காப்பியம், ஆங்கிலத்தில் EPIC எனப்படுகிறது. இச்சொல் EPOS என்ற கிரேக்கச் சொல்லின் அடிப்படையில் உருவானது. இதற்குச் சொல் அல்லதுபாடல் என்பது பொருள்.
காவியம் என்னும் வட சொல்லின் தமிழ் வடிவமே காப்பியம்.
காவியம் என்பது கவியினால் செய்யப்பட்டது எனப் பொருள் தரும்.
காப்பியம் என்பதைக் காப்பு + இயம் என்றும் பிரித்துப் பொருள் காணலாம்.
காப்பியத்தைத் தொடர்நிலைச் செய்யுள் எனவும் குறிப்பர்.
காவியம், காப்பியம் என்னும் இவ்விரு சொற்களும் சில தமிழ்க் காப்பியப் பெயர்களில் அமைந்திருப்பதைக் காணலாம். சான்றுகள்:
காவியம் என்று பெயர் பெறுபவை
யசோதர காவியம், நாககுமார காவியம், இயேசு காவியம், இராவண காவியம்.
காப்பியம் என்று பெயர் பெறுவன
கண்ணகி புரட்சிக் காப்பியம், கற்புக் காப்பியம்
காப்பியம் என்பது இலக்கிய வடிவங்களில் ஒன்று.
இதனைப் பெருங்காப்பியங்கள் சிறுகாப்பியங்கள் என்று பகுத்துக் கூறுவர்.
அறம்,பொருள், இன்பம், வீடு என்பனவற்றோடு ஒரு ஒப்பிலாத் தலைவனையும் தலைவியையும் கொண்டு இயற்றப்படுவது பெருங்காப்பியமாகும்.
வாய்மொழி இலக்கியம், தன்னுணர்ச்சிப் பாடல்கள், கதைபொதி பாடல்கள் என்று இது விரிந்து வளர்கிறது.
அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கு பொருள்களையும் பாடுவது பெருங்காப்பியம்.
இவற்றுள் சில பொருள்கள் மட்டும் வைத்துப் பாடுவது சிறுகாப்பியம்.
தமிழின் பழைய இலக்கியங்கள் தனிப்பாடற்றிரட்டுக்களாகவே உள்ளன.
மூன்று அடி முதல் 782 அடியுள்ள நீண்ட பாட்டு வரையில் உள்ள தனிப்பாட்டுக்களே சங்க இலக்கியமாக உள்ளன.
தொடக்கத்தில் நாட்டுப் பாடல்களின் ஓசையமைப்பையும் பொருள் வகையையும் ஒட்டி வளர்க்கப்பட்ட தனிப்பாடல்களே தமிழ் இலக்கியத்தின் தோற்றமாகும்.
சங்கப் பாட்டுக்களில் நாட்டியக் கலையில் நன்கு தேர்ந்த விறலியர், கூத்தர், பொருநர் என்போர் பற்றிய குறிப்புக்கள் உள்ளன.
தமிழ்க் காப்பியங்களை ஐம்பெருங்காப்பியங்கள், ஐஞ்சிறுங்காப்பியங்கள் என இரண்டாகப் பகுப்பர்.
'ஐம்பெருங்காப்பியம்' என்னும் தொடரை 14-ம் நூற்றாண்டு மயிலைநாதர் குறிப்பிடுகிறார்.
தணிகையுலா நூல் வழங்கியுள்ளதன் அடிப்படையில் இந்தப் பாகுபாடு தோன்றியது.
காவியம் என்னும் வட சொல்லின் தமிழ் வடிவமே காப்பியம்.
காவியம் என்பது கவியினால் செய்யப்பட்டது எனப் பொருள் தரும்.
காப்பியம் என்பதைக் காப்பு + இயம் என்றும் பிரித்துப் பொருள் காணலாம்.
காப்பியத்தைத் தொடர்நிலைச் செய்யுள் எனவும் குறிப்பர்.
காவியம், காப்பியம் என்னும் இவ்விரு சொற்களும் சில தமிழ்க் காப்பியப் பெயர்களில் அமைந்திருப்பதைக் காணலாம். சான்றுகள்:
காவியம் என்று பெயர் பெறுபவை
யசோதர காவியம், நாககுமார காவியம், இயேசு காவியம், இராவண காவியம்.
காப்பியம் என்று பெயர் பெறுவன
கண்ணகி புரட்சிக் காப்பியம், கற்புக் காப்பியம்
காப்பியம் என்பது இலக்கிய வடிவங்களில் ஒன்று.
இதனைப் பெருங்காப்பியங்கள் சிறுகாப்பியங்கள் என்று பகுத்துக் கூறுவர்.
அறம்,பொருள், இன்பம், வீடு என்பனவற்றோடு ஒரு ஒப்பிலாத் தலைவனையும் தலைவியையும் கொண்டு இயற்றப்படுவது பெருங்காப்பியமாகும்.
வாய்மொழி இலக்கியம், தன்னுணர்ச்சிப் பாடல்கள், கதைபொதி பாடல்கள் என்று இது விரிந்து வளர்கிறது.
அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கு பொருள்களையும் பாடுவது பெருங்காப்பியம்.
இவற்றுள் சில பொருள்கள் மட்டும் வைத்துப் பாடுவது சிறுகாப்பியம்.
தமிழின் பழைய இலக்கியங்கள் தனிப்பாடற்றிரட்டுக்களாகவே உள்ளன.
மூன்று அடி முதல் 782 அடியுள்ள நீண்ட பாட்டு வரையில் உள்ள தனிப்பாட்டுக்களே சங்க இலக்கியமாக உள்ளன.
தொடக்கத்தில் நாட்டுப் பாடல்களின் ஓசையமைப்பையும் பொருள் வகையையும் ஒட்டி வளர்க்கப்பட்ட தனிப்பாடல்களே தமிழ் இலக்கியத்தின் தோற்றமாகும்.
சங்கப் பாட்டுக்களில் நாட்டியக் கலையில் நன்கு தேர்ந்த விறலியர், கூத்தர், பொருநர் என்போர் பற்றிய குறிப்புக்கள் உள்ளன.
தமிழ்க் காப்பியங்களை ஐம்பெருங்காப்பியங்கள், ஐஞ்சிறுங்காப்பியங்கள் என இரண்டாகப் பகுப்பர்.
'ஐம்பெருங்காப்பியம்' என்னும் தொடரை 14-ம் நூற்றாண்டு மயிலைநாதர் குறிப்பிடுகிறார்.
தணிகையுலா நூல் வழங்கியுள்ளதன் அடிப்படையில் இந்தப் பாகுபாடு தோன்றியது.