Saturday, July 16, 2016

தற்குறிப்பேற்ற அணி

14. தற்குறிப்பேற்ற அணி

தற்குறிப்பேற்ற அணி என்பது இயல்பாக நடக்கும் ஒரு நிகழ்வின் மீது கவிஞர் தன் குறிப்பை ஏற்றுவதாகும்.

எடுத்துக்காட்டுகள்
.கா.1:
     போருழந் தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி
     வாரல் என்பனபோல் மறித்துக் கைகாட்ட - சிலப்பதிகாரம்

விளக்கம்

கோவலனும் கண்ணகியும் மதுரை மாநகரத்திற்குள் நுழைய முற்படும்போது இயல்பாகக் காற்றிலாடும் தோரண வாயிற் கொடிகளைக் கவிஞர் தம் கற்பனையினால் கோவலன் மதுரையில் கொல்லப்படுவான் என்று முன்னமே அறிந்து வர வேண்டாம் என அக்கொடிகள் எச்சரிப்பதாகக் குறிப்பேற்றிக் கூறுவார்.
.கா.2:
     தையல் துயர்க்குத் தறியா தம் சிறகால்
     கையால் வயிறலைத்து காரிருள் வெய்யோனை
     வாவு பரித் தேரேறி வாவென்றழைப்பது போல்
     கூவினவே கோழிக் குலம். - நளவெண்பா

விளக்கம்:

நளன், தமயந்தியை நீங்கி, காட்டில் விட்டுச் சென்றான். அதிகாலையும் புலர, கோழிகளும் இயல்பாக கூவுகின்றன. இதைக் கண்ட புகழேந்தி, தமயந்தியின் தாங்கொணாத் துயர் கண்டே, கோழிகள் சூரியனை விரைவாக வரக் கதறுவதாக கூறுகிறார்.
.கா.3:
     காரிருளில் கானகத்தே காதலியை கைவிட்ட
     பாதகனை பார்க்கப் படாதேன்றோ - நாதம்
     அழிக்கின்ற ஆழிவாய் ஆங்கலவன் ஓடி
     ஒழிக்கின்ற தென்னோ உரை. – நளவெண்பா
விளக்கம்


நளன் கடலோரமாகச் செல்கின்றான். நண்டுகள்("அலவன்") தம் வளையில் இருந்து வெளிக்கிட்டு கடல் நாடிச் செல்கின்றன. இதை கண்ட புலவர், மனைவியைக் காட்டில் விட்டுச் சென்ற பாதகனை பார்க்கக் கூடாது என்றே நண்டுகள் வெளியேறிச் செல்கின்றன என்கிறார்.

Popular Feed

Recent Story

Featured News