்..

10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வின்போது ChatGPT பயன்படுத்தி மாணவர்கள் காப்பியடிக்க உதவியதாக குற்றச்சாட்டு.

சோதனையில் பீட் பகுதியில் அதிகளவில் முறைகேடு நடந்தது கண்டுபிடிப்பு..

இதனைத் தொடர்ந்து 81 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதுடன், முதற்கட்டமாக 17 பேருக்கு எதிராக வழக்குப் பதிவு

மகாராஷ்டிராவில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வின் போது மாணவர்கள் காப்பியடிக்க உதவியதாக 81 ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கடந்த சனிக்கிழமை மாநில வாரியத்தால் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ சுற்றறிக்கையின்படி, இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை மொத்தம் 81 ஊழியர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பணியிடை நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, முதற்கட்டமாக 17 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கற்பித்தல் கருவிகள்

மாணவர்கள் ChatGPT -ஐ பயன்படுத்தி தேர்வில் முறைகேடு செய்ததாகவும், அதற்கு ஆசிரியர்கள் உறுதுணையாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. கிட்டத்தட்ட 5க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இதுபோன்ற முறைகேடுகள் கண்டறியப்பட்டுள்ளன. இதில் குறிப்பாக பீடு மாவட்டத்தில் அதிக அளவில் இத்தகைய முறைகேடுகள் கண்டறியப்பட்டுள்ளன. தேர்வு தொடங்கியவுடன் வினாத்தாள்களை செல்போன் மூலம் புகைப்படம் எடுத்து வெளியே இருப்பவர்களுக்கு அனுப்பியுள்ளனர். அந்த வினாக்களை ChatGPT போன்ற AI தொழில்நுட்பத்தில் பதிவேற்றி, அதற்கான விடைகளை பெற்றுள்ளனர்

பெறப்பட்ட விடைகளை பள்ளியின் பிரிண்டரில் அச்சிட்டு, பின்னர் சிறிய துண்டுகளாக மாற்றி மாணவர்களுக்கு ஆசிரியர்கள் வழங்கியுள்ளனர். சௌசாலா போன்ற பகுதிகளில் உள்ள தேர்வு மையங்களில் ட்ரோன் கேமராக்கள் மூலம் நேரடி கண்காணிப்பு செய்யப்பட்டது. இதில் 16 தேர்வு அறைகளில் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு உதவுவது உறுதி செய்யப்பட்டது.

தேர்வு மையங்களில் நடந்த இந்த முறைகேடுகள் தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
Monday, March 16, 2026

தேசிய வருவாய் வழி, திறன் படிப்பு உதவித்தொகை: 6,695 மாணவா்கள் தோ்வு!

தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை திட்ட பயனாளிகளை தோ்வு செய்வதற்கான தோ்வில் இறுதியாக 6,695 பள்ளி மாணவா்கள் தகுதி பெற்றுள்ளதாக தமிழக அரசுத் தோ்வுகள் இயக்ககம் இறுதிப் பட்டிலை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அரசின் அங்கீகாரம் பெற்ற அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 8- ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவித் தொகை (என்எம்எம்எஸ்) வழங்கப்படுகிறது.

இதில் 2025-2026- ஆம் கல்வியாண்டுக்கு இந்த என்எம்எம்எஸ் திட்டத்தின் கீழ் படிப்பு உதவித்தொகை வழங்க அரசு தோ்வு இயக்ககத்தால் கடந்த ஜன. 10- இல் தோ்வு நடத்தப்பட்டது.

இத்தோ்வில் மாணவா்கள் பெற்ற மதிப்பெண் விவரங்கள் கடந்த பிப். 18 - ஆம் தேதி வெளியிடப்பட்டது. இருப்பினும், மாணவா்களின் பிறந்த தேதி, இனப்பிரிவு உள்ளிட்ட திருத்தங்களுக்கு கடந்த பிப். 18 முதல் 24- ஆம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டது. இந்தத் திருத்தங்கள் நிறைவு பெற்று தற்போது தோ்வானவா்கள் இறுதிப் பெயா் பட்டியல் பள்ளிகளின் பெயா்களோடு வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, தமிழகம் முழுவதும் 6,695 மாணவா்கள் தகுதி பெற்று தோ்வு செய்யப்பட்டுள்ளனா். இந்த ஊக்கத்தொகைக்கான தெரிவுப்பட்டியலை இணையதளத்தில் (மற்ற தோ்வுகள் பிரிவில்) தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவித் தொகை திட்டத் தோ்வு முடிவுகள் என்ற பக்கத்தில் காணலாம்.

மேலும், இந்தப் பட்டியல் பள்ளிக் கல்வி இயக்ககத்தால் பிற தகுதிகள் சாா்ந்த பரிசீலனைக்கும் உள்பட்டதாகும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது
Monday, March 16, 2026

“ஆரம்பக் கல்வியில் மனப்பாட முறைக்குக் பதிலாக பின்லாந்து மாடல்” - அன்பில் மகேஸ் சிறப்பு பேட்டி

தமிழக பள்ளிக் கல்வியில் 1 முதல் 5-ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் 2026-27-ம் கல்வியாண்டு முதல் அமலாகிறது. இதுதொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஸ், பிரத்யேக நேர்காணல் அளித்துள்ளார்.

