Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, June 28, 2018

சென்னை புறநகரில் புதிய கல்லூரிகள்

சென்னை புறநகர்ப் பகுதிகளில் புதிய கலை அறிவியல் கல்லூரிகள் தொடங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் பல்லாவரம் தொகுதி திமுக சட்டப்பேரவை உறுப்பினர் இ.கருணாநிதி பேசுகையில், கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால், சென்னை புறநகர்ப் பகுதிகளில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் குறைவாக உள்ளன. தனியார் கல்லூரிகள்தான் அதிக அளவில் உள்ளன. மறைமலை அடிகள் நினைவாக மறைமலைநகரில் கலைக் கல்லூரி தொடங்கப்படுமா என்று கேள்வி எழுப்பினார்.




இதற்கு அமைச்சர் அன்பழகன் அளித்த பதில்: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 45 புதிய கலை, அறிவியல் கல்லூரிகள் தொடங்க நடவடிக்கை எடுத்தார். அதன் தொடர்ச்சியாக பெரும்பாக்கத்தில் புதிய கல்லூரி தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பல்வேறு கல்லூரிகளில் 264 புதிய பாடப் பிரிவுகள் தொடங்கப்பட்டு, மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. எனினும், மாணவர்கள் நலன் கருதி எதிர்காலத்தில் அரசு கலைக் கல்லூரிகள் தொடங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என்றார்.