Monday, February 20, 2017

TET - ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவியல் வினாக்கள்

TET - ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவியல் வினாக்கள் 

vகாந்த விசைக்கோடுகளின் பண்புகள 
Øகாந்த விசைக்கோடுகள் வட முனையில் தொடங்கி தென் முனையில் முடிவடைகின்றன.
Øகாந்த விசைக்கோடுகள் ஒன்றையொன்று வெட்டிக் கொள்வதில்லை.
Øகாந்த விசைக்கோடுகள் மற்ற பகுதியைக் காட்டிலும் முனைகளின் அருகில் அதிக செறிவுடன் இருக்கும்.
Øகாந்த விசைக்கோடுகள் மூடிய வளைகோடுகள் ஆகும்.
Øஒரே சீரான காந்தப் புலத்தில் காந்த விசைக்கோடுகள் ஒன்றுக்கொன்று இணையாக இருக்கும்.

Øஇரும்பின் கியூரி வெப்பநிலை 770 டிகிரி சென்டிகிரேட்.
Øகாந்தத்தைச் சுற்றி அமைந்திருப்பது காந்தப்புலம்.
Øஇரும்பு ஒரு மென்காந்தப் பொருள்.
Øகாந்தக் கேடயமாகப் பயன்படும் பொருள் தேனிரும்பு.
Øகாந்த ஒதுக்கத்தை அளக்கப் பயன்படும் கருவி கியூ காந்தமானி.
Øகாந்தக் கேடயத்திற்கு புவிக் காந்தப் புலம் கிடையாது.
vதற்காலிக காந்தம் - இரும்பு.
Øகாந்தமாக்கப்படக் கூடிய பொருள் - நிக்கல்.
Øகாந்தப் புலச் செறிவின் அலகு ஆம்பியர்/மீட்டர்
Øகாந்த உட்புகு திறன் அலகு ஹென்றி/மீட்டர் ஆகும்.
Øஒரு சட்டக் காந்தத்தினை தடையின்றி தொங்கவிடும்போது அதன் முனை, புவியின் வடக்கு தெற்கு திசையை நோக்கி நிற்கும்.
vமின்விசைக் கோடுகளின் பண்புகள்
Øமின்விசைக் கோடுகள் நேர் மின்னூட்டத்தில் துவங்கி எதிர் மின்னூட்டத்தில் முடிவடையும்.
Øமின்விசைக்கோட்டுக்கு ஒரு புள்ளியில் வரையப்படும் தொடுகோடு அப்புள்ளியில் மின்புலத்தின் திசையைக் குறிக்கும்.இக்கோடுகள் ஒருபோதும் ஒன்றையொன்று வெட்டிக்கொள்வதில்லை.
Øகடத்தியின் பரப்புக்கு விசைக்கோடு எப்போதும் செங்குத்தாக இருக்கும்.
Øமின்னழுத்தத்தின் அலகு வோல்ட் ஆகும். சாதாரணமாக நாம் மின்னழுத்தத்தை வோல்டேஜ் என்று குறிப்பிடுகின்றோம்.
Øமின்னோட்டத்தின் அலகு ஆம்பியர்.
Øஒரு கூலும் மின்னூட்டம் கடத்தி ஒன்றின் வழியே ஒரு வினாடியில் பாய்ந்தால் மின்னோட்டம் ஒரு ஆம்பியர் எனப்படும்.
Øமாறா வெப்பநிலையில் கடத்தி ஒன்றின் வழியே பாயும் மின்னோட்டம் அதன் முனைகளுக்கு இடையேயுள்ள மின்னழுத்த வேறுபாட்டுக்கு நேர்த்தகவில் இருக்கும்.
Øமின்திறனின் அலகு வாட் ஆகும்.
vமின் அதிர்ச்சி:
Øஉலர்ந்த தோலுக்கு உயர் மின்தடை இருக்கும். அப்போது பாயும் மின்னோட்டம் குறைவாகும். மின்னதிர்ச்சி அங்கு மென்மையாக இருக்கும். ஈரத்தோலுக்கு மின்தடை மிகக் குறைவு.
Øமின்னோட்டம் மிக அதிகமானால் சுவாச சிக்கல்கள் ஏற்பட்டு இதயம் பாதிக்கப்படக்கூடும்.
Øமின்னோட்டமே மனிதனைக் கொல்லும்; உயர்ந்த மின்னழுத்தம் கொல்லுவதில்லை.
Øஎபொனைட் தண்டை கம்பளியால் தேய்ப்பதால் உண்டாகும் மின்சாரம் எதிர்மின்னூட்டம்.
Øபொதுவாக உலோகங்கள் ஓர் நற்கடத்தியாகும்.
Øகூரிய முனையில் அதிக மின்னூட்டம் இருக்கும்.
Øஉலோகங்களின் மின் கடத்தலுக்குக் காரணம் கட்டுறா எலெக்ட்ரான்கள்.
Øகடத்திகளின் கூரான முனைளிலிருந்து மின்னூட்டம் மிக விரைவாக வெளியேறுவதை பெஞ்சமின் பிராங்க்லின் கண்டுபிடித்தார்.
Øமனித உடல் ஒரு மின்கடத்தி.
Øமின் தூண்டுதலால் ஏற்படுத்தப்படும் மின்னூட்டம் தூண்டப்பட்ட மின்னூட்டம் என்கிறோம்.
Øநீர்த்துளிகள் சேர்ந்த தொகுப்பே முகில் எனப்படும்.
Øமின்னழுத்தத்திற்கும், மின்னோட்டத்திற்கும் இடையே உள்ள விகிதம் மின்தடை.