புதிய பாடத் திட்டம் குறித்த கேள்விகளுக்கு அமைச்சர் கூறியதாவது:

Q

மாணவர்களுக்கு 1, 2-ம் வகுப்புகளில் எழுத்துகளை திணிக்காமல் பின்லாந்து போல், நிதானமான கற்றல்முறையைக் கொண்டு வருகிறீர்கள். ‘என் பிள்ளை உடனே ஆங்கிலம் பேச, எழுத வேண்டும்’ என துடிக்கும் பெற்றோர் மனநிலையை எப்படி மாற்றப் போகிறீர்கள்?

A

மொழிக் கற்றலில் முதலில் கேட்டல், பேசுதல் திறன்களும், பின்னரே வாசித்தல், எழுதுதல் திறன்களும் பயிற்றுவிக்கப்பட வேண்டும். ஆரம்ப வகுப்புகளில் அடித்தளம் உறுதியானால் அனைத்து பாடங்களையும் புரிந்து கற்கும் திறன் வளரும். பிள்ளைகள் ஆங்கிலத்தை எளிதாக பேசவும், எழுதவும் உரிய பயிற்சிகள் தரப்படும் என்பதை பெற்றோருக்குப் புரியவைப்போம்.

Q

புதிய பாடத்திட்டம் சமூக நீதி, சமத்துவத்தை எப்படி பிரதிபலிக்கிறது? விளிம்பு நிலை மாணவர்களின் கற்றலை மேம்படுத்த என்ன அம்சங்கள் உள்ளன?

A

புதிய பாடத்திட்டம் சமூக நீதி, சமத்துவக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டது. செயல்பாடுகள் அடிப்படையிலான கற்பித்தல், குழுகற்றல் போன்ற வழிமுறைகள் மூலமாக சமமான கற்றல் உறுதிசெய்யப்படுகிறது. விளிம்புநிலை மாணவர்களின் கற்றல் அடைவு கண்காணிக்கப்பட்டு, கூடுதல் கவனம் தேவைப்படுவோருக்கு உடனடி குறைதீர் கற்றல் வழங்கப்படும்.

Q

மனப்பாடத் தேர்வு முறைக்கு பதிலாக அறிமுகப்படுத்தப்பட உள்ள திறன்சார் மதிப்பீடு எவ்வாறு அளவிடப்படும்?

A

மனப்பாடம் மாணவர்களுக்கு அழுத்தத்தைத் தருவதுடன், உண்மையான புரிதலை அளவிட உதவாது. எனவே, புதிய சூழலில் சிந்தித்து செயல்படுதல், பிரச்சினை தீர்க்கும் திறன், படைப்பாற்றல் போன்ற வாழ்வியல் திறன்களைக் கொண்டே மதிப்பீடு செய்யப்படும்.

Q

புதிய பாடத்திட்டத்தில், புத்தகவாசிப்புக்கும், டிஜிட்டல் திரைக்கல்விக்கும் இடையே சமநிலை எப்படி பேணப்படும்? கிராமப்புறங்களில் இணையவசதி சிக்கல்களுக்கு இடையே இதைச் சாத்தியப்படுத்து வது எப்படி?

A

வாசிப்பு மற்றும் எழுதுதல் அடிப்படை திறன்களாகும். அவை பாடப்புத்தகங்கள் வழியே உறுதிசெய்யப்படும். டிஜிட்டல் தளங்கள் கற்றலை மேம்படுத்தும் துணைக் கருவியாக இருக்கும். நேரில் காண முடியாத கடினமான கருத்துகளை விளக்க மட்டுமே அவை பயன்படுத்தப்படும். இணைய வசதி கிடைக்காத கிராமப்புறங்களிலும், ஆசிரியர் கையேடுகளில் வழங்கப்பட்ட கற்பித்தல் வளங்களை பயன்படுத்தி கற்றல் தொடரப்படும்.


Q

சிபிஎஸ்இயுடன் ஒப்பிடும்போது, இந்த புதிய பாடத்திட்டம் மென்மையாக இருக்கிறது. இதனால் நீட், ஜேஇஇ போன்ற போட்டித் தேர்வுகளில் நமது மாணவர்களின் பின்தங்கவாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறதே?

A

நமது பாடத்திட்டம் சர்வதேச தரத்துக்கு இணையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மனப்பாடம் இன்றி திறன் அடிப்படையில் புரிந்து கற்பதால், நீட் உட்பட எந்தவொரு போட்டித் தேர்வையும் தமிழக மாணவர்கள் தன்னம்பிக்கை யுடன் எதிர்கொள்வார்கள். இவற்றை அமல்படுத்தவும், வகுப்பறை செயல்பாடுகளை கட்டமைக்கவும் ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படும்.

Q

தற்போதைய சூழலில் பாலியல் கல்விக்கான தேவையுள்ளது. மாணவர்களுக்கு ‘குட் டச்’, ‘பேடுடச்’ விழிப்புணர்வுடன், வயதுக்கேற்ற அறிவியல்பூர்வமான பாலியல் கல்வி வழங்கப்படுமா?

A

தொடக்க வகுப்பிலிருந்தே மாணவர்களுக்கு வயதுக்கேற்ற விழிப்புணர்வு படிப்படியாக வழங்கப்படுகிறது. புதிய பாடத்திட்டத்தில் குழந்தைகள் தங்களைப் பற்றி நேர்மறையாக எண்ணவும், பாதுகாப்பு உணர்வு பெறவும் பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அதனுடன் வளரிளம் பருவத்தினருக்கு உடல் மாற்றங்கள், பாலின சமத்துவம்,உணர்வு மேலாண்மை போன்றவை குறித்து செயல்பாடுகள் மற்றும் கலைகள் மூலமாக கற்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதற்காக பிரத்யேகபயிற்சி ஆசிரியர்களுக்கு வழங்கப்படும்.

