ஏலாதி
- மருந்தால் பெயர் பெற்ற நூல்
- `ஏலம் + ஆதி’ஏலத்தை முதலாக உடையது என்று
பொருள்.
- ஏலத்தை முதலாகக் கொண்ட ஆறு மருத்துவப் பொருட்கள் உடலுக்கு நன்மை தருவது போல, இந்நூலில் கூறப்படும் ஆறு நீதிக் கருத்துகள் மனத்திற்கு நன்மையைத் தருகிறது என்ற நோக்கில் இப்பெயர் பெற்றுள்ளது.
- இந்நூலிலுள்ள பாடல்கள் ஒவ்வொன்றும் `ஆறு’ நீதிக் கருத்துக்களைக் கூறுகின்றன.
- ஏலம், இலவங்கம், நாககேசரம், சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய ஆறுவகை மருந்து கலவையே "ஏலாதி" ஆகும்.
- பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
- சமண சமயத்தைச் சேர்ந்தவரான கணிமேதாவியார் என்பரால் எழுதப்பட்டது.
- `கணிமேதாவி’ என்ற சொல், இவர் சோதிடத்தில் வல்லவர் என்பதை உணர்த்துகிறது.
- திணைமாலை நூற்றைம்பது என்னும் அகப்பொருள் நூலை இயற்றியவரும் இவரே.
- ஏலாதியில் 80 பாடல்கள் உள்ளன.
- இந்நூல் மகடூஉ முன்னிலை அமைப்பைக் கொண்டது.
- உணவு கொடுத்து ஆதரிப்போர்
பெருவாழ்வு பெறுவர் என்பதை 21 பாடல்களில் கூறுகிறது.
No comments:
Post a Comment