Breaking

Monday, March 2, 2026

Monday, March 02, 2026

1 முதல் 9 வகுப்புகள் வரை முழு ஆண்டு தேர்வு எப்பொழுது - அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு

மூன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை முழு ஆண்டு தேர்வு எப்பொழுது நடைபெறும் என்று தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு அன்பில் மகேஷ் கொய்யா மொழி அவர்கள் அறிவித்துள்ளார்கள்

தற்போது நடைபெற்று வரும் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொது தேர்வுகள் நிறைவடைந்த உடன் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு முழு ஆண்டு தேர்வை நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளதாக மாண்புமிகு அமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளார்கள்

வருகின்ற ஏப்ரல் மாதம் தமிழக சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுவதால் பள்ளிகளுக்கான முழு ஆண்டு தேர்வினை விரைந்து முடிக்க உத்வேசிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது

அதன்படி ஏப்ரல் இரண்டாம் வாரத்திற்குள் அனைத்து வகுப்புகளுக்கும் முழு ஆண்டு தேர்வை முடித்து முடித்துவிட திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் அறிவித்துள்ளார்கள்
Monday, March 02, 2026

Elections Conduct of two-days Training programme for Returning Officers/ Assistant Returning Officers (AROS) for General Elections to TNLA, 2026 Instructions Communicated -Regarding.


Elections Conduct of two-days Training programme for Returning Officers/ Assistant Returning Officers (AROS) for General Elections to TNLA, 2026 Instructions Communicated -Regarding.

I am to invite your kind attention to the references cited and to inform that it is decided to conduct 2 days Zonal level Training Programme for Returning Officers/Assistant Returning Officers in the districts like Chennai, Villupuram, Salem, Coimbatore, Madurai, Tiruchirappalli and Tirunelveli on 03.03.2026 and 04.03.2026.The details of zone-wise training and the SLMTs details who will conduct the training session as Resource Person are as follows

Election Training March 3&4 - Download here
Monday, March 02, 2026

தொடக்க / நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் , வட்டார கல்வி அலுவலர்கள் , பட்டதாரி ஆசிரியர்கள் தர ஊதியம் 5400 வழக்கின் தீர்ப்பு விவரம் :

தர ஊதியம் 5400

Grade Pay 5400

தொடக்க / நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் , வட்டார கல்வி அலுவலர்கள் , பட்டதாரி ஆசிரியர்கள் தர ஊதியம் 5400 வழக்கின் தீர்ப்பு

இன்று 02.03.2026 தீர்ப்பு அளிக்கப்பட்டது.

* No recovery is ordered, totally 8 directions are given, it was not pronounced in open court..

* Recovery கூடுதலாக வழங்கப்பட்ட தொகையை திரும்ப செலுத்த வேண்டியதில்லை.

* Refixation FR 22 B தீர்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது.

* தீர்ப்பில் 8 வழிகாட்டல் வழங்கப்பட்டு உள்ளது

* Recovery செய்ய மாட்டோம் என்று அரசு தரப்பில் கூறப்பட்டு உள்ளதால் அரசு வழக்கை மேல் முறையீடு செய்ய வாய்ப்பில்லை.

* கல்வித்துறை recovery பிடிக்க மாட்டோம் என்று நீதிமன்றத்தில் கூறியுள்ள நிலையில்.. பொது செயல்முறை வெளியிடப்பட வேண்டும் . தீர்ப்பு கூறப்பட்டவுடன் செயல்முறை வெளியிடப்படும் என்று டிட்டோ ஜாக்கிடம் இயக்குநர் தெரிவித்தவாறு கல்வித்துறை செயல்முறை ஆணை வெளியிட வேண்டும்.


* தீர்ப்பு பொது தீர்ப்பாக கூறப்பட்டு இருக்கும்

* நகல் கிடைத்தவுடன் விரிவாக பதிவு செய்கின்றேன்

* சட்ட வழிகாட்டல் பெற தொடர்பு கொள்க .

ஆ. மிகாவேல் ஆசிரியர் .

மணப்பாறை
Monday, March 02, 2026

"விரைவில் தேர்வுகளை முடிக்க ஏற்பாடு " - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ்

"விரைவில் தேர்வுகளை முடிக்க ஏற்பாடு”

சட்டமன்றத் தேர்தல் வருவதால் விரைந்து அனைத்து வகுப்புகளுக்கும் தேர்வுகளை முடிக்க ஏற்பாடு; பொதுத்தேர்வுகள் முடிந்த உடனே ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை முழு ஆண்டு தேர்வு தொடங்கும்

ஏப்ரல் இரண்டாம் வாரத்திற்குள் இந்த தேர்வுகள் அனைத்தும் நிறைவு செய்யப்பட்டு மாணவர்களுக்கு விடுமுறை விடப்படும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ்
Monday, March 02, 2026

