இயற்கை வைத்தியக் குறிப்புகள்
நோய் வந்துவிட்டாலே உடனே மருத்துவரிடம் ஓடுவதை
விட, வீட்டிலுள்ள பொருள்களைக் கொண்டே எளிதாக குணப்படுத்தலாம்.
நெஞ்சு
சளி
தேங்காய்
எண்ணெயில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆற
வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.
தலைவலி
அய்ந்தாறு
துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு
சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில்
பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.
தொண்டை
கரகரப்பு
சுக்கு,
வால் மிளகு, திப்பிலி, ஏலரிசி
ஆகியவற்றை வறுத்து பொடி செய்து
தேனில் கலந்து சாப்பிட தொண்டை
கரகரப்பு குணமாகும்.
நெல்லிக்காய்
இடித்து சாறு பிழிந்து, தேன்
சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.
அஜீரணம்
ஒரு குவளை தண்ணீரில் கறிவேப்பிலை,
இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க
வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.
அல்லது
கறிவேப்பிலை,சுக்கு,சீரகம்,ஒமம்
சேர்த்து துவையல் அரைத்து சாப்பிட்டால்
அஜீரணம் சரியாகும். அல்லது வெற்றிலை, 4 மிளகு
இவற்றை மென்று தின்றால் அஜீரணக்கோளாறு
சரியாகும்.
சீரகத்தை
நீரிலிட்டு கொதிக்க வைத்து, அந்தச்
சீரக நீரைக் குடித்து வர
நன்கு ஜீரணமாவதோடு,உடல் குளிர்ச்சி யடையும்.அல்லது ஒரு தேக்கரண்டி
இஞ்சிச் சாறுடன்,சிறிது தேன்
கலந்து பருகினால் ஜீரணசக்தி அதிகரிக்கும்.
வாயுத்
தொல்லை
வேப்பம்
பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்
கொள்வதினால் வாயுத் தொல்லை நீங்கும்.
ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.
வெந்தயத்தை
நெய்யில் வறுத்து பொடி செய்து
மோரில் கலந்து குடிக்க வயிற்று
வலி நீங்கும்.
சரும
நோய்
கமலா, ஆரஞ்சு தோலை வெயிலில்
காயவைத்து பொடி செய்து தினமும்
சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து
குளித்து வர சரும நோய்
குணமாகும்.
மூக்கடைப்பு
ஒரு துண்டு சுக்கை தோல்
நீக்கி அரை லிட்டர் நீரில்
போட்டு சுண்டக் காய்ச்சி, பால்,
சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு
வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.
கண்
எரிச்சல், உடல் சூடு
வெந்தயத்தை
மட்டும் ஊற வைத்து நன்கு
அரைத்து தலையின் முடி வேர்க்
கால்களில் தடவி வைத்து நன்கு
ஊறியபின் தலைமுடியை அலசினால் முடி நன்கு வளருவதுடன்
கண் எரிச்சல், உடல் சூடு தணியும்.
வயிற்றுக்
கடுப்பு
வயிற்றுக்
கடுப்பு ஏற்பட்டால் புழுங்கல் அரிசி வடித்த தண்ணீரில்
சிறிதளவு உப்பையும், வெண்ணெயையும் கலந்து குடித்துவிடுங்கள். சிறிது
நேரத்திலேயே குணம் தெரியும்.
பல்
கூச்சம்
புதினா
விதையை வாயில் போட்டு மென்று
கொண்டிருந்தால் பல்லில் ஏற்படும் கூச்சம்
மறையும். அல்லது புதினா இலையை
நிழலில் காய வைத்து தூள்
உப்பு சேர்த்து பல் துலக்கினால் ஒரிரு
நாளில் குணமாகும்.
வாய்ப்
புண்
வாய்ப்
புண்ணுக்கு கொப்பரைத் தேங்காயை கசகசாவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் குணமாகும். அல்லது கடுக்காயை வாயில்
ஒதுக்கி வைத்தால் வாய்ப்புண் ஆறும்.
தலைவலி
பச்சை கொத்துமல்லித் தழைகளை மிக்சியில் அரைத்து
தினமும் காலையில் எழுந்தவுடன் குடித்துவர தலைவலி நீங்கும்.
வசம்பை
எடுத்துச் சுட்டுக் கரியாக்கி அதனுடன் நல்லெண்ணெய், தேங்காய்
எண்ணெய், விளக்கெண்ணெய் ஆகிய மூன்றையும் கலந்து
அடிவயிற்றில் பூசினால் வயிற்றுப் பொருமல் நீங்கும்.
செரிமானக்
கோளாறு
ஒரு கப் சாதம் வடித்த
நீரில், கால் ஸ்பூன் மஞ்சள்
பொடியைக் கலந்து குடிக்க வயிற்று
உப்புசம், செரிமான கோளாறு சரியாகும்.
அல்லது சிறிது சுக்குடன் கருப்பட்டி,4
மிளகு சேர்த்து நன்கு பொடித்து இரண்டு
வேளை சாப்பிட்டால் செரிமானக் கோளாறு குணமாகி பசி
ஏற்படும்.
ஒமம், கருப்பட்டி இட்டு கசாயம் செய்து
பருகினால் செரிமானக்கோளாறு சரியாகும்.
இடுப்புவலி
சாதம் வடித்த கஞ்சியை எடுத்து
ஆறவைத்து ஒரு ஸ்பூன் நெய்யில்
கொஞ்சம் சீரகம் கலந்து குடித்தால்
இடுப்புவலி நீங்கும்.
வியர்வை
நாற்றம்
படிகாரத்தை
குளிக்கும் நீரில் கலந்து குளித்தாலும்
வியர்வை நாற்றம் மட்டுப்படும்.
உடம்புவலி
சாம்பிராணி,
மஞ்சள், சீனி போட்டு கஷாயமாக்கி
பாலும், வெல்லமும் சேர்த்து பருகினால் உடம்புவலி தீரும்.
ஆறாத
புண்
விரலி மஞ்சளை சுட்டு பொடி
செய்து தேங்காய் எண்ணெயில் குழப்பி காலையிலும், இரவிலும்
ஆறாத புண்களுக்கு மேல் போட்டால் சீக்கிரம்
குணமாகிவிடும்.
மலச்சிக்கல்
தினமும்
குடிநீரைக் காய்ச்சும் போது ஒரு கைப்பிடி
சுக்கைத் தட்டிப் போடலாம். தேவைப்பட்டால்
குடிநீரை வடிகட்டிக் கொள்ளலாம். மருத்துவ குணங்களைக் கொண்ட இப்பொருள், ஜீரணத்துக்கு
உதவும், வாயுவை அகற்றும், அல்லது
இரவில் இரண்டு வாழைப்பழம் சாப்பிடலாம்.
No comments:
Post a Comment