Q

பழைய பாடத்திட்டத்தில் 3-ம் வகுப்பு முடித்து, புதிய பாடத்திட்டத்தில் 4-ம் வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு முன்கள நடவடிக்கை என்ன? 6 முதல் 12-ம் வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டப் பணிகள் எந்த நிலையில் உள்ளன?

A

மாணவர்களுக்கு கற்றல் இடைவெளி ஏற்படாதவாறு இரு பாடத்திட்டங்களை இணைக்கும் பிரிட்ஜ் கோர்ஸ் பயிற்சி அளிக்கப்படும். 6 முதல் 12-ம் வகுப்புக்கான பாடத்திட்ட தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

Q

புதிய பாடத்திட்டம் முழுவதும் மாநிலக் கல்விக் கொள்கையை மட்டுமே சார்ந்ததா? அல்லது மத்திய அரசின் நிதியைப் பெறுவதற்காக தேசிய கல்விக் கொள்கையின் சில அம்சங்களையும் ஏற்றுள்ளீர்களா?

A

மாநில கல்விக் கொள்கை-2025 அடிப்படையில் மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளது. இருமொழிக் கொள்கை, சமத்துவம், பண்பாடு, சமூக மற்றும் எதிர்கால தேவைகளை இலக்காக கொண்டு நமது மாநிலத்தின் சூழலுக்கேற்ப இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

Q

பாடத்திட்டம் அமலுக்கு வந்தபின்மதிப்பாய்வு நடத்தப்பட்டு, மாவட்டவாரியான தரவுகள் பொதுமக்களுக்கு வெளியிடப்படுமா?

A

மாணவர்களின் கற்றல் அடைவு குறித்து 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாநில அளவிலான ஆய்வு நடத்தப்படும். இதன் முடிவுகள் பொதுமக்கள் பார்வைக்காக இணையளத்தில் பதிவேற்றப்படும். மேலும், அந்தத்தரவுகள் பகுப்பாய்வு செய்யப்பட்டு கற்றல் மேம்பாட்டுக்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

Monday, March 16, 2026

பகுதி நேரமாக பிஎச்டி முடித்தவர்கள் உதவி பேராசிரியர் பணிக்கு தகுதியானவர்கள் தானா?

பகுதி நேர​மாக பிஎச்டி முடித்​தவர்​கள் கல்​லூரி உதவிப் பேராசிரியர் பணிக்கு தகு​தி​யானவர்​கள்​தானா என்​பது தொடர்​பாக, உயர் ​கல்​வித் துறை புதிய அரசாணை வெளி​யிட வேண்​டும் என்று, அரசு கல்​லூரி ஆசிரியர் சங்​கம் வலி​யுறுத்​தி​யுள்​ளது.

இதுதொடர்​பாக, தமிழ்​நாடு அரசு கல்​லூரி ஆசிரியர் சங்க பொதுச் செய​லா​ளர் சோ.சுரேஷ் வெளி​யிட்​டுள்ள செய்​திக் ​குறிப்பு: கடந்த மார்ச் 13-ம் தேதி உயர்​கல்​வித் துறை​ வெளி​யிட்ட அரசாணை​யில் (எண் 40) பகு​திநேர முனை​வர் பட்​டம் (பிஎச்​டி) பெற்​றவர்​கள் உதவிப் பேராசிரியர் பணிக்கு தகு​தி​யானவர்​களாகக் கருதப்​பட​வில்லை என குறிப்​பிடப்​பட்​டுள்​ளது.

இந்த அரசாணை மீதான ஆட்​சேபத்தை அரசு கல்​லூரி ஆசிரியர் சங்​கம் தெரி​வித்​திருந்​தது. இந்​நிலை​யில், உயர்​கல்​வித் துறை அதி​காரி​களிடம் விளக்​கம் கேட்​ட​போது, பகுதி நேர முனை​வர் பட்​டம் பெற்​றவர்​கள் உதவிப் பேராசிரியர்​கள் பணிக்கு தகு​தி​யானவர்​கள்​தான் என உறு​தி​யாக தெரி​வித்​தனர்.

எனவே, ஏற்​கனவே வெளி​யிடப்​பட்ட அரசாணை​யில் உரிய மாற்​றம் செய்து புதிய அரசாணை வெளி​யிட​வேண்டும். உரிய நேரத்​தில் விளக்​கம் அளித்து உதவிப் பேராசிரியர் தேர்​வர்​களிடையே ஏற்​பட்​டிருந்த பதற்​றத்தை தணித்த உயர்​கல்​வித் துறை அதி​காரி​களுக்கு நன்​றியைத் தெரி​வித்​துக்​கொள்​கிறோம். இவ்​வாறு அவர் கூறி​யுள்​ளார்​.
Monday, March 16, 2026

அரசு ஊழியர்களே, ஆசிரியர்களே அலட்சியம் வேண்டாம்! GBM 2.0 - உங்கள் IFHRMS விவரங்களைச் சரிபார்க்க கடைசி வாய்ப்பு!

அரசு ஊழியர்களே, ஆசிரியர்களே அலட்சியம் வேண்டாம்! GBM 2.0 - உங்கள் IFHRMS விவரங்களைச் சரிபார்க்க கடைசி வாய்ப்பு!