Øமின்சார மணி மின்காந்த விளைவை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறது.
Øநீச்சல் விதியை உருவாக்கியவர் ஆம்பியர்.
Øமின்சார மணியில் மின்சாரத்தை விட்டு விட்டு பாய்ச்ச உதவும் அமைப்பு ஆர்மச்சூர்.
vஇயற்கை கதிரியக்கத் தனிமங்கள்:
Øயுரேனியம், தோரியம், பொலோனியம், ரேடியம் போன்றவை இயற்கை கதிரியக்கத் தனிமங்கள் ஆகும்.
Øசெயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட கதிரியக்க ஐசோடோப்புகள் ரேடியோ நியூக்ளைடு அல்லது கதிரியக்க ஐசோடோப்புகள் எனப்படுகின்றன.
Øஆல்ஃபா துகள்கள் ஹீலியத்தின் உட்கருவைப்பெற்றவை. ஹைட்ரஜன் அணுநிறையைவிட 4 மடங்கு கனமானது.
Øஆல்ஃபா துகளானது கதிரியக்கத் தனிமங்கள் வெளியிடும் மிகப்பெரிய துகள் ஆகும்.
Øஆல்ஃபா துகளானது அதிக நிறையும் அதிக திசைவேகத்தையும் பெற்றிருப்பதால், இவற்றின் இயக்க ஆற்றல் அதிகமாகும். எனவே இவை செயற்கை தனிமங்களை உருவாக்கப் பயன்படும் தாக்கிகளாகப் பயன்படுகிறது.
Øபீட்டா கதிர்கள் புகைப்படத் தாள்களை பாதிக்கும்.
Øபீட்டா கதிர்கள் மெல்லிய அலுமினியத் தகடைக் கடக்கக் கூடியது.
Øகாமா கதிர்கள் கண்ணிற்கு புலப்படாது.
vகாமா கதிர்கள் நின்றொளிர்தலை உண்டாக்கும்.
Øகாமா கதிர்கள் காற்றினை அயனியாக்கும்.
Øகாமா கதிர்கள் பொருள்களின் மீது விழும்போது பீட்டா கதிர் அல்லது எலெக்ட்ரான்களை வெளியேற்றுகின்றன.
Øஎலெக்ட்ரோ மீட்டர், கெய்கர் முல்லர் எண்ணி, மேகப்பெட்டகம், குறைகடத்தி மின்சுற்றுகள் இவை யாவும் கதிரியக்க வீச்சுகளை அறிய பயன்படுத்தப்படும் கருவிகள் ஆகும்.
Øபாஸ்பரஸ் 32 அல்லது ஸ்ட்ரான்சியம் - 90 ஆகியவை தோல் புற்றுநோயைக் குணப்படுத்தும்.
Øமருத்துவக் கருவிகளில் உள்ள கிருமிகளை நீக்க கதிர்வீச்சு பயன்படுகிறது.
Øடிரிட்டியம், கார்பன் 14 போன்றவை உயிரியல் மூலக்கூறுகளைக் கண்டறிய பயன்படுகிறது,.
Øரேடியோ ஐசோடோப்பிலிருந்து வெளிவரும் கதிரியக்கத்தைப் பயன்படுத்தி உயர்விளைச்சல் தரும் புதிய ரக நெல், கோதுமை, ஆகியவற்றை உருவாக்கலாம்.
Øகாமா கதிர்களைப் பயன்படுத்தி அணு உட்கருவின் அமைப்பு மற்றும் பண்பை அறிய முடியும்.
Øகதிர்வீச்சுகளின் உதவியால் பொருள்களின் அமைப்பு வாய்ப்பாட்டை கண்டறியலாம்.
Øகதிரியக்க அயோடினைப் பயன்படுத்தி கரைசல்களில் தங்கியிருக்கும் மிகச்சிறிய அளவு சில்வர் கசடுகளையும் கண்டறியலாம்.
Øகதிரியக்க ஐசோடோப்புகள் வேதிவினைகளின் சுவடறி தனிமங்களாகப் பயன்படுகிறது.
Øநியூட்ரான் கிளர்வு ஆய்வு மூலம் ஆர்செனிக் நச்சுத் தன்மையைக் கண்டறிவதில் கதிரியக்க ஐசோடோப்புகள் பயன்படுகின்றன.
Øதொல்பொருள் மற்றும் பழம்பொருளின் வயதை அறிய கார்பன் -14 ஐசோடோப்பு பயன்படுகிறது.
Øகதிரியக்க கார்பனின் அரை ஆயுள் காலம் 5,730 ஆண்டுகள்.
Øகார்பன் - 14 கதிரியக்கத்தைக் கொண்டு பாறைகள் மற்றும் படிவங்களின் வயதை கண்டுபிடிக்கலாம். இது கதிரியக்க கார்பன் தேதியிடல் எனப்படுகிறது.
Øரேடியோ தேதியிடுதல் முறையில் விண்கற்கள், நிலவில் உள்ள பாறைகள் ஆகியவற்றின் வயது கணக்கிடப்படுகிறது.
vஅம்மோனியா:
Øநிறமற்ற, கார நெடியுடைய வாயு.
Øகாற்றைவிட லேசானது. மிக எளிதாக அதனை நீர்மமாக்கலாம்.
Øஅம்மோனியம் சல்பேட், அம்மோனியம், நைட்ரேட் போன்ற உரங்கள் தயாரிக்கப்பயன்படுகிறது.
Øநைட்ரிக் அமிலம், அம்மோனியம் குளோரைடு போன்ற சேர்மங்கள் தயாரிக்கப் பயன்படுகிறது.
