திருக்குறள்
திருக்குறளின் பொதுப்பண்புகள்
Ø பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று
Ø அறம், பொருள், இன்பம் என்னும் மூன்று பிரிவுகளைக் கொண்டுள்ளமையால் `முப்பால்’ எனவும் போற்றப்படுகிறது.
Ø இதன் பெரும் பிரிவு `பால்’ என்றும் சிறும்பிரிவு `இயல்’ என்றும் உட்பிரிவு அதிகாரம் என்றும் பகுக்கப்பட்டுள்ளன.
Ø இதன்கண் அமைந்த பாடல்கள் அனைத்தும் `குறள் வெண்பாவால் ஆனது.
Ø இக்குறள் வெண்பா, வெண்பா வகைகளுள் ஒன்று.
Ø ஆகவே இதனை `ஈரடி முக்கால்’ என்றும் கூறுவர்.
Ø சங்க காலம் மற்றும் சங்கம் மருபிய காலங்களில் தோன்றிய இலக்கியங்களில் `குறள் வெண்பா’வால் ஆன முதல் நூலும் ஒரே நூலும் இதுவேயாகும்.
Ø இந்நூலின் பாடல்கள் இரண்டடிகளைக் கொண்டமையால் `குறள்’ என்றும் அதன் உயர்வு கருதி `திரு’ அடைமொழி சேர்ந்து திருக்குறள் என வழங்கப்படுகிறது.
Ø உலகப் புகழ் பெற்ற இந்நூலை இயற்றியவர் திருவள்ளுவர்.
Ø இவர் மயிலையில் வாழ்ந்தவர்.
Ø இவரது மனைவி வாசுகி.
Ø அடிப்படையில் இது ஒரு வாழ்வியல் நூலாகும்.
Ø இத்திருக்குறளில் 133 அதிகாரங்களும் ஒரு அதிகாரத்திற்குப் பத்து பாடல் வீதம் மொத்தம் 1330 பாடல்களும் அமைந்துள்ளன.
Ø இதற்கு முப்பால், உத்தரவேதம், தெய்வநூல், உலகப்பொதுமறை, பொய்யாமொழி, வாயுறை வாழ்த்து, தமிழ்மறை, திருவள்ளுவம் என்ற வேறு பெயர்களும் உள்ளன.
Ø இந்நூல் சாதி, மதம், இனம், மொழி வேறுபாடின்றி அனைத்து மக்களுக்கும் நீதிக் கருத்துக்களைக் கூறுவதால், `உலகப் பொதுமறை’ என்றும் போற்றப்படுகிறது.
Ø இதன் காலம் கி.மு. 2ஆம் நூற்றாண்டிற்கும் முதல் கி.பி. 5ஆம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்டக் காலப்பகுதியில் தோன்றியிருக்கக்கூடும் என்பது ஆய்வாளரது கருத்து.
Ø இத்திருக்குறளை,ஔவையார் தாம் இயற்றிய நல்வழி என்றும் நூலில் `தேவர்க் குறள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
Ø மறைமலை அடிகள் செய்த ஆராய்ச்சியின் பயனாகத் தமிழ் நாட்டில் ஆண்டுகளைக் குறிக்க, பொது ஆண்டோடு 31 ஆண்டுகள் கூட்டி(சேர்த்து) `திருவள்ளுவர் ஆண்டு` என வழங்கப்படுகிறது.
Ø திருக்குறளில் ஈரடிகளில் உலகத் தத்துவங்களைக் கூறுவதால் `ஈரடி நூல்’ என்றும் வழங்கப்படுகிறது.
நூலமைப்பு
Ø திருக்குறளில் பாயிரவியல் என்னும் பகுதி முதலில் அமைந்துள்ளது.
Ø இதில், `கடவுள் வாழ்த்து, வான்சிறப்பு, நீத்தார் பெருமை, அறன் வலியிறுத்தல்’ என்ற நான்கு அதிகாரங்கள் அமைந்துள்ளன.
Ø அறத்துப்பாலில் மொத்தம் 38 அதிகாரங்கள் உள்ளன.
பாயிரவியல் - 4 அதிகாரங்கள்
இல்லறவியல் - 20 அதிகாரங்கள்
துறவறவியல் - 13 அதிகாரங்கள்
ஊழியியல் - 1 அதிகாரம்
Ø பொருட்பாலில் மொத்தம் 70 அதிகாரங்கள் அமைந்துள்ளன.