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும் தற்போது ஒரு மிக முக்கியமான அப்டேட் வெளியாகியுள்ளது. கருவூலத் துறையிலிருந்து (Treasury Department) ஜிபிஎம் 2.0 (GBM 2.0) தொடர்பான பணிகளை மிக விரைவாக முடிக்குமாறு அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு GBM 2.0 அப்டேட்: தமிழ்நாடு அரசு கருவூலத் துறை மூலம் ஜிபிஎம் 2.0 (GBM 2.0 - Global Beneficiary Master) திட்டத்தை அமல்படுத்தியுள்ளது. இதன் மூலம் ஒவ்வொரு அரசு ஊழியருக்கும் 11 இலக்கத் தனித்துவ ஐடி உருவாக்கப்படுகிறது. IFHRMS போர்ட்டலில் உள்ள பெயர், பிறந்த தேதி, மொபைல் எண் மற்றும் PF விவரங்களில் உள்ள பிழைகளைச் சரிசெய்வது குறித்த முழுமையான வழிகாட்டி பற்றி பார்ப்போம்.

*ஜிபிஎம் 2.0 (GBM 2.0) என்றால் என்ன?*

ஜிபிஎம் 2.0 என்பதன் முழு வடிவம் Global Beneficiary Master என்பதாகும். எளிமையாகச் சொன்னால், இது ஒரு அரசு ஊழியரின் தனிப்பட்ட தரவுத் தொகுப்பு (Personal Data). உங்கள் வங்கி கணக்கு எண் (Bank Account), ஆதார் (Aadhaar), பான் கார்டு (PAN Card), மொபைல் எண் (Mobile) மற்றும் மின்னஞ்சல் (E-mail) முகவரி போன்றவை உங்களுக்கு மட்டுமே உரியதாக இருக்க வேண்டும். ஒரு ஊழியரின் தரவு மற்ற ஊழியரோடு எந்த இடத்திலும் மேட்ச் ஆகக்கூடாது என்பதை உறுதிப்படுத்தவே இந்த Data Cleansing பணி நடைபெறுகிறது. இந்தத் தரவுகள் அனைத்தும் சரியாக இருக்கும் பட்சத்தில், உங்களுக்கு எனத் தனியாக 11 இலக்க GBM ID உருவாக்கப்படும்.

*உங்களுடைய GBM ID மற்றும் தரவுகளைச் சரிபார்ப்பது எப்படி?*

உங்களுக்கு GBM ID உருவாகிவிட்டதா அல்லது உங்கள் தரவுகளில் ஏதேனும் பிழைகள் (Errors) உள்ளதா என்பதை அறிய கீழ்வரும் படிநிலைகளைப் பின்பற்றவும்.

• IFHRMS போர்ட்டலில் Initiator Login செய்யவும்.

• Other Application என்பதற்குச் சென்று, அதில் GBM 2 என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

• அடுத்து Beneficiary -> DTO Beneficiary Details என்பதை கிளிக் செய்யவும்.

• அதில் உள்ள Know Your Option பகுதிக்குச் செல்லுங்கள்.

• உங்கள் பெயர், GBM ID, ஆக்டிவ் ஸ்டேட்டஸ் மற்றும் முகவரி உள்ளிட்ட விவரங்கள் திரையில் தோன்றும்.

*உங்களுடைய GBM ID-ல் ஏதேனும் தவறுகள் இருக்கிறதா எப்படி பார்ப்பது?*

• E-Service -> Human Resource -> GBM Report Viewer மூலம் ஒரு எக்செல் (Excel) கோப்பைத் தரவிறக்கம் செய்யவும்.

• அதில் Exception Value மற்றும் Exception Remark என்ற பகுதியில் உங்கள் தரவுகளில் உள்ள பிழைகள் பட்டியலிடப்பட்டிருக்கும்.


*உங்களுடைய GBM ID-ல் எப்படி திருத்தம் செய்வது?*

அரசு தரப்பில் இந்தத் திருத்தங்களை மேற்கொள்ள சில முக்கியமான வழிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன.


*பெயர் மற்றும் பிறந்த தேதி*

உங்கள் பெயர் மற்றும் பிறந்த தேதி ஆகியவை பணிப் பதிவேடு (SR), IFHRMS ப்ரொபைல், மற்றும் CPS/GPF அக்கவுண்ட் ஸ்லிப் ஆகிய மூன்றிலும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். பெயரின் இனிஷியல் (Initial) எப்போதும் பெயருக்குப் பின்னால் தான் இருக்க வேண்டும். அனைத்தும் ஆங்கிலப் பெரிய எழுத்துக்களில் (CAPITAL LETTERS) இருக்க வேண்டும்; நடுவில் புள்ளி (Full Stop) வைக்கக்கூடாது.

பணியேற்ற தேதி (DOJ)

உங்கள் SR புத்தகத்தில் உள்ள பணியேற்ற தேதியும், IFHRMS மற்றும் CPS/GPF ஸ்லிப்பில் உள்ள தேதியும் சரியாகப் பொருந்த வேண்டும்.

PF வகை (PF Type)

சிலருக்கு CPS/GPF ஆப்ஷன் செலக்ட் செய்ய முடியாமல் மறைந்திருக்கும் (Hide). இதற்கு ஒரு சிறிய ட்ரிக் உள்ளது: Employee Category-க்குச் சென்று 'Government Servant' என்பதை மாற்றிவிட்டு, மீண்டும் 'TN Government' எனத் தேர்ந்தெடுங்கள். இப்போது அந்த ஆப்ஷன் காண்பிக்கப்படும்.