Øபனிக்கட்டி தயாரிக்கவும், அம்மோனியா குளிர்ப்பானாகவும் பயன்படுகிறது.
Øமருந்தாகவும், எண்ணெய், கொழுப்பு முதலியவற்றை நீக்கவும் பயன்படுத்தப்படுகிறது.
Øஅம்மோனியம் நைட்ரேட் வெடி பொருளாகப் பயன்படுகிறது.
vபாக்டீரியாக்கள்
Øபாக்டீரியங்கள் யாவும் ஒரு செல் புரோகரியாடிக் உயிரிகளாகும்.
Øபாக்டீரிய செல்லில் முழுமையான நியூக்ளியஸ் இல்லை. இதன் மரபுப் பொருள் நியூகிளியாடய்ட் அல்லது குரோமட்டின் உடலம் எனப்படும். நியூக்ளியஸிற்கு சவ்வு கிடையாது.
Øபாக்டீரிய செல்லில் மறைமுக செல்பகுப்பு நடைபெறுவதில்லை.
Øபாக்டீரிய ரிபோசோம் சைட்டோபிளாசத்தில் விரவி காணப்படுகின்றன.
Øபாக்டீரியங்கள் பிளவுறுதல் மூலம் பெருக்கமடைகின்றன.
Øபாக்டீரியங்களில் தன் ஊட்டமுறை மற்றும் சார் ஊட்ட முறை என்ற இரண்டு வகையான ஊட்ட முறைகள் காணப்படுகின்றன.
Øபசும் கந்தக பாக்டீரியம், வெளிர் சிவப்பு கந்தக பாக்டீரியங்கள் ஆகியவை ஒளிச்சேர்க்கை செய்யும் பாக்டீரியங்களுக்கான எடுத்துக்காட்டுகள் ஆகும்.
Øஒளிச்சேர்க்கை அல்லது வேதிசேர்க்கை மூலம் தன் உணவை தானே தயாரித்துக் கொள்பவை தன் ஊட்ட முறை பாக்டீரியங்கள் ஆகும். எடுத்துக்காட்டு குளோரோபியம்.
Øஇறந்த அல்லது உயிருள்ளவற்றிலிருந்து ஊட்டப் பொருள்களை பெறும் பாக்டீரியங்கள் சார் ஊட்டமுறை பாக்டீரியங்கள் ஆகும்.
Øகாக்கஸ் என்பது கோள வடிவ பாக்டீரியங்கள்
Øபேசில்லஸ் என்பது கோல் வடிவ அல்லது குச்சி வடிவ பாக்டீரியங்கள்.
Øஸ்பைரில்லம் என்பது சுருள் வடிவம் கொண்ட பாக்டீரியங்கள்.
Øவிப்ரியோ - கமா என்பது வளைந்த வடிவை கொண்ட பாக்டீரியங்கள்
Øமைக்ரோகாகஸ் என்பது தனித்தனி கோளவடிவ செல்களை உடையது.
Øடிப்ளோகாக்கஸ் என்பது இரட்டையாக அமைந்த கோள வடிவ செல்களை கொண்டவை.
Øஸ்ட்ரெப்டோகாகஸ் என்பது சங்கிலி வடிவில்அமைந்த கோள வடிவ செல்களை கொண்டவை.
vகசையிழைகள்:
Øஇவை நீண்ட ரோமம் போன்ற அமைப்புகளாகும். இவை பாக்டீரியங்களின் இயக்கத்தில் ஈடுபடுகின்றன. ப்ளாஜெல்லின் என்ற புரதத்தை கொண்டுள்ளது.
Øஒற்றை கசையிழை பாக்டீரிய செல்லின் ஒரு முனையில் ஒரு கசையிழை இருக்கும். எடுத்துக்காட்டு: விப்ரியோ மெட்சினிகொலி.
Øபாக்டீரியங்கள் இயற்கையின் துப்புரவாளர்கள். நிலத்தில் சேகரமாகும் இறந்த தாவரங்கள்,விலங்குகள் மற்றும் பல வகை கரிம கழிவுப் பொருட்கள் ஆகியவற்றை அழுகச் செய்து சிதைக்கின்றன.
Øலேக்டோகாகஸ் லாக்டிஸ், லேக்டோபேசில்லஸ் மற்றும் லூகோநாஸ்டாக் கிரிமோரிஸ் ஆகிய லாக்டிக் அமில பாக்டீரியங்கள் பால் பண்ணைத் தொழிற்சாலையில் சுவையூட்டப்பட்ட பால் பொருள்கள் மோர், பல்கேரியன் யோகர்ட், கேஃபிர், குமிஸ் ஆகியவற்றை தயாரிக்கப் பயன்படுகிறது.
vபூஞ்சைகள்:
Øபூஞ்சைகள் பச்சயமற்ற தாலோபைட்டு வகையைச் சார்ந்தவை.
Øபூஞ்சைகளைப் பற்றிய தாவரவியல் பிரிவிற்கு ‘மைகாலஜி’ என்று பெயர்.
Øபொதுவாக பூஞ்சைகள் பல செல்களால் ஆன யூகேரியோட்டுகள் ஆகும்.
Øபூஞ்சைகள் மட்குண்ணிகள், ஒட்டுண்ணிகள் என இரண்டு வகையான வேறுபட்ட ஊட்ட முறைகளை கொண்டுள்ளது.
Øமட்குண்ணிகள் இறந்த மற்றும் அழுகிய அங்ககப் பொருள்களின் மீது வாழ்கின்றன. எடுத்துக்காட்டு; ரைசோபஸ், அகாரிகஸ்.
Øபூஞ்சையின் உடலம் மைசீலியம் என்று அழைக்கப்படுகின்றது.
Øமைசீலியங்கள் கிளைத்த, மெல்லிய இழைகளால் ஆனவை. இந்த இழைகளுக்கு ஹைபாக்கள் என்று பெயர். பூஞ்சைகளின் செல் சுவர் கைட்டின் மற்றும் பூஞ்சை செல்லுலோஸினால் ஆனது.
Øமைசீலியம் வளரக்கூடிய தளத்திற்கு வளர்தளம் என்று பெயர்.
Øவண்ணான் படை அல்லது தேமல் போன்றவை பூஞ்சைகளால் மனிதர்களுக்கு ஏற்படும் நோய்களாகும்.
Øசில பூஞ்சைகள் மரப்பட்டையில் வளர்கின்றன. மரக்கட்டையின் மீது வளர்வது சைலோபில்லஸ் அல்லது மரக்கட்டை பூஞ்சையாகும்.
Øமுடி அல்லது மாட்டுக் கொம்பு போன்ற பொருளின் மீது வளர்பவை கெராட்டினோபில்லஸ் அல்லது கெரடின் பூஞ்சைகள் எனப்படும்.
Øசில பூஞ்சைகள் உயர்நிலைத் தாவரங்களின் வேர்களோடு கூட்டுயிரியாக வளர்கின்றன. இந்த வகை வேர்களுக்கு மைகோரைசா என்று பெயர்.
Øபூஞ்சையினுடைய உடலம் மைசீலியம் எனப்படும். மைசீலியமானது மெல்லிய இழைகள் போன்ற ஹைபாக்களால் ஆனது.
Øஈஸ்ட்டு போன்ற பூஞ்சைகள் ஒரு செல் உயிரினங்களாகும்.
vபிரையோபைட்டா:
Øஇவை எளிய வகைத் தாவரங்கள். தாவர உலகத்தின் இரு வாழ்விகள் எனப்படும்.
Øஇவை நிலத்திலும் நீரிலும் வாழ்பவை.
Øஇவற்றில் வாஸ்குலார் திசுக்கள் இல்லை.
Øபிரையோபைட்டாவின் தாவர உடலம், தாலஸ் எனப்படும்.
Øகேமிட்டோஃபைட் தனித்து வாழும் தாவரம் ஆகும்.
Øநீர்வாழ் பிரையோபைட்டுகள் ரியல்லா ஃபுளுயிட்டன்ஸ் என்று அழைக்கப்படுகிறது.
Øசதுப்புநிலப் பகுதியில் வாழும் பிரையோபைட்டுகள் ஃபேக்னம் என்று அழைக்கப்படுகிறது.
vரிக்ஸியா:
Øஇது ஒரு ஈரல் வடிவ பிரையோஃபைட் ஆகும்.
Øஈரமான நிலத்தில் வாழும் நிழல் விரும்பி தாவரமாகும். இது பொதுவாக மழைக்காலங்களில் ஈரமான சுவர்களிலும், மண்ணிலும் ஆற்றங்கரையிலும் வளரும் தன்மை உடையது.
Øநீரில் வாழும் ரிக்ஸியா சிற்றினத்தின் பெயர் ரிக்ஸியா புளயிட்டன்ஸ்.
Øரிக்ஸியாவின் கேமிட்டோஃபைட் கிடைமட்டமாக வளரும் தட்டையான தாலஸ் ஆகும்.
Øரிக்ஸியாவில் நடைபெறும் இனப்பெருக்க வகைகள் உடல இனப்பெருக்கம், பாலினப் பெருக்கம் ஆகும்.
Øரிக்ஸியாவில் ஊகேஸ் வகை பாலினப் பெருக்கம் நடைபெறுகிறது.
Øரிக்ஸியாவில் ஆண் இனப்பெருக்க உறுப்புகளின் பெயர் - ஆந்தரிடியம்.
Øரிக்ஸியாவில் பெண் இனப்பெருக்க உறுப்புகளின் பெயர் - அர்க்கிகோனியம்.
Øரிக்ஸியா என்பது லிவர்வெர்ட் வகையைச் சார்ந்த ஒரு தாவரமாகும்.
vஜிம்னோஸ்பெர்ம்கள்:
Øதிறந்த விதைகள் கொண்ட தாவரங்கள் எனும் பொருள்படும்.
Øஜிம்னோஸ்பெர்ம்களில் சூல்கள் சூல்பைக்குள் இல்லை.
Øடயானோசார்கள் காலத்தில் ஜிம்னோஸ்பெர்ம்கள் பூமி மீது மண்டிக்கிடந்தன.
Øஜிம்னோஸ்பெர்ம்களின் வாழ்க்கைச் சுழலில் இரண்டு சிறப்பு நிலைகள் காணப்படுகின்றன. அவை இருமய ஸ்போராபைட்டு, ஒரு மய கேமிட்டோபைட்டு நிலைகளாகும்.
Øதாவர உடல் ஸ்போரோபைட் நிலையைச் சார்ந்தது ஆகும். ஸ்போராபைட்டுகள் பெரும்பாலும் வேர், தண்டு இலைகளைக் கொண்ட உயரமான மரங்கள் ஆகும்.
Øசெக்கோயா என்னும் மரம் சுமார் 120 மீட்டர் உயரம் வரை வளரும்.
Øசில ஜிம்னோஸ்பெர்ம்களின் வேர்கள், வேர்ப் பூஞ்சைகளுடனும், நீலப் பசும்பாசிகளுடனும் தொடர்பு கொண்டுள்ளன.