கேந்த்ரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழை பயிற்று மொழியாக்க திட்டம்

'தமிழகத்தில் இயங்கும் சில குறிப்பிட்ட கேந்த்ரிய வித்யாலயா பள்ளிகளில், பரிட்சார்த்த முறையில், தமிழை பயிற்றுமொழியாக அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என, சென்னை கேந்த்ரிய வித்யாலயா சங்கதன் மண்டல துணை ஆணையர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

கோவை, சவுரிபாளையம், கேந்த்ரிய வித்யாலயா பள்ளியில், தமிழை பயிற்று மொழியாக அமல்படுத்த வேண்டும் என, மறுமலர்ச்சி மக்கள் இயக்க தலைவர் ஈஸ்வரன், சென்னை கேந்த்ரிய வித்யாலயா சங்கதன் மண்டல அலுவலகத்திற்கு மனு அளித்தார். மனுவுக்கு, துணை ஆணையர் செந்தில்குமார் அளித்த பதில்: நாடு முழுதும் பணிபுரியும் மத்திய அரசு மற்றும் பாதுகாப்பு துறை ஊழியர்களுக்கு, எப்போது வேண்டுமானாலும் பணி மாறுதல் இருக்கலாம். அச்சமயங்களில், அவர்கள் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படாமல் இருக்கவே கே.வி., பள்ளிகள் உருவாக்கப்பட்டன. இதனால், கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ், இப்பள்ளிகள், சிறப்பு வகை பள்ளிகளாக கருதப்படுகின்றன. இங்கு, மத்திய அரசு கொள்கைகள், கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின் கட்டமைப்புக்குள், கே.வி., சங்கதன் வழிகாட்டுதல்படி சேர்க்கை பணிகள் நடக்கின்றன. தமிழகத்தில் இயங்கும் குறிப்பிட்ட சில கே.வி., பள்ளிகளில், தமிழை பயிற்று மொழியாக அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இம்முன்னோடி திட்டத் தின் முடிவுகள் மற்றும் மதிப்பீட்டின் அடிப்படையில், மற்ற கே.வி., பள்ளிகளில் அந்தந்த பிராந்திய மொழி, பயிற்றுமொழியாக்குவது குறித்து எதிர்காலத்தில் முடிவு எடுக்கப்படும். இவ்வாறு, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மறுமலர்ச்சி மக்கள் இயக்க தலைவர் ஈஸ்வரன் கூறுகையில், ''கே.வி., பள்ளிகளில் தமிழை ஒரு பாடமாக கட்டாயம் கற்பிக்க வேண்டுமென, நீண்ட காலமாக போராடியதற்கு கிடைத்த வெற்றியாக இந்த அறிவிப்பு உள்ளது; இது வரவேற்கத்தக்கது. ''இதேபோல, ஆங்கிலம் பயிற்றுமொழியாக உள்ள கே.வி., பள்ளிகளில், தமிழ் ஒரு மொழிப்பாடமாக கற்பிக்க வேண்டும். மத்திய அரசின் கீழ் இயங்கும் அனைத்து வகை பள்ளிகளிலும், தமிழை கட்டாய மொழிப்பாடமாக மாற்ற வேண்டும்,'' என்றார்.
Monday, March 02, 2026

2,469 இடைநிலை ஆசிரியா்கள்; 11 பழங்குடி பட்டியலின ஆசிரியா்களுக்கு பணி நியமன ஆணை: அமைச்சா் அன்பில் மகேஸ் வழங்கினாா்!

ஊராட்சி ஒன்றிய மற்றும் சிறுபான்மை மொழி தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் காலியாக இருந்த இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியா்கள் பணியிடங்களுக்கு ஆசிரியா் தோ்வு வாரியம் மூலம் 2,469 போ் தோ்வு செய்யப்பட்டு, அவா்களுக்கான பணி நியமன ஆணைகளை பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா். மேலும், 11 பழங்குடியினா் பிரிவைச் சோ்ந்தவா்களுக்கும் பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
பள்ளிக்கல்வித் துறையில் தொடக்கக் கல்வி இயக்கக் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் ஊராட்சி ஒன்றிய தொடக்க, நடுநிலைப் பள்ளிகள், சிறுபான்மை மொழி உதவிப் பள்ளிகளில் கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் ஆசிரியா் பணியிடங்கள் காலியாக இருந்தன.

இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியா் காலிப் பணியிடங்களை நிரப்ப அரசு ஒப்புதல் அளித்து ஆசிரியா் தோ்வு வாரியத்தின் மூலம் ஆசிரியா் தகுதித் தோ்வு, போட்டித் தோ்வில் தோ்ச்சிப் பெற்றவா்கள் 2025-ஆம் ஆண்டு முதல் நேரடி நியமனம் செய்யப்பட்டனா்.

