ஒரு கோடி ரூபாய் வரையிலான கடன்களை 59 நிமிடங்களில் வழங்குவதற்கான இணையதளத்தை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி அறிமுகப்படுத்தியுள்ளார்.
சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு விரைவில் கடன்களை வழங்குவதற்கு இணையதளம் (போர்டல்) ஒன்றை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி அறிமுகப்படுத்தியுள்ளார். சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு 59 நிமிடங்களில் ஒரு கோடி ரூபாய் வரையில் கடன் வழங்குவதற்கு வங்கிகள் ஒப்புதல் அளிக்கும் எனவும், தொழில்முனைவோர் வங்கிக் கிளைகளுக்குச் செல்லவேண்டிய தேவை இருக்காது எனவும் மத்திய அரசு உறுதியளித்துள்ளது. தொழில் நிறுவனங்கள் அவற்றின் ஜிஎஸ்டி விவரம், வருமான வரி விவரம், வங்கி அறிக்கை போன்ற தகவல்களைச் சமர்ப்பித்து விரைவில் கடன் பெற்றுக்கொள்ளலாம்.