Øமுதல் நிலை வாஸ்குலார் திசுக்களுடன் இரண்டாம் வாஸ்குலார் திசுக்களும் உள்ளன.
vஆஞ்சியோஸ்பெர்ம்கள்:
Øஜிம்னோஸ்பெர்ம்கள், ஆஞ்சியோஸ்பெர்ம்கள் விதையுள்ள தாவரங்களாகும்.
Øஇவை ஸ்பெர்மாட்டோஃபைட்டுகள் எனப்படும்.
Øமலரும் தாவரங்கள் அனைத்தும் ஆஞ்சியோஸ்பெர்ம்கள் பிரிவைச் சேர்ந்தவை. ஆஞ்சியோஸ்பெர்ம்கள் தாவர வகைகளிலேயே மிக அதிக மேம்பாடற்ற தாவர வகையாகும்.
Øஏனைய தாவர வகைகளைவிட மிக அதிக எண்ணிக்கையிலும், அன்றாட வாழ்வில் நாம் காணும் தாவரங்களும், ஆஞ்சியோஸ்பெர்ம் வகையை சார்ந்தவையாகும்.
vமகரந்தச் சேர்க்கை:
Øதன் மகரந்தச் சேர்க்கை என்பது ஆட்டோகாமி எனப்படும். பூவின் மகரந்தங்கள் அதே பூவில் உள்ள சூலகமுடியை சென்றடைவதற்கோ அதே தாவரத்தைச் சேர்ந்த மற்றொரு பூவில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு தன் மகரந்த சேர்க்கை எனப்படும்.
Øஒரு பூவின் மகரந்தம் மற்றொரு தாவரத்தின் பூவில் உள்ள சூலகத்தை சென்றடைவதோ அல்லது அதே இனத்தைச் சேர்ந்த மற்றொரு தாவரத்தை சென்றடைவதோ அயல் மகரந்தச் சேர்க்கை அல்லது அல்லோகாமி எனப்படும்.
Øபெரும்பாலான இருபால் மலர்களில் தன் மகரந்தச் சேர்க்கையை விட அயல் மகரந்தச் சேர்க்கை பொதுவாக நடைபெறுகிறது.
Øஅயல் மகரந்தச் சேர்க்கை விளைவாக உருவாகும் விதைகள் யாவும் முளைக்கும் திறன் மற்றும், திடமான தாவரங்களாக வளரும் தன்மையை பெற்றிருக்கும்.
Øவிலங்குகளால் நடைபெறும் மகரந்தச் சேர்க்கை சூபில்லி எனப்படும். இத்தகைய மலர்கள் சூபில்லஸ் மலர்கள் எனப்படும்.
Øபூச்சிகளால் மகரந்தச் சேர்க்கை அடையும் தாவரங்களில் தெளிவாக வெளிப்படும் விதத்தில் மலர்கள் வண்ணத்தையும், நல்ல நறுமணத்தையும் பெற்றிருக்கும். பூவரசு முதலிய தாவரங்களில் இந்த இரண்டு பண்புகளும் உள்ளன.
Øகாற்றினால் மகரந்தச் சேர்க்கை நடைபெறும் பூக்கள் அனிமோபிலஸ் மலர்கள் எனப்படும்.
Øனஹடிரில்லா, வாலிஸ்நீரியா போன்ற நீர் வாழ் தாவரங்களில் நீரின் வழி மகரந்தச் சேர்க்கை நடைபெறுகிறது. வாலிஸ் நீரியா நீரில் மூழ்கி வளரும் ஈரில்லத் தாவரம். இவற்றில் இலையானது ரிப்பன் வடிவத்தில் இருக்கும்.
Øஇருபால் மலர்களில் மகரந்தத் தூள்களும், சூலகமும் ஒரே நேரத்தில் முதிர்வடைவதால் தன் மகரந்தச் சேர்க்கைக்கு வாய்ப்புள்ளது.
vதாவரவியல் - பொதுவானவை:
Øசதைக்கனி பொதுவாக வெடிக்காது.
Øஇருபுறவெடிகனிக்கு சிறந்த எடுத்துக்காட்டு லெகூம் தாவரங்கள்.
Øஒரு மலரின் இணையாத பல சூலிலைகளைக் கொண்ட சூலகத்திலிருந்து உருவாகும் கனி திரள்கனியாகும். எடுத்துக்காட்டு : நெட்டிலிங்கம்.
Øகருவுற்ற சூல், விதை எனப்படுகிறது.
Øஓர் மின்னணு உருப்பெருக்கி நுண்பொருளை 2 லட்சம் முதல் 3 லட்சம் மடங்குகள் பெரிதாகக் காட்டும்.
Øநுண்ணோக்கிகளின் முக்கிய லென்சுகள், கண்ணருகு லென்சு, பொருளருகு லென்சு என்று இரண்டு வகைப்படும்.
Øசெல்கோட்பாட்டை வெளியிட்டவர் ஸ்லீடன், ஸ்வான்.
Øசெல், புரோட்டோபிளாசம் மற்றும் பிளாஸ்மா படலத்தால் ஆனது.
Øசெல்சுவர் செல்லுலோசால் ஆனது.
Øவிலங்கு செல்களில் பிளாஸ்மா படலம் புற எல்லையாக அமைந்துள்ளது. இது கொழுப்பு மற்றும் புரதத்தால் ஆனது.
Øகோல்கை உறுப்புகள் சுரப்பி செல்களில் காணப்படும்.
Øரைபோசோம் புரதம் தயாரித்தலில் காணப்படும்.
