Breaking

Thursday, March 5, 2026

Thursday, March 05, 2026

1 லட்சம் பள்ளிகளில் 1.2 கோடி மாணவர்களுக்கு ஆதார் புதுப்பிப்பு; நீட், ஜே.இ.இ தேர்வுகளுக்கு அப்டேட் கட்டாயம்

நாடு முழுவதும் உள்ள ஒரு லட்சத்து 3,000-க்கும் அதிகமான பள்ளிகளில் பயிலும் 1.2 கோடி மாணவர்களுக்கு, அவர்களது பள்ளி வளாகங்களிலேயே ஆதார் பயோமெட்ரிக் தகவல்களைப் புதுப்பிக்கும் பணியை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளது.


மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள இந்தச் செய்திக் குறிப்பில், நீட், ஜே.இ.இ போன்ற போட்டித் தேர்வுகள் மற்றும் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு ஏதுவாக, 7 முதல் 15 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு வரும் அக்டோபர் வரை இந்தச் சேவை இலவசமாக வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 1 லட்சத்து 3,000-க்கும் அதிகமான பள்ளிகளில் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் கோடிக்கணக்கான பள்ளி மாணவர்களுக்கு அவர்களுடைய பள்ளி வளாகங்களிலேயே ஆதாரில் கட்டாய பயோமெட்ரிக் புதுப்பித்தலை மேற்கொண்டு உதவி செய்துள்ளது என்று மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: “இதுவரை இந்த பெரும் நடவடிக்கை 1.2 கோடி பள்ளி மாணவர்களுக்கு உதவியாக இருந்துள்ளது. 2025 செப்டம்பரில் பள்ளி மாணவர்களுக்காக இந்த கட்டாய பயோமெட்ரிக் புதுப்பித்தல் நடவடிக்கையை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் மேற்கொண்டுள்ளது. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கல்வி துறைகள், மாவட்ட நிர்வாகம், பள்ளிகள் உள்ளிட்டவற்றுடன் ஒருங்கிணைந்து இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் பிராந்திய அலுவலகங்களும், மாநில அலுவலகங்களும் இப்பணியை மேற்கொள்கின்றனர்.

இப்பணிகளுக்காக 4 ஆயிரம் எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. பணியை விரைவுபடுத்த மேலும் அதிக எண்ணிக்கையிலான எந்திரங்களை பயன்படுத்துவதற்கான நடவடிக்கைகளிலும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் ஈடுபட்டுள்ளது. மாணவர்களின் ஆதாரில் பயோமெட்ரிக் புதுப்பித்தல் மூலம் அவர்கள் பல்வேறு அரசுத் திட்டங்கள், கல்வி உதவித் தொகைகள் ஆகிய பயன்களைப் பெற முடியும். போட்டித் தேர்வு மற்றும் பல்கலைக்கழக தேர்வுகளிலும் அவர்கள் பதிவு செய்ய இயலும். எனவே, மாணவர்களின் ஆதாரில் புதுப்பித்தலை மேற்கொள்ள பெற்றோர்களையும், காப்பாளர்களையும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் புதுப்பித்து வருகிறது. 2025 அக்டோபர் முதல் ஓராண்டு காலத்திற்கு 7 முதல் 15 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு இலவசமாக ஆதாரில் கட்டாய பயோமெட்ரிக் புதுப்பித்தலை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் மேற்கொண்டுள்ளது.

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) ஒரு முக்கிய மைல்கல்லாக, இந்தியா முழுவதும் 1 லட்சத்து 3,000-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் சிறப்பு முகாம்களை நடத்தி, லட்சக்கணக்கான மாணவர்கள் தங்களின் பள்ளிகளிலேயே எளிதாகக் கட்டாய பயோமெட்ரிக் புதுப்பிப்பை (MBU) நிறைவு செய்ய உதவியுள்ளது.

இதுவரை மேற்கொள்ளப்பட்ட இந்த பிரம்மாண்டமான நடவடிக்கையின் மூலம், சுமார் 1.2 கோடி (12 மில்லியன்) பள்ளி மாணவர்கள் தங்களின் பள்ளிகளிலேயே பயோமெட்ரிக் புதுப்பிப்பை முடித்துள்ளனர்.

கல்விக்கான ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் அமைப்பு (UDISE+) செயலியுடன் வெற்றிகரமான தொழில்நுட்ப ஒருங்கிணைப்புக்குப் பிறகு, செப்டம்பர் 2025-இல் பள்ளி மாணவர்களுக்கான இந்த சிறப்புத் திட்டத்தை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) தொடங்கியது.

மத்திய பள்ளி கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறையின் UDISE+ அமைப்புடன் இணைக்கப்பட்டதன் மூலம், பள்ளிகளில் உள்ள மாணவர்களின் பயோமெட்ரிக் புதுப்பிப்பு நிலையை அறிந்துகொள்ள முடிந்தது. இதன் மூலம், பயோமெட்ரிக் புதுப்பிக்க வேண்டிய மாணவர்களைக் கண்டறிந்து, பள்ளிகளிலேயே முகாம்களை நடத்தி பணிகளை முடிக்க இது உதவியது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள மத்திய பள்ளி கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறையின் மண்டல மற்றும் மாநில அலுவலகங்கள், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கல்வித் துறைகள், மாவட்ட நிர்வாகம், பள்ளிகள் மற்றும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) கூட்டாளர் அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து இந்த மாணவர் நலன் சார்ந்த பணியைச் செயல்படுத்தி வருகின்றன.

