ஐங்குறுநூறு
- ஐந்து+குறுமை+நூறு = ஐங்குறுநூறு.
- எட்டுத் தொகையுள் மூன்றாவதாக வைத்துக் கூறப்படும் நூல்.
- இது அகத்திணை நூல்.
- மூன்றடி
முதல் ஆறடிவரை பாடப்பட்ட நூல்.
- இந்நூல் ஐநூறு பாடல்களைக் கொண்டுள்ளது.
- மருதம், நெய்தல், குறிஞ்சி, பாலை, முல்லை என்ற வரிசை
முறையில் அமைக்கப்பட்டு ஒவ்வொரு திணைக்கும் நூறு பாடல்கள் வீதம் ஐநூறு
பாடல்கள் பாடப்பட்டுள்ளன.
- இவை முறையே ஓரம்போகி, அம்மூவன், கபிலர், ஓதலாந்தை,
பேயன் ஆகிய ஐந்து ஆசிரியர்கள் பாடியுள்ளனர்.
திணை பாடலாசிரியர்
மருதம் ஓரம்போகி
நெய்தல் அம்மூவன்
குறிஞ்சி கபிலர்
பாலை ஓதலாந்தை
முல்லை பேயன்
மருதம் ஓரம்போகி
நெய்தல் அம்மூவன்
குறிஞ்சி கபிலர்
பாலை ஓதலாந்தை
முல்லை பேயன்
மருதமோ ரம்போகி நெய்த லம்மூவன்
கருதுஞ் குறிஞ்சி கபிலன் – கருதிய
பாலையோத லாந்தை பனிமுல்லை பேயனே
நூலையோ தைங்குறு நுறு.
- இந்நூலைத் தொகுத்தவர் ‘புலத்துறை முற்றிய கூடலூர்
கிழார்’.
- தொகுப்பித்தவர் கோச்சேரமான் ‘யானைக்கண்சேய் மாந்தரஞ்
சேரல் இரும்பொறை’.
- இந்நூலில் ஒவ்வொரு தினையிலும் உள்ள 100 படல்கள்
பத்துப்பத்துப் பாடல்களாகப் பிரிக்கப்பட்டுத் தனித்தனித் தலைப்புக்களின்
கீழ்ப் பகுக்கப்பட்டுள்ளன.
- இந்நூலுக்குக் கடவுள் வாழ்த்துப் பாடியவர் பாரதம்
பாடிய பெருந்தேவனார். இக் கடவுள் வாழ்த்து சிவனைப் பற்றியது.
- இந்நூல், ஐந்து திணைகளிலும் தனித்தனியே நூறு நூறு
பாடல்களால் பாடப்பட்ட, ஐந்து நூறுகளின் தொகுதி என்பதால் இதற்கு ஐங்குறுநூறு
எனப்பட்டது.
- இந்நூலை முதன் முதலில் பதிப்பித்தவர் உ.வே. சாமிநாதையர்.