பத்துப்பாட்டு
- எட்டுத் தொகையில் அடி நீண்டு வரும் பாடல்களைத் தனியே
தொகுத்து அதற்கு பாட்டு என்று பெயரிட்டுள்ளனர்.
- பாட்டு என்பது பத்துப் பாடல்கள் அடங்கிய பத்துப்பாட்டைக்
குறிக்கும்.
முருகு
பொருநாறு பாணிரண்டு முல்லை
பெருகு
வளமதுரைக் காஞ்சி – மருவினிய
கோல
நெடு(நல்)வாடை கோல்குறிஞ்சி பட்டினப்
பாலை
கடாத்தொடும் பத்து.
- இப்பத்துப்பாட்டின் சிற்றெல்லை 103 அடிகள், பேரெல்லை 782
அடிகளாகும்.
- பத்துப்பாட்டின் மிகச்சிறிய நூல் முல்லைப்பாட்டு 103
அடிகளைக் கொண்டுள்ளது.
- பத்துப்பாட்டின் மிகப் பெரிய நூல் மதுரைக்காஞ்சி, 782
அடிகளைக் கொண்டுள்ளது.
- இவற்றுள் ஆற்றுப்படைகளாக வருவன ஐந்து நூல்கள். அவை,
திருமுருகாற்றுப்படை(புலவராற்றுப்படை), பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை,
பெரும்பாணாற்றுப்படை, கூத்தராற்றுப்படை(மலைபடுகடாம்) என்பன.
- ஆற்றுப்படை நூல்கள் அனைத்தும் புறநூல்களாகும்.
- ஏனைய ஐந்து நூல்களும் அகம், புறம் சார்ந்தவைகளாகும்.
- பத்துப்பாட்டில் அகத்திணை நூல்கள் மூன்று. அவை, முல்லைப்
பாட்டு, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை என்பன.
- பத்துப்பாட்டில் புறத்திணை நூல்கள் ஆறு. அவை, ஆற்றுப்படை
நூல்கள் ஐந்து, மதுரைக் காஞ்சி உடன் சேர்த்து ஆறு நூல்களாகும்.
- பத்துப்பாட்டில் அகப்புற நூல் ஒன்று. அது, நெடுநல்வாடை..
1. திருமுருகாற்றுப்படை
- பத்துப்பாட்டின் முதல் நூலாக அமைவது திருமுருகாற்றுப்படை.
- இது பத்துப்பாட்டின் கடவுள் வாழ்த்துப் பாடலாகவும்
அமைகிறது.
- பத்துப்பாட்டில் காலத்தால் பிந்தைய நூல்.
- ஆசிரியப்பாவால் ஆனது.
- இந்நூலை, புலவராற்றுப்படை என்றும் அழைப்பர்.
- இதனை இயற்றியவர் நக்கீரர்.
- இந்நூல் 317 அடிகளைக் கொண்டது.
- இது முருகப் பெருமானைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு
பாடப்பட்டுள்ளது.
- ஆபத்தில் மாட்டிக் கொண்ட ஒரு புலவன் அதிலிருந்து மீண்டு
வருவதற்கான வழிவகைகளை இந்நூல் குறிப்பிடுகிறது.
- ஏனைய ஆற்றுப்படை நூல்கள் பரிசில் பெறச் செல்வோரின்
பெயரால் அமைய, திருமுருகாற்றுப்படை மட்டும் பரிசில் கொடுப்போன் பெயரால்
அமைந்துள்ளது.
2. பொருநராற்றுப்படை
- பத்துப்பாட்டின் இரண்டாவது நூலாக அமைவது
பொருநராற்றுப்படை.
- இதன் ஆசிரியர் முதடத்தாமைக் கண்ணியார்.
- பாட்டுடைத் தலைவன் கரிகால் பெருவளத்தான்.
- இதில் 248 அடிகள் உள்ளன.
- இது ஆசிரியப்பாவால் ஆன நூல்.
- இவ்வாசிரியப்பாவில் வஞ்சியடிகள் இடையிடையே விரவி
வருகின்றன.
- போர்க்களத்தில் பாடுவோன் பொருநன்.
3. சிறுபாணாற்றுப்படை
- பத்துப்பாட்டின் மூன்றாவதாக அமைவது சிறுபாணாற்றுப்படை.