அதன்படி, 2,342 இடைநிலை ஆசிரியா்கள் நியமனம் செய்யப்பட்டனா். அதேபோல், தேசிய திறந்தவெளி பள்ளி நிறுவன மூலம் தோ்ச்சி பெற்ற 25 போ், ஆதரவற்ற விதவைகள் 4 , பிறமொழி சிறுபான்மையின ஆசிரியா்கள் 68 நபா், பட்டதாரி ஆசிரியா்கள் 18 போ், 1 பின்னடைவுப் பணியிடம் என மொத்தம் 2,458 நபா் இடைநிலை ஆசிரியா்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

மேலும், உயா்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் தீா்ப்புகளைப் பின்பற்றி இனச்சுழற்சி முறையில் ஆதிதிராவிடா், பழங்குடியினா் 12 குறைவு பணியிடங்களுக்கும் இடைநிலை ஆசிரியா்கள் தோ்வு செய்யப்பட்டு சான்றிதழ் சரிபாா்ப்புப் பணி நடைபெற்றது. இதில் தோ்ச்சி பெற்ற 11 பழங்குடி பட்டியலின இடைநிலை ஆசிரியா்களுக்கு பணிநியமன ஆணை வழங்கப்பட்டது.

இதற்கான நிகழ்ச்சியில் தலைமைச் செயலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பணிநியமன ஆணைகளை பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழங்கினாா்.

இதன்மூலம் கடந்த ஓராண்டில் மொத்தம் 2,469 இடைநிலை ஆசிரியா்கள் பணி இடங்கள் நிறப்பப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Monday, March 02, 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 02.03.2026


திருக்குறள்: 

குறள் 581: 

ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும் 
தெற்றென்க மன்னவன் கண்.

 விளக்க உரை: 

ஒற்றரும் புகழ் அமைந்த நீதிநூலும் ஆகிய இவ்விருவகைக் கருவிகளையும் அரசன் தன்னுடைய கண்களாகத் தெளியவேணடும்.

பழமொழி :

As the fool things so the bell clinks. 

  பயந்தவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய். 

இரண்டொழுக்க பண்புகள் :.

1. எனது உணவானது விவசாயி போன்ற பலர் உழைப்பில் வருகிறது.

2. எனவே உணவை வீணாக்க மாட்டேன்.

பொன்மொழி : 

பயத்தை வெல்ல விரும்பினால் வீட்டில் உட்கார்ந்து அதைப்பற்றி சிந்தித்துக் கொண்டே இருந்தால் மட்டும் போதாது . வெளியில் வந்து செயலில் இறங்க வேண்டும்- டேல் கார்னகி

பொது அறிவு : 

01.உலகின் மிக நீளமான நீர்ப்பாசன கால்வாய் எது?

இந்திரா காந்தி கால்வாய் - இந்தியா 

 Indira Gandhi Canal - India 

02.தாவரங்களின் மிக நுண்ணிய  வளர்ச்சியைக் கண்டறியவும், அளவிடவும் உதவும் முக்கியக் கருவி  எது?

கிரெஸ்கோகிராஃப் -Crescograph

English words :

Passed out -became unconscious

Passed away-died

தமிழ் இலக்கணம்: 

 சின்னத்தம்பி
சின்னதம்பி
இந்த இரண்டில் எது சரி? வல்லினம் மிகுமா மிகாதா என்று காண்போம் வாருங்கள்.
பிரித்து பார்ப்போம்.
சின்னத்தம்பி = சின்னம்+ தம்பி 
இதன் பொருள் சின்னம் உடைய தம்பி. அப்படி ஒரு சொல் கிடையாது.
அடுத்த சொல்லைப் பார்ப்போம்
சின்னதம்பி = சின்ன+ தம்பி.
இதன் பொருள் சிறிய தம்பி எனவே
 *சின்னதம்பி* என்பதே சரியான சொல் ஆகும்.
 ......தொடரும்

அறிவியல் களஞ்சியம் :

 2020 ஆம் ஆண்டு முதல், பூமி அதன் சொந்த சுழற்சி வேக சாதனைகளை மீண்டும் மீண்டும் உடைத்து வருகிறது. 2024, ஜூலை 5, அன்று, பூமி வழக்கத்தைவிட 1.66 மில்லி வினாடிகள் வேகமாக சுழன்றது, இதுவே இதுவரை அளக்கப்பட்ட  எல்லா காலத்திற்குமான குறுகிய நாள். 2024 ஜூலை 9 அன்று 1.36 மில்லி வினாடிகள் குறைவான நேரத்திலும், ஜூலை 22 அன்று  1.34 மில்லி வினாடிகள் குறைவான நேரத்திலும் பூமி சுழன்றது என்று அறியப்பட்டது

மார்ச் 02

சரோஜினி நாயுடு அவர்களின் நினைவு நாள் 




சரோஜினி நாயுடு அல்லது சரோஜினி சட்டோபத்யாயா (பிப்ரவரி 13,1879ஹைதராபாத் - மார்ச் 2,1949லக்னோ) அவர் இந்தியாவின் நைட்டிங்கேல் என்றும் அழைக்கப்படுகிறார். இவர் ஒரு பிரபலமான சிறுமுது அறிஞர், கவிஞர், எழுத்தாளர் ,சுதந்திரப் போராளி மற்றும் சமூக ஆர்வலர் ஆவார். இந்திய தேசிய காங்கிரசின் இரண்டாவது பெண் தலைவரும் உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதல் பெண் ஆளுனரும் ஆவார்.அவரது பிறந்த நாள் இந்தியாவில் மகளிர் தினமாக கொண்டாடப்படுகிறது.

