Sunday, April 27, 2014

கண்ணன் என் காதலன்


கண்ணன் என் காதலன்

G. HARIKRISHNAN M.A., B.Ed., M.Phil.,Phd.,
BT ASST. TEACHER IN TAMIL
GOVT. GIRLS HR. SEC. SCHOOL, GINGEE - 604202,
ADD: 8, EAST ST., RETTANAI&PO., TINDIVANAM T.K. - 604 306.
visit: gharikrishnanrettanai.blogspot.in 

கண்ணிலு ருவம்கண்டேன் – அந்த
கள்ளனு ருவங்கண்டேன்
என்னையே நானிலந்தேன் – என்னுள்
ஏக்கம் குடிகொண்டதே.

உண்ண முடியவில்லை – எனக்கு
உறக்கம் வரவுமில்லை
கண்ணில் தெரிகின்ற – அந்த
கோலத்தைக் காணவில்லை.

பஞ்சனைப் படுக்கையும் – என்னை
பற்றி எரித்ததடீ
சஞ்சல மில்லாத – மனதில்
சாந்தி துளைந்ததடீ

வஞ்சகம் செய்தவனை – என்னை
வஞ்சித்துப் போனவனை
கொஞ்சம் பொழுதேனும் – கண்டால்
குறையும் நெஞ்சுவலி.

தன்னந் தணியாக – என்னை
தவிக்க விட்டவனை
என்னநான் சொல்வேனோ – அவனை
என்னுநான் காண்பேனோ.

கண்டு களித்திடவே – கண்களும்
காத்து கிடக்குதடி
தூண்டில் மீனினைப்போல் – மனது
மாட்டித் தவிக்குதடி.

என்று வருவானோ – என்று
ஏங்கி இருக்கையிலே
கன்றினை நாடிவரும் – அந்த
காலத் துப்பசுவைபோல்

கண்ணனும் வந்தாண்டி – எனக்குள்
களிப்பைத் தந்தாண்டி
என்னையே நான்மறந்தேன் – இன்று
ஏக்கமும் தீர்ந்ததடீ

உச்சி குளிர்ந்ததடி – என்தன்
உள்ளமும் மகிழ்ந்ததடி
பச்சை நிறத்தவனை – எந்தன்
பார்வையில் பட்டவனை

கச்சியில் உறைபவனை – இன்று
கண்களில் கண்டதனால்
அச்சமும் வந்ததடி – எனக்குள்
அழகும் வந்ததடி,

Popular Feed

Recent Story

Featured News