பதிற்றுப்பத்து
- பத்து x பத்து = நூறு
- பத்து+இன்+இற்று+பத்து = பதிற்றுப்பத்து
- இன், இற்று என்பன சாரியைகள்.
- சேர அரசர்கள் பத்துப் பேரை பத்து புலவர்கள் தலா பத்துப்
பாடல்கள் வீதம் பாடியதால் இதற்குப் பதிற்றுப்பத்து எனப்பட்டது.
- சேர அரசர்களைப் பற்றிப் பாடும் எட்டுத்தொகை நூல்
பதிற்றுப்பத்து.
- இந்நூல், தமிழ் மூவேந்தருள் சேர மன்னர்களின் செயல்
நலன்கள் மட்டும் வரைந்து கூறுகிறது.
- இந்நூலில், முதல் பத்துப் பாடல்களும் கடைசிப் பத்துப்
பாடல்களும் கிடைக்கப்பெறவில்லை. ஏனைய 80 பாடல்களே இடம்பெற்றுள்ளன.
- இதில் ஒவ்வொரு பத்தின் இறுதியிலும் ஒரு பதிகம்
காணப்படுகிறது.
- இந்நூலைத் தொகுத்த ஒருவரால் இப்பதிகம்
பாடப்பட்டிருக்கலாம்.
- இந்நூலுக்குப் பழைய உரை ஒன்றும் உள்ளது.
- இந்நூலை முதன் முதலில் பதிப்பித்தவர் உ.வே. சாமிநாதையர்.
- உரை இயற்றியவர் சு. துரைசாமிப் பிள்ளை
- இப்போதுள்ள பதிற்றுப்பத்தில் எட்டு சேர மன்னர்கள் பற்றிய
குறிப்புகள் கிடைக்கின்றன.
- இரண்டாம் பத்து - இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்.
- மூன்றாம் பத்து – அவர் தம்பி பல்யானைச் செல்கெழுகுட்டுவன்
- நான்காம் பத்து – இமயவரம்பன் மகன் களங்காய்க் கண்ணி
நார்முடிச் சேரல்
- ஐந்தாம் பத்து – அவன் தம்பி கடல் பிறக்கோட்டிய
செங்குட்டுவன்
- ஆறாம் பத்து – அக்குட்டுவனுக்குப் பின்னவனான ஆடு
கோட்பாட்டுச் சேரலாதன். (இவ் ஐவரும் சேர குடியில் உதியஞ்சேரல் என்பவன்
வழிவந்தவர்கள்.)
- ஏழாம் பத்து – அந்துவஞ்சேரல் இரும்பொறையின் மகன்
செல்வக்கடுங்கோ வாழியாதன்
- எட்டாம் பத்து – அவன் மகன் தகடூர் எறிந்த பெருஞ்சேரல்
இரும்பொறை
- ஒன்பதாம் பத்து – அவனுக்குப் பின் தோன்றிய குட்டுவன்
இரும்பொறையின் மகன் குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறை (இம்மூவரும் அந்துவஞ்சேரல்
இரும்பொறை என்ற சேரக்குடியில் வந்தவர்கள்.)
- பதிற்றுப்பத்தில் அமைந்துள்ள ஒவ்வொரு பத்துப் பாடல்களின்
ஈற்றிலும் ஒரு பதிகம் அமைந்துள்ளது.
- இப்பதிகத்தில் பாடப்பட்ட மன்னன் பெயர், அவர் செய்த போர்,
கொடைத்திறம், பாடிய புலவர் பெயர், அவர் பெற்ற பரிசுப்பொருள் ஆகியன
குறிப்பிடப்பட்டுள்ளன.
- பதிற்றுப்பத்தில் அமைந்துள்ள ஒவ்வொரு பாட்டிற்கும்
அப்பாட்டில் வரும் சிறந்த தொடரால் பெயரிடப்பட்டுள்ளது.
- இதில் நான்காம் பத்தில் உள்ள பாடல்கள் மட்டும் அந்தாதி
முறையில் அமைந்துள்ளது.
- ஒவ்வொரு பாட்டின் ஈற்றிலும் அப்பாடலின் துறை, வண்ணம்,
தூக்கு, பெயர் என்ற பாட்டியல் கூறுகளைப் பழைய உரையாசிரியர் குறித்துள்ளார்.
- பதிற்றுப்பத்துப் பாடல்களை அனைத்தும் பாடண்திணையைச்
சார்ந்தவை.
- பரிபாடலைப் போலவே பதிற்றுப்பத்தும் இசையோடுப்
பாடுதற்குரியது.
வ. எண்
|
நூல்
|
ஆசிரியர்
|
பாடுடைத் தலைவன்
|
1
|
முதல் பத்து
|
கிடைக்கப் பெறவில்லை
|
|
2
|
இரண்டாம் பத்து
|
குட்டூர் கண்ணனார்
|
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்
|
3
|
மூன்றாம் பத்து
|
பாலைக் கௌதமனார்
|
பல்யானைக் செல்கெழுங் குட்டுவன்
|
4
|
நன்காம் பத்து
|
காப்பியாற்றுக் காப்பியனார்
|
களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல்
|
5
|
ஐந்தாம் பத்து
|
பரணர்
|
கடல்பிறக் கோட்டிய செங்குட்டுவன்
|
6
|
ஆறாம் பத்து
|
காக்கைபாடினியார்(எ) நச்செள்ளையார்
|
ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்
|
7
|
ஏழாம் பத்து
|
கபிலர்
|
நெல்வக் கடுங்கோ வாழியாதன்
|
8
|
எட்டாம் பத்து
|
அரிசில் கிழார்
|
கடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை
|
9
|
ஒன்பதாம் பத்து
|
பெருங்குன்றூர் கிழர்
|
குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறை
|
10
|
பத்தாம் பத்து
|
கிடைக்கப் பெறவில்லை
|