தற்போது நடைபெற்று வரும் இந்தப் பணிக்காக குறைந்தபட்சம் 4,000 இயந்திரங்கள் பயன்பாட்டில் உள்ளன. பணிகளை மேலும் வேகப்படுத்த இந்த இயந்திரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI)திட்டமிட்டுள்ளது.

மாணவர்களின் ஆதாரில் பயோமெட்ரிக் தகவல்களைப் புதுப்பித்து வைத்திருப்பது, பல்வேறு அரசுத் திட்டங்களின் பலன்கள் மற்றும் கல்வி உதவித்தொகைகளைப் பெறுவதற்கும், நீட், ஜே.இ.இ, சி.யு.இ.டி (NEET, JEE, CUET) போன்ற போட்டித் தேர்வுகள் மற்றும் பல்கலைக்கழகத் தேர்வுகளுக்குப் பதிவு செய்யும்போதும் அங்கீகாரத்தைச் சுலபமாக்க உதவுகிறது. எனவே, பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்கள் தங்கள் குழந்தைகளின் பயோமெட்ரிக் தகவல்களைப் புதுப்பிக்குமாறு UIDAI ஊக்குவித்து வருகிறது.

இந்த சிறப்புப் பணி கடந்த ஆறு மாதங்களாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 7 முதல் 15 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான ஆதார் பயோமெட்ரிக் புதுப்பிப்பை, அக்டோபர் 1, 2025 முதல் ஓராண்டு காலத்திற்கு இலவசமாக இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வழங்குகிறது.

பள்ளிகளில் நடத்தப்படும் முகாம்கள் தவிர, மாணவர்கள் இந்தியா முழுவதும் உள்ள எந்தவொரு ஆதார் பதிவு மையங்கள் மற்றும் ஆதார் சேவா கேந்திராக்களுக்குச் சென்றும் தங்களது பயோமெட்ரிக் தகவல்களைப் புதுப்பித்துக் கொள்ளலாம்.” என்று மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Thursday, March 05, 2026

TAPS ஓய்வூதியத் திட்டத்தை எதிர்த்து வழக்கு - பதிலளிக்கத் தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழ்நாடு அரசு ஊழியர்களின் இரண்டு தசாப்த கால போராட்டத்திற்கு ஒரு தீர்வாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் "தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை" கடந்த 03-01-2026 அன்று அறிவித்தார்.

செய்தி மக்கள் தொடர்புத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்த புதிய திட்டத்தின் கீழ் ஊழியர்களுக்குப் பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன:

அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் போது வாங்கும் கடைசி மாத ஊதியத்தில் சரியாக 50% தொகை ஓய்வூதியமாக உறுதியளிக்கப்படும்.

ஊழியர்களின் 10% பங்களிப்பு போக, ஓய்வூதிய நிதியத்திற்குத் தேவைப்படும் கூடுதல் நிதி முழுவதையும் தமிழக அரசே ஏற்கும்.

பணியில் இருப்பவர்களுக்கு வழங்கப்படுவதைப் போலவே, ஓய்வூதியதாரர்களுக்கும் ஆண்டுக்கு இரண்டு முறை (6 மாதங்களுக்கு ஒருமுறை) அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படும்.

ஓய்வூதியதாரர் மறைந்தால், அவர் பெற்று வந்த தொகையில் 60% குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும்.

பணியின் போது உயிரிழக்க நேரிட்டால், பணிக்காலத்தின் அடிப்படையில் 25 லட்சம் ரூபாய் வரை பணிக்கொடை வழங்கப்படும்.

தகுதிப் பணிக்காலம் முழுமை பெறாதவர்களுக்கும், ஏற்கனவே சி.பி.எஸ் (CPS) திட்டத்தில் ஓய்வு பெற்றவர்களுக்கும் சிறப்பு கருணை ஓய்வூதியம் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

எதிர்ப்புக் குரல்: "இது ஓய்வூதியமே இல்லை!"

அரசு இந்தத் திட்டத்தை ஒரு மைல்கல்லாகக் கருதினாலும், ஜாக்டோ ஜியா உள்ளிட்ட ஊழியர் அமைப்புகள் இதனை கடுமையாகச் சாடியுள்ளன.

"உண்மையான ஓய்வூதியம் என்பது ஊழியர்களிடம் எதையும் பிடித்தம் செய்யாமல் அரசே வழங்குவதுதான். ஆனால், இந்தத் திட்டத்தில் எங்கள் பணத்தைப் பிடுங்கி அரசே வைத்துக்கொண்டு, அதன் மூலம் வரும் வட்டியை மட்டும் 'ஓய்வூதியம்' என்ற பெயரில் தருவது ஒரு மோசமான அணுகுமுறை," என்று ஜாக்டோ ஜியா அமைப்பின் உயர்மட்டக் குழு உறுப்பினர் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் (CPS) கிடைக்கும் மொத்தத் தொகை கூட இந்த புதிய முறையில் கிடைக்காது என்பது இவர்களின் பிரதான குற்றச்சாட்டாக உள்ளது.

