சென்னையில், பள்ளிக்கல்வி அதிகாரிகள் நடத்திய கூட்டத்தில், மாணவர்கள் எண்ணிக்கை குறைவான அரசுத் தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளை அவற்றின் அருகேயுள்ள அரசுப் பள்ளியோடு இணைத்துவிடலாம் என்ற ஆலோசனை முன் வைக்கப்பட்டிருப்பதாகச் செய்திகள் வெளிவந்தன.
கல்வி உரிமைச் சட்டத்தில் ஒரு மாணவரின் வீட்டிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் தொடக்கப்பள்ளி அமைந்திருக்க வேண்டும் என்றிருக்கும் நிலையில், அதிகாரிகள் ஆலோசித்தது போல பள்ளிகளை மூடினால் என்னவாகும் என்று கல்வியாளர் பேராசிரியர் கல்விமணியிடம் கேட்டேன்.