மொபைல் எண்

கணவன், மனைவி இருவருமே அரசு ஊழியர்களாக இருந்தால், இருவருக்கும் தனித்தனி மொபைல் எண்களைப் பதிவு செய்ய வேண்டும். ஒரே எண்ணைப் பகிரக்கூடாது.

*GBM ID திருத்தம் செய்ய தேவையான ஆவணங்கள் என்ன?*

நீங்கள் செய்யும் ஒவ்வொரு திருத்தத்திற்கும் உரிய ஆதாரங்களை 1 MB அளவிற்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

• பெயர் / பிறந்த தேதி மாற்றம் (SR புத்தகத்தின் முதல் பக்கம்)

• பணியேற்ற தேதி மாற்றம் (SR புத்தகத்தின் 58-வது பக்கம்)

• தந்தை பெயர், ஆதார் கார்டு, பான் கார்டு நகல் அவசியம்

• CPS / GPF எண் திருத்தம் (அலாட்மெண்ட் நம்பர் (Allotment Number) நகல்)

இந்த விவரங்கள் அனைத்தையும் சரியாகப் புதுப்பித்துவிட்டால், உங்களுக்கு வர வேண்டிய சம்பளம் மற்றும் இதர பணப் பலன்கள் எந்தத் தடையுமின்றி உங்கள் வங்கி கணக்கிற்கு வந்து சேரும். இல்லையெனில், அவை நிறுத்தி வைக்கப்பட (Hold) வாய்ப்புள்ளது. எனவே இந்த GBM 2.0 பணிகளை விரைந்து முடியுங்கள்.
Monday, March 16, 2026

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு: தேர்தல் நடத்தை விதிகள் (மார்ச் 2026)

​தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டதும் தேர்தல் நடத்தை விதிகள் (Model Code of Conduct) உடனடியாக அமலுக்கு வரும். குழு உறுப்பினர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கீழ்க்கண்ட விதிகளைத் தவறாமல் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

*​1. வாட்சாப் குழு உறுப்பினர்களுக்கான பொது விதிகள்:*

*​தவறான செய்திகள் (Fake News):*

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், போலியான கருத்துக்கணிப்புகள் அல்லது எடிட் செய்யப்பட்ட வீடியோக்களைப் பகிர வேண்டாம்.

*​வெறுப்புப் பேச்சு:*

சாதி, மத ரீதியான மோதல்களைத் தூண்டும் விதமாகவோ அல்லது தனிநபர்களின் கண்ணியத்தைக் குறைக்கும் வகையிலோ பதிவிடக் கூடாது.

*​AI விழிப்புணர்வு:*

டீப்-பேக் (Deepfake) எனப்படும் செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட போலி வீடியோக்கள்/குரல் பதிவுகளைப் பகிர்வது கடுமையான குற்றமாகும்.

*​2. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான சிறப்பு விதிகள்:*

​அரசுப் பணியாளர் நடத்தை விதிகளின்படி (Conduct Rules), அரசு ஊழியர்கள் முற்றிலும் நடுநிலை வகிக்க வேண்டும்:

*​அரசியல் சார்பு:*

எந்தவொரு அரசியல் கட்சிக்கும் ஆதரவாகப் பிரச்சாரம் செய்யவோ, சின்னங்களைப் பயன்படுத்தவோ கூடாது.

*​சமூக ஊடகக் கட்டுப்பாடு:*

அரசியல் பதிவுகளை Like, Share அல்லது Forward செய்வது கூட விதிமீறலாகக் கருதப்பட்டு துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படலாம்.

*​நடுநிலைமை:*

தேர்தல் பணியில் ஈடுபடும்போது எவ்வித பாரபட்சமுமின்றி செயல்பட வேண்டும்.

*​3. குழு நிர்வாகிகளுக்கான (Admins) பொறுப்பு:*

​குழுவில் பகிரப்படும் ஆட்சேபனைக்குரிய பதிவுகளுக்கு நிர்வாகிகளே பொறுப்பாவார்கள்.

​தேவையற்ற விவாதங்களைத் தவிர்க்க குழுவின் அமைப்புகளை (Only Admins) மாற்றிக்கொள்ளலாம்.

​விதிமீறல் பதிவுகள் கண்டறியப்பட்டால் அவற்றை உடனடியாக நீக்க வேண்டும்.

*​4. புகார் அளிக்க:*

​தேர்தல் விதிமீறல்கள் குறித்து பொதுமக்கள் மற்றும் ஊழியர்கள் c-VIGIL செயலி அல்லது தேர்தல் ஆணையத்தின் கட்டணமில்லா எண்ணிற்குப் புகார் தெரிவிக்கலாம்.

​"நமது ஜனநாயகம் காப்போம் - விதிகளுக்கு உட்பட்டு நடப்போம்"

​🙏
Monday, March 16, 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 16.03.2026


அழ. வள்ளியப்பா

திருக்குறள்: 

குறள் 815: 

செய்தேமஞ் சாராச் சிறியவர் புன்கேண்மை 
எய்தலின் எய்தாமை நன்று. 

விளக்க உரை: 

காவல் செய்து வைத்தாலும் காவல் ஆகாத கீழ்மக்களின் தீய நட்பு, ஒருவனுக்கு ஏற்படுவதை விட ஏற்படாமலிருப்பதே நன்மையாகும்.

பழமொழி :

Accept if the counsel is good, no matter who gave it. 

அறிவுரை நல்லதாய் இருப்பின் யார் கூறினாலும் கேள்

இரண்டொழுக்க பண்புகள் :.

