Wednesday, August 1, 2018

அறிவியல் திறனறி தேர்வுக்கு மாணவர்கள் செப். 30-க்குள் விண்ணப்பிக்கலாம்

அறிவியல் திறனறி தேர்வுக்கு மாணவர்கள் செப்.30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் விஞ்ஞான் பிரசார் நிறுவனம் தெரிவித்துள்ளது.



இது குறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் விஞ்ஞான பிரசார் நிறுவனம், என்சிஇஆர்டியின் விபா நிறுவனம் ஆகியவை இணைந்து தேசிய அளவிலான அறிவியல் விழிப்புணர்வுத் தேர்வை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.

இந்தத் தேர்வு நவம்பர் 25 மற்றும் 26-ஆம் தேதிகளில் இணைய வழியில் ஆன்லைன் மூலம் நடத்தப்படுகிறது. மாணவர்கள் ஸ்மார்ட் போன்', டேப்லெட், மடிக்கணினி, கணினி மூலம் தேர்வு எழுதலாம். ஆங்கிலம் தவிர தமிழ், ஹிந்தி, மராத்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் தேர்வு எழுதலாம். தேர்வுக் கட்டணம் ரூ.100 செலுத்த வேண்டும்.

செப்டம்பர் 30-ஆம் தேதி விண்ணப்பிக்க கடைசி தேதி ஆகும். ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 1 வகுப்பு வரை படிக்கும் அனைத்து மாணவர்களும் இந்தத் தேர்வை எழுதலாம். ஆறாம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை ஒரு பிரிவாகவும், 9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 1 வகுப்பு வரை மற்றொரு பிரிவாகவும் தேர்வு நடைபெறும். மேற்கண்ட தேர்வை எழுத விரும்புவோர் www.vvm.org.in என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.



Popular Feed

Recent Story

Featured News