அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு கடந்த சில மாதங்களாக சரிவை சந்தித்து வருகிறது. இது பொருளாதாரத்திலும், அனைத்து தரப்பினருக்கும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதன் காரணமாக வெளிநாடுகளில் பயிலும் மாணவர்களும் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவால் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் படிக்கும் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது, ரூபாய் மதிப்பு 71 யை எட்டியுள்ள நிலையில், இது மாணவர்கள் மத்தியிலும், அவர்களின் பெற்றோர்கள் மத்தியிலும் அதிக கவலையை ஏற்படுத்தியுள்ளது. தற்போது, எங்களின் அன்றாட மற்றும் படிப்பு செலவுகளுக்கு அதிகளவில் பணம் செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு முன்னேற்றம் அடையும் வழிமுறைகள் எதுவும் தெரியவில்லை என்று வெளிநாடுகளில் படிக்கும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
ரூபாய்
Advertisement
அதேசமயம், ரூபாய் மதிப்பு சரிவால் ஆஸ்திரேலியா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் படிக்கும் மாணவர்கள் அதிகளவில் பாதிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இங்கிருந்து வெளிநாடுகளில் 3.5 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். இதில் அமெரிக்காவில் மட்டும் 1 லட்சம் மாணவர்கள் பயில்கின்றனர்.வங்கியில் கல்விக்கடன் மூலமாக படிக்கும் மாணவர்கள் தற்போது டியூசன் பீஸ் உயர்வால் கடுமையாக அவதிக்குள்ளாகியுள்ளனர்.