1. எனது நோட்டில் உள்ள காகிதத்தை கிழிக்க மாட்டேன்.

2 காகிதம் கிழிப்பதால் எனது இருப்பிடம் அசுத்தம் ஆவது மட்டும் அல்லாமல் மரங்களை அழிக்கவும் அது மறைமுகமாக ஏதுவாகி விடும்.

பொன்மொழி : 

ஒரு லட்சியத்தை மேற்கொள்ளுங்கள். அதை அடைவதற்காக விடாமுயற்சியுடன் முன்னேறுங்கள் - டாக்டர் அம்பேத்கர்

பொது அறிவு : 

01.அரசியல் தத்துவத்தின் தந்தை (Father of Political Philosophy) என்று அழைக்கப்படுபவர் யார்? 

கிரேக்க தத்துவஞானி 
பிளேட்டோ- Plato

02. 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் எப்போது நடைபெற உள்ளது?

ஏப்ரல் 23,2026

English words :

Brittle - breakable;உடையக்கூடிய
Baffle - Astound;குழப்பம்

தமிழ் இலக்கணம்: 

கேளிர், கேளீர் 

இரண்டு சொற்களும் ஒரே பொருளைத் தருமா இல்லாவிட்டால் வேறு வேறு பொருளைத் தருமா? வாருங்கள் பார்ப்போம்


இரண்டும் வேறு வேறு சொற்கள் தான்.

கேளிர் என்பது உறவினரைக் குறிக்கும்.

எ. கா - யாதும் ஊரே யாவரும் கேளிர் 


கேளீர் என்பது கேளுங்கள் என்பதைக் குறிக்கும். 

எ. கா - நான் சொல்வதைக் கேளீர்

அறிவியல் களஞ்சியம் :

நமது சூரிய குடும்பத்தில் உள்ள நட்சத்திரங்களை விட பூமியில் உள்ள மரங்களின் எண்ணிக்கை அதிகம்.

மார்ச் 16

அழ. வள்ளியப்பா அவர்களின் நினைவு நாள்


அழ. வள்ளியப்பா (நவம்பர் 71922மார்ச் 161989) குழந்தை இலக்கியங்கள் படைத்த மிக முக்கியமான கவிஞர். 2,000 க்கும் மேலான குழந்தைகளுக்கான பாடல்கள் எழுதியுள்ளார். குழந்தை எழுத்தாளர்கள் பலரைத் திரட்டி 1950 -ல் குழந்தை எழுத்தாளர்கள் சங்கம் என்ற அமைப்பை உருவாக்கினார். சக்தி வை.கோவிந்தன் இச்சங்கத்தின் முதல் தலைவராக இருந்தார். அவரைத் தொடர்ந்து வள்ளியப்பா இந்த அமைப்பின் காரியதரிசியாகவும், தலைவராகவும், வழிகாட்டியாகவும் பல பொறுப்புகளை ஏற்றுச் செயல்பட்டார். காரைக்குடி குழந்தை எழுத்தாளர் சங்கத் தலைவராகப் பொறுப்புவகித்தார்.

அழ. வள்ளியப்பா 11 பாடல் தொகுதிகள், 12 புதினங்கள், 9 கட்டுரை நூல்கள், 1 நாடகம், 1 ஆய்வு நூல், 2 மொழிபெயர்ப்பு நூல்கள், 1 தொகுப்பு நூல் ஆகியவற்றை வெளியிட்டுள்ளார். இவற்றில், 2 நூல்கள் இந்திய நடுவண் அரசின் பரிசும், 6 நூல்கள் தமிழக அரசின் பரிசும் பெற்றன.

நீதிக்கதை

 கைமேல் பலன் கிடைத்தது

அரசன் ஒருவன் சகுனங்களில் ஆழ்ந்த நம்பிக்கை உடையவனாக இருந்தான். அரண்மணை ஜோதிடர் இந்த நம்பிக்கை மேல் குளிர்க்காய்ந்து கொண்டிருந்தார். ஒரு நாள் ஜோதிடர் அரசே, அதிகாலை எழுந்தவுடன் இரண்டு காக்கைகளை ஒன்றாகப் பார்த்தால் நாள் சிறக்கும் என்றார். மன்னன் சேவகனை அழைத்து காலையில் எங்கேயாவது இரண்டு காக்கைகள் தென்பட்டால் சொல் என்று கட்டளையிட்டான். சேவகன் தினமும் பொழுது விடியும் முன்பே தெருவிற்கு சென்றுவிடுவான். 

ஒரு நாள் அரண்மனைக்குப் பக்கத்துத் தெருவில் இரண்டு காக்கைகள் ஒன்றாக அமர்ந்திருப்பதைக் கண்டான். அடடா! நல்ல சகுனம், இன்று மன்னர் நமக்கு நிச்சயம் பதவி உயர்வு கொடுப்பார் என்று மகிழ்ச்சியுடன் மன்னரிடம் சென்று விபரம் சொன்னான். இதைக் கேட்ட மன்னன் சேவகனுடன் அந்த இடத்திற்கு சென்றான். அதற்குள் ஒரு காக்கை போய்விட்டது. மன்னனுக்கு மூக்கின் மேல் கோபம் வந்து விட்டது. தளபதியை அழைத்து இந்தப் பொறுப்பற்ற சேவகனுக்குப் பத்து கசையடி கொடு என்று உத்தரவிட்டான். 