நீதிமன்றத்தின் உத்தரவு

இந்தத் திட்டம் தொடர்பாகத் தற்போது சட்டப் போராட்டமும் தொடங்கியுள்ளது. புதிய திட்டம் 2026 ஜனவரி 1 முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு (டிசம்பர் 2025) விருப்ப ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியர் ரேணுகாதேவி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

அமல்படுத்தப்படும் தேதியால் தங்களைப் போன்றவர்கள் பாதிக்கப்படுவதாக அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், புதிய ஓய்வூதியத் திட்டம் குறித்து 3 வாரங்களுக்குள் விரிவான பதிலளிக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
Thursday, March 05, 2026

மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கு கூடுதல் ஒரு மணி நேரம் சலுகை - முழு தேர்வு நேரம் முடிந்த பிறகு தன் விருப்பத்தின் படி தேர்வறையை விட்டு வெளியே செல்லலாம் - DGE செயல்முறைகள்


மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கு கூடுதல் ஒரு மணி நேரம் சலுகை - முழு தேர்வு நேரம் முடிந்த பிறகு தன் விருப்பத்தின் படி தேர்வறையை விட்டு வெளியே செல்லலாம் - DGE செயல்முறைகள்

DGE Proceedings - Download here
Thursday, March 05, 2026

ஆசிரியர்கள் தேவை - நிரந்தர பணியிடம் - விண்ணப்பிக்க கடைசி நாள் : 10.03.2026

எம் பள்ளியில் காலியாகவுள்ள கீழ்கண்ட பணியிடங்களுக்கு தகுதியுள்ள நிரந்தர ஆசிரியர்கள் தேவை.

விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் : 10.03.2026
Thursday, March 05, 2026

பள்ளி காலை வழிப்ட்டு செயல்பாடுகள் - 05.03.2026


திருக்குறள்: 

குறள் 606: 
படியுடையார் பற்றமைந்தக் கண்ணும் மடியுடையார் 
மாண்பயன் எய்தல் அரிது.            

விளக்க உரை: 

நாட்டை ஆளும் தலைவருடைய உறவுத் தானே வந்து சேர்ந்தாலும், சோம்பல் உடையவர் சிறந்த பயனை அடைய முடியாது.

பழமொழி :

Take time by the forelock.  

 காலத்தே கடமையைச் செய்.

இரண்டொழுக்க பண்புகள் :.

1. எனது உணவானது விவசாயி போன்ற பலர் உழைப்பில் வருகிறது.

2. எனவே உணவை வீணாக்க மாட்டேன்.

பொன்மொழி : 

உங்களை மேம்படுத்த நினைப்பவர்களுடன் மட்டுமே பழகுவது, உங்களுடைய சிறப்பு திறமைகளை வெளியே கொண்டு வருகிறது. - எபிக் டெட்டஸ்

பொது அறிவு : 

01.ஜப்பானிய தேசிய உடையின் பெயர் என்ன?

         கிமோனோ-Kimono

02.உலகின் மிக நீளமான குகை எது?

மாமத் குகை-Mammoth cave

அமெரிக்கா -America 

English words :

hostilities-acts of fighting or war between enemies.

conflagration-very large and destructive fire.

தமிழ் இலக்கணம்: 

 இன்று சில வாகனங்களின் தமிழ் பெயர்களைக் காண்போம்
பஸ் - பேருந்து
கார் - மகிழுந்து
ட்ரெயின் - தொடர் வண்டி
சைக்கிள் - மிதி வண்டி
இவைகள் நாம் அறிந்த தமிழ் பெயர்கள் தான்.
ஆனால் ரிக்க்ஷா, ஆட்டோ, பைக், லாரி, ஹெலிகாப்டர், வான் இவைகளின் பெயர் தெரியுமா? நாம் இதை உபயோகப் படுத்துவது இல்லை. எனவே தெரியாது. இன்று தெரிந்து கொள்வோம்
ரிக்க்ஷா –மிதியிழுவை
ஆட்டோ –தானி
பைக் –விசையுந்து
வேன் –மூடுந்து
லாரி – சரக்குந்து
ஹெலிகாப்டர் –உலங்கூர்தி
ஒரு வேளை இதை பயன்படுத்தா விட்டாலும் தெரிந்து வைத்திருப்பது நம் கடமை.

அறிவியல் களஞ்சியம் :

துருவ காந்தம் (Magnetic Pole) மற்றும் காந்தப் புலம் (Magnetic Field) இரண்டும் ஒன்றல்ல. ஆனால் அவை நெருங்கிய தொடர்புடையவை. காந்தத்தின் வட/தென் முனைகள் துருவங்கள் எனப்படும் காந்தப் புலம் என்பது காந்தத்தைச் சுற்றியுள்ள கண்ணுக்குத் தெரியாத காந்த விசைப்பகுதி ஆகும். காந்தப்புலம் துருவங்களில் வலிமையாக இருக்கும். 

மார்ச் 05


நீதிக்கதை

 அம்மா சொல் கேள்!

செழிப்பான ஒரு புல்வெளியில் ஆடுகள் மேய்ந்துகொண்டிருந்தன. அவற்றை மேய்த்துக்கொண்டு வந்தவன், மரத்தடியில் உட்கார்ந்து கண் மூடி, புல்லாங்குழல் வாசித்துக்கொண்டிருந்தான்.

