Sunday, July 15, 2018

உயர் மருத்துவப் படிப்புக்கான நீட்: இன்று முடிவு வெளியீடு

உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 15)வெளியிடப்பட உள்ளன. நாடு முழுவதும் உயர்சிறப்பு மருத்துவப் படிப்புகளான டி.எம்., எம்.சிஎச் ஆகிய படிப்புகளுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் 1,215 இடங்கள் உள்ளன. தமிழகத்தில் 192 இடங்கள் உள்ளன. நாட்டிலேயே தமிழகத்தில் தான் அதிக இடங்கள் உள்ளன.


எம்.பி.பி.எஸ். படிப்பில் 15 சதவீதம்,முதுநிலை மருத்துவப் படிப்பில் 50சதவீதம் மட்டுமே அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு சமர்ப்பிக்கப்படுகிறது. மீதமுள்ள இடங்களுக்கான கலந்தாய்வை அந்தந்த மாநில அரசுகளே நடத்தும். ஆனால், உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளைப் பொருத்தவரையில் அனைத்து இடங்களுக்கான கலந்தாய்வையும் மத்திய சுகாதார சேவைகள் இயக்ககமே (டிஜிஹெச்எஸ்) நடத்தி வருகிறது.




அந்த அடிப்படையில், 2018 - 2019-ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் ஜூலை 6-ஆம் தேதி நடைபெற்றது. தமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சி, மதுரை,சேலம், திருநெல்வேலி ஆகிய இடங்கள் உள்பட நாடு முழுவதும் 42நகரங்களில் தேர்வு நடைபெற்றது. தேர்வு முடிவுகள் ஜ்ஜ்ஜ்.ய்க்ஷங்.ங்க்ன்.ண்ய் என்ற இணையதளத்தில் ஜூலை 15 (ஞாயிற்றுக்கிழமை) வெளியிடப்பட உள்ளன.
இந்தத் தேர்வுக்கான தேர்ச்சி மதிப்பெண் 35 சதமானம் (டங்ழ்ஸ்ரீங்ய்ற்ண்ப்ங்) ஆகும். நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான கலந்தாய்வை டிஜிஹெச்எஸ் நடத்த உள்ளது. கலந்தாய்வு அட்டவணை உள்ளிட்ட விவரங்கள் டிஜிஹெச்எஸின்



mcc.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Popular Feed

Recent Story

Featured News