து விட்டால் அவை உடலுக்கு தீங்கு தரும் என்று தூக்கி எறிந்துவிடுவார்கள்.
ஆனால் அதில் ஏராளமாக ஆரோக்கிய நன்மைகள் உள்ளது.அத்தகைய முளைக்கட்டிய பூண்டுகளை தூக்கி எறியாமல் சாப்பிடுவதால் பெறும் நன்மைகள் என்னவென்று பார்ப்போம்.
நன்மைகள்
முளைக்கட்டிய பூண்டில் பைட்டோ கெமிக்கல்களின் உற்பத்தி தூண்டப்படுவதால், அது புற்றுநோயை உண்டாக்கும் செல்களின் வளர்ச்சியை தடுத்து, புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது.
ரத்தம் உறைவதைத் தடுத்து, ரத்த ஓட்டத்தை சீராக்கி, ரத்த அழுத்த பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.
ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் முளைக்கட்டிய பூண்டுகளில் ஏராளமாக இருப்பதால், இது சரும சுருக்கம் ஏற்படுவதை தடுத்து, முதுமைத் தோற்றத்தை தாமதமாக்குகிறது.
உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்கி, நோய்த்தொற்றுக்கள் மூலம் அடிக்கடி ஏற்படும் சளி, இருமல் போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.
உடலினுள் பல்வேறு கிருமிகளை எதிர்த்துப் போராடி, ஆஸ்டியோபோரோசிஸ், மூட்டு பிரச்சனைகள், வீக்கம் மற்றும் தைராய்டு பிரச்சனைகளை குறைக்க உதவுகிறது.