புல்வெளியைச் சுற்றி வேலி போடப்பட்டிருற்தது. அதன் அருகே, ஓர் ஆட்டுக்குட்டி மேய்ந்து கொண்டிருந்தது.

வேலிக்கு வெளிப்பக்கம் இருந்த ஓநாய் ஒன்று ஆட்டுக் குட்டியைப் பார்த்தது.

வேலிக்குள் முகத்தை நுழைத்துக்கொண்டு, ஓநாய் எதையோ பார்ப்பது போல பாசாங்கு செய்தது. அதைப் பார்த்த ஒர் ஆட்டுக்குட்டி, “உனக்கு என்னவேண்டும்?” என்று கேட்டது.

ஓநாயும் “நண்பா, நண்பா…இங்கே இளசான புல் கிடைக்குமா என்று பார்க்கிறேன்! இளம்புல் என்றால் எனக்கு ரொம்பப் பிரியம். அதைத் தின்று, ஜில்லென்று தண்ணீர் குடித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! உங்களுக்கெல்லாம் அந்த யோகம் கிடைத்திருக்கிறது! எனக்கு அது கிடைக்கவில்லை…..” என்று வருத்தத்துடன் கூறியது.

“அப்படியா! நீ புல்லா சாப்பிடுவாய்? நீ மாமிசத்தைத்தான் சாப்பிடுவாய் என்று என் அம்மாவும் அப்பாவும் சொன்னார்களே?” என்று ஆச்சரியத்துடன் கேட்டது ஆட்டுக் குட்டி. “சேச்சே…அதெலாம் சுத்தப் பொய்!” என்றது ஓநாய்.

“அப்படியென்றால் இரு. நான் வெளியே வந்து, மலையின் அந்தப் பக்கம் இளம்புல் இருக்குமிடத்தைக் காட்டுகிறேன். நாம் இரண்டு பேரும் போய், அதைச் சாப்பிட்டுவிட்டு, ஃப்ரெண்ட்ஸாக ஜாலியாகச் சுற்றலாம்!” என்று சொல்லிவிட்டு ஆட்டுக்குட்டி வேலி இடுக்கின் வழியாக நுழைந்து, ஓநாயின் பக்கம் போயிற்று.

“உடனே ஓநாய் அதன்மீது பாய்ந்து அதைக் கொன்று தின்றது.

அந்த ஆட்டுக் குட்டிக்குத் அது போகட்டும், பரவாயில்லை… என்று தானாகத் தெரியவில்லை. அனுபவம் நிறைந்த அம்மா, அப்பா பேச்சை கேட்டிருந்தால், மதிப்பு வாய்ந்த, தன் உயிரை இழந்திருக்காது அல்லவா?

இன்றைய செய்திகள்

05.03.2026

⭐ரயில்வே சட்டத்தின்படி, தண்டவாளங்கள் அருகே பட்டம் விடுபவர்களுக்கு 6 மாதம் தண்டனையோ விதிக்கப்படும் என்று தெரிவிக் கப்பட்டுள்ளது.

⭐வளைகுடாவில் தொடர்ந்து பதற்றம் நிலவி வரும் நிலையில், அங்கு வசிக்கும் சுமார் 1 கோடி இந்தியர்களை மீட்க இந்திய அரசு நடவடிக்கையை துவங்கியுள்ளது.

⭐ ஈரானின் மினாப் நகரில் அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதலில் 165 பள்ளி மாணவிகள் உயிரிழந்து உள்ளனர்.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀 மும்பையில் உள்ள வான்கடே
மைதானத்தில் இன்று நடைபெறவுள்ள 2026 டி20 உலகக் கோப்பை இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி, இங்கிலாந்தை எதிர்கொள்ள உள்ளது.

Today's Headlines

⭐ According to the Railway Act, those who fly kites near railway tracks may face up to 6 months of imprisonment, it has been announced.

⭐ As tension continues in the Gulf region, the Indian government has begun measures to evacuate nearly 10 million Indians living there.

⭐ In the city of Minab, Iran, 165 schoolgirls have reportedly been killed in an attack carried out by the U.S. military.

🏀 Sports News

🏀 In the second semi-final of the 2026 T20 World Cup to be held today at the Wankhede Stadium in Mumbai, the Indian team will face England.

Covai women ICT_போதிமரம்

Wednesday, March 4, 2026

Wednesday, March 04, 2026

மார்ச் 9 இல் உள்ளூர் விடுமுறை - மாவட்ட நிர்வாகம்

புதுக்கோட்டை: உள்ளூர் விடுமுறை

புதுக்கோட்டை மாவட்டத்தில் திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு மார்ச் 9 இல் உள்ளூர் விடுமுறை

விடுமுறையை ஈடு செய்யும் வகையில் மார்ச் 14 ந் தேதி சனிக்கிழமை வேலை நாளாக அறிவித்தது மாவட்ட நிர்வாகம்.
Wednesday, March 04, 2026

மாணவர் சேர்க்கை 2026-2027 - EMIS வலைதளத்தில் பதிவு செய்யும் பொழுது கேட்கப்படும் தகவல்கள்.