1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 15 ஆம் நாள் இந்தியா சுதந்திரம் பெற்றதற்குப் பிறகு அவர் யுனைட்டட் ப்ரொவின்சஸ் (தற்போது உத்தரப்பிரதேசம் என்று அழைக்கப்படுகிறது) ன் ஆளுநராக பதவியேற்றார். இதன் வழியாக இந்தியாவின் முதல் பெண் ஆளுநரானார். மார்ச் 2, 1949 அன்று மாரடைப்பால் அவர் மரணமடைந்தார்.

நீதிக்கதை

 அதி புத்திசாலிகள்!


முன்னொரு காலத்தில் ஒரு நாட்டில் வாழும் மக்கள், இந்த உலகத்திலேயே தாங்கள்தான் பெரிய அறிவாளிகள் என்று நினைத்துக் கொண்டிருந்தனர். ஆனால், அவர்கள் அனைவரும் சரியான முட்டாள்கள் என்பது அவர்களுக்கு தெரியாது. ஒருநாள் அவர்கள் மரத்தால் ஒரு பெரிய வீடு கட்டத் தீர்மானித்தனர். அதற்கான நல்ல மரத்தைத் தேர்ந்தெடுப்பதற்காக அவர்கள் காட்டுக்குப் போக முடிவு செய்தனர். அப்போது, அவர்களில் மிகவும் அதிபுத்திசாலியான ஒருவன் சொன்னான்.


நான் குதிரை வண்டியில் ஏறி முதலில் போகிறேன். நீங்களெல்லாம் பின்னால் வாருங்கள்! என்றான். எல்லாரும் அதை ஏற்றுக் கொண்டனர். அதிபுத்திசாலி குதிரை வண்டியில் ஏறி காட்டுக்குப் பாய்ந்து சென்றான். ஆனால், வழியில் அவன் குதிரைவண்டி ஒரு கல்லின் மீது ஏறியதால் கவிழ்ந்தது. அவன் கையிலிருந்த கோடாரி தூரத்தில் சென்று விழுந்தது. அவனும் ஆழமான ஒரு குழியில் விழுந்து விட்டான்.


குதிரை வண்டிக்குப் பின்னால் வந்த மற்ற அறிவாளிகள், அதிபுத்திசாலியின் கோடாரி வழியில் கிடப்பதைப் பார்த்தனர். அவர்களில் மிகச் சிறந்த அறிவாளி அவன்தான் என்பதால், அவன் கோடாரியை விட்டுச் சென்றதற்கு ஏதும் முக்கியமான காரணம் இருக்கும் என்று மற்றவர்கள் நினைத்தனர். அதனால், எல்லாரும் மரம் வெட்டுவற்காகத் தங்கள் கையில் எடுத்து வந்திருந்த கோடாரியை அப்படியே போட்டுவிட்டுத் தொடர்ந்து சென்றனர்.


காட்டுக்குச் சென்று வெட்டுவதற்கு ஏற்ற மரத்தைத் தேர்ந்தெடுத்தனர். ஆனால், யார் கையிலும் கோடாரி இல்லையே, பிறகு எப்படி மரம் வெட்டுவது? எல்லாரும் ஒன்றாக அமர்ந்து இதற்கு என்ன வழியென்று சிந்தித்தனர். அவர்களில் ஒரு அறிவாளி, இந்த மரத்தின் கிளையைப் பிடித்து தொங்குகிறேன். நீங்கள் அனைவரும் என்னுடைய காலைப் பிடித்து தொங்குங்கள். அப்படி தொங்கினால் மரக்கிளை வளைந்து ஒடிந்து விழும். நாம் அதை எடுத்துச் சென்று வீடு கட்டலாம் என்றான். எல்லோரும் அதை ஏற்றுக் கொண்டனர். அந்த அறிவாளி சொன்னது போலவே செய்தனர். மரக்கிளை ஒடிந்து கீழே விழும் நேரத்தில் முதலில் மரக்கிளையைப் பிடித்து தொங்கிய அறிவாளியின் கை வழுக்கியது. கை வழுக்கி அனைவரும் கீழே விழுந்தனர். மரக்கிளை முன்பு இருந்தது போலவே நீளாமாக ஆனது.


அவர்கள் அனைவரும் மீண்டும் கூடி அமர்ந்து சிந்தித்தனர். அவர்களில் ஒருவன் அப்போது நல்ல படியாகச் சிந்தித்தான். அவன் சொன்னான். நண்பர்களே, நாம் திரும்பிச் சென்று, வழியில் போட்டுவிட்டு வந்த கோடாரிகளை மீண்டும் எடுத்து வரலாம். அதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை! என்றான். அவ்வாறு அவர்கள் சென்று தங்கள் கோடாரிகளுடன் திரும்பி வந்தனர். தேவையான மரத்தை வெட்டி எடுத்துக்கொண்டு கிராமத்துக்குச் சென்றனர். தங்களது புத்திசாலித்தனத்தை நினைத்து தங்களை தாங்களே மிகவும் பாராட்டிக் கொண்டனர்.

இன்றைய செய்திகள்

02.03.2026

⭐ தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று துவங்குகிறது. தமிழ்நாட்டில் 8.07 லட்சம் மாணவர்கள் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வை எழுத உள்ளனர்.

⭐ வர்த்தகம், முதலீடு, கல்வி, உற்பத்தி, கலாச்சாரம், கடல்சார் பாரம்பரியம், விவசாயம் மற்றும் AI உள்ளிட்ட பல துறைகளில் ஒத்துழைப்பு வழங்கும் வகையில் மொத்தம் 17 ஒப்பந்தங்கள் மற்றும் ஆவணங்களில் இந்தியாவும் இஸ்ரேலும் கையெழுத்திட்டுள்ளன.

⭐அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே ஜெனிவாவில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து அமெரிக்க ராணுவம் இஸ்ரேலியப் படைகளுடன் இணைந்து ஈரான் மீது தாக்குதலைத் ஆரம்பித்துள்ளது

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀சூப்பர் 8 சுற்று: கடைசி போட்டியில் ஜிம்பாப்வேவை எளிதாக வீழ்த்தியது தென்ஆப்பிரிக்கா.

Today's Headlines

⭐ The 12th standard public examination in Tamilnadu begins today. 8.07 lakh students in Tamilnadu are going to write the 12th standard public examination.

⭐ India and Israel have signed a total of 17 agreements and documents to provide cooperation in several areas including trade, investment, education, manufacturing, culture, maritime heritage, agriculture and AI.

⭐The US military has launched an attack on Iran in conjunction with Israeli forces after talks between the US and Iran in Geneva failed 

 *SPORTS NEWS*

🏀Super 8 round: South Africa easily beat Zimbabwe in the final match.

Covai women ICT_போதிமரம்

Sunday, March 1, 2026

Sunday, March 01, 2026

School Calendar - March 2026


மார்ச் 2026 மாத பள்ளி நாட்காட்டி - 19.03.2026 தெலுங்கு வருடப் பிறப்பு 20.03.2026 என்று தவறுதலாக இருந்தது தற்போது அது சரிசெய்யப்பட்டுள்ளது - இணைப்பு: 2026ஆம் ஆண்டின் பொது விடுமுறை அரசாணை!

மார்ச் -2026 நாள்காட்டி..


மார்ச் -7 சனி - ஆசிரியர் குறை தீர் நாள்.

மார்ச் -2 - திங்கள் - +2 தேர்வு ஆரம்பம்

மார்ச் -11 - புதன் - 10 தேர்வு ஆரம்பம்

மார்ச் -26 - வியாழன் - *+2 தேர்வு முடிவு.

ஏப்ரல் - 6 -திங்கள் - *10 ஆம் வகுப்பு தேர்வு முடிவு.


அரசு விடுமுறை நாள்கள்..


மார்ச் -19 - வியாழன் - தெலுங்கு வருடப்பிறப்பு

மார்ச் -21 - சனி - ரம்ஜான்

மார்ச் -31 - செவ்வாய் - மகாவீரர் ஜெயந்தி


RL & RH news


*02.03.2026 -- திங்கள்--மாசிமகம்

04.03.2026 -- புதன் - *பகவான் வைகுண்டசாமி அவதாரதினம்

*16-03-2026 - திங்கள் - *ஷபேகாதர்


March 2026 Calendar & Govt Holidays 2026

👇👇👇👇

Download here ( Revised ...)
Sunday, March 01, 2026

8 லட்சம் பேர் எழுதும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் நாளை தொடக்கம்

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்​தேர்வு நாளை (மார்ச் 2) தொடங்கி 26-ம் தேதி வரை நடை​பெற உள்​ளது. இத்​தேர்​வில் 8.27 லட்​சம் பேர் பங்​கேற்​கிறார்​கள்.

