நற்றிணை
- நன்மை+திணை = நற்றிணை (சிறந்த ஒழுக்கம் என்னும் பொருள்
கொண்ட நூல்)
- இது எட்டுத்தொகை நூல்களுள் முதலாவதாகக்
குறிப்பிடும் நூல்.
- இது அகப்பொருள் பற்றிய நூல்.
- ‘நல்’
என்னும் அடைமொழி கொண்டநூல்.
- ஒன்பது
அடிமுதல் பன்னிரண்டு அடிவரையில் பாடப்பட்ட நூல்.
- இது 400 பாடல்களைக் கொண்டு அமைகிறது. ஆதலால் நற்றிணை
நானூறு என்ற சிறப்புப் பெயரும் இதற்குண்டு.
- இதனை 275 புலவர்கள் பாடியுள்ளனர்.
- இந்நூலுக்குப் பாரதம் பாடிய பெருந்தேவனார் கடவுள்
வாழ்த்துப் பாடியுள்ளார்.
- இந்நூலைத் தொகுத்தவர் பாண்டிய மன்னன் பன்னாடு தந்த
மாறன் வழதி.
- தொகுப்பித்தவர் பெயர் தெரியவில்லை.
- இதற்குப் பழைய குறிப்புக் கொண்டு பின்னாத்தூர்
நாராயணசாமி அய்யர் எழுதிய விளக்க உரையே முதல் உரையாகும்.