வதந்தி பரவுவதை தடுக்க ஒரே நேரத்தில் 5 பேருக்கு மேல் தகவல் அனுப்ப முடியாத வகையில் புதிய கட்டுப்பாட்டை வாட்ஸ் அப் கொண்டு வந்துள்ளது.
சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் பரவி அப்பாவிகள் கொல்லப்படுவது தொடர்கதையாகி வருகிறது. எனவே வதந்தி பரவுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாட்ஸ் அப் நிறுவனத்தை மத்திய அரசு கேட்டுக் கொண்டது.
குயிக் பார்வர்டு வசதியையும், அகற்ற முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல்களின் போது வாட்ஸ் அப் தவறாக பயன்படுத்துவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும், இந்திய தேர்தல் ஆணையத்திடம் அந்நிறுவனம் உறுதியளித்துள்ளது.