தமிழக பள்​ளிக்​கல்வி பாடத்​திட்​டத்​தில் 10, பிளஸ் 2 வகுப்​பு​களுக்கு பொதுத்​தேர்வு நடத்​தப்​பட்டு வரு​கிறது. அதன்​படி நடப்பாண்​டுக்​கான பிளஸ் 2 பொதுத்​தேர்வு நாளை தொடங்கி 26-ம் தேதி நிறைவுபெறுகிறது. முதல்​நாளில் தமிழ் உட்பட மொழிப் பாடங்​களுக்​கான தேர்வு நடை​பெறும்.

இந்த தேர்வை மாநிலம் முழு​வதும் அமைக்​கப்​பட்​டுள்ள 3,412 தேர்வு மையங்​களில் 8 லட்​சத்து 27,475 பேர் எழுதுகின்​றனர். இதில் 7,545 பள்ளி​களில் இருந்து 7 லட்​சத்து 99,692 மாணவர்​கள், 27,783 தனித்​தேர்​வர்​கள் மற்​றும் 281 கைதி​களும் அடங்​கு​வர். மேலும் 7,465 மாணவர்​கள் ஸ்கிரைப் உதவி​யுடன் தேர்​வெழுதவுள்​ளனர்.

பொதுத்​தேர்​வுக்​கான அறை கண்​காணிப்​பாளர் பணி​யில் 44,624 ஆசிரியர்​கள் ஈடு​படுத்​தப்பட உள்​ளனர். முறை​கேடு​களைத் தடுக்க 4,540 நிலை​யான மற்​றும் பறக்​கும் படைகள் அமைக்​கப்பட்​டுள்​ளன. அதே​போல், மாவட்ட ஆட்​சி​யர், முதன்​மை, வட்​டாரக் கல்வி அலு​வலர் மற்​றும் வரு​வாய்த் துறை அதி​காரி​கள் தலை​மை​யிலும் சிறப்பு கண்​காணிப்​புக் குழுக்​கள் ஏற்​படுத்​தப்​பட்​டுள்​ளன. 154 வினாத்​தாள் கட்​டுக்​காப்பு மையங்​களில் 24 மணி நேரம் ஆயுதம் தாங்​கிய காவல்​துறை அதி​காரி​கள் பாது​காப்பு பணி​யில் ஈடு​பட்​டுள்​ளனர்.

ஏற்​பாடு​கள், கட்​டுப்​பாடு​கள் தேர்வு மையங்​களில் குடிநீர்,இருக்​கை, மின்​சா​ரம், காற்​றோட்​டம், வெளிச்​சம் மற்​றும் கழிப்​பறை வசதி​கள் செய்யப்​பட்​டுள்ளன. இதுத​விர மாணவர்​களுக்​கும், ஆசிரியர்​களுக்​கும் பல்​வேறு கட்​டுப்​பாடு​கள் விதிக்​கப்​பட்​டுள்ளன.

தேர்வறைக்குள் செல்போன் உள்​ளிட்ட மின்​சாதனப் பொருட்கள்கொண்​டுவரத்தடை விதிக்கப்பட்​டுள்​ளது. ஹால்​டிக்​கெட்​டில் உள்ள விதிகளைப் பின்பற்றி மாணவர்​கள் நடக்க வேண்டும்.விடைத்​தாளில் நீலம் அல்​லது கருப்பு நிற பேனாவால் மட்​டுமே எழுத வேண்​டும்.

அதே​போல், விடைத்​தாள்களில் எவ்​வித சிறப்​புக் குறி​யீடு,தேர்வெண், பெயர் ஆகிய​வற்றை குறிப்​பிடக் ​கூ​டாது. மேலும், மாற்​றுத் திற​னாளி மாணவர்​களுக்​கான கூடு​தல் நேரம் உட்பட சிறப்பு சலுகைகள் வழங்​குதல் சார்ந்​தும் அறி​வுறுத்​தல்​கள் வழங்​கப்​பட்​டுள்​ளன. ஆள்​மாறாட்டம் செய்​வது, துண்​டுத்​தாள் அல்​லது பிற மாணவர்களை பார்த்து எழுதுதல், விடைத்​தாள் மாற்​றம் செய்​தல் போன்ற ஒழுங்​கீன செயல்​களில் ஈடு​படும் மாணவர் மீது நடவடிக்கை எடுக்​கப்படும்.

அதி​கபட்சம் 3 ஆண்​டு​ அல்​லது நிரந்​தரமாக தேர்வெழுத தடைவிதிக்​கப்படும். ​தேர்வு குறித்த சந்​தேகங்​கள் மற்​றும் புகார்களைத் தெரிவிக்க 14417 மற்​றும் 94983 83075, 94983 83076 எண்​களை​ தொடர்​புகொள்​ளலாம்​.
Sunday, March 01, 2026

இன்று தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தங்களது மொபைல் ஃபோனில் வந்த செய்தி.


இன்று தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தங்களது மொபைல் ஃபோனில் வந்த செய்தி.

