Saturday, May 2, 2015

குறுந்தொகை - TRB-TET-TNPSC-SLET-NET - STUDY MATERIAL IN TAMIL

குறுந்தொகை

  • குறுமை+தொகை = குறுந்தொகை
  • இது எட்டுத்தொகை நூல்களுள் இரண்டாவதாகக் குறிப்பிடும் நூல்.
  • இது அகப்பொருள் பற்றிய நூலாகும்.
  • ‘நல்ல’ என்னும் அடைமொழி கொண்டநூல்
  • குறைந்த அடிகளை உடைய பாக்களால் ஆனது என்பதால் இதனைக் குறுந்தொகை என்று கூறப்படுகிறது.
  • இதன் அடிளயவு நான்கடி முதல் எட்டடிவரை ஆகும்.
  • எனினும் 307, 391 ஆகிய இரண்டு பாடல்கள் ஒன்பது அடிகளால் பாடப்பட்டுள்ளன.
  • இருநூற்று ஐவர் (205) பாடியுள்ளனர்.
  • இந்நூலைத் தொகுத்தவர் ‘பூரிக்கோ’.
  • தொகுப்பித்தவர் யாரெனத் தெரியவில்லை.
  • யார் பாடியது என அறிய முடியாத வகையில் 10 பாக்கள் உள்ளன.
  • இந்நூலுக்குக் கடவுள் வாழ்த்துப் பாடல் பாடியவர் ‘பாதரம் பாடிய பெருந்தேவனார்’ ஆவர்.
  • இக்கடவுள் வாழ்த்து முருகனைப் பற்றியது.
  • கடவுள் வாழ்த்து உட்பட இதில் 402 (401+1) பாடல்கள் உள்ளன.
  • முதல் 380 பாடல்களுக்குப் பேராசிரியரும், இறுதி 20 பாடல்களுக்கு நச்சினார்க்கினியரும் உரை எழுதியுள்ளனர். இவ்வுரை இன்றும் கிடைக்கவில்லை.
  • இந்நூலை முதன் முதலில் பதிப்பித்தவர் சி.வை. தாமோதரம் பிள்ளை.
  • ஆராய்ச்சிப் பதிப்பு உ.வே. சாமிநாதையர்.
  • உரையாசிரியர்களால் மிகுதியாக மேற்கோள் காட்டி எடுத்தாளப்பெற்ற சங்க இலக்கியநூல் இதுவேயாகும்.
  • சங்க நூல்களுள் குறுந்தொகையே முதன் முதலில் தொகுக்கப்பெற்ற நூலாகும்.
  • குறுந்தொகைப் பாடல்களின் வாயிலாகப் பண்டைத் தமிழ் மக்களின் ஒழுக்கம், காதல் வாழ்க்கை, பழக்க வழக்கங்கள், நாகரிகம், மகளிர் மாண்புகள், அற உணர்வுகள் முதலியனவற்றை அறியலாம்.

Popular Feed

Recent Story

Featured News