கடவுள்
வாழ்த்து
பாலும்
தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும்
கலந்துனக்கு நான் தருவேன் - கோலம்செய்
துங்கக்
கரிமுகத்து தூமணியே நீ எனக்கு
புண்ணியம்ஆம்
பாவம்போல் போனநாள் செய்தஅவை
மண்ணில்
பிறந்தார்க்கு வைத்தபொருள் -எண்ணுங்கால்
ஈதொழிய
வேறில்லை; எச்சமயத்தோர் சொல்லும்
தீதொழிய
நன்மை செயல். 1
சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையின் - மேதினியில்
இட்டார்
பெரியார் இடாதார் இழிகுலத்தார்
பட்டாங்கில்
உள்ள படி. 2
இடும்பைக்(கு) இடும்பை இயலுடம்(பு) இதன்றே
இடும்பொய்யை
மெய்யென்(று) இராதே - இடுங்கடுக
உண்டாயின்
உண்டாகும் ஊழில் பெருவலிநோய்
விண்டாரைக்
கொண்டாடும் வீடு. 3
எண்ணி ஒருகருமம் யார்க்கும்செய் ஒண்ணாது
புண்ணியம்
வந்தெய்து போதல்லால் - கண்ணில்லான்
மாங்காய்
விழவெறிந்த மாத்திரைக்கோல் ஒக்குமே
ஆங்காலம்
ஆகும் அவர்க்கு. 4
வருந்தி
அழைத்தாலும் வாராத வாரா
பொருந்துவன
போமி(ன்) என்றால் போகா
- இருந்தேங்கி
நெஞ்சம்
புண்ணாக நெடுந்தூரம் தாம்நினைந்து
துஞ்சுவதே
மாந்தர் தொழில். 5
உள்ளது
ஒழிய ஒருவர்க்(கு) ஒருவர்சுகம்
கொள்ளக்
கிடையா குவலயத்தில் -வெள்ளக்
கடலோடி
மீண்டும் கரையேறினால் என்
உடலோடு
வாழும் உயிர்க்கு. 6
எல்லாப்படியாலும்
எண்ணினால் இவ்வுடம்பு
பொல்லாப்
புழுமலிநோய் புன்குரம்பை -நல்லார்
அறிந்திருப்பார்
ஆதலினால் ஆம்கமல நீர்போல்
பிறிந்திருப்பார்
பேசார் பிறர்க்கு. 7
ஈட்டும்
பொருள்முயற்சி எண்ணிறந்த ஆயினும்ஊழ்
கூட்டும்
படியன்றிக் கூடாவாம் - தேட்டம்
மரியாதை
காணும் மகிதலத்தீர் கேண்மின்
தரியாது
காணும் தனம். 8
ஆற்றுப்
பெருக்கற் றடிசுடுமந் நாளுமவ்வா(று)
ஊற்றுப்
பெருக்கால் உலகூட்டும் - ஏற்றவர்க்கு
நல்ல குடிபிறந்தார் நல்கூர்ந்தார் ஆனாலும்
இல்லை என மாட்டார் இசைந்து
. 9
ஆண்டாண்டு
தோறும் அழுது புரண்டாலும்
மாண்டார்
வருவரோ மாநிலத்தீர் - வேண்டா!
நமக்கும்
அதுவழியே! நாம்போம் அளவும்
எமக்கென்?
