Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, July 1, 2018

அமைச்சர் செங்கோட்டையனின் அசத்தல் திட்டம்! 6, 7 மற்றும் 8 வகுப்பு மாணவர்களுக்கு அடித்தது ஜாக்பட்!

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஒவ்வொரு நாளும் புதிய புதிய அறிவிப்புகளை வெளியிட்டு அசத்தி வருகிறார். 



இன்று புதிய திட்டமாக 6, 7 மற்றும் 8 வகுப்பு மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டத்தை டவுன்லோடு செய்து படிக்க வசதியாக ஒவ்வொரு மாணவ, மாணவிகளுக்கும் டேப் வழங்க மத்திய அரசிடம் 500 கோடி ரூபாய் நிதி கேட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம் எளையாம்பாளையத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளில் 100 சதவீதம் தேர்ச்சியடைந்த அரசு பள்ளிகள் மற்றும் ஆசிரியர்களுக்கான பாராட்டு விழா நடைபெற்றது. இதில், அமைச்சர்கள் தங்கமணி, செங்கோட்டையன், சரோஜா ஆகியோர் பங்கேற்றனர்.