*வருமான வரிச் சட்டத்தின்படி, "புதிய வரி6 முறை" என்பது 2026-27 நிதியாண்டிற்கான இயல்புநிலை வரி முறையாகும்.

*நீங்கள் பழைய வரி முறையைத் தேர்வுசெய்ய விரும்பினால், 13.03.2026 அன்று அல்லது அதற்கு முன் களஞ்சியம் மொபைல் செயலி அல்லது வலைத்தளம் மூலம் அவ்வாறு செய்யுங்கள். ஒருமுறை பயன்படுத்தினால், விருப்பமே இறுதியானதாக இருக்கும். - தமிழ்நாடு கருவூலம்

SMS From TN Treasury

Sir/Madam, As per the Income Tax Act, the "New Regime" is the default tax regime for FY 2026-27. If you wish to opt for the Old Regime, please do so on or before 13.03.2026 through the Kalanjiyam mobile app or website. Once exercised, the option will be final. - TN Treasury

அடுத்த நிதியாண்டுக்கு வருமான வரி தேர்வு செய்யும் வசதி களஞ்சியம் செயலியில் தற்போது தரப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் OLD REGIME என தவறாக தேர்வு செய்தவர்கள் அடுத்த நிதியாண்டுக்கு சரியாக தேர்வு செய்யவும். கடைசி தேதி - 13/03/2026
Sunday, March 01, 2026

நிருவாக நலன் கருதி 4 மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு மாறுதல் வழங்கி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!


நிருவாக நலன் கருதி 4 மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு மாறுதல் வழங்கி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!

👇👇👇👇

DEOs Transfer Order - Download here

Saturday, February 28, 2026

Saturday, February 28, 2026

BEO Promotion - 01.01.2026 நிலவரப்படி மாநில அளவில் தகுதிவாய்ந்தோர் பட்டியல் (Panel List) கோருதல் - DEE Proceedings

தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை-6. ந.க.எண்.000786/ஐ1/2026, நாள். 26 .02.2026

தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப்பணி 2025 - 2026 ஆம் கல்வியாண்டில் வட்டாரக்கல்வி அலுவலர் காலிப்பணியிடங்களில் 50% பதவி உயர்வு மூலம் நியமனம் – 2026 ஆம் ஆண்டு 01.01.2026 நிலவரப்படி மாநில அளவில் தகுதிவாய்ந்தோர் பட்டியல் (Panel List) கோருதல் - சார்பு.

Saturday, February 28, 2026

Pay Matrix Level 10 ல் cell No 45 கடந்தவர்கள் விவரம் கேட்டு தொடக்கக் கல்வி இயக்குநர் கடிதம் ...


தொடக்கக் கல்வி திருமதி.சா.ரோஸ்லின் அரியலூர் மாவட்டம், அரியலூர் கல்வி மாவட்டம், திருமானூர் ஒன்றியம், புதுக்கோட்டை ஆர்.சி. தூயமேரி தொடக்கப் பள்ளி இடைநிலை ஆசிரியர் ஹில்டா என்பாரின் 01.01.2026 நிலையில் ஆண்டு ஊதிய உயர்வு பெற Pay Matrix விவிவாக்கம் செய்து ஊதியம் பெற அனுமதி வழங்குதல் கூடுதல் விவரங்கள் கோருதல் தொடர்பாக.

PAY MATRIX LEVEL EXTEND DETAILS.pdf

👇👇👇👇

Saturday, February 28, 2026

அரசு பள்ளிகளில் நாளை முதல் மாணவர் சேர்க்கை தொடக்கம்


2026-27ஆம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கை - 01.03.2026 முதல் மாணவர் சேர்க்கை தொடங்க தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு.

தொடக்கக் கல்வி -2026-27ஆம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கை - 0103.2026 முதல் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடங்குதல் 5+ வயதுடைய குழந்தைகளை அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் சேர்க்கை செய்தல் - அறிவுரைகள் வழங்குதல் - தொடர்பாக

அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 5 வயது பூர்த்தி அடைந்த மற்றும் பள்ளி வயது குழந்தைகள் அனைவரையும் அரசுப் பள்ளிகளில் சேர்ப்பதற்கு ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 1 முதல் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என பார்வை (3)யில் காணும் அரசாணையில் வழிகாட்டு நெறிமுறைகளுடன் ஆணைகள் வெளியிடப்பட்டு உள்ளது.

மேற்படி அரசாணையில் தெரிவிக்கப்பட்ட வழிகாட்டுதல்களை கவனமுடன் பின்பற்றி 2026-27ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைப் பணிகளை ஒவ்வொரு பள்ளியிலும் 01.03.2026 முதல் தொடங்கிட அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வட்டாரக் கல்வி அலுவலர்கள் வாயிலாக உரிய அறிவுரைகள் வழங்கிட அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி) அறிவுறுத்தப்படுகிறார்கள்.

