என்பாதி
ஆனவளே
தேரோட்டம் காணுகின்ற
பக்தர்க்கூட் டம்போல
ஊரிலுள்ள கண்களெல்லாம்
என்மேல தான்விழுது
விரும்புகின்ற
பூக்கண்டால் பறித்துசூடும் பெண்களைப்போல்
பிறர்கவர்ந்து
விடுவாரோ பயம்எனக்கு வந்தது
உன்நினைவைச் சுமந்துகொண்டு
உனக்காக வாழ்கின்றேன்
ரெட்டசடை பின்னலைமுன்
னேவிட்டு நடக்கையிலே
மொட்டுவிட்ட மல்லிகையைத்
தொட்டுதொட்டு பார்க்குதடி
காதோரம் அசைந்தாடும்
காதணியாம் லோலாக்கும்
இதமாகக் கண்ணத்தில்
முத்தமிட்டுப் போகுதடி
என்கையில் உறைகின்ற
சிறுதுணியும் இரக்கமின்றி
என்முன்னே இதழ்உறசி
முத்துமிட்டு வாழுதடி
கண்மணியே
கொண்டவன்நான் உனைத்தொட
வழியின்றி தவிக்கிறேன்
அன்னியர்கள் உனைத்தொட்டு
இன்பங்கள் காணுகின்றார்
நான்இன்பம் காண்பது
எந்நாளோ?
என்பாதி ஆனவளே
பதிலொன்று சொல்லாயோ?