Sunday, May 10, 2015

யசோதர காவியம்

யசோதர காவியம்

Ø  5 சருக்கங்களில் 320 விருத்தப்பாக்களால் ஆனது.
Ø  இதன் ஆசிரியர் பெயரும் தெரியவில்லை.
Ø  இராசமாபுரத்து அரசன் மாரிதத்தன் உயிர்களைப் பலியிட்டு வந்தான். அவனுக்கு உயிர்க்கொலை தீது என்று உணர்த்துவதற்காக எழுதப்பட்ட காப்பியம் இது.
Ø  மறுபிறவிகள், சிற்றின்பத்தின் சிறுமை, பேரின்பத்தின் பெருமை, ஒழுக்கத்தின் உயர்வு போன்றவற்றை விவரிப்பது இந்நூல்.
Ø  இது ஒரு வடமொழி நூலின் தழுவல்.
Ø  எளிய நடையும் நயமான பாக்களும் உடைய நூல் இது.
Ø  காலம் 13-ஆம் நூற்றாண்டு.
Ø  இசை காமத்தைத் தூண்டும் என்பதையும், கர்மத்தின் விளைவுகளையும் எடுத்தியம்பும் இக்கதை உத்தரபுராணத்தில் இருந்து எடுக்கப்பட்டது என்றும் புட்பந்தர் கதையின் தமிழ் வடிவம் என்றும் இதன் ஆசிரியர் வெண்ணாவலுடையார் வேள் என்றும் கூறுவோர் உண்டு.
Ø                                ஆக்குவ தேதெனில் அறத்தை ஆக்குக
போக்குவ தேதெனில் வெகுளி போக்குக
நோக்குவ தேதெனில் ஞானம் நோக்குக

காக்குவ தேதெனில் விரதம் காக்கவே

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News