கலித்தொகை
- இது கலிப்பாவால் ஆனநூல்
- சங்க நூல்களில் ஓசை நயம் மிக்க பாட்டுகள் அமைந்த நூல்.
- இது அகப்பொருள் சார்ந்த நூல்.
- ‘கற்றறிந்தால் ஏத்தும் கலி’ என்ற சிறப்பைப் பெற்ற நூல்.
- இதனைத் தொகுத்தவர் நல்லந்துவனார்.
- தொகுப்பித்தவர் யார் எனத் தெரியவில்லை.
- கலித்தொகைப் பாடல்கள் ‘பாலைக்கலி, குறிஞ்சிக்கலி,
மருதக்கலி, முல்லைக்கலி, நெய்தல்கலி’ என்ற வரிசை முறையில் ஐந்துப்
பிரிவுகளைக் கொண்டு அமைகிறது.
- இதனைப் பாடியவர்கள் ஐவர் ஆவார்.
திணை பாடியவர் பாடல்
எண்ணிக்கை
பாலை பெருங்கடுங்கோன் 35
குறிஞ்சி கபிலர் 29
மருதம் மருதன் இளநாகனார் 35
முல்லை சோழன் நல்லுருத்திரன் 17
நெய்தல் நல்லந்துனார் 33
பாலை பெருங்கடுங்கோன் 35
குறிஞ்சி கபிலர் 29
மருதம் மருதன் இளநாகனார் 35
முல்லை சோழன் நல்லுருத்திரன் 17
நெய்தல் நல்லந்துனார் 33
- இந்நூல் கடவுள் வாழ்த்துப் பாடலோடு சேர்த்து 150
பாடல்களைக் கொண்டுள்ளது.
- கடவுள் வாழ்த்தைப் பாடியவர் நல்லந்துவனார்.
- இக்கடவுள் வாழ்த்து சிவனைப் பற்றியது.
- இனிய ஓசையோடு நாடக முறையில் காதல் நிகழ்ச்சிகள்
அமைந்திருப்பதும் இந்நூலின் சிறப்பியல்பாகும்.
- இதற்கு நச்சினார்க்கினியர் விரிவான உரை
எழுதியுள்ளார்.
- இந்நூலை முதன் முதலில் பதிப்பித்தவர் சி.வை. தாமோதரம்
பிள்ளை.
- இந்நூலை நல்லந்துவனால் என்ற புலவர் மட்டுமே பாடியிருக்கக்
கூடும் என சி.வை. தாமோதரம் பிள்ளை, எஸ். வையாபுரிப்பிள்ளை, கே.என். சிவராஜப்
பிள்ளை ஆகியோர் கருதுகின்றனர்.