EMIS வலைதளத்தில் 2026-2027 மாணவர் சேர்க்கை பதிவு செய்யும் முறை

Student Admission Campaign -Students Admission Form (AY 2026-27)

மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவம் 2026-2027

Now open in EMIS Website






Wednesday, March 04, 2026

GPF முன்பண எடுப்புத்தொகை (Advance Amount Withdrawal) அதிகபட்சம் ₹50 இலட்சமாக உயர்த்தி அரசாணை வெளியீடு

GENERAL PROVIDENT FUND - Withdrawal from the General Provident Fund Maximum limit Amendments to rule 15-B of General Provident Fund (Tamil Nadu) Rules - Issued Notified.

GPF முன்பண எடுப்புத்தொகை (Advance Amount Withdrawal) அதிகபட்சம் ₹50 இலட்சமாக உயர்த்தி அரசாணை வெளியீடு!

G.O.Ms.No.46 - GPF Advance Amount Hike

👇👇👇

Wednesday, March 04, 2026

TET - ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதியதற்கான முன் அனுமதி பெறுவதிலிருந்து விலக்களித்து தேர்ச்சி பெற்ற விவரத்தினை பணிப்பதிவேட்டில் பதிவு செய்ய வழிகாட்டுதல்கள் வழங்கி தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு.


தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கும் அரசு அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு 2025 தேர்வில் தேர்ச்சி பெற்றது ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதியதற்கான முன் அனுமதி பெறுவதிலிருந்து விலக்களித்து தேர்ச்சி பெற்ற விவரத்தினை பணிப்பதிவேட்டில் பதிவு செய்ய வழிகாட்டுதல்கள் வழங்கிடக் கோரியது சார்பாக தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.

TET SR Entry DEE Reg : CLICK DOWNLOAD

Wednesday, March 04, 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 04.03.2026


தேசிய தொழிலாளர்கள் பாதுகாப்பு நாள்



திருக்குறள்: 

குறள் 605: 

நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும் கெடுநீரார் காமக் கலன்.  
              
விளக்க உரை: 

காலம் நீட்டித்தல், சோம்பல், மறதி, அளவு மீறியத் தூக்கம் ஆகிய இந் நான்கும் கெடுகின்ற இயல்புடையவர் விரும்பி ஏறும் மரக்கலமாம்.

பழமொழி :

Even a pin is good for something. 

சிறு துரும்பும் பல் குத்த உதவும்.

இரண்டொழுக்க பண்புகள் :.

1. எனது உணவானது விவசாயி போன்ற பலர் உழைப்பில் வருகிறது.

2. எனவே உணவை வீணாக்க மாட்டேன்.

பொன்மொழி : 

இருக்கும் இடத்திலிருந்து தொடங்குங்கள். இருப்பதைப் பயன்படுத்துங்கள். முடிந்ததைச்  செய்யுங்கள் -ஆர்தர் ஆஷ்

பொது அறிவு : 

01. தென்னாட்டு தாகூர் என்று அழைக்கப்படுபவர் கவிஞர் யார்?

      கவிஞர்.வாணிதாசன்

 Thiru.Vanidasan

02. உலகின் நெல் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு எது?

          இந்தியா-India

English words :

benevolent –kind, friendly and helpful to others.

நட்பிணக்கமும் உதவி மனப்பான்மையும் கொண்ட.

banter –friendly comments and jokes.

நட்பு முறையிலான குறிப்புரையும் கேலிப்பேச்சும்.

தமிழ் இலக்கணம்: 

 விலை விவரப் பட்டியல்/ விலை விபரப் பட்டியல் 
எது சரி?
இந்த சந்தேகம் எழும் போது அதன் 
 *வினைச்சொல்* 
*வேர்ச்சொல்*
இரண்டையும் பார்க்க வேண்டும்.

1. முல்லைத் திணை பற்றி *விவரி* .
2. இவர் ஒரு *விவரமான* ஆள்.
3. இவர் திட்டத்தை தெளிவாக *விவரித்தார்* 
மேற்கண்ட சொற்றொடர்களைப் பாருங்கள். விவரி, விவரித்து, விவரித்தல் 
போன்ற சொற்களைத்தான் பயன்படுத்துகிறோம். 
எனவே விவரம் என்பதே சரியான சொல்.

அறிவியல் களஞ்சியம் :

பூமியின் காந்த துருவங்கள் என்பது கோளின் காந்தப்புலக் கோடுகள் செங்குத்தாக இருக்கும் புள்ளிகள், மையத்தில் இருக்கும் இரும்பு நிக்கலின் திரவ இயக்கம் காரணமாக தொடர்ந்து மாறுகின்றன. வட காந்த துருவம் தற்போது கனடாவிலிருந்து சைபீரியாவை நோக்கி அலைந்து திரிந்து வேகத்தில் முடுக்கிவிடப்படுகிறது. அதே நேரத்தில் தெற்கு காந்த துருவம் அண்டார்டிகாவிலிருந்து தொலைவில் உள்ளது. இதனால் திசைகாட்டிகள் இந்தப் பகுதிகளுக்கு அருகில் நம்பகத்தன்மை குறைவாக உள்ளது. இந்தக் கம்பங்கள் நிலையானவை அல்ல; அவை புவியியல் காலத்தில் அலைந்து திரிந்து துருவ முனைப்பை மாற்றியமைக்கின்றன. பாறைகளில் பதிவுகளை விட்டுச் செல்கின்றன. ஆனால் மையத்தின் உருகிய இரும்பு மற்றும் நிக்கல், இந்த மாறும் புலத்தின் பின்னால் உள்ள இயந்திரமாகும்.  இது விண்வெளி கதிர்வீச்சுக்கு எதிரான ஒரு முக்கியமான கவசமாகும்.

