Tuesday, July 17, 2018

2 மாதங்களில் அனைத்து மாவட்டங்களிலும் நடமாடும் நூலகங்கள் : அமைச்சர் செங்கோட்டையன்

தமிழகத்தில் 2 மாதங்களில் அனைத்து மாவட்டங்களிலும் நடமாடும் நூலகங்கள் அமைக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.



நூலகங்களில் சுமார் 3 லட்சம் பேர் உறுப்பினர்களாக சேர்க்க இலக்கு நிர்ணயித்து செயல்பட்டு வருவதாக கூறிய அவர், 32 மாவட்ட நூலகங்களில் ஐ.ஏ.எஸ். அகாடமி உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் மாணவர்களை சிறந்த கல்வியாளர்களாக உருவாக்க நூலகங்கள் சீரமைக்கப்பட்டு வருகின்றன என்றும் செங்கோட்டையன் தெரிவித்தார்.

Popular Feed

Recent Story

Featured News