மூதுரை
கடவுள்
வாழ்த்து
வாக்குண்டாம்
நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம்
மேனி நுடங்காது -பூக்கொண்டு
துப்பார்
திருமேனி தும்பிக்கை யான்பாதம்
தப்பாமல்
சார்வார் தமக்கு.
நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால் அந்நன்றி
என்று தருங்கோல் என வேண்டா - நின்று
தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத்
தலையாலே
தான்தருத லால். 1
நல்லார்
ஒருவர்க்குச் செய்த உபகாரம்
கல்மேல்
எழுத்துப்போல் காணுமே - அல்லாத
ஈரமிலா
நெஞ்சத்தார்க் கீந்த உபகாரம்
நீர் மேல் எழுத்துக்கு நேர்.
2
இன்னா இளமை வறுமைவந் தெய்தியக்கால்
இன்னா அளவில் இனியவும்-இன்னாத
நாளல்லா
நாள்பூந்த நன்மலரும் போலுமே
ஆளில்லா
மங்கைக் கழகு. 3
அட்டாலும்
பால் சுவையில் குன்றா(து) அளவளவாய்
நட்டாலும்
நண்பல்லார் நண்பல்லர்
கெட்டாலும்
மேன்மக்கள் மேன்மக்களே; சங்கு
சுட்டாலும்
வெண்மை தரும். 4
அடுத்து
முயன்றாலும் ஆகும்நாள் அன்றி
எடுத்த
கருமங்கள் ஆகா - தொடுத்த
உருவத்தால்
நீண்ட உயர்மரங்கள் எல்லாம்
பருவத்தால்
அன்றிப் பழா . 5
உற்ற இடத்தில் உயிர்வழங்கும் தன்மையோர்
பற்றலரைக்
கண்டால் பணிவரோ - கற்றூண்
பிளந்திறுவ
தல்லால் பெரும்பாரம் தாங்கின்
தளர்ந்து
வளையுமோ தான். 6
நீர் அளவே ஆகுமாம் நீர்
ஆம்பல் தான்கற்ற
நூல் அளவே ஆகுமாம் நுண்
அறிவு - மேலைத்
தவத்து
அளவே ஆகுமாம் தான்பெற்ற செல்வம்
குலத்து
அளவே ஆகுமாம் குணம் . 7
நல்லாரைக்
காண்பதுவும் நன்றே நலமிக்க
நல்லார்சொல்
கேட்பதுவும் நன்றே - நல்லார்
குணங்கள்
உரைப்பதுவும் நன்றே; அவரோடு
இணங்கி
இருப்பதுவும் நன்று. 8
தீயாரைக்
காண்பதுவும் தீதே திருவற்ற
தீயார்சொல்
கேட்பதுவும் தீதே - தீயார்
குணங்கள்
உரைப்பதுவும் தீதே; அவரோடு
இணங்கி
இருப்பதுவும் தீது. 9
நெல்லுக்
கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப்
புல்லுக்கும்
ஆங்கே பொசியுமாம் - தொல் உலகில்
நல்லார்
ஒருவர் உளரேல் அவர்பொருட்டு
எல்லார்க்கும்
பெய்யும் மழை. 10
பண்டு முளைப்பது அரிசியே ஆனாலும்
விண்டு
உமிபோனால் முளையாதாம் - கொண்டபேர்
ஆற்றல்
உடையார்க்(கு) ஆகாது அளவு
இன்றி
ஏற்ற கருமம் செயல். 11
மடல் பெரிது தாழை (;) மகிழ்
இனிது கந்தம்
உடல்சிறியர்
என்று இருக்க வேண்டா - கடல்பெரிது
மண்ணீரும்
ஆகா(து) அதனருகே சிற்றூறல்
உண்ணீரும்
ஆகி விடும். 12
கவையாகிக்
கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும்
அவையல்ல
நல்ல மரங்கள் - அவைநடுவே
நீட்டோலை
வாசியா நின்றான் குறிப்பறிய
மாட்டாதவன்
நன்மரம். 13
கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி
தானும்
அதுவாகப் பாவித்துத் - தானும் தன்
பொல்லாச்
சிறகைவிரித்(து) ஆடினால் போலுமே
கல்லாதான்
கற்ற கவி. 14
வேங்கை
வரிப்புலிநோய் தீர்த்த விடகாரி
ஆங்கதனுக்(கு) ஆகாரம் ஆனால்போல்
- பாங்கறியாப்
புல்லறி
வாளர்க்குச் செய்த உபகாரம்
