பரிபாடல்
- இசைப்பாட்டு வகையைச் சார்ந்த நூல்.
- தமிழின் முதல் இசைப்பாடல் நூல்.
- பாவகையால் பெயர்பெற்ற நூல்.
- எட்டுத் தொகையுள் அகத்திற்கும் புறத்திற்கும் உரிய நூல்.
- பாண்டிய நாட்டைச் சிறப்பிக்கவே பாடப்பட்ட நூல் பரிபாடல்.
- பரிபாடலைப் பாடிய புலவர்களின் எண்ணிக்கை 13.
- இதன் சிற்றெல்லை 25 அடி, பேரெல்லை 400 அடி..
- இது, திருமால்(8), முருகன்(31), கொற்றவை(1), வையை(26),
மதுரை நகர்(4) ஆகிய தலைப்புகளில் 70 பாடல்களைக் கொண்டுள்ளது.
திருமாற் கிருநான்கு செவ்வேட்கு முப்பத்
தொருபாட்டு காடுகிழாட் கொன்று – மருவினிய
வையை இருபத்தா(று) மாமதுரை நான்கென்ப
செய்ய பரிபாடல் திறம்.
தொருபாட்டு காடுகிழாட் கொன்று – மருவினிய
வையை இருபத்தா(று) மாமதுரை நான்கென்ப
செய்ய பரிபாடல் திறம்.
- ஆயினும் இன்று திருமால்(6), முருகன்(8), வையை(8) ஆகிய
தலைப்புகளில் அமைந்த 22 பாடல்களே பழைய உரையுடக் கிடைக்கின்றன.
- வேறுவகையால் இரண்டு பாடல்களும், சிதறிய நிலையில் சில
பாடல்களும் கிடைத்திருக்கின்றன.
- இவற்றுள் திருமாலுக்கு ஏழு பாடலும், முருகனுக்கு எட்டு
பாடலும், வையைக்கு ஒன்பது பாடலும், மதுரையைப் பற்றி ஆறு பாடலும் சிதைவுகளாகக்
கிடைக்கின்றன.
- முதல் 22 பாட்டுக்கும் துறை, பாடியோர் பெயர், பாடப்படும்
பாணி, பண் வகுத்தோர் ஆகியவை குறிக்கப்பட்டிருக்கின்றன. வேறு வகையால்
கிடைக்கப்பெற்றவைகளுக்கு இக்குறிப்புகள் இல்லை.
- இந்நூல் முழுமையும் கிடைக்கப் பெறாமையால் இதனைத்
தொகுத்தோர் பெயரும் பிறவும் அறிய முடியவில்லை.
- கிடைத்தவை மட்டும் வைத்து நோக்கும்போது நல்லந்துவனார்
முதலாக 13 பேர் பாடி இருப்பதாகத் தெரிகிறது.
- வையைப் பற்றிய பாடல்கள் அகம் சார்ந்தன.
- கடவுள் வாழ்த்துப் பற்றிய பாடல்கள் புறம் சார்ந்தன.
- பாடலைத் தொகுத்தவர் பெயர் தெரியவில்லை.
- பரிபாடலுக்கு பரிமேலழகர் உரை இயற்றியுள்ளார்.
- இதனை முதன் முதலில் தொகுத்தவர் உ.வே. சாமிநாதையர்.