Øமைட்டோ காண்ட்ரியா ஆற்றல் மையம் என்று அழைக்கப்படுகிறது.
Øசென்ட்ரோசோம் செல்லின் ‘தற்கொலைப் பைகள்’ என்று அழைக்கப்படுகிறது.
Øஉட்கரு உள்ள செல்களுக்கு யூகேரியோட் செல்கள் என்று பெயர். இவற்றின் அமைப்பினை ராபர்ட் பிரவுன் கண்டுபிடித்தார்.
Øஉட்கருவில் செல் பிரிதல் மூலமாகவே செல்கள் உருவாகின்றன.
Øஉட்கருவில் செல் பிரிதலில் காரியோகைனசிஸ், சைட்டோகைனசிஸ் என இரண்டு நிலைகள் உண்டு.
Øதாவரங்களில் வைரஸ் நோய்கள்: வாழையின் உச்சிக் கொத்து நோய், உருளையின் இலைச் சுருள் நோய், புகையிலையின் பல வண்ண இலை நோய்.
Øதாவரங்களில் பாக்டீரியா நோய்கள்: காரட்டில் மென் அழுகல் நோய், நெல்லின் பாக்டீரிய வெப்பு நோய்.
Øதாவரங்களில் பூஞ்சை நோய்கள்: கடுகுக் குடும்பத் தாவரங்களில் வெண்துரு நோய், கோதுமையில் கருத்துரு நோய், கரும்பில் செவ்வழுகல் நோய், உருளைக் கிழங்கில் பின்தோன்று வெப்பு நோய்.
Øமுள்ளங்கியில் வெண்துரு நோய் அல்புகோ காண்டிடா என்னும் பூஞ்சையினால் உருவாகிறது.
vதமிழ்நாட்டில் நெற்பயிரின் பருவகாலங்கள்:
Øகார்காலம் - மே முதல் ஜூன் வரை
Øகுறுவைகாலம் - ஜூன் முதல் ஜூலை வரை
Øதாளடி காலம் - செப்டம்பர் முதல் அக்டோபர் வரை.
Øசம்பா பருவம் - ஆகஸ்டு முதல் பிப்ரவரி வரை.
Øபயிர் வளர்ச்சிக்குத் தேவையான பயிர் உணவு பாஸ்பேட் ஆகும்.
Øபொட்டாசியம் குளோரைடு, பொட்டாசியம் சல்பேட் இரண்டும் சாம்பல் சத்துக்கள்.
Øநைட்ரஜன் நிலைப்படுத்தும் பாக்டீரியம் - ரைசோபியம், அஸடோபாக்டர், மற்றும் நீலப்பச்சைப்பாசி.
Øபாஸ்பேட்டை கரைக்கும் பாக்டீரியா - பேசில்லஸ், சர்குலன்ட்ஸ்.
Øஊட்டப் பொருட்களை உறிஞ்ச உதவும் பூஞ்சைகள் - குளோமல், ஜிஜைகாஸ்போரா.
Øகளைச்செடிகளாக உள்ள சப்பாத்திக் கள்ளியை காக்னியல் பூச்சிகள் மூலம் கட்டுப்படுத்தலாம்.
Øபசுமைப் புரட்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பயிர்கள் - கோதுமை, உருளைக்கிழங்கு மற்றும் அரிசி.
Øஐ.ஆர். 8 ரக நெல் பசுமைப் புரட்சியால் உருவாக்கப்பட்டது.
Øமுதல் குட்டைரக நெல் ரகம் தைவான் நாட்டில் உருவாக்கப்பட்டது.
Øகரும்பு உத்தரப்பிரதேச மாநிலத்தில் மிக அதிக அளவிலும், அதற்கு அடுத்தப்படியாக மகராஷ்டிரத்திலும், தமிழகத்திலும் பயிரிடப்படுகிறது.
Øஜூலை - ஆகஸ்ட் மாதங்கள் கரும்பு நடவுக்கு ஏற்ற காலமாகும்.
vவிலங்கியல்:
Øவிலங்குகள் பலசெல் கொண்டவை.
Øபச்சைய நிறமி இல்லை. ஆனால், வேறுபட்ட நிறமிகளைக் கொண்டது.
Øஉணர் உறுப்பு, நரம்பு மண்டலம் கொண்டவை.
Øசெல் சுவர் இல்லை. ஆனால், செல்லைச் சூழ்ந்து செல் சவ்வு அல்லது பிளாஸ்மாலெம்மா காணப்படுகிறது.
Øயூக்ளினாவைத் தவிர மற்ற விலங்குகளில் கணிகங்கள் இல்லை.
Øபெரும்பாலும் விலங்குகள் திட உணவுப் பொருள்களை எடுத்துக்கொள்ளும், உணவூட்ட முறை ஹோலோஸோயிக் ஆகும்.
Øசேமிப்பு உணவாக கிளைக்கோஜன் காணப்படும்.
Øபவளப்பூச்சிகள், கடற்பஞ்சு இவற்றைத் தவிர மற்ற எல்லா விலங்குகளும் உணவுக்காக இடம் விட்டு இடம் நகரும் தன்மையுடையவை.
Øயூரோட்ராபின் எனும் முக்கிய மருந்துப் பொருள் எந்த வினையின் போது கிடைக்கிறது - பார்மால்டிஹைடு அம்மோனியாவுடன் குறுக்க வினைபுரியும்போது கிடைக்கிறது.
Øமதிப்புயர்ந்த கண்ணாடிப் பொருட்கள் எந்த வகை கண்ணாடியைச் சார்ந்தது - ஜீனாக் கண்ணாடி.
