Join THAMIZHKADAL WhatsApp Groups
கண்ணன் என்
காதலன்
G. HARIKRISHNAN M.A., B.Ed., M.Phil.,Phd.,
BT ASST. TEACHER IN TAMIL
GOVT. GIRLS HR. SEC.
SCHOOL, GINGEE - 604202,
ADD: 8, EAST ST., RETTANAI&PO., TINDIVANAM T.K. - 604 306.
visit: gharikrishnanrettanai.blogspot.in ADD: 8, EAST ST., RETTANAI&PO., TINDIVANAM T.K. - 604 306.
கண்ணிலு ருவம்கண்டேன்
– அந்த
கள்ளனு ருவங்கண்டேன்
என்னையே நானிலந்தேன்
– என்னுள்
ஏக்கம் குடிகொண்டதே.
உண்ண முடியவில்லை
– எனக்கு
உறக்கம் வரவுமில்லை
கண்ணில் தெரிகின்ற
– அந்த
கோலத்தைக்
காணவில்லை.
பஞ்சனைப்
படுக்கையும் – என்னை
பற்றி எரித்ததடீ
சஞ்சல மில்லாத
– மனதில்
சாந்தி துளைந்ததடீ
வஞ்சகம் செய்தவனை
– என்னை
வஞ்சித்துப்
போனவனை
கொஞ்சம் பொழுதேனும்
– கண்டால்
குறையும்
நெஞ்சுவலி.
தன்னந் தணியாக
– என்னை
தவிக்க விட்டவனை
என்னநான்
சொல்வேனோ – அவனை
என்னுநான்
காண்பேனோ.
கண்டு களித்திடவே
– கண்களும்
காத்து கிடக்குதடி
தூண்டில்
மீனினைப்போல் – மனது
மாட்டித்
தவிக்குதடி.
என்று வருவானோ
– என்று
ஏங்கி இருக்கையிலே
கன்றினை நாடிவரும்
– அந்த
காலத் துப்பசுவைபோல்
கண்ணனும்
வந்தாண்டி – எனக்குள்
களிப்பைத்
தந்தாண்டி
என்னையே நான்மறந்தேன்
– இன்று
ஏக்கமும்
தீர்ந்ததடீ
உச்சி குளிர்ந்ததடி
– என்தன்
உள்ளமும்
மகிழ்ந்ததடி
பச்சை நிறத்தவனை
– எந்தன்
பார்வையில்
பட்டவனை
கச்சியில்
உறைபவனை – இன்று
கண்களில்
கண்டதனால்
அச்சமும்
வந்ததடி – எனக்குள்
அழகும் வந்ததடி,