Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, June 21, 2018

வேளாண் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு




சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 2018 - 19 ஆம் ஆண்டுக்கான வேளாண் பாடப் பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்க, ஜூன் 17 -ஆம் தேதி இறுதி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, விண்ணப்பங்களைப் பதிவு செய்யும் தேதி ஜூன் 25 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக பல்கலை. பதிவாளர் கே.ஆறுமுகம் தெரிவித்தார்.
படிப்புகள்: பி.எஸ்சி. வேளாண்மை (B.Sc.(Hons. Agriculture), பி.எஸ்சி. தோட்டக்கலை (B.Sc.(Hons.) வேளாண் சுயநிதிப் படிப்புகள்: (Agriculture-Self Supporting) பி.எஸ்சி. தோட்டக்கலை(B.Sc.(Hons.) Horticulture / Diploma in Agriculture/Diploma in Horticulture) மற்றும் B.F.Sc. 5 ஆண்டுகள் ஒருங்கிணைந்த பட்டப் படிப்புகள் (5 Year Integrated Programmes/ பி.இ. லேட்டரல் என்டரி படிப்புகள்: (B.E., Lateral Entry), பி.ஃபார்ம். (B.Pharm.), பி.பி.டி. (B.P.T), பி.ஒ.டி. (B.O.T) மற்றும் பி.எஸ்சி. நர்சிங் B.Sc.Nursing), டி.ஃபார்ம். (.D.Pharm) உள்ளிட்ட பாடப் பிரிவுகள்.