திறந்தநிலைப் பல்கலைக்கழக மாணவர்களின் நலனுக்காக, முதன்முறையாக ஒரு நாள் வேலைவாய்ப்பு முகாமை தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் புதன்கிழமை நடத்துகிறது.
இதுகுறித்து பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
சென்னையில் உள்ள திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் முன்னாள், இந்நாள் மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் புதன்கிழமை நடத்தப்பட உள்ளது. இதில் 50 தொழில் நிறுவனங்கள் பங்கேற்று பணிக்கான நபர்களைத் தேர்வு செய்ய உள்ளன. இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள விரும்பும் மாணவர்கள், அன்றைய தினம் காலை 9 மணிக்கு தங்களது பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும்.
இதுகுறித்த விவரங்களைத் தெரிந்துகொள்ள முகாம் ஒருங்கிணைப்பாளர் மகேந்திரனை 044 - 2430 6611, 94877 00180 ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
இதுகுறித்த விவரங்களைத் தெரிந்துகொள்ள முகாம் ஒருங்கிணைப்பாளர் மகேந்திரனை 044 - 2430 6611, 94877 00180 ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.