மார்ச் 04

தேசிய தொழிலாளர்கள் பாதுகாப்பு தினம்


தேசிய தொழிலாளர்கள் பாதுகாப்பு தினம் என்ற பெயரில் இந்தியாவில் தொழிலாளர்கள் பாதுகாப்பு தினம் மார்ச் 4ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.தேசிய அளவிலான பாதுகாப்புக்குழு அமைப்பு 1966இல் தொழிலாளர் நல அமைச்சகத்தால் நிறுவப்பட்டது.

பிறகு 1971ஆம் ஆண்டு மார்ச் 4ஆம் தேதி தேசிய பாதுகாப்பு கவுன்சில் உருவாக்கப்பட்டது. மும்பையை தலைமையகமாகக் கொண்டு அனைத்து மாநிலத்திலும் இதன் பிரிவுகள் செயல்படுகின்றன.

தொழிலாளர்கள் விபத்துகளின்றி பணிபுரிந்திடவும், பாதுகாப்பு உணர்வுடனும், உடல்நலன் மற்றும் சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் பணி செய்திட வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தவே அனைத்து தொழிற்சாலைகளிலும் இத்தினம் கொண்டாடப்படுகிறது.

நீதிக்கதை

ஏமாந்த சிறுத்தை

ஒரு நாள் சிறுத்தை பசியுடன் உணவைத் தேடியது. அப்போது ஒரு கறுப்பு மானையும் புள்ளி மானையும் கண்டது.

அவை இரண்டும் மலையடிவாரத்தில் மேய்ந்து கொண்டிருந்தன. சிறுத்தை மிகுந்த எச்சரிக்கையுடன் மலையடிவாரத்தருகே சென்றது. ஆனால் எதனைத் தாக்குவது என அது முடிவு செய்யவில்லை.

அதே நேரத்தில் சிறுத்தையைப் பார்த்த மான்கள் இரண்டும் வேகமாக ஓடின. பிறகு அவை இரண்டும் ஒரு இடத்தில் இடது வலது பாதைகளில் ஓடின.

சிறுத்தை அந்த இடத்துக்கு வந்தது. ‘எதைத் துரத்தலாம்’ என்று தயங்கி நின்றது. பிறகு, ‘சரி.. கறுப்பு மானைத் துரத்தலாம். அதன் இறைச்சிதான் சுவையாக இருக்கும்’ என்று முடிவு செய்து கறுப்பு மானைத் துரத்தத் தொடங்கியது. ஆனால் அதற்குள் அது தொலைதூரம் ஓடிப் போய் விட்டது.

உடனே சிறுத்தை “அது வேகமாக ஓடக் கூடிய மான். அதைப் பிடிக்க முடியாது. பசி வேறு அதிகமாகி விட்டது. சரி… புள்ளி மானைப் பிடிக்கலாம்” என்று தீர்மானித்து மற்ற பாதையில் ஓடியது. ஆனால் புள்ளிமான் எப்போதோ பஞ்சாய்ப் பறந்துவிட்டிருந்தது.

முக்கியமான நேரத்தில் முக்கியமான முடிவை விரைவாக எடுக்க வேண்டும்.

இன்றைய செய்திகள்

04.03.2026

⭐மத்திய - மாநில உறவு: தமிழ்நாடு அரசுக்கு ஆதரவளித்த கர்நாடகா... நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

⭐ஈரானின் 131 நகரங்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் இதுவரை 555 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.

⭐ ஈரான்-அமெரிக்கா, இஸ்ரேல் இடையேயான மோதலால் இந்தியாவில் வன்முறை வெடிக்க வாய்ப்பு உள்ளதாக மாநில அரசுகளுக்கு இந்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀டி20 உலகக் கோப்பை:2-வது அரையிறுதியில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் நாளை மோதுகிறது.

🏀உலகின் உயரிய விளையாட்டு விருதுக்கு இந்திய மகளிர் அணி பரிந்துரை. இந்தப் பிரிவில் இங்கிலாந்து மகளிர் கால்பந்து அணி உள்பட 5 அணிகள் இந்தியாவுடன் போட்டியிடுகின்றன.

Today's Headlines


⭐ Centre–State Relations: Tamil Nadu has received support from Karnataka. Chief Minister M. K. Stalin expressed his gratitude.

⭐ In the attacks targeting 131 cities in Iran, 555 people have been killed so far.

⭐ Due to the conflict between Iran, United States, and Israel, India’s Ministry of Home Affairs has warned state governments that there is a possibility of violence breaking out in India.

🏀 Sports News

🏀 T20 World Cup: In the second semi-final, India cricket team will face England cricket team tomorrow.

🏀 The India women's national team has been nominated for the world’s highest sports award. In this category, five teams — including the England women's national football team — are competing against India.

Covai women ICT_போதிமரம்


Tuesday, March 3, 2026

Tuesday, March 03, 2026

பகுதிநேர பயிற்றுநர்களுக்கு ஊதிய உயர்வு மற்றும் சலுகைகள் வழங்கி அரசாணை வெளியீடு!


