Saturday, May 2, 2015

பத்துப்பாட்டு - TRB-TET-TNPSC-SLET-NET - STUDY MATERIAL IN TAMIL

பத்துப்பாட்டு
  • எட்டுத் தொகையில் அடி நீண்டு வரும் பாடல்களைத் தனியே தொகுத்து அதற்கு பாட்டு என்று பெயரிட்டுள்ளனர்.
  • பாட்டு என்பது பத்துப் பாடல்கள் அடங்கிய பத்துப்பாட்டைக் குறிக்கும்.
                   முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை

                   பெருகு வளமதுரைக் காஞ்சி – மருவினிய
                   கோல நெடு(நல்)வாடை கோல்குறிஞ்சி பட்டினப்
                   பாலை கடாத்தொடும் பத்து.

  • இப்பத்துப்பாட்டின் சிற்றெல்லை 103 அடிகள், பேரெல்லை 782 அடிகளாகும்.
  • பத்துப்பாட்டின் மிகச்சிறிய நூல் முல்லைப்பாட்டு 103 அடிகளைக் கொண்டுள்ளது.
  • பத்துப்பாட்டின் மிகப் பெரிய நூல் மதுரைக்காஞ்சி, 782 அடிகளைக் கொண்டுள்ளது.
  • இவற்றுள் ஆற்றுப்படைகளாக வருவன ஐந்து நூல்கள். அவை, திருமுருகாற்றுப்படை(புலவராற்றுப்படை), பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, கூத்தராற்றுப்படை(மலைபடுகடாம்) என்பன.
  • ஆற்றுப்படை நூல்கள் அனைத்தும் புறநூல்களாகும்.
  • ஏனைய ஐந்து நூல்களும் அகம், புறம் சார்ந்தவைகளாகும்.
  • பத்துப்பாட்டில் அகத்திணை நூல்கள் மூன்று. அவை, முல்லைப் பாட்டு, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை என்பன.
  • பத்துப்பாட்டில் புறத்திணை நூல்கள் ஆறு. அவை, ஆற்றுப்படை நூல்கள் ஐந்து, மதுரைக் காஞ்சி உடன் சேர்த்து ஆறு நூல்களாகும்.
  • பத்துப்பாட்டில் அகப்புற நூல் ஒன்று. அது, நெடுநல்வாடை.. 
1.        திருமுருகாற்றுப்படை
  • பத்துப்பாட்டின் முதல் நூலாக அமைவது திருமுருகாற்றுப்படை.
  • இது பத்துப்பாட்டின் கடவுள் வாழ்த்துப் பாடலாகவும் அமைகிறது.
  • பத்துப்பாட்டில் காலத்தால் பிந்தைய நூல்.
  • ஆசிரியப்பாவால் ஆனது.
  • இந்நூலை, புலவராற்றுப்படை என்றும் அழைப்பர்.
  • இதனை இயற்றியவர் நக்கீரர்.
  • இந்நூல் 317 அடிகளைக் கொண்டது.
  • இது முருகப் பெருமானைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பாடப்பட்டுள்ளது.
  • ஆபத்தில் மாட்டிக் கொண்ட ஒரு புலவன் அதிலிருந்து மீண்டு வருவதற்கான வழிவகைகளை இந்நூல் குறிப்பிடுகிறது.
  • ஏனைய ஆற்றுப்படை நூல்கள் பரிசில் பெறச் செல்வோரின் பெயரால் அமைய, திருமுருகாற்றுப்படை மட்டும் பரிசில் கொடுப்போன் பெயரால் அமைந்துள்ளது.
2.        பொருநராற்றுப்படை
  • பத்துப்பாட்டின் இரண்டாவது நூலாக அமைவது பொருநராற்றுப்படை.
  • இதன் ஆசிரியர் முதடத்தாமைக் கண்ணியார்.
  • பாட்டுடைத் தலைவன் கரிகால் பெருவளத்தான்.