👇👇👇👇👇

DEE - 2026-27 Admission Proceedings - Download here
Saturday, February 28, 2026

பள்ளி பொதுத்தேர்வு - கண்ட்ரோல் ரூம்கள் திறப்பு.

மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெறவுள்ள 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடர்பான புகார்களை தெரிவிக்க கண்ட்ரோல் ரூம் அமைப்பு.

மார்ச் 2ம் தேதி முதல் ஏப்ரல் 6ம் தேதி வரை கண்ட்ரோல் ரூம்கள் இயங்கும்.

94983 83075, 94983 83076 ஆகிய எண்களில் தேர்வு தொடர்பாக பெற்றோர், மாணவர்கள் தொடர்பு கொள்ளலாம்.
Saturday, February 28, 2026

ஏஐ அச்சுறுத்தல் இல்லாத பணிகளை பட்டியலிட்ட ஸ்ரீதர் வேம்பு!

இன்றைய டிஜிட்டல் டெக் உலகில் செயற்கை நுண்ணறிவின் தாக்கம் பணி சார்ந்த அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. டெக் நிறுவனங்களின் ஆட்குறைப்பு நடவடிக்கை அதற்கு உதாரணம். இந்த சூழலில் ஏஐ அச்சுறுத்தல் இல்லாத 10 வேலைகளை சோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு பட்டியலிட்டுள்ளார்.

அதிகளவிலான சம்பளத்தை காட்டிலும் மனிதர்களை மையமாக கொண்ட பணிகளை அவர் பட்டியலிட்டுள்ளார். ஏற்கெனவே கடந்த ஆண்டு அக்டோபரில் அமெரிக்கவாழ் இந்தியர்கள் தாயகம் தர வேண்டும் என அவர் கூறியிருந்தார். மறுபக்கம் ஏஐ தாக்கத்தால் ஐடி துறை சார்ந்து பணியில் உள்ளவர்கள் பணியிழப்புக்கு ஆளாகி வருகின்றனர். இந்த சூழலில் தற்போது இக்கருத்தை ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.

நாம் சேர்க்கின்ற பொருளாதார மதிப்பை நமக்கான சுயமதிப்போடு இணைத்து பார்த்தால் இன்றைய ஏஐ காலத்தில் அது பெரிய நெருக்கடியாக அமையும்.

மறுபக்கம் பார்த்தால் குழந்தை பராமரிப்பு, அவர்களுக்கு பாடம் போதிப்பது, முதியோர் பராமரிப்பு, பெரிய சம்பளம் கொடுக்கும் பணியை விடுத்து விவசாயத்துக்கு திரும்புவது, கானகங்களை நேசிப்பவர்கள் வனக்காப்பாளர்களாக செல்வது, உள்ளூர் கோயில்களில் தினசரி பூஜைகளை மேற்கொள்ளும் பூசாரி, இசைக்கலைஞராக தினசரி பயிற்சி செய்து, சிறிய அளவிலான பார்வையாளர்கள் இருந்தாலும் அவர்கள் முன் இசைப்பது போன்ற செயல்களை மேற்கொள்ள யாரும் முன்வருவதில்லை. ஏனெனில், இந்த செயல்களுக்காக யாரும் உங்களுக்கு அதிக சம்பளம் தருவதில்லை.

இருந்தாலும் இந்த செயல்களில் ஈடுபடுபவர்கள் ஏஐ-யால் பாதிக்கப்பட மாட்டார்கள். மனிதகுலம் அத்தகைய செயல்பாட்டுக்கு தன்னைத்தானே ஒழுங்கமைத்துக் கொள்ளலாம்” என ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார். அவரது இந்த சமூக வலைதள பதிவுக்கு பயனர்கள் பலர் கலவையான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
Saturday, February 28, 2026

ஆதரவற்ற விதவைகளின் மாதாந்திர வருமான உச்சவரம்பை உயர்த்தி அரசாணை வெளியீடு!



ஆதரவற்ற விதவைகளின் மாதாந்திர வருமான உச்சவரம்பை உயர்த்தி அரசாணை வெளியீடு!

2016-ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் (பணி நிபந்தனைகள்) சட்டம் ஆதரவற்ற விதவைகள்-மாதாந்திர வருமான உச்சவரம்பை உயர்த்துதல் - ஆணைகள்-வெளியிடப்படுகின்றன.

G.O.Ms.No.15 - Destitute Widow Income - Download here
Saturday, February 28, 2026

தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் விதிகள் வழிகாட்டு நெறிமுறைகள் உடனடியாக வெளியிட வேண்டும் - ஜாக்டோ - ஜியோ அறிக்கை


தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் விதிகள் வழிகாட்டு நெறிமுறைகள் தமிழக அரசு உடனடியாக வெளியிடக் கோருதல் தொடர்பாக ஜாக்டோ - ஜியோ அறிக்கை வெளியீடு.

Jactto Geo Letter on TAPS - Download here