இன்னா நாற்பது
- இது பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
- கபிலர் என்னும் புலவர் இயற்றியது.
- இவரது சமயம் சைவம்.
- இவர் நான்காம் நூற்றாண்டைச்
சார்ந்தவர்
- இந்நூல் நாற்பது(40) பாடல்களைக் கொண்டுள்ளது.
- இதனோடு கடவுள் வாழ்த்துப் பாடல் ஒன்றும் அமைந்துள்ளது.
- உலகத்தில் செய்யக் கூடாதவை என்னென்ன என்பது பற்றிக் கூறுகிறது.
- துன்பம் கொடுக்கும் செயல்களைத்
தொகுத்துக் கூறுகிறது.
- ஒவ்வொரு பாடலிலும் நான்கு நான்கு கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன.
- ஒவ்வொரு கருத்து முடிவிலும் "இன்னா" என முடிகிறது.
"ஊனைத் தின்று ஊனைப் பெருக்குதல் இன்னா"
"உண்ணாது வைக்கும் பெரும்பொருள் வைப்பு இன்னா"
‘தீமையுடையார் அருகில் இருத்தல் இன்னா’
‘குழவிகள் உற்றபிணி இன்னா’
‘இன்னா பொருள் இல்லார் வண்மை புரிவு’
- மொத்தம் 164 இன்னாச் செயல்கள்
கூறப்பட்டுள்ளன.
- நூலுக்குப் புறம்பான கடவுள் வாழ்த்திலும் கூட 'இன்னா', இனிதே என்னும் சொற்கள் அமைந்துள்ளன.
- ஆசிரியர் தமது கடவுள் வாழ்த்தில் சிவபெருமான், பலராமன், திருமால், முருகன் ஆகியோரைக் குறித்துள்ளார். இதனால் இவர் சமயப் பொது
நோக்கு உடையவர் என எண்ண இடமுண்டு.
No comments:
Post a Comment