என்(று) இட்டு, உண்டு,
இரும் 10
ஒருநாள்
உணவை ஒழியென்றால் ஒழியாய்
இருநாளுக்கு
ஏலென்றால் ஏலாய் - ஒருநாளும்
என்நோ(வு) அறியாய் இடும்பைகூர்
என்வயிறே
உன்னோடு வாழ்தல்
அறிது. 11
ஆற்றங்
கரையின் மரமும் அரசறிய
வீற்றிருந்த
வாழ்வும் விழும் அன்றே - ஏற்றம்
உழுதுண்டு
வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
பழுதுண்டு
வேறோர் பணிக்கு, 12
ஆவாரை யாரே அழிப்பர் அதுவன்றிச்
சாவாரை
யாரே தவிர்ப்பவர்- ஓவாமல்
ஐயம் புகுவாரை யாரே விலக்குவார்
மெய்அம்
புவியதன் மேல். 13
பிச்சைக்கு
மூத்த குடிவாழ்க்கை பேசுங்கால்
இச்சைபல
சொல்லி இடித்துண்கை - சிச்சீ
வயிறு வளர்க்கைக்கு மானம் அழியாது
உயிர்விடுகை
சால உறும். 14
சிவாய நம என்று சிந்தித்
திருப்போர்க்கு
அபாயம்
ஒருநாளும் இல்லை - உபாயம்
இதுவே(;)
மதியாகும் அல்லாத எல்லாம்
விதியே
மதியாய் விடும். 15
தண்ணீர்
நிலநலத்தால் தக்கோர் குணம்கொடையால்
கண்ணீர்மை
மாறாக் கருணையால் - பெண்ணீர்மை
கற்பழியா
ஆற்றல் கடல்சூழ்ந்த வையகத்துள்
அற்புதமாம்
என்றே அறி. 16
செய்தீ
வினையிருக்கத் தெய்வத்தை நொந்தக்கால்
எய்த வருமோ இருநிதியம்?- வையத்து
"அறும்-பாவம்!" என்ன அறிந்து அன்றிடார்க்கு
இன்று
வெறும்பானை
பொங்குமோ மேல்? 17
பெற்றார்
பிறந்தார் பெருநாட்டார் பேருலகில்
உற்றார்
உகந்தார் எனவேண்டார் - மற்றோர்
இரணம் கொடுத்தால் இடுவர்(;) இடாரே
சரணம் கொடுத்தாலும் தாம். 18
சேவித்தும்
சென்றிரந்தும் தெண்ணீர்க் கடல்கடந்தும்
பாவித்தும்
பாராண்டும் பாட்டிசைத்தும் - போவிப்பம்
பாழின்
உடம்பை வயிற்றின் கொடுமையால்
நாழி அரிசிக்கே நாம். 19
அம்மி துணையாக ஆறிழிந்த வாறொக்கும்
கொம்மை
முலைபகர்வார் கொண்டாட்டம் -இம்மை
மறுமைக்கும்
நன்றன்று மாநிதியம் போக்கி
வெறுமைக்கு
வித்தாய் விடும். 20
நீரும்
நிழலும் நிலம்பொதியும் நெற்கட்டும்
பேரும்
புகழும் பெருவாழ்வும் - ஊரும்
வருந்திருவும்
வாழ்நாளும் வஞ்சமில்லார்க் கென்றும்
தரும்சிவந்த
தாமரையாள் தான். 21
பாடுபட்டுத்
தேடிப் பணத்தைப் புதைத்துவைத்துக்
கேடுகெட்ட
மானிடரே கேளுங்கள் - கூடுவிட்டுங்(கு)
ஆவிதான்
போயினபின் யாரே அனுபவிப்பார்
பாவிகாள்
அந்தப் பணம். 22
வேதாளம்
சேருமே வெள்ளெருக்குப் பூக்குமே
பாதாள மூலி படருமே - மூதேவி
சென்றிருந்து
வாழ்வளே சேடன் குடிபுகுமே
மன்றோரம்
சொன்னார் மனை. 23
நீறில்லா
நெற்றிபாழ்(;) நெய்யில்லா உண்டிபாழ்
ஆறில்லா
ஊருக் (கு) அழகுபாழ் - மாறில்
உடன்பிறப்
பில்லா உடம்புபாழ் (;) பாழே
மடக்கொடி
இல்லா மனை. 24
ஆன முதலில் அதிகம் செலவானால்
மானம் அழிந்து மதிகெட்டுப் - போனதிசை
எல்லார்க்கும்
கள்ளனாய் ஏழ்பிறப்பும் தீயனாய்
நல்லார்க்கும்
பொல்லனாம் நாடு. 25
மானம் குலம் கல்வி வண்மை