கல்லின்மேல்
இட்ட கலம். 15
அடக்கம்
உடையார் அறிவிலர் என்றெண்ணிக்
கடக்கக்
கருதவும் வேண்டா - மடைத் தலையில்
ஓடுமீன்
ஓட உறுமீன் வருமளவும்
வாடி இருக்குமாம் கொக்கு. 16
அற்ற குளத்தில் அறுநீர்ப் பறவைபோல்
உற்றுழித்
தீர்வர் உறவல்லர் -அக்குளத்தில்
கொட்டியும்
ஆம்பலும் நெய்தலும் போலவே
ஒட்டி உறுவார் உறவு. 17
சீரியர்
கெட்டாலும் சீரியரே; சீரியர் மற்(று)
அல்லாதார்
கெட்டால் அங் கென்னாகும்? - சீரிய
பொன்னின்
குடம்உடைந்தால் பொன்னாகும் என்னாகும்
மண்ணின்
குடம் உடைந்தக் கால். 18
ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல்நீர்
நாழி முகவாது நால்நாழி - தோழி
நிதியும்
கணவனும் நேர்படினும் தத்தம்
விதியின்
பயனே பயன். 19
உடன்பிறந்தார்
சுற்றத்தார் என்றிருக்க வேண்டா
உடன்பிறந்தே
கொல்லும் வியாதி - உடன் பிறவா
மாமலையில்
உள்ள மருந்தே பிணிதீர்க்கும்
அம்மருந்து
போல்வாரும் உண்டு. 20
இல்லாள்
அகத்திருக்க இல்லாதது ஒன்றில்லை
இல்லாளும்
இல்லாளே ஆமாயின் - இல்லாள்
வலிகிடந்த
மாற்றம் உரைக்குமேல் அவ்வில்
புலிகிடந்த
தூறாய் விடும். 21
எழுதியவா
றேகாண இரங்கு மடநெஞ்சே
கருதியவா
றாமே கருமம் - கருதிப்போய்க்
கற்பகத்தைச்
சேர்ந்தார்க்குக் காஞ்சிரங்காய் ஈந்ததேல்
முற்பவத்தில்
செய்த வினை. 22
கற்பிளவோ(டு) ஒப்பர் கயவர்
கடுஞ்சினத்துப்
பொற்பிளவோ(டு) ஒப்பாரும் போல்வாரே
- விற்பிடித்து
நீர்கிழிய
எய்த வடுப்போல மாறுமே
சீர்ஒழுகு
சான்றோர் சினம். 23
நற்றாமரைக்
கயத்தில் நல் அன்னம் சேர்தாற்போல்
கற்றாரைக்
கற்றாறே காமுறுவர் - கற்பிலா
மூர்க்கரை
மூர்க்கரே முகப்பர் முதுகாட்டில்
காக்கை
உகக்கும் பிணம். 24
நஞ்சுடைமை
தானறிந்து நாகம் கரந்துறையும்
அஞ்சாப்
புறங்கிடக்கும் நீர்ப்பாம்பு - நெஞ்சில்
கரவுடையார்
தம்மைக் கரப்பர் கரவார்
கரவிலா
நெஞ்சத் தவர். 25
மன்னனும்
மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்
மன்னனில்
கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன்தேசம்
அல்லால் சிறப்பில்லை கற்றோற்குச்
சென்றஇடம்
எல்லாம் சிறப்பு. 26
கல்லாத
மாந்தர்க்குக் கற்றுணர்ந்தார் சொல்கூற்றம்
அல்லாத
மாந்தர்க்(கு) அறம்கூற்றம் - மெல்லிய
வாழைக்குத்
தான்ஈன்ற காய்கூற்றம் கூற்றமே
இல்லிற்(கு) இசைந்து ஒழுகாப்
பெண். 27
சந்தன மென்குறடு தான்தேய்ந்த காலத்தும்
கந்தம்
குறைபடா (து;) ஆதலால் - தம்தம்
தனம்சிறியர்
ஆயினும் தார்வேந்தர் கேட்டால்
மனம்சிறியர்
ஆவரோ மற்று. 28
மருவினிய
சுற்றமும் வான்பொருளும் நல்ல
உருவும்
உயர்குலமும் எல்லாம் -திருமடந்தை
ஆகும்போ(து) அவளோடும் ஆகும்;
அவள்பிரிந்து
போம்போ(து) அவளோடு (ம்)
போம். 29
சாந்தனையும்
தீயனவே செய்திடினும் தாம்அவரை
ஆந்தனையும்
காப்பர் அறிவுடையோர் - மாந்தர்
குறைக்கும்
தனையும் குளிர்நிழலைத் தந்து
மறைக்குமாம்
கண்டீர் மரம். 30
No comments:
Post a Comment