புறநானூறு
- புறம்+நான்கு+நூறு = புறநானூறு.
- இதனைப் ‘புறப்பாட்டு’, ‘புறம்’, ‘புறம்பு’, ‘தமிழ்க் கருவூலம்’
எனவும் வழங்குவர்.
- 400 பாடல்களைக் கொண்ட இந்நூல், ஆசிரியப்பாவால்
பாடப்பட்டுள்ளது.
- இதனை 158 புலவர்கள் பாடியுள்ளனர்.
- இதற்குக் கடவுள் வாழ்த்துப் பாடல் பாடியவர் ‘பாரதம் பாடிய
பெருந்தேவனார்’.
- இக்கடவுள் வாழ்த்து சிவனைப் பற்றியது.
- இந்நூலைத் தொகுத்தவர், தொகுப்பித்தவர் யாரெனத்
தெரியவில்லை.
- புறநானூற்றில் சில பாடல்களை ஜி.யு. போப் ஆங்கிலத்தில்
மொழி பெயர்த்துள்ளார்.
- தமிழ்நாட்டில் பண்டைக் காலத்தில் வாழ்ந்த மூவேந்தர்கள்,
சிற்றரசர்கள், அமைச்சர்கள், சேனைத் தலைவர்கள், கடையெழு வள்ளல்கள், வீரர்கள்,
புலவர்கள், சான்றோர்கள் எனப் பலருடைய வரலாற்றுக் குறிப்புகளும், அக்கால
மக்களின் வாழ்க்கை, நாகரிகம், பண்பாடு, பழக்கவழக்கங்கள் முதலியனவும்
இந்நூலின் மூலம் அறிய முடிகிறது.
- புறநானூற்றின் ஒவ்வொரு பாடலும் இன்னின்ன பொருளைப் பற்றிக்
கூறுகிறது என்பதைத் திணை, துறை என்னும் பாகுபாடுகள் உணர்த்துகின்றன.
- புறநானூற்றுப் பாடல்கள் வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி,
நொச்சி, உழிஞை, தும்பை, வாகை, பாடாண், பொதுவியல், கைக்கிளை, பெருந்திணை என
வழங்கப்பெறும் புறத்திணைகளுக்குரிய துறைப்பொருள்கள் கொண்டு அமைந்தவையாகும்.
- திணை - ஒழுக்கம், நெறி.
- துறை - திணையின் உட்புரிவு. (அவ்வத்திணையில் கூறப்படும்
பொருளைப் பாகுப்படுத்திக் கூறுவது.)
- இந்நூலில் 11 புறத்திணைகளும் 65 துறைகளும்
கூறப்பட்டுள்ளன.