Monday, August 27, 2018

12ம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்த மாணவ மாணவியர்களுக்கு முக்கிய அறிவிப்பு

அனைவருக்கும் வணக்கம். 12ம் வகுப்பு தேர்வு எழுதி தேர்வில் தோல்வியடைந்த அனைவருக்கும் ஓரு செய்தி. தோல்வியடைந்த
பாடங்களை தேர்வு எழுத கடைசி வாய்ப்பு. வருகிற செப்டம்பர் 2018 மற்றும் மார்ச் 2019 ஆகிய இரு வாய்ப்புகள் மட்டுமே உள்ளது. இந்த வாய்ப்பை தவற விட்டால் நீங்கள் நேரடியாக 12ம் வகுப்பு தேர்வு எழுத முடியாது. மறுபடியும் 11ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகள் அனைத்தையும் எழுத வேண்டிய நிலை உருவாகும். 



ஆகவே இந்த வாய்ப்பை பயன்படுத்தி தோல்வியடைந்த பாடங்களில் தேர்ச்சி பெற முயற்சி செய்யுங்கள். தோல்வியடைந்த பாடங்களை தேர்வு எழுத விண்ணப்பம் செய்ய வருகிற 27.08.2018 முதல் 01.09.2018 வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Popular Feed

Recent Story

Featured News