சேவகன் சிரிக்க ஆரம்பித்தான். மன்னனுக்கு கோபம் அதிகமானது. ஏன் சிரிக்கிறாய் என்று சொல்லாவிட்டால் இன்னமும் பத்து கசையடி என்று உறுமினான். சேவகன் சொன்னான். மகா மன்னரே! இன்று நான் மட்டும்தான் அதிகாலையில் இரட்டைக் காக்கைகளைப் பார்த்தேன். கை மேல் பலன் கிடைத்து விட்டது அல்லவா? என்றான். மன்னருக்கு அப்போதுதான் சகுனம் பார்ப்பது தவறு என்று உரைத்தது.

இன்றைய செய்திகள்

16.03.2026

⭐தமிழகத்திற்கு ஒரேகட்டமாக ஏப்ரல் 23ம் தேதி வாக்குப்பதிவு

⭐ மாணவர்கள், கப்பல் மாலுமிகள், தொழில் வல்லுநர்கள், வணிகர்கள் என சுமார் 9,000 இந்தியர்கள் தற்போது ஈரானில் பாதுகாப்பாக இருப்பதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது.

⭐ மேகாலயாவின் கரோ ஹில்ஸ் மாவட்டத்தில் பழங்குடிகள் மற்றும் இதர பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதலால் மேகாலயாவில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

⭐ ஈரானின் தொடர் தாக்குதல்களால் அமெரிக்காவின் நட்பு நாடுகளாக உள்ள அரபு நாடுகள் பாதிக்கப்பட்டு உள்ளன. 

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀ஓய்வு முடிவை அறிவித்தார் பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சர்பராஸ் அகமது. இவர் பாகிஸ்தான் அணிக்காக 54 டெஸ்ட், 117 ஒருநாள் மற்றும் 61 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

Today's Headlines

⭐ Voting for Tamil Nadu will be held in a single phase on  April 23

⭐ India’s Ministry of External Affairs has confirmed that about 9,000 Indians, including students, ship sailors, professionals, and businesspeople, are currently safe in Iran

⭐ Tension has arisen in Meghalaya after clashes between tribal groups and other communities in the Garo Hills district

⭐ Due to continuous attacks by Iran, several Arab countries that are allies of the United States have been affected.

 SPORTS NEWS 

🏀 Former Pakistan captain Sarfraz Ahmed has announced his retirement
He played 54 Test matches, 117 One-Day Internationals, and 61 T-20 matches for the Pakistan national cricket team.

Covai women ICT_போதிமரம்

Sunday, March 15, 2026

Sunday, March 15, 2026

சட்டமன்ற தேர்தல் 2026 - தேர்தல் தேதிகள் அறிவிப்பு


நடைபெற இருக்கும் 5 மாநில சட்டமன்ற தேர்தல்களின் தேதிகளை இந்திய தேர்தல் ஆணையர் திரு ஞானேஷ் குமார் அவர்கள் தற்போது வெளியிட்டுள்ளார்

தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார்

தமிழ்நாடு

அதன்படி தமிழ்நாட்டிற்கு வரும் அன்று சட்டமன்றத் தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

தமிழ்நாட்டில் வேட்பு மனு தாக்கல் மார்ச் 30ஆம் தேதி தொடங்குகிறது

மனு தக்கல் செய்ய கடைசி நாள் ஏப்ரல் 6

மனுக்களை திரும்ப பெற கடைசி நாள் ஏப்ரல் 9

வாக்குப்பதிவு ஏப்ரல் 23

வாக்கு எண்ணிக்கை மே 4


பிற மாநிலங்கள்

அசாம் மாநிலத்திற்கு ஏப்ரல் ஒன்பதாம் தேதி வாக்குப்பதிவு

கேரளாவில் ஏப்ரல் ஒன்பதாம் தேதி வாக்குப்பதிவு

புதுச்சேரிக்கு ஏப்ரல் ஒன்பதாம் தேதியும் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

மேற்கு வங்கத்தில் ஏப்ரல் 23 & 29 ஆகிய நாட்களில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது

ஐந்து மாநிலங்களுக்கும் நான்காம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று அன்று முடிவுகள் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

வாக்கு எண்ணிக்கை நான்காம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
Sunday, March 15, 2026

பல்வேறு படிப்புகளுக்கு இணைத்தன்மை இன்மை (Not Equivalent) வழங்கி அரசாணை வெளியீடு!


பல்வேறு படிப்புகளுக்கு இணைத்தன்மை இன்மை (Not Equivalent) வழங்கி அரசாணை வெளியீடு!

G.O.Ms.No.43, 19, 17 - Not Equivalent-pdf

👇👇👇👇

Sunday, March 15, 2026

பல்வேறு படிப்புகளுக்கு இணைத்தன்மை (Equivalent) வழங்கி அரசாணை வெளியீடு!!



பல்வேறு படிப்புகளுக்கு இணைத்தன்மை (Equivalent) வழங்கி அரசாணை வெளியீடு!!

G.O.Ms.No.42, 18, 16 - Equivalent.pdf

👇👇👇👇

Download here
Sunday, March 15, 2026

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் -2026 | வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி


வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் -2026

PO Training PPT. - Download here
Sunday, March 15, 2026

ஆசிரியர் தகுதித் தேர்வு பேனல் தொடர்பான சென்னை உயர் நீதிமன்ற வழக்கு தீர்ப்பு..