Øஅசிட்டிக் அமிலத்தின் நீர்த்த நீர்க்கரைசல்களின் பெயர் - வினிகர்.
Øவினிகரில் எத்தனை சதவீதம் அசிட்டிக் அமிலம் இருக்கிறது - 6 - 10 சதவீதம்.
Øமண் வளத்திற்குத் தேவையான நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம் ஆகிய முதன்மை ஊட்டச் சத்துக்களை அளிக்கும் வேதிப் பொருட்கள் - செயற்கை உரங்கள் எனப்படும்.
Øபெட்ரோல், டீசல், உற்பத்திவாயு, கரிவாயு, மரக்கரி போன்றவை - இரண்டாம் நிலை எரிபொருள்.
Øபுரோப்பேன், பியூட்டேன், ஐசோ - பியூட்டேன், பியூட்டிலின் முதலிய ஹைட்ரோ கார்பன்களில் ஏதேனும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஹைட்ரோ கார்பன்கள் கலந்துள்ள கலவைக்கு என்ன பெயர் - எல்.பி.ஜி.
Øகுளோரோபார்ம், ஈதர்கள், நைட்ரஸ் ஆக்ஸைடு போன்றவை - மயக்கமூட்டிகளுக்கான எடுத்துக்காட்டுகள்.
Øமனநோயினை குணப்படுத்த பயன்படும் அமிலம் - பார்மிடியூரிக் அமிலம்.
Øமருந்துகளின் ராணி என்று அழைக்கப்படும் மருந்து - பென்சிலின்.
vபேரண்டம்:
Øநட்சத்திரங்கள் தானாகப் பிரகாசிக்கும் தன்மை உடையன.
Øபூமிக்கு அருகில் உள்ள நட்சத்திரம் சூரியன். பகலில் தெரியும் ஒரே நட்சத்திரம் சூரியன்.
Øவானத்தில் உள்ள நட்சத்திரங்களின் தொலைவை அளக்க ஒளி ஆண்டு என்ற அலகு பயன்படுத்தப்படுகிறது.
Øஒளி ஆண்டு என்பது, ஒளியானது ஒரு ஆண்டில் கடக்கும் தொலைவு ஆகும்.
Øஒளி ஒரு வினாடிக்கு 3 லட்சம் கி.மீ. தூரம் செல்கிறது.
Øசூரியனின் ஒளி புவியை அடைய 8.3 நிமிடங்கள் ஆகின்றன.
Øசூரிய குடும்பத்திற்கு அருகாமையில் உள்ள நட்சத்திரம் - ஃபிராக்ஸியா செட்னாரி.
Øசூரியக் குடும்பம் உள்ள அண்டத்தைப் பால்வழி அண்டம் என்று குறிப்பிடுகின்றோம்.
Øபால்வழி அண்டமானது சுருள் போன்ற அமைப்பைக் கொண்டது.
Ø1994 ஆம் ஆண்டு ஷுமேக்கர் லெவி என்ற வால் நட்சத்திரம் வியாழன் கோள் மீது மோதியது.
Øசூரியன் பூமியை விட சுமார் 109 மடங்கு பெரியது.
Øசூரியன் பூமியில் இருந்து 149 மில்லியன் கி.மீ. தூரத்தில் உள்ளது.
Øசூரியனின் மேற்பரப்பு வெப்பநிலை - 6000 டிகிரி செல்சியஸ்.
Øசூரியனின் மையப் பகுதியின் வெப்பநிலை 1 லட்சம் டிகிரி செல்சியஸ்.
Øசூரியனின் அதிகமான வெப்பம் அதன் அணுக்கரு இணைப்பின் மூலம் பெறுகின்றன.
Øசூரியனில் உள்ள இரு ஹைட்ரஜன் அணுக்கள் இணைந்து ஹீலியம் அணுக்கள் உருவாகும்போது அதிக வெப்பம் வெளிப்படுகின்றது.
vஆற்றல் ஓட்டம்:
Øசுற்றுப்புறச் சூழலிலிருந்து ஆற்றலை ஈர்த்து, தன்னுடைய உடற்செயல்களுக்காக அதை பயன்படுத்துவதால் ஒவ்வொரு உயிரினத்தையும் ஒரு ரசாயன தொழிற்சாலை என்கிறோம்.
Øசூரியசக்தியானது பூமிப்பரப்பை அடைவதற்குள் குறைந்த அலைநீளம் உடைய கதிர்வீச்சுகள் தடுக்கப்படுகின்றன.
Øசூரியசக்தியில் 1 சதவீதம் தான் பூமியின் வளிமண்டல மேற்பரப்பை அடைவதாக கணக்கிடப்பட்டுள்ளது.
Øபூமிப்பரப்பில் விழும் பெரும்பான்மையான சூரிய சக்தி, நம் கண்ணுக்கு புலப்படும் சூரிய ஒளிதான்.
Øசூரியக் கதிர்வீச்சு அளவைக் கணக்கிட இயலாது. சுமாராக அது 1372 வாட்ஸ்/மீ இருக்கலாம்.
Ø57 சதவீதம் சூரிய ஒளி வளிமண்டலத்தில் உறிஞ்சப்படுகிறது. 53 சதவீதம் நிலப்பரப்பையும், நீர்ப்பரப்பையும் வெப்பப்படுத்த செலவிடப்படுகிறது. மீதமுள்ள 8 சதவீதம் சூரிய ஒளி ஆற்றலே தாவரங்களை சென்றடைகின்றன.
Øஒரு சூழ்நிலை மண்டலத்தில் ஆற்றல் ஓட்டமானது ஒரு முகப்பாதையில் செல்லக்கூடிய சுழற்சியற்ற வினையாகும்.
