16. தன்மையணி
(தன்மை நவிற்சி அணி,இயல்பு நவிற்சி அணி)
தன்மையணி
அல்லது தன்மை நவிற்சி அணி அல்லது இயல்பு நவிற்சி அணி என்பது எவ்வகைப் பொருளையும் அல்லது எச்செயலையும் உண்மையான முறையில் உள்ளது உள்ளபடி கூறுவதாகும்.
எடுத்துக்காட்டு
•
உள்ளம் குளிர்ப்ப - நெஞ்சம் குளிர
•
ரோமம் சிலிர்க்க - ரோமம் சிலிர்க்க
•
உரை தள்ள - வார்த்தை வராமல் தடுமாற
•
விழிநீர் அரும்ப - விழிநீர் சிந்த
•
தன்னையே மறந்து நின்றாள் - தன்னை மறந்து நின்றாள்
இங்கு எந்த உவமானமோ, அன்றி உவமேயமோ, அல்லது மிகைப்படுத்தலோ இல்லாததைகக் காண முடிகிறது.
தன்மை நவிற்சி அணியின் தன்மைகள்
•
உள்ளதை உள்ளபடி இயல்பாகக் கூறும்
•
மிகைப்படுத்தல் இருக்காது
•
உதாரணம் இருக்காது
•
உருவகப் படுத்தல் இருக்காது
•
சொல்வதில் அணிக்கேயுரிய அழகு காணப்படும்
எ.கா.1
இருந்து முகந் திருத்தி ஈரோடு பேன் வாங்கி
விருந்து வந்ததென்று விளம்ப – வருந்தி
ஆடினாள் பாடினாள் ஆடிப் பழமுறத்தால்
சாடினாள் ஓடோடத் தான்
இக்கவிதை வரிகளில் உருவக அணியோ அன்றி உவமை அணியோ இல்லாததைக் காண முடிகிறது.
எ.கா.2
மெய்யில் பொடியும் - உடம்பு முழுக்கத் தூசியும்
விரித்த கருங்குழலும் - விரித்த தலைமயிரும்
கையில் தனிச் சிலம்பும் - கையிலே தனிச்சிலம்பும்
கண்ணீரும் - அழுகையும்
கண்ணகியின் கோலத்தை விளக்கும் கவிதையில் உள்ள இந்த வரிகளில் ஒவ்வொன்றும் இயல்பாகவும், மிகைப்படுத்தல் இன்றியும் அதே நேரம் அழகு குன்றாமலும் இருப்பதைக் காணமுடிகிறது.
எ.கா.3
'உள்ளம் குளிர உரோமம் சிலிர்த்துரையும்
தள்ளவிழி நீரரும்பத் தன்மறந்தாள் – புள்ளலைக்கும்
தேந்தா மரைவயல்சூழ் தில்லைத் திருநடஞ்செய்
பூந்தா மரைதொழுத பொன்'