Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, July 22, 2018

மெரினா கடற்கரையில் தொல்காப்பியருக்கு சிலை வைக்கப்படும் அமைச்சர் பாண்டியராஜன் தகவல்

தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் பாண்டியராஜன் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-



தமிழ் பண்பாட்டு மையம் மூலம் இந்த ஆண்டு இறுதிக்குள் 2 லட்சம் மாணவர்களை ஒருங்கிணைக்க முடியும் என நம்புகிறேன்.

இதற்காக தமிழ் பல்கலைக்கழகத்தின் கட்டமைப்புகளை மேம்படுத்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரூ.16 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். மேலும் இப்பல்கலைக்கழகத்தில் அகராதி சார்ந்த இணைச்சொல், எதிர்சொல், சொல் செயலி போன்றவற்றை ஒருங்கிணைக்கும் விதமாக சொற்குவை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆய்வு இருக்கை இயங்க தொடங்கிவிட்டது. இதேபோல ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், ஜோகனஸ்பர்க் பல்கலைக்கழகம், மலேசியா பல்கலைக்கழகம், யாழ்ப்பாண பல்கலைக்கழகம் ஆகியவற்றிலும் இந்த ஆண்டு தமிழ் ஆய்வு இருக்கை தொடங்கப்பட உள்ளது.

தமிழின் தொன்மையை உலகத்துக்கு வெளிச்சம்போட்டு காட்டுவதற்காக யுனெஸ்கோவின் உலக புத்தகம் என்ற அங்கீகாரத்தை திருக்குறளுக்கு பெற்றுத்தர முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. தமிழில் ஆய்வு மாணவர்களை ஒருங்கிணைக்கும் வகையில் தமிழ் இணையவாசல் உருவாக்கப்பட உள்ளது. தமிழுக்கு 63 மாநில அரசு விருதுகளும், 8 மத்திய அரசு விருதுகளும் வழங்கப்பட்டு வருகிறது.



தொல்காப்பியருக்கு சென்னை மெரினா கடற்கரையில் சிலை வைக்கப்படும். தமிழ் பல்கலைக்கழகத்தை உலகில் உள்ள பல்கலைக்கழகங்களில் முதல் 100 இடங்களுக்குள் கொண்டுவர முயற்சி மேற்கொள்ளப்படும்.