பகுதிநேர பயிற்றுநர்களுக்கான தொகுப்பூதியத்தினை ₹12,500/-லிருந்து ₹15,000/-ஆக உயர்த்தி அரசாணை வெளியீடு!

பள்ளிக் கல்வி - ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் கீழ் பணிபுரியும் 11,773 பகுதிநேர பயிற்றுநர்களுக்கு 01.01.2026 முதல் தொகுப்பூதியத்தினை ரூ.12,500/- லிருந்து ரூ.15,000/- என 11 மாதத்திற்கு (மே மாதம் நீங்கலாக) ரூ.2,500/- உயர்த்தி வழங்குதல் மற்றும் மே மாதத்திற்கு மட்டும் ரூ.10,000/-சிறப்பு உதவித்தொகை வழங்குதல் -ஆணை வெளியிடப்படுகிறது

G.O.Ms.No.52 - PTI Salary Hike -Download here
Tuesday, March 03, 2026

TNTET July 2026 - தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் விண்ணப்பித்தல் சார்ந்து- DEO Circular

மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் TET தாள்-1, தாள்.11 தேர்வெழுத விண்ணப்பிப்பவர்கள் பள்ளி முதல்வரின் சான்றொப்பம் பெற்ற விண்ணப்ப (Counter signed) நகலை மாவட்டக் கல்வி அலுவலகம் (தனியார் பள்ளிகள்), மூன்றாவது தளம், F" Block, இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 28.02.2026 (சனிக்கிழமை) அன்று காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை விண்ணப்பதாரரே நேரில் வந்து கீழ்கண்ட ஆவணங்களை சமர்ப்பிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து வகை தனியார் பள்ளிகளின் தாளாளர்கள் மற்றும் முதல்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

மாவட்டக் கல்வி அலுவலர்(பொ)

(தனியார் பள்ளிகள்),

இராணிப்பேட்டை.

1 பள்ளித் தாளாளரின் / முதல்வரின் முகப்பு கடிதம்

2. பூர்த்தி செய்யப்பட்ட TET விண்ணப்பம்

3. தற்போது பணிபுரியும் பள்ளியில் வழங்கப்பட்ட நியமன ஆணை (Appointment Letter)

4. பட்டபடிப்பு சான்றிதழ் நகல் பள்ளி தாளாளர்/ முதல்வரின் மேலொப்பமுடன்

(attestation) பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.

5.ஆதார் அட்டை நகல்

6. பள்ளியின் UDISE NO;

7. ஆசிரியரின் EMIS ID;

8. பள்ளியின் EMIS இணையத்திலிருந்து ஆசிரியரின் EMIS ID தெரியும் வகையில் ஸ்கிரீன் ஷாட் (Screenshot)-1நகல்

9. இணைப்பில் காணும் Annexure-I(Service Certificate-2026)




Tuesday, March 03, 2026

களஞ்சியம் செயலி NEW UPDATE VERSION 1.22.8


களஞ்சியம் செயலி NEW UPDATE

Surrender Leave Request Module updated

* Leave Request new enhanced

* Transfer of Pension Pay Office Module updated

* OTP and other SMS services enhanced

* Pensioner Approval Group sorted with ease

* Thiran360 now enabled in Employee Menu

👇👇👇👇👇👇👇

Tuesday, March 03, 2026

நிரந்தரப் பணியிடங்கள் IFHRMS ல் தற்காலிகப் பணியிடங்களாக தொடருதல் தொடர்பான விவரங்களை தொகுத்து அனுப்ப பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!


நிரந்தரப் பணியிடங்கள் IFHRMS ல் தற்காலிகப் பணியிடங்களாக தொடருதல் தொடர்பான விவரங்களை தொகுத்து அனுப்ப பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!

DSE - IFHRMS Salary Issue.pdf

👇👇👇👇Download here
Tuesday, March 03, 2026

சிறப்பு ஆசிரியர் தேர்வில் போனஸ் மதிப்பெண் தொடர்பான அரசாணைக்காக காத்திருக்கும் பகுதிநேர ஆசிரியர்கள்

டிஆர்பி சிறப்பு ஆசிரியர் தேர்வில் பகுதிநேர ஆசிரியர்களுக்கு போனஸ் மதிப்பெண் வழங்குவது தொடர்பான அரசாணை விரைவில் வெளியிடப்பட உள்ளது. இதைத்தொடர்ந்து, சிறப்பு ஆசிரியர் போட்டித் தேர்வு அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரசுப் பள்ளிகளில் உடற்கல்வி, தையல், ஓவியம், இசை உள்ளிட்ட பாடப் பிரிவுகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதிநேர சிறப்பு ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். வாரத்தில் 3 அரை நாட்கள் பணியாற்றும் அவர்களுக்கு தொகுப்பு ஊதியமாக மாதம் ரூ.12,500 வழங்கப்படுகிறது. பணி நிரந்தரம் கோரி அவர்கள் நீண்ட காலமாக போராடி வருகின்றனர்.

சமீபத்தில் அவர்கள் தொடர் போராட்டம் நடத்தியபோது, ‘தொகுப்பூதியம் ரூ.15 ஆயிரமாக உயர்த்தப்படும். கோடைவிடுமுறையான மே மாதம் ரூ.10 ஆயிரம் வழங்கப்படும்’ என்று பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதியளித்தார்.

ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) சிறப்பு ஆசிரியர் பணி நியமனத்துக்கு தேர்வு நடத்தும்போது, பகுதிநேர சிறப்பு ஆசிரியர்களுக்கு பணிக் காலத்துக்கு ஏற்ப குறிப்பிட்ட போனஸ் மதிப்பெண் அளிக்கப்படும் என்றும் வாக்குறுதி அளித்துள்ளார். எனினும், இதுதொடர்பாக இதுவரை அரசாணை வெளியிடப்பட வில்லை.

கடைசியாக 2017-ம் ஆண்டு சிறப்பு ஆசிரியர் நேரடி நியமனத்துக்கு போட்டித் தேர்வு நடத்தப்பட்டு, 1,300 பேர் நியமிக்கப்பட்டனர். அதன்பிறகு 8 ஆண்டுகளாக சிறப்பு ஆசிரியர் நியமனம் நடைபெறவில்லை.

தற்போது நடைமுறையில் உள்ள சிறப்பு ஆசிரியர் தேர்வில் எழுத்து தேர்வுக்கு 95 மதிப்பெண், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்புக்கு (சீனியாரிட்டி) 5 மதிப்பெண் வழங்கப்படுகிறது.

எழுத்து தேர்வில் வெற்றி பெற்று சான்றிதழ் சரிபார்ப்புக்கு வரும் போது, இந்த மதிப்பெண்களின் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு பணி நியமனம் நடைபெறுகிறது.
Tuesday, March 03, 2026

பிளஸ் 2 தமிழ் மொழிப் பாடத் தேர்வு எளிது: அதிக மதிப்பெண் கிடைக்கும் என ஆசிரியர்கள் கருத்து



தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத் தேர்வு நேற்று தொடங்கியது. முதல் நாளில் தமிழ் உள்ளிட்ட மொழிப் பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெற்றன. இத்தேர்வை தமிழகம் முழுவதும் உள்ள 3,412 மையங்களில் 8 லட்சத்து 6,370 மாணவர்கள் எழுதினர். 1,600 தனித் தேர்வர்கள் உட்பட 9,919 பேர் தேர்வு எழுத வரவில்லை.

தேர்வு காலை 10.15 மணிக்கு தொடங்கி மதியம் 1.15 மணி வரை நடைபெற்றது. சென்னை தியாகராய நகரில் உள்ள குண்டூர் சுப்பையா மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பொதுத் தேர்வுக்கான ஏற்பாடுகளை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் ஆய்வு செய்தார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘‘பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் சரியாக தூங்காமல், சரியாக சாப்பிடாமல் உடல்நலனை கெடுத்துக் கொள்ளக் கூடாது. நன்கு படித்துவிட்டு, போதிய அளவு உறங்கிவிட்டு தேர்வுகளை எழுத வேண்டும்.

பெற்றோரும் மாணவர்களுக்கு அழுத்தத்தை கொடுக்க வேண்டாம். விருதுநகர் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கு சென்ற மாணவி விபத்தில் சிக்கிஉயிரிழந்த செய்தி வருத்தமளிக்கிறது. இயன்றவரை, அருகில் உள்ள தேர்வு மையங்கள்தான் மாணவர்களுக்கு ஒதுக்கப்படுகின்றன. எனினும், எதிர்பாராதவிதமாக இதுபோன்ற அசம்பாவிதங்கள் நிகழ்கின்றன.இதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று தெரிவித்தார்.

இதற்கிடையே, பிளஸ் 2 தமிழ் தேர்வு எளிதாக இருந்ததாக மாணவர்கள் தரப்பில் கூறப்பட்டது. இதுகுறித்து தமிழ் ஆசிரியர்களிடம் கேட்டபோது, ‘‘ஒரு மதிப்பெண் பகுதியில் மொத்தம் உள்ள 14 கேள்விகளில் 3 மட்டும் சற்று கடினமாக இருந்தன. மற்ற கேள்விகள் எளிதாகவே இருந்தன.

சிறுவினா, மனப்பாடம், இலக்கணம், நெடுவினா ஆகிய பகுதிகளில் காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் ஏற்கெனவே கேட்கப்பட்ட கேள்விகளே மீண்டும் இருந்தன. இதனால், சராசரியாக படிக்கும் மாணவர்கள்கூட தமிழ்ப் பாடத்தில் அதிக மதிப்பெண் பெற வாய்ப்பு உள்ளது’’ என்றனர்.

இன்று முதல் ‘பிளஸ் 1’ அரியர் தேர்வு: மாணவர்களுக்கான அழுத்தத்தை குறைக்கும் நோக்கில், நடப்பு ஆண்டு முதல் பிளஸ் 1 பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. எனினும், முந்தைய ஆண்டுகளில் பிளஸ் 1 பொதுத் தேர்வில் வெற்றி வாய்ப்பை இழந்த மாணவர்கள், அந்த பாடங்களை அரியர் தேர்வாக எழுத வேண்டும் என்று தேர்வுத் துறை அறிவித்தது. அதன்படி, பிளஸ் 1 அரியர் பொதுத் தேர்வு இன்று (மார்ச் 3) தொடங்குகிறது.