Thursday, August 23, 2018

பார்வையற்றோர் பள்ளி பணியிடங்களுக்கு விண்ணப்பம் வரவேற்பு!

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பூந்தமல்லியில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் கீழ் இயங்கும் பார்வையற்றோருக்கான அரசு மேல்நிலைப் பள்ளியில் 2 சமையலர், 2 துப்புரவாளர், 2 காவலர், 4 ஆயா, ஒரு தோட்டக்காரர் ஆகிய 11 பணியிடங்கள் காலியாக உள்ளன.



இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், சமையலர், காவலர், தோட்டக்காரர் பணியிடங்களுக்கு 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆயா மற்றும் துப்புரவாளர் பணியிடங்களுக்கு எழுத படிக்கத் தெரிந்திருந்தால் போதும்.தகுதியுள்ளோர், “முதல்வர், பார்வையற்றோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளி, பூந்த மல்லி, சென்னை-56” என்ற முக வரிக்கு வரும் 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Popular Feed

Recent Story

Featured News