- இதன் ஆசிரியர் இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார்.
- 269 அடிகளைக் கொண்ட இந்நூல் ஆசிரியப்பாவால் ஆனது.
- இதன் பாட்டுடைத் தலைவன் ஓய்மா நாட்டு நல்லிய கோடன்.
- ஓய்மா நாடு என்பது திண்டிவனத்தை ஒட்டிய பகுதிகள்.
- இடைக்கழி நாடு என்பது செங்கற்பட்டு மாவட்டம், மதுராந்தகம்
வட்டத்தில் உள்ள கடற்கரைப் பகுதி.
- உப்பங்கழிக்கும் கடலுக்கும் இடைப்பட்டப்பகுதி
இடைக்கழிநாடு எனப்படும்.
4. பெரும்பாணாற்றுப்படை
- பத்துப்பாட்டின் நான்காவதாக அமைவது பெரும்பாணாற்றுப்படை.
- இதன் ஆசிரியர் கடியலூர் உருத்திரங் கண்ணனார்.
- கண்ணன் என்பது இயற்பெயர், உருத்திரன் என்பது தந்தையார்
பெயர்.
- 500 அடிகளைக் கொண்ட இந்நூல் ஆசிரியப்பாவால்
இயற்றப்பட்டுள்ளது.
- இதன் பாட்டுடைத் தலைவன் தொண்டைமான் இளந்திரையன்.
5. முல்லைப்பாட்டு
- பத்துப்பாட்டின் ஐந்தாவதாக அமைவது முல்லைப்பாட்டு.
- இது அகத்திணை நூல்.
- அகவற்பவால் ஆனநூல்.
- 103 அடிகளைக் கொண்டது.
- இதனைப் பாடியவர் காவிரிப் பூம்பட்டினத்துப்
பொன்வாணிகனார் மகன் நப்பூதனார்.
6. மதுரைக்காஞ்சி
- பத்துப்பாட்டின் ஆறாவதாக அமைவது மதுரைக் காஞ்சி
- இது புறத்திணை நூல்
- 782 அடிகளைக் கொண்டது
- இது ஆசிரியப்பாவால் ஆனநூல்.
- இடையிடையே வஞ்சியடிகள் விரவி வருதலால் இதனை வஞ்சிப்பாட்டு
என்று கூறுவர்.
- இதனை இயற்றியவர் மதுரைக்காஞ்சி எனப் புகழப்படும் மாங்குடி
மருதனார் ஆவார்.
- இதன் பாட்டுடைத் தலைவன் தலையாலங் கானத்து செருவென்ற
பாண்டியன் நெருஞ்செழியன்.
7. நெடுநல்வாடை
- பத்துப்பாட்டின் ஏழாவதாக அமைவது நெடுநல்வாடை.
- இது அகப்புற நூல்.
- 188 அடிகளைக்கொண்டது.
- ஆசிரியப்பாவால் ஆனது.
- இது ஒரு அகத்திணை நூல்.
- இதன் ஆசிரியர் நக்கீரர்.
- பாடுடைத்தலைவன் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டிய
நெடுஞ்செழியன்.
8. குறிஞ்சிப்பாட்டு
- பத்துப்பாட்டின் எட்டாவதாக அமைவது குறிஞ்சிப்பாட்டு.
- இது அகத்திணை நூல்.
- இதற்கு பெருங்குறிஞ்சி என்ற பெயரும் உண்டு.
- இதனை இயற்றியவர் கபிலர்.
- இதில் 261 அடிகள் உள்ளன.
- அகவற்பாவால்
இயற்றப்பட்டுள்ளது.
- இதனை ஆரிய அரசன் பிரகதத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்காகக்
கபிலர் பாடினார் என்ற ஒரு வரலாறும் உண்டு.
- இதில் தமிழ் என்பது அகப்பொருள் என்றும் கூறுவர்.
- இப்பாடல் தோழி செவிலித்தாய்க் கூறுவதாக அமைகிறது.
- 99 வகை பூக்களின் பெயர்களை இந்நூல் குறிப்பிடுகிறது.
- 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் பூ குறிஞ்சி.
9. பட்டினப்பாலை
- பத்துப்பாட்டின் ஒன்பதாவதாக அமைவது பட்டினப்பாலை.
