திருமால் ஒருபா ஒருபது
துன்பங்கள் கண்ட போதும் கலங்காதீர்;
மணிவண்ணன் பெயரைச் சொல்ல மறவாதீர்;
கூப்பிட்டக் குரலுக்கு வந்திடுவான்;
குறைக ளைந்து அவனருளைத் தந்திடுவான். (1)
தந்திரங்கள் செய்வதிலே வல்லவனை;
தானென்ற
ஆணவங்கள் மாய்ப்பவனை; வேதங்கள்
மீட்டெடுத்து
வந்தவனை; எப்போதும் நாம்தொழுதால்
துன்பங்கள் நெருங்காதே காலம்
மூன்றில். (2)
மூன்றடியாய் மண்கேட்டு; ஈரடியால்
உலகளந்து;
வானுயர நின்றவனைத் தினந்தொழுது
வருபவர்க்கு;
திருவாயால் கீதைமொழி சொன்னவனின்
அருளாலே சோதனைகள் ஒருநாளும்
வாராதே. (3)
வாராது நோய்நொடிகள்; கடல்நடுவே
நகர்புகுந்து
இராவணனின் செருக்கறுத்து வேங்கடத்துள்
நின்றவனை மனம்நினைந்து புகழ்பாடி
வருபவர்க்கே. (4)
நிரைகாத்த கோபியரின் குலவிளக்காம்
கோவிந்தன்
புகழ்பாட; குறும்புகள் பலசெய்து
குழுசேர்ந்து திருடித் தின்பான்
வெண்ணையே. (5)
வெண்ணையுண்ட வாயாலே மண்ணுண்டு
புவிகாட்டி
மண்ணுலகோர் தாம்உணர பரம்பொருளாய்
நின்றவனின்
அடியார்க்கு அமுதூட்டி வாழ்பவர்கள்
நெடியாய வேங்கடவன் திருப்பதத்தை
அடைவாரே. (6)
அடையாத துன்பங்கள் தந்தபோதும்
தாங்கிடுவேன்;
இடையாளின் துன்பத்தில் பெரிதில்லை;
வில்லேந்தி
துயர்தீர்த்த அருளாளா; நீஎந்தன்,
துயர்தீர்க்க மாட்டாயோ? உன்னையன்றி
வேறில்லை. (7)
வேறாகித் தூண்பிளந்து நின்பெயரைச்
சொன்னவனின்
துயர்தீர்த்தாய்; தினந்தோறும்
உன்பெயரை உச்சரித்தேன்;
ஆயிரமாம் துன்பங்கள் வந்தபோதும்
கலங்கமாட்டேன்;
தாயாக எனைக்காக்க நீவருவாய்;
நெய்தானே உன்னுணவு; உன்மேனிக்
காயாம்பூ. (8)
காயோடு கனியுண்டு கடுந்தவங்கள்
வேண்டாமே;
ஓயாமல் அலைவீசும் பார்கடலுள்
உறைபவனை;
அடிதொழுது அறம்காத்தால் தீவினைகள்
படியாதே; பார்போற்றும் வைகுந்தம்
ஆள்வாயே. (9)
ஆள்ளுயரம் வளராத வாமணனை; வில்லேந்தி
கோலவிழி மங்கைதுயர் தீர்த்தவனை;
சபைநடுவே
தங்கை மானம் காத்தவனை;
சங்கேந்தி நின்றவனை; தினம்போற்றி
வாழ்வோமே. (10)