  • இதில் 248 அடிகள் உள்ளன.
  • இது ஆசிரியப்பாவால் ஆன நூல்.
  • இவ்வாசிரியப்பாவில் வஞ்சியடிகள் இடையிடையே விரவி வருகின்றன.
  • போர்க்களத்தில் பாடுவோன் பொருநன்.
3.        சிறுபாணாற்றுப்படை
  • பத்துப்பாட்டின் மூன்றாவதாக அமைவது சிறுபாணாற்றுப்படை.
  • இதன் ஆசிரியர் இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார்.
  • 269 அடிகளைக் கொண்ட இந்நூல் ஆசிரியப்பாவால் ஆனது.
  • இதன் பாட்டுடைத் தலைவன் ஓய்மா நாட்டு நல்லிய கோடன்.
  • ஓய்மா நாடு என்பது திண்டிவனத்தை ஒட்டிய பகுதிகள்.
  • இடைக்கழி நாடு என்பது செங்கற்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டத்தில் உள்ள கடற்கரைப் பகுதி.
  • உப்பங்கழிக்கும் கடலுக்கும் இடைப்பட்டப்பகுதி இடைக்கழிநாடு எனப்படும்.
4.        பெரும்பாணாற்றுப்படை
  • பத்துப்பாட்டின் நான்காவதாக அமைவது பெரும்பாணாற்றுப்படை.
  • இதன் ஆசிரியர் கடியலூர் உருத்திரங் கண்ணனார்.
  • கண்ணன் என்பது இயற்பெயர், உருத்திரன் என்பது தந்தையார் பெயர்.
  • 500 அடிகளைக் கொண்ட இந்நூல் ஆசிரியப்பாவால் இயற்றப்பட்டுள்ளது.
  • இதன் பாட்டுடைத் தலைவன் தொண்டைமான் இளந்திரையன். 
5.        முல்லைப்பாட்டு
  • பத்துப்பாட்டின் ஐந்தாவதாக அமைவது முல்லைப்பாட்டு.
  • இது அகத்திணை நூல்.
  • அகவற்பவால் ஆனநூல்.
  • 103 அடிகளைக் கொண்டது.
  • இதனைப் பாடியவர் காவிரிப் பூம்பட்டினத்துப் பொன்வாணிகனார் மகன் நப்பூதனார்.
6.        மதுரைக்காஞ்சி
  • பத்துப்பாட்டின் ஆறாவதாக அமைவது மதுரைக் காஞ்சி
  • இது புறத்திணை நூல்
  • 782 அடிகளைக் கொண்டது
  • இது ஆசிரியப்பாவால் ஆனநூல்.
  • இடையிடையே வஞ்சியடிகள் விரவி வருதலால் இதனை வஞ்சிப்பாட்டு என்று கூறுவர்.
  • இதனை இயற்றியவர் மதுரைக்காஞ்சி எனப் புகழப்படும் மாங்குடி மருதனார் ஆவார்.
  • இதன் பாட்டுடைத் தலைவன் தலையாலங் கானத்து செருவென்ற பாண்டியன் நெருஞ்செழியன்.
7.        நெடுநல்வாடை
  • பத்துப்பாட்டின் ஏழாவதாக அமைவது நெடுநல்வாடை.
  • இது அகப்புற நூல்.
  • 188 அடிகளைக்கொண்டது.
  • ஆசிரியப்பாவால் ஆனது.
  • இது ஒரு அகத்திணை நூல்.
  • இதன் ஆசிரியர் நக்கீரர்.
  • பாடுடைத்தலைவன் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டிய நெடுஞ்செழியன்.
8.        குறிஞ்சிப்பாட்டு
  • பத்துப்பாட்டின் எட்டாவதாக அமைவது குறிஞ்சிப்பாட்டு.
  • இது அகத்திணை நூல்.
  • இதற்கு பெருங்குறிஞ்சி என்ற பெயரும் உண்டு.
  • இதனை இயற்றியவர் கபிலர்.
  • இதில் 261 அடிகள் உள்ளன.
  • அகவற்பாவால் இயற்றப்பட்டுள்ளது.