Øஉயிரின தொகுப்புகளிடையே காணப்படுகின்ற ஒரு வழிப்போக்கான ஆற்றல் ஓட்டத்தில் வெப்ப இயக்கவியலின் இருவிதிகள் நிரூபணமாகின்றன.
Øவெப்ப இயக்க ஆற்றலின் முதல் விதியின்படி ஆற்றலை ஆக்கவோ, அழிக்கவோ முடியாது.
Øஉயிர்ப் பொருள்களின் உலர் எடையின் அடிப்படையில் அமையும் கோபுரங்கள் உயிர்ப் புலக் கோபுரங்கள் எனப்படுகின்றன.
Øபுல்வெளி மற்றும் காடு போன்ற சூழ்நிலைத் தொகுப்பில் உற்பத்தியாளர்கள் மட்டத்திலிருந்து உயிர் நுகர்வோர் மட்டம் நோக்கிச் செல்லச் செல்ல உயிர்ப்புலம் படிப்படியாகக் குறையும்.
vமீன் வளப் பொருள்களின் முக்கியத்துவம்:
Øபுரதம், வைட்டமின்கள் மற்றும் தாதுப்பொருள்கள் நிறைந்த பழமையான ஒரு உணவு மீன் ஆகும்.
Øவயிற்றுப்புண் மற்றும் சீரணக் கோளாறு உள்ளவர்களுக்கு சிறப்பு உணவோடு மீனும் சேர்த்து தரப்படுகிறது.
Øமீன் உணவின் தனிப்பட்ட வேதித்தன்மையினால் இருதய நோயாளிக்கு மீன் உணவு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
Øவைட்டமின் - கண் பார்வைக்கு உதவி புரிகிறது. பையோட்டின், நியாசின் மற்றும் பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்பு போன்ற தாதுப்பொருள்கள் மனிதனின் இயல்பான உடல் வளர்ச்சிக்கு உதவி செய்கிறது.
Øமீனில் உள்ள புளூரைடு எலும்பு சம்பந்தப்பட்ட நோய்கள் வராமல் தடுக்கிறது.
Øசார்டைன்ஸ், ஹெரிங்க்ஸ் மற்றும் சால்மன் போன்றவற்றின் எண்ணெய்கள், சோப்பு மற்றும் வர்ணம் தயாரிப்பதில் பயன்படுகிறது.
Øமீனின் உண்ண முடியாத பாகங்களில் இருந்து கால்நடை, கோழி, வாத்து போன்றவைகளுக்கு உணவு தயாரிக்கப்படுகிறது.
Øமீன்களின் கழிவுகளில் இருந்து உரங்களும் பசை பொருள்களும் தயாரிக்கப்படுகின்றன.
Øசுறா மீனின் தோலில் இருந்து காலணிகள், கைப்பைகள் போன்றவைகள் தயாரிக்கப்படுகின்றன.
Øஇந்தியாவில் இறால் வளர்ப்பு மிக முக்கியான தொழிலாக மேற்கொள்ளப்படுகிறது.
Øஇறால் வளர்ப்பில் உலக நாடுகளுள் அமெரிக்கா முதலிடம் வகிக்கிறது. இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது.
Øஇயற்கையான நீர்நிலைகளில் உள்ள இறால் குஞ்சுகளை வலையின் மூலம் பிடித்து, வளர்க்கும் குளங்களில் விடுதல் வழக்கமான இறால் வளர்ப்பு முறையாகும்.
Øவளர்க்கக் கூடிய இறால்களின் உதாரணங்கள்: பினோயஸ் இன்டிகஸ் மற்றும் பினேயஸ் மோனோடான்.
Øஆல்காக்கள் உயிரியல் உரமாக பயன்படுத்தப்படுகின்றன.
Øஸ்பிருலினா என்ற நீலப்பச்சை பாசி மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தில் 1983 முதல் வளர்க்கப்படுகின்றது.
Øமண்புழு வளர்ப்பு வெர்மிகல்சர் என்று அழைக்கப்படுகிறது.
Øமண்புழுக்கள், மண் அமைப்பில் முக்கிய பங்கு பெறுகின்றன. அவை நிலத்தை சத்தமின்றி உழுது கரிமச் சத்துப் பொருள்களை மீண்டும் சுழலச் செய்ய உதவுகிறது. இவ்வாறு உருவாக்கப்பட்ட உரம் தாவரங்களில் சிறப்பான வளர்ச்சிக்கு உதவுகிறது.
Øமண்புழுக்கள் உற்பத்தி செய்த உரம் வெர்மி கம்போஸ்ட் என்று அழைக்கப்படுகிறது.
Øகரிம கழிவுகள் மற்றும் பயிர் கழிவுகளை மண்புழுக்கள் உரமாக மாற்றும் செயல் வெர்மிகம்போஸ்டிங் என்று அழைக்கப்படுகிறது.
Øஎண்டேஜெயிக்ஸ் - இவை மண் உண்ணிகள். இவை உண்ணுகின்றன. இவை படுக்கைவாட்டில் வளை அதிக கரிமப் பொருட்கள் கொண்ட மண்ணை செய்கின்றன. என்டேஜெயிக் மண்புழுவிற்கு எடுத்துக்காட்டு ஆக்டோகிட்டோனா தரஸ்டோனி ஆகும்.
Øபண்ணை விலங்குகளில் முட்டைகளின் உற்பத்தியை அதிகரிக்கும் முயற்சி வெள்ளிப்புரட்சி எனப்படும்

Popular Feed

Recent Story

Featured News