Monday, August 27, 2018

புதிய பாடத் திட்டம் மூலம் கல்வி மேம்படும்: அமைச்சர் செங்கோட்டையன்

கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டுத் துறை, ஒசூர் அதியமான் பொறியியல் கல்லூரியின் விளையாட்டுத் துறை மற்றும் பள்ளி கல்வித் துறை இணைந்து ஒசூரில் நடத்திய அம்மா விளையாட்டுப் போட்டிகளை ஞாயிற்றுக்கிழமை அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டியுடன் இணைந்து அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தொடக்கி வைத்தார்*
போட்டிகளைத் தொடக்கிவைத்து அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியது



மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2004-இல் விளையாட்டுத் துறைக்காக தனியாக பல்கலைக்கழகத்தை உருவாக்கினார். எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழகத்தில் புதிய பாடத் திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன

7 துணைவேந்தர்களைக் கொண்டு 8 மாதங்களில் புதிய பாடத் திட்டதை உருவாக்கியிருக்கிறோம்

9 முதல் 12 வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு சீருடைகள் மாற்றப்பட்டுள்ளன. அடுத்த ஆண்டு 1 முதல் 5 வரையும், 6 முதல் 8 வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு சீருடைகள் மாற்றி வழங்கப்படும்

நிகழாண்டு 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விரைவில் மடிக்கணினிகள் வழங்கப்படும்

நிகழாண்டு 11 லட்சத்து 17 ஆயிரம் மாணவர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தை முதல்வர் பழனிசாமி தொடக்கி வைத்துள்ளார். அதன்படி, மாணவர்களுக்கு விரைவாக மிதிவண்டிகள் வழங்கப்படும்

வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில், பிளஸ் 2 பாடத் திட்டத்தில் தனித்திறன் பாடங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது



நிகழாண்டு 412 நீட் தேர்வு மையங்கள் மூலம் 3600 ஆசிரியர்களைக் கொண்டு மாணவர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும்

25 ஆயிரம் மாணவர்களைத் தேர்வு செய்து 500 பட்டயத் தணிக்கையாளர்கள் மூலம் பயிற்சி அளித்து, அதிக எண்ணிக்கையில் பட்டயத் தணிக்கையாளர்களை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்

Popular Feed

Recent Story

Featured News