தமிழகத்தில் பி.இ., எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் தனித் தனியே வியாழக்கிழமை வெளியிடப்படுகிறது.
பி.இ. படிப்பில் சேர விண்ணப்பித்து சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்ற 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் வியாழக்கிழமை காலை 8.30 மணிக்கு வெளியிடுகிறது.
அமைச்சர் வெளியிடுகிறார்: சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை அரங்கில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். தரவரிசைப் பட்டியலை சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வியாழக்கிழமை காலை 9 மணிக்கு வெளியிடுகிறார். எம்.பி.எஸ்.-பி.டி.எஸ். கலந்தாய்வு வரும் ஜூலை 1-ஆம் தேதி தொடங்குகிறது.
பி.இ. படிப்பில் சேர விண்ணப்பித்து சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்ற 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் வியாழக்கிழமை காலை 8.30 மணிக்கு வெளியிடுகிறது.
மாணவர்களின் வசதிக்காக அண்ணா பல்கலைக்கழக இணையதளத்திலும் பி.இ. தரவரிசைப் பட்டியல் உடனடியாகப் பதிவேற்றம் செய்யப்பட உள்ளது. பி.இ. ஆன்-லைன் கலந்தாய்வு தொடங்கும் தேதி குறித்த அறிவிப்பு வியாழக்கிழமை வெளியிடப்படும்.
அமைச்சர் வெளியிடுகிறார்: சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை அரங்கில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். தரவரிசைப் பட்டியலை சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வியாழக்கிழமை காலை 9 மணிக்கு வெளியிடுகிறார். எம்.பி.எஸ்.-பி.டி.எஸ். கலந்தாய்வு வரும் ஜூலை 1-ஆம் தேதி தொடங்குகிறது.