காதலின் எச்சம்
உன் பார்வை
தீபம்
என்மீது விழும்போதெல்லாம்
மெழுகு இதயம்
உருகுகிறது
கண்ணீராய்…
உன்னோடு நானிருந்த
ஒவ்வொரு கணமும்
நெருப்பிடை
தென்றல் சுகம்…
பள்ளிக் கூட
வாசல்தேடி
வேளையோடு வருவதும்
வகுப்பறை பாடம்
மறந்து
நம்மை நாம்
ரசித்ததும்
இன்றும்
இறந்தகால நினைவுகள்
நிகழ்காலமாய்…
காம்பின் பூவாய்
இருந்த நம்மை
பிரித்துவிட்டது
அந்தப் புயல்
காதலின் எச்சம்
தொடர்ந்தால்
மீண்டும் இணைவோம்
அடுத்த ஜென்மத்தில்…