அரசியல் - 25 அதிகாரங்கள்
அமைச்சியல் - 32 அதிகாரங்கள்
ஓழியியல் - 13 அதிகாரங்கள்
Ø திருக்குறளில் ஒரே ஒரு அதிகாரம் உடைய இயல் `ஊழியியல்.
Ø கடைசியாக அமைந்துள்ளது காமத்துப்பால். இதனை, இன்பத்துப்பால் என்றும் கூறுவர்.
Ø இக்காமத்துப்பாலில் மொத்தம் 25 அதிகாரங்கள் உள்ளன.
Ø இது களவியல், கற்பியல் என்ற இரண்டு இயல்களைக் கொண்டுள்ளது.
களவியல் - 7 அதிகாரங்கள்
கற்பியல் - 18 அதிகாரங்கள்
Ø இத்திருக்குறளில் மொத்தம் 9 இயல்கள், 133 அதிகாரங்கள், 1330 பாடல்கள், 12000 சொற்கள் இடம்பெற்றுள்ளன.
திருக்குறளில் 7 என்னும் சிறப்பு
Ø திருக்குறளுக்கும் ஏழு என்னும் எண்ணிற்கும் பெரிதும் தொடர்புள்ளது.
Ø திருக்குறளில் ஏழு என்ற சொல் எட்டுக் குறட்பாக்களில்
எடுத்தாளப்பட்டுள்ளது.
Ø திருக்குறளில் அமைந்துள்ள சீர்களின் எண்ணிக்கை ஏழு.
Ø மூன்று பிரிவாகப் பகுக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவிலும் 34 (பாயிரவியல் நீக்கி), 70, 25 என்ற எண்ணிக்கையான அதிகாரங்கள் அமைக்கப்பட்டுள்ளது இதன் கூட்டுத்தொகையும் ஏழு.
Ø திருகுறளில் பயின்றுவரும் 133 அதிகாரங்கள், 1330 குறட்பாக்கள் என்ற எண்களைக் கூட்டினாலும் ஏழு என்று அமையும்.
Ø அதேவேளையில், திருக்குறளின் நூலமைப்பானது 3, 4, 9, 10 என்ற எண்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்தே அமைக்கப்பட்டுள்ளது.
உரைகள்
Ø திருக்குறளுக்குத் தருமர், தாமத்தர், பரிதி, திருமலையர், பரிப்பெருமாள், மணக்குதவர், நச்சர், பரிமேலழகர், மல்லர், காளிங்கர்
என்ற பதின்மர் உரைசெய்துள்ளனர்.
Ø அவ்வுரைகளுள் பரிமேலழகர்
உரையே சிறந்ததாகக் கருதப்படுகிறது.
உலக மொழிகளில் திருக்குறள்
Ø ஐரோப்பிய மக்களுக்கு லத்தீன் மொழியில் 1730ல் திருக்குறளை அறிமுகப்படுத்தியவர் தந்தை பேஸ்ச்சி ஆவார்.
Ø திருக்குறள் கருத்துக்களை 1794ஆம் ஆண்டு முதன் முறையாக ஆங்கில மொழியில் அறிமுகப்படுத்தியவர் கின்டெர்ஸ்லே
Ø உலகிலேயே அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள நூல்களில் மூன்றாம் இடத்தைத் திருக்குறள் வகிக்கிறது.
Ø இதுவரை 80 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
மொழிபெயர்ப்புகள்
Ø இந்திய மொழிகளில்
குஜராத்தி, இந்தி, கன்னடம், கொங்கணி மொழி, மலைளாயம், மராத்தி, ஒரியா, பஞ்சாபி, இராஜஸ்தானி, சமஸ்கிரதம், சௌராட்டிரா, தெலுங்கு போன்ற 13 மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
Ø ஆசிய மொழிகளில்
அரபி, பருமிய மொழி, சீனம், பிஜியன், இந்தோனேசிய மொழி, யப்பானியம், கொரிய மொழி, மலாய், சிங்களம், உருது போன்ற 10 மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
Ø ஐரோப்பிய மொழிகளில்
செக், டச்சு, ஆங்கிலம், பின்னிய மொழி, பிரஞ்சு மொழி, செருமன், அங்கேரிய மொழி, இத்தாலிய மொழி, இலத்தீன், நார்வே மொழி, போலிய மொழி, ரஷிய மொழி, உசுப்பானியம், சுவீடிய மொழி ஆகிய 14 ஐரோப்பிய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
சுவையான தகவல்கள்
Ø
Ø திருக்குறளில் ஐம்பதுக்கும் குறைவான வடசொற்களே உள்ளன.