  • இதனை ஆரிய அரசன் பிரகதத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்காகக் கபிலர் பாடினார் என்ற ஒரு வரலாறும் உண்டு.
  • இதில் தமிழ் என்பது அகப்பொருள் என்றும் கூறுவர்.
  • இப்பாடல் தோழி செவிலித்தாய்க் கூறுவதாக அமைகிறது.
  • 99 வகை பூக்களின் பெயர்களை இந்நூல் குறிப்பிடுகிறது.
  • 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் பூ குறிஞ்சி.
9.        பட்டினப்பாலை
  • பத்துப்பாட்டின் ஒன்பதாவதாக அமைவது பட்டினப்பாலை.
  • இது அகத்திணை நூல்.
  • 301 அடிகளைக் கொண்டுள்ளது.
  • ஆசிரியப்பாவால் ஆனது. எனினும் வஞ்சியடிகள் நிறைய வருதலின் இதனை வஞ்சி நெடும்பாட்டு என்றும் கூறுவர்.
  • இதனைப் பாடியவர் கடியலூர் உருத்திரங் கண்ணனார்.
  • பாட்டுடைத் தலைவன் சோழன் கரிகால் பெருவளத்தான்.
10.      மலைபடுகடாம்
  • பத்துப்பாட்டின் பத்தாவதாக அமைவது மலைபடுகடாம்.
  • கடாம் என்பது மதம். மதம் பிடித்த பெருயாணை முழக்கம். மதம்பிடித்த யானை பிளிறும் ஓசைபோல் மலையில் ஓசை அமைகிறது என்பதே மலைபடுகடாம் என்பதன் பொருள்.
  • இதற்குக் கூத்தராற்றுப்படை என்ற வேறு பெயரும் உண்டு.
  • இதனைப் பாடியவர் இரணிய முற்றத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார்.
  • இது நன்னனைப் புகழ்ந்து பாடும் நூல்.
  • 583 அடிகளைக்கொண்ட நூல்.
  • ஆசிரியப்பாவால் ஆனது.
  • இசைக்கருவிகளின் பெயர்களைக் கூறும் நூல் இது.
  • யாழினைப் புகழ்ந்து இந்நூல் தொடங்குகிறது.
. எண்
நூல்
பாடல் எண்ணிக்கை
யாப்பு
நூலின் பண்பு
ஆசிரியர்
பாடுடைத் தலைவன்
வேறுபெயர்கள்
1
திருமுருகாற்றுப்படை
317
ஆசிரியப்பா
ஆற்றுப்படை
நக்கீரர்
முருகன்
புலவாராற்றுப்படை
2
பொருநராற்றுப்படை
248
ஆசிரியப்பா
ஆற்றுப்படை
முடத்தாமக் கண்ணியார்
கரிகால் வளவன்
3
சிறுபாணாற்றுப்படை
269
ஆசிரியப்பா
ஆற்றுப்படை
நல்லூர் நத்தத்தனார்
நல்லிய கோடன்
4
பெரும்பாணாற்றுப்படை
500
ஆசிரியப்பா
ஆற்றுப்படை
கடியலூர் உருத்திரங் கண்ணனார்
தொண்டைமான் இளந்திரையன்
பாணாற்றுப்படை
5
முல்லைப்பாட்டு
103
ஆசிரியப்பா
அகத்திணை
நப்பூதன்
இல்லை
6
மதுரைக்காஞ்சி
782
ஆசிரியப்பா
புறத்திணை
மாங்குடி மருதனார்
தலையாலங் கானத்து செருவென்ற நெடுஞ்செழியன்
வஞ்சிப்பாட்டு
7
நெடுநல்வாடை
188
ஆசிரியப்பா
அகப்புறத் திணை
நக்கீரர்
தலையாலங் கானத்து செருவென்ற நெடுஞ்செழியன்
8
குறிஞ்சிப்பாட்டு
261
ஆசிரியப்பா
அகத்திணை
கபிலர்
இல்லை
பெருங்குறிஞ்சி
9
பட்டினப்பாலை
301
ஆசிரியப்பா
அகத்திணை
கடியலூர் உருத்திரங் கண்ணனார்
இல்லை
வஞ்சி நெடும்பாட்டு
10
மலைபடுகடாம்
583
ஆசிரியப்பா
புறத்திணை
பெருங்குன்றூர் பெருங்கௌசிகனார்
நன்னன்
கூத்தராற்றுப்படை

Popular Feed

Recent Story

Featured News