Tuesday, November 25, 2014

புதிய பயணம்



புதிய பயணம்

மௌனங்களை உடைத்தெரிந்து
விழிபிதுங்க ஓடச்செய்
நீ நசுங்கினது போதும் நசுக்கிவிடு
உன் உணர்வுகளும் தேரேரி
பவனி வரட்டும்.

சொப்பனங்களில் மூழ்கிக் கொண்டு
கரை தெரியாது விழிக்கிறாய்
கனவுகளை நிறுத்திவிடு
கண்களைக் கட்டிக்கொண்டு வழிதேடாதே.

உன் மூச்சுக்காற்றில் எல்லாமே இருக்கிறது
சுவாசிப்பதும் சுட்டெரிப்பதும் உன்னிடமே
சேம்பேறித் தனமாய் முடங்கி விடாதே.

அடிமையாக்கும் உறவுகளில்
நகர்வதற்கே இடமில்லாமல் திணருகிறாய்
உறவுகளைத் தாண்டி உலகம் இருக்கிறது
உன் கூட்டை உடைத்துக் கொண்டு வெளியில் வா
உன் பரப்பளவும் பெரிதாகும்.

கண்ணைக் கட்டிக் கொண்டு
கண்ணாமூச்சி ஆடலாம்
வாழ்க்கையின் கண்களைக் கட்டிவிடாதே.
பிறகு
மற்றவர்கள் கண்ணாமூச்சு ஆடிவிடுவார்கள்
உன்வாழ்க்கையில்

கண்ணீரைச் சுமக்கின்ற கயமைகளே
உன்வாழ்வை தீர்மானிப்பது நீதான்
பாதையல்ல

எதிர்காலம் உன் வரவுக்காய்
ஏங்கிக் கொண்டிருக்க
நீ
கிணற்றுத் தவளையாய் உழல்வது நியாயமோ
எல்லை தாண்டியும் உன்சாதனைகள்
உலகை வழிநடத்தும்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News