Ø திருக்குறளில் ‘தமிழ்‘ என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை.
Ø திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு-1812
Ø திருக்குறளின் முதல் பெயர்- முப்பால்
Ø திருக்குறள் தமிழ்ச் செய்யுள்களில் முதல் பாவாகிய வெண்பாவில் முதல்
வகையாகிய குறட்பாக்களால் ஆனது.
Ø திருக்குறள் முப்பால்களை கொண்டது.
Ø அவை அறட்துப்பால், பொருட்பால், காமட்துப்பால் ஆகியவை ஆகும்.
Ø அறட்துப்பாலில் 38 அதிகாரங்கள், பொருட்பாலில் 70 அதிகாரங்கள்,
Ø காமட்துப்பாலில் 25 அதிகாரங்கள் இடம் பெற்றுள்ளன.
Ø திருக்குறளில் உள்ள அதிகாரங்கள்- 133
Ø திருக்குறள் அறட்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-380
Ø திருக்குறள் பொருட்பாலில் உள்ள குறட்பாக்கள்-700
Ø திருக்குறள் காமட்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-250
Ø திருக்குறளில் உள்ள மொட்த குறட்பாக்கள்-1330
Ø திருக்குறள் அகரத்தில் தொடங்கி னகரத்தில் முடிகிறது.
Ø ஒவ்வொரு குறளும் இரண்டு அடிகளால் ஏழு சீர்களைக் கொண்டுள்ளது.
Ø திருக்குறளில் உள்ள சொற்கள்-14,000
Ø திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துக்கள்- 42,194
Ø திருக்குறளில் தமிழ் எழுத்துக்கள் 247-இல், 37 எழுத்துக்கள் மட்டும் இடம்
பெறவில்லை
Ø திருக்குறளில் இடம்பெறும் இருமலர்கள்-அனிச்சம், குவளை
Ø திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம்- நெருஞ்சிப்பழம்
Ø திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை- குன்றிமணி
Ø திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே உயிரெழுத்து-ஔ
Ø திருக்குறளில் இருமுறை வரும் ஒரே அதிகாரம்- குறிப்பறிதல்
Ø திருக்குறளில் இடம்பெற்ற இரண்டு மரங்கள்- பனை, மூங்கில்
Ø திருக்குறளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட (1705) ஒரெஎழுத்து-னி
Ø திருக்குறளில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்பட்ட இரு எழுத்துக்கள் ளீ,ங
Ø திருக்குறளில் இடம்பெறாத இரு சொற்கள்- தமிழ், கடவுள் ( அகர முதல என தொடங்கும் முதல் குறள் கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் உள்ளது, இதில் ஆதி பகவன் - என்பது கடவுளை குறிக்கிறது)
Ø திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர்- தஞ்சை ஞானப்பிரகாசர்
Ø திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர்-மணக்குடவர்
Ø திருக்குறளை முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்-ஜி.யு,போப்
Ø திருக்குறளை உரையாசிரியர்களுள் 10-வது உரையாசிரியர்-பரிமேலழகர்
Ø திருக்குறளில் இடம்பெறாத ஒரே எண்- ஒன்பது.
Ø திருக்குறளில் கோடி என்ற சொல் ஏழு இடங்களில் இடம்பெற்றுள்ளது.
Ø எழுபது கோடி என்ற சொல் ஒரே ஒரு குறளில் இடம்பெற்றுள்ளது.
Ø ஏழு என்ற சொல் எட்டுக் குறட்பாக்களில் எடுத்தாளப்பட்டுள்ளது.
Ø திருக்குறள் இதுவரை 80 மொழிகளில் வெளிவந்துள்ளது.
Ø திருக்குறளை ஆங்கிலத்தில் 40 பேர் மொழிபெயர்த்துள்ளனர்
Ø திருக்குறள் நரிக்குறவர் பேசும் வக்போலி மொழியிலும்
மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
Ø திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடும் முறை: கிறிஸ்து ஆண்டு (கிபி) + 31 = திருவள்ளுவர் ஆண்டு.
Ø எ.கா: 2014 +31 = 2045 (கி.பி.2014-ஐ திருவள்ளுவர் ஆண்டு 2045 என்று கூறுவோம்)
Ø திரு+குறள்= திருக்குறள்
Ø திருக்குறள் உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும்.
