பள்ளிகளில் காலாண்டு, அரையாண்டு, இறுதித் தேர்வு தேதிகள் அறிவிப்பு - தமிழ்க்கடல்

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, July 28, 2018

பள்ளிகளில் காலாண்டு, அரையாண்டு, இறுதித் தேர்வு தேதிகள் அறிவிப்பு



தமிழகத்தில் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரையிலான வகுப்புகளுக்கு காலாண்டு, அரையாண்டு, இறுதித் தேர்வு தேதிகள், விடுமுறை நாள்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.



தமிழக பள்ளி கல்வித் துறையில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவர்கள் பொதுத் தேர்வுக்கு முன்கூட்டியே தயாராகும் வகையிலும், அவர்களுடைய மன அழுத்தத்தை குறைக்கும் நடவடிக்கையாகவும் பொதுத் தேர்வு தேதிகள் வகுப்புகள் தொடங்கிய அன்றே அறிவிக்கப்பட்டு வருகிறது. 

அதன்படி நடப்பாண்டுக்கான பொதுத் தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது 1 முதல் 9 வரையிலான வகுப்புகளுக்கு காலாண்டு, அரையாண்டு மற்றும் இறுதித் தேர்வு கால அட்டவணையும், பத்தாம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரையிலான வகுப்புகளுக்கு காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகால அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். இந்த சுற்றறிக்கை மாவட்ட கல்வி அலுவலர்கள் மூலம் அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது. 



தேர்வு கால அட்டவணை விவரம்:-

ஒன்றாம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை : காலாண்டு தேர்வு- செப்டம்பர் 17-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரை; அரையாண்டு தேர்வு- டிசம்பர் 17-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரை, இறுதித் தேர்வு- ஏப்ரல் 10-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை.

9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2வரை: காலாண்டுத் தேர்வு- செப்டம்பர் 10-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரை; அரையாண்டுத் தேர்வு- டிசம்பர் 10-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரை. 

இறுதித் தேர்வு: ஏப்ரல் 8-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை (9-ஆம் வகுப்பு மட்டும்).



விடுமுறை எப்போது? செப்டம்பர் 23-ஆம் தேதி முதல் அக்டோபர் 2-ஆம் தேதி வரையில் காலாண்டு விடுமுறைக் காலமாகவும், டிசம்பர் 23-ஆம் தேதி முதல் ஜனவரி 1-ஆம் தேதி வரை அரையாண்டு விடுமுறைக் காலமாகவும், ஏப்ரல் 19-ஆம் தேதி முதல் ஜூன் 2-ஆம் தேதி வரை கோடை விடுமுறைக் காலமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. முன் கூட்டியே விடுமுறைக் காலம் அறிவிக்கப்பட்டிருப்பது, மாணவர்கள், பெற்றோர்களுடன் சுற்றுலா செல்வது, சொந்த ஊர்களுக்கு செல்வது போன்ற திட்டங்களை வகுப்பதற்கு வாய்ப்பாக அமைந்துள்ளது.

Post Top Ad