Saturday, September 15, 2018

உயர்கல்வி படிக்க 11ம் வகுப்பு மதிப்பெண் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படமாட்டாது - அமைச்சர் செங்கோட்டையன்

உயர்கல்வி படிக்க 11ம் வகுப்பு மதிப்பெண் கணக்கில் எடுத்துக் கொள்ளப் பட மாட்டாது.



12ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலேயே உயர்கல்வி படிக்கச் செல்லலாம்.

600 மதிப்பெண் வீதம் +1, +2 மாணவர்களுக்கு தனித்தனியாக மதிப்பெண் சான்றிதழ் தரப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்.

இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், “11ஆம் வகுப்பு கடினமாக இருப்பதாகவும், அதனை உயர்கல்விக்கு கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டாம் என மாணவர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. எனவே, உயர்கல்வி படிக்க 11ம் வகுப்பு மதிப்பெண் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படமாட்டாது. 12ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலேயே உயர்கல்வி படிக்கச் செல்லலாம்.



600 மதிப்பெண் வீதம் +1, +2 மாணவர்களுக்கு தனித்தனியாக மதிப்பெண் சான்றிதழ் தரப்படும்” என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்

Popular Feed

Recent Story

Featured News