* WP No 46150/2025 தீர்ப்பு நாள் 28.11.2025

* Without expressing any opinion on merits என்று மட்டுமே தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

* இந்த தீர்ப்பு consider வகையில் சேரும்

* தீர்ப்பில் direction மட்டுமே வழங்கப்பட்டுள்ளது .சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டதை கூறி அரசு செயல்முறை வழங்க கூடும்

* வழக்கு தொடர்ந்தவர்களுக்கு பதவி உயர்வு வழங்க நீதிமன்றம் கூறவில்லை . விதிகளுக்கு உட்பட்டு முடிவு எடுக்க மட்டுமே கூறப்பட்டுள்ளது

* வழக்கு தொடர்ந்தவர்கள் தங்கள் தரப்பை தெரிவிக்க நேரில் அழைப்பு

* பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண் : 07685/சி 1/இ 1/2025 நாள் 11.03.2026
Sunday, March 15, 2026

மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலர்கள் நியமனம் செய்து ஆணைகள் வெளியீடு.


மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2027 – மக்கள் தொகை கணக்கெடுப்புச் சட்டம், 1948-இன் கீழ் மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலர்கள் நியமனம் – அறிவிக்கை வெளியிடப்பட்டது – அரசு ஆணைகள் பிறப்பிக்கப்பட்டன.

Census, 2027- Appointment of Census Officers under the Census Act, 1948 - Notification - Published - Orders Issued.

👇👇👇👇

Sunday, March 15, 2026

அகத் தணிக்கை மேற்கொள்ளும் பொருட்டு 31.05.2026 வரை ஓய்வு பெற உள்ள தலைமையாசிரியர்கள் விவரம் கோரி பள்ளிக் கல்வித் துறை உத்தரவு!

அகத் தணிக்கை மேற்கொள்ளும் பொருட்டு 31.05.2026 வரை ஓய்வு பெற உள்ள தலைமையாசிரியர்கள் விவரம் கோரி பள்ளிக் கல்வித் துறை உத்தரவு!

DSE - HM Retrirement Details - Download here
Sunday, March 15, 2026

TET தேர்ச்சி அடிப்படையில் உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு வழங்கக் கோரி வழக்கு தொடுத்த 10 பட்டதாரி ஆசிரியர்களை பள்ளிக் கல்வி இயக்குநரகத்திற்கு வருகை புரிய பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!


TET தேர்ச்சி அடிப்படையில் உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு வழங்கக் கோரி வழக்கு தொடுத்த 10 பட்டதாரி ஆசிரியர்களை பள்ளிக் கல்வி இயக்குநரகத்திற்கு வருகை புரிய பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!

DSE - HS HM Promotion.pdf

👇👇👇👇

Saturday, March 14, 2026

Saturday, March 14, 2026

அவசரகதியில் தயாராகும் அரசாணைகள்: தேர்தல் நெருங்குவதால் அதிகாரிகள் ஜரூர்

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்குவதால், நிலுவையில் இருந்த கோப்புகள் தொடர்பாக, பல்வேறு துறைகளில் அரசாணைகள் தயாரிக்கும் பணிகள் அவசரமாக நடந்து வருகின்றன. தமிழகத்தில், தற்போதைய அரசின் பதவிக்காலம் முடிவடைய உள்ளது.

இதையடுத்து, சட்டசபை தேர்தல் தேதிகள் ஓரிரு நாட்களில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிடும். தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்து விட்டால், தமிழக அரசு தன்னிச்சையாக எந்த அரசாணையையும் பிறப்பிக்க முடியாது. அத்தியாவசிய தேவை இருப்பின், அது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு தெரிவிக்க வேண்டும். இந்நிலையில், கடந்த ஐந்து ஆண்டுகளில், பல்வேறு துறைகள் வாயிலாக வெளியிடப்பட்ட அறிவிப்புகளில் பலவற்றுக்கு இன்னும் அரசாணைகள் வரவில்லை. திட்டங்கள் தொடர்பான அறிவிப்புகள் மட்டுமல்லாது, நிர்வாக நடைமுறை தொடர்பாகவும் எடுக்கப்பட்ட கொள்கை முடிவுகள் நிலுவையில் உள்ளன. ஆட்சிக் காலம் முடிவதற்குள் அரசாணை பிறப்பிக்க வேண்டிய நெருக்கடி எழுந்துள்ளது.

இதனால், தலைமை செயலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி, வனத்துறை, பதிவுத் துறை, சுகாதாரம், கல்வி என பல்வேறு துறைகளில் நிலுவையில் உள்ள பணிகளுக்கு, அரசாணைகள் தயாரிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதற்கான கோப்புகள் அடிப்படையில், வரைவு அரசாணைகள் தயாரிக்கும் பணிகள், தலைமை செயலகத்தில் இரவு வரை நடக்கின்றன. ஒவ்வொரு துறையிலும், 20 முதல், 60 அரசாணைகள் தயாராகி வருவதாக கூறப்படுகிறது. தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன், இந்த பணிகளை முடிக்க வேண்டும் என்ற நெருக்கடியில், அந்தந்த துறை அதிகாரிகள் பரப்பரப்பாக வேலை செய்து வருவதாக, தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Saturday, March 14, 2026

திருமண முன்பணம் பெற்று தவணை நிலுவையில் உள்ள போது இரண்டாவதாக திருமணம் முன்பணம் பெறலாம் என்பதற்கான அரசாணை

திருமண முன்பணம் பெற்று தவணை நிலுவையில் உள்ள போது இரண்டாவதாக திருமணம் முன்பணம் பெறலாம் என்பதற்கான அரசாணை