- இது அகத்திணை நூல்.
- 301 அடிகளைக் கொண்டுள்ளது.
- ஆசிரியப்பாவால் ஆனது. எனினும் வஞ்சியடிகள் நிறைய வருதலின்
இதனை வஞ்சி நெடும்பாட்டு என்றும் கூறுவர்.
- இதனைப் பாடியவர் கடியலூர் உருத்திரங் கண்ணனார்.
- பாட்டுடைத் தலைவன் சோழன் கரிகால் பெருவளத்தான்.
10. மலைபடுகடாம்
- பத்துப்பாட்டின் பத்தாவதாக அமைவது மலைபடுகடாம்.
- கடாம் என்பது மதம். மதம் பிடித்த பெருயாணை முழக்கம்.
மதம்பிடித்த யானை பிளிறும் ஓசைபோல் மலையில் ஓசை அமைகிறது என்பதே மலைபடுகடாம்
என்பதன் பொருள்.
- இதற்குக் கூத்தராற்றுப்படை என்ற வேறு பெயரும்
உண்டு.
- இதனைப் பாடியவர் இரணிய முற்றத்துப் பெருங்குன்றூர்ப்
பெருங்கௌசிகனார்.
- இது நன்னனைப் புகழ்ந்து பாடும் நூல்.
- 583 அடிகளைக்கொண்ட நூல்.
- ஆசிரியப்பாவால் ஆனது.
- இசைக்கருவிகளின் பெயர்களைக் கூறும் நூல் இது.
- யாழினைப் புகழ்ந்து இந்நூல் தொடங்குகிறது.
வ. எண்
|
நூல்
|
பாடல் எண்ணிக்கை
|
யாப்பு
|
நூலின் பண்பு
|
ஆசிரியர்
|
பாடுடைத் தலைவன்
|
வேறுபெயர்கள்
|
1
|
திருமுருகாற்றுப்படை
|
317
|
ஆசிரியப்பா
|
ஆற்றுப்படை
|
நக்கீரர்
|
முருகன்
|
புலவாராற்றுப்படை
|
2
|
பொருநராற்றுப்படை
|
248
|
ஆசிரியப்பா
|
ஆற்றுப்படை
|
முடத்தாமக் கண்ணியார்
|
கரிகால் வளவன்
|
|
3
|
சிறுபாணாற்றுப்படை
|
269
|
ஆசிரியப்பா
|
ஆற்றுப்படை
|
நல்லூர் நத்தத்தனார்
|
நல்லிய கோடன்
|
|
4
|
பெரும்பாணாற்றுப்படை
|
500
|
ஆசிரியப்பா
|
ஆற்றுப்படை
|
கடியலூர் உருத்திரங் கண்ணனார்
|
தொண்டைமான் இளந்திரையன்
|
பாணாற்றுப்படை
|
5
|
முல்லைப்பாட்டு
|
103
|
ஆசிரியப்பா
|
அகத்திணை
|
நப்பூதன்
|
இல்லை
|
|
6
|
மதுரைக்காஞ்சி
|
782
|
ஆசிரியப்பா
|
புறத்திணை
|
மாங்குடி மருதனார்
|
தலையாலங் கானத்து செருவென்ற நெடுஞ்செழியன்
|
வஞ்சிப்பாட்டு
|
7
|
நெடுநல்வாடை
|
188
|
ஆசிரியப்பா
|
அகப்புறத் திணை
|
நக்கீரர்
|
தலையாலங் கானத்து செருவென்ற நெடுஞ்செழியன்
|
|
8
|
குறிஞ்சிப்பாட்டு
|
261
|
ஆசிரியப்பா
|
அகத்திணை
|
கபிலர்
|
இல்லை
|
பெருங்குறிஞ்சி
|
9
|
பட்டினப்பாலை
|
301
|
ஆசிரியப்பா
|
அகத்திணை
|
கடியலூர் உருத்திரங் கண்ணனார்
|
இல்லை
|
வஞ்சி நெடும்பாட்டு
|
10
|
மலைபடுகடாம்
|
583
|
ஆசிரியப்பா
|
புறத்திணை
|
பெருங்குன்றூர் பெருங்கௌசிகனார்
|
நன்னன்
|
கூத்தராற்றுப்படை
|