Tuesday, March 25, 2014

வறுமையை நடவு செய்து


வறுமையை நடவு செய்து

G. HARIKRISHNAN M.A., B.Ed., M.Phil.,Phd.,
BT ASST. TEACHER IN TAMIL
GOVT. GIRLS HR. SEC. SCHOOL, GINGEE - 604202,
ADD: 8, EAST ST., RETTANAI&PO., TINDIVANAM T.K. - 604 306.
visit: gharikrishnanrettanai.blogspot.in


நாலு மணிக்கே எழுந்திடுவாறு
எங்க அப்பா.

வீட்டு எருத வலதுலேயும்
பசுமாட்ட இடதுலேயேயும் பூட்டி
ஏரு ஓட்ட ஆரம்பிச்சா
பதிரென்னு ஆகும் ஏருவிட
கால சாப்பாடும் அப்பதான்.

அதுக்கப்பறம்
வரப்ப சுத்தி
அண்ட வெட்டுவாறு
மேடுமேடா இருந்தா
மம்மட்டியால கொத்தி
பள்ளத்துல போடுவாரு
பில்லு இருந்தா
சேத்துல அமுக்கி விடுவாரு
இப்படியே அந்தநாள் போயிடும்.

ராத்திரியில…
தண்ணி பாச்சனமுன்னு
என்னையும் கூட்டிட்டு போவாரு
பழைய கொள்ளியில
என்ன விட்டுட்டு
முதலியார் தாத்தா
கழனிக்கு அவரு போயிடுவாரு

ம்…. முன்னு வர சத்தம்
மாறுச்சின்னா
மோட்டார நிறுத்துன்னு
சொல்லிட்டுப் போவாரு.

விடியரத்துக்குள்ள
நாலு பயணம்
வந்துருவாரு
என்ன பாக்க.

நடவு அன்னிக்கு
ஆளு வச்சா காசு கொடுக்கனுமுன்னு
என்ன எங்க பாப்பாவ
எல்லாரையும் கூட்டிட்டு போவாரு
நாத்துவாரிப் போட

ஒன்பதுமணி வரைக்கும்
வேல செஞ்சிட்டுப்
பள்ளிக்கூடம் போவோம் நாங்க.

பத்தாவது படிச்சவங்க
எங்க அம்மா
இருந்தாலும்
கழனி வேலைய சிட்டா செய்வாங்க

வருமானம் இல்லன்னாலும்
செலவுக்குப் பஞ்சமில்ல
நடவு ஆள் கூலிகூட
கூலி வேலைக்கு
போய்தான் அடைப்போம்
அப்படி ஒரு வறும…

Popular Feed

Recent Story

Featured News