Ø திருக்குறள் இரண்டு அடிகளாலான குறள் வெண்பாக்களால் ஆனது.
Ø திருக்குறளில் ஒரே பெயரில் அமைந்த 2 அதிகாரங்கள்: குறிப்பறிதல் - (பொருட்பால் - அதிகாரம் 71) குறிப்பறிதல் - (காமட்துப்பால் - அதிகாரம் 110)
Ø திருக்குறளில் முப்பால்களிலும் 120-க்கும் மேற்பட்ட உவமைகள்
எடுத்துக்காட்டப்பட்டுள்ளன.
Ø திருக்குறளில் அனிச்ச மலர் 4 முறையும், யானை 8 முறையும், பாம்பு 3 முறையும் சுட்டப்பட்டுள்ளன.
Ø திருக்குறளில் 46 குறள்களில் உயிரினங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
Ø திருக்குறள் மாந்தர்கள் தம் அகவாழ்வில் சுமுகமாக கூடி வாழவும், புற வாழ்வில் இன்பமுடனும் இசைவுடனும் நலமுடனும் வாழவும் தேவையான அடிப்படைப் பண்புகளை விளக்குகிறது.
Ø `தொடிற்கடின் அல்லது காமநோய் போல விடிற்கடின் ஆற்றுமோ தீ’ (1159) என்ற குறளில் மட்டும் ஈற்றடியின் ஈற்றுச்சீர் ஒரே எழுத்தில் முடிந்துள்ளது.
Ø திருவள்ளுவ மாலை என்பது திருக்குறளின் பெருமை குறித்துச் சான்றோர்
Ø பலர் பாடிய பாக்களின் தொகுப்பாகும்.
Ø திருக்குறளுக்கு சிறந்த உரை எழுதியவர் பரிமேலழகர்.
Ø மேலும், மு.வரததாசனார், மணக்குடவர் என பலர் எழுதியுள்னர்.
Ø விக்டோரியா மகாராணி, காலையில் கண்விழிட்ததும் முதலில் படித்த நூல் திருக்குறள்.
Ø திருக்குறளை இலத்தீன் மொழியில் மொழி பெயர்த்தவர் - வீரமாமுனிவர்.
Ø அன்புடைமை, அடக்கமுடைமை, ஒழுக்கமுடைமை, பொறையுடைமை, அருளுடைமை, அறிவுடைமை, ஊக்கமுடைமை, ஆள்வினையுடைமை, பண்புடைமை, நாணுடைமை என வள்ளுவர் கூறிய உடைமைகள் 10.
Ø `ஒருமையுள் ஆமைபோ லைந்தடக்க லாற்றின்
Ø எழுமையும் ஏமாப் புடைத்து’ - என்ற குறளில் 1.5.7 என்ற பகா எண்கள் குறிபிடப்பட்டுள்ளன.
Ø அன்னம்,கூகை (ஆந்தை), கொக்கு, காக்கை, புள்(பறவை), மயில், ஆமை, கயல் மீன். மீன் (விண்மீன்), முதலை, நட்தம்(சங்கு), பாம்பு, நாகம், என்பிழாது(புழு) ஆகியன இடம் பெற்றுள்ளன.
Ø பலோடு தேன்கலந் தற்றே பணிமொழி
Ø வாலெயி றூறிய நீர் (112) - என்ற குறளில் பால், தேன், நீர் என்ற மூன்று நீர்மங்கள் இடம் பெற்றுள்ளன.
Ø `பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
Ø பற்றுக பற்று விடற்கு’ - என்ற குறளில் ஒரே சொல் 6 முறை இடம் பெற்றுள்ளது.
Ø ஒரே சொல் 5 முறை 5 குறட்பாக்களிலும், ஒரே சொல் 4 முறை 22 குறட்பாக்களிலும், ஒறே சொல் 3 முறை 27 குறட்பாக்களிலும் இடம் பெற்றுள்ளன.
Ø துணை எழுட்தே இல்லாத குறள், `கற்க கசடற கற்பவை கற்றபின், நிற்க அதற்குட் தக’. (391)
Ø திருக்குறளில் தமிழ் என்ற சொல் இடம் பெறவில்லை.
Ø திருக்குறளில் ஒரு முறை மட்டுமே இடம் பெற்றுள்ள எழுட்துகள் ‘வீ, ங’.
Ø திருக்குறளில் 50 பிறமொழிச் சொற்கள் இடம் பெற்றுள்ளன.
No comments:
Post a Comment