பணிநிரவலில் இடைநிலை ஆசிரியர்களை அந்தந்த ஒன்றியத்திலேயே பணியமர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன...
ஆங்கிலவழி தொடக்கப் பள்ளிகளில் ஒரு வகுப்பில் 16 மாணவர்களுக்கு மேல் இருப்பின், அந்த வகுப்பில் கூடுதல் ஆசிரியர் பணியிடம் உருவாக்கிட முடிவு.இப் பணியிடத்தில் உபரி ஆசிரியர்கள் மாற்றப் படுவார்கள்.இப் பணியிடம் முற்றிலும் தற்காலிகமானது. இதற்கு இடமாறுதலோ பணிநியமனமோ இல்லை. அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது