குறுந்தொகை
- குறுமை+தொகை = குறுந்தொகை
- இது எட்டுத்தொகை நூல்களுள் இரண்டாவதாகக் குறிப்பிடும் நூல்.
- இது அகப்பொருள் பற்றிய நூலாகும்.
- ‘நல்ல’
என்னும் அடைமொழி கொண்டநூல்
- குறைந்த அடிகளை உடைய பாக்களால் ஆனது என்பதால் இதனைக் குறுந்தொகை
என்று கூறப்படுகிறது.
- இதன் அடிளயவு நான்கடி முதல் எட்டடிவரை
ஆகும்.
- எனினும் 307, 391 ஆகிய இரண்டு பாடல்கள் ஒன்பது
அடிகளால் பாடப்பட்டுள்ளன.
- இருநூற்று ஐவர் (205)
பாடியுள்ளனர்.
- இந்நூலைத் தொகுத்தவர் ‘பூரிக்கோ’.
- தொகுப்பித்தவர் யாரெனத் தெரியவில்லை.
- யார் பாடியது என அறிய முடியாத வகையில் 10 பாக்கள் உள்ளன.
- இந்நூலுக்குக் கடவுள் வாழ்த்துப் பாடல் பாடியவர் ‘பாதரம்
பாடிய பெருந்தேவனார்’ ஆவர்.
- இக்கடவுள் வாழ்த்து முருகனைப் பற்றியது.
- கடவுள் வாழ்த்து உட்பட இதில் 402 (401+1) பாடல்கள்
உள்ளன.
- முதல் 380 பாடல்களுக்குப் பேராசிரியரும், இறுதி 20
பாடல்களுக்கு நச்சினார்க்கினியரும் உரை எழுதியுள்ளனர். இவ்வுரை இன்றும்
கிடைக்கவில்லை.
- இந்நூலை முதன் முதலில் பதிப்பித்தவர் சி.வை. தாமோதரம்
பிள்ளை.
- ஆராய்ச்சிப் பதிப்பு உ.வே. சாமிநாதையர்.
- உரையாசிரியர்களால் மிகுதியாக மேற்கோள் காட்டி
எடுத்தாளப்பெற்ற சங்க இலக்கியநூல் இதுவேயாகும்.
- சங்க நூல்களுள் குறுந்தொகையே முதன் முதலில்
தொகுக்கப்பெற்ற நூலாகும்.
- குறுந்தொகைப் பாடல்களின் வாயிலாகப் பண்டைத் தமிழ்
மக்களின் ஒழுக்கம், காதல் வாழ்க்கை, பழக்க வழக்கங்கள், நாகரிகம், மகளிர்
மாண்புகள், அற உணர்வுகள் முதலியனவற்றை அறியலாம்.