அறிவுடைமை
தானம் தவர்உயர்ச்சி தாளாண்மை - தேனின்
கசிவந்த
சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும்
பசிவந்திடப்
பறந்து போம். 26
ஒன்றை நினைக்கின் அதுஒழிந்திட் டொன்றாகும்
அன்றி அதுவரினும் வந்தெய்தும் - ஒன்றை
நினையாத
முன்வந்து நிற்பினும் நிற்கும்
எனையாளும்
ஈசன் செயல். 27
உண்பது
நாழி உடுப்பது நான்குமுழம்
எண்பது
கோடி நினைந்து எண்ணுவன - கண்புதைந்த
மாந்தர்
குடிவாழ்க்கை மண்ணின் கலம்போலச்
சாந்துணையும்
சஞ்சலமே தான். 28
மரம்பழுத்தால்
வௌவாலை வாவென்று கூவி
இரந்தழைப்பார்
யாவருமங் கில்லை - சுரந்தமுதம்
கற்றா தரல்போல் கரவாது அளிப்பரேல்
உற்றார்
உலகத் தவர். 29
தாம்தாம்முன்
செய்தவினை தாமே அனுபவிப்பார்
பூந்தா
மரை யோன் பொறிவழியே - வேந்தே
ஒறுத்தாரை
என்செயலாம் ஊரெல்லாம் ஒன்றா
வெறுத்தாலும்
போமோ விதி . 30
இழுக்குடைய
பாட்டிற்(கு) இசைநன்று(;) சாலும்
ஒழுக்கம்
உயர்குலத்தின் நன்று - வழுக்குடைய
வீரத்தின்
நன்று விடாநோய்(;) பழிக்கஞ்சாத்
தாரத்தின்
நன்று தனி. 31
ஆறிடும்
மேடும் மடுவும்போ லாம்செல்வம்
மாறிடும்
ஏறிடும் மாநிலத்தீர் - சோறிடும்
தண்ணீரும்
வாரும் தருமமே சார்பாக
உண்ணீர்மை
வீறும் உயர்ந்து. 32
வெட்டெனவை
மெத்தனவை வெல்லாவாம்(;) வேழத்தில்
பட்டுருவும்
கோல்பஞ்சில் பாயாது - நெட்டிருப்புப்
பாரைக்கு
நெக்குவிடாப் பாறை பசுமரத்தின்
வேருக்கு நெக்கு
விடும். 33
கல்லானே
ஆனாலும் கைப்பொருள்ஒன் றுண்டாயின்
எல்லாரும்
சென்றங் கெதிர்கொள்வர் - இல்லானை
இல்லாளும்
வேண்டாள்(;) மற் றீன்றெடுத்த தாய்வேண்டாள்
செல்லா(து) அவன்வாயிற் சொல்.
34
பூவாதே
காய்க்கும் மரமுள மக்களுளும்
ஏவாதே நின்றுணர்வார் தாமுளரே - தூவா
விரைத்தாலும்
நன்றாகா வித்தெனவே பேதைக்கு
உரைத்தாலும்
தோன்றா(து) உணர்வு. 35
நண்டுசிப்பி
வேய்கதலி நாசமுறுங் காலத்தில்
கொண்ட கருவளிக்கும் கொள்கைபோல் - ஒண்தொடீ
போதம் தனம்கல்வி பொன்றவரும் காலமயல்
மாதர்மேல்
வைப்பார் மனம். 36
வினைப்பயனை
வெல்வதற்கு வேதம் முதலாம்
அனைத்தாய
நூலகத்தும் இல்லை - நினைப்பதெனக்
கண்ணுறுவ
தல்லால் கவலைப் படேல் நெஞ்சே
விண்ணுறுவார்க்
கில்லை விதி. 37
நன்றென்றும்
தீதென்றும் நானென்றும் தானென்றும்
அன்றென்றும்
ஆமென்றும் ஆகாதே - நின்றநிலை
தானதாம்
தத்துவமாம் சம்பறுத்தார் யாக்கைக்குப்
போனவா தேடும் பொருள். 38
முப்பதாம்
ஆண்டளவில் மூன்றற்று ஒருபொருளைத்
தப்பாமல்
தன்னுள் பெறானாயின் - செப்பும்
கலையளவே
ஆகுமாம் காரிகையார் தங்கள்
முலையளவே
ஆகுமாம் மூப்பு. 39
தேவர் குறளும் திருநான் மறைமுடிவும்
மூவர் தமிழும் முனிமொழியும் - கோவை
திருவா
சகமும் திருமூலர் சொல்லும்
ஒருவா சகமென் றுணர். 40
No comments:
Post a Comment