பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்
Ø தமிழ் இலக்கிய வரலாற்றில் சங்க காலத்தை அடுத்து வந்த காலத்தைச் ‘சங்கம் மருவிய காலம்’ அல்லது ‘நீதி நூற் காலம்‘ என்பர்.
Ø சங்கம் மருவிய கால இலக்கியங்களைப் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்,
நீதி நூல்கள், அறநூல்கள் என்று அழைக்கப்படுகின்றன.
Ø ‘கீழ்க்கணக்கு‘ என்பது அடிகள் குறைந்த செய்யுட்களால் ஆகிய நூல்களைக் குறிக்கும்.
Ø அறம், பொருள், இன்பம் என்னும் முப்பொருளையும் கொண்டு ஐந்து அல்லது அதனினும் குறைந்த அடிகளால் ஆன வெண்பாக்களால் இயன்ற நூற்களைக் கீழ்க்கணக்கு என்பர்.
Ø இதன் காலம் கி.பி மூன்றாம் நூற்றாண்டு முதல் ஆறாம் நூற்றாண்டு வரை உள்ள காலமாகும்.
Ø இக்காலத்தில் ஆட்சி செய்தவர்கள் களப்பிரர்கள்.
Ø இக்காலத்தை இருண்ட காலம் என அழைப்பர்.
Ø தமிழ்நாட்டின் புறச்சமயமான சமணமும், பௌத்தமும் மேலோங்கி இருந்த காலம்.
Ø இப்பதினெண் கீழ்க்கணக்கு நூல்களை வச்சரணந்தியின் திராவிட சங்கத்தில் இயற்றப்பட்டவை என்றும் கூறுவர்.
Ø பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் அனைத்தும் வெண்பா யாப்பில் அமைந்துள்ளது.
பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்
நாலடி நான்மணி நானாற்ப தைந்திணைமுப்
பால்கடுகம் கோவை பழமொழி மாமூலம்
இன்னிலைய காஞ்சியோடு ஏலாதி என்பவே
கைந்நிலைய வாங்கீழ்க் கணக்கு
அறநூல்கள் -
11
அகநூல்கள் -
6
புறநூல் - 1
அறநூல்கள் - 11
நாலடியார் - சமணமுனிவர்கள்
நான்மணிக்கடிகை - விளம்பிநாகனார்
இன்னா நாற்பது - கபிலர்
இனியவை நாற்பது - பூதஞ்சேந்தனார்
திரிகடுகம் - நல்லாதனார்
ஆசாரக்கோவை - பெருவாயின்முள்ளியார்
பழமொழி - முன்றுரையரையனார்
சிறுபஞ்சமூலம் - காரியாசன்
ஏலாதி - கணிமேதாவியர்
திருக்குறள் - திருவள்ளுவர்
முதுமொழிக்காஞ்சி - கூடலூர் கிழார்
புறநூல் -1
களவழி நாற்பது - பொய்கையார்
அகநூல்கள் - 6
ஐந்திணை ஐம்பது - மாறன் பொறையனார்
ஐந்திணை எழுபது - மூவாதையார்
திணைமொழி ஐம்பது - கண்ணன் சேந்தனார்
கார் நாற்பது - கண்ணன் கூத்தனார்
திணைமாலை நூற்றைம்பது - கணிமேதாவியார்
ஐந்திணை அறுபது (அ) கைந்நிலை - புல்லங்காடனார்
மருந்துப் பெயரில் அமைந்த நூல்கள்- 3
திரிகடுகம் - நல்லாதனார்
சிறுபஞ்சமூலம் - காரியாசன்
ஏலாதி - கணிமேதாவியர்
ஒழுக்கம் பற்றிக் கூறும் நூல்-1
ஆசாரக்கோவை - பெருவாயின்முள்ளியார்