Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, June 15, 2018

இடைநிலை ஆசிரியர் பயிற்சியில் சேர 18-ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்




தொடக்கக் கல்வி பட்டயப்படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு வரும் 18 -ஆம் தேதி முதல் (திங்கள்கிழமை) விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவன இயக்குநர் க.அறிவொளி வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: 

தமிழகத்தில் 2018-19 -ஆம் கல்வியாண்டுக்கான தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பு ஒற்றைச்சாளர முறை மாணவர் சேர்க்கைக்குரிய விண்ணப்பங்கள் ஜூன் 18 -ஆம் தேதி காலை 10 மணி முதல் ஜூன் 30 -ஆம் தேதி மாலை 5 மணி வரை www.tnscert.org என்ற இணையதளத்தில் வெளியிடப்படவுள்ளது.




விண்ணப்பதாரர்கள் இந்த இணையதளம் மூலம் உரிய கட்டணத்தைச் செலுத்தி தங்களது விவரங்களைப் பதிவேற்றம் செய்யலாம். கட்டணம் செலுத்துவதற்கு தங் களது பற்று அட்டை(Debit Card),, கடன் அட்டை (Credit Card), இணைய வங்கிச் சேவை (Internet Banking) ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தி செலுத்தலாம். 

கட்டணம் எவ்வளவு?: பொதுப்பிரிவு, பிற்படுத்தப்பட்ட - மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர்களுக்கு ரூ.500, தாழ்த்தப்பட்ட, பழங்குடியினருக்கு ரூ.250 விண்ணப்பக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இணையதளத்தில் விண்ணப்பதாரர் அளிக்கும் விவரங்கள் சரியானதாக இருக்க வேண்டும். 

அவர் அளிக்கும் விவரங்கள் அனைத்தும் கலந்தாய்வின்போது சரிபார்க்கப்பட்டு உறுதி செய்த பின்னரே அவரது சேர்க்கை உறுதி செய்யப்படும். 

விண்ணப்பத்தில் அளிக்க வேண்டிய விவரங்கள் பற்றிய விளக்கங்கள், தமிழகத்தில் உள்ள ஆசிரியர் பயிற்சி நிறுவனம் சார்ந்த தகவல்கள், கல்வித் தகுதி, வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை www.tnscert.org என்ற இணையதளத்தில் பெறலாம் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.